Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பாகிஸ்தானுக்கு 248 ரன்கள் இலக்கு; கைகுலுக்க மறுத்த கேப்டன்கள் - பெண்கள் உலகக் கோப்பையில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பாகிஸ்தான் அணிக்கு 248 ரன்கள் இலக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நிதானமாக விளையாடி 247 ரன்களை சேர்த்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு 248 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆண்களுக்கான ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டியின்போது இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்காதது சர்ச்சையானதை அடுத்து இன்றைய போட்டியிலும் இது பிரதிபலிக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேநிலை மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டிலும் நீடித்தது. ஆண்கள் அணியைப்போலவே பெண்கள் அணிகளின் கேப்டன்களும் டாஸ்-க்கு பிறகு கைகுலுக்கிக் கொள்ளவில்லை. ஹர்மன்ப்ரீத் கவுர் இந்தியாவுக்கும், பாத்திமா சனா பாகிஸ்தானுக்கும் கேப்டனாக உள்ளனர். 100 ரன்களை கடந்த இந்தியா: பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கேப்டன் ஹர்மன்ப்ரீத் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 32 பந்துகளில் 4 பவுண்டரிகளை விளாசி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பிறகு, பேட்டிங் செய்ய வந்த பிரதிகா ராவல், 37 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த நிலையில் 22 ஓவர் முடிவில் இந்திய அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை எட்டியது. அதன்பின் அணிக்கு பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் ஹர்லீன் தியோல், ஜெமிமா களத்தில் நிலையாக ஆட்டத்தை வெளிப்படுத்து வந்தனர். அதன்பின் 30 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 136 ரன்களை எடுத்திருந்தது இந்திய அணி. அதன்பிறகு விக்கெட் இழப்பின்றி ஆடி வந்தது. ஹர்லீன் தியோல் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகள் அடித்து நம்பிக்கையூட்டி வந்தார். இந்த நிலையில் 33வது ஓவரின் முதல் பந்தில் அவரும் விக்கெட்டை பறிகொடுத்தார். 65 பந்துகளில் 46 ரன்களை சேர்த்திருந்தார். ரமீன் ஷமாம் வீசிய பந்தை அடிக்க முயன்றபோது நஷ்ரா சாந்து கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இந்த கட்டத்தில இந்திய அணி 154 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து இருந்தது. இடையில் நிறுத்தப்பட்ட போட்டி: பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மைதானத்தில் பூச்சிகள் பறந்ததால் போட்டி பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் மைதானத்தில் வீரர்களின் தலைகளுக்கு மேலே அதிகளவில் பூச்சிகள் பறந்து கொண்டே இருந்ததால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கும் இடையூறு ஏற்பட்டது. இதனால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட பிறகு மீண்டும் தொடங்கியது. அதன்பின் களமிறங்கிய வீரர்கள் மைதானத்திற்கு திரும்பி ஆட்டத்தை தொடர்ந்தனர். ஜெமிமா, தீப்தி சர்மா பார்னர்ஷிப்பில் இந்திய அணி விளையாடி வந்த நிலையில், ஜமிமா 32 ரன்களில் ஆட்டமிழந்தார். நஷ்ரா சந்து வீசிய பந்தில் LBW முறையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இவருக்கு பதிலாக வளது கை பேட்டர் சினே ராணா களத்திற்கு வந்தார். 35வது ஓவர் சற்று இந்திய அணிக்கு சற்று சவாலானதாகவே அமைந்தது. ரமாம் வீசிய இந்த ஓவரில் இந்திய அணி 1 ரன் மட்டுமே எடுத்தது. 36வது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் என்ற நிலையில் இருந்தது இந்திய அணி. இதனைத் தொடர்ந்து சினே ராணா, தீப்தி சர்மா இணைந்து அணிக்காக ரன்களை சேர்க்கத் தொடங்கினர். இருவரும் போராடி 43வது ஓவரில் 190 ரன்களை கடக்க உதவினர். இதற்கிடையில் கிரீஸ் கோட்டிற்குள் செல்ல முயன்ற ராணாவிற்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பிசியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. 200 ரன்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தீப்தி சர்மா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சினே ராணா, தீப்தி சர்மா நிதானமாக விளையாடி வந்த நிலையில் 44.1வது ஓவரில் ராணா அவுட்டானார். 33 பந்துகளில் 20 ரன்கள் விளாசிய நிலையில் ஃபாத்திமா சனா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். பின் அவருக்கு பதிலாக ரிச்சா கோஷ் களமிறங்கினார். அந்த சமயத்தில் களத்திற்கு ஏற்றவாறு தன்னை ஈடுபடுத்தி கொண்ட தீப்தி சர்மாவும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். டையானா வீசிய பந்தை அடிக்க முயன்றபோது சித்ரா நவாஸ் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். எனினும் இந்திய அணி 46 ஓவர்களில் 200 ரன்களை கடந்திருந்தது. 7 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. பரபரப்பான இறுதிகட்டம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ரிச்சா கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 35 ரன்களை சேர்த்தார். பின் ரிச்சா கோஷ் சிக்ஸர், பவுண்டரிகள் என விளாச ஆட்டம் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியது. இந்த நிலையில் ஸ்ரீ சரணி அவுட்டாக அவருக்கு பதிலாக கிராந்தி கவுட் களமிறங்கினார். தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பவுண்டரியை விளாசினார். பின் இன்னிங்ஸின் இறுதியில் ரிச்சாவும் பவுண்டரி விளாச, இவர்களின் பாட்னர்ஷிப் நன்றாகவே அமைந்தது. கடைசி ஓவரை வீச பாகிஸ்தான் அணியில் இருந்து பெய்க் வந்தார். அவர் வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கி அனுப்பினார் ரிச்சா. அவர் வீசிய 2வது பந்தை ரிச்சா தூக்கி அடித்தபோது விக்கெட்டுக்கான வாய்ப்பு தென்பட்டது. கேட்சாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு பாகிஸ்தான்ல வீரங்கனைகள் மோதி கேட்சை தவறவிட்டனர். இதனால் ரிச்சாவின் விக்கெட் காப்பாற்றப்பட்டது. ஆனால் இந்த சந்தோஷனம் அதிக நேரம் நீடிக்கவில்லை. அதற்கடுத்த சில பந்துகளிலேயே கிராந்தி அவுட்டாக, அதன்பின் வந்த ரேணுகா சிங்கும் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியாக 50 ஓவர் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 247 ரன்களை சேர்த்தது. ரிச்சா கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 35 ரன்களை சேர்த்திருந்தார். ப்ளேயிங் XI பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 247 ரன்களை சேர்த்தது. இந்திய அணி: ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் பாகிஸ்தான் அணி: முனீபா அலி, சதாப் ஷம்ஸ், சித்ரா அமீன், அலியா ரியாஸ், நடாலியா பர்வேஸ், பாத்திமா சனா (கேப்டன்), ரமீன் ஷமிம், டயானா பெய்க், சித்ரா நவாஸ் (விக்கெட் கீப்பர்), நஷ்ரா சந்து, சாடியா இக்பால் -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62qeejmmlmo
  2. பாக்கு நீரிணையை நீந்தி சாதனைப் படைத்த மாற்றுத்திறனாளி சிறுவன்! இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை (3) இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணை 9 மணி 11 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனைப் படைத்துள்ளார். பாக்கு நீரிணை பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். இராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்கள் நிறைந்த கடல் பகுதியாகும் . இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் பாக்கு நீரிணையை தனியாக நீந்தி கடந்து சாதனை புரிந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடிக்கு அல்லது தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு நீந்திச் சென்றவர்கள். இது தவிர மேலும் சிலர் குழுவாக ரிலே மற்றும் மாரத்தான் முறையில் பாக்கு நீரிணையை நீந்தி கடந்துள்ளனர். இந்நிலையில் சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த பெரியார் செல்வன், பத்மபிரியா தம்பதியினரின் 12 வயதான புவி ஆற்றல் என்ற சிறுவன் முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் பாடசாலையில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுவனான புவி ஆற்றல், 2022 ஆண்டு சென்னை, செனாய் நகரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதலோடு தன்னுடைய நீச்சல் பயற்சியை தொடங்கினார். 2024 ஆண்டு கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். தலைமன்னார் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி கடப்பதற்காக இந்திய - இலங்கை இரு நாட்டு அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். அனுமதி கிடைத்த நிலையில், நீந்துவதற்கு ஊனம் தடையல்ல என்பதை வலியுறுத்துவதற்காக இலங்கை-தலைமன்னாரில் இருந்து இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரினையை கடலை நீந்தி கடப்பதற்காக, சிறுவன் புவி ஆற்றல் இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து வெள்ளிக்கிழமை (3) மதியம் ஒரு விசைப்படகு மற்றும் நாட்டுப் படகில் மற்றும் அவரது பெற்றோர், பயிற்சியாளர், வைத்தியர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினருடன் தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றனர். இலங்கை தலைமன்னாரில் இருந்து இன்று சனிக்கிழமை அதிகாலை 2.45க்கு கடலில் குதித்து நீந்த தொடங்கி மதியம் 12 மணி அளவில் தனுஷ்கோடிக்கு சென்றனர். இவர் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை 9 மணி நேரம் 11 நிமிடத்தில் நீந்தி கடந்தார். அரிச்சல்முனை வந்தடைந்த சிறுவன் புவி ஆற்றல், அவரது தாய் கண்ணீர் மல்க முத்தமிட்டு வரவேற்றார். அதனை தொடர்ந்து சுங்கதுறை கண்காணிப்பாளர், இந்திய மரைன் பொலிஸார் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதற்கு முன்னதாக தலைமன்னார், தனுஷ்கோடி இடையிலான பாக்கு நீரிணை 20.03.2022 அன்று மும்பையைச் சேர்ந்த ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி ஜியா ராய் தனது 13 வயதில் நீந்திக் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.facebook.com/Deranatamil/posts/1362504709212139?ref=embed_post -மன்னார் நிருபர் லெம்பட்- https://adaderanatamil.lk/news/cmgdg74x300ubo29nl1il8lkg
