Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    22997
  • Joined

  • Last visited

  • Days Won

    16

Everything posted by ஏராளன்

  1. பிலிப்ஸ் அவுட், ஆட்டம் இங்கிலாந்து பக்கம். ENG 179/6 (20) NZ 135/6 (17.3) CRR: 7.71 REQ: 18
  2. டைட்டானிக் கப்பல் பனிப் பாறையில் முட்டியதன் பின்னரே நான் அதனை பொறுப்பேற்றுள்ளேன் - ஜனாதிபதி By T. SARANYA 01 NOV, 2022 | 11:04 AM போட்டிமிகு தேயிலைச் சந்தையில் நிலைத்திருக்க வேண்டுமாயின் தேயிலை தொழிற்துறையை நவீனமயப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பொருளாதாரத்தில் இது மிகவும் இன்றியமையாதது எனக்கூறிய ஜனாதிபதி, ஆரம்பத்தில் தேயிலை தொழிற்துறையில் கிடைத்த வெற்றியை மீண்டும் உறுதி செய்ய வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார். பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று முன்தினம் (30) பிற்பகல் நடைபெற்ற இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 32வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் உரையாற்றுகையில், “தேயிலை உற்பத்தித் துறையில் கடந்து வந்த இக்கட்டான நிலைமைகள் தொடர்பில் அதன் தலைவர் கூறியிருந்தார். டைட்டானிக் கப்பல் பனிப் பாறையில் முட்டியதன் பின்னரே நான் அதனை பொறுப்பேற்றுள்ளேன். நான் எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். பொருளாதார நெருக்கடியை சந்தித்திருப்பதாக பிரகடனப்படுத்தியுள்ளோம். மக்களுக்குப் போதுமான அளவு உண்பதற்கு உணவு இருக்கிறது என்பதையும் முதலில் உறுதி செய்தாக வேண்டும். இந்த நெருக்கடியுடன் எமது பொருளாதாரம் தடைப்பட்டுள்ளது. பணவீக்கம், நிதி நெருக்கடி ஆகிய அனைத்தும் எமது பொருளாதாரத்திற்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளன. அதிலிருந்து மீள வேண்டும். முதலாவதாக நாம் எம்மிடமுள்ள வெளிநாட்டுக் கையிருப்பை தக்க வைத்துக் கொள்வதுடன் இறக்குமதியை மட்டுப்படுத்த வேண்டும். அதன் ஊடாக, எம்மால் எரிபொருள், உரம் மற்றும் மருந்து ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். வருமானம் இல்லாமல் போனதால் எமக்கு கட்டணங்களைச் செலுத்துவதற்கும் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போயுள்ளது. எனினும் 1.7 மில்லியன் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்கவும் கடன்களை மீளச் செலுத்தவும் வேண்டியுள்ளது என்பதை நாம் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும். நாம் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக அறிவித்துள்ளோம். முதலாவதாக நாம் வங்குரோத்தடைந்துள்ளோம் எனும் நிலையை மாற்றுவதற்கு அவசியமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளோம் என்பதை உறுதிபடுத்த வேண்டும். அதற்காக நாம் சர்வதேச நாணய நிதியத்திடம் கலந்துரையாட வேண்டும். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு அமைப்பும் இதைச் செய்யுமாறு எம்மிடம் வலியுறுத்தியுள்ளன. 2019 ஆம் ஆண்டு வரை எம்மிடம் ஒரு திட்டம் இருந்தது. எனவே நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஆழமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும். அதனை தவிர எம்மிடம் வேறு தெரிவு எதுவும் இல்லை. இவ்வருடம் எமது பொருளாதார வளர்ச்சி வீதம் 8 சதவீத மறைப்பெருமானமாக அமைந்திருக்கிறது. கடந்த வருடம் மறைப்பெருமானத்திலே நாட்டின் வளர்ச்சி வீதம் காணப்பட்டது. அடுத்த வருடம் இது 3 சதவீதமாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்குமென அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இது ஒப்பீட்டளவில் மிக மோசமாகவே இருக்குமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது கவலையளிக்கும் விடயமாகும். இதனால் ஐரோப்பியா மற்றும் ஏனைய நாடுகளில் அதிகரித்து வரும் பணவீக்கத்தால் வாழ்க்கைச் செலவும் அதிகரிக்கும். இது ஆடை, தேயிலை, கோப்பி ஆகியவற்றின் ஏற்றுமதியில் வீழ்ச்சியை ஏற்படுத்தி பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே நாம் ஒருவாறாக இவ்வருடத்தைக் கடந்து அடுத்த வருடத்துக்குச் செல்ல வேண்டும். சுமார் இரண்டு வருடங்களை நாம் சமாளிக்க வேண்டும். எமது வருமானம் 15% இலிருந்து 8.5%ஆக குறைந்துள்ளது. எனவே நாம் மீண்டும் 15% வருமானத்தைப் பெற வேண்டியுள்ளது. 2026 இல் இந்த இலக்கை அடைய வேண்டும். நான் நான்கு வருட நிகழ்ச்சித் திட்டத்துக்குச் சென்றேன். இரண்டு வருடங்களுள் அதனை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. 2023 ஆம் ஆண்டு இலங்கைக்கு மட்டுமன்றி உலக அளவில் மிக மோசமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயம் உள்ளிட்ட அனைத்துக்கும் வரி அறவிட வேண்டியுள்ளது. அதனைத் தவிர எம்மிடம் வேறு வழியில்லை. நாம் அதை படிப்படியாக செய்திருக்கலாம் என்று நான் நினைத்தாலும் எமக்கு பணம் தேவைப்பட்டதால் எம்மால் அவ்வாறு செய்ய முடியவில்லை. கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ள வேண்டியுள்ளது. சாதாரண மக்கள் வாழ்வதற்கு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே முதலாவதாக நாம் தற்போதுள்ள நெருக்கடியை மீளகட்டமைக்க வேண்டும். எனவே நாம் எமது கடன் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும். அதற்காகவே நான் முதலில் பாரிஸ் கிளப்பிற்குச் சென்றேன். அதில் உள்ளவர்கள் அனைவரும் மேற்குல நாடுகளையும், ஜப்பானையும் சேர்ந்தவர்கள். ஆனால் நாம் தனித்துவமானதொரு நிலையிலேயே இருக்கின்றோம். எமக்கு கடன் வழங்க முன்வந்துள்ள மூன்று நாடுகளுள் ஒன்று மாத்திரமே பாரிஸ் கிளப்பிற்கு சொந்தமானது. மற்றைய இரண்டும் அதில் அங்கத்துவம் வகிக்காத நாடுகள் ஆகும். அவை இந்தியா மற்றும் சீனாவாகும். நான் ஜப்பானுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதோடு இந்தியா மற்றும் சீனாவுடன் தற்போது பேச்சுக்களை ஆரம்பித்துள்ளேன். இருதரப்பு விடயங்களை ஆராயும் வகையில் நாம் பொதுவானதொரு மேடையில் இது தொடர்பில் கலந்துரையாடி வருகிறோம். இதுவே நாம் முன்னெடுக்க வேண்டிய செயன்முறையாகும். உயர் வருமானத்தை பெற்று முன்னோக்கிச் செல்ல முடியும் என்பதை காண்பிக்க வேண்டும். பல நாடுகள் எமக்கு நேரடியாகவும் சில நாடுகள் வெவ்வேறு அமைப்புக்களுக்கூடாகவும் உதவிகளை வழங்க முன்வந்துள்ளன. எனவே உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கிறேன். எம்மிடம் போதுமானளவு உரம் கையிருப்பில் உள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகள் எமக்கு உதவ முன்வந்துள்ளன. எனவே உரப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிட்டது. எரிபொருளுக்காக யாரும் எமக்கு பணம் தரப்போவதில்லை. எனவே எம்மிடம் கையிருப்பில் உள்ள வெளிநாட்டுக் கையிருப்பில் உரம் வாங்குவதற்கான பணத்தைக் கொண்டே எரிபொருளை வாங்க வேண்டும். உக்ரேன் யுத்தம் மற்றும் குளிரான காலநிலைக் காரணமாக எரிபொருள் விலை வரும் டிசம்பர் / ஜனவரியளவில் அதிகரிக்குமென எதிர்பார்த்திருந்தபோதிலும் அதன் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது உரம் கையிருப்பில் உள்ளதால் விவசாயத்திற்கு புத்துயிரளிக்க வேண்டும். நெல்லில் ஆரம்பித்து, தேயிலை மற்றும் ஏனைய பயிர்களை அபிவிருத்தி செய்ய வேண்டும். பெரும்போகம் மூலம் அடுத்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிக விளைச்சல் கிடைக்குமாக இருந்தால் நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மைய ஏற்படுத்த அது பெரும் உதவியாக இருக்கும். சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும். அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு செயற்பட்டால் இதனை அடைய முடியும். வெளிநாட்டு நிதி கையிருப்பை இப்போது அதிகரிக்க வழியில்லை. மற்ற எல்லா வழிகளையும் இழந்துவிட்டதால், நமது தொழில் முயற்சிகளை டொலரில் விற்பதே வெளிநாட்டு மூலதனத்தை திரட்ட ஒரே வழியாக இருக்கும். இதன் ஊடாக கையிருப்பில் சுமார் 4 பில்லியன் டொலர்களை சேர்க்க முடியும். இது ரூபாயை மேலும் வலுப்படுத்தும். முழுமையான வர்த்தகப் பொருளாதாரம் மற்றும் உயர் பொருளாதார வளர்ச்சி வீதத்தை நோக்கிச் செல்வதாக இருந்தால் இவை அனைத்தும் சாத்தியமாகும். பணவீக்கம் உயர் மட்டத்தை எட்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் எமக்கு அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் வட்டி வீதங்கள் குறைவடைவதைக் காண முடியும். எனவே, நாங்கள் எடுத்து வரும் இந்த நடவடிக்கைகளால், அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள், வட்டி வீதத்தை எளிதாக்கி அதன் பயனை மக்களுக்கு வழங்க முடியும். கடந்த இரண்டு வருடங்களில் 3.2 டிரில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதனால், உற்பத்தியை பெருக்குவதைத் தவிர, இப்பிரச்சினைகளை குறுகிய வழியில் தீர்க்க முடியாது. தேயிலை உற்பத்தித் துறையில் உள்ள குறைபாடுகளை அறிவோம். போதுமான உரம் கிடைத்துள்ளது. தேயிலைக் கைத்தொழிலை நாம் அபிவிருத்தி செய்ய வேண்டும் பொருளாதார மாதிரி (மொடல்) ஒன்றுடன் நாம் முன்னேற வேண்டும். ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். விவசாயத்தை நவீனப்படுத்தும் வேலைத்திட்டத்தில் இறங்கியுள்ளோம். இதன் ஊடாக தேயிலைக் கைத்தொழிலுக்கு பெரும் மதிப்பு ஏற்படும். தேயிலைக் கைத்தொழிலை மறுசீரமைத்து உங்களின் ஆதரவுடன் முன்னோக்கி செல்லும் வேலைத்திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். இதை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், பனிப்பாறையில் மோதிய டைட்டானிக் கப்பலை காப்பாற்ற என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன்’’ என்றும் ஜனாதபதி தெரிவித்தார். https://www.virakesari.lk/article/138831
