Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. நோர்வேயை தவிர ஏனையோர் எண்ணையை ரஸ்யாவிடம் இருந்து தான் பெறவேண்டும் அடுத்த சில வருடங்களுக்காவது.
  2. List of countries bombed/attacked by the USA after World War II: Korea and China (1950-53) Guatemala (1954) Indonesia (1958) Cuba (1959-61) Guatemala (1960) Congo (1964) Laos (1964-73) Vietnam (1961-73) Cambodia (1969-70) Guatemala (1967-69) Grenada (1983) Lebanon (1983,1984) Libya (1986) El Salvador (1980s) Nicaragua (1980s) Iran (1987) Panama (1989) Iraq (1991) Kuwait (1991) Somalia (1993) Bosnia (1994, 1995) Sudan (1998) Afghanistan (1998) Yugoslavia (1999) Yemen (2002) Iraq (1991-2003) Iraq (2003-2015) Afghanistan (2001-2015) Pakistan (2007-2015) Somalia (2007, 2008, 2011) Yemen (2009, 2011) Libya (2011, 2015) Syria (2014-2015) Japan Hiroshima and Nagasaki (August 9, 1945) The United States is the only country that allowed itself to use nuclear weapons of mass destruction against another country and did not suffer punishment for it !!!
  3. இந்தியாவின் சில மட்டங்களில் சிறிலங்காவை தங்களின் ஒரு மாநிலமாக கொண்டுவரும் எண்ணங்கள் அடிபடுகின்றன.
  4. யாயினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  5. ரெனிஸில் சில சம்பவங்கள் https://youtu.be/C_z16ZqBAqs
  6. மாவீரர்களுக்கு வீரவணக்கம்.
  7. நா. முத்துக்குமார் திகட்ட,திகட்ட காதலி அதிகம் பேசு ஆதி ஆப்பிள் தேடு மூளை கழற்றி வை முட்டாளாய் பிறப்பெடு கடிகாரம் உடை காத்திருந்து காண் நாய்க்குட்டி கொஞ்சு நண்பனாலும் நகர்ந்து செல் கடிதமெழுத கற்றுக்கொள் வித,விதமாய் பொய் சொல் விழி ஆற்றில் விழு பூப்பறித்து கொடு மேகமென கலை மோகம் வளர்த்து மித மதி கெட்டு மாய் கவிதைகள் கிறுக்கு கால்கொலுசில் இசை உணர் தாடி வளர்த்து தவி எடை குறைந்து சிதை உளறல் வரும் குடி ஊர் எதிர்த்தால் உதய் ஆராய்ந்து அழிந்து போ மெல்ல செத்து மீண்டு வா திகட்ட,திகட்ட காதலி - நா முத்துக்குமார் NewsSense
  8. முற்றும் துறந்த குரு ஒருவர் இருந்தார்.... ஒரு ஊரில் அவரைப் பிரசங்கம் செய்வதற்காகக் கூப்பிட்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் என்றும் சொல்லியிருந்தார்கள். குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார். அன்று நல்ல மழை. கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள். குரு அங்கு வந்த போது யாருமில்லை. பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால் அவருக்கு ஏமாற்றம். அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும் தான். என்ன செய்யலாம் என்று அவனையே கேட்டார். அவன் சொன்னான், "ஐயா, நான் குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் தெரியும். நான் முப்பது குதிரைகளை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போகும் போது, எல்லாக் குதிரைகளும் வெளியே சென்றிருந்து, ஒரே ஒரு குதிரை மட்டும் இருந்தாலும், நான் அந்தக் குதிரைக்குப் புல்லை வைத்து விட்டுத்தான் வருவேன்" என்றான். அந்தக் குருவுக்கு படாரென்று அறைந்தது போல் இருந்தது. அந்தக் குதிரைக்காரனைப் பாராட்டி விட்டு, அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார்..... தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் என்று சரமாரியாகப் பேசிப் பிரமாதப் படுத்தி விட்டார். பிரசங்கம் முடிந்ததும், எப்படி இருந்தது என்று அவனைப் பார்த்துப் பெருமையாகக் கேட்டார். அவன், "ஐயா, நான் ஒரு குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும். நான் புல்லு வைக்கப் போன இடத்தில் ஒரே ஒரு குதிரை தான் இருந்தது என்றால், அதற்கு மட்டும் தான் புல் வைப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டி விட்டு வர மாட்டேன்" என்றான் அவன்...... அவ்வளவு தான்! அந்தக் குரு அதிர்ந்து விட்டார்...