  3. மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கு யாழ். பல்கலைக்கழகமும் அரசுக்கு துணை போகிறது - அன்னராசா குற்றச்சாட்டு! Published By: Digital Desk 1 05 Oct, 2025 | 02:22 PM அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டு, யாழ்ப்பாண பல்கலைக்கழக கடற்றொழில் பீடமும், கடல் அட்டை பண்ணைகளுக்கு ஆதரவு வழங்குவதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில், நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சீன கடலட்டை பண்ணை சூழலுக்கு பாதிப்பா? இல்லையா? என்று ஒரு ஆய்வு செய்து தருமாறு நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாழ் பல்கலைக்கழகத்திடம் கடந்த இரண்டு வருடங்களாக கோரிக்கை முன்வைத்தோம். ஆனால் அவர்கள் அந்த கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. நாங்கள் பாரம்பரிய கடற்றொழிலாளர்கள். எங்களுக்கு கடல் மீதும் எங்களது சுற்றுச்சூழல் மீதும் உள்ள அக்கறையின் வெளிப்பாடாகத்தான் இந்த ஆய்வினை மேற்கொள்ளுமாறு; வலியுறுத்தி வந்தோம். ஆனால் கடந்த மாதம் கடற்றொழில்சார் திணைக்களங்களும் அதன் அதிகாரிகளும், கடல் அட்டையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு கலந்துரையாடலை யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். கடல் வளங்கள் அழிகின்றதென நாங்கள் கூறும் போதும் மௌனம் காத்த யாழ் பல்கலைக்கழகம் இப்போது அந்த கடல் அட்டையை காப்பாற்ற வேண்டும் என கூட்டம் போடுகிறது. இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலோடு சேர்த்து வடக்கு கடல் தொழிலாளர்களை அழிப்பதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முயற்சிக்கிறதா? என நாங்கள் பல்கலைக்கழகத்தை பார்த்து கேட்கின்றோம். இந்தக் கூட்டத்திற்கு, பாதிக்கப்பட்ட சிறு மீனவர்களையும், பாதிக்கப்பட்ட எவரையும் அழைக்கவில்லை. வடக்கு கிழக்கு மாகாணத்திலே 62 சதவீதத்திற்கு மேற்பட்ட கடற்பரப்பு தமிழர்களின் கைகளில் இருக்கின்றது. தமிழர்களுடைய கையில் இருக்கின்ற கடற்பரப்பையும் கடற்றொழிலாளர்களையும் அழிக்கின்ற, ஆட்சிசெய்த, ஆளுகின்ற அரசாங்கங்களின் கீழ் பல்கலைக்கழகத்தின் கடற்றொழில் பீடமும் செயப்படுகின்றதா? என்று கேள்வியும் ஐயமும் எமக்கு எழுகின்றது. எதிர்கால சந்ததிக்காக கடலை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது. அந்தப் பொறுப்பு குறித்தும் நீங்கள் கரிசினை கொள்ள வேண்டும். எதையும் அழிப்பதற்காக நாங்கள் எதிர்த்து கருத்துக்கு கூறவில்லை. எங்களுடைய சூழலும் வளமும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. பதவியில் இருப்பவர்கள் தங்களது கதிரைகளை காப்பாற்றுவதற்காக விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் என்று அரசாங்கத்திற்கு அறிக்கைகளை சமர்ப்பித்துக் கொண்டு, அந்த அறிக்கையினூடாக கடற்றொழிலாளர்களுடைய கருவை அழிக்கின்றீர்கள் என்பது எமது குற்றச்சாட்டாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/226947
  4. 05 Oct, 2025 | 04:38 PM தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்வாண்டு ஓவ்வொரு 10 இலட்சம் பெறுமதியான 88 வீடுகளில் 80 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கும் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (05) அந்தந்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பயனாளிகளிடம் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது. அந்தவகையில், நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் கோண்டாவில் நாகபூசணி அம்மன் கோவிலடியில் பயனாளிக்கு ஒருவருக்கு நிர்மாணிக்கப்பட்ட வீடு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர், தேசிய மக்கள் சக்தியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/226960
  5. 03 Oct, 2025 | 02:38 PM கனடா, மெக்சிக்கோ மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் 2026 ஃபிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டிக்கான உத்தியோகபூர்வ பந்தான 'ட்ரையோண்டா' (TRIONDA)வை ஃபிபா (FIFA) அமைப்பு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. ட்ரையோண்டாவின் சிறப்பம்சங்கள் அடிடாஸ் (Adidas) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்தப் பந்து, மூன்று நாடுகளின் ஒற்றுமை மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 1. பெயரின் பின்னணி: 'ட்ரையோண்டா' என்ற பெயரானது, ஸ்பானிய மொழியில் "மூன்று அலைகள்"(Three Waves) என்று பொருள்படும்.'ட்ரை' (Tri) என்பது போட்டியை நடத்தும் மூன்று நாடுகளையும், 'ஓண்டா' (Onda) என்பது அலை அல்லது உற்சாகத்தையும் குறிக்கிறது. 2. வடிவமைப்பு மற்றும் நிறங்கள்: பந்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்கள் போட்டியை நடத்தும் நாடுகளான கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவின் வர்ண்ணங்களைப் பிரதிபலிக்கின்றன. மேலும், கனடாவின் மேப்பிள் இலை, மெக்சிகோவின் கழுகு, அமெரிக்காவின் நட்சத்திரம் போன்ற ஒவ்வொரு நாட்டின் சின்னங்களும் வடிவமைப்பில் பொறிக்கப்பட்டுள்ளன. உலகக்கிண்ணத்தின் வெற்றிக் கிண்ணத்தைக் குறிக்கும் வகையில் தங்க நிற அலங்காரங்களும் இடம்பெற்றுள்ளன. 3. முன்னோடித் தொழில்நுட்பம் (Connected Ball Technology): ட்ரையோண்டா பந்தின் உள்ளே அதிநவீன 500Hz மோஷன் சென்சார் சிப் (Motion Sensor Chip) பொருத்தப்பட்டுள்ளது. இந்தச் சிப் பந்தின் அசைவுகள் குறித்த துல்லியமான தகவல்களை வீடியோ உதவி நடுவர் (VAR) முறைமைக்கு நிகழ்நேரத்தில் அனுப்பும். இதன் மூலம் ஓப்சைட் மற்றும் பந்து கையால் அடிக்கப்பட்டதா போன்ற முடிவுகளை நடுவர்கள் விரைவாகவும் துல்லியமாகவும் எடுக்க முடியும். 4. மேம்படுத்தப்பட்ட செயல்பாடு: இந்தப் பந்து நான்கு பேனல் (Four-panel) வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இது பந்து காற்றில் செல்லும்போது நிலைத்தன்மை மற்றும் கட்டுப்பாட்டை மேம்படுத்தும் வகையில் ஆழமான தையல் கோடுகளைக் (deep seams) கொண்டுள்ளது.ஈரமான அல்லது பனிமூட்டம் நிறைந்த சூழலில் பந்தை உதைக்கும்போது பிடியை (Grip) அதிகரிக்க, அதன் மேற்பரப்பில் நுண்ணிய சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஃபிபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ இந்த வெளியீட்டின் போது, "2026 உலகக்கிண்ணத்தின் அதிகாரப்பூர்வ பந்து இங்கே உள்ளது, அது ஒரு அழகு! இந்தப் பந்தின் வடிவமைப்பு போட்டியை நடத்தும் நாடுகளின் ஒற்றுமையையும் ஆர்வத்தையும் உள்ளடக்கியது" என்று பெருமிதமாக தெரிவித்தார். 48 அணிகள் பங்கேற்கவுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் 2026ஆம் ஆண்டு ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/226788
  6. காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் அனைத்து நாட்களிலும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் 8ஆம் திகதி முதல் இந்த மாதம் 28ஆம் திகதி வரையில் நாளாந்தம் குறித்த கப்பல் சேவை இடம்பெறும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் செவ்வாய்க் கிழமை தவிர்ந்த வாரத்தின் ஏனைய ஆறு நாட்களும் குறித்த சேவை இடம்பெற்றுவந்தது. இந்நிலையில் பண்டிகை காலத்தில் அனைத்து நாட்களிலும் சேவையை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் இக்கப்பல் சேவையில் தீர்வை அற்ற கடைத் தொகுதியும் ( Duty free) புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmgddchlq00u9o29nctfufdu1
  7. Published By: Digital Desk 1 04 Oct, 2025 | 02:15 PM ஜப்பானின் ஆளும் பழமைவாதக் கட்சியான லிபரல் டெமோகிரடிக் பார்ட்டி (LDP) அதன் புதிய தலைவராக சனே தகைச்சியை (Sanae Takaichi) தேர்ந்தெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 64 வயதான சனே தகைச்சி, ஜப்பானின் முதல் பெண் பிரதமராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷிகெரு இஷிபாவுக்குப் பதிலாக புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு, ஒக்டோபர் 15ஆம் திகதி அந்த நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச அளவில் பாலின சமத்துவத்தில் மோசமாக இருக்கும் ஒரு நாட்டில், ஜப்பானின் நீண்டகாலமாக ஆளும் பழமைவாத லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் முதல் பெண் தலைவராக தகைச்சி வரலாற்றைப் படைத்துள்ளார். ஆணாதிக்கக் கட்சியின் மிகவும் பழமைவாத உறுப்பினர்களில் ஒருவராகவும் இவர் காணப்படுகிறார். பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சரின் அபிமானியான தகைச்சி, முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் தீவிர பழமைவாதக் கண்ணோட்டத்தின் சீடரும், ஜப்பானின் போர்க்கால இராணுவவாதத்தின் அடையாளமாகக் கருதப்படும் யசுகுனி ஆலயத்தில் வழக்கமாகச் செல்வவருமாவார். குறித்த ஆலயம் ஜப்பானின் போர்க்கால இராணுவவாதத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. சனிக்கிழமை இன்று(03) லிபரல் டெமோகிரடிக் பார்ட்டி (LDP) கட்சி நடத்திய உட்கட்சி வாக்கெடுப்பில், பிரபல முன்னாள் பிரதமர் ஜூனிச்சிரோ கொய்சுமியின் மகனும் விவசாய அமைச்சருமான ஷின்ஜிரோ கொய்சுமியை தகைச்சி தோற்கடித்தார். பெரும் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு பொதுமக்களின் ஆதரவை மீண்டும் பெற்று ஆட்சியில் நீடிக்க கட்சி நம்பிக்கையுடன் இருப்பதாக அந்த நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/226875
  8. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் நகர் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் மனித எலும்பு கூடு ஒன்று நேற்று (4) அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த காணியின் ஒரு பகுதி பற்றைக் காடாக காணப்படுகின்ற நிலையில் அங்கிருந்து இந்த மனித எலும்பு கூடு மீட்கப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு சென்ற ஒருவர் இதனை அவதானித்த நிலையில் மாங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிசார் குறித்த இடத்தை குற்றப் பிரதேசமாக அடையாளப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலையா? என்பது தொடர்பில் கண்டறிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- https://adaderanatamil.lk/news/cmgdawx2t00teqplpu9uy34pe
