Everything posted by ஏராளன்
-
செயற்கை கருப்பை மூலம் ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் சாத்தியம் என்று சொல்லும் நிறுவனம்
எனக்கென்னமோ எதிர்கால மனிதர்களின் சந்ததி உருவாக்கும் திறன் இல்லாமல் போகப்போகுது போலப்படுகிறது.
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
தினேஷ் சாஃப்டர் கொலை - கோடிக்கணக்கில் கடன் பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளருக்கு தடை கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CIMA SRI LANKA FB PAGE படக்குறிப்பு, தினேஷ் சாஃப்டர் கொழும்பு - பொரள்ளை மயானத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு பணிப்பாளரும், பிரபல தொழிலதிபருமான தினேஷ் சாஃப்டர் உயிரிழந்தமை தொடர்பில் பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொழும்பு இலக்கம் 02 நீதிமன்றத்தின் பதில் நீதவான் சம்பத் ஜயவர்தனவின் உத்தரவிற்கு அமைய, நேற்றைய தினம் தினேஷ் சாஃப்டரின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. இதன்படி, கழுத்து நெரிக்கப்பட்டமையே, உயிரிழப்புக்கான காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். போலீஸ் விசாரணை கோணங்கள் இந்த சம்பவம் தொடர்பில் பல விசேட போலீஸ் குழுக்கள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் படுகொலை விசாரணை பிரிவு ஆகியவற்றின் ஊடாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். சிசிடிவி காணொளிகள் மற்றும் தொலைபேசி தரவுகளின் அடிப்படையிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறுகின்றார். இந்த சம்பவம் தொடர்பில் பொரள்ளை பொது மயானத்தின் ஊழியர்கள், தினேஷ் சாஃடரின் மனைவி உள்ளிட்ட சுமார் 15 பேரிடம் போலீஸார் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். படக்குறிப்பு, பொரள்ளை பொது மயானம் தினேஷ் சாஃப்டர், பொரள்ளை பொது மயானத்திற்கு தனியாகவே வருகைத் தந்திருக்கலாம் என ஊகிப்பதாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தினேஷ் சாஃப்டரின் கார், பொது மயானத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பகுதிக்கு அருகாமையில், நேற்று முன்தினம் இறுதிக் கிரியை ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த இறுதிக் கிரியைகளில் பங்குப்பற்றும் வகையில் சந்தேகநபர் வருகைத் தந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிரபல சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளரும், ஊடகவியலாளருமான பிரையின் தோமஸிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. தாம் ஒரு கோணத்தில் மாத்திரம் விசாரணைகளை நடத்தாது, பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார். பிரையின் தோமஸிடம் மாத்திரமன்றி, தமக்கு கிடைத்த அனைத்து சாட்சியங்களின் ஊடாகவும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறுகின்றார். இலங்கைக்கு நெய்ல் பாலிஷ் என்ற பெயரில் கடத்தப்படும் திரவம் என்ன?16 டிசம்பர் 2022 ரணில் சொல்வது போல இலங்கை இன பிரச்னைக்கு 75வது சுதந்திர தினத்துக்கு முன்பு தீர்வு கிடைக்குமா?15 டிசம்பர் 2022 இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ஜனாதிபதி அனுமதியா? இலங்கை அமைச்சர் விளக்கம்6 டிசம்பர் 2022 பிரையின் தோமஸிடம் விசாரணை பிரபல சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளரும், ஊடகவியலாளருமான பிரையின் தோமஸிடம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியுள்ளனர். உயிரிழந்த தினேஷ் சாஃப்டரிடமிருந்து பல கோடி ரூபா பணத்தை, பிரையின் தோமஸ் பெற்றுக்கொண்டுள்ளமை குறித்து, தினேஷ் சாஃப்டர் ஏற்கனவே போலீஸில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளார். தான் வழங்கிய பல கோடி ரூபாய் பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்காக, தான் செல்வதாக