Jump to content

P.S.பிரபா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1756
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Everything posted by P.S.பிரபா

  1. உண்மைதான் தமிழ் சிறி அண்ணா.. நன்றி. நன்றி அங்கிள். பயணக் கட்டுரை ஒன்று pendingல் உள்ளது.. Aboriginals சம்பந்தப்பட்டமையால் சரியானதை எழுதவேண்டும் அத்துடன் அப்பாவின் உடல்நலமும் பாதிக்கப்பட்டுள்ளதால் எழுதமுடியாமல் தள்ளிப் போகிறது..பார்ப்போம்..
  2. தையல் கதை/வகை பலவிதமாக இருக்கும் போல உள்ளது..கதைக்கு நன்றி சுவி அண்ணா!!
  3. நன்றி அண்ணா!! அப்படித்தான் அந்த சுவரொட்டியில் கூறியுள்ளது.. எனக்குத் தெரிந்த ஒருவர் கூறினார் இப்ப மாவீரர் தினத்திற்கு தென்னங்கன்று கொடுத்தவுடன் கடமை முடிந்துவிட்டது என நினைக்குமளவிற்கு மக்களின் மனநிலை மாறுகிறது என. நான் இன்னமும் ஒன்றிரண்டு படங்களை இணைக்க நினைத்திருப்பதால்தான் படங்கள் கூறும் கதைகள் என தலைப்பிட்டேன். உண்மைதான்.. பார்த்தவுடன் இப்படி செய்துவிட்டார்களே என கோபமும் இயலாமையும் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. நன்றி .. கடைசியில அவருக்கு ஒன்றுமே மிச்சமாக இல்லை. ஒரு இடிந்த சுவரைத் தவிர!!! நன்றி அண்ணா!!
  4. எனக்கும் ஒரு ஆசை எப்படியாவது இந்த முறை யாழ் அகவை 25ற்கு ஏதாவது எழுதவேண்டும் என்று.. ஆனா எனக்கு கதை கவிதை எழுத தெரியாது அவற்றை வாசிக்க மட்டுமே விருப்பம்.. அரசியல் பற்றி எழுதுமளவிற்கு அதில் விருப்பம் இல்லை.. தெரிந்ததெல்லாம் இந்த மாதிரி படங்கள் எடுப்பதுதான்.. நான் இலங்கைக்குக் (அதிலும் வடக்கு கிழக்குப் பகுதிகள் மாத்திரம் தான்) சென்ற சமயங்களில் என் கண்ணில் பட்டு கருத்தை கவர்ந்தவற்றை படம் எடுத்து சேர்த்து வைப்பது ஒரு பொழுதுபோக்கு!!!! அப்படி எடுத்தவைகளில் சிலதை இங்கே பதிகிறேன்..நீங்கள் அங்கே நடந்த சம்பவங்களை நான்கு ஐந்து வரிகளில் எழுதுங்கள்.. ஏனெனில் மட்டுறுப்பினருக்கு நிறைய கஷ்டம் கொடுக்கக்கூடாது. உங்களுக்கு தெரிந்தது மற்றவர்களுக்கு சில சமயம் தெரிந்திருக்காது.. தனிப்பட்ட நினைவுகள் இருந்து எழுதினால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை😊 முதலில் இரு படங்களை இன்று இணைக்கிறேன்.. இது ஆலடிச் சந்தி - வல்வெட்டித்துறை.. முதல் படத்தைப் பார்த்து உங்களது மனதில் தோன்றுவதை இங்கே எழுதுங்கள்.. படங்களை நான் இணைக்கிறேன்.. அவற்றின் கருத்தை/எண்ணத்தை நீங்கள் கூறுங்கள். நன்றி..