  9. Published By: Digital Desk 1 05 Oct, 2025 | 11:32 AM இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்துச்சென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன், முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 12 வயதுச் சிறுவன் எடுத்த முயற்சி வெற்றியை கொடுத்துள்ளது. குறித்த சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை (03) இலங்கை தலைமன்னாரிலிருந்து தமிழகம் தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணை 9 மணி 11 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். பாக்கு நீரிணை கடல் பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேஸ்வரம் தீவும் அதை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக்கு நீரிணை கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது. இது தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்கள் நிறைந்த கடல் பகுதியாகும் . இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் பாக்கு நீரிணையை தனியாக நீந்தி கடந்து சாதனை புரிந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடிக்கு அல்லது தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு நீந்திச் சென்றவர்கள். இது தவிர மேலும் சிலர் குழுவாக ரிலே மற்றும் மரதன் முறையில் பாக்கு நீரிணை கடலை நீந்தி கடந்துள்ளனர். இந்நிலையில் சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த் 12 வயதான புவி ஆற்றல் என்ற சிறுவன் சாதனை படைத்துள்ளார். முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட குறித்த மாற்றுத்திறனாளி சிறுவன் கடந்த 2022ஆம் ஆண்டு சென்னை - செனாய் நகரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு ஆணையகத்தின் வழிகாட்டுதலோடு தன்னுடைய நீச்சல் பயற்சியை தொடங்கினார். 2024 ஆண்டு கோவாவில் நடைபெற்ற தேசிய நீச்சல் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். அந்தவகையில் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி கடப்பதற்காக இந்திய - இலங்கை இரு நாட்டு அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். அதற்கு அனுமதி கிடைத்த நிலையில், நீந்துவதற்கு தடையல்ல என்பதை வலியுறுத்துவதற்காக இலங்கை - தலைமன்னாரில் இருந்து இந்தியாவில் தனுஷ்கோடி வரையிலான பாக் நீரிணை கடலை நீந்தி கடப்பதற்காக, சிறுவன் புவி ஆற்றல் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து வெள்ளிக்கிழமை (03) மதியம் ஒரு விசைப்படகு மற்றும் நாட்டுப் படகில் மற்றும் அவரது பெற்றோர், பயிற்சியாளர், வைத்தியர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினருடன் தலைமன்னாரை வந்தடைந்துள்ளனர். தலைமன்னாரில் இருந்து நேற்று சனிக்கிழமை அதிகாலை 2.45க்கு கடலில் குதித்து நீந்த தொடங்கி மதியம் 12 மணி அளவில் தனுஷ்கோடி சென்றடைந்தனர். இவர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடியை வரை 9 மணி நேரம் 11 நிமிடத்தில் நீந்தி கடந்தார். இதற்கு முன்னதாக தலைமன்னார், தனுஷ்கோடி இடையிலான பாக் நீரிணை கடற்பகுதியை 20.03.2022 ஓட்டிசத்தால் பாதிக்கப்பட்ட, மும்பையைச் சேர்ந்த சிறுமி ஜியா ராய் தனது 13 வயதில் நீந்திக் கடந்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/226923
  10. 05 Oct, 2025 | 07:07 AM தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் எமது நாட்டின் இறைமையில் உள்ள கச்சதீவை அரசியலுக்காக பயன்படுத்தினால் அவர்கள் இருவருக்கும் எதிராக கடற்றொழில் சமூகம் மிக விரைவில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்குமென வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடாக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கச்சதீவை மீட்பேன் என வடக்கு கடற்றொழில் சமூகத்திற்கு எதிரான ஒரு கருத்தை தொடர்ச்சியாக அரசியல் மேடைகளில் பேசி வருகின்றார். முதலமைச்சரே, நல்லெண்ண அடிப்படையில் வடக்கு கடற்றொழில் சமூகம் கடந்த 2023ஆம் ஆண்டு மூன்று மகஜர்களை உங்களுக்கு அனுப்பியது. அதற்கு நீங்கள் எதுவித பதிலும் வழங்கவில்லை. ஆனால் அரசியல் இருப்புக்காக கச்சதீவு விவகாரத்தை தூக்கி வைத்து வடக்கு கடற்றொழிலாளர்களை பகைக்கின்ற ஒரு விடயத்தை நீங்கள் செய்கின்றீர்கள். கச்சதீவினால் தான் இந்திய மீனவர்கள் பாதிக்கப்படுவதாக உங்களது அரசியல் இருப்புக்காக பொய்யான ஒரு குற்றச்சாட்டை தமிழ்நாட்டிலே நீங்கள் பேசாதீர்கள். வடக்கு கடற்றொழில் சமூகம் கடந்த ஒரு வருட காலமாக இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டு அரசுக்கோ எதிரான எந்த ஒரு போராட்டத்தையும் பாரிய அளவில் முன்னெடுக்கவில்லை. தொடர்ச்சியாக இவ்வாறு பேசி தமிழ்நாட்டு மீனவர்களை வடக்கு மீனவர்களுக்கு எதிராக தூண்டுவீர்களாக இருந்தால் வடக்கு கடற்றொழில் சமூகமாகிய நாங்கள் பாரிய ஒரு போராட்டத்தை முன்னெடுப்போம். அதுபோல தமிழக வெற்றி கழகத்தின் விஜயும் அரசியல் இருப்புக்காக கச்சதீவு விவகாரத்தை பேசுகின்றார். விஜய் அரசியலுக்கு வருவதற்கு முதலே, இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சனையை சமூகமாக தீர்ப்பதற்கு முன் வாருங்கள் என்று விஜய்க்கும், சீமானுக்கும் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனால் நீங்கள் எங்களுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை. கச்சதீவு விவகாரத்தால் தமிழ்நாட்டு மீனவர்கள் பாதிக்கப்பட்டதாக ஒருபோதும் வரலாறு இல்லை. உலகத்திலேயே தடை செய்யப்பட்ட, கடல்வளத்தை கருவறுக்கின்ற இரட்டை இழுவைமடி தொழிலைத்தான் தமிழ்நாட்டு மீனவர்கள் செய்கின்றனர். நீங்கள் இந்த இழுவைமடி தொழிலை நிறுத்திவிட்டு மாற்றுமுறை தொழிலை செய்யுங்கள். இதன்போது உங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உங்களுக்கு ஆதரவாக நாங்கள் குரல் கொடுக்கின்றோம். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு பொய்யானது. இலங்கையின் சட்டத்தின்படி, எல்லை மீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைப்பவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பது வடக்கு கடற்றில் சமூகத்தின் தெளிவான நிலைப்பாடாகும். இழுவைமடி தொழிலை நிறுத்திவிட்டு சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையுடனும் தொழில் செய்வது குறித்து சிந்திப்பதற்கு கடற்றொழில் சமூகம் தயாராக இருக்கின்றது. இந்திய அரசாங்கம் இந்த விடயத்தை இராஜதந்திர ரீதியில் அணுக வேண்டும் என்பது எமது விருப்பம். அதைவிடுத்து வடக்கு மாகாண மக்களுக்கு சொந்தமான கச்சதீவு குறித்து அரசியல் மேடைகளில் பேசி மீனவர்களை தூண்டி விடுவது கண்டிக்கத்தக்கது. அதன் விளைவுகள் எதிர்காலத்தில் பாரதூரமாக இருக்கும் என்றார். https://www.virakesari.lk/article/226902
  11. 'தேசிய மக்கள் சக்தி செயலால் நிரூபிக்கிறது; வட மாகாணத்தை அவர்களால் அபிவிருத்தி செய்ய முடியும்' - ஆளுநர் நா.வேதநாயகன் நம்பிக்கை Published By: Digital Desk 1 04 Oct, 2025 | 01:23 PM தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சொல்லில் அல்ல செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்று நம்புகின்றேன் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் வீதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி செயற்படுத்தப்படும் 'மறுமலர்ச்சிக்கான பாதை' திட்டத்தின் கீழ் குறிகாட்டுவான் இறங்குதுறைக்கான மறுசீரமைப்பு வீதிக்கட்டுமானத்தின் ஆரம்ப நிகழ்வு மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் முதல் தடவையாக எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு என்பன குறிகாட்டுவானில் இன்று சனிக்கிழமை(04) காலை நடைபெற்றது. இதன்போது ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் ஓர் விடயத்தைக் கூறுவார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்தத்துறையின் அமைச்சராக இருக்கும்போது வடக்குக்கு தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ளலாம். அமைச்சர் பிமல் ரத்நாயக்க எந்தத் திட்டம் வரும்போதும் அதில் வடக்கு மாகாணத்தையே முதன்மைப்படுத்துவார் என்று அவர் கூறுவார். அது உண்மை. நான் யாழ்ப்பாண மாவட்டச் செயலராக இருந்தபோது குறிகாட்டுவான் வீதிப் புனரமைப்பு மற்றும் இறங்குதுறை புனரமைப்புக்கு கடுமையாக முயற்சித்தேன். ஆனால் அது கைகூடவில்லை. இப்போதுதான் சாத்தியமாகியிருக்கின்றது. இது மிகச் சிறப்பான தருணம். இந்த அரசாங்கம் சொல்லில் அல்ல செயலில் நிரூபித்து வருகின்றது. வடக்கு மாகாணத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. பல அமைச்சர்கள் வடக்கு மாகாணம் தொடர்பான விடயங்களை சாதகமாகவே அணுகுகின்றார்கள். அது வடக்கு மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். இவற்றுக்கு மேலாக, நெடுந்தீவு பிரதேசத்துக்கே உதவி அரசாங்க அதிபராக முதலில் நியமிக்கப்பட்டேன். அந்தப் பிரதேச மக்களின் வலிகள் தெரியும். அந்தப் பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பது சிறப்பானது. இவ்வாறான அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இ.சந்திரசேகர் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், யாழ் மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், வேலணை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், வடக்கு மாகாணப் பணிப்பாளர், மாவட்ட பொறியியலாளர்கள், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், நெடுந்தீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். வீதி அபிவிருத்திப் பணி 299 மில்லியன் ரூபா செலவில் முதல் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது. அதேநேரம், 800 மில்லியன் ரூபா செலவில் குறிகாட்டுவான் இறங்குதுறையும் மறுசீரமைக்கப்படவுள்ளது. அத்துடன், குறிகாட்டுவான் வரையிலான பிரதான வீதியில் 3.2 கிலோ மீற்றர் அடுத்த வருடம் புனரமைக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதியளித்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/226871