  3. ஆப்கானிஸ்தானை வென்றது இலங்கை அணி! By DIGITAL DESK 5 01 NOV, 2022 | 01:36 PM (நெவில் அன்தனி) ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் இலங்கை வெற்றியீட்டியது. ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 145 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 18.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்க ளைப் பெற்று மிகவும் அவசியமான வெற்றியைப் பெற்றது. இப் போட்டி மழையினால தடைப்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டபோதிலும் இந்தப் போட்டி தடையின்றி நடைபெற்றது. இந்த போட்டி முடிவை அடுத்து அரை இறுதிக்கு செல்வதற்கான இலங்கையின் வாய்ப்பு சிறிய அளவில் பிரகாசம் அடைந்துள்ளது. ஆனால், குழு 1இல் நடைபெறவுள்ள கடைசிக் கட்ட முடிவுகளே இக் குழுவிலிருந்து எந்தெந்த அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என்பதை உறுதிசெய்யும். இங்கிலாந்தும் அவுஸ்திரேலியாவும் எஞ்சிய போட்டிகளில் தோல்வி அடைந்தால் அரை இறுதி வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கும். இலங்கை அதன் கடைசிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இன்றைய போட்டியிலும் இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். குசல் மெண்டிஸும் தனஞ்சய டி சில்வாவும் 2ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது குசல் மெண்டிஸ் 25 ஓட்டங்களுடன் வெளியேறினார். (46 - 2 விக்.) எனினும் தனஞ்சய டி சில்வாவும் சரித் அசலன்கவும் 3 ஆவது விக்கெட்டில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணிக்கு நம்பிக்கை ஊட்டினர். மொத்த எண்ணிக்கை 100 ஓட்டங்களாக இருந்தபோது சரித் அசலன்க 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஒரு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய தனஞ்ச டி சில்வாவுடன் இணைந்த பாணுக்க ராஜபக்ஷ 4ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கைக்கு அவிசியமான வெற்றியைக் கிடைக்கச் செய்தார். தனஞ்சய டி சில்வா 42 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 66 ஓட்டங்களுடன் ஆட்மிழக்காதிருந்தார். வெற்றிக்கு 3 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது பானுக்க ராஜபக்ஷ 18 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் முஜிப் உர் ரஹ்மான் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ராஷித் கான் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது. ரஹ்மானுல்லா குர்பாஸ் (28), உஸ்மான் கானி (27) ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி பவர் ப்ளே ஓவர்களில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், 7ஆவது ஓவரில் குர்பாஸின் விக்கெட்டை லஹிரு குமார கைப்பற்றிய பின்னர் ஆப்கானிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. முதல் ஆறு துடுப்பாட்ட வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் அவர்கள் கணிசமான ஓட்டங்களைப் பெறத் தவறியமை ஆப்கானிஸ்தானுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. ஆரம்ப வீரர்களைவிட இப்ராஹிம் ஸத்ரான் (22), நஜிபுல்லா ஸத்ரான் (18), மோஹமத் நபி (13) ஆகியோர் 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். இலங்கை பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க டி சில்வா 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லஹிரு குமார 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா 9 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் கசுன் ராஜித்த 31 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: வனிந்து ஹசரங்க டி சில்வா. https://www.virakesari.lk/article/138853
  4. ஆகா பிலிப்ஸு தொடங்கிட்டான். சுவி அண்ணை சிவமூலிகை பாவிப்பதாக சொல்வதை கண்டிக்கிறேன்.🤪
  5. பையா அவசரம் வேண்டாம், பொறுமை. இந்த தொடரில் சதம் அடிச்சவர் ஒரு பக்கம் நிக்கிறார்.
  6. டி20 உலகக் கோப்பை: விராட் கோலி வேதனையை சாதனைகளாக மாற்றி மறுபிறவி எடுத்தது எப்படி? நிதின் ஸ்ரீவத்ஸவ் பிபிசி செய்தியாளர், ஆஸ்திரேலியாவிலிருந்து 53 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TREVOR COLLENS நல்ல காலமும் கெட்ட காலமும் மாறி மாறி வருவது இயல்பு தான். காலத்தை விட வலுவானது எதுவுமில்லை. காலம் தலைகீழாக மாறவும் அதிக நேரம் பிடிக்காது. இந்த சொலவடை பழையது தான். ஆனால், நிஜ வாழ்க்கையில், நாம் அனைவரும் அடிக்கடி சந்திக்கும் உண்மை தான் இது. இந்திய கிரிக்கெட்டில் இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. விராட் கோலி தற்போது இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 2022 ஜனவரியில் விராட் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பிறகு டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். "இது ஒரு கடினமான முடிவு தான். ஆனால் இத்தனை நாட்களில் நான் ஒரு கேப்டனாக என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்தேன்" என்று அவர் கூறியிருந்தார். இதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு, அவர் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக ஒரு நாள் கேப்டன் பொறுப்பையும் ரோஹித் சர்மாவிடம் ஒப்படைத்தார். முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக், "கோலி சற்று தன்னை மறந்த நிலையில் இருக்கிறார். அவர் மௌனமாகிவிட்டார், பேட்டிங் செய்யும் போது இருக்கும் அவரது ஆக்ரோஷம் இப்போது இல்லை. கிரிக்கெட்டில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு ஊதியம் - சம வருவாய் கிடைக்குமா? டி20 உலக கோப்பை 2022 கிரிக்கெட் - நீங்கள் அறிய வேண்டிய தகவல்கள் இந்தியா சறுக்கியது எங்கே? அரையிறுதி வாய்ப்பு எப்படி? ஆட்டத்தின் போக்கைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் துடிக்கும் அந்தப் பழைய விராட் கோலியை காணவில்லை. அவரிடம் இன்னும் ஐந்து-ஆறு ஆண்டுகள் கிரிக்கெட்டில் நிலைக்க வாய்ப்பு உள்ளது," என்று குறிப்பிட்டார். முன்னாள் கேப்டன் கபில்தேவும் கோலிக்கு "ஓய்வு எடுங்கள்" என்று அறிவுறுத்தினார். பின்னர் ஆசிய கோப்பையில், விராட் கோலி நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு சதம் அடித்தார். ஆனால் சிறிது காலத்திற்கு முன், மெல்போர்னில் பார்வையாளர்களுக்கு விருந்தாக இருந்த அந்த ஷாட்கள் இப்போது இல்லை. டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில், பாகிஸ்தானை தோற்கடிக்கும் பணியை கோலி தனது தோளில் சுமந்தார். அன்றிரவு ஹாரிஸ் ரவுஃப் வீசிய பந்துகளில் கோலியின் இரண்டு சிக்ஸர்களைப் பார்த்தவர், விராட் கோலியின் பெயருக்கு நடுவில் 'கிங்' என்ற பட்டப்பெயர் மீண்டும் திரும்ப வேண்டும் என்று உறுதியாக நம்பியிருப்பார்கள். 1986ஆம் ஆண்டு, அன்று மாலை ஷார்ஜாவில் அடிக்கப்பட்ட ஜாவேத் மியான்டத்தின் சிக்ஸரை ஒரு தலைமுறை இந்திய ரசிகர்கள் டிவி திரையில் பார்த்தனர். விராட்டின் சிக்ஸர் அதை நினைவு படுத்துவதாக இருந்தது. அதன்பிறகு, இந்தியா பாகிஸ்தானை பலமுறை தோற்கடித்தது, ஆனால் மியான்டத்தின் சிக்ஸருக்கு இணையாக ஒரு சில சிக்ஸர்களே கருதப்பட்டன. பட மூலாதாரம்,SAEED KHAN 1996 உலகக் கோப்பையில் வக்கார் யூனிஸின் ஒரு ஓவரில் அஜய் ஜடேஜாவின் 22 ரன்கள், பின்னர் 2003 உலகக் கோப்பையில் செஞ்சூரியன் மைதானத்தில் ஷோயப் அக்தரின் பந்தில் அப்பர் கட் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சிக்ஸர் என ஒரு சில குறிப்பிடத்தக்க சிக்ஸர்களுக்குப் பிறகு, கோலியின் இந்த சிக்ஸர்கள் எந்த இந்திய கிரிக்கெட் ரசிகனுக்கும் ஒரு பெரிய ஆறுதல் தான். இப்போது விராட் மெல்போர்னில் அந்த அந்தஸ்தை அடைந்தது மட்டுமின்றி மறு பிறவி எடுத்தும் வந்துள்ளார். பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடித்து விட்டு, தனது மன உறுதியை அதிகரிக்க கோலி இப்போது எதிரணி பந்துவீச்சாளர் அல்லது ரசிகர்களை நோக்கி அல்லாமல், தனக்குத்தானே பேசிக்கொள்வதை கவனித்தீர்களா? ஆசிய கோப்பை இந்திய கிரிக்கெட் அணி குறித்து எழும் கேள்விகள் கோலி கடந்த சில போட்டிகளில் வெற்றிக்குப் பிறகோ சிறப்பான இன்னிங்ஸுக்குப் பிறகோ வானத்தை நோக்கி விரலை உயர்த்தி தனக்குத்தானே பேசுவதையும் கவனித்தீர்களா? அரை சதம் அல்லது வெற்றியின் போது மற்றவர்களுக்கு மட்டையைக் காட்டுவதற்குப் பதிலாக, கோலி இப்போது தனது முஷ்டிகளை மடக்கித் தரையில் குத்துவதை கவனித்தீர்களா? நிச்சயமாக, இது கோலியின் புதிய தோற்றம், புதிய அவதாரம். உளவியலாளர்கள் ஆர் ஜி கௌடென் மற்றும் எல் கிரஸ்ட் ஆகியோர் தென்னாப்பிரிக்க ஜர்னல் ஆஃப் சயின்ஸில் " த மீடியேட்டிங்க் ரோல் ஆஃப் மென்டல் டஃப்னஸ்" என்ற கட்டுரையில், "விளையாட்டில் சவால்கள், வெற்றிகள் மற்றும் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளும் ஒரு வீரரின் போராட்ட அணுகுமுறையிலிருந்து தான் மன உறுதி வருகிறது. அந்த உறுதி பெற்ற பின் அவரது உடல் மொழி முற்றிலும் மாறுபடுகிறது" என்று எழுதியுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிசிசிஐ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கோலி, "எனது இறுதி நோக்கம் அணியை வெற்றியடையச் செய்வது; அணிக்காக விளையாட வேண்டியது அவசியம்; அதற்காக நான் கடினமாக உழைத்து என்னை மேம்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறேன். அது நடக்காத போது, என்னை நானே ஊக்குவித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது." என்றார். விராட் கோலி பொறுமையைக் கடைப்பிடிக்கத் தொடங்கியதற்கும், குடும்பத்துடன் விடுமுறை எடுத்துக்கொண்டதற்கும், கிரிக்கெட்டில் இருந்து ஒரு மாதம் விலகியதற்கும் இதுவே காரணமாக இருக்கலாம். ஆசிய கோப்பையில் 276 ரன்கள் எடுத்து, அந்தப் போட்டியில் அதிக ரன்களை எடுத்தவரானார் கோலி. இதன் மூலம் அவரது ஐசிசி தரவரிசையும் உயர்ந்தது. தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஷான் பொல்லாக், "கோலியின் கவனம் ஒருபோதும் சிதறவில்லை" என்று கருதுகிறார். பொல்லாக் கூறுகையில், "போட்டி விரைவில் முடிந்தால், ஹோட்டல் அறைக்கு பதிலாக ஜிம்மிற்குள் பயிற்சி பெற வரும் வீரர் கோலி. அடுத்த போட்டிக்கு அவர் தயாராக வேண்டும் என்பதற்கான அறிகுறி இது. ஓரிரு தொடரில் விளையாட முடியவில்லை, அல்லது இரண்டு சீசன்களுக்கு சதம் அடிக்க முடியாமல் போனது ஒருவரின் பெருமையை குறைக்காது, மீண்டும் ஃபார்முக்கு திரும்ப அதிக நேரம் எடுக்காது." என்று குறிப்பிட்டார். காணொளிக் குறிப்பு, தடுமாறிய இந்திய அணியை தூக்கி நிறுத்தி ஃபார்முக்குத் திரும்பிய விராட் கோலி ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு கோலி மீது அதிக நம்பிக்கை இருந்தது, ஆனால் அவர் முன்பு போல் இப்போது ஒரு மேட்ச் வின்னராக இருப்பாரா ஐயம் பலருக்கு இருந்தது. ஆனால் எப்போதும் போல விராட் கோலி பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே சுவர் போல் நின்றார். வாய்ப்பு இருந்தது, அதைத் தவற விடாத உறுதியும் இருந்தது. 