  9. தாய்மண்ணை நினைக்கையிலே by Sofia Rahul & Gobiraj Sivalingam (Music by Steve Cliff)
  10. கொழும்பான், தனிக்காட்டுராஜா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  11. பாடல்: அரபிக்குத்து படம்: பீஸ்ட்(beast) இசை: அனிருத் பாடியவர்கள்: அனிருத், ஜொனிதா காந்தி
  12. மேற்கின் ஓரவஞ்சகத்தை தோலுரித்து காட்டும் அற்புதமான கவிதையை வடித்த புங்கையூரானுக்கு நன்றிகள்.
  13. பாடல்: நான் உன் அழகினிலே படம்: 24 பாடியவர்கள்: அர்ஜிற் சிங், சின்மயி இசை: ஏ.ஆர். ரகுமான் வரிகள்: மதன் கார்கி
  14. இணையவனுக்கு எனதினிய பிறந்தாள் வாழ்த்துக்கள்.
  15. ரெனிஸ் விளையாட்டில் சில நகைச்சுவைகள்!!!!
  16. நாட்டை நீ மீட்க நினைத்தால் எல்லாத்தையும் மாற்றிப்போடு **************************************** மாவுமில்லை பாலுமில்லை எப்படித்தான் வாழ்வேனோ பாணுமில்லை மீனுமில்லை பசியில் தான் தவிப்பேனோ வெளிச்சமில்லை எண்ணையில்லை இருட்டில் தான் விழுவேனோ காசுமில்லை கசுமில்லை என்னென்று தான் சமைப்பேனோ விறகு வெட்ட காட்டுக்கு போனேன் சட்டம் தண்டித்து வீட்டுக்கு வந்தேன் உணவுக்காக வேட்டைக்குப் போனேன் சட்டத்தின் கோரத்தால் பசியில் தவிக்கிறேன் இறக்குமதி ஏதுமில்லை விளைச்சலும் போதவில்லை வீங்கிப் போகும் பணத்தின் எல்லை நீண்டு செல்லும் மக்கள் வரிசை உணவை கனவில் தான் காண்பேனோ சொர்க்கம் எங்கள் பூமியென்று சொன்னவர்கள் கோடியுண்டு சோறில்லா தேசமிங்கு வெட்கத்தில் நாங்கள் இங்கு பசியில் ஒருவன் இருப்பானென்றால் நரகம் தானே எங்க ஊரு நாட்டை நீ மீட்க நினைத்தால் எல்லாத்தையும் மாற்றிப்போடு வட்டக்கச்சி வினோத்
  17. 1930 ன் பிற்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் பழைய வின்சர் திரை அரங்கின் முன்னால் ஜவஹர்லால் நேரு, பதின்ம வயது மகள் இந்திரா காந்தி ஆகியோருடன் அரங்கின் அந்நாள் உரிமையாளர் முருகேசம் பிள்ளை துரைராஜா ( தகரக் கொட்டகை துரைராஜா ) ஆகியோரைக் காண்கிறீர்கள் யார் வந்தாலும் நான் நானாகவே இருப்பேன் என்ற யாழ் மண்ணில்" பலருக்குமிருந்த மிடுக்கில் தலையில் குல்லா அணியாது காணப்படுபவர் துரைராஜா அவர்கள்!
