Ragavan Rajagopal
·
*பிளாட்பாரத்தில் ஒரு போர்ட்டர் கடைசி இரயில் சென்ற பிறகு, கஸ்டமர் கிடைக்காததால் வீட்டிற்குப் புறப்பட்டார்!**
**பிளாட்பார பெஞ்சில் ஒரு வயது முதிர்ந்த பெண்மணி,உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தார்!*
*அருகில் சென்று கேட்டார்!* *"நீங்கள் எந்த ஊருக்கு செல்லவேண்டும்?"*
-- "நான் டெல்லிக்கு எனது மகனை பார்க்க செல்கிறேன் இன்று பதிலளித்தார்! *இனிமேல் எந்த வண்டியும் கிடையாது; கடைசி ரயிலும் கொஞ்ச நேரம் முன்பு தான் சென்றது.."*
*பெண்மணிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை;* *கவலையுடன் பார்த்தார்,*
*அந்தப் போர்ட்டர்* *கொஞ்சம் கரிசனத்தோடு,* *பெண்மணியைப் பயணிகளின் அறைக்கு அழைத்து சென்றார்!*
*அங்கே இரவை கழிக்கலாம் என்றார்!*
*"உங்கள் மகன் எங்கே இருக்கிறார்? என்ன* *செய்கிறார்?"*
*என்று கேட்டார்!*
*அதற்கு அந்தப் பெண் எனது மகன் இரயில்வே துறையில் வேலை செய்கிறான்!*
"அவரது பெயரைச் சொல்லுங்கள், தொடர்பு கொள்ள முடியுமா என்று பார்க்கலாம்!
*எனது மகன் பெயர் லால்! எல்லோரும் லால் பகதூர் சாஸ்திரி (அப்போது அவர் ரயில் துறை அமைச்சர்) என்று அழைப்பார்கள்!*
*மொத்த ஸ்டேஷனும் புரண்டது; எல்லோரும் சேர்ந்து அவரை பத்திரமாக டெல்லிக்கு அனுப்பிவைத்தனர்!*
*அதைப் பார்த்து, அந்த பெண்ணுக்கு ஒன்றும் விளங்கவில்லை!*
*தன் மகனை பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி: நீ இரயில்வேயில் என்ன வேலை பார்க்கிறாய்?*
*அமைச்சர் சொன்னது: ஒரு சிறு, எளிய வேலை அம்மா!*
*எப்பேர்ப்பட்ட மகான்கள் வாழ்ந்திருக்கிறார்கள் !!!*
*படித்ததில் பிடித்தது!*......!