160 ரன்கள் என்ற இலக்குடன் துவங்கிய இந்திய அணியில், கோஹ்லி 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார், அதாவது மொத்த ஸ்கோரில் பாதிக்கு மேல் இவர் எடுத்தார். போட்டிக்குப் பிறகு, "இது போன்ற ஒரு ஆட்டத்திற்காகத் தான் ஒரு வீரர் கிரிக்கெட் விளையாடுவது. அப்படிப் பட்ட ஒரு ஆட்டம் அது. 14-15 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களை மீண்டும் ஒருமுறை உசுப்பி எழுப்ப இதுபோன்ற சவால்கள் தேவை." என்று அவர் கூறினார். இந்த சுற்றுப்பயணம் கோலியின் ரன்களைக் குவிக்கும் தாகத்துக்கு மட்டுமல்ல, அவரது இயல்பில் சிறப்பான மாற்றத்தை கொண்டு வருவதற்கான நேர்மையான முயற்சிக்கும் வழி வகுத்தது. பட மூலாதாரம்,SAEED KHAN பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டிக்கு, விருப்பத்தின் பேரில் இரண்டு நாட்கள் நெட் பிராக்டீஸ் செய்ய வேண்டியிருந்தது. அதாவது, வீரருக்குத் தேவை என்றால் மட்டும் செய்யலாம். இரண்டு நாட்களிலும் விராட் பயிற்சிக்கு வந்து அதிக பேட்டிங் செய்தார். பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவர் தொடர்ந்து பேட்டிங் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார், பின்னர் அவர்களுக்கிடையில் ஆட்டம் குறித்த நீண்ட விவாதம் நடந்தது. இந்நாட்களில் களத்தில் கூட கோலியின் முந்தைய 'கோப குணம்' வெளிப்படுவதில்லை. அவர் சாதாரணமாகவே சிரித்துக்கொண்டே காணப்படுகிறார். பெர்த்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், ஒரு கேட்சைத் தவறவிட்டார். தன்னைத் தானே திட்டிக்கொள்வதற்குப் பதில், அவர் விரக்தியிலும் சிரித்துக்கொண்டார். நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டூயல், "விராட் கோலி போன்ற ஒரு வீரர் அந்த நிலையை அடைய நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார், அதன் பிறகு அவர் தொடர்ந்து முன்னேறி வருகிறார். பெரிய வீரர்கள் இந்த நிலைக்கு வருவதற்கு அதிக நேரம் எடுப்பதில்லை, ஆனால் சிறிது நேரம் ஆகிவிட்டால், விமர்சனங்கள் ஆரம்பமாகின்றன. கோலியின் மறுபிறவி ஒரு பெரிய வீரரின் அடையாளம்." என்கிறார். https://www.bbc.com/tamil/sport-63469019
  7. சென்னை கனமழை: கடந்த 72 ஆண்டுகளில் இது மூன்றாவது முறை 1 நவம்பர் 2022, 07:17 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் சென்னையில் கடந்த 72 ஆண்டுகளில் நவம்பர் ஒன்றாம் தேதியன்று மூன்றாவது முறையாக கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், நேற்று மாலை முதல் தலைநகர் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் மட்டும் 80.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 72 ஆண்டுகளில் நவம்பர் 1ஆம் தேதி சென்னையில் இந்த அளவுக்கு கனமழை பதிவாவது மூன்றாவது முறை ஆகும். தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் 13 சென்டி மீட்டர் மழையும் சென்னை பெரம்பூரில் 12 செ.மீ. மழையும் சென்னை ஆட்சியர் அலுவலகம், தண்டையார்பேட்டை, வில்லிவாக்கம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதிகளில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இன்னொரு வெள்ளத்தை தாங்குவதற்கு தயாராக இருக்கிறதா சென்னை? காலநிலை நெருக்கடி குறித்த அறிக்கை சென்னையை எச்சரிப்பது ஏன்? பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதால் மனிதர்களுக்கு என்ன ஆபத்து? அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யுமென வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. மேலும், நீலகிரி, கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கரூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமானதுவரையிலான மழை பெய்யக்கூடும். சென்னையில் நேற்று மாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சென்னையில் ஜி.பி. சாலை, புளியந்தோப்பு போன்ற இடங்களில் மழை நீர் தேங்கியிருக்கிறது. சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற 420 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். மீனவர்களுக்கு எச்சரிக்கை சென்னையைப் பொறுத்தவரை, தென்மண்டல வானிலை ஆய்வு மைய தகவலின்படி, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22- 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மேலும், நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா, தமிழகம் மற்றும் வடக்கு இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகவே அந்தத் தேதிகளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது. வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது? தென் மண்டல வானிலை ஆய்வு மைய தகவலின்படி, இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பொழியும். நாளை, நவம்பர் 2ஆம் தேதியில் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நவம்பர் 3 மற்றும் 4ஆம் தேதி வரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 5ஆம் தேதியில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. https://www.bbc.com/tamil/india-63467506
  8. அவங்களுக்கு குண்டு போட்டுத் தானே பழக்கம்! பழக்கதோசம் செய்தியிலும் பிரதிபலிக்கிறது.🙂
  9. குஜராத் பாலம்: நரேந்திர மோதியின் எழுச்சிக்கு உரமிட்ட மோர்பி, மச்சு ஆறு - அறியப்படாத தகவல்கள் ரெஹான் ஃபசல் பிபிசி இந்தி 48 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SONDEEP SHANKAR படக்குறிப்பு, 1979 வெள்ளத்திற்குப் பிறகு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் உதவிக்கு வந்தனர் மோர்பி, மச்சு நதி மற்றும் பிரதமர் நரேந்திர மோதி இடையேயான உறவு மிகவும் பழமையானது. நரேந்திர மோதி பொது வாழ்வில் முத்திரை பதிக்கத் தொடங்கிய இடம் மோர்பி. அந்த நகரில் மோதி என்ன செய்தார்? அது அவரது வளர்ச்சிக்கு எப்படி உதவியது? இவை பற்றி விவரிப்பதற்கு முன், சுமார் 43 ஆண்டுகளுக்கு முன்பு மோர்பியில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வோம். 11 ஆகஸ்ட் 1979 - ராஜ்கோட் அருகே உள்ள மோர்பி நகரத்தில், ஜூலை மாதம் மழை பெய்யவில்லை, ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் அந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியது. மோர்பி அருகே பாயும் மச்சு ஆற்றில் இரண்டு அணைகள் கட்டப்பட்டன. மச்சு ஆற்றில் 22.56 மீட்டர் உயரமுள்ள இரண்டாவது அணை 1972இல் கட்டி முடிக்கப்பட்டது. ஆகஸ்ட் 10, 1979 அன்று மாலையில், மச்சு ஆற்றின் அணை எண்-1இல் இருந்து நீர் திறக்கப்பட்டது. இதையடுத்து, அணை எண்-2இன் இரண்டு கதவுகளையும் திறக்க முற்பட்டபோது தொழில்நுட்ப காரணங்களால், அவை திறக்க முடியாமல் போயின. இதனால் அணையின் நீர் தேக்கத்தில் உபரி நீர் தேங்கியது. இதனால், அணையின் வழியாக பாயும் தண்ணீர் மிக வேகமாக, அதிக அளவில் வெளியேறத் தொடங்கியது. வெள்ளத்தில் மூழ்கிய நகரம் பட மூலாதாரம்,SONDEEP SHANKAR படக்குறிப்பு, 1979 இல் மோர்பி நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. அதிர்ச்சிக்காட்சி மதியம் ஒரு மணியளவில் அணைக்கு மேல் அலைகள் வரத் தொடங்கின. இரண்டு மணியளவில் அணையின் மேல்பகுதியில் இருந்து ஒன்றரை அடி முதல் 2 அடிக்கு மேல் தண்ணீர் வந்தது. மதியம் 2.15 மணியளவில் அணையின் இடதுபுறம் இருந்த மண் சரிய ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் வலது பக்க மண்ணும் சரியத் தொடங்கியது. தண்ணீர் வேகமாக வெளியேறியதால், அணையில் பணியமர்த்தப்பட்டிருந்த தொழிலாளர்கள் தங்கள் அறைகளை விட்டு வெளியே வர வாய்ப்பில்லாமல் போனது. 20 நிமிடங்களில் அணையில் இருந்து தண்ணீர் அனைத்தும் அருகில் உள்ள மோர்பி நகருக்குள் நுழைந்தது. மாலை 3.30 மணியளவில், மோர்பி நகரில் 12 முதல் 30 அடிவரை தண்ணீர் இருந்தது. அடுத்த நான்கு மணி நேரத்தில், மோர்பி நகரம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. இரவு 7.30 மணியளவில் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வடியத் தொடங்கினாலும் அதற்குள்ளாக கிட்டத்தட்ட முழு நகரமும் மூழ்கியது. மக்கள் மற்றும் கால்நடைகளின் வீங்கிய உடல்கள் எங்கும் கிடந்தன, வெள்ளம் வந்து எட்டு நாட்களுக்குப் பிறகும், அழுகிய உடல்களின் துர்நாற்றம் சுற்றிலும் பரவியது. குப்பைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன. குஜராத் பாலம் இடிந்து விபத்து: "நான் பிழைத்து விட்டேன் ஆனால் என் தங்கையை காணவில்லை" குஜராத் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்து விபத்து: புகைப்படத் தொகுப்பு குஜராத் மோர்பி பாலம் இடிந்து விபத்து: இதுவரை 141 பேர் உயிரிழப்பு; 8 பேர் கைது பட மூலாதாரம்,SONDEEP SHANKAR படக்குறிப்பு, அணை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். முடங்கிய சேவைகள் - திகில் நகரமான மோர்பி அணை இடிந்து 15 மணி நேரம் ஆகியும் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு அதுபற்றிய தகவல் கிடைக்கவில்லை என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம். திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தொடர்ந்து மழை பெய்து வருவதாக அவர்கள் கருதினர். சம்பவம் நடந்து 24 மணிநேரம் கழித்து அதாவது ஆகஸ்ட் 12ம் தேதி முதல் முறையாக வானொலியில் இந்த செய்தி கொடுக்கப்பட்டது. நிவாரணப் பணிகளுக்காக