Everything posted by putthan
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
அப்பு வெற்றி பெறுபவர்களுக்கு அனுராவுடன் ஒரு பொழுதை களிக்க /படம் எடுக்க ஒழுங்கு செய்வீர்களா பிளிஸ்....
-
எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் காலமானார்! குளியலறையில் வழுக்கி விழுந்ததால் தலையில் பலத்த காயம்!
ஆழ்ந்த இரங்கல்கள்🙏
-
32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்கள் சிக்கின
அது தானே ....ஐந்து வருடங்களின் பின்பு வீட்டுக்கு ஒரு கார் வழங்கப்போகிறார் நம்ம தோழர்
-
அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
தமிழன் அநியாயத்துக்கு நல்லவன்....சில சமயம் அணுராவுக்கு செம்பு தூக்க வேணும் என்று அடிபட்டு போய் சிங்கள வேட்பாளர்களை வடபகுதியில் நிறுத்துங்கோ ..தேசிய ஒருமைபாட்டுக்கு நல்லது என சொன்னாலும் சொல்லுவினம் அடுத்த தேர்தலில் நடந்தாலும் நடக்கலாம் ... நம்ம டக்கிளஸ் ஐயா பிக்குமார் இருவரை தனதுகட்சி வேட்பாளராக கொழும்பில் நிறுத்தி உள்ளார் என நினைக்கிறேன் ....அதுபோல நல்லிணக்கம் என்று வரும்பொழுது ... சிங்கள வேட்பாளர் தமிழர் பகுதியில் அதிக வாக்கு பெற்று வெற்றியடைந்தால் அது நல்லிணக்கத்தின் உச்சம்,,கண்டியளோ அப்படி சொல்லப்படாது....தமிழ் தேசிய்த்தை கூறு போட்டு வித்து ....தமிழர் /சிங்கள பிரச்சனைக்கு டீர்வு கிடைக்க வழி விட்டவையள் அல்லோ
-
யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
அரசியல்வாதிகளின் முகம் மாறியுள்ளது,கட்சியின் பெயர் மாறியுள்ளது ஆனால் பொலிசார் செய்ய்யும் அட்டுழியங்கள் அன்று தொடக்கம் இன்று வரை மாறவில்லை ... இது அரசியல்வாதிகள் செய்ய வேண்டிய/அறிக்கை விட வேண்டிய விடயம் அல்ல ...முதலில் இது மாற வேண்டும் ...வடபகுதி உயர்பொலிசஸ் அதிகாரி செய்யவேண்டிய விடயம் தேர்தல் காலங்களில் இப்படியான பொலிஸ் தில்லுமுல்லு சில ஆட்சியாளர்கள் செய்வது வழமை இதை ஊதிபெருப்பித்து வன்முறைகளை வளர்ப்பார்கள் ...இது போன்ற பல வன்முறைகளை யாழ் மண் சந்தித்துள்ளது ...
-
யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
இது அரசியல்வாதிகள செய்ய வேண்டிய செயல் அல்ல அவர் அனுராவின் பக்கம் நிற்கின்றார் என்பதால் அணுராவுக்கு சொல்லி அவர் உடனடியாக பொலிசுக்கு சொல்லி நடவடிக்கை எடுக்க வேண்டிய் அவசியம் இல்லை... பொலிஸ் அதிகாரிகள் செய்ய வேண்டிய விடயம்...வடபகுதி பொலிஸ் அதிகாரி செய்ய வேண்டிய கடமை....ஆட்சியில் இருப்பவர்கள் இப்படியான செயல்களை செய்ய வேணும் என நினைப்பது தவறு... அரசாதிகாரிகள் ,பொலிசார் போன்றவர்களும் மாற வேண்டும் ...இல்லை என்றால் நல்லிணக்கம் சாத்தியமில்லை ....இனவாதம் அரசியல்வாதிகள் பேசுவார்கள் ..ஆனால் நடைமுறைப்படுத்தி இனவாதத்தை வளர்த்ததில் சிறிலங்கா பொலிசாருக்கு முக்கிய பங்கு உண்டு...
