Everything posted by nunavilan
-
காசாவில் உடனடி நிபந்தனையற்ற நிரந்தரயுத்த நிறுத்தத்தை கோரும் பாதுகாப்பு சபை தீர்மானம் - வீட்டோவை பயன்படுத்தியது அமெரிக்கா
ஐந்தென்ன ஐம்பது தடவையும் இஸ்ரேலை காப்பாற்ற வீற்றோவை பாவிக்கும்.
-
‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
சாருலதா!!! https://www.youtube.com/isaipayanam
-
‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
சா சப்பென்றாகி விட்டது. இவ்வளவு கூட்டும் சேர்ந்து என்ன செய்தார்கள்?? ஐயகோ அந்த பாடகியை அவுசில் இருந்து கூப்பிட்டு வைச்சு செய்துட்டாங்கள். முனைவர் பட்டம் எடுத்த பாடகி என்பது தமிழ் திரையுலகின் உச்சக்கட்டம்.
-
சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி
சிங்களம் அசுர வேகத்தில் செயற்படுகிறது.
-
மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வாசி!
படங்காட்டலுக்கு எந்த குறைச்சலும் இல்லை. போராட்டத்தில் கலந்த போராளிகள் பிச்சை எடுக்கிறார்கள். மனிதம் என்பது ?????
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் - டக்ளஸ்
விலை இல்லா மாளிகையில் – உன்னை மீட்டவும் விரல் இல்லையோ?? நான் யார் உன்னை மீட்ட – வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட சொர்க்கமும் நரகமும் நம் வசமே – நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே
-
‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
ரகுமானின் இசைக்கும் சாருலதாவின் பாடலுக்காகவும் (டீயும் சின்மயியும் உட்பட) பார்க்க விரும்புகிறேன்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பணயகைதிகள் இருவர் பிணமாக கான் ஜுனிஸ் பகுதியில் இருந்து இஸ்ரேலிய இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டன.
-
குச்சவெளி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கடற்படை தெரிவிப்பு
தமிழர் எனில் பயங்கரவாத முத்திரை பதித்து விடுவார்கள்.
-
புதிய கூட்டானது சுமந்திரன் மீதான முன்னணியின் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே - கீதநாத் தெரிவிப்பு!
கஜேந்திரகுமாரும் சுமந்திரனும் சந்தித்து பேசிக்கொண்டனரே?
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
ஜோதிடத்தில் முனைவர் (Ph.D.) பட்டம் பெறுவது ஒரு கடினமான ஆனால் சாத்தியமான செயல்முறை ஆகும். இதற்கு ஆழமான ஆராய்ச்சி, அகாடமிக் திறன்கள் மற்றும் பொறுமை தேவைப்படுகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஜோதிடத்தில் Ph.D. வழங்குகின்றன. ஜோதிடத்தில் Ph.D. பெறுவதற்கான படிகள்:1. தகுதிகள்:அடிப்படை தகுதி: ஜோதிடம் அல்லது தொடர்புடைய பாடத்தில் முதுகலை (M.A. / M.Sc.) பட்டம். குறைந்தபட்ச மதிப்பெண்: பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் 55% (அல்லது CGPA 6.0) தேவைப்படுகிறது. ஆராய்ச்சி திறன்: UGC-NET/JRF தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் முன்னுரிமை கிடைக்கும் (இந்தியாவில்). 2. ஆராய்ச்சி தலைப்பு தேர்வு:ஜோதிடத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை (எ.கா., கிரகங்களின் மனோதத்துவ தாக்கம், வர்த்தக ஜோதிடம், மருத்துவ ஜோதிடம்) தேர்ந்தெடுக்க வேண்டும். ஆராய்ச்சி தலைப்பு புதுமையானதாகவும், ஏற்கனவே உள்ள ஆய்வுகளுக்கு கூடுதல் மதிப்பைச் சேர்ப்பதாகவும் இருக்க வேண்டும். 