ராணுவ வீரர்கள் மோர்பிக்கு அழைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் சம்பவம் நடந்த 48 மணிநேரத்திற்குப் பிறகுதான், அதாவது ஆகஸ்ட் 13ஆம் தேதிதான் அங்கு செல்ல முடிந்தது. அந்த காலத்தில் அமலில் இருந்த 'தந்தி இணைப்புகள்' வேலை செய்யவில்லை. இதனால் உள்ளாட்சி நிர்வாகத்தின் அலுவலர்களால் தங்களுடைய தகவலை மாவட்ட தலைமையகமான ராஜ்கோட்டிற்குத் தெரிவிக்க முடியவில்லை. அப்பகுதியில் உள்ள அனைத்து தொலைபேசி கம்பங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அதனால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவதற்கான வாய்ப்பே இல்லாமல் போனது. அலுவல்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்த சோகத்தில் சுமார் 1000 பேர் கொல்லப்பட்டனர், ஆனால் அதிகாரபூர்வமற்ற புள்ளிவிவரங்களின்படி, இந்த எண்ணிக்கை சுமார் 25,000 ஆகும். சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகு தேசிய பத்திரிகைகள் செய்திசேகரிக்க தங்களுடைய நிருபர்களை அனுப்பி வைத்தபோது, 'மோர்பி' ஆள் அரவமற்ற திகில் நகரமாக காட்சியளித்தது. பட மூலாதாரம்,THE INDIA TODAY GROUP படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி நிவாரண பணிகள் நரேந்திர மோதி சில நேரங்களில் பெரிய அரசியல் நிகழ்வுகள், அரசியல் அல்லாத காரணங்களால் தூண்டப்படுகின்றன. அப்போது குஜராத் முதல்வராக இருந்தவர் பாபு பாய் படேல். அப்போது, பாரதிய ஜனசங்கம் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவரான கேசுபாய் படேல், அவரது அமைச்சரவையில் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்தார். மோர்பியில் திடீர் வெள்ளப்பெருக்கு என்ற செய்தியைக் கேட்ட கேசுபாய் உடனடியாக மோர்பிக்கு புறப்பட்டார். ஆனால் மச்சு ஆற்றில் ஆர்ப்பரித்த அலைகள் காரணமாக அவரால் நகரத்திற்குள் நுழைய முடியவில்லை. முதல் சில நாட்களுக்கு எந்த நிவாரணப் பொருட்களையும் அங்கு கொண்டு செல்ல முடியவில்லை. ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் முடங்கியது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நீண்ட நாட்களுக்குப் பிறகு மோர்பிக்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தார். மோர்பிக்கு உதவுவதில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) ஊழியர்கள் முன்னிலையில் இருந்தனர். அப்போது ஆர்எஸ்எஸ்-ன் முழுநேர பிரச்சாரகர் நரேந்திர மோதி, மூத்த தலைவர் நானாஜி தேஷ்முக்குடன் சென்னையில் இருந்தார். தகவல் அறிந்த அவர் உடனடியாக குஜராத் திரும்பி மோர்பியில் நிவாரணப் பணிகளை தொடங்கினார். மோர்பி அணை விபத்தில் மக்களுடன் நின்றதால், அவர்களிடையே ஆர்.எஸ்.எஸ் மீதான அங்கீகாரம் அதிகரித்து, அங்கிருந்து பாரதிய ஜனதா அரசியல் சக்தியாக எழுச்சி பெறத் தொடங்கியது. நரேந்திர மோதி பொது மேடைக்கு வருவது அதுவே முதல் முறை. அதன் பிறகு அவர் அந்த பகுதியைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. அந்த சம்பவத்திற்குப் பிறகு 22 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் குஜராத்தின் முதலமைச்சரானார். எண்பதுகளின் இறுதியில் மச்சு அணை மீண்டும் கட்டப்பட்டது. விபத்தில் இறந்தவர்களுக்காக மணி கோவிலுக்கு வெளியே ஒரு நினைவகம் அமைக்கப்பட்டது, இன்றும் ஒவ்வோர் ஆகஸ்ட் 11ஆம் தேதி, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் கூடுகிறார்கள். மோர்பியில் இதுவரை நடந்தது என்ன? • குஜராத்தின் மோர்பியில் ஆற்றின் மீது ஒரு தொங்கு பாலம் இடிந்து விழுந்தது. இதுவரை 141 பேர் உயிரிழந்துள்ளனர்.• பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகை அறிவிப்பு.• ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு பழமையான இந்த பாலம், பழுதுபார்க்கப்பட்ட பின்னர் சமீப காலங்களில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.• இந்த பாலம் 1.25 மீட்டர் அகலமும் 233 மீட்டர் நீளமும் கொண்டது. பாலம் புதிப்புக்கப்பட்ட பிறகு அதற்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.• பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணத்தை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.• இந்த வழக்கில் ஒன்பது பேரை போலீசார் கைது செய்துள்ளனர்• கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றமற்ற கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/india-63461928
  10. ஐஸ்வர்யா ராயால் நம்ப முடியாத நிஜம்: "எனக்கா 49 வயது"- பிரபலங்கள் கொண்டாட இதுதான் காரணம் கல்யாண்குமார். எம் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AISHWARYARAIBACHCHAN_ARB படக்குறிப்பு, ஐஸ்வர்யா ராய் திரைப்பட உலகில் 25 ஆண்டுகளாக வலம் வரும் ஐஸ்வர்யா ராய், தனது பிறந்த வயது 49 என்பதை நம்ப முடியாதவராக இருக்கிறார். சமீபத்தில் ஒரு திரைப்படத்துக்காக அவர் எடுத்துக் கொண்ட படத்தை பகிர்ந்தபடி இந்த கருத்தைத்தான் ஐஸ்வர்யா ராய் பகிர்ந்திருக்கிறார். பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கதாநாயகிகள் மீது ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். இங்கு அறிமுகமாகும் பெண்களை விட வடக்கத்திய ஹீரோயின்களைக் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள். ரத்தி, மாதவியில் ஆரம்பித்து மதுபாலா, பல்லவி, ரூபிணி, மும்தாஜ், ரீமா சென், லைலா, ஜுகி சாவ்லா, நக்மா, ஜோதிகா, கஜோல், மனிஷா கொய்ராலா, மல்லிகா ஷெராவத், சோனியா அகர்வால், காஜல் அகர்வால், குஷ்பு, தபு, இஷா கோபிகர், ராணி முகர்ஜி, ஊர்மிளா, ஷில்பா ஷெட்டி, ஜெனலியா, இலியானா, ஹன்ஸிகா மோத்வானி, சமீபத்திய வரவான சித்தி இத்னானி வரை ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது. இவர்கள் எல்லோருமே தமிழ், மற்றும் தெலுங்கு, கன்னட திரைகளில் குறைந்த பட்சம் ஐந்து முதல் பத்தாண்டுகளாவது பிசியாக இருந்தவர்கள். இதில் குஷ்புவும் ஜோதிகாவும் தமிழ்நாட்டின் மருமகள்களாகவே மாறி சென்னையிலேயே செட்டிலாகி இரண்டு குழந்தைகளுக்கும் தாயாராகி விட்டவர்கள்! இதில் ஐஸ்வர்யா ராய் மட்டும் சினிமாவில் அறிமுகமாகி இருபத்தைந்து ஆண்டுகள் ஆனாலும் இன்றும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருப்பது பாராட்டுக்குரிய விஷயம்தான். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 உலக அழகி டூ திரை உலகம் இதே நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி (1973) பிறந்த ஐஸ்வர்யா, தன் 21ஆம் வயதில் 1994இல் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர். முதலில் அவரை கதாநாயகியாக தமிழுக்கு கொண்டு வந்தவர் இயக்குநர் மணிரத்னம். அவரது ;இருவர்' (1997) படத்தில் பிரபல நடிகையும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா பாத்திரத்தில், எம் ஜி ஆராக நடித்த மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். அதன் பின்னர் எஸ், தாணுவின் தயாரிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்', ஷங்கரின் ஜீன்ஸ், ரஜினியுடன் எந்திரன், விக்ரமுடன் ராவணன் போன்ற படங்களில் தன் முத்திரையைப் பதித்திருந்தார். கூடவே இந்தி உட்பட பலமொழிப் படங்களிலும் அவரது நடிப்பாற்றல் வெளிப்பட்டது. 2017இல் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு செட்டிலானாலும் நடிப்பு ஆர்வம் அவரை விடவில்லை. அது இந்த வருடம் வெளியான மணிரத்னத்தின் 'பொன்னியில் செல்வன்' வரை சுமார் 25 வருடங்கள் - அதாவது அவர் திரைக்கு வந்து பொன்விழா ஆண்டாகவே அவரை ஒரு சிறந்த நடிகையாக நீடிக்கச் செய்திருக்கிறது. பல மொழிகளில் ஐஸ்வர்யா நடித்திருந்தாலும் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் மணிரத்னம்தான் தன்னுடைய குரு என்கிறார் ஐஸ்வர்யா. ராம் சேது - திரைப்பட விமர்சனம் "நயன்தாரா, விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் விவகாரத்தில் விதிமீறல் இல்லை" - என்ன சொல்கிறது அறிக்கை? இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்கள் ஐஸ்வர்யாவின் வாழ்க்கை, கல்கியின் பொன்னியின் செல்வனைப் போலவே ஒரு தொடர்கதை போல நீள்கிறது. கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட ஐஸ்வர்யா ராய்க்கு, துளுதான் தாய்மொழி. ஆனால் மும்பைக்கு குடிபெயர்ந்த அவரது குடும்பத்தால் அங்குள்ள ஆர்யா வித்யா மந்திரில் பள்ளிப் படிப்பையும், மட்டுங்காவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிகிரியையும் முடித்திருக்கிறார். படித்துக் கொண்டே க்ளாசிக்கல் டான்ஸ், மியூஸிக் என ஐந்து வருடங்கள் பயிற்சி பெற்றிருந்தாலும் ஒரு மருத்துவராக வேண்டும் என்பதுதான் ஐஸ்வர்யா ராயின் ஆசையாக இருந்திருக்கிறது. ஆனால் 1991-ல் மாடலிங் துறையில் நுழைந்த பிறகு அவரது வாழ்க்கை ஏறுமுகம்தான். ஃபோர்டு கம்பெனி நடத்திய போட்டியில் இண்டர் நேஷனல் சூப்பர் மாடலாக தேர்வாகி இருக்கிறார். அதன் பின்னர் அமீர்கானுடன் நடித்த பெப்சி விளம்பரம் பிரபலமாகிறது. அடுத்து உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். பார்த்திபன் பார்வையில் ஐஸ்வர்யா பட மூலாதாரம்,PARTHIBAN படக்குறிப்பு, பொன்னியின் செல்வன் பட செட்டில் ஐஸ்வர்யா ராயுடன் நடிகர்கள் பார்த்திபன், சரத்குமார் பார்த்திபன் கூறுகையில், "அவர் உலக அழகி மட்டுமல்ல, மிகவும் புத்திசாலிப் பெண்ணும்கூட.. திரையுலகில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். நானும் அவரும் பொன்னியின் செல்வனில் இணைந்து நடித்த போது "கடைசியாக நீங்கள் இயக்கிய படம் என்ன?" என்று என்னிடம் கேட்டார். நான் எனது 'ஒத்த செரு[ப்பு' படத்தைப் பற்றி சொல்லி, படம் முழுக்க ஒரே கதாபாத்திரம்தான் என்று சொன்னதும் கண்கள் விரிய தன் வியப்பை வெளிப்படுத்தினார். அதுமட்டுமில்லாமல் உடனே தன் கணவர் அபிஷேக் பச்சனுக்கு போன் செய்து 'நெட்பிளிக்ஸில் அந்தப் படம் இருக்கிறதாம், உடனே பாருங்கள்' என்றார். அவரை பார்க்கச் சொன்னது மட்டுமல்லாமல் அதை ஹிந்தியில் அவரையே ஹீரோவாக வைத்து ரீமேக் (single slipper size 7) செய்யவும் காரணமாக