Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. போதமும் காணாத போதம் – அறிவிப்பு மெய்த்தலம் மூண்டெழுகிறது நெருப்பு முடுகி முடுகி எரிகின்றது ஒருபொறிதான் உள்விழுந்தது உலகே பற்றி எரிவதென ஓங்கி எரிகின்றது கீழிருந்து மேலெழுகிற சோதி ஆளுகின்றதா ?எனது போக்கும் வரவும் புணர்வுமெரிகின்றதா? சிற்றறிவாளும் நினைவுகளை சீண்டியழித்துச் செயலை முடுக்கி தூண்டும் சுடரொளியான சுதந்திரப் பிழம்பாய் மூண்டெழுகிறது நெருப்பு மேலே மேலே இன்னும் மேலே வாலின் நுனியை ஊன்றியெழுந்து வளர்பிறை நிலவைக் குறிவைத்து தூவெளி வானில் சோதி சுடர்த்தி நீலநிறத்துச் சுவாலையை வீசி சீறியெழுகின்ற அரவென நெளிதரு நடனம் நடனம் தீயளி நடனம்! நர்த்தனமாடும் அக்கினி வீச்சம் அக்கினியாளே அக்கினியாளே நர்த்தனமாடிடும் அக்கினியாளே சிற்பரமென மெய்த்திரள் நிலவை சுடர் நா நீட்டி கொத்திய கொத்தில் பொத்தல் விழுந்து பொழியுது பொழியுது முட்டி நிரம்பிய மூவா அமிழ்தம் மெய்த்தவமாகி மிளிருது உலகம். சு.வில்வரத்தினம் இப்படியொரு தொடர் எழுதவேண்டுமெனும் விருப்பம் மனத்துள் துளிர்த்து ஆண்டுகள் பல. இனிய நினைவுகள் இழக்கவியலாத கனவாக தொடர்கின்றன. சொந்த நிலம் பாலித்த சுகப்பொழுதுகளை மீளத் தீண்டுகிறேன். என் அகமெரியும் சந்தம் இசைக்கிறேன். செவியுள்ளோர் கேட்கட்டும். வாழ்வென்பது எழுத்தினால் அர்த்தமாகும் ஒரு சுடர்வெளி. அங்கு இருளிருந்தும் நிகழ்பவை எல்லாம் ஒளியின் அசைவே. என்னுடைய புனைவுலகை வாசித்து அதன்வழியாக என்னைத் தொகுத்துக் கொண்டவர்கள் சிலர் “உங்கள் வாழ்வில் இழப்புக்களும் துயரங்களும் தான் இருக்கின்றனவா, மங்கலங்கள் இல்லையா” என்று கேட்பதுண்டு. பதிலாக ஒரு புன்னகையைப் பரிமாறுவேன். அவர்களுக்கு மங்கலம் வாய்க்கட்டும் என்று பிரார்த்திப்பேன். எவ்வளவு துயரத்தையும் அவலத்தையும் எழுதினாலும், எழுத்தாளன் மங்கலமானவன். என் வாழ்வு மங்கலத்தால் ஆசிர்வதிக்கப்பட்டது. ஈழத்தில் ஊழித்தேர் ஓடிய தெருக்கள், தீவட்டிகளாய் மனிதச் சடலங்கள் எரிந்த நாட்கள் என கோரங்களின் புகைமூடிய திகைப்புக்களை இங்கே நான் பதியவில்லை. பூவரசம் இலையைச் சுருட்டி பீப்பி ஊதி, தித்திப்பாய் புழுதி தின்ற போதம் நெருப்பென அசைந்து எழுவதைக் காண்பீராக! இத்தொடர் மகாத்மா காந்தியின் நினைவு தினம் அன்றைக்கு வெளியாகிறது. காந்தி என்பது விடுதலையின் சொல். ஈழத்தமிழர்க்கு காந்தியும் ஒரு பெருஞ்சோதி. இந்தத் தொடருக்கான தலைப்பை உறுதி செய்வதில் நிறையக் குழப்பங்கள் இருந்தன. என்னுடைய தலைப்புக்கள் கடினமாக இருந்தன. பிறகு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களிடம் இதுகுறித்து உதவி கோரினேன். என்னுடைய தலைப்பை விடவும் அவர் அனுப்பிய இந்தத் தலைப்பு சிறந்த ஆசியாகவும் சிறப்பாகவும் இருந்தது. பகிடியாக அவரிடம் “சேக்கிழாருக்கு முதல் அடி தருவித்த விரிசடையானைப் போல எனக்கு நீங்கள் “போதமும் காணாத போதம்” என்று தந்துள்ளீர்கள் என்றேன். நாஞ்சில் நாடன் அப்புவின் சிரிப்பும் மகிழ்வும் எனக்கு பதிலாகக் கேட்டது. ஓவியர் கருப்பன் இந்த தொடருக்கான ஓவியங்களை வரையும் ஓவியர் கருப்பன் மிகச் சிறந்த ஆற்றல் மிக்கவர். நவீன ஓவியங்களின் அறிவிக்கப்படாத இலக்கணங்களை கூடப் பேணுபவர் கிடையாது. அவருடைய வெளியும், கோடுகளும், வண்ணங்களும் தமிழ் நவீன கலைத்துறையில் ஒரு கவனத்தைப் பெறும் என்று வாழ்த்துகிறேன். தளம் ஆரம்பித்து கட்டுரைகள் வெளியான நாட்களில் அழைத்து அறிவுரை கூறிய விஷ்ணுபுரம் குவிஸ் செந்தில் அவர்களுக்கு என் சிரம்தாழ்ந்த நன்றி. அவர் அழைத்திராவிட்டால் இந்த உத்வேகம் பிறந்திருக்கா. நன்றி செந்தில். “போதம் என்றால் என்ன மாமா” என்று அண்ணன் மகள் ரமணி கேட்டாள். சொல்லுங்கள் பார்க்கலாம் என்றேன். தெரியவில்லை என்றாள். எனக்கு இது தெரியவில்லை என்று சொல்லுவதும் போதம் தான் என்றேன். ஆமாம் தெரியாது என்பது போதத்தின் முதல் நிலை என்றால் மிகையில்லை. வடிவமைப்பு செய்கிற நூல்வனம் மணிகண்டனுக்கு நன்றி. எழுதி எழுதி தீ வளர்க்க! எழுதி எழுதி ஒளி வளர்க்க! இங்கே நான் எழுதுபவை கசப்புக்களோ, இனிமைகளோ அல்ல .இயல்புகள். ஆளரவமற்ற வீதியில் அந்தியில் நடந்து வருகிற போது என்னுடன் கூடவே வருகிற ஆலமரத்து முனியை, கொட்டடி காளியை எழுதித்தான் பூசிக்க வேண்டும். போதந்தருவது நீறு என்கிறார் ஞானசம்பந்தர், எழுத்தும் போதந்தரும் என்கிறேன். போதமே எழுக! காணாத போதமே வந்தடைக! பணிகிறேன். https://akaramuthalvan.com/?p=719
  2. இப்படிப் பல இணைப்புக்கள் கிடப்பில் போய் இருக்கின்றன! மூனா அண்ணாவின் ஓவியங்கள் மட்டுமல்ல, பல கட்டுரைகள், அனுபவக் குறிப்புக்களை எல்லாம் முன்னர் இணைத்திருந்தேன். அதனால்தான் என்னவோ, அவரே யாழ் இணையத்தில் வெவ்வேறு பெயர்களில் இணைந்து ஓவியங்களையும், கதைகளையும் பதிந்து வருகின்றார்.😀 அவரது மூன்று நூல்களையும் அனுப்பியிருந்தார். கிறுக்கல்களின் வண்ண அச்சுக்கு அதிகம் செலவாகியிருக்கும் என நினைக்கின்றேன். மூனாவின் கிறுக்கல்கள் மறந்து போக மறுக்கும் மனசு நெஞ்சில் நின்றவை இன்னொரு பகிடி என்னவென்றால், யாழ் இணையத்தில் சின்னக்குட்டி என்ற உறவையும், அவர் பல பெயர்களில் உறுப்பினராக இருந்தவர், என்னையும் ஒருவர் என்று நினைத்திருந்தார்! நான் சின்னக்குட்டியை விட சின்னப்பொடியன் என்று நிரூபிக்கவேண்டியதாகப் போய்விட்டது. இப்போதைய எனது யாழ் கள அவதார் படமும் மூனா என்ற கவி அருணாசலம் அண்ணாவின் கைவண்ணம்தான்! மிகவும் பெருமையாகவே உணர்ந்தேன்😀 நன்றி மூனா அண்ணா🙏🏽
  3. கொடூரத்தின் உச்சம்; உயிரிழந்த உடல்களில் வெடிகுண்டுகள்… ஹமாஸ் அமைப்பின் தந்திரம் வெளியீடு இஸ்ரேல் மீது கடந்த 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என சிக்கியவர்களை கடுமையாக அடித்து, தாக்கி வன்முறையில் ஈடுபட்டது. இதில், 260 பேர் கொல்லப்பட்டனர். 210 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. 17-வது நாளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. இதில், இஸ்ரேல் பாதுகாப்பு படையின் (ஐ.டி.எப்.) யஹலோம் பிரிவு, கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிய பின்னர், மீதமுள்ள வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இந்த பணி ஆபத்து மற்றும் மிக கடினம் நிறைந்துள்ளது என்று இந்த சிறப்பு படைப்பிரிவானது, தெரிவிக்கின்றது. ஏனெனில், இஸ்ரேலிய எல்லை பகுதியில் பயங்கரவாதிகள் யாரும் உள்ளனரா? என்று பாதுகாப்பாக செல்ல வேண்டி உள்ளது. வெடிக்காத வெடிகுண்டுகள் மீதம் உள்ளனவா? என்றும் அவற்றை தூய்மைப்படுத்தும் மற்றும் அப்புறப்படுத்தும் பணியும் சேர்த்து மேற்கொள்ளப்படுகிறது. இதில், உயிரிழந்த சில உடல்களில் வெடிகுண்டுகள் இணைக்கப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுபற்றிய சில புகைப்படங்களை ஐ.டி.எப். வெளியிட்டிருக்கிறது. அவற்றில், குழந்தைகள் பள்ளிக்கு போகும்போது கொண்டு செல்ல கூடிய பை ஒன்று வயல்வெளியில் கிடக்கிறது. ஆனால், அதில், ரிமோட் உதவியுடன் வெடிக்க கூடிய 7 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டு உள்ளது. இதனை எப்படியும் யாரேனும் எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில், உள்நோக்கத்துடன் ஹமாஸ் அமைப்பு தேர்வு செய்துள்ளது. போரில் பல தந்திரங்களில் ஒன்றாக இதனை அந்த அமைப்பு பயன்படுத்தி உள்ளது என கூறப்படுகிறது. https://akkinikkunchu.com/?p=259150
  4. இதைத்தான் துஷ்பிரயோகம் என்றேன். கறள், வன்மங்களை வைத்து சிவப்புப் புள்ளி போடுவது இப்போது இலகுவாகிவிடும். இதனால்தான் முகநூலில் சிவப்புப் புள்ளி இல்லை! முகநூலில் dislike இல்லாததன் காரணம் இப்படி உள்ளது. நம் நிஜ வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பரந்த அளவிலான விஷயங்களுக்கு நாம் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறோம் என்பதை இருமையான ‘பிடித்த’ மற்றும் ‘பிடிக்காதது’ சரியாகப் பிரதிபலிக்கவில்லை.
