-
Posts
51084 -
Joined
-
Days Won
38
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nunavilan
-
இலங்கையர்களை நாடு கடத்திய சீனா! கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது சீனாவில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களும் ஒரு வருடத்தின் பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். இந்த 2 சந்தேக நபர்களும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்த கொள்கலனில் மறைந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். அவர்களில் ஒருவர் 26 வயதுடைய மலர்மதி ராஜேந்திரன் என்றும் மற்றவர் 39 வயதான ஜெயக்குமார் தருமராசா என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனவரி 30, 2023 அன்று குறித்த இருவரும் மலேசியா செல்வதற்காக கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'மெர்க்ஸ் யூனிகார்ன்' கப்பலில் ஏற்றப்பட்ட வெற்று கொள்கலனுக்குள் இரகசியமாக நுழைந்துள்ளனர். ஆனால் குறித்த கப்பல் மலேசியாவிற்கு வந்தபோது, கொள்கலனில் மறைந்திருந்த இரு சந்தேக நபர்களும் மலேசியா ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அதிகாரிகள் சந்தேக நபர்களை ஏற்றிக்கொண்டு பல நாடுகளுக்குச் சென்று இறுதியாக சீனாவிற்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து சீன அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் சந்தேகநபர்கள் இருவரையும் நாட்டில் இருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுத்த பின்னர், இன்று காலை 5.01 மணி அளவில், சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமானம் (UL-867) மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர், கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்களம், வர்த்தகம் மற்றும் ஆட்கடத்தல் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு ஒன்று அவர்களை கைது செய்து கொழும்பு கிருலப்பன பகுதியில் உள்ள பிரதான அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=184411
-
சாந்தனை இலங்கைக்கு அனுப்ப அரசு அனுமதி! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலை ஆகி உள்ள சாந்தன் இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை பெற்ற இலங்கையை சேர்ந்த சாந்தன், திருச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு கை, கால், காதுகளில் ஏற்பட்ட கடும் வலி காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு நோய் தீவிரம் அடைந்ததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தண்டனை பெற்று விடுதலை ஆன தன்னை சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என இந்திய அரசிடம் அவர் கோரிக்கை வைத்து வந்தார். பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கும், சாந்தனுக்கு ஆதரவு தெரிவித்து கோரிக்கை முன் வைத்திருந்தனர். முன்னதாக இலங்கை அரசும் சாந்தன் இலங்கைக்கு வர அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் திருச்சி இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் உள்ள சாந்தனை சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கான அனுமதி கடிதத்தை மத்திய அரசு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு அனுப்பி உள்ளது. மத்திய அரசின் உத்தரவு நகல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களுக்குள் சாந்தன் இலங்கைக்கு அனுப்பப்படுவார், விமான டிக்கெட்டை சாந்தனே முன்பதிவு செய்யலாம் என என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தகவல் தெரிவித்துள்ளார். (செய்தி பின்னணி) 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திற்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், முருகன், இந்த நாசாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், நளினி, ஜெயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை அடுத்து 2022 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நால்வரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை சொந்தநாட்டுக்கு அனுப்ப கோரி கோரிக்கைகள் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=184400
-
புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்
nunavilan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
2009 ல் வன்னியில் உள்ள சனத்தொகையை பிழையாக சொன்னது அரசு. இப்போ வெளிநாட்டில் உள்ளவர்களை கணக்கெடுத்து எப்படி சமப்படுத்துவார்கள்?(காணாமல் போனோரை) -
