Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    22997
  • Joined

  • Last visited

  • Days Won

    16

Everything posted by ஏராளன்

  1. குளமா எங்கே அண்ணை? 6 ஆம் திகதிவரை தொடாந்து மழை பெய்யும் : வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி ரமேஷ்! By DIGITAL DESK 2 03 NOV, 2022 | 02:52 PM இலங்கையில் இன்று (03) காலை 8.30 மணிவரையிலான கடந்த 24 மணித்தியாலயத்தில் அதிகூடிய மழைவீச்சியாக நுரைச்சோலையில் 132 மில்லி லீற்றர் மழைவீழ்ச்சியும் மட்டக்களப்பில் 9.1 மில்லி லீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதுள்ளது. எதிர்வரும் 6 ஆம் திகதிவரை மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்தார். இலங்கையை சூழவுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டல தளம்பல் நிலை தொடர்ந்து காணப்படுகின்றது. இதனால் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மேல் மற்றும் வட மேல் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்க கூடியதாகவுள்ளது வடக்கு வடமத்திய ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி லீற்றருக்கு அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, இந்த மழையுடனான கால நிலை 6ஆம் திகதிவரை தொடர்ந்து காணப்படும். 7ஆம் திகதி 8ஆம் திகதிகளில் படிப்படியாக குறைந்து 9ஆம் திகதி மீண்டும் மழைவீழ்சி அதிகரிக்க கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/139034
  2. தமிழ் மக்களின் அடையாளமாக விக்னேஸ்வரன் பார்க்கப்படுகிறார் - உடுவில் பிரதேச செயலர் By VISHNU 03 NOV, 2022 | 09:24 PM நீதியரசர் விக்னேஸ்வரனை தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கு அப்பால் உலகத் தமிழ் மக்கள் அவரை தமிழ் மக்களின் அடையாளமாகப் பார்க்கிறார்கள் என உடுவில் பிரதேச செயலாளர் முகுந்தன் தெரிவித்தார். இன்று (03) வியாழக்கிழமை உடுவில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் கொள்வரவு செய்யப்பட்ட பொருட்கள் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நீதியரசர் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் இந்த நிகழ்வுக்கு வந்ததை நாம் பெருமையாக கருதுகின்றோம். வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்து தற்போது பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் பாராளுமன்ற பிராதி நிதி என்பதற்கு அப்பால் உலகத் தமிழ் மக்கள் அவரை தமிழ் இனத்தின் ஒரு அடையாளமாக பார்க்கிறார்கள் . நீதியரசர் விக்னேஸ்வரனுக்கும் எமது உடுவில் பிரதேசத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது . 1885 காலப்பகுதியில் மல்லாக நீதிமன்றத்தில் நீதிபதியாக கடமையாற்றியதாக அறிந்ததோடு அண்மையில் இணுவில் கந்தசாமி ஆலயத்தின் நிர்வாக சபையினரை சந்தித்தபோது விக்னேஸ்வரன் காலத்தில் தமது ஆலயத்தின் நிர்வாகப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு புதிய யாப்பு உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார்கள். யாழ். தேர்தல் மாவட்டம் 19 பிரதேச செயலகங்களை கொண்டதாகக் காணப்படும் நிலையில் அவரது நிதி ஒதுக்கீட்டில் பல வேலைத் திட்டங்கள் இடம் பெற்று வரும் நிலையில் எமது பிரதேச செயலகத்திலும் இரு கட்டட வேலை திட்டங்கள் இடம் பெற்று வருகிறது. ஆகவே விக்னேஸ்வரன் எதிர்காலத்திலும் நமது பிரதேசத்திற்கு தன்னாலான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதோடு தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக தொடர்ந்து இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/139061
  3. தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற குடியரசுத் தலைவரை நாடும் திமுக: வீண் முயற்சியா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைத் திரும்பப் பெற வேண்டுமென ஒரு மனுவைத் தயாரித்து அதில் தங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கையெழுத்தையும் பெற்று குடியரசுத் தலைவரிடம் அளிக்க தி.மு.க. முடிவுசெய்துள்ளது. இதன் மூலம் ஆளுநரை மாற்ற முடியுமா? தமிழ்நாடு ஆளுநரை மாற்ற வேண்டுமென குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அளிக்கவிருக்கும் மனுவில் தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டணிக் கட்சியின் உறுப்பினர்களும் தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயம் வந்து கையெழுத்திட வேண்டுமென தி.மு.கவின் நாடாளுமன்ற குழுத் தலைவரான டி.ஆர். பாலு நவம்பர் ஒன்றாம் தேதியன்று அழைப்புவிடுத்தார். இந்த அழைப்பை காங்கிரஸ், மதி.மு.க., சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகள் ஏற்றுக்கொண்டு, அந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளன. நவம்பர் 3ஆம் தேதிவரை இந்த மனுவில் கையெழுத்திடலாம் என தி.மு.க. தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் கன்னியாகுமரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், திருச்சி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், திருவள்ளூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் அண்ணா அறிவாலயத்திற்கு வந்து அந்த மனுவில் கையெழுத்திட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் கூறியது என்ன? இந்த மனுவில் கையெழுத்திட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "ஆர்.எஸ்.எஸ்சின் தலைமையிடமாக தமிழ்நாடு தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்சின் கொள்கைகளைப் பரப்புபவராகவே ஆளுநர் செயல்பட்டு வருகிறார். சட்டமன்றத்தில் எந்த மசோதாவை இயற்றி ஆளுநரிடம் கொடுத்தாலும் அதற்கு ஒப்புதல் வழங்குவது கிடையாது. எப்படி பேச வேண்டும் என்பதே அவருக்குத் தெரியவில்லை. மொழிப் பிரச்சனையை தமிழ்நாட்டில் கிளப்புகிறார். அவரை உடனடியாக தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார். கோவை சம்பவம்: திமுக, பாஜகவின் அரசியலால் சாதகம், பாதகம் யாருக்கு? குஜராத் பாலம்: மோதியின் எழுச்சிக்கு உரமிட்ட மோர்பி, மச்சு ஆறு - அறியப்படாத தகவல்கள் மாநிலத்தின் ஆளுநரை திரும்ப பெறுவது சட்ட ரீதியாக சாத்தியமா? தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி செய்யாத பல மாநிலங்களில் அம்மாநில ஆளுநர்கள் மாநில அரசுகளுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் இணை ஆட்சி நடத்த முற்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டும் அளவுக்கு அங்கே மோதல் உச்சகட்டத்தில் இருந்து வருகிறது. அதேபோல, தெலுங்கானாவிலும் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கும் முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் இடையே மோதல் உச்சகட்டத்திலேயே இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் அறிக்கை ஒன்றை விடுத்திருந்தன. அதில், "சனாதனம், ஆரியம், திராவிடம், பட்டியலின மக்கள், திருக்குறள் குறித்து அவர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கின்றன. ஆளுநர் தனிப்பட்ட ஆன்மீக நம்பிக்கைகள் குறித்து நமக்கு எந்த விமர்சனமும் இல்லை; அது பற்றி கவலைப்படவுமில்லை. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு, பழமைவாத நச்சரவங்களை நாட்டில் நடமாட விடுவது அவருக்கும் அழகல்ல; அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல. அவர் உதிர்க்கும் அபத்தவகைப்பட்ட கருத்துகளுக்கு எதிராகப் பலராலும் சொல்லப்படும் விளக்கங்களை அவர் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. தன்னை மாற்றிக் கொண்டதாகவும் தெரியவில்லை. வழக்கம் போல, தனது பேச்சுகளைத் தொடர்ந்து கொண்டே வருகிறார் ஆளுநர். தன்னைத்தானே இந்திய நாடாளுமன்றமாக, தன்னையே உச்சநீதிமன்றமாக, தானே இந்தியாவின் குடியரசுத் தலைவர் என - இன்னும் சொன்னால், இந்திய நாட்டின் மன்னராகவே அவர் நினைத்துக் கொண்டு பேசத் தொடங்கி இருக்கிறார்." என்று அதில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. பட மூலாதாரம்,DIPR இந்த நிலையில்தான், ஆளுநர் மீதான எதிர்ப்பை வலுப்படுத்தும் வகையில் அவரை நீக்க வேண்டுமென குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க முடிவுசெய்திருக்கிறது தி.மு.க. இந்த மனுவில், ஆளுநர் எப்படி அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார் என்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அவர் தொடர்ந்து செயல்படுவதையும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்காதது குறித்தும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எதிர்ப்புக்குக் காரணம் என்ன? தி.மு.க. இதில் தீவிரமாக இருப்பதற்கு என்ன காரணம் என்ன என்று கேட்டபோது, "ஆர்.என். ரவிதான் காரணம். அவர் ஆளுநர் வேலையைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்படியானால், அவர் அந்த வேலைக்குப் பொருத்தமானவர் இல்லை என்றுதானே பொருள்? அதனால்தான் மாற்றச் சொல்கிறோம்" என்கிறார் தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டைன்டீன். அனைவரும் இதில் கையெழுத்திட்ட பிறகு, இந்த வாரத்திற்குள்ளாகவே டி.ஆர். பாலு தலைமையில் ஒரு குழு குடியரசுத் தலைவரைச் சந்தித்து இந்த மனுவை அளிக்கப்போவதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், குடியரசுத் தலைவரிடம் முறையிடுவதன் மூலம் இதைச் சாதிக்க முடியுமா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு மாநிலத்தின் ஆளுரை குடியரசுத் தலைவர்தான் நியமிக்கிறார். குடியரசுத் தலைவருக்கு விருப்பம் இருக்கும்வரை ஆளுநர் அந்தப் பதவியில் நீடிக்கலாம். ஆனால், குடியரசுத் தலைவர் என்பது மத்திய அமைச்சரவையையே குறிக்கிறது. ஆகவே, மத்தியில் ஆளும் அரசுதான் மாநிலங்களில் ஆளுநர்களை நியமிக்கிறது. "இப்படி செய்வதன் மூலம் ஆளுநரை நீக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், இது ஒரு அரசியல்ரீதியான அழுத்தம். நாகாலாந்தில் இம்மாதிரி ஒரு அழுத்தத்தால்தான் அவர் அங்கிருந்து இடம் மாற்றப்பட்டார். ஆகவே, அரசியல் ரீதியான அழுத்தம் என்பது மிக முக்கியம்" என்கிறார் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியான ஹரி பரந்தாமன். பட மூலாதாரம்,GETTY IMAGES இதுவரையிலான தி.மு.க. ஆட்சியின்போது உஜ்ஜல் சிங், கே.கே. ஷா, பி.சி. அலெக்ஸாண்டர், சுர்ஜித் சிங் பர்னாலா, சென்னா ரெட்டி, கிருஷண்காந்த், பாத்திமா பீவி, மீண்டும் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோர் ஆளுநர்களாக இருந்துள்ளனர். ஆனால், ஆர்.என். ரவியுடன் ஏற்பட்ட மோதலைப் போல வேறு யாருடனும் தி.மு.க. ஒரு ஆளும்கட்சியாக முரண்பட்டதில்லை. புரோஹித்தை எதிர்த்துப் போராடிய திமுக இதற்கு முந்தைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக் காலத்தில் தன்னிச்சையாக ஆய்வுகளை மேற்கொண்டபோது, அதற்கு தி.மு.க. கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது பன்வாரி லால் புரோஹித்தான் ஆளுநராக இருந்தார் என்றாலும், விரைவிலேயே அவர் மாற்றப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி ஆர்.என். ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் இருப்பது, பல்வேறு கூட்டங்களில் பங்கேற்று மதம், கலாச்சாரம், மொழி தொடர்பான கருத்துகளை முன்வைப்பது போன்றவற்றில் ஆளும் தி.மு.கவிற்கும் ஆளுநருக்கும் பிரச்சனைகள் நீடித்து வருகின்றன. தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சுமார் 20 சட்டங்களுக்கு இதுவரை தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. https://www.bbc.com/tamil/india-63503078
