Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. மே மாதம் 14 ஆம் திகதி 1985 ஆம் ஆண்டு பஸ் வண்டியொன்றில் அனுரதபுர நகருக்குள் நுளைந்த புலிகள் பஸ் நிலையத்தில் நின்றிருந்த சிங்கள மக்கள் மீது கண்மூடித்தனமாகச் சுட்டதில் பல பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கொலைசெய்யப்பட்டனர். பின்னர் மகாபோதி பௌத்த விகாரைக்குள் நுளைந்த புலிகள் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த சிங்கள மக்களைச் சுட்டுக்கொன்றனர். பின்னதாக அனுராதபுரம் பூங்க்கா ஒன்றிற்குச் சென்றவர்கள் அங்கும் சிங்களவர்களைச் சுட்டுக்கொன்றனர். இலங்கையில் சிங்கள மக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரும் தாக்குதலாக இது கருதப்படுகின்றது. தமிழீழத்தின் பெயரால் 146 அப்பாவி மனிதர்கள் கொல்லப்பட்டனர். https://inioru.com/ஈழப்-போராட்டமும்-இனவாதிக/
  2. இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவுகளுக்கு என்ன நடந்தது ?
  3. உமா தனது சவக்குழியை தனது சகாக்களால் தோண்டிக்கொண்டார் என்பதில் அவரது திறமை தெரிந்தது.
  4. பாலசிங்கம் அவர்களுக்கு உமா சவாலாக இருந்தது என்பது நகைச்சுவையானது. உமா பிரிவில் பாலசிங்கம் அவர்கள் ஒற்றுமையாக்க இன்னும் கொஞ்சம் பாடு பட்டிருக்கலாம்.ஆனால் மத்திய குழுவின் முடிவு என நினைக்கிறேன். பிரபாகரன் அவர்கள் தனக்காக களவிதிகளை மாற்றினார் என மக்கள் பேசுவதுண்டு. இயக்கம் தொடங்கி வளரும் வரை அவ்விதி செல்லுபடியாகும். அதுவே வாழ் நாள் விதியாக இருக்க வேண்டும் என்பது விதியல்லவே??
  5. மேற்படி சிறையுடைப்புக்கு புளட்டும், ஈபியும் தாம் தான் தனியே சிறை உடைப்பில் ஈடுபட்டதாக உரிமை கோரியதாக அறிகிறேன். இங்கு இரு குழுக்களுக்கும் இடையில் மக்கள் மத்தியில் (ஆதரவாளர்களும்) வாய்த் தர்க்கங்கள் ஆங்காங்கே நடை பெற்றதாம்.
  6. புத்தகம் ஏதோ எழுத வெளிகிட்டுள்ளார் போல. இல்லாவிட்டால் சும்மா கிறுக்கி விளையாடுவாவெல்லோ.🙂
  7. ரஷ்யா-உக்ரைன் போர்: அந்த தாக்குதலை நான் தான் தடுத்து நிறுத்தினேன் – எலான் மஸ்க் அதிரடி உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ரஷ்ய கடற்படை தளத்தை உக்ரைன் தாக்காமல் இருக்க நான் தான் காரணம் என தெரிவித்து இருக்கிறார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு மொஸ்கோ அருகில் உள்ள கருங்கடல் பகுதியில் இணைய வசதியை செயற்படுத்துமாறு உக்ரைன் சார்பில் தனக்கு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டதாக எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார். எனினும், இதன் விளைவை கருத்திற்க் கொண்டு இணைய வசதியை செயற்படுத்தவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடங்கிய குறுகிய காலக்கட்டத்திலேயே எலான் மஸ்க்-இன் ஸ்டார்லின்க் எனும் செயற்கைக்கோள் சார்ந்த இணைய சேவை வழங்கும் நிறுவனம் உக்ரைனுக்கு இணைய சேவையை வழங்க தொடங்கியது. “செவஸ்டாபோல் வரை ஸ்டார்லின்க் சேவையை செயற்படுத்துமாறு அரச அதிகாரிகளிடம் இருந்து அவசர கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ரஷ்யாவின் கடற்படை தளத்தை முழுமையாக மூழ்க செய்வது தான். நான் அவர்களின் கோரிக்கைக்கு ஒப்புக் கொண்டு இருந்தால், போரில் மிகப் பெரிய தாக்கம் ஏற்பட ஸ்பேஸ்-எக்ஸ் முக்கிய காரணமாக மாறி இருக்கும்,” என எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார். https://thinakkural.lk/article/272453
  8. சிங்கம் இன்னுமொரு டீலுடன் தான் குரங்கை உயிருடன் விட்டது. என்றோ ஒரு நாளுக்கும் ஒவ்வொரு நொடிக்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?
