Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. உன்னை சொல்லி குற்றமில்லை..........! 😁
  2. வணக்கம் வாத்தியார்.......! ஆண் : கண்ணே ஆண் : தொட்டுக்கவா கட்டிக்கவா ஆண் : கட்டிக்கிட்டு ஒட்டிக்கவா பெண் : தொட்டுகிட்டா பத்திக்குமே ஆண் : பத்திகிட்டா பத்தட்டுமே ஆண் : அஞ்சுகமே நெஞ்சு என்ன விட்டு விட்டு துடிக்குது கட்டழகி உன்ன எண்ணி கண்ணு முழி பிதுங்குது பெண் : கொத்தி விட வேண்டுமென்று கொக்கு என்ன துடிக்குது தப்பிவிட வேண்டுமென்று கெண்டை மீனு தவிக்கிது ஆண் : ஹாஹா குளிக்கிற மீனுக்கு குளிர் என்ன அடிக்கிது பசி தாங்குமா இளமை இனி பரிமாற வா ஹ இளமாங்கனி ஆண் : வனிதாமணி வனமோகினி வந்தாடு கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு ஆண் : உன் கண்களோ திக்கி திக்கி பேசுதடி என் நெஞ்சிலே தக்கத்திமி தாளமடி பெண் : அணைத்தவன் எனக்குள்ளே குளித்தவன் ஆண் : சுவைத்தவள் உயிர்வரை இனித்தவள் பெண் : இதயம் ததீம் ததீம் ததீம் போடாதோ ஆண் : இளமை தந்தோம் தந்தோம் என்றே பாடாதோ பெண் : விடியும்வரை மழையோ மழை உன் கலையே கலை கண்ணா ஆண் : கலையின் வகை அறியும்வரை உடையே பகை கண்ணே பெண் : கொஞ்சினாலும் மிஞ்சினாலும் கோடு தாண்டாதே என்ன வெளுத்தது பெண் : இரவினில் மன்னன் வந்து வெளுத்தது ஆண் : இரவில் சச்சம் சச்சம் சச்சம் போதாதோ பெண் : பகலில் மிச்சம் மிச்சம் மிச்சம் வாராதோ ஆண் : இரவொரு விதம் பகல் ஒரு விதம் பருவம் பதம் கண்டேன் பெண் : சுகமோ சுகம் தினம் ஒரு விதம் இதுவே இதம் என்பேன் ஆண் : நான் தொடாத பாகம் தன்னை தென்றல் தீண்டாது......! ---கண்ணே தொட்டுக்கவா---
  3. நூல் கைகளில் விரியும்போது ஆயுதங்கள் நழுவிச்செல்லும் .........! 👍
  4. Variety of images · Rejoindre Reena Mayekar · · தெனாலி ராமன் இரவில்படுக்க போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்துருப்பதை பார்த்துவிடுகிறான்... திருடன் என்று கத்தினால் நிச்சயம் மற்றவர்கள் பிடிப்பதற்குள் ஒடிவிடுவான்... தனிப்பட்ட முறையில் தெனாலிராமனால் முடியாது... மனைவியை கூப்பிட்டு வாய்கொப்பளிக்க தண்ணீர் கேட்கிறான்.. சொம்பு சொம்பாக வந்து கொடுக்கிறாள். புதரில் மறைந்து இருக்கும் திருடன் மீது கொப்பளிக்கிறான்.. ''என்னது..எவ்வளவு தண்ணீர் வந்து கொடுப்பது நிறுத்தமாட்டியா.''.கத்துகிறாள் மனைவி. ''என்னது எதிர்த்தா பேசுகிறாய்.''அவள் மேல் துப்புகிறான் ''என்னது கேட்பதுற்க்கு ஆளில்லையா..''அலற துவங்குகிறாள் மனைவி.. தெனாலி ராமன் வீட்டீல் என்ன பிரச்சனை என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வருகிறார்கள்.. ''என்ன தெனாலிராமா இது '' கேட்கிறார்க்ள.. ''பாருங்கள்..எவ்வளவு நேரமாக இந்த ஆளின்மீது துப்புகிறேன்..ஒன்றுமே சொல்லவில்லை..ஒரு தடவை துப்பியதும் ஊரை கூட்டி விட்டாள் ''எனகிறான்தெனாலிராமன்... திருடன் பிடிபடுகிறான்.... சமயோசிதத்தின் அவசியத்தை உணர்த்துகிறது இந்த கதை.... திருடன் பிடிபட்டது இருக்கட்டும் ... அவன் போனதுக்கு அப்புறம் தெனாலிராமன் அலறத் துவுங்குகிறான் யாரும் கண்டுக்கல.... எனவே சமயோசித புத்தி சம்மசாரத்திடம் செல்லாது என்று காலங் காலமாய் உணர்த்துகிறது இந்தக் கதை......... இதில் யார் தென்னாலிராமனின் மனைவி என்று கேட்கக் கூடாது........! 😂