  4. திலினி பிரியமாலியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு 03 NOV, 2022 | 06:55 PM கையடக்கத் தொலைபேசிகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலான விசாரணைக்காக திலினி பிரியமாலியை எதிர்வரும் 24 ஆம் திகதி சிறைச்சாலைகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக மாவட்ட நீதிவான் சந்தன ஏக்கநாயக்க உத்தரவிட்டுள்ளார். கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி தலைமையில் இன்று (03) கூடிய சிறைச்சாலை நீதித்துறை சபையில் அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதிவான் மேற்கண்டவாறு கூறினார். நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட திலினி பிரியமாலி நீதிமன்ற உத்தரவில் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/139064
  5. தென்னாபிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான் By VISHNU 03 NOV, 2022 | 06:50 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று (03) நடைபெற்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 2 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமைப்படி (DLS) 33 ஓட்டங்களால் பாகிஸ்தான் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. இந்த வெற்றியுடன் 4 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட பாகிஸ்தான் குழு 2இல் 3ஆம் இடத்திற்கு முன்னேறி அரை இறுதிக்கான தனது வாய்ப்பை இப்போதைக்கு சற்று அதிகரித்துக்கொண்டுள்ளது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நெதர்லாந்துடனான போட்டியில் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றால் பாகிஸ்தானின் அரை இறுதி வாய்ப்பு அற்றுப்போகும். பாகிஸ்தானின் இன்றைய வெற்றியில் இப்திகார் அஹ்மத் குவித்த அரைச் சதம், ஷதாப் கானின் சகலதுறை ஆட்டம், ஷஹீன் ஷா அப்றிடியின் சிறப்பான பந்துவீச்சு என்பன முக்கிய பங்காற்றின. பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 186 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 9 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 69 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. அப்போது டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் தென் ஆபிரிக்கா 84 ஓட்டங்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், தென் ஆபிரிக்கா 15 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தது. சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் போட்டி தொடர்ந்த போது தென் ஆபிரிக்காவின் வெற்றி இலக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமைப்படி 14 ஓவர்களில் 142 ஓட்டங்கள் என திருத்தி அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஓட்டங்களை வேகமாக குவி;க்க முயற்சித்த தென் ஆபிரிக்கா, 14 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 108 ஓட்டங்களைப் பெற்று இந்த வருட இருபது 20 உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக தோல்வி அடைந்தது. இதற்கு அமைய இவ் வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சகல அணிகளும் குறைந்தது ஒரு தோல்வியைத் தழுவியுள்ளன. தென் ஆபிரிக்க துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் டெம்பா பவுமா (36 ஓட்டங்கள்), ஏய்டன் மார்க்ராம் (20), ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (18), ஹெய்ன்ரிச் க்ளாசென் (15) ஆகிய நால்வரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷதாப் கான் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். அப் போட்டியல் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 185 ஓட்டங்களைக் குவித்தது. அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாவதற்கான தனது வாய்ப்பை அதிகரிக்க வேண்டுமானால் இன்றைய போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்பதை அறிந்திருந்த பாகிஸ்தானுக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. முன்வரிசை வீரர்கள் மொஹமத் ரிஸ்வான் (4), மொஹமத் ஹரிஸ் (28), அணித் தலைவர் பாபர் அஸாம் (6), ஷான் மசூத் (2) ஆகிய நால்வரும் ஆட்டமிழக்க 7ஆவது ஓவரில் பாகிஸ்தானின் எண்ணிக்கை 43 ஓட்டங்களாக இருந்தது. ஆனால், மத்திய வரிசை வீரர்கள் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி பாகிஸ்தானை பலமான நிலையில் இட்டனர். இப்திகார் அஹ்மத், மொஹமத் நவாஸ் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 39 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது நவாஸ் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து இப்திகார் அஹ்மத், ஷதாப் கான் ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 6ஆவது விக்கெட்டில் 35 பந்துகளில் 82 பெறுமதிக்க ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். ஷதாப் கான் 22 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகளுடன் 52 ஓட்டங்களையும் இப்திகார் அஹ்மத் 35 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 51 ஓட்டங்களையும் குவித்தனர். எனினும் ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயற்சித்த பாகிஸ்தான் கடைசி 2 ஓவர்களில் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 4 விக்கெட்களை இழந்தது. தென் ஆபிரிக்க பந்துவீச்சில் அன்ரிச் நோக்கியா 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 14 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ஓட்டங்களைப் பெற்று 33 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. தென்னாபிரிக்க அணி சார்பில் அணித் தலைவர் பவுமா 36 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் சஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/139063
  6. இந்தியாவில் கிடைத்த புதைபடிவங்கள்: டைனோசர் குட்டிகளை விழுங்கிய சனாஜே பாம்புகளைக் கண்டுபிடிக்க உதவிய தொல்லெச்சம் கமலா தியாகராஜன் ㅤ 2 நவம்பர் 2022 பட மூலாதாரம்,ALAMY மிகப்பெரும் டைனோசர் முட்டைகள் முதல் அறிவியலுக்கே புதிதான வரலாற்றுக்கு முந்தைய வினோதமான உயிரினங்கள் வரை, பல ஆச்சரியமான புதைபடிவங்கள் இந்தியாவில் உள்ளன. ஆனால், அவை வெறுமனே பூமிக்கு அடியில் உள்ளன. 2000ஆம் ஆண்டு நாக்பூரில் உள்ள மத்திய அருங்காட்சியகத்திற்கு நான் சென்றபோது, பழங்கால ஆராய்ச்சியாளர் ஜெஃப்ரி ஏ வில்சன், தான் இதுவரை கண்டிராத ஒரு புதைபடிவத்தினைக் கண்டார். அது, அவருடன் பணியாற்றிய ஒருவரால் 1984ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள தோலி டுங்ரி கிராமத்தில் தோண்டி எடுக்கப்பட்டது. "ஒரே மாதிரியில் டைனோசர் முட்டையும், குழந்தை டைனோசரின் எலும்பும் கண்டெடுக்கப்படுவது இதுவே முதன்முறை" என்கிறார் அமெரிக்காவின் மிஷிகன் பல்கலைக்கழக புவியியல் அறிவியல் துறையின் துணைப் பேராசிரியர் வில்சன். அவருக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடிய வகையில் வேறு ஒன்றும் அதில் இருந்தது. "இந்த மாதிரியில், நான் பரிசோதித்த எலும்புகளில் ஒரு சிறப்பு இணைப்புடன் இரண்டு சிறிய முதுகெலும்புகள் இருந்தன. பொதுவாக இப்படியொரு அமைப்பு பாம்புகளுக்கு மட்டுமே இருந்தது" என்கிறார் வில்சன். இதை தவறாக அர்த்தம் கொள்ளவில்லை என்பதை உறுதிசெய்வதற்காக தண்டுவடத்துடன் மற்றவற்றை அவர் ஆராய்ந்தார். அவர் தேடியது கிடைத்ததும், வரலாற்றுக்கு முந்தைய பாம்பின் எச்சமும் இந்த மாதிரியில் இருக்குமோ என வில்சனுக்குள் கேள்வி எழுந்தது. தேவையான புதைபடிவத்தை நன்கு சுத்தம் செய்யும் வசதி இந்தியாவில் இல்லை. இந்த மாதிரியை அமெரிக்காவிற்கு கொண்டு செல்வதற்கான அனுமதி இந்திய புவியியல் ஆய்வு (GSI) அமைப்பிடம் இருந்து கிடைக்க நான்கு ஆண்டுகள் ஆயின. அனுமதி கிடைத்ததும் வில்சன் அந்த மாதிரியை ஒரு பெட்டியில் அமெரிக்கா கொண்டு சென்றார். அந்த மாதிரியின் மென்மையான மற்றும் நுண்ணிய எலும்புகளைச் சுற்றியிருந்த பாறை படிமங்களை அகற்ற அவருக்கு ஒரு வருட காலம் எடுத்தது. விரிவடைந்த புதைபடிம ஆய்வு அடுத்தடுத்த ஆண்டுகளில், விஞ்ஞானிகள், பழங்கால ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பாம்பு நிபுணர்கள் புதைபடிவம் குறித்து ஆராய்ந்தனர். 2013ஆம் ஆண்டில், வில்சன் இந்திய பழங்கால ஆராய்ச்சியாளர் தனஞ்சய் மொஹபே மற்றும் இந்திய புவியியல் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த பிறருடன் இணைந்து புதைபடிவத்தை கைப்பற்றிய அந்த நம்பமுடியாத தருணம் குறித்து விவரிக்கும் ஒரு கட்டுரையை எழுதினார். அவர்கள் வரலாற்றுக்கு முந்தைய பாம்பு இருப்பதை உறுதிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், குஞ்சு டைனோசரை சாப்பிடுவது போல் அதன் தாடைகள் அகலமாக திறந்திருந்ததையும் கண்டறிந்தனர். குஞ்சு டைனோசர்களை உண்ணும் சனாஜே பாம்புவிற்கு இதன் மூலம்தான் உலக அறிமுகம் கிடைத்தது. வரலாற்றுக்கு முந்தைய பாம்புகள் பெரிய இரையை விழுங்கும் அளவிற்கு தங்கள் தாடைகளைத் திறக்கும் திறன் கொண்டிருக்கவில்லை என்றும், நவீன பாம்புகளிடம் இருக்கும் இந்தப் பண்பு பரிணாம வளர்ச்சியில் உருவானது என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர். 