Everything posted by விசுகு
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
இதன் அர்த்தம் உக்ரைன் தனியே இல்லை என்பதை சொல்வதாகும்.
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
ஆக்கிரமிப்பு என்பது எந்த வகையில் வந்தாலும் எவர் செய்தாலும் நண்பர்கள் உடன்பிறப்புகள் என்று கிடையாது. அவர்கள் எதிரிகளே. எமக்கு ஆதரவு தேவை என்பதற்காக கண்டும் காணாமலும் செல்வோமானால் ஆக்கிரமிப்பு சார்ந்து அழுகுரல் எழுப்பும் தகமையை இழக்க நேரிடும். உன் தவறுகளை ஏற்று நான் மண்டியிடாவிட்டால் என்னை சுடுவாய் என்றால் நின்று கொண்டே சுடு என்பது தான் சரியானது. மற்றது அனைத்தும் அடிமையானது தான்.
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
தவறான கருத்து அண்ணா. தமது நிலத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிரான உக்ரைன் மக்களை நாமே இவ்வாறு ஏளனப்படுத்துதல் மிக மிக தவறாகும்.
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
ஆம் உக்ரைன் தான் சண்டை பிடிக்கிறது பிடிக்கும். ஆனால் உக்ரைனில் அழிவை வேண்டும் என்றால் அமெரிக்கா ஐரோப்பா ஆயுதங்கள் குறைத்து இருக்கலாம்.
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
ராஜீவ் காந்தியும் ஜேஆர் ஜயவர்தனவும் ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு எடுக்க கூடுகிறார்கள்.☹️
-
பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!
ஆழ்ந்த இரங்கல்கள் அவருடைய வயது மற்றும் எது சம்பந்தப்பட்ட துறை நிபுணர் என்பது தெரியவில்லை. ஆனாலும் சிறந்த வைத்திய நிபுணருக்கே தனக்கு வர இருக்கும் மாரடைப்பை முன்னரே அறிந்து தவிர்க்க முடியாது இருந்து இருப்பது தான் எமது உடல் கூற்றின் தன்மை??
-
படகு பழுதாகி கடலில் அந்தரித்த யாழ். மீனவர்கள் இருவர் தமிழக மீனவர்களால் மீட்பு!
இதிலிருந்தாவது நல்லது நடக்க தொடங்கட்டும். நன்றி உறவுகளே ...
-
ராஜீவ்காந்தியின் முதுகில் குத்துதல்....
ராஜீவ்காந்தியின் முதுகில் குத்துதல்.... https://www.facebook.com/share/v/1CjNyVAiDe/
-
நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை
இது ஒரு இறைவனின் சமூகத் தொண்டாக பார்க்கலாமே? இன்று பவுண் விற்கும் விலையில் பணக்காரர்களிடமிருந்து எடுத்து (பறித்து) சில லட்சாதிபதிகளை அவர் உருவாக்குகிறார் தானே???😅
-
காதலுக்காக இலங்கையில் இருந்து சென்ற பெண் – அகதி முகாமில் தடுத்து வைப்பு
நாம் நமது காதலி அல்லது மனைவி மற்றும் அக்கா தங்கைகள் கூட இவ்வாறு விசா இல்லாமல் பல எல்லைகளை கடந்து வந்து இங்கே திருமணம் செய்து வாழ்வோரே. அப்படியானால் அவர்களின் படங்களை இவ்வாறு உலகம் முழுவதும் பிரசுரித்தால் எப்படி இருக்கும் எமக்கு?????
-
ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி இடையே மோதல்; பிரதமர் ஹரிணியை விலகச் செய்ய சதி!
நீங்கள் எதிர்க்கட்சிகளில் இருந்த போது அரசாங்கங்களை பலவீனப்படுத்துவதற்கான சூழ்ச்சிகளில் ஈடுபட்டீர்கள். கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காலங்களிலும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்காமல் பொருளாதார நெருக்கடியை அதிகரிக்க முயற்சிகளை செய்தது நீங்களே. இவ்வாறான நிலைமையில் உங்களை போன்று அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சிகளில் ஈடுபடுட்டதை போன்று எங்களை பார்க்க வேண்டாம் என்று கூறுகின்றோம்
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
தாயகத்தில் இருந்து முடிவுகள் வரவேண்டும் என்கிறோம் ஆனால் இதுவரை விளக்கேற்றும் லுக்கு ஆதரவாக ஒரு குரல் கூட வரவில்லை. இங்கே என்னை பற்றி அவர்களே வரைந்து வைத்த பிம்பத்தை நினைவில் கொண்டு எழுதுகிறார்கள். ஆனால் எனது நிலைப்பாடு ஆதாரங்களுடன் நிறுவ வேண்டிய கடப்பாடு எமது தலைமுறைகளுக்கு இருக்கிறது. அதை நாம் செய்ய தவறுவோமானால் ... எத்தனை தலைமுறை யாராலும் இதற்கு விடை கிடைக்காது. அவரவர் தத்தமக்கு ஏற்றாற்போல் அதால் போனார் இதனால் வந்தார் இப்படி நடந்திருக்கலாம் என்று தான் இருக்கப் போகிறது. உதாரணம் சுபாஷ் சந்திரபோஸ்....