இருந்தார். இன்னும் இரண்டு மாதங்களில் அந்தப் படம் ஹிந்தியில் வெளியாக இருக்கிறது. இப்படி ஒரு ஐந்து நிமிட உரையாடலில் ஒரு சினிமா ப்ராஜெக்ட்டையே சுவிட்ச் ஆன் செய்து விட்டார். இது சினிமா மீது அவருக்கு இருக்கும் காதலையும் ஈடுபாட்டையுமே வெளிப்படுத்துகிறது" என்கிறார் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன். பொன்னியின் செல்வனில் அவரோடு இணைந்து நடித்த த்ரிஷா, "எனக்கு மிகவும் பிடித்த தோழி ஐஸ். அவரைப் பற்றிச் சொல்வதற்கு நிறைய இருக்கிறது, ஆனால் நான் பயணத்தில் இருப்பதால் இன்று அவருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்களை மட்டும் உங்கள் மூலம் சொல்லிக் கொள்கிறேன்" என்கிறார். மணிரத்னம் வழங்கிய சான்றிதழ் பட மூலாதாரம்,AISHWARYARAIBACHCHAN_ARB படக்குறிப்பு, தனது குருவான மணிரத்னத்துடன் ஐஸ்வர்யா ராய் "ஒரு பெண்ணுக்கு ஏற்படக்கூடிய, அதுவும் பிரபலமான பெண்ணுக்கு வரும் சர்ச்சைக்குரிய செய்திகளையெல்லாம் கடந்து வந்தவர்தான் ஐஸ்வர்யா ராய். ஆரம்பத்தில் சல்மான்கானுடன் அவருக்கு ஏற்பட்ட நெருக்கம். பிரிவு, அது சம்பந்தமாக மீடியாக்களில் வந்த கிசுகிசுக்கள், அதில் இருந்த உண்மைகள் எல்லாம் அப்போது அவருக்கு மன உளச்சலை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம் கடந்துவந்து திருமணம். குழந்தைகள் என்று செட்டிலாகி விட்டார். தன்னம்பிக்கை மிகுந்த அவரைத் தேடி ஒரு நடிகையாக நல்ல படங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அவர் இன்னும் பல வருடங்கள் நடித்துக்கொண்டே இருப்பார்" என்கிறார் பெயர் சொல்லிக்கொள்ள விரும்பாத வட இந்திய மூத்த பத்திரிகையாளர் ஒருவர். இதை ஆமோதிப்பது போல் இருக்கிறது, இயக்குநர் மணிரத்னத்தின் கருத்து: " கல்கி எழுதிய ஒரு பிரபலமான தமிழ் நாவலின் மிக முக்கிய பாத்திரம் நந்தினி. பல லட்சம் வாசகர்கள் ஏற்கனவே படித்து அவர்கள் மனதில் பதிந்து போன ஒரு உருவம். அதில் ஒரு வடக்கத்திய நட்சத்திரத்தை நடிக்க வைக்கலாமா என்று என்கிற சந்தேகம் எனக்கு ஆரம்பத்தில் இருந்தது. ஆனாலும் அந்தக் கதையை படமாக்குகிற போது இதுவொரு இந்தியப் படமாகவேதான் பதிவு செய்ய நினைத்தேன். அதற்கு ஐஸ்வர்யா பொருத்தமாக இருப்பார் என்றே எனக்குத் தோன்றியது. அதனால்தான் அவரை அந்தப் பாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தேன். ரசிகர்களும் அந்தப் பாத்திரத்தில் அவரை ஏற்றுக் கொண்டார்கள். இப்போது அதன் இரண்டாம் பாகத்திற்கும் வரவேற்பு கூடியிருக்கிறது" என்கிறார் மணிரத்னம் (பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகத்தை 2023 ஏப்ரல் 13ல் எதிர்பார்க்கலாம் என்பது கூடுதல் செய்தி!) தாணு வெளியிட்ட ஐஸ்வராயாவின் ரகசியம் பட மூலாதாரம்,AISHWARYA RAI உலக அழகியானாலும் முன்னணி நடிகையானாலும் எந்தவிதமான பந்தா இல்லாத அவரது எளிமைதான் அவரை மென்மேலும் உயர்த்தியது" என்கிறார், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தின் தயாரிப்பாளரான எஸ். தாணு. "1999-ம் வருட இறுதியில் அவரிடம் கதை சொல்லி அட்வான்ஸ் கொடுக்க இயக்குனர் ராஜீவ் மேனனும் நானும் மும்பைக்குப் போகிறோம். அப்போது ஒரு சிறிய அபார்ட்மெண்டில்தான் அப்பா, அம்மாவோடு வசித்து வந்தார். அந்தப் படத்தில் நடிப்பதாக ஒப்புக் கொண்ட அவர், மதியம் தங்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று அன்பாக கேட்டுக் கொண்டார். அதன் பின்னர் அந்தப் படத்திற்காக நான் ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கிய காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் அரண்மனையில் படப்பிடிப்பு நடந்தபோது அந்த அரண்மனையின் பிரமாண்டம், அவருக்காக நான் ஏற்பாடு செய்து கொடுத்திருந்த சாப்பாடு, தங்குமிடம், போக்குவரத்து வசதிகளையெல்லாம் பார்த்து விட்டு, "இவ்வளவு கிராண்டாக படத்தை எடுக்கும் தயாரிப்பாளர், ஒருநாள்கூட இங்கே வரவே இல்லையே? அவர் ஒரு நாளாவது சூட்டிங் ஸ்பாட் வந்து நம்மோடு லஞ்ச் சாப்பிடவில்லையென்றால் நான் சூட்டிங் வர மாட்டேன்'" என்று செல்லமாக கோபித்துக் கொண்டிருக்கிறார். இதை ராஜீவ்மேனன் போனில் சொல்லி 'ஒரு தடவை இங்க வந்துட்டு போங்க சார்' என்று கேட்டுக் கொண்டார். பிறகு ஐஸ்வர்யாவின் விருப்பத்தின் பேரில் காரைக்குடிக்குப் போய் ஒருநாள் அவர்களோடு லஞ்ச் சாப்பிட்டு வந்தேன். அதேபோல் அந்தப் படம் முடிவடையும் போது அவருக்கு நான் தர வேண்டீய சம்பளம் ரூபாய் பதினோறு லட்சம் பாக்கி இருந்தது. நான் கேட்கும்போது, "அதை பிறகு வாங்கிக் கொள்கிறேன்" என்று சொல்லி இருந்தார். அவர் போர்ஷன் சூட்டிங் முடிந்து படமும் வெளியாகி விட்டது. அப்போதும் "பிறகு வாங்கி கொள்கிறேன்" என்றே சொன்னார். ஆனாலும் எனக்கு அது சரியாகப்படவில்லை. அதனால் அந்தப் பணத்திற்கு டி.டி. எடுத்துக் கொண்டு ராஜீவ்மேனனோடு மும்பைக்குப் போய் அதைக் கொடுத்து வந்தேன். அப்போது அவரிடம் "இந்த மாதிரி தயாரிப்பாளர் கிடைத்திருப்பது என் பாக்கியம்" என்று சொல்லி இருக்கிறார். அவரது அந்த பழகும் தன்மையும், எளிமையும்தான் அவரது மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட்" என்கிறார் எஸ்.தாணு. https://www.bbc.com/tamil/arts-and-culture-63460493
  11. முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் அதிகரிப்பு ! பதிவு செய்ய இணையத்தளம் அறிமுகம் 31 OCT, 2022 | 09:02 PM முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை வாராந்தம் 10 லீற்றராக அதிகரிப்பது தொடர்பில் முச்சக்கர வண்டிகளுக்கான பதிவு நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டம் முதலில் மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ளது. பின்னர் ஏனைய மாகாணங்களிலும் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பில் மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் https://www.wptaxi.lk/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டுமென இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/138810
  12. காணாமல்போனவர்கள் தொடர்பான முறைப்பாடு விசாரணைகள் ஒருசில மாதங்களில் முடிவுக்கு வரும் - நீதி அமைச்சர் By DIGITAL DESK 5 31 OCT, 2022 | 09:12 PM (எம்.ஆர்.எம்.வசீம்) காணாமல் போனவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றிருக்கும் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் சில மாதங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவர முடியும். அத்துடன் வடமாகாண மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக விசேட இணக்கசபை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார். இந்தியாவில் இருந்துவரும் இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நடமாடும் சேவை நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ்வினால் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது இங்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வட மாகாண மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அரசாங்கம் முன்னுரிமை வழங்கி நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த வருடம் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு நடமாடும் சேவைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. விசேடமாக இந்தியாவில் இருந்து இங்குவந்திருக்கும் மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் முகமாக ஏற்கனவே விசேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. நீதி அமைச்சின் செயலாளரின் தலைமையிலான குழுவொன்று அதற்காக நியமிக்கப்பட்டிருக்கின்றன. அந்த குழுவினால் வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் வடமாகாண மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக விசேட இணக்கசபை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் சொத்துக்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு இழப்பீட்டுக்கான அலுவலகமும் காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக காணாமல் போனவர்கள் தொடர்பான காரியாலயமும் அமைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் காணாமல் போனவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றிருக்கும் முறைப்பாடுகள் சம்பந்தமான விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதுடன் அந்த காரியாலயத்துக்காக நியமிக்கப்பட்டிருக்கும் புதிய அதிகாரிகள் அதுதொடர்பாக ஆரம்பித்திருக்கும் விசேட வேலைத்திட்டம் காரணமாக எதிர்வரும் சில மாதங்களுக்குள் குறித்த விசாரணைகள் முடிவுக்கு கொண்டுவர முடியுமாகும். மேலும் ஒட்டுமொத்த நாடும் எதிர்கொண்டுள்ள போதைப்பொருள் தொடர்பான பிரச்சினை வடமாகாணத்திலும் பரவலாகப் பரவி வருவதால், இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அதை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுப்பது பாதுகாப்புப் படையினர் உட்பட அனைவரின் பொறுப்பாகும். அதனாத் இதுதொடர்பாகவும் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார். இதன்போது யுத்தம் மற்றும் வேறு விபத்துக்களால் பாதிக்கப்பட்ட சிலருக்கு அமைச்சரின் தலைமையில் நட்டஈடும் வழங்கி வைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/138796