2013ஆம் ஆண்டு, இதேபோன்ற ஒரு மாதிரி அதே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாதிரியை ஆய்வுசெய்துவரும் இந்தக் குழு, சனாஜே இண்டிகஸின் உடற்கூரியல் எவ்வாறு நவீன பல்லிகளுடன் ஒத்திருக்கிறது என்பதை விளக்கும் ஒரு கட்டுரையை தற்போது தயார் செய்துவருகிறது. இந்த வகையில், பண்டைய காலத்தின் ரகசியங்களை புதைபடிவங்களால் அவிழ்க்க முடியும். சமீபத்திய ஆண்டுகளில் அற்புதமான கண்டுபிடிப்புகள் இருந்தபோதிலும், இந்தியாவின் புதைபடிவ செல்வத்தைப் பற்றி அறிய போதுமான நிதியும் முறையான ஆய்வுகளும் இல்லை என பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,ALAMY "இந்தியாவின் புதைபடிவ பாரம்பரியம் பெரும்பாலும் பயன்படுத்தப்படவில்லை அல்லது மறக்கப்பட்டு விட்டது என்று நான் நினைக்கிறேன்" என்கிறார் யேல் பல்கலைக்கழக முதுகெலும்பு பழங்காலவியல் நிபுணர் அத்வைத் எம் ஜுகார். "டைனோசர்கள் காலத்திற்கு முன்பே இந்தியாவில் ஆரம்பக்கால திமிங்கலங்கள், காண்டாமிருகங்கள், யானைகள் மற்றும் விசித்திரமான கொம்பு ஊர்வன இருந்தன. ஆனால் அவை குறித்து பெரிய அளவில் ஆய்வு செய்யப்படவில்லை" என்றும் அவர் கூறுகிறார். இந்தியாவின் பெரும் பகுதிகள் தொழில்முறை பழங்கால ஆராய்ச்சியாளர்களால் முறையாக ஆராயப்படவில்லை என்பதே இதற்கு காரணமாகும். பரிணாம புதிர்கள் இது ஒருபுறம் இருந்தாலும், இந்தியாவில் இருந்து கிடைத்த முக்கிய பழங்கால கண்டுபிடிப்புகள் பழைய கோட்பாடுகளை நீக்குவதற்கும், காலப்போக்கில் வாழ்க்கை எவ்வாறு பரிணமித்துள்ளது என்பது குறித்து அறியவும் விஞ்ஞானிகளுக்கு உதவியுள்ளன. இந்தக் கண்டுபிடிப்புகள் பலவற்றுக்கு காரணமாக இருந்தவர் அசோக் சாஹ்னி. முன்னணி பழங்கால ஆராய்ச்சியாளராகக் கருதப்படும் இவருடைய குடும்பத்தில், அவரது தாத்தா, தந்தை மற்றும் மாமா அனைவரும் இந்த துறையில் இருந்தவர்கள். பெரும்பாலும் ஆய்வுகள் தொடர்பான பயணங்களுக்கு அசோக் சாஹ்னி தன்னுடைய சொந்த பணத்தையே பயன்படுத்தினார். அவர் கண்டுபிடித்த புதைபடிவங்கள் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் வரலாற்று அருங்காட்சியகத்தில் நிரம்பியுள்ளன. 6.6 கோடி ஆண்டுகள் சிந்தாமல் சிதறாமல் புதைந்திருந்த டைனோசர் முட்டை கரு - அறிவியல் அதிசயம் வரலாற்றை மாற்றி எழுதும் 23 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய 'சூப்பர் கண்ட' டைனோசர் கடல் மர்மம்: விலாங்கு மீனின் புலப்பெயர்வு ரகசியம் நீங்கியது - வியப்பூட்டும் தகவல்கள் 1982ஆம் ஆண்டு ஜபல்பூரில் கடும் வெப்பத்திற்கு மத்தியில் ஒரு டைனோசர் தளத்தில் புதைபடிவங்களைத் ஒவ்வொரு அங்குல அங்குலமாக நிலத்தில் தேடியதை சாஹ்னி நினைவு கூர்கிறார். அவர் தன்னுடைய ஷூ லேஸை கட்டுவதற்காக குனிந்தபோது, அவருக்கு முன்னால் 16 முதல் 20 செமீ நீளம் கொண்ட நான்கு அல்லது ஐந்து பொருட்கள் கோள வடிவில் இருந்தன. "அவை காலநிலையால் மோசமாக பாதிக்கப்பட்டு, வட்டமாக, தோராயமாக சம வடிவத்தில் இருந்தன. அதைப் பார்த்ததும் அவை டைனோசர் முட்டைகளாக இருக்குமோ என்று நான் திகைத்துப்போனேன்" என்கிறார் சாஹ்னி. உண்மையில், அவை கிரெட்டேசியஸ் காலத்தைச் சேர்ந்த பெரிய தாவரவகை டைனோசரான டைட்டானோசொரஸ் இண்டிகஸின் முட்டைகள். இதுதான் இந்தியாவில் முதன்முறையாக டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று டைனோசர்கள் வாழ்ந்த இடங்கள் நாடு முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,ALAMY படக்குறிப்பு, டைட்டானோசொரஸ் இண்டிகஸ் 20 ஆண்டுகள் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு, சாஹ்னி 30 அடி நீளம் கொண்டதாகக் கருதப்படும் இந்தியாவின் புதிய வகை மாமிச டைனோசரான ராஜசரஸ் நர்மடென்சிஸின் எலும்புகளைக் கண்டறிந்து, கடந்த ஆகஸ்ட் 2003ஆம் ஆண்டு உலகப் புகழ் பெற்றார். ஆனால் சாஹ்னியின் சாதாரண மற்றும் அதிகம் அறியப்படாத கண்டுபிடிப்புகள்தான் அறிவியலுக்குப் பயன்படுகின்றன. கடந்த 2010ஆம் ஆண்டு பிசினில் இருந்து கண்டறியப்பட்ட 54 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் பூச்சியைக் கண்டறிந்த இந்திய, ஜெர்மனிய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் குழுவின் ஒரு பகுதியாக சாஹ்னி இருந்தார். குஜராத்தில் உள்ள சூரத் நகரின் வடகிழக்கே 30 கிமீதொலைவில் அமைந்துள்ள லிக்னைட் சுரங்கத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இப்பகுதி உலகின் பழமையான இலையுதிர் காடுகளின் தாயகமாக இருந்திருக்கலாம் என்றும் அது சுட்டிக்காட்டியது. நிலத்தில் வாழும் மான் போன்ற பாலூட்டிகள் திமிங்கலங்களாக பரிணமித்தது மற்றொரு முக்கியமான பரிணாம நிகழ்வாகும். உலகின் அனைத்து திமிங்கலங்களும் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் கடற்படுகையில் தோன்றியதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. "கட்ச் மற்றும் இந்தியாவின் வடக்குப் பகுதிகள் மற்றும் பாகிஸ்தானில் கண்டறியப்பட்ட இந்த ஆரம்பக்கால திமிங்கலங்கள் எப்படி இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அவற்றின் முந்தைய தலைமுறை எப்படி இருந்தது என்பது பற்றி எங்களுக்கு அதிகம் தெரியாது" என்கிறார் ஜுகார். கடந்த காலத்தின் இந்தப் பகுதிகளைப் படிப்பது, எதிர்காலத்தை நாம் எவ்வாறு பார்க்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளவும், நாம் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் சேதத்தின் மதிப்பை அளவிடவும் உதவுகிறது என அவர் கூறுகிறார். உதாரணமாக, "மம்மத் போன்ற பெரிய பாலூட்டிகளின் அழிவில் மனிதர்கள் முக்கிய பங்கு வகித்ததை பெரும்பாலான பழங்கால ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். விதை பரவல், ஊட்டச்சத்து போக்குவரத்து போன்ற எத்தனை சுற்றுச்சூழல் செயல்பாடுகளை நாம் புரிந்து கொள்ள முடியும், அதன் அழிவோடு அவற்றையும் நாம் இழந்திருக்கலாம்" என்கிறார் ஜுகார். மனிதர்கள் இந்த நிலப்பரப்பை மாற்றுவதற்கு முன்பு உயிரினங்கள் எங்கு வாழ்ந்தன என்பதைப் புரிந்து கொள்ள இளம் புதைபடிவ பதிவுகள் உதவும். அந்தத் தகவலை எதிர்கால பாதுகாப்பு அல்லது நில மேலாண்மை திட்டங்களில் இணைக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். "உயிரினங்கள் தங்களுக்கு விருப்பமான சூழல்களுக்குச் செல்ல காலநிலை மாற்றம் காரணமாக உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். எதிர்கால காலநிலை மாற்றத்தின் சூழ்நிலைகளில் அவை எங்கு செல்லக்கூடும் என்பதை கணிக்க, கடந்த காலத்தில் விலங்குகள் மற்றும் தாவரங்கள் எங்கு வாழ்ந்தன என்பது பற்றிய தகவல்களைப் பயன்படுத்தலாம்" என்கிறார் ஜுகார். காலனித்துவ காலடித்தடங்கள் வட அமெரிக்கா போன்ற சில இடங்கள் புதைபடிவங்களுக்காக அதிகம் அறியப்படுகின்றன. அதிகமான டைனோசர் கண்டுபிடிப்புகள் கிடைக்கப்பெற்ற இந்த இடம், அருங்காட்சியக கண்காட்சிகள், இலக்கியப் படைப்புகள், திரைப்படங்கள் மற்றும் இணையம் மூலம் பரவலாக பிரபலமடைந்துள்ளதாக ஜெர்மனியின் ஹெய்டெல்பெர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரும், சமகால இந்தியாவின் வரலாற்றாசிரியருமான அமெலியா போனியா கூறுகிறார். மாறாக, உலகின் பிற பகுதிகளில் உள்ள புதைபடிவ பகுதிகள் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தாலும் இதே அளவில் அவை கவனிக்கப்படவில்லை எனக் கூறும் போனியா, இந்தியாவைப் பொறுத்தவரை புறக்கணிப்பிற்கு இரு முக்கிய காரணங்கள் இருப்பதாக உணர்கிறார். பட மூலாதாரம்,ALAMY அதில் முதலாவதாக, கடந்த கால காலனித்துவ ஆட்சியைக் கூறுகிறார். உதாரணமாக, புதுமையான கண்டுபிடிப்புகள் ஐரோப்பா அல்லது வட அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவது பொதுவான நடைமுறையாக இருந்ததால், அங்கு அவை ஆய்வு செய்யப்பட்டு உள்ளூர் மக்களுக்குப் பதிலாக மேற்கத்திய அறிவியலுக்கு பயனளிக்கும். சமீபத்திய ஓர் ஆய்வில், கடந்த 30 ஆண்டுகளில் ஒரு பெரிய தரவுத்தளத்தில் இருந்த 97 சதவிகித புதைபடிவ கண்டுபிடிப்புகள் உயர் அல்லது மேல் நடுத்தர வருமான நாடுகளைச் சேர்ந்தவர்களால் கண்டெடுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இரண்டாவதாக, காலனித்துவத்திற்குப் பிந்தைய அரசு புதைபடிவ பாரம்பரியத்தின் மதிப்பை அங்கீகரிக்கத் தவறியதாக போனியா கூறுகிறார். இந்தியா ஆராய்ச்சி நிறுவனத்தின் தாயகம் என்பதை கவனத்தில் எடுத்துக்கொண்டால் இது ஒரு முரண்பாடான வளர்ச்சி என்கிறார் போனியா. மிகவும் தனித்துவமான லக்னோவில் உள்ள பீர்பால் சாஹ்னி இன்ஸ்டிடியூட் ஆஃப் பேலியோ சயின்சஸ் 1946ஆம் ஆண்டு நிறுவப்பட்டபோது உலகில் பாலியோபோடனி ஆய்வுக்காக இருந்த இரண்டு ஆய்வகங்களில் அதுவும் ஒன்றாகும். மற்றொன்று பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தில் இருந்ததாக அவர் கூறுகிறார். டைனோசர் என்ற வார்த்தை உருவாவதற்கு முன்பே, ஆரம்பக்கால புதைபடிவங்கள் இங்கிலாந்தில் 1824இல் பதிவு செய்யப்பட்டன என்பதை நாம் அறிவோம். ஆனால், அடுத்த நான்காவது ஆண்டில் இந்தியாவில் டைனோசரின் முதல் எலும்பு கண்டெடுக்கப்பட்டது அதிகம் அறிந்திடாத ஒன்று. டைனோசருக்கு முந்தைய படிமங்கள் 1828ஆம் ஆண்டு டபிள்யூ எச் ஸ்லீமன் மத்திய இந்திய நகரமான ஜபல்பூரில் 'டைட்டானோசொரஸ் இண்டிகஸ்' என அழைக்கப்படும் முதல் இரண்டு படிமங்களை கண்டுபிடித்தார். கப்பல்களில் ஏற்றப்பட்ட ஆயிரக்கணக்கான புதைபடிவங்களுடன் அவை இங்கிலாந்துக்கு அனுப்பப்படும் வரை பல கைகளை அது கடந்து சென்றது. "1900 களின் முற்பகுதியில், பிரிட்டிஷ் புவியியலாளர்கள் இந்தியாவில் மேலும் விரிவாக சேகரித்தனர். எனவே நீங்கள் இந்திய டைனோசர்களின் முழுமையான சேகரிப்புகளைப் பார்க்க விரும்பினால், லண்டன் அல்லது நியூயார்க்கிற்குச் செல்ல வேண்டும்" என்கிறார் வில்சன். பட மூலாதாரம்,ALAMY இவை அனைத்தும், தங்கள் சொந்தநாட்டு டைனோசர்களைப் பற்றி மிகக் குறைவாகவே அறிந்து வளர்ந்த இந்தியக் குழந்தைகளின் தலைமுறை மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வில்சன் முதன்முதலில் இந்தியாவில் வேலை செய்யத் தொடங்கியபோது இந்திய அருங்காட்சியகங்களுக்கு வெளியே பார்வையாளர்களை வரவேற்கும் டைரனோசொரஸ் ரெக்ஸ் மற்றும் ட்ரைசெராடாப்ஸ் மாதிரிகளை அவர் கண்டார். "இவை அங்கு என்ன செய்கிறது என்று நான் எப்போதும் ஆச்சரியப்படுவேன்? அதற்குப் பதிலாக, உங்களிடம் ஒரு ராஜாசரஸ், ஒரு ஜைனோசொரஸ், ஒரு ராஹியோலிசரஸ் இருக்க வேண்டும். இந்திய குழந்தைகள் இந்திய டைனோசர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்" என்று வில்சன் கூறுகிறார். பள்ளி பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களில் இந்தத் தகவல் இடம் பெறாதபோது இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது கடினம். 