மனைவியிடம் தெரிவித்தே, தினேஷ் சாஃப்டர், நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதேவேளை, தனது நிறுவனத்தின் கடமையாற்றும் பணிப்பாளர் ஒருவருக்கும் இந்த விடயத்தை தினேஷ் சாஃப்டர் தெரிவித்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இதனடிப்படையில், தினேஷ் சாஃப்டரிடமிருந்து பல கோடி ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டதாக கூறப்படும் சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையின் தோமஸிடம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியுள்ளனர். இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் பொரள்ளை போலீஸார், கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கொக்குணுவல முன்னிலையில் விடயங்களை முன்னிலைப்படுத்தியுள்ளனர். விடயங்களை ஆராய்ந்த நீதவான், சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையின் தோமஸிற்கு, வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளார். பிரையின் தோமஸிடம் இரண்டு கடவூச்சீட்டுக்கள் உள்ளதாகவும் போலீஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். இதையடுத்து, இரண்டு கடவூச்சீட்டுக்களின் ஊடாகவும் வெளிநாடு செல்ல குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், தொலைபேசி தரவுகளின் ஊடாக விசாரணைகளை நடத்த போலீஸார் அனுமதி கோரிய நிலையில், தொலைபேசி தரவுகளை பெற்றுக்கொடுக்குமாறு உரிய தொலைபேசி நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு மயானத்தில் காருக்குள் சித்ரவதை; தொழிலதிபருக்கு நடந்தது என்ன?16 டிசம்பர் 2022 'கோ ஹோம் சைனா' போராட்டம் குறித்து இலங்கை தமிழ் அரசியல்வாதி எச்சரிக்கை - பின்னணி என்ன?4 டிசம்பர் 2022 இலங்கை ஜனாதிபதி ரணில் இந்து மத தனித்துவத்தைப் பாதுகாப்பது பற்றி சொன்னது என்ன?30 நவம்பர் 2022 நடந்தது என்ன? கொழும்பு - பொரள்ளை பொது மயானத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் இருந்து, பிரபல தொழிலதிபர் தினேஷ் சாஃப்டர், கைகள் கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டிருந்தார். இவ்வாறு மீட்கப்பட்ட தினேஷ் சாஃப்டர், உடனடியாக, கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தான் கடனை பெற்றுக்கொள்வதாக தெரிவித்து, நேற்று முன்தினம் பிற்பகல் வேளையில், தினேஷ் சாஃப்டர், கொழும்பு - பிளவர் வீதியிலுள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறியிருந்தார். இவ்வாறு வெளியேறிய தினேஷ் சாஃப்டரின் தொலைபேசிக்கு, அவரது மனைவி பல தடவைகள் அழைப்புக்களை மேற்கொண்ட போதிலும், தொலைபேசி செயலிழந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஜி.பி.எஸ் ஊடாக தொலைபேசி அலைவரிசையை சோதனை செய்த நிலையில், அவரது தொலைபேசி பொரள்ளை மயானத்தை காண்பித்துள்ளதை அவரது மனைவி அவதானித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தினேஷ் சாஃப்டரின் நிறுவனத்தில் பணியாற்றும் மற்றுமொரு பணிப்பாளருக்கு அறிவித்த நிலையில், அவர் பொது மயானத்திற்கு சென்ற போதே, தினேஷ் சாப்டர், தனது காரிற்குள் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார். அதனைத் தொடர்ந்தே, மயான ஊழியர்களின் உதவியுடன், தினேஷ் சாஃப்டர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். https://www.bbc.com/tamil/articles/cz58zk6yl3xo
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