  13. அரசியலமைப்பு திருத்தத்தின் பயன் யாருக்கு ? By NANTHINI 31 OCT, 2022 | 02:48 PM (இராஜதுரை ஹஷான்) ஆணை பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதை தவிர ஏனைய சகல அதிகாரங்களும் கொண்ட நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை அறிமுகப்படுத்திய அரசியலமைப்பின் இரண்டாம் குடியரசு யாப்பு 45 வயதை அண்மித்துள்ள நிலையில், இதுவரை 21 தடவைகள் சீர்திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வரும் அரசாங்கம் தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக அரசியலமைப்பை திருத்தம் செய்கின்றமை 2010ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதை காண முடிகிறது. பொருளாதார ரீதியில் ஸ்தீரமடைந்துள்ள நாடுகள் அரசியல் நோக்கத்துக்கு அப்பாற்பட்ட வகையில் நாட்டின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அரசியலமைப்பை உருவாக்கியுள்ளதால், அந்த நாடுகள் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ளன. 1978 முதல் 2022 வரை ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் சமூக கட்டமைப்பில் காணப்படும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு அரசியலமைப்பை திருத்தம் செய்துள்ளன. ஆனால், அரசியலமைப்பு திருத்தம் சமூக கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியதா என்பது காலம் காலமாக வெறும் பேசுபொருளாக மாத்திரம் காணப்படுகிறது. ஆட்சியாளர்கள் தமது நிகழ்கால அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொண்டு எதிர்கால அரசியல் இருப்புக்கு வித்திடும் வகையில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படுகிறது. நாட்டு மக்கள் விரும்பும் வரை ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2010ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தை உருவாக்கினார். 2010ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை அரசியலமைப்பு நான்கு முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 18ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த அரசியல்வாதிகள் 19ஆவது திருத்தத்தை கொண்டு வந்தபோது, 18ஆவது திருத்தத்தை நீக்கி, 19ஆவது திருத்தத்தை நிறைவேற்ற வாக்களித்துள்ளார்கள். பின்னர் 19ஆவது திருத்தத்தை நீக்க 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கினார்கள். தற்போது 20ஆவது திருத்தத்தை நீக்க, 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். சரியோ தவறோ, பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரம் அவரது தனிப்பட்ட கொள்கையிலாவது உறுதியாக உள்ளதை பாராட்ட வேண்டும். 19ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களித்து, 20ஆவது திருத்தத்தை கொண்டுவர ஆதரவாக வாக்களித்த அவர், 20ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. 22ஆவது திருத்தத்துக்கு அவர் மாத்திரம் எதிராக வாக்களித்தமை கவனிக்கத்தக்கது. காலத்துக்கு காலம் தமது கொள்கையை மாற்றிக்கொள்ளும் அரசியல்வாதிகள் குறித்து நாட்டு மக்கள் இனிவரும் காலங்களிலாவது தெளிவுடன் செயல்பட வேண்டும். 2010 செப்டெம்பர் 09 அன்று அரசியலமைப்பின் 18ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 18ஆவது திருத்தத்தில் ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் மக்கள் விரும்பும் வரை எத்தனை தடவைகளும் போட்டியிடலாம் என குறிப்பிடப்பட்டது. அத்துடன் சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரங்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி வசமாக்கப்பட்டது. அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் ஜனநாயகத்துக்கு எதிரான விடயங்களை உள்ளடக்கியுள்ளதாக சர்வதேச மட்டத்தில் எதிர்ப்புக்கள் தோற்றம் பெற்றன. 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைவதற்கான 18ஆவது திருத்தம் ஒரு காரணியாக அமைந்தது. நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கமைய 2015ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணி அமைத்து, நல்லாட்சி என்ற நாமத்துடன் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றின. ஜனநாயகத்தின் இலச்சினையாக அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இரட்டை குடியுரிமை உடையவர் அரசியலில் போட்டியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டமை 19ஆவது திருத்தத்தின் பிரதான அம்சமாக கருதப்படுகிறது. சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரங்கள் ஆணைக்குழுவின் வசமாக்கப்பட்டதுடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டது. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் இலங்கையை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு சென்றது. 19ஆவது திருத்தத்தை உலக நாடுகள் அங்கீகரித்தன. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான அதிகாரப் போட்டி அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை பலவீனப்படுத்தியது. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்ற போட்டி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் ஏற்பட்டது. ஜனநாயகத்தின் இலட்சினம் 19ஆவது திருத்தம் என 19ஆவது திருத்தத்தை புகழ் பாடிய நல்லாட்சியின் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் '19ஆவது திருத்தம் நாட்டின் சாபக்கேடு' என கடுமையாக விமர்சித்தார். ஆட்சியாளர்களின் பலவீனத்தின் பலி அரசியலமைப்பு திருத்தம் மீது சுமத்தப்பட்டது. அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நீக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் செய்தது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம், 20ஆவது திருத்தம் உருவாக்கம், பொதுஜன பெரமுனவின் பிரதான தேர்தல் கால வாக்குறுதியாக காணப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றதும், 19ஆவது திருத்தம் இருக்கும் வரை தன்னால் அரச நிர்வாகத்தை சரிவர செய்ய முடியாது. ஆகவே 19ஆவது திருத்தத்தை இரத்து செய்து, தான் நிர்வாகம் செய்யும் வகையில் 20ஆவது திருத்தத்தை உருவாக்க பெரும்பான்மை பலத்தை வழங்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களிடம் கோரினார். அதற்கமைய நாட்டு மக்களும் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கி ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்தார்கள். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2020ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் அரசாங்கத்தை அமைத்தது. 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்கி 20ஆவது திருத்தத்தை உருவாக்கியது. ஒன்றரை மாத காலத்துக்குள் நாட்டின் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டமை வியப்புக்குரியது. ஒன்றரை மாத காலத்துக்குள் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் இரண்டு வருடங்கள் மாத்திரமே செல்லுபடியானது. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் இரட்டை குடியுரிமையாளருக்கு அரசியல் அந்தஸ்தை வழங்கியது. தேசிய பட்டியல் ஊடாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்று, நிதி அமைச்சராகவும் பதவியேற்றார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை 20ஆவது திருத்தம் பலப்படுத்தியது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து, அது அரசியல் நெருக்கடியாக மாற்றமடைந்தது. பிரச்சினைகளுக்கு தீர்வு காண கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 20ஆவது திருத்தத்தை இரத்து செய்து, 19வது திருத்தத்தை மீண்டும் கொண்டுவரும் அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்தார். இதனை அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புறக்கணித்தார். மே 09 நாட்டில் பாரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டது. மக்கள் போராட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கொண்ட அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பியது. மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து அன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக தெரிவுசெய்தார். ஜூலை 09ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினார். பின்னர் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். இவ்வாறான பின்னணியில் ஐக்கிய மக்கள் சக்தியினர் தனிநபர் பிரேரணையாக சமர்ப்பித்த அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தின் ஒருசில ஏற்பாடுகளை நிறைவேற்ற வேண்டுமானால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் மக்கள் வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்ததை தொடர்ந்து அரசாங்கம் மக்கள் வாக்கெடுப்புக்குச் செல்ல தயாராகவில்லை. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட்டு அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் மீண்டும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதை நாட்டு மக்கள் போராட்டத்தினூடாக அழுத்தமாக வலியுறுத்தினார்கள். அதற்கமைய அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நீக்கப்பட்டு, 22ஆவது திருத்தம் கடந்த வாரம் 179 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. 22ஆவது திருத்தம் 19ஆவது திருத்தத்தின் அம்சங்களை உள்ளடக்கவில்லை. இருப்பினும், 20ஆவது திருத்தத்தை காட்டிலும் சிறந்தது என்பதால் ஆதரவு வழங்குகிறோம் என்று குறிப்பிட்டுக்கொண்டு அரசியல்வாதிகள் 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கினார்கள். 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கிய 156 பேரில் பெரும்பாலானோர் அதனை இரத்து செய்யவும் ஆதரவு வழங்கினார்கள். மஹிந்த ராஜபக்ஷ உட்பட 44 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இரண்டாம் குடியரசு அரசியலமைப்பின் திருத்தமானது நாட்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு வழங்கியுள்ளதா என்பது கேள்விக்குரியதாக காணப்படுகிறது. காலத்துக்கேற்ப கொள்கையை மாற்றிக்கொள்ளும் அரசியல்வாதிகள் தமது தேவைக்காக அரசியலமைப்பை திருத்தம் செய்துகொள்கிறார்களே தவிர நாட்டு மக்களின் நலன் குறித்து அவதானம் செலுத்தியுள்ளார்களா என்பதே நாம் கவனிக்க வேண்டிய விடயமாகிறது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும் என குறிப்பிடப்படுகிறது. ஆனால், சகல மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியலமைப்பை உருவாக்குவது காலம் காலமாக கானல் நீர் போல் காட்சியளிக்கிறது. https://www.virakesari.lk/article/138776
  14. நியூசிலாந்தின் ஆட்டத்திறன் தொடர்ச்சியை பார்க்கும்போது இங்கிலாந்து வெல்லும் வாய்ப்பு குறைவு அண்ணை.