  5. எப்போது இருந்து நடைமுறைப்படுத்தப்படும்? சிவப்புப் புள்ளியை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கமுடியும் என்று நம்பவில்லை! இது ஒருவரின் reputation score ஐ குறைக்க வழிவகுக்கும்!
  6. யானை பார்த்த குருடர்கள்! - வ.ந.கிரிதரன் - யானை பார்த்துப் பெருமிதமுறும் குருடரிவர். காலைப் பார்த்துரலென்பார்.. காதைப் பார்த்துச்சுளகென்பார். முழுவுரு அறிதற்கு முயலார். ஆயின் முற்றுந் தெரிந்ததாய் முரசறைவார். சொல்லின் பொருளறியார். ஆயின் சொல்லழகில் சொக்கி நிற்பார். 'இஸம்' பல பகர்வாராயின் 'இஸம்' புரியார். குழுச் சேர்த்துக் குளிர் காய்வார். இருப்போ தற்செயல். தற்செயலுக்குள் இவர்தம் தற்செயற் தந்திரம் தான் என்னே! நிலையற்றதனுள் நிலைப்பதற்காயிவர் போடும் ஆட்டம் தான் என்னே! புரிந்து கொள்ளப் படிக்கார். அறிந்து கொள்ளப் படிக்கார். புலமை பகிர்வதற்கன்றிப் பகர்வதற்காய்ப் படிப்பார். ஆனை பார்க்கும் அந்தகரே! தனியறிவை இணைத்தறிய என்றுதான் முயல்வீர்? https://mail.vaarppu.com/poem/573
  7. ஜோ பைடனின் அரபு தலைவர்கள் உடனான சந்திப்பு ரத்து ஹமாஸ் அமைப்பு தாக்குதலுக்குப் பிறகு காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் காசாவில் உள்ள மக்கள் ஏவுகணை தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் திங்கட்கிழமை (17) காசாவில் உள்ள மருத்துவமனை ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. இதில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் தாக்கியதாக காசா மற்றும் பலஸ்தீன அதிகாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செவ்வாய்க்கிழமை (18) இஸ்ரேல் சென்று ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஜோ பைடன் ஜோர்டான் மன்னர் அப்துல்லா, எகிப்து அதிபர், பாலஸ்தீன தலைவர் ஆகியோரை சந்தித்து பேச இருந்தார். இதனால் காசா- இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு ஜோ பைடன் அமெரிக்கா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/அரபு-தலைவர்கள்-உடனான-சந்திப்பு-ரத்து/50-326307
  8. ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்து புரிந்த தாக்குதலும், சாதாரண மக்களை மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்ததும், குழந்தைகள் உட்பட பலரைக் கடத்தி பணயக் கைதிகளாக வைத்திருப்பதும் பலஸ்தீனர்களின் வரலாற்றில் மிகமோசமான கட்டம். ஹமாஸின் இந்த மோசமான படுகொலைகளை எவராலும் நியாயப்படுத்தமுடியாது. முக்கியமாக உரிமைகளுக்குப் போராடும் அடக்கப்பட்ட இனமான தமிழர் நாம் அடிப்படையான மனிதப் பண்புகளை எந்தக் காலகட்டத்திலும் கைவிடக்கூடாது. இந்த வகையில் ஹமாஸ் இஸ்ரேலிய யூத மக்களை கொடூரமாகப் படுகொலை செய்ததையும், பணயக் கைதிகளாகச் சிறைபிடித்து கொடுமை செய்வதையும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். அதேவேளை, ஹமாஸின் தாக்குதலைக் காரணமாக வைத்து இஸ்ரேலிய அரசும், படைகளும் காஸாவில் நடத்தும் மிகமோசமான விமானத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களை கொத்துகொத்தாகக் கொல்வதையும், குடியிருப்புக்களை தரைமட்டமாக்குவதையும், உணவு, குடிநீர், மருத்துவ உதவிகளை முற்றாக முடக்குவதையும், அதற்கும் மேலாக வடகாஸாவின் 10 லட்சத்திற்கு மேலான மக்களை 24 மணிநேரத்தில் வெளியேற உத்தரவு இட்டு மிக மோசமான அவலத்தை உருவாக்குவதையும் ஒருபோதும் ஆதரிக்கமுடியாது. இஸ்ரேலின் காஸா மீதான முற்றுகைக்கும் உள்ளே நிகழப்போகும் பேரழிவுக்கும் அமெரிக்கா, பிரித்தானியா உட்பட மேற்குநாடுகளும், கையாலாகாத ஐ.நா. சபையுமே காரணம். இஸ்ரேலின் “தாக்குதல் தவிர்ப்பு வலயம்” ஆன தெற்கு காஸாவும் மிகமோசமான தாக்குதலுக்கு ஆளாகும். ஹமாஸை அழித்துத் துடைக்க என்று தாக்குதலை நடாத்தும் இஸ்ரேல், காஸாவில் வாழும் ஒட்டுமொத்த பலஸ்தீனர்களை அழிக்கவும், முழுமையாக வெளியேற்றவும் இந்தத்தாக்குதலை உச்சமாகப் பாவிக்கும். நாம் இதனைப் “பொப்கோர்னை” கொறித்துக்கொண்டு வேடிக்கை பார்க்கக்கூடாத். குறைந்த பட்ச மனித நேயமுள்ள அனைவரும் ஒட்டுமொத்த பலஸ்தீன மக்களைப் பழிவாங்கும் இஸ்ரேலின் பேரழிவு தரும் தாக்குதலை எதிர்க்கவேண்டும்.
  9. மிருசுவில் படுகொலை வழக்கு….! பொது மன்னிப்பிற்கு எதிரான மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் அதிரடி அனுமதி மிருசுவில் படுகொலைகளைச் செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கியமையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்ய இலங்கை உச்சநீதிமன்றம் இணங்கியுள்ளது. அந்த படுகொலைச் சம்பவத்தை செய்த குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட சார்ஜண்ட் சுனில் ரத்நாயக்கவிற்கு மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பதவியிலிருந்து விலகும் நிலைக்கு தள்ளப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். இதை எதிர்த்து கொழும்பிலுள்ள மாற்றுக் கொள்ளைகளுக்கான நிலையம் மற்றும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தொடர்ந்த வழக்கை விசாரிக்க இலங்கை உச்ச நீதிமன்றம்(13.10.2023) அனுமதியளித்தது. 2000ஆம் ஆண்டு டிசம்பரில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மிருசுவில் கிராமத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 8 தமிழ் பொதுமக்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில் 2015 ஆம் ஆண்டு சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க குற்றவாளியாக கொழும்பு உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். மிருசுவில் படுகொலை வழக்கு….! பொது மன்னிப்பிற்கு எதிரான மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் அதிரடி அனுமதி | Mirusuvil Massacre Case Allowed To Hear Petition மேலும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் 2019 இல் உறுதி செய்தது. எனினும், கோவிட் பெருந்தொற்றுக்கால நெருக்கடியின் போது அதைச் சமாளிக்க இலங்கை போராடிக் கொண்டிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ச 2020 மார்ச் 26 அன்று, அவருக்கு பொது மன்னிப்பு வழங்கினார். இதை எதிர்த்து இப்போது மேல் முறையீடு செய்யப்பட்டுள்ள வழக்கில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறுப்பினர்களும் இணைந்துள்ளனர். இந்த மனுவை மேலும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், எதிர்மனுதாரர்களுக்கு பதில் அளிக்க கால அவகாசம் அளித்து, வழக்கின் விசாரணையை 2024 மே 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. உள்நாட்டில் இடம்பெயர்ந்த மிருசுவிலை சேர்ந்த ஒன்பது அப்பாவி தமிழ் பொதுமக்கள் தங்களின் பூர்வீக வீட்டிற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இரண்டு இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கண்கள் கட்டப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அதில் ஒரு இளைஞர் தப்பினார். மீதமுள்ளவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு அவர்களின் உடல்கள் அருகிலேயே புதைக்கப்பட்டன. இதையடுத்து கைது செய்யப்பட்ட சுனில் ரத்நாயக்க மீது வழக்கு தொடுக்கப்பட்டு அது 13 ஆண்டுகள் நடைபெற்றது. பின்னர் 2015 ஜூலை மாதம் கொழும்பு உயர்நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டார். தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணையின் பின்னர் நீதிபதிகள் 9 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என உறுதி செய்தனர். இதையடுத்தே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் சுமார் ஐந்து தசாப்தங்களாக இலங்கையில் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த வேளையில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “தாமதங்கள் இருந்த போதிலும், வழங்கப்பட்டபோது இது ஒரு அரிய நிகழ்வு” எனக் கூறியது. மன்னிப்பு வழங்க அதிகாரம் இலங்கை அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு மன்னிப்பு வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, ஆனால் குற்றவாளி மரண தண்டனை விதிக்கப்பட்டவராக இருக்கும் போது கூடுதல் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். கூடுதலாக, ஜனாதிபதி எந்தவொரு அதிகாரத்தையும் நியாயமாகவும், பொது நலனுக்காகவும் மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என்கிறது அரசியல் யாப்பு. எவ்வாறாயினும், இந்த வழக்கில் ரத்நாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான தீர்மானம் தன்னிச்சையானது, நியாயமற்றது, சட்டத்திற்கு புறம்பானது மற்றும் பொதுநலன் கருதி எடுக்கப்படவில்லை என்பது மனுதாரர்களின் நிலைப்பாடாகும். மேலும் ரத்நாயக்கவுக்கு உரிய சட்டவழிமுறைகள் அளிக்கப்பட்டன எனவும் நீதிபரிபாலனத்தில் பிறழ்வு ஏதுமில்லை எனவும் அந்த நிலையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது ”உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் தண்டனையை உறுதிசெய்துள்ள நிலையில், ஒரு குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்குவது நீதித்துறையின் சுதந்திரத்தை குறைத்து மதிப்பிடுவதாகவும் , சட்டத்தின் ஆட்சியை அவமதிப்பதாகவும் மனுதாரர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு மன்னிப்பு என்பது மக்களின் இறையாண்மையையும், அரசியலமைப்பின் 12 (1) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளையும் மீறுவதாகும் என்று மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச சட்டத்தரணிகள் அமைப்பு (ICJ) அந்த நேரத்தில் இந்த பொது மன்னிப்பைக் கண்டித்து “இந்த மன்னிப்பு இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பின் மீது கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்று கூறியது. மரண தண்டனை நீக்கப்பட்டதை ICJ வரவேற்றிருந்த போதிலும், இலங்கை அரசாங்கம் தன்னிச்சையான முறையில் அத்தகைய மன்னிப்பை வழங்கியதை கடுமையாக விமர்சித்தது. 