2018இல் வெளியிடப்பட்ட வைஷாலி ஷெராப்பின் தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் பத்மா அண்ட் எ ப்ளூ டைனோசர் குழந்தைகளைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புனைகதை மற்றும் கற்பனையைப் பயன்படுத்தி, இந்திய டைனோசர்களைப் பற்றிய உண்மையான விவரங்களைக் கொண்டிருந்த அந்தப் புத்தகம், 2019ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் பிரிவில் குழந்தைகளுக்கான சிறந்த புத்தக விருதை வென்றது. அப்போதிருந்தே, இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களிடம் பேசிவரும் ஷ்ராஃப், பல்வேறு வகையான இந்திய டைனோசர்கள் மற்றும் அது தொடர்பான முக்கிய கண்டுபிடிப்புகளை அவர்களுக்கு அறிமுகம் செய்கிறார். "குழந்தைகள் நம் நாட்டின் டைனோசர் புதைபடிவ பாரம்பரியத்தை விரும்ப வேண்டும். டைனோசர் புதைபடிவங்கள் அவர்களின் கொல்லைப்புறங்களிலும் இருக்கும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என நான் விரும்பினேன்" என்கிறார் ஷ்ராஃப். பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதால் மனிதர்களுக்கு என்ன ஆபத்து? பாறு கழுகுகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு முயற்சி செய்வது ஏன்? 'Desi Stones and Bones' என்பது சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் அனுபமா சந்திரசேகரனால் செய்யப்பட்ட இந்தியாவின் செழுமையான டைனோசர் பாரம்பரியத்தைப் பற்றிய ஒரு சுயாதீன ஆடியோ கதை முயற்சியாகும். எட்டு பாட்காஸ்ட்களின் ஊடாக, அவர் இந்தியாவின் புதைபடிவ பாரம்பரியத்தின் பயணத்தை கண்டறிந்தார். மேலும், உள்ளூர் மக்களையும் அதைப் பாதுகாக்க விரும்பும் பழங்கால ஆராய்ச்சியாளர்களையும் அவர் நேர்காணல் செய்தார். "பல ஆண்டுகளாக இந்தியாவின் டைனோசர் பாரம்பரியம் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில், சில உள்ளூர்வாசிகள் அதைப் பாதுகாப்பதில் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது என்னை மிகவும் கவர்ந்தது" என்கிறார் அனுபமா சந்திரசேகரன். 2018ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளி இயற்பியல் ஆசிரியர் விஷால் வர்மாவை மனவரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்ததை அனுபமா நினைவு கூர்ந்தார். அந்தச் சந்திப்பு அவர் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. வர்மாவின் வீடு முழுவதும் புதைபடிவ அட்டைப்பெட்டிகள் நிறைந்திருந்தன. ஒரு டைனோசரர் தாவர உண்ணியா அல்லது மாமிச உண்ணியா என்பதை அறிய புதைபடிவ டைனோசர் முட்டை ஓட்டில் உள்ள துளைகளை எவ்வாறு அடையாளம் காண வேண்டும் என விஷால் வர்மா அவருக்கு கற்றுக்கொடுத்தார். பூர்வீக டைனோசர்களைப் பற்றிய இந்தியாவின் அறிவு சுயவிருப்பத்தினால் மட்டுமே இருப்பதைக் கண்டும், அவை பெரும்பாலும் ஆவணப்படுத்தப்படாமல் இருப்பதைக் கண்டும் அனுபமா ஆச்சரியமடைந்தார். தொடரும் சவால்கள் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், சமீபத்திய ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள முக்கிய டைனோசர் தளங்களின் அழிவு ஒரு சவாலாக உள்ளது. பட மூலாதாரம்,ALAMY இது இந்தியாவில் மட்டும் இருக்கும் பிரச்னை அல்ல என்கிறார் வில்சன். "அமெரிக்காவிலும் உங்கள் நிலத்தில் ஒரு புதைபடிவத்தைக் கண்டால், அதை வைத்து நீங்கள் விரும்பியதைச் செய்யலாம். டைனோசர் புதைபடிவங்களைப் பாதுகாக்க எந்தச் சட்டமும் இல்லை. அவை கனிமங்களாகக் கருதப்படுகின்றன. மேலும் அந்த அணுகுமுறையில் நிறைய சவால்கள் உள்ளன. இந்தியாவில், சுரங்கம் மற்றும் பிற வளர்ச்சி நடவடிக்கைகளால் மிகப்பெரும் அளவிலான பழங்காலத் தரவுகள் இழக்கப்படுகின்றன என்கிறார் வில்சன். பல இந்திய பழங்கால ஆராய்ச்சியாளர்கள் எலும்புகளை வைக்க போதிய இடம் இல்லாதது உட்பட பல காரணங்களால் சிரமப்படுகின்றனர். முறையான அருங்காட்சியக உள்கட்டமைப்பு இல்லாமல் பெரும்பாலான புதைபடிவங்கள் பல்கலைக்கழக கட்டடங்களின் தூசி நிறைந்த தாழ்வாரங்களில் வைக்கப்படுகதாக சாஹ்னி கூறுகிறார். ராஜசரஸ் டைனோசரின் கண்டுபிடிப்பும் அப்படித்தான் இருந்தது எனக் கூறும் அவர், எலும்புகள் அடையாளம் காணப்பட்டு ஒன்றாக இணைக்கப்படுவதற்கு முன்பு 20 ஆண்டுகள் கிடப்பில் இருந்தன என்கிறார். ஒழுங்கற்ற நிதி திட்டங்களுக்கும் இதற்கு இடையூறு விளைவிக்கின்றன. "நிதி தேவைப்படும் இரண்டு திட்டங்கள் இருந்தால் ஒன்று நிலத்தடி நீர் , மற்றொன்று பழங்காலவியல். வளரும் நாட்டில் எதுஅவசியம் என்பதை நீங்கள் யூகிக்க முடியும்" என்கிறார் சாஹ்னி. ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் புதைபடிவ கண்டுபிடிப்புகளுக்கு இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஜுகார் கூறுகிறார். "பழங்காலவியல் போன்ற ஒரு துறைக்கு நிறைய நிதி, புதைபடிவ தயாரிப்பு ஆய்வகங்கள் மற்றும் சேமிப்பு வசதிகளுடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகங்கள் தேவைப்படுகின்றன. பெரும்பாலும் இவை வளரும் நாடுகளில் இல்லை" என்கிறார் ஜுகார். இந்திய புதைபடிவங்கள் பற்றிய ஆய்வுக்கு இடையூறாக இருக்கும் மற்றொரு முக்கிய பிரச்னை, விஞ்ஞானிகளுக்கு இடையே அதிக பிராந்திய ஒத்துழைப்பு தேவைப்படுவது. புதைபடிவ செல்வத்தின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான், மியான்மர், வங்கதேசம் என பிரிக்க முடியாது என்பதால், புதைபடிவவியலில் இந்தியா தனிமையில் இருக்க முடியாது எனக் கூறும் வில்சன், இந்த நாடுகள் அனைத்தும் ஒரு புவியியல் அலகு, ஆனால், விஞ்ஞானிகள் சுதந்திரமாக பயணம் செய்வதற்கும், தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் அரசியல் தடையாக இருக்கும், ஆனால் அவ்வாறு செய்வது மேலும் கற்பதற்கான மிக முக்கியமான படி என்கிறார் ஜுகார். https://www.bbc.com/tamil/science-63477150
  7. இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு: போராட்டப் பேரணியில் பங்கேற்றபோது நடந்தது 3 நவம்பர் 2022, 12:26 GMT புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RAHAT DAR/EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு, தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி தனது அரசியல் கட்சியான தெஹ்ரீக்- இ- இன்சாஃப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் கையசைக்கும் இம்ரான்கான். இந்த பேரணியில்தான் இம்ரான் சுடப்பட்டார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் வாசிரிபாத் நகரில் நடந்த போராட்டப் பேரணியின்போது சுடப்பட்டார். அவருக்கு வயது 70. வியாழக்கிழமை மாலை நடந்த இந்த தாக்குதலில் மேலும் நான்கு பேர் காயமடைந்திருப்பதாக அவரது பிடிஐ கட்சியை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். "இது அவரைக் கொல்வதற்கான முயற்சி, படுகொலை செய்வதற்கான முயற்சி," என்று அவரது மூத்த உதவியாளர் ஒருவர் ஏ எஃப் பி செய்தி முகமையிடம் கூறினார். ஆனால், அவரைக் குறிவைத்துதான் தாக்குதல் நடந்ததா என்பதை போலீஸ் உறுதிப்படுத்தவில்லை. இந்த தாக்குதலை நிகழ்த்தியதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவர் பிறகு கைது செய்யப்பட்டதாக, பாகிஸ்தான் ஜியோ டிவி தெரிவிக்கிறது. ஏப்ரல் மாதம் அவர் ஆட்சி கவிழ்ந்த நிலையில், உடனடியாக மறுதேர்தல் நடத்தப்படவேண்டும் என்று கோரி தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி ஒன்றை நடத்திவந்தார் இம்ரான். 'நீண்ட பயணம்' என்று பெயரிடப்பட்ட இந்த பேரணியின்போதுதான் அவர்மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இது தொடர்பான காட்சிகளில் அவர் உடனடியாக லாகூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவது தெரிந்தது. அவர் முழங்காலின் முன் பகுதியில் குண்டு பாய்ந்ததாக அவரது பிடிஐ கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இம்ரான்கான் உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாக பிடிஐ கட்சித் தலைவரும், மாகாண சுகாதார அமைச்சருமான யாஸ்மீன் ரஷீத் கூறினார். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் அதிகாரி கூறுவது என்ன? இந்த துப்பாக்கிச்சூடு நடந்தபோது பேரணியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி அப்துல் ரஷீத், துப்பாக்கிச்சூடு சத்தத்தை தாம் கேட்டதாக பிபிசியிடம் கூறினார். இம்ரான் கான் இருந்த கன்டெயினரில் இருந்து சற்று தொலைவில் தாம் தள்ளி இருந்ததாகவும், துப்பாக்கி சுடப்படும் சத்தம் தமக்கு கேட்டதாகவும் அவர் கூறினார். இதையடுத்து பேரணியில் பங்கேற்றவர்கள் மத்தியில் நெரிசல் தோன்றியது என்றும், இம்ரான் கான் காலில் சுடப்பட்டார் என்றும் அவர் கூறினார். கண்டெயினரிலேயே அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டு வேறு வாகனத்துக்கு அவர் மாற்றப்பட்டார் என்றும் அவர் தெரிவித்தார். அப்படி வேறு வண்டிக்கு இம்ரான் மாற்றப்பட்டபோது, தாம் அருகில் இருந்ததாகவும், அப்போது இம்ரான் நினைவோடு இருந்ததாகவும் அந்த போலீஸ் அதிகாரி கூறினார். அகமது சட்டா, ஃபைசல் ஜாவேத் என்பவர்கள் இந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாகவும் அவர் கூறினார். தகுதி நீக்கம் பொதுப் பதவிகள் எதையும் இம்ரான்கான் வகிக்கக்கூடாது என்று கடந்த மாதம் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தாம் தகுதி நீக்கம் செய்யப்படுவதற்குக் காரணமான வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது என்று இம்ரான் கான் கூறியிருந்தார். பிரதமர் பதவி வகித்தபோது வெளிநாட்டு பிரமுகர்களிடம் இருந்து பெற்ற பரிசுப் பொருள்கள் தொடர்பாக தவறான விவரங்களைத் தாக்கல் செய்ததாகவும், அவை விற்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவற்றின் மூலம் வந்த வருவாய் விவரத்தையும் தவறாகக் காட்டியிருந்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள், மோதிரம், கஃப்லிங்குகள் போன்றவை இந்த சர்ச்சைக்குரிய பரிசுப் பொருள்களில் அடக்கம். இந்தப் பக்கம் தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது. https://www.bbc.com/tamil/global-63501652