  12. பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் இடம்பெற்றுள்ளார்கள். இருவரும் சுப்மன் கில் தலைமையின் கீழ் விளையாட உள்ளனர். ரோஹித் சர்மா நீக்கம் பற்றி பிசிசிஐ தேர்வு குழுவின் தலைவர் அஜித் அகர்கரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது 2027 ஒருநாள் உலக கோப்பையை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார் இந்த முடிவு பற்றி ரோஹித் சர்மா தற்போது வரை எந்தக் கருத்தும் தெரிவிக்காத நிலையில் சமூக ஊடகங்களில் யூகங்கள், விமர்சனங்கள், ஆதரவுகள் என விவாதிக்கப்பட்டு வருகின்றன. கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள சுப்மன் கில், "ஒருநாள் உலக கோப்பைக்கு முன்பாக 20 போட்டிகள் உள்ளன. 2027-ல் தென் ஆப்ரிக்காவில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடரை வெல்வது தான் எங்களின் மிகப்பெரிய இலக்கு." எனத் தெரிவித்தார். ரோஹித் சர்மா, அஜித் அகர்கர் இடையே என்ன நடந்தது? பட மூலாதாரம், Gareth Copley/Getty Images படக்குறிப்பு, அஜித் அகார்கர் ரோஹித் சர்மாவிடம் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டதா என்கிற கேள்விக்குப் பதிலளித்த அகர்கர், அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு முன்பாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது என்றார். கேப்டன்சி முடிவுக்கு ரோஹித்தின் எதிர்வினை பற்றிய கேள்விக்கு, "அது எனக்கும் ரோஹித்துக்கும் இடையிலான உரையாடல். அதனைப் பொதுவெளியில் தெரிவிக்க விருப்பமில்லை." எனத் தெரிவித்தார். எதிர்கால திட்டத்தின் ஒரு அங்கமாக புதிய கேப்டனுக்கு தன்னை அந்தப் பொறுப்பில் நிரூபித்துக் கொள்ள போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டியது முக்கியமானது என்றும் கூறினார். "அடுத்த உலக கோப்பைக்கு இரண்டு ஆண்டுகள் உள்ளன. அதற்குள் புதிய கேப்டன் அணியுடன் கூடுதல் நேரம் செலவழித்து திட்டங்களை மேற்கொள்ள போதுமான வாய்ப்பு கிடைக்கும். அதனால் தான் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது." என்கிறார் அகார்கர். ஒவ்வொரு வடிவத்திற்கும் (டெஸ்ட், ஒருநாள், டி20) வெவ்வேறு கேப்டன்கள் இருப்பது எளிதல்ல எனக் கூறும் அவர், "அது திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளைக் கடுமையாக்குகிறது. ரோஹித் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். ஆகவே, ஒருநாள் கேப்டன்சியையும் இளம் வீரர்களிடம் கொடுக்கலாம் என தேர்வாளர்கள் எண்ணினர்." எனத் தெரிவித்தார். ரோஹித் சர்மா 2023 ஒருநாள் உலக கோப்பை இறுதி போட்டிக்கு இந்திய அணியை வழிநடத்திச் சென்றார். இந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை அவர் வென்று கொடுத்தார். அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கும் முடிவு எளிதானது அல்ல என்பதை அகர்கர் ஒப்புக்கொள்கிறார். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம், Gareth Copley/Getty Images படக்குறிப்பு, ஹர்பஜன் சிங் ரோஹித் சர்மா நீக்கப்பட்டது தனக்கு ஆச்சரியமளித்ததாக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சாம்பியன்ஸ் டிராபி வென்ற அவருக்கு ஆஸ்திரேலியாவில் அணியை வழிநடத்த தகுதியுள்ளது என்றும் கூறினார். இந்த முடிவு பற்றி ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் ஹர்பஜன் பேசியதாக பிடிஐ செய்தி முகமை கூறுகிறது. "சுப்மன் கில்லுக்கு வாழ்த்துக்கள். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியை சிறப்பாக வழிநடத்துகிறார். தற்போது மேலும் ஒரு பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ரோஹித்தின் இடத்தில் சுப்மன் கில் வைக்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறந்த சாதனைகளை கொண்ட வீரர் ரோஹித்." "ரோஹித்தை கேப்டனாக பார்க்காமல் இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் ரோஹித்தை அணியில் தேர்வு செய்கிறீர்கள் என்றால் அவரை கேப்டன் ஆக்குங்கள், ஏனென்றால் சமீபத்தில் தான் அவர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்துள்ளார். இந்தத் தொடரில் அவர் கேப்டனாக இருந்திருக்க வேண்டும். அணி தேர்வாளர்கள் 2027 ஒருநாள் உலக கோப்பையைப் பற்றி யோசிக்கிறார்கள் என்றால் அதற்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது." என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆகாஷ் சோப்ரா முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா பெரிய தொடர்களுக்கு முன்பாக ரோஹித் சர்மாவுக்கு போதிய நேரம் வழங்கப்பட்டதைப் போல சுப்மன் கில்லுக்கும் வழங்கப்படுவது சரியே என்கிறார். "ரோஹித் 2022 டி20 உலககோப்பையில் கேப்டனாக இருந்தார், அதே போல் 2024 உலக கோப்பையிலும் கேப்டனாக இருந்தார். உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப அணியைக் கட்டமைக்குமாறு அவரிடம் கூறப்பட்டது. நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் எடுக்கப்பட்டார்கள், முடிவாக கோப்பை கிடைத்தது. அதன் பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது. ரோஹித் சர்மாவுக்கு போதிய நேரம் வழங்கினீர்கள். ரோஹித் சர்மாவுக்கு நேரம் வழங்கப்பட்டால் சுப்மன் கில்லுக்கும் நேரம் வழங்கப்பட வேண்டும்." எனத் தெரிவித்தார். இந்திய அணியின் முன்னாள் உதவி பயிற்சியாளரான அபிஷேக் நாயர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசுகையில், இந்த முடிவு பற்றி ரோஹித்தும் தேர்வாளர்களும் பேசிக் கொள்வது முக்கியமானது எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "என்னைப் பொருத்தவரை, தேர்வாளர்கள் ரோஹித் சர்மாவிடம் பேசினார்களா என்பது மட்டுமே முக்கியமானது. ரோஹித் சர்மாவும் தேர்வாளர்களும் கில்லுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என ஒப்புக்கொண்டால், இது சரியே. இதற்கான பதிலை ரோஹித் சர்மா மட்டுமே கொடுக்க முடியும். ஒரு கேப்டனாக அவர் 2027 உலக கோப்பைக்கு தயாராகி வந்தார். எனவே இதைப்பற்றி உரையாடல் நடைபெற்றிருக்கும் என்றும், இந்த முடிவில் ரோஹித்தும் தேர்வாளர்களும் ஒப்புக் கொண்டிருப்பார்கள் என்றும் நம்புகிறேன்." எனத் தெரிவித்தார். பிசிசிஐ மீது எழுப்பப்படும் கேள்விகள் பட மூலாதாரம், Getty Images முன்னாள் வீரர்கள் மற்றும் வல்லுநர்களைக் கடந்து இந்த முடிவு சமூக ஊடகங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. விஷால் என்பவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில், "5 ஐபில் கோப்பைகள் மற்றும் பல வருட கடின உழைப்பிற்கு மும்பை இந்தியன்ஸ் கொடுத்தது என்ன? அவமரியாதையும் துரோகமும் தான். 2 தொடர் ஐசிசி கோப்பைகளும் பல வருட வெற்றிகளுக்கும் பிசிசிஐ கொடுத்தது என்ன? அவமரியாதையும் துரோகமும் தான்." எனப் பதிவிட்டுள்ளார். தனய் என்பவர், "ரோஹித் சர்மாவை கேப்டன்சியிலிருந்து நீக்கியதற்கு பிசிசிஐ ஒரு காரணம் கொடுங்கள்." என தனது பதிவில் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் சிலர் பிசிசிஐயின் முடிவை நியாயப்படுத்தியும் பேசுகின்றனர். 'கில் தி வில்' ('Gill The Will') என்கிற கணக்கில், "ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு சுப்மன் கில்லை தற்போது கேப்டன் ஆக்கியதற்கு நீங்கள் (ரோஹித் சர்மா ரசிகர்கள்) அனைவரும் சோகமாக இருப்பீர்கள் என எனக்குத் தெரியும். நீங்கள் கில்லை விமர்சிப்பதற்கு முன்பாக ஒன்றை யோசியுங்கள். விராட் கோலிக்குப் பிறகு ரோஹித் சர்மா கேப்டன் ஆன போது நீங்கள் முழுமையாக அவரை ஆதரித்தீர்கள் தானே? தற்போது அதே மரியாதை சுப்மன் கில்லுக்கும் வழங்கப்பட வேண்டும். கேப்டனான சிறந்த நினைவுகளைத் தந்ததற்கு நன்றி ரோஹித் சர்மா!" எனப் பதிவிடப்பட்டுள்ளது. பாவ்னா என்பவர், "சுப்மன் கில்லுக்கு வாழ்த்துகள். ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா இடத்தை நிரப்புவது எளிதான காரியம் அல்ல. அவர் மிகப்பெரிய பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார், அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது கில்லுக்கு மிகப்பெரிய பொறுப்பாக இருக்கும்." என எழுதியுள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 19, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 29 முதல் நவம்பர் 8 வரை நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgl1jgwe0x3o
  13. 04 Oct, 2025 | 01:12 PM புதிய அரசியலமைப்பு சட்டம் ஒன்று விரைவில் கொண்டுவரப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - சங்கானையில் நிகழ்வு ஒன்றின் பின்னர் வெள்ளிக்கிழமை (03) ஊடகவியலாளர் ஒருவர் "புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பாக உங்களது அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினார். புதிய அரசியலமைப்பு சட்டம் எமது கொள்கை பிரகடனத்தில் இருக்கின்ற ஒரு விடயம். நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒருவருடம்தான் நிறைவடைந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த நாடு எந்த நிலையில் இருந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இது மக்களுக்கு தெரியும். ஆனால் அரசியல்வாதிகள் தெரிந்தும் தெரியாதது போல நடிப்பார்கள். அந்தவகையில் புதிய அரசியலமைப்பு சட்டம் இந்த நாட்டு மக்களுடைய சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் வகையில், நீண்டு நிலைக்கக்கூடிய ஒரு சட்டமாக விரைவில் கொண்டுவரப்படும் என்றார். https://www.virakesari.lk/article/226869
  14. 02 Oct, 2025 | 06:19 PM அ. அச்சுதன் உலகிலேயே மிக அழகான தீவுகளின் 2025ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், அதே இலங்கையின் வட பகுதியில் உள்ள செம்மணியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் இதுவரை குழந்தைகள் உட்பட 235 ற்கும் மேற்பட்டவர்களின் மனித எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இது, அழகிய இலங்கைத் தீவின் பின்னால் மறைந்துள்ள மனிதாபிமானமற்ற கடந்த கால கொடூரங்களை வெளிக்கொணர்வதாக உள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆழத்தைக் கருத்தில் கொள்ளும்போது, அங்கு சட்டவிரோதப் படுகொலைகள் நடைபெற்று, அந்த உடல்கள் இரகசியமாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தில் கண்டறியப்பட்ட இந்த மனிதப் புதைகுழியில், கட்டம் கட்டமாக அகழ்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களான பேராசிரியர் தையமுத்து தனராஜ், பேராசிரியர் பர்ஸானா ஹனீபா, கலாநிதி கெஹான் குணதிலக்க ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட்டனர். அதன் பின்னர், ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் இந்த அவதானிப்புகளும் பரிந்துரைகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் திட்டமிட்ட வகையில் படுகொலைகள் நடந்திருப்பது தற்போது நிரூபணமாகி வரும் நிலையில், இது ஒரு சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. 