2020ஆம் ஆண்டில் மன்னிப்பு வழங்கப்பட்ட நேரத்தில் ICJ இன் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய இயக்குனர் பிரடெரிக் ரவாஸ்கி கூறினார். “அத்தகைய மன்னிப்பானது தண்டனையின்மை மற்றும் நீதிக்கான அணுகல் தொடர்பான சர்வதேச நியமங்கள் மற்றும் தரங்களுடன் பொருந்தாது, மேலும் மிகவும் கொடூரமான குற்றங்களுக்கு கூட இராணுவத்திற்கு எந்தவொரு பொறுப்புக்கூறலிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது என்று நன்கு நிறுவப்பட்ட பொதுக் கருத்தை வலுப்படுத்துகிறது”. மேலும், சட்டவிரோதமாக பொதுமக்கள் கொல்லப்படுவது போன்ற கடுமையான குற்றங்களுக்கு, அத்தகைய மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான உரிமைக்கு முரணாக பொது மன்னிப்பு இருக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார். https://akkinikkunchu.com/?p=258337
  10. வட காஸா மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு! வட காஸாவில் உள்ள 10 லட்சம் மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய 6-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்கள் அடுத்த 24 மணி நேரத்தில் துரிதமாக தெற்கு பகுதிக்கு வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்கள், பள்ளிகள் உட்பட அனைத்து இடங்களில் உள்ள பாலஸ்தீனியர்களை உடனே வெளியேறவும் அறிவுறுத்தியுள்ளது. http://www.samakalam.com/வட-காஸா-மக்களை-உடனடியாக-வ/
  11. இஸ்லாமியருக்கும், கிறிஸ்த்தவர்களுக்கும் யூதர்தான் மூதாதை. ஆனால் யூதருக்கு லெமூரியக் கண்டத்தின் தமிழர்தான் மூதாதை!!! ‘அகண்ட இஸ்ரேலும்’ ஆவேச பாலஸ்தீனமும்! - எஸ்.பி.ராஜேந்திரன் அக்டோபர் 9, 2023 செப்டம்பர் 22, 2023. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தில் அந்த நபர் பேசிக் கொண்டிருந்தார். திடீரென ஒரு வரைபடத்தை எடுத்து அவையோரிடம் காட்டி, இனி இதுதான் ‘புதிய மத்திய கிழக்குப் பிரதேசம்’ (The New Middle East) என்று கூறினார். பலரும் அந்த வரைபடத்தை உற்று நோக்கினார்கள். அதில் பாலஸ்தீனம் என்ற ஒரு நாடே இல்லாமல் செய்யப்பட்டிருந்தது. அந்த வரைபடத்தை மிகுந்த இறுமாப்போடு, தான் செய்து கொண்டிருப்பது முற்றிலும் ஒரு சட்ட விரோத காரியம் என்பதை உணர்ந்தே வெளியிட்டவர் வேறு யாருமல்ல, இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நேதன்யாகு. 56 சதவீதமும் 78 சதவீதமும் 1947இல் யூத மக்களுக்கு சொந்தமாக ஒரு நாடு வேண்டும் என்பதற்காக ஐ.நா. சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு பாலஸ்தீனத்தின் 56 சத வீத நிலப்பகுதியை பிரித்து அவர்களை குடியேற்றம் செய்ய வைத்து, இஸ்ரேல் எனப் பெயரிடப்பட்டது. ஆனால் பாலஸ்தீனத்தை பிரித்து சரிபாதிக்கும் அதிகமான நிலப்பகுதியை வேறொரு நாடாக மாற்றுவதை அன்றைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஏற்கவில்லை. எனினும் இஸ்ரேல் என்ற நாடு உருவாகி விட்டபின்னர் 1950ல்தான் இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்தது என்பது தனி வரலாறு. உருவானது முதலே இஸ்ரேலின் ஆட்சியாளர்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக, ஏவலாளிகளாக, பாலஸ்தீன மக்களை அழித்தொழிக்கும் இனவெறி கொண்டவர்களாக செயல்பட்டார்கள். 1947-48இல் அதிபயங்கரமான தாக்குதல் சம்பவங்களை இஸ்ரேல் அரங்கேற்றியது. பாலஸ் தீனத்தின் ஐநூறுக்கும் மேற்பட்ட கிராமங்களை இஸ்ரேல் ராணுவம் அழித்தொழித்தது. 7.5 லட்சம் பாலஸ்தீனர்கள் வீடுகளை இழந்து, கிராமங்களையும், நகரங்களையும் இழந்து அகதிகளாக நின்றார்கள். இதையொட்டி நடந்த மோதல்களில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள், இஸ்ரேலிய ராணுவத்தினர் மற்றும் யூத இனவெறி கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார்கள். 56சதவீத நிலப்பகுதிக்கு பதிலாக இஸ்ரேலிய அரசு பாலஸ்தீனத்தின் 78 சத வீத நிலப்பகுதியை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டது. இந்த பாலஸ்தீனப் பேரழிவின் 75ஆம் ஆண்டு, சமீபத்தில் 2023 மே மாதம் நினைவு கூரப்பட்டது. அன்று துவங்கிய பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இன அழிப்பு கடந்த 75 ஆண்டுகளாக - உலக நாடுகள் அனைத்தும் கண்டித்த போதிலும், ஐக்கிய நாடுகள் சபையில் எண்ணற்ற தீர்மானங்கள் நிறைவேற்றிய போதிலும்- அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் கொடூரமான முறையில் இப்போது வரை நீடிக்கிறது. 1947-48 இல் நடந்த இஸ்ரேலின் மிகப் பெரும் இனஅழிப்பு நடவடிக்கையில் வாழ்விடங்களை இழந்த பாலஸ்தீனர்கள் மேற்குகரையிலும் காசா திட்டுப் பகுதியிலுமாக குடியேறினர். ஏராளமானோர் லெபனான், சிரியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். அன்று முதல் இஸ்ரேல் பாலஸ்தீனை படிப்படியாக ஆக்கிரமித்து, மேற்குகரையில் ஒரு சிறிய பகுதி மற்றும் காசா நகரம் ஆகிய இரண்டு இடங்கள் தவிர அனைத்து பகுதிகளையும் தன்வசமாக்கிவிட்டது. தற்போது வெறும் ஏழு சதுர கிலோ மீட்டர் அளவிற்கு மட்டுமே பாலஸ்தீனர்கள் வாழும் பகுதியாக உள்ளது. ‘அகண்ட இஸ்ரேல்’ இந்தப் பகுதியையும் அழித்து, இங்குள்ள பாலஸ்தீனர்களை முற்றாக ஒழித்து, வேறு நாடுகளுக்கு விரட்டி, நாடற்றவர்களாக ஆக்குவதுதான் இஸ்ரேலின் தற்போதைய திட்டம். இதைத்தான் பெஞ்சமின் நேதன்யாகு ஐ.நா. பொதுச் சபையில் பகிரங்கமாக முன்வைத்தார். அவர் வெளியிட்ட வரைபடத்தில் சிரியா மற்றும் லெபனானின் சில பகுதிகளை யும் உள்ளடக்கி ‘அகண்ட இஸ்ரேல்’ (Greater Israel) என்று பெயரும் வைத்து விட்டார். இவருக்கு முன்பே இந்தாண்டு துவக்கத்தில் இஸ்ரேல் நிதியமைச்சர் பெசாலல் ஸ்மோட்ரிச், பாலஸ்தீனம், லெபனான், சிரியா ஆகிய மூன்று நாடுகளையும் அழித்து, ஒரு வரைபடத்தை வெளியிட்டார். இவையனைத்தும் உள்ளடக்கியதுதான் நாங்கள் எதிர்நோக்கும் அகண்ட இஸ்ரேல் என்று அறிவிக்கவும் செய்தார். ஹமாஸ் இயக்கத்தினர் அதிரடியாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதன் பின்னணி இதுதான். பாலஸ்தீனத்தின் காசா பகுதி ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதற்கு முன்பு மேற்கு கரை மற்றும் காசா இரண்டுக்குமான தலைமையிடமாக மேற்குகரையில் உள்ள ரமல்லாவே இருந்தது. பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO)இந்த ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்களை உணர்வூட்டி, இஸ்ரேலின் அட்டூழியங்களுக்கு எதிராக எண்ணற்ற போராட்டங்களை நடத்தியது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராபத் தலைமையில் இந்த எழுச்சி நீடித்து வந்தது. ஏராளமான பேச்சுவார்த்தைகள், அமைதி முயற்சிகள், இஸ்ரேலின் மீறல்கள், பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதல்கள், மேலும் மேலும் ஆக்கிரமிப்பு என வரலாறு நெடுகிலும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் களத்தில் நின்று சந்தித்தது. ஆனால் சுதந்திர பாலஸ்தீனத்துக்கான தீர்வு கிடைக்கவில்லை. இஸ்ரேலின் கொடிய அடக்குமுறைகள் தீரவில்லை. ஹமாஸ் இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் இந்த பின்னணியில், ரமல்லாவை தலையிட மாகக் கொண்ட பாலஸ்தீன விடுதலை இயக்கம் தலைமையிலான நிர்வாகத்தை காசா பகுதியில் செயல்பட்டு வந்த ஹமாஸ் இயக்கம் ஏற்க மறுத்தது. யாசர் அராபத்தும் மறைந்த நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டமே தீர்வு என்ற முடிவு டன் ஹமாஸ் இயக்கம் மக்களை அணிதிரட்ட துவங்கியது. காசா பகுதியில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுத வழி போராட்டத்தை உறுதியுடன் மேற்கொண்டது. ஏற்கெனவே கடும் ஒடுக்குமுறையை மேற்கொண்டிருந்த இஸ்ரேல், ஹமாஸ் தலைமையிலான காசா பகுதியை மேலும் மேலும் முற்றுகையிட்டு, குண்டுமழை வீசி சல்லடையாக துளைத்தது. காசாவில் 2008க்கு பிறகு இது வரை சுமார் 1.5 லட்சம் பாலஸ்தீன மக்களின் உயிரைப் பறித்துள்ளது இஸ்ரேலிய ராணுவம். இவர்களில் 33ஆயிரத்திற்கும் அதிகமானோர் குழந்தைகள். தற்சமயம் 20 லட்சத் திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் காசா, உலகிலேயே மிக மிக மோசமான முறையில் சிதைக்கப்பட்ட, எதிர்காலம் முற்றிலும் சூனியமாக்கப்பட்ட நகரம். ஐ.