-
அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
எவ்வளவோ கண்டிட்டோம் இதையும் பார்ப்பமே..
-
யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கிய இராணுவ சிப்பாய்க்கு விடுதலை கொடுத்த உத்தமர்கள் .. அனுரா ஆட்சிக்கு அபகீர்த்தி ஏற்படுத்த புலம்பெயர்ஸ் தேசிய பழம்கள் சுன்னாக பொலிசாருக்கு பணம் கொடுத்து பொலிசாரை உசுப்பேத்தி யிருப்பினமோ
-
அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
தப்பு ...என்.பி.பி யில் வடக்கு கிழக்கு பகுதியில் தமிழ் வேட்பாளர்கள் தான் நிற்க வேணும் அவர்கள் மண்ணின் மைந்தர்கள் ...அவர்களுக்கும் சிங்கள இனவாத செயல்களினால் ஏதோ ஒரு வகையில் பாதிக்க பட்டவர்கள் தான் ... வடபகுதியில் சிங்கள வேட்பாளர்களை நிறுத்தி அவர்களை தமிழர் பிரதிநிதியாக தமிழ் மக்கள் அனுப்ப மாட்டார்கள் என நம்புவோம்...சிறிலங்கா தேசிய கட்சியில் இணைந்து தமிழருக்கு நிவாரண அரசியல் செய்யாமல் தமிழரின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை கொடுக்க வேண்டும் ஐலன்ட் கூறியது போல... அனுரா நிரந்தர தீர்வை கொடுத்தால் இந்தியா மீண்டும் தமிழர் பிரச்சனையை வைத்து சிறிலங்காவை ஆட்டிப்படைக்கும் நிலைக்கு செல்ல முடியாது ...
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
அப்பு இப்ப சரியே...நீங்கள் அரசியலில் பி.ஹெச்.டி என்ற காரணத்தால் எங்களுக்கு இப்படி கஸ்டமான கேள்விகளை கேட்க கூடாது கண்டியளோ😅
-
32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்கள் சிக்கின
ஐயோ அப்படி செப்ப வேண்டாம் ..மத நல்லிணக்கத்துக்கு விரோதமான் செயல்
-
பொய் கூறும் டக்ளஸ்! சுமந்திரனுக்கும் பதவி இல்லை: அநுர தரப்பு உறுதி
இவரின் கூற்றுப்படி டக்கிளஸ் ,சுமத்திரன் எல்லாம் நாட்டை அழிவு பாதைக்கு இட்டு சென்றவர்கள்... அனே புத்த தெய்யோ இன்னவா
-
மக்கள் நிராகரித்தால் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வரமாட்டேன்; சுமந்திரன் திட்டவட்டம்
ஐயோ நீங்கள் வர்வில்லை என்றால் யாரப்பா சட்ட பாடம் எடுக்கிறது சிறிலங்கா தேசியவாதிகளுக்கு ...அனுராவே உங்களை நம்பித்தான் இருக்கின்றார்
-
சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்
வாத்தியார் நல்ல சோப் போட்டு குளித்துவிட்டு உங்கள் தமிழ்தேசிய பணியை தொடரவும்
-
32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்கள் சிக்கின
தேசிய நல்லிணக்கம் கண்டியளோ தமிழன் கைது என்றால் தலைப்பு செய்தி அதுதான்...அதுவும் யாழ்ப்பாணத்தில் நடந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி செய்தியாண்டிகளுக்கு... யாழில் போலிவாக்கு அட்டைகளுடன் இரு தமிழர்கள் கைது ...இப்படி எழுதியிருப்பார்கள் ....பின்குறிப்பு எழுதுவார்கள் இவர்கள் .விடுதலிப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்...