1995 - -1996 காலப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இத்தகைய படுகொலைகள் அரங்கேறியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கிருசாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, செம்மணி பகுதியில் 300 முதல் 400 பேர் வரை படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாக முன்னர் சாட்சியம் அளித்திருந்தார். அதன்பின் அவர் அடையாளம் காட்டிய இடத்தில் அகழ்வுப் பணிகள் நடத்தப்பட்டு 15 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இந்த வழக்கு யாழ் நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டு, பின்னர் அநுராதபுரம், கொழும்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டது. தோண்டப்பட்ட சடலங்கள் மேலதிக பரிசோதனைக்காக லண்டனுக்கு அனுப்பப்பட்ட பின்னர், இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. எந்தவித விசாரணையும் நடைபெறவில்லை. இந்த நிலையில்தான், 2025 பெப்ரவரியில் செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றபோது, மனித எலும்புத்துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த பெப்ரவரியிலிருந்து செம்மணி புதைகுழி மீண்டும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சோமரத்ன ராஜபக்ச தெரிவித்த சாட்சியம் தற்போது உண்மை என்று நிரூபணமாகி வருகிறது. செம்மணி விவகாரத்தில் சர்வதேச தரத்திலான விசாரணை அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க், செம்மணிக்கு நேரடியாகச் சென்று அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டார். அதன் பின்னர், உரிய விசாரணையின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இந்தச்சூழலில், அகழ்வு மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நிபுணத்துவத்தைக் கோரி இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்திருப்பதாகத் தெரியவருகிறது. காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, நீதி அமைச்சினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செஞ்சிலுவைச் சங்கம் இந்தச் செயற்திட்டத்தில் விரைவில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அகழ்வுப்பணிகளுக்கு நிதி உதவி, கண்காணிப்பு மற்றும் ஆவணப்படுத்தல் நடவடிக்கைகளை காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் வழங்கி வருகிறது. அண்மையில், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தியிருந்த சோமரத்ன ராஜபக்சவை சிறைச்சாலையில் சந்தித்து, காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் அவரிடம் இருந்து தகவல்களைப் பெற்றிருந்தமை இந்த விவகாரத்தில் ஒரு முக்கிய நகர்வாகும். மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கைகள் பாதிக்கப்பட்டவர்கள், வடக்கு, கிழக்கு சமூக இயக்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க்கிடம் ஒரு மகஜரை சமர்ப்பித்தன. அதில் கூறப்பட்ட முக்கிய அம்சங்கள்: • சர்வதேச விசாரணை : தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு உட்பட அனைத்துலகக் குற்றங்களை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதித்துறை அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். • செம்மணி, மன்னார் புதைகுழிகள் : செம்மணி மற்றும் பிற மனிதப் புதைகுழிகள் தொடர்பாக சர்வதேச நிபுணர்களை விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும். • நில ஆக்கிரமிப்பு : தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் நடைபெறும் அரச ஆதரவுடனான குடியேற்றங்களை உடனடியாக நிறுத்தி, நிலங்களை அதன் உரிமையாளர்களிடம் மீண்டும் வழங்க வேண்டும். • கலாசார அழிப்பு : தமிழர் பாரம்பரியப் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கும் சிங்களமயமாக்கல் திட்டங்களை நிறுத்த வேண்டும். • காணாமல் போனோர் விவகாரம் : காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை உடன் வெளிப்படுத்தி, நீதி வழங்க வேண்டும். • சட்டங்கள் நீக்கம் : பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் இணையவழி பாதுகாப்புச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் விசேட கருத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதிகள், சிரேஷ்ட நிர்வாக அதிகாரிகள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தகுதியான 75 பேருடன் கூடிய 25 உப குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன. 2009ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னரும் காணாமல் போனோர் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை. முன்னர் அமைக்கப்பட்ட மெக்ஸ்வல்பரணகம ஆணைக்குழுவுக்கு 19,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்தன. ஆனால், பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை. 1990களில் தென்னாபிரிக்காவில் 'உண்மை கண்டறியும்பொறிமுறை' உருவாக்கப்பட்டு, பல உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட்டன. அதன் மூலம், அந்தப் பிரச்சினையும் முடிவுக்கு வந்தது. இலங்கைக்கும் இதேபோன்ற ஒரு முறை தேவை என நீண்டகாலமாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. அரசாங்கத்திற்கான வேண்டுகோள் தற்போது புதிய அரசாங்கம் நியமித்துள்ள இந்த உப குழுக்களின் செயற்பாடுகள் சுயாதீனமாகவும் நம்பகத்தன்மையுடனும் நடைபெறுவது அவசியம். செம்மணிப் புதைகுழியில் 90 வீதமான எலும்புக்கூடுகள் ஆடைகள் இன்றிப் புதைக்கப்பட்டிருப்பது, அங்கு சட்டவிரோதப் படுகொலைகள் நடந்திருப்பதற்கான சாத்தியத்தை உணர்த்துகிறது. இந்த நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவே சர்வதேச நிபுணத்துவம் அவசியம் என வலியுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது. மனித உரிமைகள் ஆணைக்குழு ஒரு அரச சார்பு நிறுவனம் என்ற போதிலும், அது சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் இத்தகைய ஆலோசனைகளை வழங்கியிருப்பது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். எனவே, காணாமல் போனோர் மற்றும் செம்மணிப் புதைகுழி விவகாரத்தில் அரசாங்கம் ஒரு நீதியான விசாரணையை நடத்தி உண்மையைக் கண்டறிய முன்வரவேண்டும். https://www.virakesari.lk/article/226724
  15. இட்லி கடை - பணத்திமிர் ஒரு உண்மைக் கதையைப் படியுங்கள். அதைத் தொடர்ந்து இட்லி கடைக்கு வருவோம். கிராமத்திலிருந்து சென்னை வந்த ஒருவர், அமெரிக்கா செல்கிறார். அங்கு ஒரு ஹோட்டலைத் திறக்கிறார். அவரின் வாழ்க்கையில் அவரின் அம்மாவின் சமையல் குறிப்புகள் பற்றிய பல செய்திகளை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்கிறார். இந்தியாவுக்கு வந்தால் அவரின் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு அவரும், அவரின் அம்மாவும் சமையல் செய்கிறார்கள். அவர் பல தோல்விகளைச் சந்திக்கிறார். சவால்களை எதிர் கொள்கிறார். எல்லாவற்றிலும் வெற்றி கண்டு அமெரிக்கா மட்டுமல்ல, தற்போது திருப்பதியில் கூட ஒரு ஹோட்டல் துவங்க வேலை நடந்து கொண்டிருக்கிறது. அவர் யார் தெரியுமா? மைலாப்பூர் எக்ஸ்பிரஸ் ஹோட்டலின் உரிமையாளர் ஜெய். அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கிறது அவரின் உணவுகள். ஏன் திரும்ப இந்தியாவில் அதுவும் திருப்பதியில் ஹோட்டல் ஆரம்பிக்கிறார்? அவருக்குத் தெரிந்திருக்கிறது அமெரிக்கா பற்றி. திட்டமிடல். ஒரு மாபெரும் ஹோட்டல் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வெற்றிக் கொடி நாட்டி இருக்கிறார். இவ்வளவுக்கும் அவர் ஒரு பிராமண வகுப்பில் பிறந்தவர். அவரின் குடிப் பெருமையை ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படுத்துகிறார். அவர் விற்பனை செய்யும் உணவுகளில் அவைகள் வெளிப்படுகின்றன. அவரிடம் வேலை செய்யும் பணியாளர்களிலிருந்து எல்லாவற்றிலும் அதைப் பயன்படுத்துகிறார். அவர் மிகச் சரியான வகையில் தன்னையும், தன் குடிப் பெருமையையும், தன்னைச் சார்ந்த நபர்களின் வாழ்க்கையிலும் முன்னேற்றத்தைக் கொண்டு வருகிறார். அதை எல்லோரும் வெறுக்கா வண்ணம் சாத்தியப்படுத்துகிறார். உணவு என்கிற போது சமூகநீதி உண்டு. உணவின் பெயர்களில் சாதி இருந்தாலும், அதன் சுவைக்கு முன்னால், அதன் வியாபாரத்துக்கு முன்னால் எதுவும் எடுபடாது. ஆனால் கல்வியில் அது இல்லை. அமெரிக்க கல்லூரி ஒன்றின் ஆய்வறிக்கையில் - பார்ப்பனர்கள் ஒரு பள்ளியின் பாடத்திட்டத்திலிருந்த தலித் என்கிற வார்த்தை இந்திய வரலாற்றில் இல்லை எனக் குறிப்பிட்டு, அதை நீக்க வேண்டுமென்று முடிவெடுத்திருக்கிறார்கள். அதை குழுவில் சமர்ப்பித்த போது, பார்ப்பனர்களின் சதியால் பொய்யான தகவல் தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அந்த பாடத்திட்டத்தினை நிராகரித்திருக்கிறார்கள் அந்தப் பள்ளியினர். https://scroll.in/article/808394/california-to-decide-today-whether-hindu-groups-can-dictate-what-dalits-call-themselves-in-textbooks மேலே இருக்கும் இணைப்பில் இருப்பதைப் படித்துக் கொள்ளுங்கள். அந்தளவுக்கு பிராமணர்கள் தலித் என்கிற வார்த்தையின் மீது வன்மம் கொண்டுள்ளனர் என அந்த நிகழ்வு காட்டுகிறது. இணைப்பை கிளிக் செய்து படித்துப் பாருங்கள். இதோ மற்றுமொரு ஆதாரம். எந்த நாட்டுக்குச் சென்றாலும் இந்து என்ற ஒற்றை வார்த்தையின் பின்னால் மறைந்து கொண்டு நடக்கும் சதிகளைப் படித்துப் பாருங்கள். https://csrr.rutgers.edu/wp-content/uploads/2025/05/hindutva-in-america.pdf அமெரிக்காவில் தலித்துகளும் உள்ளனர். அவர்கள் ஜெய் நடத்தும் மைலாப்பூர் எக்ஸ்பிரஸுக்குச் சென்றால் அவர்களை யாரும் தடுப்பது இல்லை. பணத்திற்கு ஏது சாதி? ஒரு தாய் தன் மகனை தொழிலதிபராக மாற்றியது தான் இந்தக் கதை. இனி இட்லி கடைக்கு வருவோம். தனுஷ் பற்றி எல்லோருக்கும் அக்குவேறு ஆணிவேராகத் தெரிந்திருக்கும். அசுரன் படத்தையும் பார்த்திருப்பீர்கள். இந்த இட்லிகடை திரைப்படம் அவரின் கற்பனையில் உருவான படமாம். இயக்கமும் அவரே. என்ன கதை? ஒரு கிராமத்தில் சாலையோரமாய் இருக்கும் உணவகத்தினை தனுஷின் அப்பா ராஜ்கிரண் நடத்தி வருகிறார். சிறுவனாக இருந்த பொழுது முதற்கொண்டு அவருடன் உணவகத்துக்கு வரும் தனுஷ் வளர்கிறான். உணவு தயாரிப்பு பற்றிப் படிக்கிறான். ராஜ்கிரண் அவனை இங்கேயே இருந்து, இந்த உணவகத்தை நடத்தி வா என்கிறார். அவன் மறுத்து விடுகிறான். சென்னை செல்கிறான், பின்னர் அமெரிக்கா செல்கிறான். அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு உணவகத்தின் உரிமையாளர் மகளை விரும்புகிறான். திருமணம் நிச்சயமாகிறது. அப்பாவை திருமணத்துக்கு அழைக்கிறான். அவர் முடியாது என்கிறார். திருமண ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். அடுத்த நாளில் ராஜ்கிரண் இறக்கிறார். இறுதிச்சடங்கிற்காக இந்தியா வருகிறான். பின்னர் பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பின்னால் அப்பா விட்டுச் சென்ற இட்லிக் கடையை நடத்துகிறான். வில்லன் அமெரிக்க காதலியின் அண்ணன். லாஜிக்கெல்லாம் பார்க்க கூடாது. அவனுடன் படித்த பெண்ணைத் திருமணம் செய்கிறான். எதிர்த்த அமெரிக்க மச்சானை அகிம்சா படி சமாளித்து அவனை இந்த இட்லிக் கடையில் மாவாட்ட வைக்கிறான். இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் என்ன தெரியுமா? ஊரில் பேசிக் கொல்(?)