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
nunavilan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
-
புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்
nunavilan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
எவ்வளவு வேலைகள் மிக அவசரமாக மக்களுக்கு செய்ய வேண்டி உள்ளது. இந்த கணக்கெடுப்பை விழுந்தடித்து செய்வதின் அவசியம் என்ன? -
இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன
-
தமிழ்சிறிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
nunavilan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
சிரிய தலைநகரில் இஸ்ரேல் பலத்த எறிகணை தாக்குதலை நடாத்தி உள்ளது. இரு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். -
ஒருவன் தற்கொலைக்கு முயற்சி செய்யும்போது அவனைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்... நீதிபதி: ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்தாய்.. இது குற்றம் என்று உனக்கு தெரியாதா... ??? குற்றவாளி: எல்லாம் குடும்ப பிரச்சனை தான் காரணம் மை லார்ட்...! நீதிபதி: யாருக்குத்தான் குடும்பப் பிரச்சனை இல்ல... அப்படி என்னதான் உன் பேமிலி பிராப்ளம்... பொல்லாத பிராப்ளம்... !!??? குற்றவாளி: கணம் நீதிபதி அவர்களே... ஏன் சோகக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்... நான் ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டேன் வீட்டில் யாருக்கும் தெரியாமல்.... ஏற்கனவே அவளுக்கு திருமண வயதில் ஒரு பெண் இருந்தாள்... அந்த பெண்ணை என் தகப்பனார் காதலித்து எனக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்... அதாவது என் தகப்பனார் எனக்கே மாப்பிள்ளை ஆனார்...! என் தகப்பனாரை திருமணம் செய்து கொண்டதால் என் ஒன்று விட்ட மகள் எனக்கு சித்தி ஆனாள்... காலம் ஓடியது..... என் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.... அவன் என் தகப்பனாருக்கு மைய்த்துனன் ஆனான்... என் சித்தியின் சகோதரன் ஆதலால் என் மகன் எனக்கு மாமன் ஆனான்... என் தகப்பனாரின் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.அவன் எனக்கு சகோதரன்.... அவனே எனக்கு பேரனும் ஆனான்... என் மகளின் மகன் அல்லவா? அதே போல் என் மனைவி என் பாட்டியானாள்... என் சித்திக்கு தாய் அல்லவா? நான் என் மனைவிக்கு கணவனாகவும், பேரப்பிள்ளையாகவும் ஒரே சமயத்தில் இருக்க வேண்டியதாயிற்று... ஒருவனுடைய பாட்டிக்கு கணவனாக இருப்பவன் அவனுக்கு தாத்தா ஆகிறான் அல்லவா? அப்படி பார்த்தால் நான் எனக்கே தாத்தாவாகிறேன்... இக்குழப்பமே என் தற்கொலைக்கு காரணம்... . . . நீதிபதி மயக்கம் போட்டு விழுந்துட்டார்...
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
nunavilan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
https://yarl.com/forum3/topic/255611-ஐநா-தீர்மானம்-சம்மந்தமாக-நாட்டின்-ஜனாதிபதி-சிறந்த-முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றார்-கருணா-அம்மான்/page/3/#comment-1522508 -
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
nunavilan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
Never forget or forgive. 1. Haifa Massacre 1937 2. Al-Quds Massacre 1937 3. Haifa Massacre 1938 4. Balad Al-Sheikh Massacre 1939 5. Haifa Massacre 1939 6. Haifa Massacre 1947 7. Abbasiya Massacre 1947 8. Al-Khisas Massacre 1947 9. Bab Al-Amud Massacre 1947 10. Al-Quds Massacre 1947 11. Sheikh Bureik Massacre 1947 12. Deir Yassin Massacre 1948 13. Jaffa Massacre 1948 14. Tantura Massacre 1948 15. Al-Quds Massacre 1953 16. Khan Yunis Massacre 1956 17. Al-Quds Massacre 1967 18. Sabra and Shatila Massacre 1982 19. Al-Aqsa Massacre 1990 20. Ibrahimi Mosque Massacre 1994 21. Jenin Refugee Camp Massacre 2002 22. Gaza Massacre 2008-2009 23. Gaza Massacre 2012 24. Gaza Massacre 2014 25. Gaza Massacre 2018-2019 26. Gaza Massacre 2021 27. Gaza Holocaust 2023-present -
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
nunavilan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
நத்தனியாகு பங்குனி வரை கமாசுக்கு காலக்கெடு கொடுத்து இருக்கிறாராம் பணயகைதிகளை விடுவதற்கு. -
சிநேகிதனே & ஒரு தெய்வம் தந்த பூவே
-
உலகெங்கும் தேர்தல் முறைகேடுகள் எப்படியெல்லாம் நடக்கின்றன தெரியுமா?