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)ஆம் 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)ஆம் 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) இல்லை 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)ஆம் 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)ஆம் 23)சிவனேசதுரை சந்திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி) இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)தமிழ் தேசிய கட்சிகள் (தமிழரசு,) 28) வன்னிதமிழ் தேசிய கட்சிகள் (தமிழரசு,) 29) மட்டக்களப்பு தமிழ் தேசிய கட்சிகள் (தமிழரசு,) 30)திருமலைதமிழ் தேசிய கட்சிகள் (தமிழரசு,) 31)அம்பாறை NPP 32)நுவரெலியாSajith party 33)அம்பாந்தோட்டை NPP 34)கொழும்பு Sajith's party 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)1 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)1 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்)மணிவண்ணன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் j(ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 39) உடுப்பிட்டி( தமிழ் மக்கள் கூட்டணி) 40) ஊர்காவற்றுறை( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) 41) கிளிநொச்சி(தமிழரசுக் கட்சி, 42) மன்னர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 43) முல்லைத்தீவு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 44) வவுனியா ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 45) மட்டக்களப்பு(தமிழரசுக் கட்சி, 46) பட்டிருப்பு (தமிழரசுக் கட்சி, 47) திருகோணமலை(தமிழரசுக் கட்சி, 48) அம்பாறை(தமிழரசுக் கட்சி, 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)NPP 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)2 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி)2 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி2 54)தமிழரசு கட்சி5 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி)1 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி )10 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)80 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி)114 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி)10 போட்டி விதிகள் 1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார் யாழ்ப்பாண தொகுதி,நல்லூர் தொகுதி இப்பொழுது இல்லையா? முன்னாள் பெண்போராளி ஒருவர் சில சம்யம் தெரிவு செய்யப்பட்டால் (ஐக்கிய தேசிய கூட்டமைப்பு) என்க்கு ஒரு புள்ளி தரும்படி கந்தப்புவை தாழமையாக கேட்டுக்கொள்கிறேன்
-
தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும்- இரா.சாணக்கியன்
இவையள் தமிழ் தேசியத்தை ஏலம்விடுவினம்....ஒரு ப்க்கம் ...மற்ற பக்கம் சிங்களவனோட பேரம் பேச வேணும் எண்டு கத்தல்
-
கொழும்பில் காற்றின் தரம் குறைந்து இருள் சூழ்கிறது
உண்மை....புலம்பெய்ர்ந்த சகல இனத்தவர்களும் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் ,,மிகவும் குறைந்த சதவீததினரே இப்படியான வேலைகளை செய்கின்றனர்....
-
நெதர்லாந்தில் இஸ்ரேலிய ரசிகர்கள் மீதான தாக்குதல்; மீட்பு பணிக்காக இரு விமானங்களை அனுப்ப உத்தரவு!
விளையாட்டை விளையாட்டாக பாருங்கோ ...இனமத பேதமின்றி ரசியுங்கோ...இப்படிக்கு புலம்பெயர்ஸ் இதற்கு முக்கிய காரணம் ..புலம்பெயர் இஸ்ரெல் வால்களும் ,பலஸ்தீன வால்களும்..... இந்த வால்கள் இப்படி மோதுவதால் பலஸ்தீனர்களை இஸ்ரேல் தொடர்ந்து அழிக்க போகின்றனர்
-
கொழும்பில் காற்றின் தரம் குறைந்து இருள் சூழ்கிறது
பணம் தான் முக்கியம் கெளரவம் முக்கியமில்லை ...இடதுசாரி அபிமானியா கியுபா போ...வலதுசாரி அபிமானியா தாய்லாந்து போ....இதுதான் உலகம் ..பணம் பணம் ....
-
கிழக்கை காப்பாற்ற வேண்டுமாயின் வடக்கு மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும் - த. சுரேஸ்
இந்த விடயத்தில் தனியாக புலிவால்களை மட்டும் குற்றம் சாட்ட முடியாது என்பது என் நிலைப்பாடு ...70 வருடங்களுக்கு முதல் திட்டமிட்ட வகையில் அரச அதிகாரிகள் ஊடாக வடக்கு கிழக்கு நிலங்களை அபகரிக்கின்றனர். இது சகலரும் அறிந்த விடயம் ...இஸ்ரேல் ஆயுதபலத்துடன் பகிரங்கமாக நிலங்களை அபகரிக்கின்றனர் ...சிங்கள அரசுகள் அரச அதிகாரிகள் ஊடாக அபகரிக்கின்றனர்...
