Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார்..........! ஆண் : நீல வானம் நீயும் நானும் கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய் வையமே கோயிலாய் வானமே வாயிலாய் பாம்பு நீ பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம் இனி நீயென்று நானென்று இருவேறு ஆளில்லையே ஆண் : ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற தேசம்தனை நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசந்தனை ஆண் : காதல் என்று பேர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது என்னைப்போலே பெண் குழந்தை உன்னைப் போல் ஒரு ஆண் குழந்தை நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி குழு : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிறத்தாண்டு பலகோடி நூறாயிரம் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிறத்தாண்டு பலகோடி நூறாயிரம் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிறத்தாண்டு பலகோடி நூறாயிரம் ஆண் : ஆறாத காயங்களை ஆற்றும் நம் நேசந்தனை மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம்தனை செய்யும் விந்தை காதலுக்கு கைவந்ததொரு கலைதானடி உன்னை என்னை ஒற்றி ஒற்றி உயிர் செய்யும் மாயமும் அதுதானடி நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி .......! --- நீல வானம் ---
  2. இந்தநாள் நல்லநாள் ...........! 😍
  3. அத்தனை சந்திகளும், இடங்களும் நினைவில் வந்து போகின்றன.........! 😂 நன்றி நிழலி .........!
  4. நீங்கள் சொன்ன அத்தனை கேள்விகளையும் பாஸ் பண்ணிய பின் .......... சுவி....... கொஞ்சம் பெண்ணைப் பார்க்கலாமா ...... அவர்கள்........ ஓ.....அதுக்கென்ன தாராளமா ...... அம்மா கொடியிடை இங்கே வாம்மா, மாப்பிள்ளை உன்னைப் பார்க்க வேண்டுமாம்...... (பெண் வருகிறாள்) அவர்கள் ....... என்ன மாப்பிள்ளை யோசிக்கிறீங்கள் ........ பெண் பிடித்திருக்கா ....... சுவி ......... அதுவந்து பெண்ணுக்கு கண் கொஞ்சம் வாக்கு போல ........மூக்கும் சப்பையாய் ......யு.எஸ் சில் ஒரு பங்க்சனுக்கு அழைத்துப் போவதென்றாலும் கலர் கம்மி ....... நண்பர்கள் பின்னால் நின்று கேலி பண்ணுவார்கள் போல..... பெயருக்கும் பெண்ணுக்கும் சம்பந்தமேயில்லை போலிருக்கே....... அவர்கள்......... அது நாங்கள் அவ பிறந்தவுடன் வைத்த பெயர்.........இப்ப கொஞ்சம் தடியாகிட்டா ...... சுவி........ஓ......சரி......இப்ப நாங்கள் போட்டு பிறகு சொல்லி அனுப்புகிறோம்....... அவர்கள்.....அதெப்படி நீங்கள் எங்கள் பெண்ணைப் பார்த்து விட்டு வேண்டாம் என்று சொல்லலாம்...... சுவி....... நீங்கள் கேட்ட அத்தனை தகுதியும் எனக்கு இருக்கும் போது நானும் எனக்கு ஏற்றவாறு பெண்ணைத் தேடுவது ஒன்றும் தப்பில்லையே ....... ஓக்கே அப்ப வரட்டா .......! 😂 (எனக்கும் இப்படி பெண்ணைத் தேடிப்பார்க்க விருப்பம்தான் ....... அதுக்கு இனியொரு சந்தர்ப்பம் அமையுமோ தெரியவில்லை).