  5. பாட்டொன்று பாடப்போறேன் கேட்டுக்கோ........! 😍
  6. வணக்கம் வாத்தியார்......! பெண் : தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் ஆண் : கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை ஹே காதல் வருவதில்லை பெண் : நேரில் வராமல் நெஞ்சை தராமல் ஆசை விடுவதில்லை ஆசை விடுவதில்லை ஆசை விடுவதில்லை பெண் : இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால் ஆண் : இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால் இருவர் ஒன்றானால் இளமை முடிவதில்லை எடுத்து கொண்டாலும் கொடுத்து சென்றாலும் பெண் : பொழுதும் விடிவதில்லை ஆண் : { பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம் } (3) பாவை முகமல்லவா பெண் : அழகிய தோள்கள் பழகிய நாட்கள் பெண் : ஆயிரம் சுகமல்லவா.......! --- தொட்டால் பூ மலரும்---
  7. சந்திரோதயம் · Rejoindre Bala Bala · · கவிஞர் கண்ணதாசனைப் பற்றி சுஜாதா: (இன்று - 24th Jun - கவியரசு கண்ணதாசன் பிறந்த தினம்) 1978 -ல், ‘நினைத்தாலே இனிக்கும்’ பாடல் பதிவின் போது அவரை நேரில் சந்தித்துக் கொஞ்சநேரம் பேசும் மறக்க முடியாத வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன், ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த விழா மேடையில், ஆசிரியர் மணியன் என்னைக் கவியரசுக்கு மாலை அணிவிக்கச் சொன்னார். அந்த விழாவில், கண்ணதாசனின் தெளிவான பேச்சைக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்கு நான் வசனம் எழுதினேன். சங்கீதக் கச்சேரி செய்ய சிங்கப்பூர் செல்லும் இரண்டு இளைஞர்களின் ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப்பைப் பற்றிய கதை. கே.பாலசந்தர் இயக்கிய அந்தப் படத்தில் கமல், ரஜினி இருவரும் நடித்தனர்.எம். எஸ்.விஸ்வநாதன் இசைக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதினார். முதல் பாட்டின் கம்போசிங் சென்னை, ப்ரெசிடென்ட் ஹோட்டல் அறையில் நடைபெற்றது. “நீங்களும் வாருங்கள். கண்ணதாசனும் விஸ்வநாதனும் சேர்ந்து பணிபுரிவதைப் பார்ப்பதே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும்” என்றார் பாலசந்தர். சென்றேன்.முதலில் ஆர்மோனியப் பெட்டி வந்தது. பின் எம்.எஸ்.வி வந்தார். பட்டனை அழுத்தி, டிபன் வந்தது. அதன்பின், கசங்கல் இல்லாத தூய வெள்ளை உடையில் வந்தார் கண்ணதாசன். அகலமான நெற்றியில் குங்குமப்பொட்டு. மெலிதான, அழுந்த வாரிய தலைமுடி. தாராளமான புன்னகை. ‘பெண்டிக்ட் சொல்யூஷன்’ (Benedict Solution) வைத்து சர்க்கரை இருக்கிறதா என்று பார்த்துவிட்டுத்தான், காபிக்கு சர்க்கரை போடச் சொன்னார். எம்.