கிறார்கள் இப்படி. “அப்பன் பெயரை மகன் காப்பாற்றி விட்டான்” சுபம். இந்தப் படத்தைப் பார்த்த மாத்திரத்தில் புட் பிளாக்கர் குஞ்சாமணிகளுக்கு குஷி வந்திருக்கும். ஆட்டுக்கல்லில் ஆட்டும் மாவு இட்லி, அம்மிக்கல்லில் அரைத்து வைக்கும் சாம்பாரின் சுவைக்கு இந்த உலகில் ஈடு இல்லை. அந்தப் பாரம்பரியத்தை விட்டு விடலாமா? இதற்கு முன்னால் காசு, பணமெல்லாம் தூசு. சாதி,சனத்தை விட்டு விட்டு வெளி நாட்டுக்கு ஏன் போய் பணம் சம்பாதிக்க வேண்டும். இந்த இட்லியைச் சாப்பிட்டுச் செல்லும் மக்கள் பாராட்டும் வார்த்தைகளை விட உயர்ந்த ஒன்று இந்த உலகில் உள்ளதா? அனைவரும் இதற்குத்தானே பிறந்தோம். இதை விட ராக்கெட் விடுவது, டெக்னாலஜியில் வளர்வது, கோடிகளில் சம்பாதிப்பது எல்லாம் ஒன்றுமே இல்லை. இந்தப் படம் அதைத்தான் சொல்கிறது. பாரம்பரியத்தினைக் காப்பாற்ற வேண்டுமாம். யாதும் ஊரே யாவரும் கேளீர் (உறவினர்) என்றுச் சொன்னார் கலியன் பூங்குன்றனார். இல்லையில்லை என் ஊரே எனக்குப் போதும் என்கிறது இட்லிகடை. மண் சுவர், ஓலைக்கூரை வேய்ந்த சிறு கடை, மரப்பெஞ்சுகள் இரண்டு, அடுப்பு, அம்மிக்கல், ஆட்டுக்கல் - பாரம்பரியம். 1800 களில் இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கிலேயனுக்கு, இந்தியாவில் இருந்த சாதி கொடுமைகள் பெருத்த அவமானத்தை தந்தது. பிராமண குலத்துக்குத்தான் கல்வி - எல்லோருக்கும் அன்று இல்லை. அக்ரஹாரத்துக்குள் தலித்துகள் வரவே கூடாது. தலித்துக்கு என சேர் என்ற பெயரில் ஊரை விட்டு ஒதுக்கிய இடத்தில் வீடுகள். தலித்துக்கு என சொத்துக்கள் கிடையாது. பரம்பரையான கூலிகள் அவர்கள். குளத்தில் குளிக்க அனுமதி இல்லை. தெருவில் நடக்க அனுமதி இல்லை. கோவிலுக்குள் கடவுளைக் கும்பிட அனுமதி இல்லை. முலையின் சைசுக்கு வரி கட்ட வேண்டும். கிணற்றில் தண்ணீர் எடுக்க அனுமதி இல்லை. மேல் துணி போட அனுமதி இல்லை. காலில் செருப்பு அணிய அனுமதி இல்லை. நீதிமன்றத்தில் நீதிபதியிடமிருந்து 16 அடி தள்ளி நிற்க வேண்டும். தென் தமிழகத்தில் பரவி இருந்த மனித வன் கொடுமைகள் இவை. பெரியார் தென் தமிழகத்தினை திராவிடக்குடும்பம் எனக் குறிப்பிட்டு மேலே குறிப்பிட்டுள்ள கொடுமைகள் செய்தோரை எதிர்த்தார். படிப்பறிவில்லாதவர்களைப் படிக்க சொன்னார், கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். பெரியார், அண்ணா, கலைஞர் என இன்றும் தொடர்கிறது சாதிய வன் கொடுமைகள். இதோ தமிழ் நாட்டிலிருக்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் பிராமணரைத் தவிர வேறு எவரும் கருவறைக்குள் சென்று கடவுளை வழிபட முடியாது. இப்படியான சூழல் இருக்கும் போது, இந்த இட்லி கடை. பிரதமர் மோடியின் விஸ்வகர்மா திட்டம், ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் ஆகியவை பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் திட்டங்கள் அல்லவா? இன்றைக்கும் தமிழ் நாட்டு மாணவர்களின் கல்விக்கான தொகையை தராமல் தடுத்துக் கொண்டிருக்கிறது பிஜேபி அரசு. இட்லி கடை என்ன சொல்ல வருகிறது? வண்ணான் மகன் வண்ணான் தோட்டி மகன் தோட்டி ஆசாரி மகன் ஆசாரி தோட்டக்காரன் மகன் தோட்டக்காரன் சாதியும் சனமும் தேவை (எதற்கு இட்லி தின்பதற்கு) அமெரிக்கா தேவையில்லை, பணம் தேவையில்லை. படிப்புத் தேவையில்லை. இப்படி எதுவும் தேவையில்லை. அப்பன் பெயரைக் காப்பாற்ற வேண்டும். குலப் பெருமையை விட்டு விடக்கூடாது. அந்த ஊரில் ராஜ்கிரண் மட்டும்தானே உணவகம் வைத்திருந்தார். அவரின் ஆசையை அவரின் மகன் நிறைவேற்றுவது எப்படி தவறாகும் என்று கேட்பீர்கள். அது தனிப்பட்ட ஒருவரின் ஆசை. அந்த ஆசையை மகன் நிறைவேற்றி இருக்கிறான், அதுதானே படம். அதை இப்படி விமர்சிக்க வேண்டுமா எனவும் கேட்பீர்கள். சினிமாக்காரர்களை முதலமைச்சராக துடித்துக் கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு. பக்கத்து மாநிலத்தில் ஒரு சினிமாக்காரர் துணை முதலமைச்சராக ஆக்கிய பெருமை தென் இந்தியாவுக்கு உண்டு. படித்தவர்களையும், படிக்காதவர்களையும் சேர்த்து மூளை மழுங்கச் செய்யும் தந்திர வித்தை கொண்டது சினிமா. இப்போது சொல்லுங்கள். நான் விமர்சிப்பது சரிதானே? சமூக நீதிக்காக இன்றைக்கும் இணையத்தில் கம்பு சுத்திக் கொண்டிருக்கும் என்னைப் போன்றோருக்கு இந்தப்படம் மாபெரும் எரிச்சலைத் தந்தது. ஒரு பிராமணர் தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களை அமெரிக்கா வரை கொண்டு சென்று, அவர்களின் வாழ்வியலை உயர்த்துகிறார். ஆனால் இவரோ அதெல்லாம் தேவையில்லை என தன் வாழ் நாளை சமூகநீதிக்காக வாழ்ந்தவர்களை அசிங்கப்படுத்தி, தானும், தன்னைச் சேர்ந்தவர்களும் வாழ்க்கையில் எல்லா நிலையிலும் முன்னேற்றமடைவது தவறு எனப் படமெடுத்துக் கொண்டிருக்கிறார். சாதி சனம் முக்கியம் என்று பேசுகிறார். இதற்கு என்ன காரணமாக இருக்கும்? வேறென்ன பணம் வந்தால் பத்தும் பறந்து போகும். கொஞ்சமாவது மனித சமூகத்தின் மேன்மைக்காக சிந்திக்க வேண்டும். ஆனால் அதற்கான தகுதி இருப்பவர்களிடம் இதைக் கேட்கலாம். இல்லாதவர்களிடம் கேட்டு என்ன பலன்? சமூக நீதிக்கான போராட்டத்தைச் சீர்குலைக்கும் நயவஞ்சகமான படம் இது. இது கோடாலிப்படம். தீட்டிய மரத்தில் கூர் பார்க்கும் அவலம். இது படமல்ல, அசிங்கம். வளமுடன் வாழ்க. 04.10.2025 ஒரு குசும்பு விமர்சனம் : இட்லி கடைத் திரைப்படத்தில் ராஜ்கிரண் ஆட்டுக்கல்லில் இட்லிக்கு மாவு அரைப்பார். அதில் தான் சுவை அதிகமாம். ஒரு விஷயத்தை தனுஷ் மறந்து போனார். தனுஷ்க்கு ஆட்டுக்கல்லே தேவையில்லை. நித்யா மேனனே போதுமே? பின்னர் எதற்காக இன்னொரு ஆட்டுக்கல்? இந்த இடத்தில் இயக்குனர் தனுஷ் கொஞ்சம் ரசனை மறந்து விட்டார் என்பது அடியேனின் பார்வை. https://thangavelmanickadevar.blogspot.com/2025/10/blog-post.html
  16. Tourism Directories (Bus Stands) Bus Depot - Karainagar 0212251854 0212251854 Address Karainagar (AB17) - Jaffna, Road, Karainagar, Jaffna, 40000, Sri Lanka Central Bus Stand - Jaffna 0212222281 0212222281 Address Hospital, Road, Jaffna Town, Jaffna, 40000, Sri Lanka Bus Depot - Kondavil 0212222207 0212222207 Address Palaly, Road, Kondavil, Jaffna, 40000, Sri Lanka Central Bus Stand - Mullaitivu 0212290139 0212290139 info@tourismnorth.lk Address SLTB, Mullaitivu Depot, Mullaitivu town, Mullaitivu, 42000, Sri Lanka Central Bus Stand - Mannar 0232222281 0232222281 info@tourismnorth.lk Address SLTB, Mannar Depot, Mannar town, Mannar, 41000, Sri Lanka Central Bus Stand - Vavuniya 0242223481 0242223449 info@tourismnorth.lk Address Kandy, Road, Vavuniya town, Vavuniya, 43000, Sri Lanka
  17. 04 Oct, 2025 | 02:17 PM கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா வந்தாறுமூலை வளாக நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் சனிக்கிழமை (04) ஆரம்பமானது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தலைமையில் ஆரம்பமான இப்பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாளில் பிரதம அமைச்சரின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்திரி பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டார். இப்பட்டமளிப்பு விழாவில் 1966 உள்வாரி, வெளிவாரி மாணவர்களுக்கான பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு பட்டங்கள் வழங்கி உறுதிசெய்யப்படவுள்ளன. முதலாம் நாளின் சனிக்கிழமை (04) முதலாவது அமர்வின் போது சிவசுப்ரமணியம் பத்மநாதனுக்கு கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது. 240 பட்டதாரிகளுக்கும் இரண்டாவது அமர்வின் போது 345, மூன்றாவது அமர்வின் போது 400 பட்டதாரிகளுக்கும் முதுமாணி, இளங்கலைமாணி உட்பட விவசாயத்துறை, கலைத்துறை, வணிக முகாமைத்துவத்துறை மற்றும் அழகியல் கற்கைகள் துறை, மருத்துவத்துறை, விஞ்ஞானத்துறை மற்றும் சித்தமருத்துவத்துறைகளில் பட்டங்கள் வழங்கப்பட்டன. இரண்டாம் நாள் (05) நிகழ்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சிரேஸ்ட பேராசிரியர் கபில செனவிரட்ன பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். இரண்டாம் நாளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் அமர்வுகளின்போது முறையே 261, 365, 355 பட்டதாரிகளுக்கும் வணிக முகாமைத்துவத்துறை, தொழில்நுட்பத்துறை, அழகியல்கற்கைத்துறை, பிரயோக விஞ்ஞானத்துறை, தொடர்பாடல் முகாமைத்துவத்துறை, கலைத்துறை, மருத்துவத்துறை, வணிக முகாமைத்துவத்துறை ஆகியவற்றிலிருந்து உள்வாரி மற்றும் வெளிவாரிப் பட்டதாரி மாணவர்களுக்கான பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/226874
  18. யாருக்காவது உதவும் பகிருங்கள் இலங்கை போக்குவரத்து சபை CTB 🔴திருகோணமலை 0262222201 ⭕️பேருந்து நிலையங்கள் யாழ்ப்பாணம் 0212222281 கிளிநொச்சி 0212283637 ⭕️முகாமையாளர்கள் யாழ்ப்பாணம் 0771058150 / 151 கிளிநொச்சி 0771058170 / 171 முல்லைத்தீவு 0771058190 / 191 வவுனியா 0771058160 / 161 மன்னார் 0771058140 / 141 ⭕️இ.போ.ச - வட பிராந்தியம் 0212222877 ⭕️பிரதம பிராந்திய முகாமையாளர் Chef Regional Manager (CRM) 07715058100 ⭕️பிராந்திய முகாமையாளர்கள் Operation Manager 0771058101 ⭕️சாலை யாழ்ப்பாணம் (கோண்டாவில்) 0212222207 காரைநகர் 0212283637 பருத்தித்துறை 0212262188 முல்லைத்தீவு 0212290139 தற்போது நாட்டு சூழ் நிலையினை கருத்தில் கொண்டு பயணம் தொடர்பான தகவல்களுக்கு பொது போக்குவரத்து தொடர்பான தொடர்பு இலக்கங்களை உங்கள் தொலைபேசியில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். என்ன நேரம் பஸ் இருக்கு, இல்லை என்பதை அறிய அடுத்தவரை call எடுத்து அடிக்கடி தொந்தரவு செய்யாமல் நீங்களே உரிய சேவை தரப்பிடம் கேட்டு கொள்ளுங்கள். தகவல் தொகுப்பு: த. கிருஷ்ணா ஏனயவர்களுக்கும் உதவும் தகவல் என்பதால் இங்கே பகிர்ந்துள்ளேன்.