  5. போராடி களைப்பது என்றாலும் கூட தன்னம்பிக்கையை இழப்பதும் வெளியேறினால் என்ன மாதிரியான நிலை வரும் என்ற பயமும் இந்த வன்முறையான உறவில் இருக்க தூண்டும் என நினைக்கிறேன்
  6. Okay..என்னவோ சொல்ல வாறீங்க..விளங்கின மாதிரியும் விளங்காத மாதிரியும் .. பார்ப்போம்..
  7. நாங்கள் எங்கள் உள்மனதில் எப்படியான எண்ணங்களை வைத்திருக்கிறோம், எதனை நம்புகிறோம் என்பதை வைத்துத்தான் எங்களது பார்வையும் நேரா அல்லது கோணலா எனத் தெரியும்.. உளவியல், உளநல மருத்துவம், அவை தொடர்பான ஆலோசனைகள் இவற்றிற்கான தேவை அதிகரித்துள்ளது. இதற்குப் பல காரணங்கள், ஆனாலும் எங்களது சமூகத்தில் அதிலும் வெளிநாடுகளிலும் கூட அந்த துறைகளில் படித்து தேர்ச்சி பெறுவோர் குறைவு எங்களது சமூகத்தில் இவை இந்தமாதிரியான துறைகளுக்கு மதிப்பும் இல்லை. ஏனெனில் எங்களது பார்வை இந்த விடயத்தில் கோணலாக இருப்பதுதான். பின் ஒன்று நடந்தவுடன் ஜயோ ஒருத்தருக்கும் இப்படி என தெரியாதே என கவலைப்பட்டு என்ன பிரயோசனம்? கதைப்பதற்கோ, உதவி கேட்பதற்கோ அல்லது உதவுவதற்கோ வழிவிட்டிருந்தால் தானே!!. நன்றி அண்ணா இந்த விடயத்தைப் பற்றி எழுதியது..
  8. ஊருக்கு விடுமுறையில் போவதற்கும் அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது ரதி!! விடுமுறையில் போகும் பொழுது நாங்கள் தேவையில்லாதவற்றைப் பேசியோ ஒப்பிட்டோ கதைப்பதில்லை. தேவையில்லாமல் அறிவுரை கூறவும் மாட்டோம். இடம், உறவுகளின் தன்மைக்கேற்பவே, அங்கே உள்ளவர்களின் நிலையை அறிந்து அதற்கேற்பவே நடப்போம். ஆனால் நிரந்தரமாக அங்கே வசிக்க நினைத்தால், காலப்போக்கில் சட்டங்கள், நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் என பலவற்றை ஒப்பிடத் தொடங்குவோம். நல்ல விடயங்கள் என சிலவற்றை அங்கே நடைமுறைப்படுத்த நினைப்போம். விதிமுறைகள் பிழையாகத் தெரியும். இதனால் தேவையில்லாத பிரச்சனைகளை எதிர் நோக்குவோம். மற்றப்படி அங்கே உள்ளவர்களுக்கு பிரச்சனைகளைத் கொடுக்காமல் நான் ஒரு foreign return என்று பந்தா காட்டாமல், காசு இருக்குது அதனால் என்னவும் செய்யலாம் என இல்லாமல் அங்கே உள்ளவர்களைப் போல(பெரும்பாலான) சாதாரன வாழ்க்கையை நடத்த இயலும் என்றால் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அங்கே அப்படியில்லலை(விதி விலக்குகளும் இருக்கலாம்). அநாவசியமான ஆடம்பர வீடுகளும், கொண்டாட்டங்களும் இவற்றையெல்லாம் பார்க்கும் இன்னொரு பிரிவினர் அந்த நிலைக்கு தாங்களும் வரவேண்டும் என்பதற்காக, பணம் உழைக்க வேண்டும் என்பதற்காக குறுக்கான வழியில் போய் சீரழிகிறார்கள். என்னைப்பொறுத்தவரை