  5. இவர் ஒரு சிறந்த ஊக்குவிப்புநாயர் .........! 😂
  6. வணக்கம் வாத்தியார்..........! பெண் : மாருகோ மாருகோ மாருகயீ ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ மாருகோ மாருகோ மாருகயீ ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ பெண் : காசுகோ காசுகோ பூசுகோ பூசுகோ மாலையில் ஆடிகோ மந்திரம் பாடிக்கோ ஆண் : கண்மணி பொன்மணி கொஞ்சு நீ கெஞ்சு நீ மாலையில் ஆடு நீ மந்திரம் பாடு நீ ஆண் : சம்பா சம்பா அடி ரம்பா ரம்பா இது சோம்பேறி பூஞ்சிரிப்பா பெண் : கொம்பா கொம்பா இது வம்பா வம்பா நீ கொம்பேறி மூக்கனப்பா ஹோய் ஹோய் ஆண் : ஏய் சும்மா சும்மா பொய் சொல்லாதம்மா உன் சிங்காரம் ஏங்குதம்மா பெண் : ஏ கும்மா கும்மா அடி யம்மா யம்மா உன் கும்மாளம் தாங்கிடுமா ஆண் : ஆசையாக பேசினால் போதாதம்மோய் தாகத்தோடு மோகம் என்றும் போகாதம்மா பெண் : ஆத்திரம் காட்டினால் ஆகாதய்யா அச்சத்தோடு நாணம் என்றும் போகாதய்யா ஆண் : ஏத்துக்கடி என்ன சேர்த்துக்கடி வாலிபம் ஆடுது வெப்பமோ ஏறுது பெண் : நான் சின்னப் பொண்ணு செவ்வாழை கண்ணு நீ கல்யாண வேலி கட்டு ஆண் : என் செந்தாமரை கைசேரும் வரை நான் நின்றேனே தூக்கம் கெட்டு பெண் : உன் ஆசை என்ன உன் தேவை என்ன நீ லேசாக காத கடி ஆண் : என் எண்ணங்களை நான் சொல்லாமலே நீ இந்நேரம் கண்டு பிடி பெண் : கேக்குது கேக்குது ஏதோ ஒன்னு பார்த்து பார்த்து ஏங்குது லவ்வு பண்ணு ஆண் : அட தாக்குது தாக்குது ஊதக்காத்து தள்ளி தள்ளி நிக்குற ஆளை பார்த்து பெண் : காலம் வரும் நல்ல நேரம் வரும் அள்ளி நீ சேர்த்துக்கோ ஆசைய தீர்த்துக்கோ .......! --- மாருகோ மாருகோ ---
  7. வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே......! 😍
  8. கோப்பிச் செடி மலர்களுடன் .........! 😁
  9. கருட புராணமும் இவைபோல பல விடயங்களையும் கூறுகின்றது.........! 👍 நல்லாயிருக்கு...... தொடர்ந்து எழுதுங்கள்........!
  10. பொதுவா முதல் அண்ணன்தான் பொறாமையில் அடிப்பார்.......காரணம் 1 - அப்ப அவருக்கு திருமணம் ஆகியிருக்காது..........காரணம் 2 - மணமாகியிருந்தால் டேய் தம்பி நான் படும் துன்பத்தை நீ படாதையடா என்னும், பாசத்தில்.....! மூன்றாவது அண்ணனை ஒரு அண்ணானாகவே மதிப்பதில்லை.......நீ ....வாடா போடா நாயே பேயே என்று ஒரு நண்பனாகத்தான் புழங்குவது ........அவரே பூசை போடுறார் என்றால் ரொம்ப ரொம்ப பொறாமை போல .......! 😂
  11. இதாவது பரவாயில்லை .......இவர்களின் இன்னொரு வீடியோவில் கீப்பர் தயாராய் நிக்க பின்னால் இரண்டு பொடியள் கோல்போஸ்டை சற்று தள்ளி வைத்துப் பிடிப்பார்கள்......இந்தப் பொடிப்பயல் கோல் போட்டு விடுவார்..........! 😂
  12. வணக்கம் வாத்தியார்..........! ஆண் : ஹே ஒத்த சொல்லால என் உசிா் எடுத்து வச்சிகிட்டா ரெட்ட கண்ணால என்ன தின்னாடா பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா ஆண் : ஏ பொட்ட காட்டுல ஆலங்கட்டி மழை பெஞ்சு ஆறொன்னு ஓடுறத பாரு ஆண் : அட பட்டாம் பூச்சி தான் என் சட்டையில ஒட்டிகிச்சு பட்டாசு போல நா வெடிச்சேன் முட்டக் கண்ணால என் மூச்செடுத்து போனவ தான் தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா ஆண் : என் பவுடா் டப்பா