  9. பாடல்: மைனரு வேட்டி கட்டி படம்: தசரா இசை: சந்தோஸ் நாரயணன் பாடியவர்கள்: அனிருத், டீ வரிகள்: முத்தமிழ் பெண் : தையலும் பிஞ்சி இப்போ மச்சினி… தரையில குந்திக்கிட்டான் மச்சினி… கைலிய கட்டிக்கிட்டு மூலையில கட்டிலில் சாஞ்சிக்கிறான்… ஆண் : ஏ… கல்யாண புதுசுல வாசம்தான் பூசுவேன்… உன் சேல சிக்குல ஒட்டி மடியில மடிஞ்சிட்டேன்… ஆண் : முத்தமும் தந்தேன் பூவ கொடுத்தேன்… சக்கர போலதான் பேசி சிரிப்பபேன்… கூசா நீயும் குறை பேசிபோன குடிகாரன் ஆனேனே… பெண் : குடிகாரன் ஆயிப்போயி மச்சினி… குழி தோண்டி தள்ளிபுட்டா மச்சினி… ஆசையா பேசாமத்தான் என்னையும் அக்கரையில விட்டுப்புட்டானே… பெண் : மைனரு வேட்டி கட்டி… மனசுல அம்புவிட்டான்… பெண் : வீடு மூலைக்கும் முக்குக்கும் ஓடித்தான் புடிச்சி… வளைஞ்ச இடுப்ப கிள்ளி வைப்பான்… இப்ப சீவி சிங்காரிச்சி அழகா நான் நின்னாலும்… ஏதாச்சியும் சாக்குதான் சொல்றான்… ஆண் : கெட்ட கோவத்த வச்சிகிட்டு கண்டபடி கத்தி நீயும்… அழுது நிக்கும் ஆறுதல தந்தேன்… நம்ம சேந்துதான் வச்ச பேர சின்ன சின் வம்ப சொல்லி… குப்ப போல நீயும் தூக்கி போட்ட… பெண் : ஏ… காட்டுப் பூச்சிதான் உன்ன கலங்கடிக்குதா… பாத்த அழகி எல்லாம் வேத்து வடிஞ்சி போச்சா… விட்டா மூச்சந்தி நின்னு முட்டாளா என்ன ஆக்குற… பெண் : மைனரு வேட்டி கட்டி மச்சினி… மனசுல அம்பு விட்டான் மச்சினி… கண்ணாடி மாட்டிக்கிட்டு என்ன பாத்து நச்சின்னு கண்ணடிச்சான்… ஆண் : சொந்தமா புத்தியில மச்சானே… சொல்லறதும் கேட்பதில்ல மச்சானே… பக்கத்து வீட்டிலெல்லாம் பத்தவச்சி மொத்தமா செஞ்சிபுட்டா… ஆண் : வாழ்க்கைய கேட்டு கண்ணே மச்சானே… வந்ததும் அழுதிடுவா மச்சானே… ஏதாச்சும் பேசப்போனா உன் தங்கச்சி எட்டிதான் ஓடிப்போவா… பெண் : ரவிங்க என்ன பகலிங்க என்ன… கண்ணுல வச்சி தான் காப்பானே உன்ன… எந்த சோகம் உன் பக்கம் வந்தா… எதிரே நின்னு மோதி வெட்டிக் கொள்வானே… பெண் : துன்பங்கள் ஏது வந்தா… அவனே நெஞ்சுக்குள் பூட்டிக்கொள்வான்… நீ வைக்கும் பொட்டுகுள்ள… அவனும் வாழ்க்கைய வாழ்ந்துக்குவான்…
  10. பாடல்: நிரா படம்: தக்கர் இசை: நிவாஸ் K பிரசன்னா பாடியவர்கள்: சிட் சிறிராம், கெளதம் மேனன், மால்வி சுதர்சன் வரிகள்: கு. கார்த்திக் ஆண் : நிரா நிரா நீ என் நிரா… திரா திரா நினைத்திரா… நொடி சுகம் தரா… வழி யுகம் விடா… ஆண் : போகாதே அழகே… இனி தாங்காதே உயிரே… எனை தோண்டாதே திமிரே… பகல் வேஷம் போடாதே… ஆண் : உன்னை தீராமல் பிடித்தேன்… உயிரின் உள்ளே மறைத்தேன்… வெளியில் கொஞ்சம் நடித்தேனே… ஆண் : நிரா நிரா நீ என் நிரா… திரா திரா நினைத்திரா… நொடி சுகம் தரா… வழி யுகம் விடா… —BGM— ஆண் : நிரா… ஆஅ… திரா… ஆஅ… நிரா… திரா… நிரா… ஆஅ… ஆண் : நொடிகள் தாவி ஓடும் முட்களோடு சண்டையிட்டு… வந்த பாதை போக சொல்லி நேற்றை மீண்டும் கேட்டேன்… உருகி உருகி நீயும் உலறிபோன வார்த்தை யாவும்… ஞாபாகத்தை தேடி தேடி காதில் கேட்டு பார்த்தேன்… ஆண் : உந்தன் மடியில் நானும் உறங்கி போன தருணம் தன்னை… படம் பிடித்த மின்னலோடு புகை படங்கள் கேட்டேன்… உதடும் உதடும் உரசி உயிர் பறித்த சத்தம் யாவும்… பதிவு செய்து சேர்த்து வைத்த இலைகள் துளையில் எட்டி பார்த்தேன்… ஆண் : மெழுகின் திரியில் எரியும் தீயாய் வந்தாய்… மெழுகின் உடலை மெல்ல ஏனோ தின்றாய்… உந்தன் மூச்சு