  15. தமிழகத்தை மிரட்ட வரும் புயல்.. அடுத்து என்ன நடக்கும்? Exclusive Breaking | Ramanan | TN Rain
  16. வலி வடக்கு காணி சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு By VISHNU 31 OCT, 2022 | 05:38 PM வலி வடக்கு காணி சுவீகரிப்பிற்கெதிராக கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொள்வதற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடக சந்திப்பொன்றை ஏற்படுத்தி அழைப்பு விடுத்துள்ளது. இதன் பொழுது கருத்து தெரிவித்த மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் எமது மக்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் இனத்திற்காகவும் போராட்டம் ஒன்றிற்கான அழைப்பினை இதன்பொழுது விடுக்கின்றோம். கடந்த மாதம் காணி சுவீகரிப்பு தொடர்பாக காணி அமைச்சின் மேலதிக செயலாளர் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். குறிப்பாக வடகிழக்கில் தொடர்சியாக காணி சுவீகரிப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணமே உள்ளது. இது தடுத்து நிறுத்தப்படவேண்டும் அந்தவகையில் வலி வடக்கு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி எதிர்வரும் 2ஆம் திகதி புதன்கிழமை காலை 10 மணியளவில் எமது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே தமிழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கூடிய மதகுருமார், சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினரையும் கட்சி பேதமின்றி பங்கெடுக்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இவ் ஊடக சந்திப்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அ.விஜயகுமார், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர், எஸ் றாபின், யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சி.ஜெல்சின் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/138805
  17. ராம்குமார் தற்கொலை: மறுவிசாரணைக்கு உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம் - முழு விவரம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, உயிரிழந்த ராம்குமார் சுவாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்தபோது தற்கொலைசெய்து கொண்டதாகக் கூறப்படும் ராம்குமாரின் குடும்பத்திற்கு பத்து லட்ச ரூபாய் நிதி உதவி அளிக்கவும் அந்த மரணம் குறித்து விசாரணை நடத்தவும் தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ராம்குமாரின் மரணம் குறித்து தானாக முன்வந்து விசாரித்துவந்த மாநில மனித உரிமை ஆணையம் இன்று தனது பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன்படி, உயிரிழந்த ராம்குமாரின் தந்தைக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடாக அளிக்கவும் ராம்குமார் சிறையில் உண்மையிலேயே மின்சார வயரைக் கடித்துதான் தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தவும் தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டும் ஜூன் 24ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம் பெண் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செங்கோட்டைக்கு அருகில் உள்ள மீனாட்சிபுரம் என்ற ஊரைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை ஜூலை ஒன்றாம் தேதியன்று காவல்துறை கைதுசெய்தது. இந்த விவகாரத்தில் காவல்துறை சரியாக நடக்கவில்லை என்றும் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென்றும் ராம்குமாரின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், செப்டம்பர் 18ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டது. சிறையில் இருந்த மின்சார வயரைக் கடித்து அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தை செய்தித் தாள்களில் வந்த செய்தியின் அடிப்படையில் விசாரணைக்கு எடுத்தது மாநில மனித உரிமை ஆணையம். மேலும், இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் வழக்கறிஞர் ஒருவர் புகார் அனுப்பியிருந்தார். அந்தப் புகாரில் காவல்துறை சொல்வதைப் பால ராம்குமார் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். இந்தப் புகாரை மாநில மனித உரிமை ஆணையம் தொடர்ந்து விசாரித்தது. இந்த விவகாரத்தில் சாட்சியமளித்த புழல் சிறையின் கண்காணிப்பாளர், தண்ணீர் குடிக்க வேண்டுமென்று வந்த ராம்குமார் திடீரென அருகில் இருந்த ஸ்விட் போர்டை உடைத்து அதில் இருந்த வயர்களை எடுத்து கடித்துவிட்டதாகவும், உடனடியாக மருத்துவ உதவி அளித்து, மருத்துமனைக்குக் கொண்ட சென்றபோதும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் கூறினார். மேலும், ராம்குமாரின் உடலைப் பரிசோதனை செய்த எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், அதனைத் தற்கொலை என்றே உறுதிப்படுத்தியிருப்பதாகவும் சிறைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. சுவாதியை கொன்றது கூலிப்படையா? ராம்குமார் மரணத்தில் விலகாத மர்மங்கள் ராம்குமார் உடலுக்கு பிரேதப் பரிசோதனை செய்வதற்கு மீண்டும் தடை ஆணையத்தின் சந்தேகத்துக்கு என்ன காரணம்? ஆனால், ராம்குமாரின் தந்தை பரமசிவத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் அவர் துன்புறுத்தப்பட்டு இறந்திருக்கலாம் எனக் குற்றம்சாட்டினர். இந்த விவகாரத்தின் விசாரணை முடிவடைந்த நிலையில், தற்போது தனது உத்தரவை மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்துள்ளது. காணொளிக் குறிப்பு, சுவாதியை கொன்றது கூலிப்படையா? ராம்குமார் மரணத்தில் விலகாத மர்மங்கள் அதன்படி, புழல் சிறையில் கைதிகளைக் கண்காணிக்க குறைவான அதிகாரிகளே நியமிக்கப்பட்டிருப்பதாகவும் போதுமான அதிகாரிகளை நியமிக்காத தமிழ்நாடு அரசையே இந்த விவகாரத்தில் பொறுப்பாக வேண்டுமென்றும் ஆணையம் கருதுவதாகக் கூறப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளதே தவிர, அவரே அதை வைத்துக்கொண்டாரா என்பதைச் சொல்லவில்லை. மேலும் டாக்டர் செல்வக்குமார் அளித்த பிரேத பரிசோதனை அறிக்கையில், ராம்குமார் உடலில் இருந்த 9ஆம் எண் காயத்தை ராம்குமாரால் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்டிருக்க முடியாது என கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ராம்குமார் அரசின் பாதுகாப்பில் இருந்திருக்கிறார். அவரை பத்திரமாக வைத்திருக்க வேண்டியது மாநில அரசின் கடமை. ஆகவே ராம்குமாரின் மரணத்திற்கு மாநில அரசே பொறுப்பு. இந்த விவகாரம் குறித்த மாநில அரசு சுதந்திரமான விசாரணை ஒன்றை நடத்த வேண்டும். ராம்குமாரின் தந்தை பரமசிவனுக்கு பத்து லட்ச ரூபாய் இழப்பீட்டை மாநில அரசு அளிக்க வேண்டும். மேலும் தங்கள் பாதுகாப்பில் உள்ள கைதிகளின் பாதுகாப்பிற்கு கூடுதல் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. உடற்கூராய்வுக்குப் பிறகு கவனத்தை ஈர்த்த வழக்கு 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மின் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்தது. சென்னை ராயப்பேட்டை அரசு பேராசிரியர்கள் டாக்டர் ஆண்டாள் பழனி, டாக்டர் வேணு ஆனந்த் ஆகியோர் மாநில மனித உரிமைகள் முன்பு அளித்த வாக்குமூலத்தில். ராம்குமாரின் மூளை மற்றும் இதய திசுக்களை, அக்டோபர் 7, 2016 அன்று பரிசோதித்ததில், நல்ல நிலையில் இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், நுரையீரல், கல்லீரல், நாக்கு, உதடுகள், மண்ணீரல், சிறுநீரகம் போன்றவற்றின் திசுக்களும் நல்ல நிலையில் இருப்பதாகச் சான்றளிக்கப்பட்டது.மின்சார அதிர்ச்சியின் போது மேற்கூறிய திசுக்களில் மாற்றம் ஏற்படுமா என்ற மனுதாரரின் வழக்கறிஞர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மருத்துவர்கள், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என்று தெரிவித்தனர். இருப்பினும், அத்தகைய மாற்றங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. படக்குறிப்பு, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபரால் கொல்லப்பட்ட சுவாதி "ராம்குமாரின் திசுக்களை பரிசோதித்ததில், மின்சாரம் தாக்கி இறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை" என்று மருத்துவர்கள் தங்கள் வாக்குமூலத்தில் கூறியிருந்தனர்.மேலும், ராயப்பேட்டை பொது மருத்துவமனையில் உள்ள விபத்துப்பிரிவு மருத்துவ அதிகாரி டாக்டர் சையத் அப்துல் காதர், செப்டம்பர் 18, 2016 அன்று ராம்குமாரின் உடல் பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டபோது, சிறை மருத்துவர் உடலுடன் வந்ததாகக் கூறினார். விபத்து பதிவேட்டின் நகல்களோ, சிறையில் சிகிச்சை பெற்றதற்கான ஆவணங்களோ தன்னிடம் வழங்கப்படவில்லை என்று காதர் கூறினார்.இதன் மூலம் சிறையில் ராம்குமாருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவருக்கு தெரியவில்லை"சிறையில் அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது எனக்குத் தெரியாது. நான் வழங்கிய விபத்துப் பதிவேட்டில், மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் குறித்து நான் குறிப்பிடவில்லை," என்று காதர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் கூறினார். ராம் குமாருக்கு கடுமையான மோர்டிஸ் (உடலின் விறைப்பு) அறிகுறிகள் இருந்தன. இது பொதுவாக இறந்த 12 மணி நேரத்திற்குப் பிறகு நிகழ்கிறது."நான் பார்த்த காயங்கள் மின்சார அதிர்ச்சியைக் குறிக்கவில்லை. உடலை பிணவறைக்கு அனுப்ப வேண்டியிருந்ததால், வெளிப்புற காயங்களை நான் கூர்ந்து கவனிக்கவில்லை. முதல் படிவத்தில் மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் குறித்து தவறாகப் பேசியுள்ளேன்," என்று அவர் ஆணைய விசாரணையின்போது நடந்த குறுக்கு விசாரணையில் தெரிவித்தார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஊழியராக இருந்த சுவாதி, கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வேலைக்குச் செல்வதற்காக ரயிலில் காத்திருந்தபோது ராம்குமாரால் கொலை செய்யப்பட்டதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கில் சில வார தேடுதலுக்குப் பிறகு ராம் குமாரை போலீஸார் கைது செய்து விசாரணை கைதியாக வைத்திருந்த நிலையில், அவர் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. https://www.bbc.com/tamil/india-63457858
  18. நியூசிலாந்து வென்றதும் புலவர் முதலாமிடத்திற்கு வருவார் என நினைக்கிறேன்.