3. பல்கலைக்கழகம்/வழிகாட்டி தேர்வு:பல்கலைக்கழகம்: இந்தியாவில், பீகார் ராஷ்டிரிய பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU), ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் போன்றவை ஜோதிடத்தில் Ph.D. வழங்குகின்றன. வெளிநாடுகளில்: சில அமெரிக்க/ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் "மதம் மற்றும் கலாச்சார ஆய்வுகள்" (Religion & Cultural Studies) பிரிவில் ஜோதிடம் தொடர்பான ஆராய்ச்சியை அனுமதிக்கின்றன. வழிகாட்டி: ஜோதிடத்தில் நிபுணத்துவம் உள்ள பேராசிரியரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 4. சேர்க்கை செயல்முறை:எழுத்துத் தேர்வு & நேர்காணல்: பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் Ph.D. நுழைவுத் தேர்வு நடத்துகின்றன. ஆராய்ச்சி முன்மொழிவு (Research Proposal) சமர்ப்பித்தல்: உங்கள் ஆராய்ச்சி திட்டத்தை விளக்கும் ஒரு முன்மொழிவை சமர்ப்பிக்க வேண்டும். 5. பாடப்பிரிவு & ஆராய்ச்சி:பாடப்பிரிவு வேலை: சில பல்கலைக்கழகங்கள் 6-12 மாத கோர்ஸ் வேர்க் (Course Work) தேவைப்படுத்துகின்றன. ஆராய்ச்சி & தரவு சேகரிப்பு: ஜோதிட நூல்கள், குறிப்புகள், நேரடி ஆய்வுகள் (ஜாதக பகுப்பாய்வு) மூலம் தரவுகளை சேகரிக்க வேண்டும். 6. ஆய்வறிக்கை & ஆய்வு:ஆய்வறிக்கை (Thesis): 3-5 ஆண்டுகளில் ஆராய்ச்சியை முடித்து, ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். வாய்மொழி தேர்வு (Viva Voce): ஒரு குழு முன்பு உங்கள் ஆராய்ச்சியை பாதுகாக்க வேண்டும். 7. Ph.D. வெளியீடு:ஆய்வறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், பல்கலைக்கழகம் உங்களுக்கு முனைவர் பட்டம் வழங்கும். நன்றி:ஆழமான தேடல்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போட்டியில் வெற்றியீட்டிய முதல் மூவர்களான நந்தன், ரசோதரன், புலவருக்கு வாழ்த்துக்கள். போட்டியை இனிதுற நடாத்திய கிருபனுக்கு மிக்க நன்றி. போட்டியை சுவாரசியமாக்க கருத்துக்களை வழங்கியவர்களுக்கும், மற்றும் பங்கு பற்றியவர்களுக்கும் நன்றி. மீண்டுமொரு போட்டியில் சந்திக்கலாம்.- “ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
இப்படி காணொளிகள், தொலைக்காட்சிகளில் பலரை பார்த்துள்ளேன். இதனால் தான் கேள்வியும் வந்தது.- “ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
இவரை கருதவில்லை. பொதுவாக சொன்னேன். தொலைக்காட்சியில் சிலரை பார்த்துள்ளேன். இணையத்திலும் பார்த்துள்ளேன்.- “ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
சோதிடர்கள் சோதிடத்தில் Phd எடுத்துள்ளார்கள். இவர்கள் எதை நிறுவி Phd எடுத்தார்கள்??- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற ஐபில் இறுதி போட்டியில் பங்கு பற்றிய ஏதாவது ஒரு குழுவில் ஸெரியாஸ் ஐயர் விளையாடி உள்ளாராம்.- ஆதரவாளரை சந்திப்புக்கு அழைத்து விட்டு படம் பார்க்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர்!
அதை நேர்மையாக நான் படத்துக்கு போகிறேன் என சொல்லி மற்றையவரை காக்காமல் பண்ணியிருக்கலாம். 🙂- ஆதரவாளரை சந்திப்புக்கு அழைத்து விட்டு படம் பார்க்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர்!