எஸ்.வீயும், கவிஞரும் அன்யோன்யமாகப் பழகிக்கொண்டார்கள். “விசு, என்ன ட்யூன் ?” “அண்ணே! சங்கீதத்தைப் பற்றிய உற்சாகமான ட்யூன்!” “வாசி! ” விஸ்வநாதனின் விரல்கள் ஆர்மோனியத்தில் உலவ, அவருக்கே உரிய வசீகரமான குரலில், “தன் னானே தன்னானே தன்னானே தன்னானே” என்று பாடினார். உடனேயே கவிஞர், “எங்கேயும் எப்போதும் சங்கீதம், சந்தோஷம் ” என்றார். “பாடிப் பாரு !” “கச்சிதமாக இருக்கு, கவிஞரே !””அடுத்த அடி. ?””தானனன்னே தானனன்னே தானனன்னே தானனன்னே…!””தன்னானேக்கு பதில் தான னன்னேயா ? சரி கொஞ்சம் தத்துவம் பேசலாமா ?” என்று டைரக்டரைப் பார்த்தார், கவிஞர். பாலசந்தர், “தாராளமா! உங்களுக்குச் சொல்லணுமா கவிஞரே ! ” “ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…!” “சரியா ?” “Perfect !” விஸ்வநாதன் பாடப் பாட, கண்ணதாசன் அத்தனை சரணங்களையும் (“காலை ஜப்பானில் காபி…. மாலை நியூயார்க்கில் காபரே… அவங்க ஊரூரா போறாங்கல்ல ? “) உடனுக்குடன் உதிர்த்ததை பஞ்சு அருணாசலம் அழகான கையெழுத்தில் எழுதித்தர, சில மணி நேரங்களில் முழுப் பாட்டும் எழுதப்பட்டது. இடையிடையே, கண்ணதாசனுடன் பேச்சுக் கொடுத்தேன். “எப்படி இவ்வளவு சரளமா வார்த்தைகள் வருது ? ” “தமிழ்ல ஆதார சந்தத்தைப் பிடிச்சுட்டாப் போதும்! பாருங்க, சீதைக்கு எத்தனை பெயர்கள் ? சீதா — நேர் நேர்; ஜானகி — நேர்நிரை; ஜனகா — நிரைநேர்; வைதேகி — நேர் நேர் நேர் …. (இது புரிவதற்கு தமிழ் இலக்கணம் சற்றுத் தெரிய வேண்டும். தமிழில் பேசவே / தமிழ் தெரிந்து கொள்ளவே விரும்பாத இன்றைய ஆண்டிராய்ட் தலைமுறையினருக்குப் புரிய வாய்ப்பில்லை) இப்படி எந்தச் சந்தம் வேணுமோ அந்தச் சந்தத்துக்கு வார்த்தைகள் போட்டுக்கலாம். என்ன, எல்லா வார்த்தையும் தெரியணும்… அவ்வளவு தான். கம்ப இராமாயணத்தில் ஒவ்வொரு படலத்திலும், பாடலிலும் ஒரு புது வார்த்தை கிடைக்கும் !” மறுநாள் ரிக்கார்டிங்குங்கு கண்ணதாசன் வந்து தலையைக் காட்டிவிட்டுப் போனார். அவர் வேலை முதல் நாளே முடிந்துவிட்டது . அதன்பின் கண்ணதாசனை நான் சந்திக்கவில்லை. அவர் உடல்நலம் குன்றி, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதும், தாய் நாட்டுக்குத் திரும்பிய நிலையும், இளம் வயதில் மறைந்ததும் என் மனத்தை உருக்கிய நிகழ்ச்சிகள். ஏறத்தாழ 40 ஆண்டுகளாகியும் அந்தப் பாடல் இன்றும்கூட எல்லா மெல்லிசை நிகழ்ச்சிகளிலும் கட்டியம் கூறும் பாடலாகப் பாடப்படுகிறது. கண்ணதாசன் அதைத்தான் செய்தார்… எங்கேயும் எப்போதும் சங்கீதத்தையும், சந்தோஷத்தையும் பரப்பினார். உலகில் தமிழர்கள் வாழும் ஏதாவது ஒரு மூலையில் பயணிக்கும் கார்களிலும், இல்லங்களிலும் அவரது ஏதாவது ஒரு வரி ஒலிக்காத நேரமே இல்லை. ( Bala shares.....))