  19. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் இன்னொரு துல்லிய புகைப்படம் - வியப்பூட்டும் தகவல்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA/ESA/CSA/STSCI ஜேம்ஸ் வெப் எனப்படும் புதிய அதிநவீன தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற 'பில்லர்ஸ் ஆஃப் கிரியேஷனின்' இரண்டாவது படத்தை அமெரிக்க விண்வெளி அமைப்பான 'நாசா' வெளியிட்டுள்ளது. இந்த வாரம் MIRI(Webb's Mid-Infrared Instrument) கருவி மூலமாக செயல்பாட்டில் உள்ள நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியின் காட்சி நமக்கு கிடைத்தது. பூமியில் இருந்து சுமார் 6,500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த இடத்தை கண்காணிப்பகத்தின் அருகிலுள்ள அகச்சிவப்பு கேமரா கடந்த வாரம் படம்பிடித்தது. மெஸ்ஸியர் 16 அல்லது ஈகிள் நெபுலா என வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடும் மையத்தில் இந்தத் தூண்கள் அமைந்துள்ளன. இவை நீண்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. ஏனெனில் வாயு மற்றும் தூசுக்களாலான நெபுலாவில் புதிய நட்சத்திரங்கள் பிறப்பதால் அதன் இயற்பியல் மற்றும் வேதியியலைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் வகையில் ஒவ்வொரு நவீன தொலைநோக்கியும் அவற்றின் திசையை நோக்கி உள்ளன. 6.5மீட்டர் அகலமான கண்ணாடி மற்றும் உயர்தர சென்சார் கொண்ட வெப் தொலைநோக்கி, காட்சிகளைப் பதிவு செய்வதற்கான சிறந்த மற்றும் பெரிய விண்வெளி கண்காணிப்பு கருவியாகும். தூண்களைக் காட்ட பயன்படுத்தப்படும் அலைநீளங்களைத் தேர்வு செய்வதற்கான வசதி, புதிய MIRI படத்தில் உள்ள சிறப்பம்சமாகும். செவ்வாயில் பெரும் தாக்கங்களை ஆவணப்படுத்தும் நாசாவின் விண்வெளி ஆய்வு நாசா விண்கலம் சிறுகோள் மீது மோதியதால் 10,000 கி.மீ தூரத்திற்கு விண்ணில் சிதறல்கள் வழக்கமாக, வானியல் ஆராய்ச்சியாளர்கள் தூசி படித்த நெடுவரிசையை மிகவும் ஒளி ஊடுருவக் கூடியதாக மாற்ற ஒளிகளை வடிகட்டி அனுப்புவார்கள். அதன் மூலம், அதனுடைய உட்புறம் மற்றும் ஆரம்ப நிலையில் இருக்கும் நட்சத்திரங்களைத் தெளிவாகக் காண முடியும். அதைத்தான் Near Infrared Camera எனப்படும் NIRCam செய்தது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளம் நீல நட்சத்திரங்களை காண முடியும். MIRI படம் அதிலிருந்து ஒருபடி உயர்ந்தது. எந்த அலைநீளத்தில் தூசுக்கள் நன்கு ஒளிருமோ அந்த அலைநீளத்தை இந்தக் கருவியின் ஒளி வடிகட்டும் பகுதி தேர்வு செய்யும். நடு அகச்சிவப்பு நிலையில் தூசுக்கள் வாயிலாக இவற்றைக் காண முடியும் என்ற எதிர்பார்ப்புகளை மீறும் வகையில் இருக்கும் அண்மைய படம், அருகாமையிலுள்ள வெப்ப நட்சத்திரங்களின் ஒளியினால் ஒளிரும் தூசி மற்றும் சிக்கலான மூலக்கூறுகளைப் படிக்க இந்த முறையும் சிறந்தது எனக் காட்டும் வகையில் இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி முகமையின் மூத்த அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் மார்க் மெக்காக்ரியன் கூறுகிறார். பிரிட்டன் தலைமையிலான 10 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் மற்றும் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் கூட்டு முயற்சியில் MIRI கருவியானது உருவாக்கப்பட்டது. சூப்பர் கண்டம்: 25 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பூமி எப்படி இருக்கும்? விண்வெளிப் பயணம் சென்ற முதல் அமெரிக்க பூர்வகுடிப் பெண்: தடைகளைத் தாண்டி சாதனை பேராசிரியர் கில்லியன் ரைட் இணை முதன்மை ஆய்வாளராகச் செயல்பட்டார். "MIRI எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்று பார்க்கும்போது சிலிர்ப்பாக உள்ளது. இதுவரை நம்மிடம் இல்லாத புதிய அறிவியல் தகவல்களை இது வழங்குகிறது" என பிரிட்டனின் வானியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் பிபிசியிடம் தெரிவித்தார். "இந்தப் புதிய படத்தில் நாம் பார்ப்பது தூண்களின் தோல் போன்றது. நட்சத்திரங்கள் தூசியால் எரியத் தொடங்கும் இழை அமைப்புகளை நீங்கள் காணலாம். மேலும், அதில் இருக்கும் இருண்ட பகுதிகளையும் நீங்கள் காணலாம். மிகவும் அடர்த்தியாகவும் குளிராகவும் இருக்கும் அந்தப் பகுதிகள் MIRI கருவியினால் கூட ஒளிரவில்லை" என அவர் கூறினார். ஜேம்ஸ் வெப் என்பது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடா விண்வெளி முகமைகளின் கூட்டுத் திட்டமாகும். இது கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது. https://www.bbc.com/tamil/science-63449468
  20. பிலிப்பைன்ஸை தாக்கிய 'நால்கே' சூறாவளி : பலி எண்ணிக்கை அதிகரிப்பு By T. SARANYA 31 OCT, 2022 | 01:33 PM கடந்த வாரம் பிலிப்பைன்ஸை தாக்கிய 'நால்கே' சூறாவளியின் போது உயிரிழந்தவர்களின எண்ணிக்கை 100 ஐ நெருங்கியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை குறிப்பாக இந்த சூறாவளி அங்குள்ள மகுயிண்டனாவ் மாகாணத்தை தாக்கியது. சூறாவளி காற்று சுழன்று அடித்ததில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் பல மீற்றர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. சூறாவளியை தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. இடைவிடாது கொட்டிய பேய் மழையால் மகுயிண்டனாவ் மாகாணத்தின் பல்வேறு நகரங்கள் வெள்ளக் காடாகின. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சூறாவளி மழையை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. இந்நிலையில் சூறாவளி, மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பங்களில் தற்போது பலி எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய அனர்த்த ஆபத்து குறைப்பு மற்றம் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த சம்பவத்தில் 63 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சூறாவளியால் மெட்ரோ மணிலா உட்பட 17 பிராந்தியங்களில் உள்ள 31,942 கிராமங்களில் 575,728 குடும்பங்களைச் சேர்ந்த 1,812,740 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மணிலா டைம்ஸ் தெரிவித்துள்ளது. சூறாவளியால் 18 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 213,000 க்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் இராணுவம் களமிறக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/138775
  21. கிளிநொச்சியில் வெட்டுக் காயங்களுடன் இளைஞன் மீட்பு By VISHNU 31 OCT, 2022 | 05:17 PM கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில் இயங்கி வரும் இலங்கை வங்கியின் கிளை காரியாலயத்தின் மேல் மாடியில் இளைஞன் ஒருவர் வெட்டு காயங்களுடன் இனங்காணப்பட்டுள்ளார். அவரது அருகில் பிலேட் ஒன்றும் கையடக்கதொலைபோசி ஒன்றும் காணப்பட்டுள்ளதுடன், அவரது பணப்பையில் ஒரு தொகைபணமும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் மக்களின் உதவியுடன் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். காயமடைந்தவர் கணேசன் விஜிதரன் வயது 30 என அவரது சாரதி அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசார் பூர்வாங்க விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/138802
  22. அயர்லாந்தை தோற்கடித்த அவுஸ்திரேலியா புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்! By VISHNU 31 OCT, 2022 | 05:43 PM அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 42 ஓட்டங்களால் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறியுள்ளது. ஐ.சி.சி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்றிலிருந்து அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் 2 வெற்றிப் புள்ளிகளை பெறுவதைக் குறிக்கோளாகக் கொண்டு அவுஸ்திரேலியாவும் அயர்லாந்தும் பிரிஸ்பேன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று (31) ஒன்றையொன்று எதிர்த்தாடின. இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது. அவுஸ்திரேலிய அணி சார்பாக அணித் தலைவர் ஆரோன் பிஞ் 63 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் அயர்லாந்து அணி சார்பில் பரி மெக்கார்தி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 180 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களைப் பெற்று 42 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அயர்லாந்து அணி சார்பில் லுகன் டஸ்கர் ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இப் போட்டியின் ஆட்டநாயகனாக ஆரோன் பிஞ் தெரிவு செய்யப்பட்டார். https://www.virakesari.lk/article/138806
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.