நா.சபையின் தோல்வி 75 ஆண்டு கால வரலாற்றில் பாலஸ்தீனத்திற்கு உரிய நியாயத்தை உறுதி செய்வதில், ஐக்கிய நாடுகள் சபை அப்பட்டமாக தோல்வியடைந்துள்ளது. ஐ.நா. சபையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொண்டு வரப்பட்ட ஒரு தீர்மானத்தைக் கூட அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆதரித்ததில்லை. மாறாக, இஸ்ரேலை ஏவலாளியாக பயன்படுத்தி வளைகுடா பிரதேசத்தில் நிரந்தரமான பதற்றத்தை நிலவச் செய்வதில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது. இத்தகைய பின்னணியில்தான், இஸ்ரேலில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள அதிதீவிர வலதுசாரியான பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான அரசு, பாலஸ்தீனத்தையே முற்றாக அழிப்பது என்ற நோக்கத்துடன் மேற்கொண்ட நகர்வுகள், ஹமாஸ் உள்ளிட்ட பாலஸ்தீன மக்களின் இயக்கங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுப்பதே பொருத்தமானது என்று, மிகுந்த நுட்பத்துடன் திட்டமிட்டு, இஸ்ரேலின் வலுவான உளவு அமைப்புகளின் கண்களில் மண்ணைத் தூவி, வலுவான தாக்குதலை நடத்தியுள்ளது ஹமாஸ் இயக்கம். இதற்கு இஸ்ரேல் தரப்பில் எதிர்வினை கடுமையாக இருக்கும் என்பது தெரிந்ததே. கடந்த இரண்டு நாட்களாக ‘போர்’ அறிவித்து காசாவை இன்னும் கடுமையாக தாக்கி வருகிறது இஸ்ரேல். இந்தியா என்ன செய்ய வேண்டும்? இத்தனை ஆண்டுகளாக தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றிக் கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபை இப்போதேனும் பாலஸ்தீன மக்களின் தாய்நாட்டிற் கான சட்டப்பூர்வமான உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்; கிழக்கு ஜெருசலேமை தலைநகராக கொண்டு சுதந்திர பாலஸ்தீனம் என்ற தனி நாட்டை உருவாக்குவது என ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக அமலாக்க வேண்டும்; பாலஸ்தீனத்தின் ஒட்டுமொத்த பகுதிகளிலிருந்தும் இஸ்ரேல் குடி யிருப்புகளும் ராணுவமும் அகற்றப்பட வேண்டும். இதுதான் தீர்வு. ஆனால் இந்தத் தீர்வை எட்டுவதற்கு ஆயுத மோதலோ, உயிர் பறிக்கும் கொடிய போரோ வழி அல்ல. இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளும் - அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அலட்சியம் செய்து - இஸ்ரேலை முற்றாக தனிமைப்படுத்தி, அதன் மூலம் அரசியல் தீர்வுக்கு வரச் செய்ய வேண்டும். அத்த கைய தீர்வை நோக்கி உலகை உந்தித் தள்ளுவதில் இந்திய அரசுக்கும் முக்கியப் பங்கு உண்டு. https://theekkathir.in/News/articles/உலகம்/greater-israel-and-palestinian-palestine
  12. புலனாய்வில் கோட்டைவிட்டதா மொஸாட்? எல்லைகளை இறுக்கமாக வைத்திருக்கவேண்டிய இஸ்ரேல் படைகளும் தூங்கிவிட்டன. இவையே ஹமாஸ் ஊடுருவித் தாக்குதல் செய்ய உதவிவிட்டது. இந்தத் தாக்குதல் மூலம் ஹாஸா பகுதி முழுவதும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்படும். பலஸ்தீனியர்கள் இனி ஹாஸாவில் இருக்கமுடியாது போகும் போலத் தோன்றுகின்றது. எனக்கு சஹ்ரான் குழுவினர் எப்படி ஈஸ்டர் படுகொலைகளைச் செய்தார்களோ, அதுபோல இதுவும் இஸ்ரேலியர்களை ஒன்றிணைக்க மறைமுகமாகவும் திட்டமிட்டு செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தோன்றுகின்றது.
  13. தலைமுறை தலைமுறையாக பலஸ்தீனர்களை திறந்தவெளிச் சிறை போல மேற்குக்கரையிலும், ஹாஸாவிலும் ஆயுத பலத்தைக் காட்டி அடக்கிவைத்திருக்கும் இஸ்ரேலும், அதற்கு முட்டுக்கொடுக்கும் அமெரிக்காவும், ஒற்றுமையில்லாத மத்தியகிழக்கு நாடுகளும், பாலஸ்தீனம்- இஸ்ரேல் இரண்டும் இருநாடுகள் என்ற தீர்வை கொடுக்கமுடிடியாத வலுவற்ற ஐ.நா. அமைப்பும் இன்றைய தாக்குதலுக்கும், பொதுமக்களின் உயிரழப்புக்களுக்கும் பதில் சொல்லவேண்டியவர்கள். எதிர்வரும் நாட்களில் இஸ்ரேல் கொடூரமான முறையில் இன்னும் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்களைக் கொன்றழிக்கும்போது இந்த சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கும்.
  14. நான் ஒருபோதும் சாம்சுங் பொருட்கள் வாங்குவதில்லை என்ற கொள்கையுடன் இருக்கின்றேன். ஏனெனில் நான் முன்னர் வேலையில் இருந்த chipset கொம்பனியில் உள்ளவர்களை சாம்சுங் தென்கொரியாவில் மிக மோசமாக நடாத்தினார்கள். 7 நாட்களும் 16 மணித்தியாலம் வேலை செய்ய வைத்தார்கள். இதனால் முக்கியமான என்ஜினியர்கள் வேலையை விட்டு விலகியிருந்தனர். அவர்கள் கூறிய அனுவத்தில் இருந்து சாம்சுங் பொருட்களை வாங்குவதில்லை என்று முடிவெடுத்தேன். 2016 வரை நான் எனது பணத்தைச் செலவழித்து ஃபோன் வாங்கியதில்லை. எப்போதுமே லேட்டஸ்ட் நொக்கியா ஃபோன் இருந்தது! கடைசியில் நான் வேலை செய்த ஃபோன் 2016 வரை வைத்திருந்தேன். அதன் பின்னர் அப்பிளுக்கு மாறிவிட்டேன். iPhone 15 Pro Max எனது இரண்டாவது அப்பிள் ஃபோனாக இருக்கும்! 2011 - 2016 வரை வைத்திருந்த நொக்கியா ஃபோன்கள்! மூன்று வர்ணங்களிலும்!
  15. ‘ஐபோன் 15’… களமிறக்கிய ‘ஆப்பிள்’: விலை, சிறப்பம்சங்கள் என்ன? monishaSep 13, 2023 09:18AM ஐபோன் 15 சீரிஸ் அறிமுகம் இணையவாசிகள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த ‘ஐபோன் 15’ தொடரின் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 போன்களை, ஆப்பிள் நிறுவனம் தனது ‘வண்டர்லஸ்ட்’ நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ரூ.79,900 என்ற துவக்க விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஐபோன்கள், ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் வழக்கமான ‘லைட்னிங்’ சார்ஜிங் போர்ட் வசதியுடன் இல்லாமல், முதன்முறையாக ‘டைப் – சி’ போர்ட் வசதியுடன் அறிமுகமாகியுள்ளது. ஐபோன் 15 (iPhone 15) & ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) 512ஜிபி வரை சேமிப்பு அம்சம் கொண்ட இந்த ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ், இந்தியாவில் முறையே ரூ.79,990 மற்றும் ரூ.89,990 என்ற துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2 நானோ சிம்களை இணைக்கும் வசதி கொண்ட இந்த ஐபோன்களில், ஐபோன் 15 6.1-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED திரையுடனும், ஐபோன் 15 பிளஸ் 6.7-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED திரையுடனும் அறிமுகமாகியுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் பயன்படுத்தப்பட்ட ஏ16 பயோனிக் சிப்பே இந்த ஐபோன்களிலும் நிறுவப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை, இந்த 2 ஐபோன்கள் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா என 2 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. இந்த கேமராக்கள் 4x ஆப்டிகல் ஜூம் வசதியையும் கொண்டுள்ளது. செல்ஃபிகளுக்காக 12 மெகாபிக்சல் ட்ரூ-டெப்த் கேமராவை ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது. கருப்பு, நீலம், பச்சை, மஞ்சள் மற்றும் பிங்க் என இந்த ஐபோன்கள் 5 வண்ணங்களில் விற்பனைக்கு வரவுள்ளன. ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஃபோன்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 15 அன்று துவங்கும் என்றும், அவை செப்டம்பர் 22 அன்று விற்பனைக்கு வரும் என்றும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) & ஐபோன்15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) ஐபோன் 15 போல் இல்லாமல், ஆப்பிளின் புதிய ‘ஏ17 பயோனிக்’ சிப்புடன் அறிமுகமாகியுள்ள ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஐபோன்கள், இந்தியாவில் முறையே ரூ.1,34,900 மற்றும் ரூ.1,59,900 என்ற ஆரம்ப விலைகளில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஐபோன்கள் 1டிபி வரை சேமிப்பு வசதி கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 15 ப்ரோ 6.7-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED திரையையும் மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் 6.7-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED திரையையும் கொண்டுள்ளது. 