  8. டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு 'ஆபத்து' எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 37 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பெற்றிருக்கும் வெற்றி டி20 உலகக்கோப்பையின் சமன்பாடுகளை மாற்றியிருக்கிறது. தென்னாப்பிரிக்காவும் இந்தியாவும் அரையிறுதியில் ஆடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்காவை இன்றைய போட்டியில் தோற்கடித்து பாகிஸ்தான் தனது அரையிறுதி நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை சந்திக்க இருக்கிறது. அந்தப் போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றிபெற்றுவிட்டால், இந்திய அரையிறுதிக்குச் செல்வதற்கு ஜிம்பாப்வே அணியுடன் வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஏனென்றால் இந்தியா தோல்வியடையும்பட்சத்தில் 6 புள்ளிகள் பெற்ற பாகிஸ்தான் அணி, ரன் விகிதத்தை அதிகரித்துக் கொண்டு அரையிறுதிக்குச் சென்றுவிடும். வேதனையை சாதனைகளாக மாற்றிய விராட் கோலி - மறுபிறவி எடுத்தது எப்படி? இந்தியா சறுக்கியது எங்கே? அரையிறுதி வாய்ப்பு எப்படி? இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை ஆட்டம் பற்றி சுந்தர் பிச்சை ட்விட்டர் பதிவு பாகிஸ்தான் அணியின் நிலை என்ன? பாகிஸ்தான் அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளிலும் தோல்வியும் அடைந்திருக்கிறது. அதனால் 4 புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. அந்த அணியின் ரன்ரேட் 1.117. அடுத்ததாக அந்த அணி வங்கதேசத்துடன் மோத இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை காலையில் அந்தப் போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றிபெறும்பட்சத்தில் அந்த அணி 6 புள்ளிகளைப் பெறும். எனினும் அடுத்து நடக்கும் இந்தியா-ஜிம்பாப்வே ஆட்டத்துக்காக பாகிஸ்தான் காத்திருக்க வேண்டும். இந்தியா தோல்வியடையும் பட்சத்தில் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் சென்றுவிடும். இந்தியாவுக்கு என்ன சிக்கல்? இந்தியா இதுவரை 4 போட்டிகளில் ஆடி மூன்று போட்டிகளில் வென்று 6 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. இப்போதைக்கு பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், பாகிஸ்தானும் தென்னாப்பிரிக்காவும் அடுத்த போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவை முந்திவிடும் நிலை ஏற்படும். அடுத்த ஆட்டத்தில் இந்தியா குறைந்தபட்சம் ஒரு புள்ளியையாவது பெற வேண்டும். அதாவது மழையாவது பெய்ய வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES ஏனென்றால் இந்தியாஅதனால் இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டுமானால் ஜிம்பாப்வே அணியுடன் வெற்றி பெற்றாக வேண்டும். இல்லையென்றால் அரையிறுதிக்குச் செல்ல முடியாது. ஜிம்பாப்வேயுடனான போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடக்க இருக்கிறது. தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்குச் சென்றுவிட்டதா? தென்னாப்பிரிக்க அணி 4 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வென்றும் ஒரு போட்டியில் மழையால் பாதிக்கப்பட்டும் 5 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. அந்த அணியின் ரன் ரேட் 1.441. அடுத்ததாக நெதர்லாந்து அணியுடன் மோதுவதால் அந்த அணிக்கு அரையிறுதிக்குச் செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவே கருதலாம். வங்கதேசத்துக்கு வாய்ப்பிருக்கிறதா? வங்கதேச அணி இப்போது 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி அடுத்தாக பாகிஸ்தானுடன் ஆடவுள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான சிறு வாய்ப்புக் கிடைக்கும். எனினும் தற்போது அந்த அணியின் ரன் ரேட் குறைவாக இருப்பதால், அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியிருக்கும். மற்ற அணிகளுக்கு என்ன வாய்ப்பு? இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் தவிர பிரிவு-2 இல் உள்ள ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகள் இனி அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை. குரங்கில் மனித விந்தணுவைச் செலுத்தி நடந்த சோதனையில் என்ன கிடைத்தது தெரியுமா? அரையிறுதிக்குத் தகுதிபெறப் போவது யார் என்பதைத் தெரிந்து கொள்ள வரும் ஞாயிற்றுக்கிழமை வரை காத்திருக்க வேண்டும். பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா போட்டியில் என்ன நடந்தது? முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை எடுத்தது. தடுமாறிய பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இரண்டாவது ஓவரில் நோர்ஜே வீசிய பந்தில் ஒரு சிக்சரை அடித்த முகமது ஹாரிஸ் அடுத்த பந்திலேயே எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து தடுமாறிவரும் பாகி்ஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசமும் லுங்கி நிங்கிடி பந்துவீச்சில் வெறும் 6 ரன்களுக்கு ரபாடாவிடம் பிடி கொடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES அடுத்த ஓவரிலேயே நோர்ஜேவின் பந்துவீச்சில் ஷான் மசூத் இரண்டே ரன்களுக்கு பவுமாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 7-ஆவது ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்களுக்கு எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது. ஆனால் அதன் பிறகு களத்தில் இருந்த முகமது நவாஸும், இப்திஹார் அகமதுவும் பொறுப்பாக ஆடத் தொடங்கினர். ரன் ரேட் குறைவாக இருந்தாலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர். 28 ரன்களை எடுத்திருந்த நவாஸ், ஷம்சியின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு இஃப்திகாரும் சதாப்கானும் இணைந்து பாகிஸ்தானின் ஸ்கோரை வேகமாக உயர்த்தத் தொடங்கினர். பாகிஸ்தானுக்கு கிடைத்த 'நோ பால்' சிக்சர் 19-ஆவது ஓவரில் நோர்ஜே வீசிய முழு நீளப் பந்து சதாப்பின் இடுப்பு உயரத்துக்கு மேல் வந்தது. அதை மிட் ஆன் திசையில் சிக்சராக மாற்றினார் சதாப். அது நோபால் என அறிவிக்கப்பட்டதால் ஃப்ரீ ஹிட்டாக கிடைத்த அடுத்த பந்திலும் சதாப் சிக்சர் அடித்தார். இதன் மூலம் 20 பந்துகளில் அரைச் சதத்தைக் கடந்தார். எனினும் அந்த ஓவரின் 5-ஆவது பந்தில் எல்லைக் கோட்டைத் தாண்டும் வகையில் அவர் அடித்த பந்தை ஸ்டப்ஸ் அற்புதமாகக் குதித்துப் பிடித்தார். அது பாகிஸ்தானின் ரன்குவிப்புக்கு தடையாக அமைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகள் விழுந்தன. இறுதியில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை எடுத்தது பாகிஸ்தான் அணி. டி20 கிரிக்கெட்டில் இது ஓரளவுக்கு வெற்றிபெறும் எண்ணிக்கை கருதப்படுகிறது. குயின்டன் டி காக் விட்ட கேட்ச் பாகிஸ்தான் அணி 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக், இப்திகார் அகமதுவை ரன் அவுட் செய்யும் ஒரு வாய்ப்பைத் தவற விட்டார். அப்போது அவர் வெறும் 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அந்த விக்கெட்டை அப்போதே எடுத்திருந்தால் பாகிஸ்தான் அணி இன்னும் குறைவான ரன்களையே எடுக்க முடிந்திருக்கும். தடுமாறிய தென்னாப்பிரிக்கா பாகிஸ்தான் அணியைப் போலவே தென்னாப்பிரிக்க அணியும் தொடக்கத்திலேயே தடுமாறத் தொடங்கியது. ஷாகின் ஷா அப்ரிடியின் முதல் ஓவரிலேயே குயின்டன் டி காக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் மூன்றாவது ஓவரில் ரூசோப் ஆட்டமிழந்தார். பின்னர் ஹாரிஸ் ராஃப் அதிரடியாக ஆடி ஓரளவு ரன்களைக் குவித்தார். ஆனால் எட்டாவது ஓவரில் சதாப் வீசிய பந்தில் பவுமாவும், மார்க்ரமும் ஆட்டமிழந்தனர். இதனால் 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்க அணி தடுமாறியது. மழையால் தடைபட்ட ஆட்டம் 9ஆவது ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 69 ரன்களை எடுத்திருந்த போது மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஸ்டப்ஸ், கிளாஸன் ஆகியோர் தலா 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES மழை நின்ற பிறகு ஆட்டம் 14 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவுக்கு 142 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஏற்கெனவே 9 ஓவர்கள் முடிந்த நிலையில் மேலும் 5 ஓவர்களில் 73 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் தென்னாப்பிரிக்க வீரர்கள் அதிரடியாக ஆடத் தொடங்கினார்கள். ஆனால் 11-ஆவது ஓவரில் ஷாகின் ஷா அப்ரிடி வீசிய பந்தில் கிளாசன் ஆட்டமிழந்தார். இறுதியில் அந்த அணி 14 ஓவரில் 108 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 33 ரன்கள் வித்தியாத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. https://www.bbc.com/tamil/sport-63500487
  9. எரிபொருள் விலையில் மாற்றமில்லை - அமைச்சர் காஞ்சன By T. SARANYA 03 NOV, 2022 | 02:36 PM விலை குறைப்பை எதிர்பார்த்து விற்பனை முகவர்கள் தமக்குத் தேவையான கொள்வனவுக் கட்டளைகளை (ஆடர்களை ) வழங்காததால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த வாரம் எரிபொருள் விலையில் திருத்தம் இருக்காது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகிய இரண்டு நிறுவனங்களிலும் எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானளவு எரிபொருள் கையிருப்புகளை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/139033