  19. காசாவிற்கு 40 படகுகளில் நிவாரணம் : கிரேட்டா தன்பெர்க் குழுவினரை தடுத்து நிறுத்திய இஸ்ரேல் கடற்படை 02 Oct, 2025 | 01:18 PM காசா முனையில் போர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்காக நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற சுவீடனின் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் மற்றும் அவரது குழுவினரை இஸ்ரேல் கடற்படையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக அஷோத் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், விரைவில் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி, காசா முனையை நிர்வகிக்கும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 251 பேர் பணயக் கைதிகளாக காசாவுக்கு கடத்திச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் இல்லை என அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளால் காசா முற்றிலும் நிலைகுலைந்துள்ளது. இதுவரை சுமார் 65 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர். போரால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு சர்வதேச நாடுகளில் இருந்து அனுப்பப்படும் நிவாரண உதவிகளை இஸ்ரேல் இராணுவம் தடுத்து நிறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் காசாவில் மோசமான பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையில், சுவீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், அமெரிக்க நடிகை சூசன் சாரண்டன், மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், 40 படகுகளில் கடல்வழியாக நிவாரணப் பொருட்களை ஏற்றி காசாவை நோக்கிப் பயணித்தனர். அவர்கள் பயணித்த படகுகள், இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கடல் எல்லைக்குள் நுழைந்தபோது, இஸ்ரேல் கடற்படையினர் அங்கு விரைந்து சென்றனர். கிரேட்டா தன்பெர்க் மற்றும் அவரது குழுவினரைத் தடுத்து நிறுத்திய கடற்படையினர், அவர்கள் கொண்டு வந்த நிவாரணப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். பின்னர், கிரேட்டா தன்பெர்க் மற்றும் குழுவினர் அனைவரும் இஸ்ரேலில் உள்ள அஷோத் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், விரைவில் அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/226673
  20. காஸாவில் அமைதி திரும்புகிறதா? - அமெரிக்காவின் புதிய திட்டத்திற்கு ஹமாஸின் பதில் என்ன? பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, இந்த வாரம் வெள்ளை மாளிகையில் டிரம்பும் நெதன்யாகுவும் சந்தித்து அமெரிக்க போர் நிறுத்த திட்டத்தை வெளியிட்டனர். கட்டுரை தகவல் ஜான் சுட்வொர்த் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் அமைதி திட்டத்துக்கு பதிலளித்த ஹமாஸ், "டிரம்பின் திட்டத்தில் உள்ள கைதிகள் பரிமாற்ற விதிகளின்படி, பரிமாற்றத்துக்கு தேவையான நிலைகள் பூர்த்தியாக வேண்டும். அப்படி நடந்தால், உயிருடன் உள்ளவர்களையும் இறந்தவர்களின் உடல்களையும் உள்ளடக்கிய அனைத்து இஸ்ரேலிய கைதிகளையும் விடுவிப்போம்" எனத் தெரிவித்தது. டிரம்ப் இந்த வாரம் வெள்ளை மாளிகையில் அறிவித்த அந்த திட்டம், மோதலை உடனடியாக நிறுத்தி, ஹமாஸிடம் உயிருடன் உள்ள அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்தவர்களின் உடல்களையும் 72 மணி நேரத்தில் விடுவிக்க வேண்டும் என்கிறது. இதற்கு பதிலாக, நூற்றுக்கணக்கான பாலத்தீன கைதிகள் விடுவிக்கப்படுவர். தற்போது பாலத்தீன பிரதேசத்தில் ஹமாஸிடம் 48 இஸ்ரேலியர்கள் இன்னும் கைதிகளாக இருப்பதாக நம்பப்படுகிறது. அவர்களில் 20 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா முன்வைத்த அமைதி திட்டத்தில் ஹமாஸ் ஏற்றுக்கொண்ட மற்றொரு முக்கிய அம்சம், காஸா பகுதியின் நிர்வாகத்தை சார்பில்லாத, திறன் கொண்ட பாலத்தீன வல்லுநர்களிடம் ஒப்படைப்பதாகும். அமெரிக்கா முன்வைத்த 20 அம்சங்களைக் கொண்ட அமைதி திட்டத்தில், பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கம் கொடுக்கப்படவில்லை. குறிப்பாக, ஹமாஸ் தனது ஆயுதங்களை முற்றிலும் கைவிட வேண்டும் என்ற நிபந்தனை குறித்துத் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இஸ்ரேல் அரசு, ஹமாஸின் அறிக்கையை கவனமாக ஆராய்ந்து, அதன் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ள முயல்கிறது. இது ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை உண்மையான நல்லெண்ணத்துடன் ஏற்கும் முயற்சியா, அல்லது நேரம் கடத்தி, நீண்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் அரசியல் உத்தியா என்பதை அது தெரிந்துகொள்ள வேண்டும். ஞாயிறு மாலைக்குள் இந்த ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புக்கொள்ளாவிட்டால் 'பெரும் அழிவு' உண்டாகும் என்று டிரம்ப் எச்சரித்த சில மணி நேரங்களில் ஹமாஸின் அறிக்கை வந்ததால், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அமைச்சரவையில் சிலர் இதை சந்தேகத்துடன் பார்க்கின்றனர். காஸா மீது நடைபெறும் குண்டுவீச்சை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இது மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. "ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையைப் பார்த்தபோது, அவர்கள் நீடித்த அமைதிக்குத் தயாராக உள்ளனர் என்று நம்புகிறேன்," என ஹமாஸ் அறிக்கை வெளியான சிறிது நேரத்திலேயே டிரம்ப் கூறினார். மேலும், "பணயக்கைதிகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வெளியேற்றுவதற்காக, இஸ்ரேல் உடனடியாக காஸா மீதான குண்டுவீச்சை நிறுத்த வேண்டும். தற்போது அதைச் செய்வது மிகவும் ஆபத்தானது" என்றும் அவர் சொன்னார். காஸாவின் எதிர்காலம் பற்றிய பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் பங்கு வகிக்கலாம் என அவரது அறிக்கையின் கடைசி பகுதி கூறுவது, இஸ்ரேலியர்களுக்கு பிடிக்காமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது. ஹமாஸின் அறிக்கை முக்கியமானது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. வெள்ளிக்கிழமை வெளியான வீடியோ செய்தியில், டிரம்ப் இதை ஒரு "முக்கிய நாள்" என்று கூறி, இந்த திட்டத்தை உருவாக்க உதவிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்தார். இருப்பினும், பிராந்தியத்தில் அமைதி உருவாக, இன்னும் பல விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டும். இது ஒரு நிறைவுற்ற ஒப்பந்தம் இல்லை என்பதையும் டிரம்ப் குறிப்பிட்டார். அதேபோல் "இது எங்கு சென்று எப்படி முடியும் என்பதைப் பார்ப்போம். இறுதி முடிவை தெளிவாகவும் உறுதியாகவும் எடுக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c39ren3x342o
  21. உலக விலங்குகள் தினம் இன்று 04 Oct, 2025 | 12:19 PM ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 04 ஆம் திகதி உலக விலங்குகள் தினமாக (World Animal Day) கொண்டாடப்படுகின்றது. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசியின் நினைவு தினம் ஒக்டோபர் 04 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுவதால் இந்நாள் விலங்குகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1925 ஆம் ஆண்டில் ஒக்டோபர் 04 ஆம் திகதி உலக விலங்குகள் தினமாக பிரகடனப்படுத்தபட்டது. விலங்குகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல் மற்றும் அவற்றை பாதுகாத்தல் ஆகியவை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் அழிந்துவரும் விலங்கு இனங்களைப் பாதுகாப்பது மனிதர்களதும் கடமையாகும்.எனவே விலங்குகளை பாதுகாத்து அவற்றை பராமரிப்போம். https://www.virakesari.lk/article/226865
  22. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் – ஐகோர்ட்டு கண்டனம்! கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட பரப்புரையில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் தொடர்ந்த பொதுநல வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி 3 வழக்குகளும், அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரி 4 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. மேலும் தவெக நிர்வாகிகள் நிர்மல்குமார், புஸ்ஸி ஆனந்த் தரப்பில் தொடங்கப்பட்ட முன்ஜாமின் மனுக்கள், ஆதர்வ் அர்ஜூனா மனு உள்ளிட்ட 9 வழக்குகள் மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் எந்த வித பொதுக் கூட்டங்களையும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் நடந்த கூடாது என்று உத்தரவிட்டனர். பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்படும் பட்சத்தில் மட்டும்தான் அனுமதி வழங்க வேண்டும் என்றும், குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்த பிறகே பொது கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணை முடியும் வரை இந்த உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ள நிலையில் சிபிஐ விசாரணைக்கு மறுப்பு தெரிவித்து மனுவை முடித்து வைத்தது. இதைத்தொடர்ந்து இழப்பீடு கோரிய வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் பதில் மனுவை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதில் விஜய் மற்றும் அரசு தரப்பு 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த துயர சம்பவம் குறித்து விசாரணையின் போது நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என மனுதாரர்களுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் தரப்பில் முன்ஜாமின் கோரிய மனு குறித்த விசாரணையின் போது பாதுகாப்பை பொருத்தவரை அரசுக்கு தான் முழு பொறுப்பு உள்ளது என வாதிடப்பட்டது. அரசு தரப்பில் தலைமறைவானது ஏற்கத்தக்கது அல்ல விசாரணை செய்தால் மட்டுமே உண்மை தெரியவரும். விசாரணை தொடக்க நிலையில் உள்ளதால் முன் ஜாமின் வழங்கினால் விசாரணை செய்வது கடினம். இவர்களின் பொறுப்பற்ற தன்மையால் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் முன் ஜாமின் வழங்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்த நீதிமன்றம் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் என இருவரின் முன் ஜாமின் மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. https://minnambalam.com/high-court-branch-orders-in-karur-stampede-case/