காற்றை ஊதி போனாய்… பிழைத்திடுவேன் அடி… ஆண் : தரையில் தவழும் காதல் பார்த்தால் என்ன… கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன… இந்த காலம் நேரம் எல்லாம் ஒரு முறை… கனவாய் கலைந்திடுமா… ஆண் : உனை தீராமல் பிடித்தேன்… உயிரின் உள்ளே மறைத்தேன்… வெளியில் கொஞ்சம் நடித்தேனே… பெண் : விழியிலே ஒரு கீறலே… விழுந்ததே தெரியாமலே… தரையிலே நிழல் வேகுதே… தனிமையை அறியாமலே… பெண் : நினைவுகள் விளையாடுதே… நிஜம் அது புரியாமலே… இதழ்களும் திறக்காமலே… இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்…
  11. சந்திராயன்- 4( LUPEX) யப்பானுடன் கூட்டு சேர்ந்து 2026ல் சந்திரனின் தென்பகுதிக்கு மேலும் ஆராட்சிகளுக்கு அனுப்பப்படுமாம்.
  12. இவரின் மகளும் பேத்தியும் முஸ்லிம்களாம்.
  13. நீங்க அடுத்து எந்தப் படத்துல நடிக்கிறீங்க ரஜினி ஜி? என்னோட அடுத்த படத்தோட கதை என்னன்னா, ஆஸ்பத்திரியில் இருந்து என்னுடைய பேரக் குழந்தையை யாரோ கடத்திட்டாங்கன்னு எனக்கு தகவல் வருது.எங்க வீட்ல இருந்து 150 கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற ஒரு பண்ணையில் லொக்கு லொக்குன்னு இருமிக்கிட்டு நைட் வாட்ச்மேனா இருக்குற நான் திடீர்னு புது அவதாரம் எடுக்கிறேன். என் பேரக் குழந்தையை கடத்தியது யாரு? எதுக்காக கடத்தினாங்கன்னு விதவிதமா டிரஸ் போட்டுக்கிட்டு துப்பு துலக்குறேன். அப்போ என்னோடு 100 பேர். அவங்க யாருன்னு தெரியாது. ஆனா அவங்களும் கூட வராங்க. எதிரி யாருன்னு தெரியாம மனசு கலங்கி போயி குற்றால மலை மேல சுத்திக்கிட்டு இருக்கும் போது ஒரு சாது வந்து, உனக்கு எதிரா எவனெல்லாம் வர்றானோ அவன் எல்லாம் உன் எதிரி தான்னு அருள்வாக்கு சொல்றாரு. திடீர்னு எனக்குள்ளே ஒரு புது சக்தி கிளம்புது. உடனே அருவா கடப்பாறை வேல் கம்பு துப்பாக்கின்னு என்னென்ன ஆயுதம் கிடைக்குதோ அதையெல்லாம் எடுத்து எதிரே வர்றவனை எல்லாம் போட்டு தள்ளுறேன். நான் எத்தனை பேரை கொன்னாலும் போலீஸ் எதையும் கண்டுக்காம போயிடறாங்க. கடைசியில பிச்சைக்காரன் மாதிரி இருக்கிற ஒருத்தன் ஒரு குழந்தையை கையில் வச்சிருக்கான். அந்த குழந்தை என்னை பார்த்ததும் சிரிக்க ஆரம்பிக்குது. உடனே எனக்கு புரிஞ்சு போச்சு. இதுதான் என்னோட பேரக் குழந்தைன்னு. குழந்தையை கொடுன்னு நான் அன்பா கேட்டுப் பார்க்கிறேன். முடியாதுடா இது என் குழந்தைன்னு சொல்லி கொடுக்க மாட்டேன்கிறான். உடனே எனக்கு கோபம் எரிமலையா வந்து ஒரே அடியில சாகுற பிச்சைக்காரன அரை மணி நேரமா அடிச்சு துவைச்சு கொன்னு அந்த குழந்தையை எடுத்துக்கிட்டுப் போய் என் மருமகள் கிட்ட கொடுக்கிறேன். அந்தக் குழந்தையைப் பார்த்ததும் என் மருமகள் கதறி அழுது என் காலை பிடிச்சுக்கிட்டு வசனம் பேசுகிறா... மாமா... எனக்கு இன்னும் டெலிவரியே ஆகலையே! இது யாரோட குழந்தை? உடனே ஆஸ்பத்திரில இருக்கிற ஊசி போடுற ரூமுக்குள்ளே போய் கதவை பூட்டிக்கிட்டு கண்ணை மூடிக்கிறேன். இது யாருடைய குழந்தை? யாருடைய குழந்தைன்னு நூத்துக்கணக்கான குரல்கள் என் காதுக்குள்ள கேக்குது. அந்த குழந்தை யாருடைய குழந்தைன்னு நான் கண்டுபிடிக்கிறதை அந்த படத்தோட பார்ட் டூ ல எடுக்கப் போறோம். இந்த படம் வெற்றி பெற, மண் சோறு சாப்பிடுறதுக்கு, மொட்டை போடுறதுக்கு, அலகு குத்துறதுக்கு, பறவை காவடி எடுக்குறதுக்கு, அக்கினி சட்டி எடுக்குறதுக்குன்னு ரசிகர்களை ரெடி பண்ணனும். நிறைய வேலை இருக்கு சார். என்னோட வயசுக்கு ஏத்த கதாபாத்திரம்ன்றதுனால தான் இந்தப் படத்துக்கு நான் ஒத்துக்கிட்டேன். மத்தபடி பணம் மனுஷனுக்கு சந்தோஷத்தைத் தராதுன்ற தத்துவத்தை நீங்களும் தெரிஞ்சுக்கணும். ரசிகர்களும் தெரிஞ்சுக்கணும்......