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
தாயகத்தில் ஓர் ஊடகச் சந்திப்பில் இருந்து..... https://www.facebook.com/share/v/1D8jFnopBx/
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
அந்த வீடியோ மட்டுமே ஆதாரம் என்றால் அதற்கு எதற்காக இத்தனை காத்திருப்பு???? 16 வருடங்கள் வரை அதை எவரும் நம்பவில்லை என்பது தான் உண்மை. தலைவர் இருக்கிறார் என்பதல்ல எனது பார்வை. அவரது வரலாறு முழுமையாக பதியப் படவேண்டும். இத்தனை மெய் பாதுகாவலர்கள் தப்பி வந்தும் கூட ஒரு சாட்சி கூடவா கிடையாது. சரி முடிஞ்சுது விளக்கு வைப்போம் என்பது ஏற்றுக் கொள்ள கூடியதல்ல. டொட்.
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
வணக்கம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அல்லது ஆதாரங்கள் தேடி இரவும் பகலும் அலையும் உறவுகளுக்கும் உங்கள் பதில் இது தானா???
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
விருப்பு வாக்கு போடுவது ஏற்றுக்கொள்வதல்ல. அவரது கருத்தை வரவேற்பது. உண்மையில் ரகுவுக்கே தெரியும் அவரால் எந்த ஆதாரத்தையும் தரமுடியாது இல்லை என்பது. அவரது கருத்தை முழுமையாக வாசித்தால் இது உங்களுக்கு புரிந்திருக்கும். உங்களுக்கு பிரபாகரன் சாகணும். பைலை மட்டுமல்ல எல்லாவற்றையும் மூடுங்க.
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
நீங்கள் முதலில் என்னை பற்றி நீங்களே உருவாக்கக வைத்திருக்கும் பிம்பத்தை விட்டு விட்டு சிந்திக்க முயலுங்கள். எனக்கு ஆதாரம் வேண்டும் தெளிவான சான்றுகள் வேண்டும். அதுவரை அது மனதில் ஒரு மூலையில் வதைத்தபடியே தான் இருக்கும். இதனால் மற்றவர்கள் எவருக்கும் எந்த தொல்லையே நட்டமோ கிடையாது
-
கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரி பேரணி
எப்போழுதெல்லாம் தமிழர்களுக்கு சாதகமான சூழல் உருவாகிறதோ அப்பொழுதெல்லாம் இந்த *** ****** தமது சுயரூபத்தை காட்ட தொடங்கி விடுவார்கள்.....
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
அப்படியா? பாராளுமன்ற மன்றத்தில் நான் பிரபாகரனின் ஆள் என்றும் நான் பிரபாகரனின் வீரத் தமிழன் என்றும் பேசமுடியும் என்றால் பிரபாகரனுக்கு அஞ்சலி என்றால் சிறை என்பது உங்கள் கற்பனை மட்டுமே. பிரபாகரனைப்போல மாவீரர் நாளில் விளக்கேற்றி மாவீரர் நாள் பாடலுக்கு அஞ்சலி செய்யமுடியும் தேசத்தில் பிரபாகரனுக்கும் அஞ்சலி என்பது சிறை தண்டனை என்பதும் உங்கள் கற்பனை மட்டுமே. உண்மையில் உண்மையை தரிசிக்க எந்த ஆதாரமும் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள நாம் தயாராக இல்லை என்பது மட்டுமே உண்மை.
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
நீங்கள் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறீர்கள். அங்கே நடக்கும் மாவீரர் நாளும் சரி மற்றும் நினைவு எழுச்சி நினைவுகளும் சரி அசலான புலிகளின் நிறம் மற்றும் பாணியிலேயே நடைபெறுகின்றன. என்னதான் அரசு இவற்றை எச்சரித்த போதும்....
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
இது வெறும் புரட்டு மட்டுமே. மக்கள் எழுச்சியுடன் மாவீரர் நாள் மற்றும் எழுச்சி நினைவுரைகள் தாராளமாகவே நடைபெறும் தாயகத்தில் ஏனைய மாவீரர்கள் மற்றும் தளபதிகள் போன்று பிரபாகரனுக்கும் அஞ்சலி என்பது சாதாரணமாக கடந்து போகக்கூடியதே. பாராளுமன்றத்திலேயே பிரபாகரன் பற்றி பலமுறை பலமணி நேரம் பேசமுடிகிறது என்றால் கொல்லப் பட்டுவிட்டார் என்று அரசாலேயே அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவது எப்படி குற்றமாகும்?????
-
காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது
நானும் எவ்வளவு காலமாக யாழிலும் முகநூலிலும் கொடி கட்டிப் பறக்கிறன். ஆகக் கூடியது வடை பிளேன் ரீக்கு மேல ஒன்றையும் காணோம்....🤣
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
என்னுடைய இந்த கேள்விக்கு ஏன் எவரிடமும் இருந்து பதில் வரவில்லை.......????
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
அப்படியானால் அங்கே இருந்து தான் தலைவருக்கான அஞ்சலி தொடங்கி இருக்கவேண்டும். ஏன் இதுவரை எவருமே தாயகத்தில் அதை செய்யவில்லை...?
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
அது ஒரு ஆதாரம் என்பதிலிருந்து தொடங்கலாமே தவிர அதனூடான கேள்விகள் சந்தேகங்கள் மற்றும் சாட்சியங்கள் இதுவரை இல்லை இனியும் கிடைக்கப்போவதுமில்லை. ஆகையால் இப்போது தொடங்கப்பட்டவை அனைத்தும் இனி பைலை மூடுவோம் என்பதற்கானது மட்டுமே. என்னைப் பொறுத்தவரை மூடுவதாலோ மூடாமல் விடுவதாலோ எதுவும் மாறப் போவதில்லை. கடவுளாக்கி மக்கள் தொழுவது தொடரும். அதில் நானும் ஒருவன். இத்தனைக்கும் தனது உடலை மக்கள் பார்க்கவேண்டும் என்ற தலைவரின் தீர்க்க தரிசனத்தை உணர்ந்தவனான போதும்.