3 பின்புற கேமராக்களை கொண்டு இந்த ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் 3x டெலிபோட்டோ கேமரா என 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபிகளுக்காக ஐபோன் 15 சீரிஸ் போன்களை போலவே, ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் ஐபோன்களிலும் 12 மெகாபிக்சல் ட்ரூ-டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் முன்பதிவும் செப்டம்பர் 15 அன்றே துவங்க உள்ளது. செப்டம்பர் 22 அன்று இந்த ஐபோன்கள் விற்பனைக்கு வருகின்றன. கருப்பு டைட்டேனியம், வெள்ளை டைட்டேனியம், நீல டைட்டேனியம், நேச்சுரல் டைட்டேனியம் என 4 வண்ணங்களில் இந்த ஐபோன்கள் கிடைக்க உள்ளன. ஆப்பிள் வாட்ச் 9 சீரிஸ் & ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 ஐபோன் 15 சீரிஸ்ஸ் போன்களுடன், ஆப்பிள் வாட்ச் 9 சீரிஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 என ஸ்மார்ட்-வாட்ச்களையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அலுமினியம் & ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என 2 வகைகளில், மிட்நைட், ஸ்டார்நைட், சில்வர், சிவப்பு, பின்க் என 5 வண்ணங்களில், இந்தியாவில் ரூ.41,900 என்ற விலையில் ஆப்பிள் வாட்ச் 9 சீரிஸ் விற்பனைக்கு வரவுள்ளது. மறுபுறத்தில், அல்பைன் லூப், டிரைல் லூப், ஓசென் பேண்ட் என 3 வகைகளில், 9 வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2, இந்தியாவில் ரூ.89,900 என்ற விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த 2 ஸ்மார்ட் வாட்ச்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிய நிலையில், மற்ற ஐபோன்களை போலவே இவையும் செப்டம்பர் 22 அன்று விற்பனைக்கு வரவுள்ளது. https://minnambalam.com/archives-trending-news-in-tamil/what-are-the-special-features-of-apple-iphone-15-series/
  16. அமைப்பில் சிறந்த ஆளுமையுள்ள பல போராளிகளை உருவாக்கிய போர்ப்பயிற்சி ஆசான்” மேஜர் செல்வராசா மாஸ்ரர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்ப கால சிறந்த போர்ப்பயிற்சி ஆசாண் மேஜர் செல்வராசா மாஸ்ரர்/அன்பு…! “புலிகள் அமைப்பில் சிறந்த ஆளுமையுள்ள பல போராளிகளை உருவாக்கிய போர்ப்பயிற்சி ஆசான்” இப்பிடித்தான் 1990களில் சண்டைகள் இல்லாத நேரங்களில் அண்ணை தளபதி மாரை தான் நிக்கிற இடத்துக்கு கூப்பிட்டு ஏதாவது போட்டி நடக்கும். பெரும்பாலும் அது துப்பாக்கி சூட்டுப்போட்டியா தான் இருக்கும். ஒருநாள் ரெண்டு கையிலை, ரெண்டு துவக்கு தூக்கிர போட்டி ஒண்டை வைச்சார். உது ஈஸி தானே? எண்டு “ரம்போ” கணக்கா யோசிக்கக்கூடாது. அவர் வச்ச போட்டி என்னண்டா.! ரெண்டு துவக்கை முன் நுனி பெரலில பிடிச்சு தூக்கி, நீட்டி வச்சிருக்கோணும்.! போட்டி SMG இல தொடங்கி,AK, SLR, எண்டு போய், கடைசியில இந்தியன்ற பிறண் LMG இல வந்து நிண்டிச்சுது. போட்டியில எல்லாரும் தோத்து போக, ரெண்டு பிரண் LMG ஐ தூக்கி செல்வராஜா மாஸ்ட்டர் முதலாம் இடம் பிடிச்சார். அவருக்கு 30- 9mm ரவுண்ஸ் பரிசா அண்ணையிட்டை இருந்து கிடைச்சுது. மாஸ்டர் அடிக்கடி பெடியளுக்கு உடம்பை இறுக்கோணும்! உடல் பயிற்சி செய்யுங்கோ எண்டு கத்திரத்தின்ற அர்த்தம் அண்டைக்கு விளங்கிச்சுது. எங்கட ஊர் “ரம்போ” எங்கட மாஸ்ட்டர் தானே. பெடியள் ஏதாவது குழப்படி செய்தால் அண்ணை சொல்லுற வசனம், “செல்வராஜாட்டை ட்ரெயினிங் எடுத்திருந்த உந்தப்பிழை வந்திருக்காது” எண்டுவார். இதுவே மாஸ்ட்டரின் தகுதிக்கான விருது. செல்வராசா மாஸ்ரர் இன் போராட்ட காலப்பகுதியின் முக்கிய நினைவில் இதுவுமொன்று அந்த காலப்பகுதியில் அதாவது இந்திய இராணுவ ஆதிக்கத்தில் மட்டுவிலில் தலைவரின் மனைவியும் பிள்ளைகளும். ஆள்மாறி ஆள்விட்டு – அங்கும், எங்கும் விசாரித்தபோது வந்தது வின்சனின் வீரச்சாவுச் செய்தி!. மட்டுவில் செல்லப்பிள்ளையார் கோயிலடி சிலுவில் வயல்வெளியில், மதியக்காவும், பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் கிடந்தது வின்சனின் வித்துடல் இந்தியப்பத்திரிகை நிருபர் அனிதா பிரதாப் எழுதிய “இரத்தத்தீவு” (Island of Blood)) எனும் நூலில் குறிப்பிடப்படும் வின்சன் இவராவார். அக்காவையும், பிள்ளைகளையும் காணிக்கை அண்ணரின் வீட்டருகில் இருந்த நடராசா ஐயாவின் வீட்டில் – மட்டுவில் மகேஸ் வீட்டில் – சந்தித்துவிட்டு திரும்பும் வேளையில் இந்தியப்படை எதிர்கொண்டது. தப்பும் முயற்சியும் முடியாமல் போக, சயனைட் அருந்தி தலைவரின் குடும்பத்தையும், தமிழீழத்தின் மானத்தையும் காத்து தன்னுயிர் கொடுத்து நின்றான் வின்சன். வின்சன் வீரச்சாவடைந்த சோகமும், தலைவரின் குடும்பத்தைப் பாதுகாத்து விட்டான் என்ற நிம்மதியுமாக, அன்றைய தமிழ்ச்செல்வனின் உணர்வுகள் – அவனது நினைவில் அழியாதவை. இனி வேறு வழியில்லை என்றானபோது குழந்தைகளைத் தனியாக வேறிடம் அனுப்புவதென்றும், தாயாரை தனியே நகர்த்துவதென்றும் முடிவானது. “தாயும் – இருபிள்ளைகளும்” என்ற அடையாளத்தைநோக்கி வேட்டையாட அலையும் இந்தியப் படைகளிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற இந்தமுடிவு தவிர்க்க முடியாததானது. இந்தியப்படையைக் கலக்கிய கச்சாயைச் சேர்ந்த கந்தண்ணை இந்தியப்படை சூழ்ந்துநிற்க கச்சாய் – புங்கம்பிள்ளையார் கோயிலடிக்கரையில் கந்தண்ணை ஒழுங்குசெய்த மரத்தோணியில் ஏற்றி மதியக்காவை சொர்ணத்திடம் பொறுப்புக் கொடுத்தார்கள் தமிழ்ச்செல்வனும் அவனது அணியினரும். தென்மராட்சியில் இந்திய இராணுவத்தினருக்கு முகம் கொடுக்கத்தக்க, புடம் போடப்பட்ட போராளிகள் பலர் தமிழ்ச்செல்வனின் அணியில் இருந்தனர். தலைவரின் குடும்பம் தென்மராட்சியிலிருந்து இடம்மாறிய பின்னரும் அங்கு புலி அணியினரைத் தேடிய பாரதப் படையினர் பாவம், பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. மிருசுவிலில் தினேசுடன் பரணியும், அம்மாவும், மகேந்தியும் நிற்பதாய் தேடிப் போவார்கள். எல்லாச் சோதனையும் முடிந்து ஊர்ச்சனத்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டு படையினர் முகாம் திரும்பும்வேளை, சுற்றி வளைப்புக்குப் போகாத குடுகுடு ஆச்சியின் சோற்றுக் குழையல் உருண்டையில் பசிபோக்கிக் கொண்டிருப்பார்கள் இவர்கள். மட்டுவிலில் புலிகள் நிற்பதாக அறிந்து ஊரை வளைத்திருப்பர் இந்தியப் படையினரும், அவர்தம் கைக்கூலிகளும். வயலிற்கு வேலைசெய்யும் கணவனுக்கு என்று சொல்லி அந்த அம்மா கொண்டுவந்த கஞ்சியைக் குடித்துக் கண்பனிப்பர் குணாவும், பாப்பாவும், மந்துவிலில் ஆஞ்சியும் (இளம்பருதி), ரவி அண்ணையும் அப்போதும் கூடநிற்பதைத் தெரிந்துதான் பெரும் படையாய்ப் போனார்கள் இந்தியப் படையினர். வீதியின் முன்புறத்துச் சிறுவனும், தோட்டத்துப் பெரியவரும் முன்னரே சொன்னதால் சேற்றுநிலத்து கண்ணாப்பற்றைக்குள் இறங்கி – இந்தியப் படையை ஏமாற்றி வருவார்கள் இவர்கள். இந்திய இராணுவ காலத்தின் 1988 இன் பிற்பகுதி, மணலாற்றுக் காட்டிலிருந்த தலைவர் என்னிடம் யாழ் மாவட்டப் பொறுப்பைத்தந்து வழியனுப்பி வைத்தார். தலைவரின் சொற்படி வல்வெட்டித்துறையில் எனது பாதுகாப்பிடத்தை அமைத்துக் கொண்ட பின்னர், நாம் ஆயுதஅணியாகச் சென்றது தென்மராட்சிக்குத்தான். கிட்டண்ணா யாழ்ப்பாணம் புறப்படும்போது தலைவர், “வல்வெட்டித்துறையில் நின்றுகொண்டு செயற்படு, அங்கேயுள்ள சனம் உனக்குப் பாதுகாப்பைத் தரும்” என்றும், புதியவர்கள் வந்தால் இலகுவாக அடையாளம் காணக் கூடியபடியாக அவ்வூரில் புவியியல், சமூக அமைப்புள்ளமை போன்ற விடயங்களைச் சொல்லித்தந்து வழியனுப்பினார். அவ்வேளையில் உடனிருந்த கிட்டண்ணை “வல்வெட்டித்துறைக்குப் போகவேண்டா மென்று சொல்லவில்லை, அதற்குப் பிறகு நீ போய் தினேசைப் பிடி” என்றார். அதாவது தினேஸ் உங்களுடன் ஒத்துழைப்பான் என்பதும், தென்மராட்சியின் பெரும் தென்னை மரங்களும், மாஞ்சோலைகளும், புதர்க்காடுகளும் நல்ல பாதுகாப்பைத் தரும் என்பதும் கிட்டண்ணையின் கருத்தாக இருந்தது. புலியணிகளின் வரணித்தளம் அங்கு தென்மராட்சியில் நாவற்குழியிலிருந்து பளைவரை இருந்த அனைவரையும் மிருசுவிலில் ஒன்றாக்கித்தந்தான் தினேஸ். தென்மராட்சி அணியினரின் கைத் துப்பாக்கிகளுக்கும் ஓய்வு கொடுத்து பெரியசுடுகலன்களுக்கு (றைபிள்கள்) மாறினோம். அணியானோம். தென்மராட்சி – மந்துவிலில் சிலகாலமும், வரணியில் ஏதோவொரு இந்துக்கோயிலின் அருகாமையில் அதற்கு பொற்கோயில் என பெயரிட்டு பல மாத காலமுமாக அணியாய் தளமமைத்துச் செயற்பட்டோ மென்றால் அது தமிழ்ச்செல்வனது தளம். வரணியூரில் எமதுதேவைக்கு வசதியாக, வாகாக உணவுசெய்து தருவதற்கும், ஊர்ப்புதினம் பார்த்துச் சொல்லவுமாக விநாயகத்தை நியமித்து, தன்னுடன் நின்ற