முன்னரைவிட வர்க்க வேறுபாடுகள் அதிகரித்தே உள்ளது. இது எப்படி உருவானது? நான் கண்ட கேட்ட விடயங்களை வைத்து நிறையக் கூறலாம் ஆனால் அங்கே போய் இருப்பது என்பது அவரவர் தனிப்பட்ட விடயம் அதுபோல உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் முடிவுகளுக்குள்ளும் இந்த விடயம் வரக்கூடாது. ஆகையால்தான் புலம்பெயர்ந்தோர் அங்கே போகும் பொழுது யோசித்து நடக்கவேண்டும் என நினைப்பது. நீங்கள் என்னைப் பற்றி தெரியாமல் நீங்களாகவே ஒரு முடிவிற்கு வந்திருக்கிறீர்கள். இது தேவையற்ற ஒன்று. நன்றி.. உண்மை
  9. செய்ய வேண்டும் ஆனால் உண்மையானவர்களுக்கு மட்டுமே.. அங்கே உள்ளவர்கள் சீரழிவதற்கு நாங்கள் துணை போகக்கூடாது அதுதான் இன்றைய நிலையில் முக்கியம்.. பி.கு:. நிறையப் பேர் பிரபா என்றவுடன் ஆண் என முடிவிற்கு வந்துவிடுகிறார்கள் ஏன் என்பது தெரியவில்லை. பிரபா என்ற பெயர் தனியே ஆண்களுக்கு மட்டுமானதல்ல. ஆண் பெண் இருபாலாருக்கும் பொருத்தமான பெயர்களில் இந்த பிரபாவும் அடங்கும்..நீங்கள் என்னை சகோதரி என கூறுங்கள் அல்லது பிரபா என கூறுங்கள்.. மகிழ்ச்சியாக கருத்தாட முடியும்.😊
  10. பகிடி பகிடியாக தொடங்கி ஒரு சீரியசான விடயத்தையும் எழுதியுள்ளீர்கள் சிறி அண்ணா.. நல்ல விடயம்.. உங்களது ஜேர்மன் ஆள் கூறியது என்னளவில் சரியே இன்றைய நிலையில் அங்கே போய் ஒரு பொது விடயங்களிலும் மூக்கை நீட்டாமல் இருந்தால் கொஞ்சம் மரியாதையாக இருக்கலாம்..இங்கே சட்டம் சுதந்திரம் என்பவற்றை அனுபவித்து விட்டு அங்கே போய் இது பிழை..அது சரி என்றால் அங்கே இருப்பவர்களுக்கும் எங்களுக்கும் வீண் கரைச்சலைத்தான் உருவாக்குவோம்.. எனது அனுபவத்தில் பணம் மட்டும் எதையும் தீர்மானிக்கும் கருவியில்லை. மருந்து இல்லை என்றால் அவ்வளவுதான். சில சமயங்களில் பொருட்களும் இல்லை. இந்த நிலையை மாற்ற முடியாது ஏனெனில் நாடு இவ்வளவு கீழ் நோக்கிப் போயும் கூட தமிழர்களுக்கு நல்லது நடக்க கூடாது என நினைக்கும் பெரும்பான்மையே அதிகம். அதே போல உண்மையான அரசியல் தலைவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற அக்கறையும் அங்கே உள்ள எங்களது மக்களுக்கு இல்லை(என்னைப் பொறுத்த வரை). எங்கள் எல்லோருக்கும் நாங்கள் பிறந்த நாடு என்ற பாசம் என்பது இருந்தாலும் கூட நடைமுறையில் சாத்தியமானதைத்தான் செய்யலாம்.. இது அங்கே உள்ளவர்களுக்கும் நன்கு விளங்கும். ஆனால் எங்கட புலம்பெயர்ந்தவர்கள் அங்கே போய் செய்யும் வேலைகளால் என்ன மாதிரியான மறைமுக விளைவுகளை ஏற்படுத்துகிறார்கள்/ஏற்படுத்தியுள்ளார்கள் என்பதை அங்கே போகும் சமயங்களில் உணரமுடிகிறது..