ஆதரவாளரை சந்திப்புக்கு அழைத்து விட்டு படம் பார்க்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர்! http://seithy.com/siteadmin/upload/suthan-020625-seithy.jpg தேசிய மக்கள் சக்தியும் ஏனைய கட்சிகளை போன்றுதான் செயற்படுவதை காணக் கூடியதாக உள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் பொன்.சுதன் தெரிவித்துள்ளார். நேற்று சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி அவற் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “இது தொடர்பாக நான் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள் பலருடன்,அமைச்சர் சந்திரசேகரனுடன் கலந்துரையாடினேன். நேற்று முன்தினம் பிற்பகல் 02.00 அமைச்சர் தன்னை சந்திப்பதற்கான அனுமதியை எனக்கு வழங்கியிருந்தார். தேசிய மக்கள் சக்தியின் யாழ் அலுவலகத்திற்கு வாருங்கள்,அங்கு நாம் மேற்கொண்டு கலந்துரையாடி மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார். பிற்பகல் 02.00 மணிக்கு தேசிய மக்கள் சக்தியின் யாழ் அலுவலகத்திற்கு சென்ற நான் மாலை 06.00 கடந்தும் அமைச்சரை சந்திப்பதற்காக அங்கேயே காத்திருந்தேன் 02.00 மணிக்கு வருமாறு கூறிய அமைச்சர் அலுவலகத்தில் இல்லாததால் அவரது உதவியாளர்களிடம் பல முறை தெரிவித்தும் சந்திப்பதற்கு தான் வருவதாக கடசிவரை அவர் கூறவில்லை. பின்பு அவர் இன்னொரு கலந்துரையாடலுக்கு சென்றுவிட்டதாக அழைப்பு வந்தது. ஆனால் அமைச்சர் எங்கு சென்றார் என்பதனை தேடி அறிந்த போது யாழ் தியேட்டர் ஒன்றில் அந்த நேரத்தில் அமைச்சர் படம் பார்த்துக் கொண்டிருந்தார்” என குறிப்பிட்டுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=334084&category=TamilNews&language=tamil- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணையில் திருப்தியில்லை!See
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணையில் திருப்தியில்லை! 00] http://seithy.com/siteadmin/upload/easter-attack-111124-seithy.jpg ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து திருப்தி தெரிவித்த தேசிய கத்தோலிக்க திருச்சபை தகவல் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிருஷாந்த, பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து திருச்சபை மகிழ்ச்சியடையவில்லை என்று தெரிவித்தார். "நாங்கள் அரசாங்கத்தை விமர்சிக்க விரும்பவில்லை, ஆனால் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கொண்டுவருவது, மற்றவர்கள் மீது வழக்குத் தொடரப்படுவதைப் போலவே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை நினைவூட்ட விரும்புகிறோம்," என்று அவர் கூறினார். http://seithy.com/breifNews.php?newsID=334090&category=TamilNews&language=tamil- சங்கு - சைக்கிள் சந்திப்பு!
00]சங்கு - சைக்கிள் சந்திப்பு! http://seithy.com/siteadmin/upload/DTNA-020625-seithy.jpeg தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தில் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் இணைத் தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். http://seithy.com/breifNews.php?newsID=334091&category=TamilNews&language=tamil- ரப் பாடகர் வேடன்
கேரளா ராப் பாடகர் வேடன் தன்னை தலித்தாக அடையாளம் செய்து கொண்ட போதும், எங்கேயும் சாதியை பெருமையாக வெளிப்படுத்தியது இல்லை. அப்படி இருக்கும் போது அவர் புகழ் பெற்ற பிறகு, அவரை சாதியாக கொண்டாட செய்வது நாகரிகம் அல்ல. சாதிய, மத, இன,நிற பாகுப்பாடிற்கு எதிராக அவர் பாடும் பாடல்கள் கேரளா இளைய தலைமுறையை கொண்டாட வைக்கிறது. வாழ்த்துக்கள் வேடன். கந்தமங்கலம் மா.அறிவழகன்.விசிக மயிலாடுதுறை மாவட்டம் ·- உண்மையிலேயே NPP தீய சக்தியா?