கொல்லப்பட்ட வர்த்தகர் தினேஸ் சாப்டர் கிரிக்கெட் வர்ணைணயாளர் பிரையன் தோமசை சந்திக்க திட்டமிட்டிருந்தார் - விசாரணைகளில் தகவல் By RAJEEBAN 16 DEC, 2022 | 03:37 PM இலங்கையின் பிரபல வர்த்தகரின் கொலை தொடர்பிலான ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் அவர் முன்னாள் கிரிக்கெட் வர்ணணையாளர் பிரையன் தோமசை சந்திக்கதிட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது. தினேஸ் சாப்டர் இதனை தனது செயலாளருக்கு தெரிவித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாப்டருக்கும் பிரையன் தோமசிற்கும் இடையிலாக பணகொடுக்கல் வாங்களிற்கும் இந்த கொலைக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். திட்டமிடப்பட்டு கொலை செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கலாம் என கருதுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தற்போது இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறிப்பிட்ட குற்றச்செயல் இடம்பெற்ற பகுதிக்கு இன்று காலை சிஐடியினர் சென்றுள்ளனர். தடயங்கள் ஏதாவது கிடைக்கின்றதா என பார்ப்பதற்காக பொரளை பொது மயானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் சிசிடிவியை ஆராயும் நடவடிக்கைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் சாப்டரின் வாகனம் பார்ம்வீதி ஊடாக மயானத்திற்குள் நுழைந்துள்ளமை தெரியவந்துள்ளது. சாப்டரின் கார் விமானப்படையினரின் நினைவுத்தூபிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்ததை பொலிஸார் பார்த்துள்ளனர். சாப்டர் பிளவர்வீதியில் உள்ள தனது வீட்டிலிருந்து இரண்டு அல்லது மூன்று மணியளவில் கூட்டமொன்றிற்காக சென்றுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வர்ணணையாளர் பிரையன் தோமசை சந்திப்பதற்கு செல்வதாக அவர் தனது செயலாளரிடம் தெரிவித்துள்ளார். பிரையன் தோமல் சாப்டரிடமிருந்து 1.4 பில்லியன் கடன்பெற்றுள்ளார். https://www.virakesari.lk/article/143298
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
கொழும்பு மயானத்தில் காருக்குள் சித்ரவதை; தொழிலதிபருக்கு நடந்தது என்ன? பட மூலாதாரம்,CIMA SRI LANKA FB PAGE 2 மணி நேரங்களுக்கு முன்னர் கொழும்பு - பொரள்ளை மயானத்தில் கைகள் கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு, கார் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு பணிப்பாளரும், முன்னணி வர்த்தகருமான தினேஷ் சாஃப்டர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது. கொழும்பு - பிளவர் வீதியைச் சேர்ந்த 51 வயதான முன்னணி வர்த்தகரே தினேஷ் சாஃப்டர். உயிரிழந்த நபர், தனது காருக்குள் உடல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொரள்ளை போலீஸார் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். இலங்கைக்கு நெய்ல் பாலிஷ் என்ற பெயரில் கடத்தப்படும் திரவம் என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் ரணில் சொல்வது போல இலங்கை இன பிரச்னைக்கு 75வது சுதந்திர தினத்துக்கு முன்பு தீர்வு கிடைக்குமா?15 டிசம்பர் 2022 இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ஜனாதிபதி அனுமதியா? இலங்கை அமைச்சர் விளக்கம்6 டிசம்பர் 2022 நடந்தது என்ன? கொழும்பு - பிளவர் வீதியிலுள்ள தனது வீட்டிலிருந்து தினேஷ் சாஃப்டர் நேற்று (15) மாலை புறப்பட்டு சென்றுள்ளார். பல கோடி ரூபா கடனை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், கடனை பெற்றுக்கொண்ட நபரை சந்திப்பதற்காக தான் செல்வதாக தனது மனைவியிடம் கூறி, தினேஷ் சாஃப்டர் புறப்பட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர், தினேஷ் சாஃப்டரின் மனைவி, தினேஷ் சாஃப்டருக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார். எனினும், தினேஷ் சாஃப்டரின் கையடக்கத் தொலைபேசி செயலிழந்திருந்ததாக போலீஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அவரது மனைவி ஜி.பி.