  11. Dr ஜெயமோகனின் நெறியாள்கையில் ஒரு முழு நீள தமிழ் திரைப்படமே பொய் மான்.. Dr ஜெயமோகனின் குறுந் திரைப்படங்கள் இங்கே உள்ள தமிழர்கள் மத்தியில் தனித்து இடம் பிடித்த ஒன்று.. இன்றைய தமிழ் சமூகத்தில் நடைபெறும் விடயங்ககளை வெளிக்கொணரும் ஒருவர். அவரது தயாரிப்பில் உருவான ஒரு படைப்பு.. அனேகமாக ஜரோப்பாவில் கூட ஒரு நாட்டில் திரையிடப்படலாம் என நம்புகிறேன். இங்கே உள்ள இளைய சமுதாயத்திற்கு இன்னொரு துறையில் முன்னேற இவை போன்றவை வழிவகுக்கும என நினைக்கிறேன். https://m.youtube.com/watch?v=G9T4pFNwWYw https://m.youtube.com/watch?v=xz2W1wMCtzg
  12. நான் அவதானித்த அளவில் சுயதொழில் என்றால் கடை வைத்திருப்பதை தவிர வேறு அவர்களுக்குத் தெரியவில்லை ஆனால் ஒரு ஊருக்கு எத்தனை கடைகள் வேண்டும்? வேறு விதமாக யோசிக்க அவர்களால் முடியாது உள்ளது என்பது கவலை. அந்தந்த இடங்களுக்கு ஏற்றவாறு தொழில்களை உருவாக்க ஏனோ முடியவில்லை. மேலும் படிப்பிற்கு உதவ கேட்கும் பொழுது அவர்களுக்கும் பொறுப்பு வருவது போல உதவுவதில்லை.. தனியே பணத்தை மட்டும் அனுப்பிக்கொண்டே இருந்தால் அவர்களுக்கும் அதனை திருப்பித் தரவேண்டும் என்றோ தங்களைப் போல உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்றோ சிந்தனை ஏற்படாது.. இந்த YouTubeக்காரர் செய்வது நல்ல விடயம் என்றாலும் கூட கஷ்டப்படுபவர்களை முக்கியமாக சிறுவர்களை அப்படி கதையுங்கோ இப்படி சொல்லுங்கோ என கேட்பது மறைமுகமாக இந்த மாதிரி மற்றவர்களிடம் இரந்து வாழ்வதையே ஊக்குவிக்கிறது.. இந்த மாதிரி செய்வதை ஊக்குவிப்பது சரியாகப்படவில்லை.. புலம் பெயர்ந்தவர்களில் முதலாவது generationற்கு வயது போயிருக்கும் அவர்கள் தங்களது உறவுகள் என ஒன்றையும் யோசிக்காமல் உதவினார்கள். இரண்டாவது generation அப்படி செய்யுமா? இல்லை. தன்னிறைவாக தன் முயற்சியில் வாழ உதவாமல் இன்னொருவரில் தங்கி இருக்கவெல்லா பழகிவிட்டிருக்கிறோம்.. இப்படி புலம்பெயர்ந்தோர் உதவும் பொழுது சிலவற்றை யோசிக்காமல் உதவி செய்துவிட்டு பிறகு அவர்களை குறை சொல்வதில் ஒரு பயனும் இல்லை.. உதவ வேண்டும் உண்மையிலேயே தேவைப்படுவோரை இனங்கண்டு உதவ வேண்டும்.. அவ்வளவுதான் கூறலாம். யாரையும் குறை கூற இப்படி எழுதவில்லை. என் மனதில் தோன்றியதையும் பார்த்தவற்றையும் வைத்தே என் கருத்துகள் உள்ளன்.
  13. மரத்தை வெட்டுவதை விட இப்படி போட்டுள்ளது பரவாயில்லை என்றே நினைக்கிறேன்
  14. எனக்கென்னவோ உண்மையில் உதவி தேவைப்படுவோரை( அது முன்னாள் போராளிகளோ, சாதாரண மக்களோ) உதவிகள் சரியான படி போய் சேர்வதில்லை என்ற எண்ணம் அங்கே நின்ற சமயங்களில் ஏற்ப்பட்டது.. பல்வேறு காரணங்களால் அவர்களும் முன் வந்து கேட்பதில்லை. ஏதோ தங்களால் இயன்றவகையில் வேலைகளை செய்து வாழ்க்கையை கொண்டுதான் செல்கிறார்கள்.. நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் குறை கூறினாலும் கூட உண்மையில் சரியான வழிகாட்டலோ தலைமையோ அங்கே இல்லை..மக்களும் சரியான தலைமைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அக்கறையும் இல்லை. இதனால் இவர்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அல்லது முன்னாள் போராளிகளுக்கான உதவிகளோ நீண்டகால திட்டங்களோ எதுவுமே எதிர்பார்க்கும் அளவிற்கு வெற்றி பெறாது என்றே தோன்றுகிறது..