Veluppillai Thangavelu உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் கைது செய்து சிறையில் அடைப்பதா! அநுரவிடம் மனோ கேள்வி வெளிநாடு சென்ற தமிழர்களை நீங்கள்தானே திரும்பி வரச் சொல்கிறீர்கள்? உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் அவர்களைக் கைது செய்வதா? அவர்களைப் பிணையில் வெளியே விடாமல் எதற்காகச் சிறையில் அடைக்கிறீர்கள்?" என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசை நோக்கி, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். ஊழல் கோப்புகள் இது தொடர்பில் மனோ எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, "ஊழல் பேர்வழிகளைக் கைது செய்து சிறையில் அடையுங்கள். அதைச் செய்யத்தான் வேண்டும். இன்னமும் நானூற்றுக்கணக்கான ஊழல் கோப்புகள் இருப்பதாகச் சொன்னீர்கள். அனைவரையும் கைது செய்து, விசாரித்து, ஆவண செய்யுங்கள். சட்டத்தில் இடமிருந்தால் ஊழல் பேர்வழிகளுக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்குங்கள். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், எதற்காகத் தமிழக முகாமில் முப்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, வயோதிபம் அடைந்து, உங்களை நம்பி, நாடு திரும்பிய, 75 வயதான சின்னையா சிவலோகநாதனை விமான நிலையத்தில் கைது செய்தீர்கள்? அவரை இன்று பிணையில் வெளியே விடாமல் எதற்காகச் சிறையில் அடைக்கிறீர்கள்? அகதிகள் வெளிநாடு சென்ற தமிழர்களைத் திரும்பி “வாங்கோ, வாங்கோ” என நீங்கள் தானே வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறீர்கள்? உங்களை நம்பி, திரும்பி வந்தால் விமான நிலையத்தில் கைது செய்வதா? சிவலோகநாதனுக்கு நாடு திரும்ப சென்னை இலங்கைத் துணைத் தூதரகம்தான் கடவுச்சீட்டு வழங்கி உள்ளது என்பது அரசுக்குத் தெரியாதா?வெளிநாட்டு அமைச்சுக்குத் தெரியாதா? தமிழக அரசின் பொலிஸ், பாரத மத்திய அரசின் குடிவரவு, குடியகல்வு வாரியம் என்பன ஒப்புதல் அளித்துள்ளன. ஐ.நா. அகதிகள் ஆணைக்குழு, சிவலோகநாதனுக்குப் பயண சீட்டு வாங்கிக் கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து, விமானமேற்றி அனுப்பி வைத்துள்ளது. இவை உங்களுக்குத் தெரியாதா? வெளிநாடு சென்ற தமிழர்களை நீங்கள்தானே திரும்பி வரச் சொல்கிறீர்கள்? உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் அவர்களைக் கைது செய்வதா? "என்று பதிவிட்டுள்ளார்.- யாழில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும்
யாழில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது புலம்பெயர் வாழ் இலங்கையர்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, சில தீய சக்திகளால் பரப்படும் கதைகளை அவர்கள் நம்பமாட்டார்கள் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ் மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்குத் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் உறுதியுரையேற்பு நிகழ்வு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (31) நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு, “இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய அகதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து இந்தியாவில் இருந்து வருபவர்களை அநுர அரசாங்கம் கைது செய்கின்றது என சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அவரை அரசாங்கம் கைது செய்யவில்லை. இது விடயத்தில் உடனடியாக தலையிடப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த நபருக்கு பிணை வழங்கப்பட வேண்டும் எனவும், பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்ககூடாது எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சிகாலத்தில் இந்நாடு கட்டியெழுப்படாவிட்டால் இலங்கைக்கு விமோசனம் கிடையாது என்பதே புலம்பெயர் தமிழர்களின் கருத்தாக உள்ளது. தீய குணம் படைத்த – தீய நோக்கத்துடன் செயற்படும் அரசியல் சக்திகள் உள்ளன. அந்த தீய சக்திகளை சுத்தப்படுத்த வேண்டும். அதனை நாம் செய்ய வேண்டும். உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் சிறப்பாக செயற்பட வேண்டும். யாழ்.மாவட்டத்தில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும். அதேவேளை, மேலும் சில சபைகளில் எதிர்க்கட்சி தலைவராகக்கூட சிறப்பாக செயற்பட முடியும்.”- என்றார். யாழில் சில சபைகளில் தேசிய மக்கள்...யாழில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும்தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது புலம்பெயர் வாழ் இலங்கையர்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, சில தீய சக்திகளால் பரப்படும் கதைகளை அவர்கள் நம்பமாட்டார்கள் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்...- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இது எங்களுக்கு ரொம்ப முக்கியமானது. எப்படி அடி வாங்கினீர்களென மக்கள் அறியவுள்ளார்கள். - யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.