எஸ் அலைவரிசையின் ஊடாக, அவரது தொலைபேசி சமிக்ஞையை தேடியுள்ளார். இதன்போது, தினேஷ் சாஃப்டரின் கையடக்கத் தொலைபேசி, இறுதியாக கொழும்பு - பொரள்ளை மயான வளாகத்தை காண்பித்துள்ளது. மனைவிக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, கணவருடன் பணியாற்றும் மற்றுமொரு நிறைவேற்று பணிப்பாளர் ஒருவருக்கு இது தொடர்பில் அவர் அறிவித்துள்ளார். இதையடுத்து, குறித்த அதிகாரி, பொரள்ளை மயானத்தை நோக்கி சென்றுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES பொரள்ளை மயானத்தில் தினேஷ் சாஃப்டரின் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த அதிகாரி காரை நோக்கி சென்று தேடியுள்ளார். தனது காரின் சாரதி ஆசனத்தில் இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில், கழுத்து வையர் ஒன்றினால் நெரிக்கப்பட்டிருந்ததை, குறித்த அதிகாரி அவதானித்துள்ளார். இதையடுத்து, மயானத்தில் கடமையாற்றும் ஊழியர்களின் உதவியுடன், தினேஷ் சாஃப்டரை, கொழும்பு தேசிய மருத்துவமனையில் குறித்த அதிகாரி அனுமதித்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட தினேஷ் சாஃப்டர், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது. மயானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தினேஷ் சாஃப்டரின் காருக்கு அருகிலிருந்து, சந்தேகத்திற்கிடமான மர்ம நபர் ஒருவர் சென்றுள்ளதை, மயானத்தில் கடமையாற்றும் பணியாளர் ஒருவர் அவதானித்துள்ளமை போலீஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. தன்னிடமிருந்து பல கோடி ரூபா பணத்தை பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் குறித்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தினேஷ் சாஃப்டர் பல முறைப்பாடுகளை செய்துள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். விசாரணையின் முன்னேற்றம் இந்த சம்பவம் தொடர்பில் பொரள்ளை போலீஸார் உடனடி விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. சம்பவம் தொடர்பில் பலரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் கூறுகின்றனர். https://www.bbc.com/tamil/articles/cp9kw9gxddmo
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
தினேஷ் சாப்டரின் கொலை தொடர்பில் வெளியான மேலதிக தகவல்கள் : தேடப்படும் கிரிக்கெட் பிரபலம்! 16 DEC, 2022 | 10:39 AM தினேஷ் சாப்டரின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வர்ணனையாளரான இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊடக முகாமையாளராக பணியாற்றிய ஒருவரைக் கண்டுபிடிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நபருக்கும் தினேஷ் சாப்டருக்கும் இடையில் 138 கோடி ரூபா கொடுக்கல், வாங்கல் இடம்பெற்றுள்ளதாகவும் இந்தக் கொலையின் முக்கிய சந்தேக நபராக பொலிஸாரால் தேடப்படும் நபர், அந்த தொகையை செலுத்தாத காரணத்தால் முன்னதாக கைது செய்யப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். இந்த கொலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொரளை மயானத்தில் வைத்து கொல்லப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்து. முதற்கட்ட விசாரணைகளின்போது சாப்டரின் கார், காசல் வைத்தியசாலை நோக்கி மயானத்துக்குள் செலுத்தப்பட்டது தெரிய வந்ததாக, பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/143255
-
இரசித்த.... புகைப்படங்கள்.
குட்டி யானை காதை வைச்சு பறக்குதோ?!
-
பெயர் மாற்றங்கள்.
உங்கட பஜார்ல குசா அண்ணை தான் யூனியர் போல.
-
பெயர் மாற்றங்கள்.
இத்தால் சகலருமறிய அண்ணைக்கு 60 முடிஞ்சுது, பென்சன் எடுக்க தொடங்கிறார்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
https://twitter.com/ATC_SPACES/status/1589997757682823174?s=20&t=t70WOvhpNtZ3L-pSVb9Xgw
-
இரசித்த.... புகைப்படங்கள்.
https://twitter.com/ATC_SPACES/status/1590219751590367232?s=20&t=t70WOvhpNtZ3L-pSVb9Xgw
-
சிரிக்கலாம் வாங்க
https://twitter.com/ATC_SPACES/status/1590346955120857090?s=20&t=t70WOvhpNtZ3L-pSVb9Xgw
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உண்மை தான், நன்றி உங்கள் கருத்திற்கு.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தமிழ்ப் பகுதிகளில் பிழையா அவர்கள் மொழியில் எழுதிவிடவேணும்!