குணா, குணத்தார், செல்வராசா ஆகியோரை ஆமிபார்த்துச் சொல்ல காவல்விட்டு, ஆஞ்சி (இளம்பருதி), ரவியண்ணை, விநாயகம், ரவி, டானியல், ரட்ணா என தனது ஆளணியை என்னோடுநிற்கவிட்டு தளமமைத்துத் தந்தான் தினேஸ். தென்மராட்சியில் தமிழ்ச்செல்வனது அணியினரது வீரம் செறிந்த நாட்கள். வீரம் மட்டுமல்ல போரிடுவதில் போட்டியும், நகைச்சுவையும் கலந்திருந்த மறக்க முடியாத நாட்கள் அவை. சாரங்கட்டிய புலிகள் ஜீன்சுக்கு மாறிய கதை “சாரங்கட்டிய புலியென்று எதிரிநாடு சொன்னதனால், சாரத்தைமாற்றி எல்லோரும் காற்சட்டைகளுக்கு மாறுவோம்”, கதைத்துவிட்டோம். “ஜீன்சிற்கு மாற விரும்புவோர் வாருங்கள்” என்று சொல்ல அங்கிருந்த அணியில் கையை உயர்த்தியவர்கள் இரண்டு பேர் தான். கொஞ்ச நாட்களாக ஜீன்ஸ் போட கையை உயர்த்தியவர்களைப் பார்த்து ஒரே சிரிப்பு – அறுவை – பகிடி, இன்னும் கொஞ்சநாள் கழித்து ஜீன்ஸ் போடாமல் சாரத்துடன் திரிபவர்களைப் பார்த்து அதே சிரிப்பு – அறுவை பகிடி ஆமி ஒருமுறை கலைக்க, அங்குநின்ற ஏழெட்டுப்பேர் ஒன்றாக ஓட ஒருவர்பின் ஒருவராய் ஓடிய எல்லோரும் இரும்புப் படலை ஒன்றை படாத பாடுபட்டு ஏறிக்கடந்து பாய்ந்தோட உயரமேற முடியாத கடைசிஆள் பதறிப் போய் தள்ள படலை முன்னரே திறந்துதான் இருந்ததாம். கச்சாய் றோட்டுப்பக்கமோ அல்லது அந்தப்பகுதியில் எங்கோவோர் இடத்தில் கந்தண்ணையைக் கட்டிப்பிடித்த ஆமியை தோளிலிருந்த துவக்கால் அப்படியே சுட்டுச்சாய்த்துவிட்டு எதிரியின் இரத்தம் தன் உடலெல்லாம் தோய, திரும்பிப் பார்க்காமல் ஒரே ஓட்டமாய் ஓடிவந்ததை சொல்லும் போதும் அந்த இடமெல்லாம் சிரிப்பில் அதிரும். தமிழ்ச்செல்வன் மற்றும் தென்மராட்சி அணியெல்லாம் நாமிருந்த பொற்கோயில் தேடிவந்தால் பம்பலில் கலகலப்பில், சிரிப்பில் அதிரும் எமதிடம். என்னுடன் அணிகளுக்குப் பொறுப்பாகவிருந்த செல்வராசா மாஸ்ரர் குளிக்கும் நேரம்தவிர மற்றநேரமெல்லாம் தன்னுடலில் இருக்கும் ரவைக்கூடுதாங்கியை (கோல்சர்) கழற்றமறுக்கும் செல்வராசா மாஸ்ரர் வந்து முறைப்படுவார், “இவர்கள் வந்தால் ஒரே சிரிப்பும்சத்தமும். சொல்லுக் கேட்கிறார்கள் இல்லை” என. நடேஸ், பாபுவின் வீரச்சாவிற்குப் பதிலடித்தாக்குதல். மீசாலை மண்ணின் மைந்தன் கப்டன் கில்மன் மிருசுவில் – கண்டிவீதி நெடுஞ் சாலையில் – தேவாலய சுற்றாடலில் அமைந்திருந்தது இந்தியப்படை நிலை, மேஜர் சிறி சாரதியாக வர, ரூபனை நடுவிலிருத்தி கைகளில் குண்டுகளேந்தி வெள்ளைச்சட்டை அணிந்து, வயதானவர்போல் தலைப்பாகைக்கட்டுடன், வஞ்சினம் பொங்கும் நெஞ்சுடன் முன்னிருக்கையில் அமர்ந்து சென்றான் தமிழ்ச்செல்வன். அவனது தலைமையில் பார ஊர்தியொன்றில் சென்ற எமது அணியினரின் தாக்குதலை இந்தியப்படை எதிர்பார்க்க வில்லை. நாம் எதிர்பார்த்திருந்ததை விடவும் படையினரது எண்ணிக்கையும் அதிகம்தான்| நல்ல வேளையாக பக்க உதவியாக ஈருருளிகளில் சென்ற ரவியண்ணை, ரேகா, பாப்பாவையும் உட்படுத்திய அம்மானின் அணியும் இன்னொரு பக்கத்தால் தாக்குதலைத் தொடுக்க, வெற்றி எமதானது. நாம் தங்கியிருந்த பொற்கோயிலுக்கு நெஞ்சில் படுகாயமடைந்த ராகுலனுடன் சேர்ந்துவந்தது வெற்றிச் செய்தியுடன் கப்டன் கில்மனின் வீரச்சாவும், வித்துடல் விடுபட்டுவிட்டதென்ற சோகச்செய்தியும், எமது தரப்பில் கப்டன் கில்மன் வீரச்சாவடைய, ராகுலன், பரணி, வீமன் ஆகிய மூவர் காயமடைந்த அத்தாக்குதலில், அங்கு நின்ற தமது நான்கு அணியினரில் ஒரு அணியினர் முழுப்பேருமே ஒரு ரவைகூட திருப்பிச் சுடமுடியாமல் இறந்து போனதையும், மற்றைய அணியில்கூட ஒருவர்மட்டும் தப்பமுடிந்ததையும் சர்தேஸ்பாண்டே என்ற இந்திய இராணுவ அதிகாரி “யாழ்ப்பாணம் – இடுபணி” (Jaffna Assignment)) என்ற நூலில் விபரிப்பதிலிருந்தே தாக்குதலின் தீவிரத்தையும், திட்டத்தின் துணி கரத்தையும் புரிந்துகொள்ளலாம். அதில் கூட ஒரு வீரச்சாவு மற்றும் சிலகாயத்துடன் பெரியவெற்ற கிடைத்துவிட்டதனாலும், பிறண் இலகு இயந்திரத்துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதனாலும் நாம் பெருமையும், மகிழ்ச்சியும் அடைந்தோம். இவர்களின், அதாவது தினேசின் அணியினரின் கவலை என்னவென்றால் “கால் கஸ்ரோ” அதாவது சுவீடன் நாட்டின் போர்பஸ் என்ற நிறுவன வடிவமைப்பான உந்துகணைசெலுத்தியை கைப்பற்ற முடியாமல் போனது தான், “சனியன் கால்கஸ்ரோக்காரன் ஓடிவிட்டானம்மான்” என்பான் தமிழ்ச்செல்வன். நன்றி – (உலக புலனாய்வு வல்லுநர்களால் நன்கறியப்ப்பட்ட தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளர் ச.பொட்டு அவர்களினது பிரிகேடியர் தமிழ்ச்செல்வின் நினைவுக் குறிப்பிலிருந்து) https://www.thaarakam.com/news/b9cf8b47-2d59-4110-ad47-535be2fd2b6d
  17. அவர் முன்னர் ஈரோஸ் என்ற புரட்சிகர அமைப்பின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் அல்லவா! அவர் சொல்லும் விடயங்களை மறுதலிக்க முடிந்தால் நல்லது. மூடிமறைத்து தேசியம் வளர்க்கமுடியாது
  18. சாதித்துக்காட்டிய சந்திரயான் 3 சந்திரயான் 3 ‘விக்ரம்’ தரையிறங்கிக் கலம், ஓகஸ்ட் 23 அன்று நிலவில் பத்திரமாகத் தரையிறங்கியது; அதன் வயிற்றில் இருக்கும் ‘பிரக்யான்’ உலாவிக் கலம் வெளிவந்து ஒளிப்படங்களை எடுத்து அனுப்ப உள்ளது. சோவியத் ஒன்றியம்/ ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக இந்தியா நிலவில் கால் பதித்துள்ளது. சந்திரயான் 3 தரையிறங்கிக் கலம் கீழே இறங்கும் நிகழ்வு தொடங்கி சுமார் பதினேழு நிமிடங்கள் கடந்திருந்தன. அப்போது நிலவின் தரையிலிருந்து வெறும் 150 மீட்டர் உயரத்தில் இருந்தபோது, கீழே இடர்நிலை உள்ளது என்பதைத் தரையிறங்குக் கலம் கவனித்தது. அந்த நேரம் அனைவருக்கும் ‘திக் திக்’ நிமிடங்களாகக் கடந்தது. அந்நிலையில். அதன் இடரை உணர்ந்து ஆபத்தைத் தவிர்க்கும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் சட்டென்று செயல்பட்டு. அருகே பாதுகாப்பான இடத்தை அடையாளம் கண்டது. அதனால் தரையிறங்குக் கலம் பக்கவாட்டில் நகர்ந்து பாதுகாப்பாக அங்கே தரையிறங்கியது அடுத்து என்ன? - நிலவின் தென் துருவப் பகுதியில் சூரிய ஒளி தெரியும் பகல் பொழுதில். வெப்பம் சுமார் 54 டிகிரி இருக்கும். சூரியன் மறைந்து இரவு கவிழும்போது வெப்பம் தடாலெனக் குறைந்து மைனஸ் 200 என்ற உறைபனிக் குளிர் ஏற்படும். சந்திரயான் கலங்களில் உள்ள மின்னணுக் கருவிகள் அந்தக் கடும் குளிரைத் தாங்காது. எனவே. நிலவின் பகல் பொழுதில் மட்டுமே கருவிகள் செயல்படும். அதன் பின்னர் தரையிறங்கிக் கலம். உலாவிக் கலம் ஆகியவற்றின் ஆயுள் முடிந்துவிடும். நிலவின் ஒரு நாள் என்பது 14 பூமி நாள்களுக்குச் சமம். எனவே. தரையிறங்கிக் கலம். உலாவிக் கலத்தின் ஆயுள் 14 நாள்கள். தரையிறங்கும் தொழில்நுட்பம்: விமான இறக்கை, ஹெலிகாப்டர் விசிறி, பாராசூட் முதலியவற்றைப் பயன்படுத்தி பூமியில் மென்மையாகத் தரையிறங்க முடியும். காற்றே இல்லாத நிலவில் இந்த மூன்றும் பயன் தராது. எனவேதான் ஆற்றலளித்துத் தரையிறக்கும் (powered descent) நுட்பத்தை நிலவில் பயன்படுத்த வேண்டும். ராக்கெட் உயர் அழுத்தப் புகை வெளிப்படும் திசைக்கு எதிராகத் தள்ளு விசை ஏற்படும். எனவே, கீழே விழும் விண்கலம் கீழ்நோக்கி ராக்கெட்டை இயக்கினால் மேல் நோக்கிய தள்ளுவிசை கிடைக்கும். கீழ்நோக்கிய ஈர்ப்புவிசை, மேல்நோக்கிய ராக்கெட் தள்ளுவிசை இரண்டின் விளைவாக விண்கலத்தை அந்தரத்தில் நிறுத்தலாம்; அல்லது மெதுவாகக் கீழே இறங்கச் செய்யலாம். இதுவே ஆற்றலளித்துத் தரையிறக்கும் நுட்பம். கீழ்நோக்கிய விசைக்கு ஈடுகட்டும் வகையில் மேல்நோக்கிய தள்ளுவிசையை உருவாக்க வேண்டும். அதற்கு ராக்கெட் இன்ஜின் செயல்பாட்டைக் கூட்டிக் குறைக்க வேண்டும். இதற்கான செயற்கை நுண்ணறிவுப் பொறியைத் தயார் செய்ய வேண்டும். இதுபோல வழித்தடம் காணும் செயற்கை நுண்ணறிவுப் பொறி, இடர் உணர்ந்து ஆபத்தைத் தவிர்க்கும் செயற்கை நுண்ணறிவுப் பொறி, விண்கலத்தை இயக்குவதற்கு செலுத்திப் பொறி முதலியவற்றை இந்திய விஞ்ஞானிகள் தயார் செய்துள்ளனர். இந்த செயற்கை நுண்ணறிவுப் பொறிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன என சந்திரயான் 3 வெற்றி நமக்கு எடுத்துக்காட்டுகிறது. என்னென்ன ஆய்வுகள்? - 2019 ஆகஸ்ட் 20 அன்று நிலவின் சுற்றுப்பாதையை அடைந்த சந்திரயான் 2 இன்றும் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. இதன் சுற்றுப்பாதைக் கலத்தில் பொருத்தப்பட்டிருந்த தொலையுணர்வுக் கருவியைக் கொண்டு நிலவின் தரைப்பரப்பில் உள்ள தாதுப்பொருள்கள் இனம்காணப்பட்டுப் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோலத் தொலையுணர்வு வழியே அறியப்பட்ட தரவுகள் உண்மைதானா என உலாவிக் கலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஆல்பா துகள் எக்ஸ்ரே நிறமாலைமானி (Alpha Particle X-ray Spectrometer – APXS), லேசர் தூண்டுதலுடன் சிதைக்கும் நிறமாலை மானி (Laser Induced Breakdown Spectroscope - LIBS) கருவிகளைக் கொண்டு ஆய்வுசெய்யும். தொலையுணர்வு வழியே இனம் கண்ட அதே தாதுப் பொருள்களை உலாவிக் கலமும் இனம் கண்டால், சுற்றுப்பாதைக் கலம் அளிக்கும் தரவுகள் மீது கூடுதல் உறுதித்தன்மை ஏற்படும். இதுதான் முக்கியத் திட்டம். உலாவிக் கலம் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தரவுகளைத் திரட்ட முடியும் என்பதால், மேலும் நம்பிக்கை தரும். பூமியின் மேற்புற ஓடு சில்லு சில்லாக உடைந்து ஒன்றுடன் ஒன்று மோதியபடியே உள்ளது. ‘டெக்டானிக் சில்லுகள்’ எனப்படும் இந்தப் பகுதிகள் மோதி உரசும் இடங்களில்தான் நிலநடுக்கம், எரிமலை போன்றவை பூமியில் உருவாகும். உலரும் திராட்சைப் பழத்தோலின் மீது சுருக்கம் ஏற்படுவதுபோல, நிலவு குளிரக் குளிர அதன் மேற்புறத்திலும் சுருக்கம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக நிலவிலும் நிலநடுக்கம் ஏற்படுகிறது. நிலவின் நடுக்கங்களை உணர்ந்து ஆராய்ச்சி செய்ய தரையிறங்கிக் கலத்தில் நிலவு நடுக்க ஆய்வுக் கருவி (Instrument for Lunar Seismic Activity - ILSA) பொருத்தப்பட்டுள்ளது. உலோகம் வெப்பத்தைக் கடத்தும் அதே வகையில் மரத்துண்டு கடத்தாது; அதனால்தான் மரத்துண்டைக் கொண்டு சமையல் கரண்டி கைப்பிடியைச் செய்கிறோம். சந்திரா தரைப்பரப்பு வெப்ப இயற்பியல் ஆய்வு (Chandra’s Surface Thermo-physical Experiment – ChaSTE) எனும் ஆய்வுக் கருவியை வைத்து, நிலவு மண்ணின் வெப்பக் கடத்துத் திறன் அளவிடப்படும். பூமியின் மீது திட, திரவ, வாயு என்ற மூன்று நிலைகளில் பொருள்கள் உள்ளன. மின்னல் போன்ற அரிதான வகைகளில் மட்டுமே நான்காவது நிலையான பிளாஸ்மா நிலையில் பொருள்களைப் பூமியில் காணலாம். ஆனால், சூரியக் கதிர்களின் தாக்கத்தில் நிலவின் மேற்புறத்தில் தோல்போல பிளாஸ்மா அடுக்கு உள்ளது. நிலவின் தரைப்பரப்பின் அருகே பிளாஸ்மா நிலையில் உள்ள பொருள்களை ‘ரம்பா’ கருவி (Radio Anatomy of Moon Bound Hypersensitive ionosphere and Atmosphere – RAMBHA) ஆராயும். மேலும் பூமியிலிருந்து அனுப்பப்படும் லேசர் கதிர்களைத் தரையிறங்கிக் கலத்தில் பொருத்தப்பட்டுள்ள லேசர் பிரதிபலிப்புக் கண்ணாடி (Laser Retroreflector Array - LRA) பிரதிபலித்துத் திருப்பும். லேசர் ஒளி சென்றுவர எடுக்கும் காலம் அளக்கப்பட்டு, நிலவின் தொலைவு மிகத் துல்லியமாக ஆய்வு செய்யப்படும். நிலவின் இயக்கங்கள், ஈர்ப்பு விசைகுறித்த தத்துவ ஆய்வுகள் எனப் பல மேலதிக ஆய்வுகள் இந்தத் தரவுகளைக் கொண்டு மேற்கொள்ளப்படும். ஒட்டுமொத்தமாக விண்வெளி சார்ந்த ஆய்வில் இந்தியா அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டதை, சந்திரயான் 3 வெற்றி உறுதிப்படுத்தியிருக்கிறது. வெற்றியின் முதல் படி: பூமியிலிருந்து நிலவு வரை சந்திரயான்-3 கடந்து வந்த பாதை! இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் திகதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவு தளத்திலிருந்து, 4 ராக்கெட் மூலம் சந்திரயான்–3 விண்கலம் சரியாக 2:35 மணிக்கு விண்ணில் வெற் LVM3 M றிகரமாக செலுத்தப்பட்டது. பூமியிலிருந்து நிலவுக்கு உயர்த்தும் நிகழ்வு: முதற்கட்ட கட்ட நிகழ்வு ஜூலை 15ம் திகதி முதற்கட்ட சுற்றுப்பாதை உயர்த்தும் (Earthbound firing-1) சுழற்சி முறை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. அப்போது, விண்கலம் 41762 கிலோ மீட்டர் x 173 கிலோ மீட்டர் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இரண்டாம் கட்ட நிகழ்வு ஜூலை 17ம் திகதி இரண்டாம் கட்ட சுற்றுப்பாதை உயர்த்தும் (Earth-bound apogee firing) சுழற்சி முறை வெற்றிகரமாக செய்யப்பட்டது. அப்போது, விண்கலம் 41603 கிலோ மீட்டர் x 226 கிலோ மீட்டர் சுற்றுப்பாதையில் கொண்டுவரப்பட்டது. மூன்றாம் கட்ட நிகழ்வு ஜூலை 18ம் திகதி மூன்றாம் கட்ட சுற்றுப்பாதை உயர்த்தும் (பூமிக்கு செல்லும் பெரிஜி துப்பாக்கி சூடு) சுழற்சி முறை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. விண்கலம் 51400 கிலோ மீட்டர் x 228 கிலோ மீட்டர் சுற்றுப்பாதையை அடைந்தது. நான்காம் கட்ட நிகழ்வு ஜூலை 20ம் திகதி நான்காம் கட்ட சுற்றுப்பாதை உயர்த்தும் (Earth-bound perigee firing) சுழ்ற்சி வெற்றிகரமாக முடிந்தது. அப்போது, விண்கலம் 71351 கிலோ மீட்டர் x 233 கிலோ மீட்டர் சுற்றுப்பாதையில் நிறுவப்பட்டது. ஐந்தாம் கட்ட நிகழ்வு இதனையடுத்து ஜூலை 25ம் திகதி ஐந்தாம் கட்ட மற்றும் இறுதி கட்ட சுற்றுப்பாதை உயர்த்தும் (Earth-bound perigee firing) சுழற்சி முறை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. அப்போது, விண்கலம் 127603 கிலோ மீட்டர் x 236 கிலோ மீட்டர் சுற்றுப்பாதையை அடைந்தது. இதனை தொடர்ந்து, சந்திராயன்-3 விண்கலமானது பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது. நிலவை நோக்கி பயணம்: ஆகஸ்ட் 1ம் திகதி டிரான்ஸ் லூனார் இன்செர்ஷன் (டிஎல்ஐ) சுழற்சி மூலம் சந்திரயான்-3 பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து புறப்பட்டு நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியது. அன்றைய தினம், பூமியிலிருந்து நிலவுக்கு 288 கிலோ மீட்டர் x 369328 கிலோ மீட்டர் ஆக இருந்தது. ஓகஸ்ட் 4ம் திகதி விண்கலம் நிலவின் மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை கடந்தது. பின்னர், ஓகஸ்ட் 5ம் திகதி லூனார் ஆர்பிட் இன்ஜெக்ஷன் (LOI) அதாவது, சந்திரயான்-3 விண்கலமானது பெரிலூனில் ஒரு ரெட்ரோ எரிப்பு மூலம் நிலவின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது. இதன் பிறகு, சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை குறைப்பு நிகழ்வு நடைபெற்றது. சுற்றுப்பாதை குறைப்பு: முதற்கட்ட குறைப்பு அதன்படி, கடந்த ஆகஸ்ட் 6ம் திகதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட முதற்கட்ட சுற்றுப்பாதை குறைப்பு வெற்றிகரமாக மேற்கொண்டது. என்ஜின்களின் சுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 170 கிலோ மீட்டர் x 4313 கிலோ மீட்டர். தொலைவில் கொண்டு வரப்பட்டது. இரண்டாம் கட்ட குறைப்பு ஆகஸ்ட் 9 ஆம் திகதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட இரண்டாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு வெற்றிகரமாக நிகழ்த்தியது. அதன், என்ஜின்களின் சுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 174 கிலோ மீட்டர் x 1437 கிலோ மீட்டர். கொண்டு வரப்பட்டது. மூன்றாம் கட்ட குறைப்பு அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி மூன்றாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு 150 கிலோ மீட்டர் x 177 கிலோ மீட்டர் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. இறுதிகட்ட குறைப்பு ஆகஸ்ட் 16 ஆம் திகதி, சந்திரயான் -3ஐ 153 கிலோ மீட்டர் x 163 கிலோ மீட்டர் என்ற சுற்றுவட்டப்பாதையில் கொண்டு செல்லப்பட்டது. இத்துடன், சந்திரனைக் சுற்றிவரும் சுற்றுவட்ட பாதைகள் நிறைவடைகின்றன. இதுவே உந்துவிசைக் கலனின் உதவியுடன் ‘விக்ரம்’ லேண்டர் மேற்கொண்ட கடைசி கட்ட சுற்றுவட்ட பாதையாகும். தற்போதைய நிகழ்வு: உந்துவிசைக் கலனில் இருந்து, தனியாக பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர், நிலவை சுற்றிவந்த போது,லேண்டரின் சுற்றுப்பாதை முதல் மற்றும் டீபூஸ்டிங் முறை மூலம் 25 கிலோ மீட்டர் x 134 கிலோ மீட்டருக்கு வெற்றிகரமாக குறைக்கப்பட்டு தற்போது, சந்திரயான்-3 விண்கலம், திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 14-ம் திகதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக நிலவை சுற்றி வந்தநிலையில், நிலவின் தரையில் வெற்றிகரமாக கால் பதித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சாதித்துக்காட்டிய-சந்திரயான்-3/91-323188