  23. Police have released a list of contact numbers for the members of the public to inform on narcotics-related incidents. The Special Operations Room at the Police Headquarters can be contacted on 071 859 8800. The list of relevant contact numbers is as follows: 1. Colombo North - 071 859 8801 2. Colombo South - 071 859 8803 3. Colombo Central - 071 859 8804 4. Nugegoda - 071 859 8805 5. Mount Lavinia - 071 859 8806 6. Gampaha - 071 859 8807 7. Negombo - 071 8598808 8. Kelaniya - 071 859 8809 9. Panadura - 071 859 8810 10. Kalutara - 071 859 8811 11. Matara - 071 859 8812 12. Tangalle - 071 859 8813 13. Galle - 071 859 8814 14. Elpitiya - 071 859 8815 15. Kandy - 071 859 8816 16. Matale - 071 859 8817 17. Theldeniya - 071 859 8818 18. Gampola - 071 859 8819 19. Nuwara Eliya - 071 859 8820 20. Hatton - 071 859 8821 21. Kurunegala - 071 859 8822 22. Kuliyapitiya - 071 859 8823 23. Nikaweratiya - 071 859 8824 24. Puttalam - 071 859 8825 25. Chilaw - 071 859 8826 26. Anuradhapura - 071 859 8827 27. Polonnaruwa - 071 859 8828 28. Kebithigollewa - 071 859 8829 29. Ratnapura - 071 859 8830 30. Embilipitiya - 071 859 8831 31. Kegalle - 071 859 8832 32. Seethawakapura - 071 859 8833 33. Jaffna - 071 859 8834 34. Kankesanturai - 071 859 8835 35. Vavuniya - 071 859 8836 36. Mannar - 071 859 8837 37. Kilinochchi - 071 859 8838 38. Mullaitivu - 071 859 8839 39. Batticaloa - 071 859 8840 40. Ampara - 071 859 8841 41. Trincomalee - 071 859 8842 42. Kantale - 071 859 8843 43. Badulla - 071 859 8844 44. Bandarawela - 071 859 8845 45. Monaragala - 071 859 8846
  24. Published By: Digital Desk 1 04 Oct, 2025 | 10:02 AM நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பரவல் குறித்து பொலிஸாருக்கு நேரடி தகவல்களை வழங்குவதற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாகாணங்களுக்கும் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர்களின் தொலைபேசி இலக்கங்கள் முன்னதாக, ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன. சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர்களின் கீழ் உள்ள மாவட்ட பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் கண்காணிப்பாளர்களின் தொலைபேசி இலக்கங்களும் நேற்று வெள்ளிக்கிழமை (03) வெளியிடப்பட்டுள்ளன. அவற்றிற்கு தொடர்பினை ஏற்படுத்தி, போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் வழங்கலாம் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதில் பொதுமக்களின் ஆதரவு பெரிதும் பாராட்டப்படுவதாகவும், பொதுமக்களால் வழங்கப்படும் தகவல்களின் ரகசியத்தன்மையைப் பாதுகாக்க இலங்கை பொலிஸ் பாடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/226852 Telephone Index https://www.police.lk/?page_id=1301
  25. தவெகவை லெஃப் & ரைட் வாங்கிய நீதிபதி செந்தில் குமார் : கோர்ட்டில் நடந்தது என்ன? முழு விவரம்! தமிழக வெற்றிக் கழகம் என்ன மாதிரியான கட்சி என்று நீதிபதி செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் பாதிக்கப்பட்டவர்களில் இன்னும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கரூர் பெருந்துயரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த வகையில் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ், ‘அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். கரூரில் நடந்த துயரச் சம்பவத்துக்கு காரணமான பொறுப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி செந்தில்குமார் முன்பு இன்று (அக்டோபர் 3) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘இந்த துரதிருஷ்டமான சம்பவத்தை ஒட்டுமொத்த உலகமும் பார்த்துள்ளது. இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், முதல்வர் என அனைவரும் இந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். இருந்த போதும் காவல்துறை எடுத்த நடவடிக்கை போதுமானதாக தெரியவில்லை. சம்பவம் நடந்த பிறகு அக்கட்சித் தலைவர் அங்கிருந்து பறந்து மறைந்து விடுகிறார்’என்று விஜய் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக நீதிபதி கோபத்தை வெளிப்படுத்தினார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், ‘அரசு மீது குற்றம் சாட்டுவது எளிது. தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் முதலில் டிசம்பரில் தான் கரூரில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால் திடீரென, செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் நடத்தப்போவதாக 23ஆம் தேதி அனுமதி கேட்டு கடிதம் வழங்கினர். முதலில் கரூர் ரவுண்டானா பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டனர். அதைத்தொடர்ந்து மூன்று இடங்களை தேர்வு செய்து விருப்பம் தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த இடங்களில் வேலுசாமிபுரம் தான் சிறந்த இடம் என்பதால் அங்கு போலீசார் அனுமதி வழங்கினர். பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை பிரச்சாரக் கூட்டம் நடத்திக் கொள்ள 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தமிழக வெற்றிக் கழகம் தனது எக்ஸ் பக்கத்தில், கரூரில் 12 மணிக்கு விஜய் வந்து உரையாற்றுவார்’ என்று தெரிவித்திருந்தது. இதை நம்பி காலை முதலே மக்கள் வேலுசாமிபுரத்துக்கு வர தொடங்கி விட்டனர். தவறான நேரத்தை சொல்லி மக்களை கட்சியினர் தவறாக வழிநடத்தினர்’ என்று வாதங்களை முன் வைத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி செந்தில்குமார், ‘அப்படி என்றால் கூட்டத்தை மதிப்பிடுவதில் போலீஸ் அதிக எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருந்திருக்க வேண்டும் தானே?’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், ‘விஜய் பிரச்சாரம் செய்த அதே வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அவரது கூட்டத்துக்கு 137 போலீசார் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் தமிழக வெற்றிக் கழக கூட்டத்துக்கு 559 போலீசார் வரை பணியில் அமர்த்தப்பட்டனர்’ என்று பதிலளித்தார். இதையடுத்து நீதிபதி, ‘தவெக பிரச்சார வாகனத்தை பின்தொடர்ந்து சென்று இருசக்கர வாகனங்கள் பேருந்தின் கீழ் சிக்கிக்கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இதை பேருந்து ஓட்டுநரும் பார்த்திருக்கிறார். ஆனால் பேருந்தை நிறுத்தவில்லை. இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டதா? (Hit and run case). ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை? போலீசார் இதை ஏன் கண்டு கொள்ளவில்லை? இதை எப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும்? அரசு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கருணை காட்டுவது போல் தெரிகிறது. அந்தக் கூட்டம் தொடர்பான வீடியோக்களை அனைவரும் பார்த்து இருக்கிறார்கள். எல்லாம் யூடியூபில் பரவுகிறது. இது ஒரு கட்டுப்பாடற்ற கும்பல். 41 பேர் இருந்ததற்காக தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அரசு வழக்கறிஞர் கூறும் போது, பேருந்தின் கீழ் வாகனங்கள் சிக்கியது தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்வதிலிருந்து உங்களைத் தடுத்தது எது? ‘ என்று கேள்வி எழுப்பினார் இதற்கு கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல், ‘நாங்கள் எங்கள் கடமையைச் செய்கிறோம். எங்களை டிஸ்கரேஜ் செய்யாதீர்கள்’ என்று கூற நீதிபதி நான் உங்களை டிஸ்கரேஜ் செய்யவில்லை என்றார். மேலும் நீதிபதி, ‘இது எந்த மாதிரியான கட்சி. கட்சியில் உள்ள அனைவரும் அந்த இடத்தை விட்டு விட்டு ஓடி இருக்கிறார்கள். அந்தக் கட்சிக்கு ஏன் காவல்துறை எந்த நோட்டீசையும் அனுப்பவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தமிழக வெற்றிக் கழகத்தை தடுத்தது எது? கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு குடிநீர் கூட ஏற்பாடு செய்யாதது ஏன்? காவல்துறையினர் பொறுப்பாக இல்லை என்றால் யார் பொறுப்பாக செயல்படுவார்கள்’ என்று கூறி கரூர் நகர காவல் ஆய்வாளரை இவ்வழக்கில் பிரதிவாதியாக சேர்த்தார். இந்நிலையில் மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சங்கரன் ஆஜராகி, கட்சித் தலைவர் ஜோசப் விஜய் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி , அரசு வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னாவிடம், சட்டத்தின் முன் அனைவரும் சமம் ‘ எனக் குறிப்பிட்டார். மேலும் அவர், ‘இது மனிதனால் உருவாக்கப்பட்ட பெரிய பேரழிவு. 41 அப்பாவி உயிர்கள் இழந்ததை பார்த்து நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்காது. நாங்கள் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். நீதிமன்றம் அதன் பொறுப்பை தட்டிக்கழிக்காது. இந்த நிகழ்வின் தொடர்ச்சியான விளைவுகளையும் முழு உலகமும் பார்த்திருக்கிறது. சம்பவம் நடந்த பிறகு அந்த இடத்தை விட்டு கட்சித் தலைவர்கள் அனைவரும் ஓடிவிட்டனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பலியாகி இருக்கும் நிலையில், அந்தக் கட்சி ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இது அக்கட்சித் தலைவரின் மனநிலையை காட்டுகிறது. தலைவருக்கு தலைமை பண்பே இல்லை ‘ என்று தவெக-வை லெப்ட் & ரைட் வாங்கியுள்ளார் நீதிபதி. தொடர்ந்து, கரூர் சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வன்முறையை தூண்டும் வகையில் அக்கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பதிவிட்ட எக்ஸ் பதிவும் நீதிபதியிடம் காட்டப்பட்டது. இதனை பார்த்து நீதிபதி, ‘ஒரு சின்ன வார்த்தை கூட பெரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும். இவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா?. போலீசார் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அரசு தரப்பில், ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு நீதிபதி, ‘ஒரு புரட்சியை ஏற்படுத்துவது போல பதிவிட்டுள்ளார். இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல பொறுப்பற்ற பதிவுகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தார். இறுதியாக கரூர் பெருந்துயரத்தை விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து, இந்த குழுவில் மாவட்ட எஸ்பி-ஐ இணைத்து உத்தரவு பிறப்பித்தார். கரூர் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை ஆவணங்கள் அனைத்தையும் உடனடியாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மாவட்ட போலீசருக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளார் சி.டி.ஆர்.நிர்மல் குமார் இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஜோதிராமன் முன் இன்று (அக்டோபர் 3) விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பிலும், அரசு சார்பிலும் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அரசு வாதத்தை ஏற்று இருவருக்கும் முன் ஜாமீன் வழங்க மறுத்து, மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதனால் இருவரும் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம். https://minnambalam.com/judge-senthil-kumar-strongly-condemns-tvk-in-karur-stampede-tragedy-case/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.