-
மக்களுக்கு அரசியலில் ஈடுபாடு குறைவடைந்து விட்டது – பெப்ரல்
இந்த அமைப்பு இன்னும் தற்பொழுது உள்ள (கரண்ட் ரென்ட்) நிலைமைகளை அறிந்து கொள்ள வில்லை என நினைக்கிறேன் '''' எங்கன்ட ஆட்களும் எலன் மாஸ்க் உடன் தொடர்பில் இருக்கினம் ...யூ ரியூப்பில் தான் நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம் நாலு மைக் இருந்தால் போதும் அத்துடன் சந்தையில் நாலு சனத்திட்ட பேட்டி கண்டு அதை போட்டா காணும் என்ற நிலையில் இருக்கிறோம்... அந்த காலத்திலயே வேலியில் நின்று விடுப்பு கேட்டு வாக்கு போடுற சனம் .....இப்ப குசினிக்குள்ள விடுப்பு வருகிறது சும்மாவா இருப்பினம் .... இனி வரும் காலங்களில் வாக்குசாவடிக்கு போகாமல் அடிச்ச ஆட்டிறைச்சி கறி சமைச்சு கொண்டு வீட்டிலிருந்து வொட்டு போடும் நிலை வந்தாலும் வரும்
-
இலங்கைக்கு தங்க விருது.
அவங்கள் விரும்பினால் வைரம் கொடுப்பாங்கள், அவையளின்ட அரசியலுக்கு விருப்பமில்லையென்றால் பித்தளை ,வெண்கலம் கொடுப்பாங்கள் .... மாலைதீவுடன் பகைத்து கொண்டு இந்தியா லட்சதீவில் சுற்றுலா துறையை விரிவு படுத்திய மாதிரி இதுவும் அரசியல் தான்...
-
கிழக்கை காப்பாற்ற வேண்டுமாயின் வடக்கு மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும் - த. சுரேஸ்
பிள்ளையான் ஒரு பக்கம் கிழக்கை காப்பாற்ற வேண்டும் யாழ்ப்பாணத்தானின் சொல் கேட்காமல் சொந்த காலில் சுயமாக போராடி கிழக்கை காப்பாற்ற வேணும் என குரல்.. அம்மாண் முஸ்லீகளிடமிருந்து கிழக்கை காப்பாற்ற தனது கட்சிக்கு வாக்கு போட வரட்டாம்.. புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள்.. வடக்கும் கிழககும் தமிழர்களின் இரண்டு கண்களாம்... இதில புலி பினாமிகள் என ஒரு கோஸ்டி ... அந்த கோஸ்டி இருக்கு என 30 வருசமா குரல் கொடுக்கும் இன்னுமோரு கோஸ்டி இவர்களுடன் தமிழ் தேசியம் நிலைத்து நிற்க வேணும் ....தமிழரசு கட்சி,தமிழர் விடுதலை கூட்டணி,தமிழர் தேசிய கூட்டமைப்பு என பல கட்சிகள் வந்து போனாலும் தமிழ் தேசியம் நிலைத்து நிற்கின்றது....சிங்களவர்கள் இருக்கும் வரை தமிழ் தேசியம் நிலைத்து நிற்கும்
-
கொழும்பில் காற்றின் தரம் குறைந்து இருள் சூழ்கிறது
இந்த செய்தி ...தோழர் அணுராவுக்கு எதிராக இந்திய அரசும் ,அவர்களுடன் சேர்ந்து செயல் படும் புலம்பெயர்ஸும் செய்த திட்டமிட்ட சதி என நான் நினைக்கிறேன் இலங்கையில் இருந்து இந்த காற்று வருகிறது நாங்கள் நெற் போட்டு தடுக்கிறோம் என இந்தியா பழைய சீலைகளை கொண்டு வந்து தடுத்து நிறுத்தும் முயற்சியில்iடுபட போயினமோ தெரியவில்லை