தீா்ந்து போனது அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனது நான் குப்புறத்தான் படுத்து கெடந்தேன் என்ன குதிர மேல ஏத்தி விட்டாயே ஆண் : ஒன்னும் சொல்லாம உசுர தொட்டாயே மனச இனிக்க வெச்ச சீனி மிட்டாயே ஆண் : ஏ கட்ட வண்டி கட்டி வந்து தான் அவ கண்ணழக பாா்த்து போங்கடா அட கட்டு சோறு கட்டி வந்து தான் அவ கழுத்தழக பாத்து போங்கடா ஆண் : பொண்ணு கருப்பட்டி கண்ணு தீப்பெட்டி மென்னு தின்னாலே ஒரு வாட்டி …………! --- ஒத்த சொல்லால ---
  13. மானென்று பெண்ணுக்கொரு பட்டம் கொடுத்தான்.......! 😍
  14. அமீபாவுக்கும் மூளை இருந்திருக்க வேண்டும் அதனால் அது மூளை கெட்டுப்போனவர்களைத் தாக்குவதில்லை ......... அது பெண்களுக்கு முன்பே தெரிந்திருக்கின்றது.......! 😂
  15. இளநிக்கு ஒரு தமிழ்ப் பத்திரிகை தேங்காய் தண்ணீர் என்பதே அசௌகாரியமாய் இருக்கு......மேலும் தண்ணீருக்கு மீற்றர் போடாமல் 150 மில்லி 200 மில்லி என்று போட்டாலே குடிமக்கள் புரிந்து கொள்வார்கள் ........! 😂
  16. அட ராமா என்னத்த சொல்ல கதவைத் திறந்துகொண்டு இண்டர்வியு ரூமின் உள்ளே தலையை நீட்டினான் ரமேஷ். ‘பிளீஸ் கம் இன்’ என்றார் ஒருவர். போனான். ‘சிட் டவுன்’ உட்கார்ந்தான். அது ஒரு பெரிய ஹால். வலப்பக்கக் கோடியில் பெரிய திரை. சீலிங்கிலிருந்து டிஜிட்டல் புரஜக்டர் தொங்கியது. கீழே உயர்ந்த கார்ப்பெட். நாற்காலிகள் ஒவ்வொன்றும் அக்பர் சக்கரவர்த்தியின் அரியாசனம் போல் இருந்தன. ஸ்பிளிட் ஏஸிக்கள் ஓசையின்றி ஓடிக் கொண்டிருந்தன. இடப் பக்கச் சுவரின் ஓரம் கசக்கிப் போட்ட காகிதம் ஒன்று உறுத்தலாக இருந்தது. ஒரு நீள்வட்ட மேசையின் எதிர்ப் புறத்தில் நான்கு பேர் உட்கார்ந்திருந்தார்கள். ரமேஷ் வருவதைப் பார்த்ததும் இடது கோடியில் இருந்தவரைப் பார்த்து கொஞ்சம் பவ்யமாக மற்ற மூவரும் ‘ஐயா, நீங்க கேக்கறீங்களா?’ என்பது போல் வளைந்தார்கள். அதற்கு அவர் ‘இட்ஸ் ஓக்கே.. நீங்க ஆரம்பியுங்க’ என்பது போல் ஜாடை காட்டிவிட்டு கொஞ்சம் தளர்ந்து உட்கார்ந்து கொண்டார். வலக் கோடியில் இருப்பவர் ஆரம்பித்தார். ‘எப்படி இருக்கு இந்த அட்மாஸ்பியர்?’ என்றார். ‘இது ஒரு நல்ல கான்ஃபரன்ஸ் ஹால். புரஜக்டர், ஸ்க்ரீன், வொய்ட் போர்ட், மார்க்கர், சவுண்ட் புரூஃபிங், வசதியான நாற்காலி, உயர்ந்த கார்ப்பெட். மனசுக்கு இதமான அட்மாஸ்பியர்’ என்றான் ரமேஷ். ‘இவ்வளவு நல்ல அட்மாஸ்பியர்ல அந்த கசக்கிப் போட்ட காகிதம் உறுத்தலா இல்லையா? அதை ஏன் சொல்லல்லை?’ ‘கவனிச்சேன் சார் அதை. அந்தக் காகிதம் அதோ உட்கார்ந்திருக்காரே அவரோட ஸ்க்ரிப்ளிங் பேடோட முதல் பக்கம். கிழிக்கிறப்போ கொஞ்சம் கோணலா கிழிச்சிருக்காரு. பேடிலே முக்கோணமா கொஞ்சம் பாக்கி இருக்கு அந்தப் பக்கத்தில். நான் பாட்டுக்க சுத்தமா இருக்கிற இந்த ரூம்ல யாரோ ஒரு மடையன் குப்பை போட்டிருக்கான்னு சொன்னா அவர் மனசு புண்படும்ன்னுதான் சொல்லல்லை’ நாலு பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘சரி, வெளியில ஒரு அம்மா தரையை துடைச்சிக்கிட்டு இருக்கும், அதைக் கூப்பிட்டு குப்பையை எடுத்துப் போடச் சொல்லுங்க’ என்றார் வலது. ‘அந்தம்மா பேர் என்ன சார்?’ மறுபடியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள். ‘இட்ஸ் ஓக்கே. உங்க யாருக்கும் அந்தம்மா பேரு தெரியாதுன்னு நினைக்கிறேன்’ என்றவன் எழுந்து நடந்து போய் கதவைத் திறந்து வெளியில் உட்கார்ந்திருந்த பியூனிடம் ‘அந்தம்மா பேர் என்ன?’ என்று கேட்டான். பியூன் சொன்னான். ‘பவானி, இங்கே வாம்மா’ என்று கூப்பிட்டான். சுத்தம் செய்யச் சொன்னான். மறுபடி வந்து நின்றான். ‘சிட் டவுன். ஏன் நிக்கறீங்க?’ உட்கார்ந்தான். ‘எல்லா விஷயத்தையும் நல்லா கவனிக்கிறீங்க. வேலைக்காரர்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது எவ்வளவு முக்கியம்ன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. இன்னும் ஒரே ஒரு கேள்வி. அதுக்கும் சரியா பதில் சொல்லிட்டீங்கன்னா உங்களுக்கு நூறு மார்க்’ ‘கேளுங்க சார்’ ‘எங்க நாலு பேர்ல ஒருத்தர் தொழிற்சாலை முதன்மை அதிகாரி, ஒருத்தர் பர்ஸான்னல் டிப்பார்ட்மெண்ட் ஹெட், ஒருத்தர் ஃபைனான்ஸ் ஹெட், ஒருத்தர் உங்க பாஸ். யார் யார் என்னென்னன்னு சொல்லல்லைன்னா கூட பரவாயில்லை. தொழிற்சாலை ஹெட் யாருன்னு மட்டும் சொல்லுங்க பார்ப்போம்?’ ‘நான் வரும்போது நீங்க மூணு பேரும் இடது கோடியில் இருக்கிறவர் கிட்டே ரொம்ப பவ்யமா நடந்துகிட்டீங்க. அது என்னை கன்ஃப்யூஸ் பண்ணத்தானே ஒழிய அவர் ஃபேக்டரி ஹெட் இல்லை. நீங்களும் ஃபேக்டரி ஹெட் இல்லை. நீங்கதான் பாஸ். நான் சரியா பதில் சொல்லச் சொல்ல உங்க முகத்தில் பெருமை தாங்கல்லை. எப்படிப்பட்ட ஆளை செலக்ட் பண்ணியிருக்கேன் பார் என்கிற பெருமை தெரியுது. மீதம் ரெண்டு பேர் அமைதியா இருக்காங்க. அவங்கள்ள ஒருத்தர்தான் ஃபேக்டரி ஹெட். நீங்க எல்லாருமே ஒரு ஸ்க்ரிப்ளிங் பேட் வச்சி ஏதோ நோட் பண்ணிக்கிட்டே இருக்கீங்க. அந்த ரெண்டு பேர்ல ஒருத்தர் இதுவரை எதுவுமே எழுதிக்கல்லை. அவர் ஃபைனான்ஸ் ஹெட்டா இருப்பார். சம்பளம் பேசும்போதுதான் எழுதுவார். ஆகவே ரெண்டாவதா இருக்கிறவர்தான் ஃபேக்டரி ஹெட். இடது கோடியில் இருக்கிறவர் பர்ஸான்னல் மேனேஜர். அவர்தான் இந்த நாடகத்துக்கெல்லாம் டைரக்டர். ‘ஸ்ப்ளெண்டிட்.. உங்க ஆப்ஸர்வேஷன் பவர் பிரமாதம். ஒரு மெய்ண்ட்டனன்ஸ் ஆளுக்கு இருக்க வேண்டிய தகுதி அது. வெய்ட் பண்ணுங்க. வீ வில் லெட் யு நோ’ ‘சார், புது விதமான இண்ட்டர்வியூ சார். வழக்கமா வந்ததும் ஃபைலை வாங்கிப் பார்க்கிறது. டெல் அஸ் சம்திங் அபௌட் யூ மிஸ்டர் ரமேஷ்ங்கிறது. இதெல்லாம் எதுவுமே இல்லை. டக்குன்னு ஆரம்பிச்சிட்டீங்க. எனக்கும் ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. சூப்பர் சார்’ ‘தேங்க் யூ. பட், பேரென்ன சொன்னீங்க, ரமேஷா? நீங்க சுந்தரேசன் இல்லையா?’ ‘அவர் வெளியில வெய்ட் பண்றார் சார்’ ‘பின்னே நீங்க?’ ‘நான் கேன்டீன்ல புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கேன். கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு எத்தனை செட் டீ ஸ்னாக்ஸ் அனுப்பணும்ன்னு பார்த்துகிட்டு வரச் சொன்னாரு சூப்பரவைசர். எட்டிப் பாத்தேன், உள்ளே கூப்பிட்டீங்க, உக்காரச் சொன்னீங்க, கேள்வி எல்லாம் கேட்டீங்க. ஜாலியா இருந்திச்சு சார்’....!! இந்த கதையின் நீதி என்ன??

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.