  15. தாளையடி அங்கிள்.. அந்த நீலக்கடலும் அலைகளும்.. தென்னை மரங்களும்.. மனதிற்கு சந்தோஷத்தை தரும். வேறு வசதிகள் இல்லை.. ஆனாலும் இந்த இடம், அதன் அமைதி என்னை மீண்டும் மீண்டும் அங்கே போக வைக்கிறது.
  16. பொல்லாத மனிதர்களிடமிருந்து ஒதுங்கி தனித்திருக்கும் மரமும் மாதாவும் தான் ஒருவருக்கொருவர் துணை… யாழ் மாவட்டம் எத்தனை அழகிய கடற்கரைகளை உடையது என்பதற்கு இந்த இடமும் ஒரு உதாரணம்.. எத்தனை அழகான அமைதியான இடம்..
  17. அவர்கள் அப்படி செய்தால் இந்தியா சார்பானவர்கள் துரோகிகள் என்றுதான் கூறுவார்கள். ஏனெனில் இன்றைக்கும் இந்தியாவை விட்டால் எங்களுக்கு தீர்வு தர ஒருவருமில்லை, தமிழ்நாட்டுடனான உறவு etc etc என கனபேர் அங்கே கூட்டங்களிலும் பொதுவாகவும் கதைக்கிறார்கள். சீனா கொடுத்த அரிசியையே சந்தேகத்துடன்தான் பார்க்கிறார்கள். ஆகையால் கஜன்களின் நிலை சீனாவுடன் இணைந்தால் இன்னமும் பின்னோக்கித்தான் போகும் என நினைக்கிறேன்.. அங்கே வாழும் மக்களின் எண்ணங்களில் மாற்றங்கள் வருவதையும் இந்தக் கட்சிகளின் மீதான நம்பிக்கையும் குறைகிறது.. அதைத்தான் அங்கே நின்ற காலப்பகுதியில் உணர முடிகிறது.
  18. “மான் கண்ட சொர்க்கங்கள்” இந்தப் பாடலைக் கேட்க உங்களுக்குப் பொறுமை இருக்கவேண்டும்.. கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் ஒலிக்கும் இந்தப் பாடலை SPB பாடியிருக்கும் விதம் அருமை.. பாடல்வரிகள் கண்ணதாசன் என நினைக்கிறேன்..
  19. 4/1/2021ல் தான் அவுஸ்ரேலிய தேசிய கீதத்தில் இருந்த “ we are young and free“ என்ற வரியை “ we are one and free” என மாற்றினார்கள். ஏனெனில் அவுஸ்ரேலியா பூர்வீக குடிகளைக் கொண்ட பழைய தேசம் என்பதால்.. அதுபோல இந்த தினமும் ஒரு நாள் மாறும்☺️
  20. கஜன்களின் கட்சி கூட்டங்களுக்கு போன ஒருவர் கூறியதும் நீங்கள் கூறியதும் கொஞ்சம் பொருந்தி வருகிறது போல உள்ளது. இந்த 13ன் மேல் உள்ள வழக்குகளைப் பற்றி தெரிந்து கொண்டும் தமிழர்களை மற்ற கட்சிகள் ஏமாற்றுகின்றன எனக் கூறினார்கள். கஜன்கள் தனித்து நிற்பதற்கும் இதுவும் ஒரு கராணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.. இவ்வளவு நடந்த பின்பும் ஒரு கட்சியும் மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை.. அவ்வளவுதான்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.