- IMG_0095.JPG
- IMG_0091.JPG
- IMG_0090.JPG
- IMG_0089.JPG
- IMG_0088.JPG
- IMG_0087.JPG
- IMG_0086.JPG
- IMG_0085.JPG
- IMG_0084.JPG
- IMG_0083.JPG
-
இரான் பெண்கள் ஹிஜாப் போராட்டம்: மாசா அமினி மரணத்தால் முடியை வெட்டி எதிர்ப்பு தெரிவிப்பு
இரான் போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை - வெடிக்கும் மக்கள் எழுச்சி கட்டுரை தகவல் எழுதியவர்,டேவிட் கிரிட்டென் பதவி,பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER/@VAHID இரானில் சமீபத்தில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. “கடவுளுக்கு எதிரான பகைமை” காட்டியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. பெயர் கூறப்படாத “கலவரக்காரர்களில்” ஒருவர் தனது காரைக் கொண்டு ஒரு போலீஸ்காரரை தாக்கிக் கொன்றதாக தெஹ்ரானில் உள்ள புரட்சிகர நீதிமன்றம் கூறியுள்ளதாக நீதித்துறையின் மிசான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இரண்டாவதாக ஒருவர் கத்தி மற்றும் துப்பாக்கி வைத்திருந்தார். மூன்றாவது நபர் போக்குவரத்தைத் தடுப்பதற்கு “அச்சுறுத்தலை” ஏற்படுத்தினார். நான்காவது நபர் கத்தியால் தாக்கியதாக செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் மிசான் அறிவித்தது. ஞாயிற்றுக்கிழமை முதல் ஐந்து மரண தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மனித உரிமை ஆர்வலர்கள் மரண தண்டனைகளைக் கண்டித்துள்ளனர். அவை நியாயமற்ற விசாரனைகளின் முடிவுகள் என்று கூறியுள்ளனர். “போராட்டக்காரர்கள் விசாரணையின்போது வழக்கறிஞர்களை அணுக முடியாது. அவர்கள் தவறான வாக்குமூலங்களை வழங்குவதற்காக உடல் மற்றும் மன சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பிறகு அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது” என்று நார்வேவை தளமாகக் கொண்டு இயங்கும் இரான் மனித உரிமைகள் இயக்குநரான மஹ்மூத்த் அமிரி-மொகத்தம் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்தார். சோமாலியா வறட்சி: இரண்டு சகோதரிகளின் உயிரைக் காப்பாற்ற போராடும் சிறுவன்6 மணி நேரங்களுக்கு முன்னர் துருக்கி இஸ்தான்புல் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் பலி14 நவம்பர் 2022 பல நாடுகளில் குடியேற்ற பிரச்னையில் சிக்கி 18 ஆண்டுகள் விமானநிலையத்தில் வாழ்ந்தவர் மரணம்13 நவம்பர் 2022 மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து நபர்களின் அடையாளத்தை நீதித்துறை வெளியிடவில்லை என்றாலும், அவர்களுடைய குற்றச்சாட்டுகள் பற்றிய தகவல்கள், அவர்கள் முகமது கோபட்லூ, மனுச்சேர் மெஹ்மான் நவாஸ், மஹான் செதரத் மதனி, முகமது பொரோஹானி, சஹந்த் நூர்முகமது-சாதே ஆகியோராக இருக்கலாம் என்று மனித உரிமை ஆர்வலர்கள் நம்புவதற்கு வழிவகுத்ததாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்தது. இரானின் ஷரியா அடிப்படையிலான சட்ட அமைப்பின் கீழ், மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய “கடவுளுக்கு எதிரான பகை” மற்றும் “பூமியில் செய்யும் ஊழல்” போன்றவற்றோடு சேர்த்து பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 21 பேரில் அவர்களும் இருந்தனர். இரானின் தலைவர்கள் வெளிநாட்டு ஆதரவு “கலவரங்கள்” என்று சித்தரித்த பாதுகாப்புப் படைகளின் ஒடுக்குமுறையில் குறைந்தது 348 எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர், 15,900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இரானுக்கு வெளியே செயல்பட்டு வரும் மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனமான HRANA தெரிவித்துள்ளது. ஹிஜாப் அணிவது தொடர்பான கடுமையான விதிகளை மீறியதாகக் கூறி அறநெறி போலீசாரால் காவலில் வைக்கப்பட்டிருந்த மாசா அமினி என்ற 22 வயது பெண் மூன்று மாதங்களுக்கு முன்பு காவலில் மரணமடைந்த பிறகு, மதகுரு ஆட்சிக்கு எதிராகப் பெண்கள் தலைமையிலான போராட்டங்கள் வெடித்தன. செவ்வாய்க்கிழமையன்று தொடங்கிய புதிய பதற்றத்துக்கு மத்தியில், 12 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து நீதித்துறையின் மரண தண்டனை