  10. சோலார் மின்சாரம்: விண்வெளியில் திட்டமிடப்படும் சூரியவிசை மின் நிலையங்கள் - மின்சாரம் எப்படி பூமிக்கு வரும்? அறிவியல் அதிசயம் எம்மா வூல்லாகாட் டெக்னாலஜி ஆஃப் பிசினஸ் செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, விண்வெளியில் சூரியவிசை மின்சாரம் உற்பத்தி செய்து பூமிக்கு அனுப்பும் கனவுத் திட்டம் எப்படி நிறைவேறும்? விண்வெளியில் சூரியவிசை மின்சாரத்தை உற்பத்தி செய்து அதை மைக்ரோவேவ் எனப்படும் நுண்ணலைகள் மூலம் பூமிக்கு அனுப்பும் திட்டம் நம்ப முடியாததாகத் தோன்றலாம். ஆனால், 2035 ஆண்டு வாக்கிலேயே நடக்க சாத்தியமுள்ள ஒன்றுதான் என்கிறார் ஸ்பேஸ் எனர்ஜி இனிஷியேட்டிவ்(எஸ்.இ.ஐ.) என்ற தொழில்துறை கல்வியாளர் கூட்டமைப்பின் இணைத் தலைவர் மார்ட்டின் சோல்டாவ். உயர் புவி வட்டப்பாதையில் மிக பிரம்மாண்டமான செயற்கோள்களின் தொகுதி ஒன்றை உருவாக்கும் Cassiopeia என்ற திட்டத்தை செயல்படுத்தப் பாடுபடுகிறது இந்த எஸ்.இ.ஐ. அமைப்பு. இந்த செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டுவிட்டால், அவை சூரிய விசை மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதனை புவிக்கு அனுப்பும். இதனால், கிடைக்கக்கூடிய வாய்ப்புள்ள மின்சாரத்தின் அளவு அளவற்றது என்கிறார் மார்ட்டின் சோல்டோவ். "2050ம் ஆண்டில் உலகின் மின் தேவை முழுவதையும் இந்த முறையில் தீர்க்க முடியும் என்று கோட்பாட்டு அளவில் சொல்ல முடியும்," என்கிறார் அவர். "இந்த வட்டப்பாதையில் சூரிய விசை மின்சார செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த போதிய வாய்ப்பு இருக்கிறது அத்துடன், சூரியன் தரும் ஆற்றலின் அளவு உண்மையில் மிக அதிகம். புவிநிலை சுற்றுப்பாதையில் ஒரு சிறிய பகுதி பெறுகிற சூரிய ஆற்றலின் அளவு, 2050ல் மனித குலம் முழுவதும் பயன்படுத்தும் என்று கணிக்கத்தக்க வருடாந்திர மின்சார அளவைப்போல 100 மடங்கு அதிகம்," என்கிறார் சோல்டாவ். விண்வெளி சார்ந்த மின் உற்பத்தித் திட்டங்களுக்கு 3 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கி இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரிட்டன் அரசு ஓர் அறிவிப்பு வெளியிட்டது. ஃப்ரேசர் நாஷ் என்ற நிறுவனம் பொறியியல் ஆராய்ச்சி ஒன்றை செய்து முடித்து, இந்த தொழில்நுட்பம் நடைமுறை சாத்தியம் உள்ளதுதான் என்று அறிவித்ததை தொடர்ந்துதான் பிரிட்டன் அரசாங்கம் இந்த நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டது. இந்த ஒதுக்கீட்டில் கணிசமான பகுதி எஸ்.இ.ஐ. திட்டத்துக்குச் செல்லும். இந்த திட்டத்தின் கீழ் ஏவப்படும் செயற்கைக்கோள்கள், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஒன்று போல உருவாக்கப்பட்ட துண்டுகளால் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த துண்டுகள் புவியில் தயாரிக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்படும். அங்கே ரோபோட்டுகள் இந்த துண்டுகளை இணைத்து செயற்கைக்கோள்களுக்கு முழுவடிவம் தரும். இந்த செயற்கைக் கோள்களில் உருவாகும் கோளாறுகளையும் இந்த ரோபோட்டுகளே சரி செய்யும். 6.6 கோடி ஆண்டுகள் சிந்தாமல் சிதறாமல் புதைந்திருந்த டைனோசர் முட்டை கரு - அறிவியல் அதிசயம் வரலாற்றை மாற்றி எழுதும் 23 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய 'சூப்பர் கண்ட' டைனோசர் கடல் மர்மம்: விலாங்கு மீனின் புலப்பெயர்வு ரகசியம் நீங்கியது - வியப்பூட்டும் தகவல்கள் இந்த செயற்கைக் கோள்களால் தயாரிக்கப்படும் சூரிய விசை மின்சாரம், உயர் அலையென் கொண்ட ரேடியோ அலைகளாக மாற்றப்பட்டு புவியில் நிறுவப்படும் ரெக்டிஃபையிங் ஆண்டெனாக்களுக்கு அனுப்பப்படும். அவை ரேடியோ அலைகளை மின்சாரமாக மாற்றும். ஒவ்வொரு செயற்கைக்கோளும் 2 கிகாவாட் அளவுக்கான மின்சாரத்தை மின் தொகுப்புக்கு அளிக்கக்கூடியதாக இருக்கும். இந்த அடிப்படையில் பார்த்தால் ஒவ்வொரு செயற்கைக்கோளும், ஒரு அணு மின்நிலையத்துடன் ஒப்பிடத்தக்கதாக இருக்கும். சரி ஏன், புவியிலேயே சூரியவிசை மின்சாரத்தை உருவாக்க முடியாதா? அதற்கு ஏன் விண்வெளிக்குப் போகவேண்டும் என்று தோன்றுகிறதா? அதற்குக் காரணம் இருக்கிறது. புவியில், வளி மண்டலத்தால் சூரிய ஒளி சிதறலுக்கு உள்ளாகிறது. ஆனால், விண்வெளியில் நிலை நிறுத்தப்படும் சூரிய விசை மின்சார உற்பத்தி செயற்கைக் கோளுக்கு, குறுக்கீடு ஏதுமில்லாமல் சூரிய ஒளி நேராக வரும். இதனால், விண்வெளி சூரிய விசை மின்நிலையத்தில் வைக்கப்படும் சோலார் பேனல்கள் புவியில் வைக்கப்படும் அதே அளவிலான பேனல்களைவிட மிக அதிக அளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்யும். பல இடங்களில் இத்தகைய திட்டங்கள் உருவாக்கப்பட்டுவருகின்றன. பட மூலாதாரம்,SEI படக்குறிப்பு, எஸ்.இ.ஐ. திட்டம் விண்வெளியில் இருந்து சூரியவிசை மின்சாரத்தை பெறுவதற்கான திட்டமிடுதலை மேற்கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக அமெரிக்காவில், இத்தகைய மின் உற்பத்தி அமைப்புக்குத் தேவையான முக்கியமான தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது அந்நாட்டின் வான்படை ஆராய்ச்சிக்கூடமான ஏர்ஃபோர்ஸ் ரிசர்ச் லேபரட்டரி. இந்த திட்டத்துக்கு ஸ்பேஸ் சோலார் பவர் இன்கிரிமென்டல் டெமான்ஸ்ட்ரேஷன் அன்ட் ரிசர்ச் (SSPIDR) என்று பெயர். சோலார் செல்லின் செயல்திறனை அதிகரிப்பது, சூரியவிசை மின்சாரத்தை ரேடியோ அலைகளாக மாற்றுவது, விண்கலனில் ஏற்படும் பெரிய தட்பவெட்ப மாறுபாடுகளை குறைப்பது, இதற்கு தேவையான செயல்படுத்தத்தக்க வடிவமைப்பை உருவாக்குவது ஆகியவை இந்த அமெரிக்க நிறுவனம் உருவாக்கப் பாடுபடும் தொழில்நுட்பங்களில் சில. சூரியவிசை மின்சாரத்தை ரேடியோ அலைகளாக மாற்றும் சேண்ட்விச் டைல்ஸ் எனப்படும் பலகைகளுக்கான புதிய பாகங்களை வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தது இந்த திட்டத்தில் பாடுபடும் குழு. புவியை நோக்கி அனுப்பப்படும் நுண்ணலைக் கற்றைகள் அச்சத்தை ஏற்படுத்தலாம். ஆனால், இந்த அலைக்கற்றைகள் பூமியிலேயே உருவாக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இவை பாதுகாப்பானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. "இந்தக் கற்றைகள் நுண்ணலைகள். நம்மைச் சுற்றி எல்லா நேரமும் இருக்கும் வைஃபை அலைகளைப் போல மிகவும் குறைந்த அழுத்தம் கொண்டவை இவை. பகல் நேர வெயிலைப் போல கால் மடங்கு அடர்த்தி கொண்டவை இவை," என்கிறார் சோல்டாவ். "நிலநடுக்கோட்டில், பாலைவனத்தில் நீங்கள் நின்றால், ஒரு சதுர மீட்டரில் பெறுகிற அலைகளைப் போல கால்வாசி அலைகள்தான் இவை. எனவே இயல்பிலேயே பாதுகாப்பானவை," என்கிறார் அவர். "ஆனால், இங்கே இதற்கான தொழில்நுட்பம் இருக்கிறது என்று நாம் நம்ப விரும்புகிறோம். ஆனால், இதுபோன்ற ஒரு சிக்கலான திட்டத்தில் இறங்கும் அளவுக்கு அது தயாராக இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து," என்கிறார் டாக்டர் ஜோவானா ரேடுலோவிக். போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தின் வெப்ப இயக்கவியல் பேராசிரியரான இவர் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைப்புகள் சார்ந்த வல்லுநர். மிகப்பெரிய அளவிலான சூரியவிசை பலகைகளை விண்வெளியில் நிறுவுவது செலவுபிடிக்கக்கூடியது, இத்தகைய திட்டங்களை செயல்படுத்த நூற்றுக்கான முறை விண்வெளிக்கு பொருள்களை ஏவவேண்டி வரும். இது ஏராளமான கரியமிலவாயுவை புவியில் உமிழும். ஆனால், மிக நிதானமான நம்பிக்கை உணர்வுகளும் வெளிப்படாமல் இல்லை. கேசியோபியா திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்க ஆய்வினை ஸ்டாரத்க்லைடி பல்கலைக்கழகம் மேற்கொண்டது. இந்த திட்டத்தால் ஏற்பட சாத்தியமுள்ள கரியமிலவாயு உமிழ்வையும் இந்த ஆய்வு கணக்கில் கொண்டது. இந்த ஆய்வில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு கிலோவாட் மின்சாரத்துக்கு 24 கிராம் கரியமிலவாயுவே உற்பத்தியாகும் என்றும், இது மிகக்குறைவு என்றும் இந்த ஆய்வு கணித்துள்ளது. பட மூலாதாரம்,SEI படக்குறிப்பு, மார்ட்டின் சோல்டாவ் விண்வெளிக்கு பொருள்களை ஏவுவதற்கான செலவு காலந்தோறும் குறைந்தே வருகிறது. இந்த செலவு 90 சதவீதம் குறைந்துள்ளது. இது மேலும் குறையும். இதனால், பொருள்களை விண்வெளிக்கு ஏவும் செலவு குறைவது இதன் பொருளாதார சாத்தியக்கூற்றினை மேம்படுத்துகிறது அத்துடன், சூரியவிசை செயற்கைக் கோள்களின் வடிவமைப்பிலும், ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்கிறார் சோல்டாவ். பிரிட்டன் அரசாங்கத்திடம் இருந்து குறைந்த அளவிலான நிதியாதாரமே கிடைத்துள்ள நிலையில், இந்த எஸ்.இ.ஐ. திட்டம் இது தொடர்பான தொழில்நுட்பத்துக்கு தனியார் மூலதனத்தை பெறமுடியும் என்றும் நம்புகிறது. https://www.bbc.com/tamil/science-63485717
  11. வெளிநாட்டவர்களை திருமணம் செய்வதற்கான வரையறைகளில் தளர்வு - பதிவாளர் நாயகம் By T. SARANYA 03 NOV, 2022 | 01:01 PM (எம்.மனோசித்ரா) வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்களுக்கிடையில் திருமணப்பதிவினை மேற்கொள்வதில் காணப்படும் வரையரைகளை தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 2021 இலக்கம் 18 சுற்று நிரூபத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் பீ.எஸ்.பி.அபேவர்தன தெரிவித்துள்ளார். குறித்த சுற்று நிரூபத்திற்கு அமைய இலங்கையர்கள் திருமணம் செய்வதற்கு தயாராகும் வெளிநாட்டவர்கள் சிறந்த உடல் நலத்துடன் இருப்பதாக சுகாதார அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு மேலதிகமாக எந்தவொரு குற்றங்களுடனும் தொடர்புடையவர் அல்ல என்று பாதுகாப்பு துறையிடமிருந்து அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமாகும் என்ற நிபந்தனையும் காணப்பட்டது. இந்த வரையரையை தளர்த்துமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்காக முன்னெடுக்க வேண்டிய மாற்று மாற்று வழிமுறை தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் பீ.எஸ்.பி.அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார். இவ்வாறு வரையறைகளை தளர்த்துவது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், வெகு விரைவில் குறித்த வரையறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதிவாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/139025
  12. எரிபொருள் நிலைய தொலைபேசிகளை திருடிய முன்னாள் இராணுவ கெப்டன் உள்ளிட் இருவர் கைது! By DIGITAL DESK 2 03 NOV, 2022 | 04:54 PM பிலியந்தலை கூட்டுறவு சங்க எரிபொருள் நிலையத்தில் QR குறியீட்டை சரிபார்ப்பதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராணுவ கெப்டன் ஒருவரும் நிதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 80,000 ரூபா பெறுமதியான இரண்டு கைத்தொலைபேசிகள் காணாமல் போனமை தொடர்பில் அதன் முகாமையாளரால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர். https://www.virakesari.lk/article/139042
  13. நன்றி அண்ணா, தொடர்ந்து இருக்கமாட்டேன் என நினைக்கிறேன்.