  8. Jaffna News Deena Kumar · · இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் தலைவராக நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 26ஆம் திகதி புதன் கிழமை அன்று, போட்டியின்றி ஏகமனதாக அவர் தெரிவு செய்யப்பட்டார். இந்த தலைவர் பதவியைப் பெற்றுக் கொள்ளும் முதலாவது தமிழர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக் கொண்டுள்ளார். வாழ்த்துகள்......!
  9. இனிமையான பாடல்கள் 🅘🅝🅘🅜🅐🅨🅐🅝🅐 🅟🅐🅓🅐🅛 · Rejoindre Dinesh Kumar · · வாழ்கை வாழுகிறோமா!!! வசிக்கிறோமா??? இட்லியை ஆசையுடன் பார்த்தோம் பண்டிகை நாட்களில் மட்டும் கறிக்கடை ஊருக்கு ஒன்று மட்டும் தான் இருந்தது நண்பர்களோடு எதையும் எதிர்பாராமல் தூய நட்பாய் பழகினோம் ஒரு சினிமா பார்க்க ஒப்புதலுக்கு ஒரு வாரம் தவம் கிடந்தோம் அந்த காலம் தான் நன்றாக இருந்தது.. ஆரத்தி எடுக்க போட்டி போட்ட மதினிமார்கள் இருந்தார்கள்.. தாய்க்கு நிகராய் காவல் காத்த தாய் மாமன்கள் இருந்தார்கள்.. ஜரிகை குறைவான வேட்டி வாங்கி தந்ததற்காக சண்டை போட்ட பங்காளிகள் இருந்தார்கள்.. இழவு விழுந்த வீடுகளில் உறவினர் இடுகாடு வரை போனார்கள்.. அடுத்தடுத்து பெண்களுக்கு திருமணம் செய்தும் மாறி மாறி பிள்ளைப் பேற்றிற்கு பெண்கள் வந்தாலும் அம்மாக்கள் ஓய்வின்றி உழைத்தார்கள் ஐந்தாறு பிள்ளைகள் இருந்தாலும் அப்பாவிற்கு மன அழுத்தங்கள் இல்லை.. ஒரே சோப்பை குடும்பம் முழுதும் உபயோகித்தும் தோல் நோய்கள் வரவில்லை.. கண்டதை உண்டாலும் செரித்தது. தொலைக்காட்சி செய்திகளில் உண்மை இருந்தது.. பண்டிகை க்கு ஒரு மாதம் முன்பே ஆர்வமுடன் தயாரானோம் உடுத்த புதுத்துணி கையில் தரும் போது ஆஸ்கார் விருது வாங்கும் கலைஞன் போல் உணர்ந்தோம் ஃபேன் இல்லாமல் உறக்கம்.வந்தது.. எங்கோ ஏதோ ஒரு மூலையில் மருத்துவமனையும் ஹோட்டலும். இருந்தது.. வெயிலாலும் மழையாலும் பாதிப்பு இல்லை.. பிள்ளைப்பேறு செலவில்லாமல் சுகமாய் இருந்தது.. கல்வி கட்டணம் இல்லாமல் கிடைத்தது.. மாணவர்கள் ஆசிரியரிடம் அன்பாய் பணிவாய் இருந்தார்கள்.. ஆசிரியைகளிடம். எளிமை இருந்தது.. படுக்கையை எதிர்பாராமல் பாயில் உறங்கினோம் தாத்தா பாட்டி சொல்லும் கதை கேட்டுகொண்டே அவர்கள் மடி மீது தலை வைத்து நாம் உறங்கிய தருணம் கண்டோம் பெரியப்பா சித்தப்பா உரிமையோடு அடித்தார்கள் நம் தப்பை சரி செய்ய