nunavilan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
அப்போ எப்படி அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ நினைப்பவர்கள் நாட்டின் தலைவர் ஆகிறார்கள்??? -
இமயமலைப் பிரகடனம்: கண்டியில் இரண்டாவது பயிலரங்கு ஐந்து மாவட்டங்கள் பங்கேற்பு ஊடக வெளியீடு 2024-02-17 இமயமலைப் பிரகடனத்தின் அடிப்படையில் தேசிய உரையாடலுக்காக மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள பயிற்சிப்பட்டறைகளுக்கான ஐந்து பயலங்குகளின் இரண்டாவது பயிலரங்கு பெப். 16ம் திகதி கண்டியில் ஆரம்பமானது. நேற்றுடன் முடிவடைந்த இந்த இரண்டு நாட் செயலமர்வில் மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை, ஆகிய ஐந்து மாவட்டங்களின் பிரதிநிதிகளும் 34 சர்வமதத் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர். இப்பயிலரங்கில் சிறந்த இலங்கைக்கான சங்கத்திலிருந்து, களுபஹன பியரதன தேரர், வல்லத்தர சோபித தேரர், மற்றும் வாடுவே தம்மாவன்ச தேரர் ஆகியோரும் உலகத்தமிழர் பேரவையின் சார்பில் அமெரிக்காவைச் சேர்ந்த எலியாஸ் ஜெயராஜாவும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சங்கத்தின் சார்பில் விசாகா தர்மதாச மற்றும் அங்கத்தவர்களும் பங்கேற்று கலந்துரையால்களில் ஈடுபட்டனர். உரையாடலின்போது நாகர்கோட்டில் பிரகடனம் உருவாகிய வரலாற்றினை களுபஹன பியரதன தேரர் விளக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். குறித்த பிரகடனம் சம்பந்தமாக காணப்படுகின்ற கட்டுக்கதைகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்ட சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இந்த உரையாடல்களில் பல்வேறு ஆரோக்கியமான வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்ததோடு, ஈற்றில், பிரகடனத்தின் நோக்கம் மற்றும் உள்ளடக்கத்தினை பலரும் ஏற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். முதலாவது பயிலரங்கு குருநாகல் மாவட்டத்தில் கம்பஹா, புத்தளம், அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக கடந்த ஒன்பதாம் பத்தாம் திகதிகளில் இடம்பெற்றிருந்தது. அடுத்ததாக பயிலரங்குகள் முறையே மட்டக்களப்பு, மாத்தறை மற்றும் வவுனியாவில் நடைபெறுமெனவும் இப்பயிலரங்குகளில் அயலிலுள்ள மாவட்டங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்வர். மொத்தம் ஐந்து பயிலரங்குகள் மூலம் 150 சர்வமத குருமார்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களை ஒருங்கிணைப்பாளர்களாக பயிற்றுவிக்கப்படவுள்ளார்கள். இதேவேளை, தேசிய உரையாடலில் மாவட்டம் தோறும் 5 சர்வமத தலைவர்களும் ஒரு சிவில் சமூக உறுப்பினருமாக மாவட்டத்திற்கு தலா 6 பேர் பிரதிநிதித்துவப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://marumoli.com/இமயமலைப்-பிரகடனம்-கண்டி/#google_vignette
-
Trinco Nimalan ஸ்ரீலங்காவில் 11 பௌத்த மத வழிபாட்டிடங்கள் தேசிய புனித இடங்களாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் நான்கு இடங்கள் திருக்கோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளன. அவையாவன 01. ஸ்ரீ சந்தர்வ யுக்திக வன செனசுன - புல்மோட்டை -01 50 ஏக்கர் காணி 02. யான் ஓயா ராஜமஹா விகாரை - புல்மோட்டை -01 50 ஏக்கர் காணி 03. எனா நெகி கந்த ரஜ மகா விகாரை -புல்மோட்டை -01 50 ஏக்கர் காணி 04. மிகுந்து லென பிராண ரஜமகா விகாரை -புல்மோட்டை-01 50 ஏக்கர் காணி 05. சாந்தி விகாரை -புல்மோட்டை -04 50 ஏக்கர் காணி 06. நாகலென புராண ரஜ மகா விகாரை -புல்மோட்டை 03 50 ஏக்கர் காணி 07. படரகள ஆரண்ய சேனா சனய -கும்புறுபிட்டி கிழக்கு - 50 ஏக்கர் காணி 08. சப்தனாக பப்பதை வன சென -திரியாய் 50 ஏக்கர் காணி 09. பாகிய பப்பன வன சென சுன -கும்புறுபிட்டி கிழக்கு 50 ஏக்கர் காணி 10.தெபரகல பிராண வன செனசுன -கும்புறுபிட்டி கிழக்கு 50 ஏக்கர் காணி போன்ற பகுதிகளில் நிறுவப்பட்ட்டுள்ள பௌத்த விகாரைகள் பிரதேசத்திலுள்ள வயல் காணிகளை புனித பூமி என்ற போர்வையில் அபகரித்துள்ளார்கள் இதன்படி குறைந்தது 2000 க்கு மேற்பட்ட காணிகளை புனித பூமிக்கு அபகரித்துள்ளார்கள். ஒவ்வொரு 50 ஏக்கர் காணிக்கும் 30 சிங்கள புதிய குடும்பங்களை குடியேற்றுவாங்கள். இதை விட மோசமான சிங்கள மயப்படுத்தலை இதுவரை யாரும் பாத்திருக்க மாட்டோம்.