  14. பிரகலாதன் இரணியன் நடிப்பு, முடிவு எதிர்பாராதது.
  15. சட்ட மா அதிபருக்கு விஷேட வரப்பிரசாதம் எதுவுமில்லை - ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கோட்டை நீதிமன்றில் சுட்டிக்காட்டு By T. SARANYA 03 NOV, 2022 | 04:58 PM (எம்.எப்.எம்.பஸீர்) சட்ட மா அதிபர் என்பவர் விஷேட வரப் பிரசாதம் உடைய நபர் அல்ல என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், கோட்டை நீதிவான் நீதிமன்றில் தெரிவித்தார். கொழும்பு மத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டயஸ், கொழும்பு மத்தி உதவி பொலிஸ் அத்தியட்சர் நலின் தில்ருக் ஆகிய இருவருக்கு எதிரான தனிப்பட்ட மனுவில் சட்ட மா அதிபர் மனுதாரரோ, பிரதிவாதியோ அல்லாத நிலையில், நகர்த்தல் பத்திரம் ஊடாக அவர் வழக்கை விசாரணைக்கு அழைத்து ஒருதலை பட்சமாக செயற்பட்டு உத்தரவுகளைப் பெற்றுக்கொண்டுள்ளமை தவறான முன்னுதாரமாக அமையும் எனவும் இதன்போது அவர் தெரிவித்தார். கொழும்பு மத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டயஸ், கொழும்பு மத்தி உதவி பொலிஸ் அத்தியட்சர் நலின் தில்ருக் ஆகிய இருவரையும் எதிர்வரும் 8 ஆம் திகதி, நீதிமன்றில் ஆஜராகுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை கடந்த முதலாம் அதே நீதிமன்றால் மீளப் பெறப்பட்டது. 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் சட்டக் கோவையின் 136 (1) ஆம் அத்தியாயத்தின் கீழ் , இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்தன தாக்கல் செய்த தனிப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றே, அம்மனுவின் பிரதிவாதிகளாக குறித்த இரு பொலிஸ் அதிகாரிகளையும் பெயரிட்டே இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில்,முதலாம் திகதி அம்மனு சட்ட மா அதிபரால் நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு அழைக்கப்பட்டது. இதன்போது சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அரச சட்டவாதி சமிந்த விக்ரம ஆஜராகி முன் வைத்த விடயங்களை ஆராய்ந்து, கோட்டை நீதிவான் திலின கமகே, முன்னர் பிறப்பித்த அழைப்பாணையை மீளப் பெறுவதாக அறிவித்தார். கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி , காலி முகத்திடல் முதல் புதுக் கடை நீதிமன்ற வளாகம் வரையில் பேரணியாக செல்ல முயன்ற ஆர்ப்பாட்ட பேரணிக்கு தேவையற்ற இடையூறுகளை விளைவித்து அதனை தடுத்ததாக கூறி இந்த தனிப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்ட மா அதிபருக்கும் பிரதி செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் ஊடாக குறித்த மனு , மனுதாரர் தரப்பின் சார்பில் மீள விசாரணைக்கு அழைக்கப்பட்டது. இதன்போது உத்தரவுகள் எதனையும் கோராத மனுதாரர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சட்ட மா அதிபரின் நடவடிக்கை தவறான முன்னுதாரணம் என்பதை மன்றில் பதிவு செய்தார். பீட்டர் பொன்சேகா எதிர் மத்திய வங்கி நாணயச் சபை வழக்கில், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மன்றில் பிரஸ்தாபித்த ஜனாதிபதி சட்டத்தரணி, அவ்வழக்கு தீர்ப்பில் சட்ட மா அதிபருக்கு விஷேட வரப் பிரசாதங்கள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மனுதாரருக்கு தெரியாமல் வழக்கை அழைத்த சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அரச சட்டவாதி சமிந்த விக்ரம, குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் 97 (1) பிரிவின்படி சட்டமா அதிபரின் அனுமதியின்றி பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்டவிரோத கூட்டம் தொடர்பில் வழக்குத் தொடுக்க முடியாது என வாதிட்டிருந்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், இந்த தனிப்பட்ட மனுவில் சட்ட விரோத கூட்டம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், அமைதி ஆர்ப்பாட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். இதனைவிட, சட்ட மா அதிபர், குற்றம் சட்டப்பட்டுள்ள இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட அழைப்பாணையை மீளப் பெற வேண்டும் என்பதற்கான பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 88 (3) ஆம் அத்தியாயத்தை முன்னிறுத்தி வாதங்களை முன் வைத்திருந்ததாக சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டினார். எனினும் குறித்த சட்டத்தின் ' நடைமுறை ', ' நடவடிக்கை ' என இரு பிரிவுகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், நடவடிக்கை எனும் பிரிவு சிவில் வழக்குகளுடன் தொடர்புபட்டது எனவும், அதற்கே வழக்குத் தொடர முன்னர் சட்ட மா அதிபருக்கு அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டார். இங்கு தொடரப்பட்டுள்ள தனிப்பட்ட மனு குற்றவியல் வழக்கு என்பதால், அதற்கு சட்ட மா அதிபரின் அனுமதி தேவை இல்லை என அவர் வாதிட்டார். இந்நிலையில், பிரதிவாதிகளான பொலிஸ் அதிகாரிகள் இருவரும் மன்றில் ஆஜராகியில்லாத சூழலில், சட்ட மா அதிபரும் இல்லாத சூழலில் எந்த உத்தரவுகளையும் தான் கோரப் போவதில்லை என சுட்டிக்காட்டிய அவர், வழக்கு தினமான 8 ஆம் திகதி தேவையான உத்தரவுகளை கோருவதாக கூறி விடயங்களை நீதிமன்றில் பதிவு செய்தார். https://www.virakesari.lk/article/139047
  16. அவதார் - 2 உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது ஏன்? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AVATAR/TWITTER 2009ஆம் ஆண்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய அவதார் திரைப்படத்தின் அடுத்த பாகம் டிசம்பரில் வெளியாகவிருக்கிறது. இதையொட்டி பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அவதார் திரைப்படம் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துவது ஏன்? இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அவரது துவக்க காலத் திரைப்படங்களில் இருந்தே உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டவர். இவரது இயக்கத்தில் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் நடித்து 1984ல் வெளியான The Terminator பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 80களில் யாரும் இம்மாதிரி ஒரு படத்தைக் கற்பனைகூட செய்துபார்த்திருக்கவில்லை. அதற்கடுத்ததாக அவர் இயக்கிய Aliens, The Abyss ஆகிய படங்கள் திரைப்பட ரசிகர்களை அதிரவைத்தன. குறிப்பாக The Abyss படத்திற்காக அவர் எடுத்துக்கொண்ட களம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு வெளிவந்த Terminator 2: Judgment Day, True Lies ஆகிய படங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதற்குப் பிறகுதான் உலகையே திரும்பிப்பார்க்க வைத்த Titanic திரைப்படம் வெளிவந்தது. இந்தப் படம் எடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இந்தப் படம் குறித்த செய்திகள் வெளியாகின. படம் வெளியாகும்போது, உலகம் முழுவதும் படம் தொடர்பான எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியிருந்தது. ஐஸ்வர்யா ராய் பிறந்தநாள்: '49 வயது என்றால் நம்புகிறீர்களா?' பிக் பாஸ் வீட்டிலிருந்து பாதியில் வெளியேறிய ஜி.பி.முத்து: மீண்டும் வர வாய்ப்புண்டா? கிண்டலுக்கு உள்ளாகும் ஆதி புருஷ் ட்ரெய்லர்; இந்து அமைப்புகளும் எதிர்ப்பு ஜேம்ஸ் கேமரூனின் ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் இடையில் வழக்கமான இடைவெளியைவிட அதிக இடைவெளி இருப்பது வழக்கம்தான். ஆனால், டைட்டானிக் படத்திற்கும் அதற்கடுத்த படத்திற்கும் இடையில் கிட்டத்தட்ட 12 ஆண்டு இடைவெளி எடுத்துக்கொண்டார். Titanic படம் 1997ல் வெளிவந்தது. இதற்கு அடுத்த படம் 2009ல் வெளிவந்தது. அந்தப் படம் வெளிவந்தபோது, அவர் அவ்வளவு இடைவெளி எடுத்துக்கொண்டதற்கான காரணம் புரிந்தது. அந்தப் படம் அவதார். இயற்கைக்கும் மனித ஆக்கிரமிப்பிற்கும் இடையிலான போராட்டத்தைச் சொல்லும்வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. 2009ஆம் ஆண்டு டிசம்பர் 16லிருந்து 18க்குள் உலகம் முழுவதும் சுமார் 14,600 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது. அவற்றில் 3,670 திரையரங்குகளில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் இந்தப் படம் திரையிடப்பட்டது. 260 திரையரங்குகளில் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் படம் வெளியானது. மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்த அவதார், உலகம் முழுவதும் 2.92 பில்லியன் டாலர்களை வசூலித்தது. பணவீக்கத்தோடு இந்தத் தொகையை ஒப்பிட்டால், உலகில் இதுவரை வெளியான திரைப்படங்களில் Gone With the Wind திரைப்படத்திற்கு அடுத்தபடியாக அதிக வசூலைபெற்ற படமாக அவதார் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம், அவதார் முதல் பாகத்தின் திரைப்படத்தின் ப்ளூ ரே டிவிடி வெளியிடப்பட்டபோது... இந்தப் படம் வெற்றியடைந்த பிறகு, Avatar: The Way of Water, Avatar 3 என மேலும் இரு பாகங்கள் வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது மொத்தமாக நான்கு பாகங்கள் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் பாகம் இந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதியும் மூன்றாம் பாகம் 2024 டிசம்பர் 20ஆம் தேதியும் நான்காம் பாகம் 2026ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதியும் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. Avatar: The Way of Water படத்தைப் பொறுத்தவர 2014ஆம் ஆண்டே வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தண்ணீருக்கடியில் performance Capture தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படம் பிடிப்பது, படப்பிடிப்பிற்குப் பிந்திய பணிகளில் ஏற்பட்ட தாமதம் ஆகியவற்றால், இப்போதுதான் இந்தப் படம் வெளியீட்டிற்குத் தயாராகியிருக்கிறது. சுமார் 250 மில்லியன் டாலர்கள் செலவில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. முதல் படத்தைப் போலவே, ஜாக் சாலியும் நேத்ரியும் இணைந்து தங்களது உலகான பண்டோராவைக் காக்க நடத்தும் போராட்டம்தான் இந்தப் படத்திலும் கதை. ஆனால், பெரும்பாலான காட்சிகள் நீருக்கடியில் நடப்பதுதான் வித்தியாசம். பட மூலாதாரம்,GETTY IMAGES ஜேம்ஸ் கேமரூனின் படங்கள் துவக்கத்திலிருந்தே, இயற்கைக்கும் நவீன மனிதனுக்கும் இடையிலான உறவு, முரண்பாடு ஆகியவற்றைத் தொடர்ந்து சித்தரித்துவந்திருக்கின்றன. அதன் உச்சகட்டமாகத்தான் அவதார் வெளிவந்தது. இப்போது, இந்த இரண்டாவது பாகத்தில் இயற்கையின் ஒரு பகுதியான கடலுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சாம் வொர்திங்டன், ஜோ சல்தானா போன்ற முந்தைய பாகத்தில் நடித்த நடிகர்களோடு, கேட் வின்ஸ்லேட் போன்றவர்களும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். முந்தைய படத்திற்கு இசையமைத்த ஜேம்ஸ் ஹார்னரே இந்தப் படத்திற்கும் இசையமைப்பார் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், அவர் 2015ல் ஒரு விமான விபத்தில் இறந்துவிட்ட நிலையில், சிமோன் ஃப்ராங்க்லன் இதற்கு இசைமைத்திருக்கிறார். 3 மணி நேரம் 10 நிமிடங்களுக்கு இந்தப் படம் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.bbc.com/tamil/global-63497668