பெரிவர்களின் உடையைப் போட தயங்கியதில்லை.. அப்பா சொன்னால் அந்த வார்த்தை மறுக்காமல் ஏற்கப்பட்டது.. பெண் பார்க்க வந்தவனை பிடித்திருக்கிறது என்று சொல்ல வெட்கப்பட்டோம்... காவிரிக் கரையில் பயமின்றி குளித்தோம் ஆற்று நீர் சுத்தமாய் இருந்தது.. பையில் இருக்கும் ஐந்து ரூபாய் க்கு அளவில்லா ஆனந்தம் கொண்டோம் ஹோட்டலில் தாத்தா ஆசையோடு வாங்கி தரும் பூரி மசாலா க்கு எல்லையில்லாத மகிழ்ச்சி கண்டோம் செல்போன் எதுவும் இல்லை ஆனாலும் பேசிய நேரத்தில் வந்து சேர்ந்தனர் நண்பர்கள் ஆசிரியர் மீது அசாத்திய மரியாதை இருந்தது தாவணியில் தேவதைகளாக இளம் பெண்கள் காதுகளை ரணமாக்காத இனிய பாடல் இசை கேட்டோம் ஒரே குச்சி ஐஸ் வாங்கி எந்த சங்கோஜமும் இல்லாமல் நண்பர்கள் ஆளொக்கொரு கடி கடித்து சுவைத்தோம் ஆண்கள் தான் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தார்கள்.. மிகச்சிறிய வயதில் எல்லாம் பால் பேதங்கள் தோன்றவில்லை.. மொத்தத்தில் அப்போது வாழ்ந்தோம் இப்பொழுது வசிக்கிறோம் அவ்வளவே... ஆமாம் தானே??? இதுபோன்ற ஒரு காலகட்டத்தில் நாங்களும் கொஞ்ச காலம் வாழ்ந்திருந்தோம்.....இந்தக் கொடுப்பனவு எங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்கவில்லை.......! 😁
  10. ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜெகமே ஆடிடுதே.......! 😍
  11. வணக்கம் வாத்தியார்.........! அடி ஆடி மாச காத்தடிக்க வாடி கொஞ்சம் சேத்தணைக்க மானே மாங்குயிலே அடி நானே ஆண்குயிலே அடி காஞ்ச மாடு நல்ல கம்புலதான் வந்து விழுந்தாப்போல உன் அன்புல நான் பொடவையும் பறக்குற அட ஈச்சம் ஓல பாய் விரிச்சு எழனி வெட்டி தண்ணிகுடிச்சு கூச்சம் விட்டு கை வெச்சு நாம்பேச நீ பேச அம்மா வக்காலி மாமங்காரன் பாத்தா என்ன மூச்சு வாங்க வேர்த்தா என்ன அக்கா பெத்த சொக்கு பொண்ணு மச்சாங் கொஞ்சும் மத்தாப்பூவு தொட்டா என்ன பட்டா என்ன கெட்டா போகும் அம்மியும் அசங்ஞ்சுடும் ஊத வேணும் நாயனத்த, ஓத வேணும் மந்திரத்த போடவேணும் பூச்சரத்த கண்ணாலம் கச்சேரி எப்போ கண்ணாலம் கச்சேரி எப்போ நேரங்காலம் நல்லாருக்கு நீ இல்லாட்டி டல்லாருக்கு வாடி புள்ள வாச முல்ல நெஞ்சை அள்ளும் மஞ்சக்கொல்ல ஒட்டி நின்னா கட்டி நின்னா குத்தமில்ல ஒடம்பது வலிக்கிது......! ---ஆடி மாச காத்தடிக்க---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.