அறிவிப்புகள் வந்துள்ளன. Twitter பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 2019ஆம் ஆண்டு நவம்பர் 19 அன்று, திடீர் எரிபொருள் விலையேற்றத்தால் கோபம் கொண்ட இரான் மக்கள் பெரிய நாடு தழுவிய போராட்டங்களை மேற்கொண்டனர். அதன் நினைவாக மூன்று நாட்கள் ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்களை மேற்கொள்வதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் அழைப்பு விடுத்தனர். செவ்வாய்க்கிழமையன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகள், தெஹ்ரான் மற்றும் பிற முக்கிய நகரங்களில் “சர்வாதிகாரிக்கு மரணம்” உட்பட, உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக முழக்கங்களை எழுப்புவதைக் காட்டியது. தலைநகரில் உள்ள ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில், அயதுல்லா கமேனி “வீழ்த்தப்படுவார்” என்று ஒரு கூட்டம் கூச்சலிட்டது, போராட்டக்காரர்கள் ஒரு மேடையில் தலையை மறைக்கும் ஆடையைத் தீ வைத்து எரித்தனர். ஒரு மெட்ரோ நிலையத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு காணொளியில் ரயில் பெட்டிக்குள் அதிகாரிகள் மக்களை அடிப்பதைக் காட்டுகிறது. மூன்றாவதாக இன்னொரு காணொளியில், பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும்போது, மக்கள் ஓடுவதையும் கீழே விழுவதையும் காண முடிந்தது. புதன்கிழமை இரவு, தென்மேற்கு நகரமான ஐசேவில் உள்ள சந்தையில் எதிர்ப்பாளர்கள், காவல்துறை அதிகாரிகள் மீது ஆயுதம் ஏந்திய “பயங்கரவாத நபர்கள்” துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறைந்தபட்சம் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர்களில் மூன்று ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு பெண் குழந்தை அடங்குவதாக குசெஸ்தான் மாகாணத்தின் துணை ஆளுநர் தெரிவித்தார். செயல்பாட்டாளர் அமைப்பான '1500தஸ்விர்', ஐசேவில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பற்றிய அறிக்கைகளைப் பெற்றுள்ளதாகவும் பாதுகாப்புப் படையினர் 10 வயது சிறுவனைக் கொன்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. சில போராட்டக்காரர்கள் நகரிலுள்ள செமினரிக்கு தீ வைப்பதைக் காட்டுவதாகக் கூறிய காணொளியையும் வெளியிட்டது. Twitter பதிவை கடந்து செல்ல, 2 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 முன்னதாக, குர்திஷ் மனித உரிமைகள் குழுவான ஹெங்காவ், மாசா அமினியின் சொந்த மாகாணமான குர்திஸ்தானில் அமைந்துள்ள வடமேற்கு நகரமான கம்யரனில், பாதுகாப்புப் படையினரால் ஓர் ஆண் எதிர்ப்பாளர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தது. செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினரின் நேரடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மற்றொரு நபருடைய வீட்டின் அருகே அவர் நின்று கொண்டிருந்தார் என்று கூறியது. அதோடு மேலும் இருவர், அருகிலுள்ள சனந்தாஜ் நகரிலும் கொல்லப்பட்டனர் எனவும் ஹெங்காவ் தெரிவித்தது. நார்வேவை தளமாகக் கொண்ட ஹெங்காவ், செவ்வாய்க்கிழமை இரவு அண்டை நாடான மேற்கு அசர்பைஜானில் உள்ள புகான் நகரத்தின் கட்டுப்பாட்டை எதிர்ப்பாளர்கள் கைப்பற்றியதாகவும் கூறினார். செவ்வாய்க்கிழமையன்று புகான், கம்யரனில் “கலவரக்காரர்கள்” இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் ஒரு கர்னல் உட்பட இரு உறுப்பினர்களைச் சுட்டுக் கொன்றதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையால் கட்டுப்படுத்தப்படும் துணை ராணுவ பாசிஜ் எதிர்ப்புப் படையில் உறுப்பினராக இருந்த ஒரு மதகுரு, தெற்கு நகரமான ஷிராஸில் பாட்டில் குண்டுகளால் தாக்கியதில் உயிரிழந்தார் என்றும் அவர்கள் தெரிவித்தனர். போராட்டங்கள் தொடக்கியதிலிருந்து இதுவரை 38 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளதாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனமான HRANA, 43 பேர் உயிரிழந்துள்ளனர் எனக் கூறுகிறது. https://www.bbc.com/tamil/articles/c881qlgyl23o
-
எப்படி பதிவு போடுவது?
வணக்கம் வாங்கோ. நீங்கள் புதிதாக இணைந்துள்ளீர்கள் என நினைக்கிறேன்.