  19. நிலவிற்கு மிக அருகில் சென்றது சந்திரயான் 3 monishaAug 18, 2023 16:12PM ஷேர் செய்ய : சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் நிலவிற்கு மிக அருகில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதுமையை நிகழ்த்த வேண்டும் என்று மாபெரும் கனவோடு கடந்த ஜூலை 14 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் ஏவியது இஸ்ரோ. தொடர்ந்து சந்திரயான் 3 சுற்று வட்டப்பாதையை இஸ்ரோ கண்காணித்து வந்ததோடு பூமியிலிருந்து சுற்றுப்பாதையை அதிகரித்து நிலவை நோக்கிப் பயணிக்க செய்தது, தொடர்ந்து நிலவின் சுற்றுப்பாதையையும் இஸ்ரோ குறைத்துக் கொண்டே வந்தது. நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்க வேண்டும் என்ற சவாலை நோக்கி அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைத்து வருகிறது இஸ்ரோ. அந்த வகையில் சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள உந்துவிசை கலனில் இருந்து விக்ரம் லேண்டரை இஸ்ரோ வெற்றிகரமாக பிரித்து எடுத்தது. தொடர்ந்து விக்ரம் லேண்டர் நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணித்து வருகிறது. https://x.com/isro/status/1692484515963588645?s=46&t=Bh4dZIVPcm7fCpQS3JeoGQ இந்நிலையில் லேண்டரை நிலவிற்கு மேலும் அருகில் கொண்டு செல்வதற்கான பணியை இஸ்ரோ மேற்கொண்டது. அதன்படி ”டீ பூஸ்டிங்” முறையில் சுற்றுப்பாதை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலவிலிருந்து 113 கி.மீ அருகிலும் 157 கி.மீ தொலைவிலும் உள்ள சுற்றுப்பாதையில் லேண்டர் நிலவை சுற்றி வருகிறது. வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். https://x.com/isro/status/1692476417093890282?s=46&t=Bh4dZIVPcm7fCpQS3JeoGQ இந்நிலையில் லேண்டரை நிலவில் தரையிறக்குவதற்கான தென் துருவத்தின் புதிய புகைப்படங்களை லேண்டர் பகிர்ந்துள்ளது. https://minnambalam.com/india-news/chandrayaan-3-get-more-closer-to-moon/
  20. மனிதப்புதைகுழி அகழ்வுப்பணியின் இறுதி முடிவு முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 08 ஆம் திகதி அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டு அதில் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய நேற்று (10) தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டவைத்திய அதிகாரி அடங்கிய குழுவினர் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் இன்று சம்பவ இடத்திற்கு களவிஜயம் செய்திருந்தார்கள். களவிஜயத்தின் பின்னர் இது தொடர்பாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் ஊடகங்களுக்கு பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார். நேற்று (10) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் மனித புதைகுழி வழக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதை போன்று சந்தேகத்திற்கிடமான பிரதேசத்தை பார்வையிடுவதற்கு அழைக்கப்பட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்தார்கள் அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்தியர் வாசுதேவாவும், வேறு நிறுவனமும் பிரசன்னமாகியிருந்தார்கள். தொல்பொருள் திணைக்களத்தால் மதிப்பீடு செய்யப்பட்டு இதற்கான பாதீடும், திட்டமும் ஒரு கிழமைக்குள் நீதிமன்றுக்கு தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டிருக்கின்றது. ஆகவே அவர்கள் இந்த மாதம் 17 ஆம் திகதி அதற்கான திட்டங்களை தாக்கல் செய்ய இருக்கின்றார்கள். அதனை தொடர்ந்து 21 ஆம் திகதி இந்த அகழ்வு பணி நடைபெற தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அது இந்த மாதம் 17ஆம் திகதி நீதிமன்றில் உறுதிப்படுத்தப்படுமென தெரிவித்தார். http://www.samakalam.com/மனிதப்புதைகுழி-அகழ்வுப்/
  21. வவுனியா இரட்டை படுகொலை: பிரதான சந்தேக நபர் கைது Editorial / 2023 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:46 - 0 - 92 க. அகரன் வவுனியா தோணிக்கல்லில் வீட்டுக்கு தீ வைத்து வாளால் வெட்டிய சம்பவத்தில் இருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவினை பெற்று நடத்திய விசாரணையின் பின்னர் கூமாங்குளத்தை சேர்ந்தவரும் சம்பவத்தில் மரணமடைந்த சுகந்தனின் நண்பராக இருந்து, பெண் விவகாரத்தால் பின்னர் பிரிந்தவருமான நண்பரே இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார். https://www.tamilmirror.lk/வன்னி/வவனய-இரடட-படகல-பரதன-சநதக-நபர-கத/72-322077
  22. சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்கிறது யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமையும் (01) இடம்பெறுகின்றது. தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வேண்டுமென வலியுறுத்தியும் தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியும் கடந்த மே 03 ஆம் திகதி தொடக்கம் எதிர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக திங்கட்கிழமை (31) பி.ப 4.00 மணிக்கு ஆரம்பித்த ச கவனயீர்ப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை (01) பி.ப 4.00 மணிவரை இடம்பெறவுள்ளது. https://thinakkural.lk/article/266229
  23. வவுனியா தோணிக்கல் தீ வைப்பு – வாள்வெட்டு – கொலை – சந்தேக நபர்கள் கைது! adminAugust 1, 2023 வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (31.07.23) மாலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. வவுனியா காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் வவுனியா பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு குற்றச்செயல்களுக்கு உதவிய 3 மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். வவுனியாவைச் சேர்ந்த 24, 27, 31 மற்றும் 34 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி பிறந்தநாள் நிகழ்வொன்று நடைபெற்ற வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி வீட்டிற்கு தீவைத்து எரித்திருந்தனர்.இதன்போது, வீட்டில் இருந்த 10 பேர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தம்பதி உயிரிழந்தனர். சம்பவத்தில் காயமடைந்த 02 வயதுடைய ஆண் குழந்தையும், 07 மற்றும் 13 வயதுடைய பெண் பிள்ளைகளும், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட 04 பெண்களும், 42 வயதுடைய ஆண் ஒருவரும் வவுனியா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டிற்கு தீ வைப்பதற்கும் குடியிருப்பாளர்களைத் தாக்குவதற்கும் முகமூடி அணிந்த குழுவொன்று வரும் சிசிடிவி காட்சிகள் காவற்துறையினருக்கு கிடைத்திருந்த நிலையில் விசாரணைகளின் மூலம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். https://globaltamilnews.net/2023/193553/
  24. கிரைமியாவில் ரஷ்ய ஆயுதக் களஞ்சியம் மீது உக்ரேன் தாக்குதல் Published By: Sethu 24 Jul, 2023 | 10:48 AM கிரைமியாவிலுள்ள ரஷ்ய ஆயுதக்களஞ்சியம் ஒன்றின் மீது உக்ரேன் தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆளில்லா விமானங்கள் மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ரஷ்யாவினால் நியமிக்கப்பட்ட மேற்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கிரைமிய வான்பரப்பில் எதிரிகளின் 11 ட்ரோன்களை ரஷ்ய படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். டிஸான்கோய் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உக்ரேனின் கிரைமியா பிராந்தியத்தை 2014 ஆம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டமை கொண்டது. https://www.virakesari.lk/article/160764
  25. ‘சந்திராயன் -3’க்கு பெருமை சேர்க்கும் தமிழர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், விழுப்புரத்தை சேர்ந்தவர், ‘சந்திரயான்-3’ திட்ட இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார். விழுப்புரத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் வீர முத்துவேல், 42; விஞ்ஞானி. இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டத்தை இயக்கப் போகும் திட்ட இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார்.இவர் தற்போது, குடும்பத்துடன் பெங்களூருவில் வசிக்கிறார். இவரது தந்தை பழனிவேல், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்.தற்போது, எஸ்.ஆர்.எம்.யூ., தொழிற்சங்க, மத்திய செயல் தலைவராக உள்ளார். தாய் ரமணி, குடும்பத் தலைவி. இவர்கள் இருவரும் விழுப்புரத்தில் வசிக்கின்றனர். விழுப்புரத்தில் உள்ள வீர முத்துவேலின் தந்தை பழனிவேல் கூறியதாவது: வீர முத்துவேல், விழுப்புரம் ரயில்வே பள்ளியில், 10ம் வகுப்பு வரை படித்தார். பிறகு விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரியில், மெக்கானிக்கல் டிப்ளமா முடித்தார். பின், சென்னை சாய்ராம் கல்லுாரியில், பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார். அதன் பின், திருச்சியில் உள்ள, ஆர்.இ.சி., அரசு பொறியியல் கல்லுாரியில், எம்.இ., மெக்கானிக்கல் பயின்றார். தொடர்ந்து 2004ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, ‘இஸ்ரோ’வில் பணிக்கு சேர்ந்தார். இடையே, சென்னை, ஐ.ஐ.டி.,யிலும் பயிற்சி பெற்றார். அவரது திறமையால் உயர்ந்து, தற்போது சந்திராயன்-3 திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவ்வாறு பழனிவேல் கூறினார். https://akkinikkunchu.com/?p=250309

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.