  14. கு. மா அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பிரியன் அண்ணாவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  15. அரசு ஊழியர்கள் ஐ - போன் பயன்படுத்த தடை உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை ஐபோன் மற்றும் ஐபேடு. ரஷியாவிலும் ஐ - போன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ரஷியர்களில் பலரும் ஐ - போன் மற்றும் ஐ - பேடு சாதனங்களை மிகவும் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா மற்றும் அதன் அண்டைய நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது. உக்ரைன் ஆக்ரமிப்பை அடுத்து கடந்த 2022 மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனம் ரஷியாவிலிருந்து வெளியேறியதுடன் விற்பனையையும் நிறுத்தியது. எனினும், வேறு நாடுகளிலிருந்து ரஷியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ஐ - போன் 14 உள்பட பல மாடல்களை ரஷியர்கள் வாங்கி பயன்படுத்தி வந்தனர். அமெரிக்காவின் ஒரு உளவு நடவடிக்கையின் விளைவாக ரஷியாவினரால் பயன்படுத்தப்படும் பல ஆயிரக்கணக்கான ஆப்பிள் நிறுவன சாதனங்கள் பாதுகாப்பை இழந்து விட்டதாக ரஷியாவின் முக்கிய உள்நாட்டு பாதுகாப்பு சேவை அமைப்பான எஃப்.எஸ்.பி. (FSB) 2 மாதங்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்தது. ஆப்பிள் நிறுவனமும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையும் இணைந்து இதனை செய்ததாக எஃப்.எஸ்.பி. தெரிவித்தது. இதனையடுத்து ரஷிய டிஜிட்டல் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் ஒரு சுற்றறிக்கையில் அந்நாட்டு அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. "ஐபோன் மற்றும் ஐபேடு மூலமாக அமெரிக்கா, ரஷிய மக்களின் தகவல் தொடர்புகளை அறிந்து கொள்ளும் ஆபத்து இருக்கிறது. இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம், எனவே ஐ - போன்கள் மற்றும் ஐ - பேடுகளை வேலை நோக்கங்களுக்காக ரஷிய அரசாங்க ஊழியர்கள் இனி பயன்படுத்தப்பட கூடாது. பணி பயன்பாடுகளுக்கான செயலிகளை உபயோகப்படுத்தவும், வேலை சம்பந்தமான மின்னஞ்சல் பரிமாற்றத்தை செய்யவும், ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளை பயன்படுத்த கூடாது. தனிப்பட்ட தேவைகளுக்காக ஐ - போன்களைப் பயன்படுத்தலாம்" என ரஷிய அரசாங்கத்தின் டிஜிட்டல் மேம்பாட்டுக்கான அமைச்சர் மக்சுட் ஷடேவ் (Maksut Shadaev) அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனால் ஆப்பிள் நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. ஆப்பிளுடன் இணைந்து இந்த உளவு வேலையில் ஈடுபட்டதாக FSB குற்றம் சாட்டிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமை இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. https://tamil.adaderana.lk/news.php?nid=176427

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.