  18. "நான் இரவு என் மனைவியுடன் உங்க வீட்டில் தங்க வருகிறேன்" என்று தன் நண்பர் ஒருவருக்குத் தொலைபேசியில் ஒருவர் தகவல் தந்தார். அதற்கு அந்த நண்பர் "மகிழ்ச்சி வாருங்கள், ஆனால் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள், உங்கள் ஊரில் இருக்கிற உயர்தரமான பேக்கரியில் கொஞ்சம் காஸ்ட்லியான 'கேக்' வாங்கி வாருங்கள்" என்றார். "எதற்காக" என்று இந்த நண்பர் கேட்க, "என் மகன் தேர்வில் வெற்றி பெற்றிருக்கின்றான், 'சர்பிரைசாக' அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாகக் கொண்டாட விரும்புகிறேன். என்னால் இப்பொழுது வெளியே செல்ல முடியாது. ஆகையால் நீங்கள் ஊரிலிருந்து வாங்கி வாருங்கள்" என்றார். அவர் கூறியவாறு அந்த நண்பர் கொஞ்சம் அதிகமாகவே செலவழித்து நல்ல 'கேக்' ஒன்றை வாங்கிச் சென்றார் . அந்தக் கொண்டாட்டம் முடிந்ததும்.இவரும் ஊருக்குக் கிளம்பத் தயாரானார். 'கேக்'கின் விலை என்ன என்று கேட்டு நண்பன் அதற்குண்டான தொகையை கொடுப்பான் என்று எதிர்பார்த்தார். ஆனால், ஒரு அட்டைப் பெட்டியைக் கொடுத்து "கொஞ்சம் பெரியதாக வாங்கி வந்து விட்டீர்கள், மீதமுள்ள 'கேக்'கை உங்கள் குழந்தைக்குக் கொடுங்கள்" என்று ஒரு பெட்டியை கொடுத்தார். எவ்வளவு தொகை என்று கேட்டு பணத்தைக் கொடுப்பான் என்று எதிர்பார்த்தால் மீதத்தை நம் தலையில் கட்டி விட்டானே என்று ஊருக்குத் திரும்பும் வழியில், மனைவியிடம் தன் நண்பனை சபித்துக் கொண்டே வந்தார். "விடுங்கள், அவர் ஒருவேளை மறந்திருக்கலாம் அல்லது நாளை மறுநாள் அனுப்பி விடலாம் என்று நினைத்திருக்கலாம்" என்றார் மனைவி. இருந்தாலும் அவரால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வீட்டிற்கு வந்து அந்த அட்டைப் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் 'கேக்'குடன் பணமும், ஒரு கடிதமும் இருந்தது. அந்தக் கடிதத்தில் "நண்பா, என்னுடைய பேச்சை மதித்து நீ என் மகனுக்காக 'கேக்' வாங்கி வந்தாய். தொகை எவ்வளவு என்று கேட்டு, அதைத் திரும்பக் கொடுத்து உன்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை. நீ வாங்க மாட்டாய் என்று எனக்குத் தெரியும். எனவே, இந்த பெட்டியில் வைத்து அனுப்பி வைக்கிறேன். தயவு செய்து இதை எடுத்துக் கொள்" என்றிருந்தது. அதைப் படித்தவுடன், அவரை... நண்பன் கன்னத்தில் அறைந்தது போலிருந்தது. அவனைப் பற்றி எவ்வளவு தவறாக நினைத்துவிட்டோம். ஆனால் அவன் நம்மைப் பற்றி எவ்வளவு உயர்வாகக் கருதுகிறான் என்று வேதனையடைந்தார். மனம் வேதனைப்பட்ட அவர், உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு "உன்னைத் தவறாக புரிந்து கொண்டேன் என்னை மன்னித்து விடு" என மன்னிப்பு கேட்கப் போகிறேன் என்று மனைவியிடம் சொன்னார். அவ்வாறெல்லாம் பேசி இன்னொரு தவறை செய்யாதீர்கள். உங்களைப் பற்றி அவர் உயர்வாக நினைத்திருக்க, "அவரைப் பற்றி தவறாக நினைத்து விட்டேன்" என்று இப்பொழுது சொன்னால் அவர் வேதனைப்படுவார். உங்களின் மீதுள்ள மதிப்பு குறைந்து விடும் என்றார் மனைவி. ஆம். பெரும்பாலும் நாம் அவசரப்பட்டு யூகத்தின் அடிப்படையிலும், ஆதாரங்கள் இல்லாமலும் மற்றவர்களைப் பற்றி தவறான முடிவுக்கு வந்துவிடுகிறோம். தெளிவான ஆதாரங்கள் கிடைக்காதபோது ஒருவரை குறை கூறுவது குற்றமாகும். அவர் தவறே செய்திருந்தாலும் அதற்கு... ஏதோ ஒரு நிர்பந்தம் அல்லது ஏதோ ஒரு காரணம் இருக்கலாம் என நாம் நினைப்பதால் நமக்கு இழப்பேதும் இல்லை. ஆனால் தவறு செய்யாத ஒருவரை நாம் யூகத்தின் அடிப்படையில் குற்றவாளி ஆக்கி மற்றவர்களிடம் பரப்பினால் நாம் குற்றவாளி ஆகிவிடுவோம். *நலமுடன் நட்பை பேணுவோம்.*

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.