  17. மஹேலவின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி By DIGITAL DESK 2 03 NOV, 2022 | 02:38 PM (நெவில் அன்தனி) ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அதிகூடிய மொத்த ஓட்டங்களைக் குவித்தவர் என்ற சாதனையை விராத் கோஹ்லி நிலைநாட்டியுள்ளார். பங்களாதேஷுக்கு எதிராக அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ண குழு 2 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 16ஆவது ஓட்டத்தைப் பூர்த்தி செய்தபோது இந்த சாதனையை விராத் கோஹ்லி நிலைநாட்டினார். இதன் மூலம் இதற்கு முன்னர் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் மஹேல ஜயவர்தனவுக்கு சொந்தமாகவிருந்த 1016 ஓட்டங்கள் என்ற சாதனையை கோஹ்லி முறியடித்தார். மஹேல ஜயவர்தன 2007இலிருந்து 2014வரை விளையாடிய 5 இருபது 20 உலகக் கிண்ண அத்தியாங்களில் 31 இன்னிங்ஸ்களில் 1016 ஓட்டங்களைப் பெற்றார். ஆனால், விராத் கோஹ்லி 2012இலிருந்து 2022வரை 5 இருபது 20 உலகக் கிண்ண அத்தியாயங்களில் 23 இன்னிங்ஸ்களில் 1065 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இந்த வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் 4 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய கோஹ்லி முறையே 82 ஆ.இ., 62 ஆ.இ., 12, 64 ஆ.இ. ஓட்டங்களைப் பெற்று மொத்தமாக 220 ஓட்டங்களைக் குவித்து 220.00 என்ற சராசரியைக் கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/139031
  18. ஆஸி யுவதி கொலை : இந்திய நபரை கைது செய்ய உதவினால் 5 கோடி ரூபா சன்மானம் By DIGITAL DESK 3 03 NOV, 2022 | 04:28 PM அவுஸ்திரேலியாவில் யுவதியொருருவரை கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் தேடப்படும் இந்திய இளைஞர் ஒருவரை கைதுசெய்ய உதவுபவர்களுக்கு 10 லட்சம் அவுஸ்திரேலிய டொலர் (23.22 கோடி இலங்கை ரூபா / 5.21 கோடி இந்திய ரூபா) சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்விந்தர் சிங் எனும் 38 வயதான இளைஞரே இவ்வாறு தேடப்படுகிறார். அவுஸ்திரேலியாவின் குயின்லாந்து மாநிலத்திலலுள்ள கெய்ன்ஸ் நகரில் 2018 ஒக்டோபர் மாதம் டோயாஹ் கோர்டிங்லே எனும்இ 24 வயது யுவதி மர்மமாக கொல்லப்பட்டிருந்தார். இவர் தனது நாயை அழைத்துக்கொண்டு நடைபயிற்சிக்காக வீட்டிலிருந்து சென்றிருந்தார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் வான்கெட்டி கடற்கரையில் அவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கொலை தொடர்பில் ராஜ்விந்தர் சிங் பிரதான சந்தேக நபராக குயின்ஸ்லாந்து மாநில பொலிஸார் கருதுகின்றனர் அவர் இக்கொலை நடந்து 2 நாட்களின் பின் தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளை விட்டுவிட்டுஇ சிட்னி வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என பொலிஸார் கருதுகின்றனர். அவரின் கைது தொடர்பில் இந்திய அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு 3 பொலிஸ் அதிகாரிகள் இந்தியாவுக்கு சென்றிருந்தனர். எனினும் ராஜ்விந்தர் சிங் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், ராஜ்விந்தர் சிங்கை கைது செய்ய உதவுபவர்களுக்கு 10 லட்சம் அவுஸ்திரேலிய டொலர்களை சன்மானம் வழங்கப்படும் என குயின்ஸ்லாந்து பொலிஸார் அறிவித்துள்ளனர். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பொலிஸாரால் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட மிக அதிகமான சன்மானத் தொகை இதுவாகும். அவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலு;ளள தனது சொந்த ஊரான அமிர்சரஸ் நகருக்கு சென்றுவிட்டார் என குயின்ஸ்லாந்து பொலிஸார் நம்புகின்றனர். எனினும்இ அவர் இக்கொலையை செய்யவில்லை என ராஜ்விந்தர் சிங்கின் குடும்பத்தினர் கூறுகின்றனர். இக்கொலை நடந்து 2 நாட்களின் பின் அவர் இந்தியாவுக்கு திரும்பியமை தற்செயலான விடயம் என அவர்கள் கூறுகின்றனர். ராஜ்விந்தர் கண்டுபிடிக்கப்பட்டால் அவரை நாடு கடத்துமாறு அவுஸ்திரேலியா கடந்த வருடம் கோரிக்கை விடுத்திருந்தது. அக்கோரிக்கையை கடந்த மாதம் இந்திய அரசாங்கம் அங்கீகரித்திருந்தது. 10 லட்சம் அவுஸ்திரேலிய டொலர் என்பது இந்தியாவில் பெரும் தொகை ஆகையால்இ இந்த சன்மான அறிவிப்பு பலன்கிடைக்கும் என நம்புவதாக டோயாவின் குடும்ப நண்பரான வெய்ன் ட்ரம்பிள் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/139046
  19. உங்கள் அன்புக்கு நன்றி. கடைசிக் தொகுதிக் கேள்விகளுக்கான பதில்களால் பின்னடைவு வரும்.👎 எதுக்கும் பொறுப்பெடுக்க தயாராக இருங்கள்.✌️
  20. 'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' என்ற மகுடத்தில் நிதி சேகரிப்புத்தளத்தை ஆரம்பித்தது ஐ.நா அபிவிருத்திச்செயற்திட்டம் By T. SARANYA 03 NOV, 2022 | 04:43 PM (நா.தனுஜா) இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் 'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' என்ற மகுடத்தில் நிதி சேகரிப்புத்தளமொன்றை ஆரம்பித்திருக்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச்செயற்திட்டம், அத்தளத்திற்குத் தம்மால் இயன்ற நிதியை வழங்குவதன் ஊடாக இலங்கை மக்களுக்கு உதவமுன்வருமாறு உலக மக்களிடம் கோரிக்கைவிடுத்திருக்கின்றது. இதுகுறித்துத் தெளிவுபடுத்தி ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச்செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இந்து சமுத்திரத்தின் முத்தாக அறியப்படும் இலங்கை இப்போது மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றது. கடந்த 1948 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் இலங்கை முகங்கொடுத்திருக்கும் மிகப்பாரிய நெருக்கடி இதுவாகும். இதன்விளைவாக பல மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், மொத்த சனத்தொகையில் சுமார் 5.7 மில்லியன் மக்கள் உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்ற துரதிஷ்டவசமான நிலையில் இருக்கின்றனர். அதுமாத்திரமன்றி சுமார் 6.3 மில்லியன் மக்கள் அவர்களின் அடுத்தவேளை உணவு எங்கிருந்து கிடைக்கப்பெறும் என்று தெரியாத நிலையில் உள்ளனர். எனவே இந்நிலைவரம் தொடர்ச்சியாக மோசமடைந்துவரும் பின்னணியில், நாம் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கான ஏனைய முயற்சிகளில் ஒன்றாக நிதி சேகரிப்பு பிரசாரமொன்றை ஆரம்பித்திருக்கின்றோம். இதனூடாக தற்போது இலங்கை மக்கள் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியின் தீவிரத்தன்மையைக் குறைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். உணவு மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டும் இப்பொருளாதார நெருக்கடியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட இரு துறைகளாகக் காணப்படுகின்றன. நிரம்பல் சங்கிலி சீர்குலைந்திருப்பதுடன் குறிப்பிட்ட சில அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற மருந்துப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அதன்விளைவாக நாடளாவிய ரீதியில் வழமையான சில சத்திரசிகிச்சைகளைத் தாமதப்படுத்தவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இவை மக்களை வெகுவாகப் பாதித்திருக்கும் பின்னணியில், இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு சர்வதேச உதவிகள் அவசியமாகின்றன. அதன்படி இலங்கையர்களுக்கு உதவுவதற்கு எமக்கு உங்களுடைய உதவி தேவைப்படுகின்றது. இலங்கையில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பின்தங்கிய தரப்பினருக்கு அவசியமான உதவிகளை வழங்குவதில் நீங்களும் பங்களிப்புச்செய்யமுடியும். அதன்படி 'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' என்ற மகுடத்தில் எம்மால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிதி சேகரிப்புத் தளத்திற்கு உங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கலாம். வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு அவசியமான உதவிகளை உலகின் பலதரப்பட்ட நாடுகளைச்சேர்ந்த மக்களிடமிருந்து திரட்டிக்கொள்ளும் நோக்கிலேயே இந்நிதி சேகரிப்புத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனூடாகத் திரட்டப்படும் நிதியானது இலங்கையில் தட்டுப்பாடு நிலவும் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கும், விவசாயிகளுக்கு அவசியமான விதைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும், குடும்பங்களிடையே வீட்டுத்தோட்ட செயன்முறையை ஊக்குவிப்பதற்கு அவசியமான உபகரணங்களை வழங்குவதற்கும் பயன்படுத்தப்படும் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/139049
  21. இவ்வளவு மோசமான சட்டமா? இதைப்பார்த்தோ என்னவவோ பக்கத்து நாட்டில குற்றஞ்சாட்டப்பட்டவர் தான் நிரபராதி என்று நிரூபித்து விடுதலை அடையலாம் எனும் கொடும் சட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.