Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. முதலில் எதை எதனோடு ஒப்பிடுவது என்று ஒரு தீர்மானமான முடிவுக்கு நீங்கள் வர வேண்டும். ஐக்கிய இராச்சியத்தை அமெரிக்காவோடு ஒப்பிட முடியாது, இரு வியாபாரங்களை ஒப்பிட முடியாது, இப்ப "வீட்டுக் கடனை வியாபாரக் கடனோடு ஒப்பிட முடியாது" என்றும் சொல்லியாகி விட்டது😂! என் கேள்வி: இந்தக் கள்ள எண்ணை வியாபாரியை சாதாரண வீட்டுக் கடன் பெறுபவர்களோடு முதலில் ஒப்பீடு செய்த "ஒப்பிலா மணி" இப்ப எங்க போய் விட்டார்😎?
  2. ஒரு தொழில் முனைவர் இலாபம் பார்க்கும் பேராசையில் "தன்னிடம் எவ்வளவு இருக்கிறது?" என்றே எண்ணிப் பார்க்காமல் பல்வேறு தொழில் முயற்சிகளைக் கடன் வாங்கி ஆரம்பித்திருக்கிறார். இப்படியாக பல தொழில் முயற்சிகளை ஆரம்பித்து அவற்றிடையே பணத்தை கட்டுப் பாடுகளின்றி மீள் சுழற்சி (rolling) செய்வது பல நாடுகளில் வியாபார விதிகளை மீறும் ஒரு செயல் (இப்படியாக தன்னுடய இரண்டு கம்பனிகளிடையே பணத்தை சுழற்சி செய்து, அதில் ஒரு கம்பனியில் முதல் போட்டவர்களுக்கு போலி இலாபம் காட்டிய முன்னாள் தொழில் முனைவர் சாண்ட் பாங்க்மான், தற்போது நியூயோர்க் சிறையில் வசிக்கிறார் -அந்தளவுக்கு இது அமெரிக்க சட்டங்களின் படி ஒரு பாரிய குற்றம்!). இப்படியான போலி இலாபம், இல்லாத செல்வத்தை இருப்பதாகத் தோற்றம் காட்டி வங்கிகளிடம் கடன் பெற்ற இந்த தொழில் முனைவர், இலாபத்திற்கும் வரி கட்டவில்லை, தன் தொழிற்சாலைகளில் பலவற்றை தொடர்ந்து செயல்படுத்தவும் முடியவில்லை. இதன் பொறுப்பை கடன் கொடுத்தவர்களிடம் சுமத்தி விடுவது மோசடி செய்த தொழில் முனைவரைக் காப்பாற்றும் முயற்சியா அல்லது வாசகர்களை "இதெல்லாம் சகஜம், எனவே நீங்களும் செய்யலாம் பிசினஸ்!"😎 என்று தவறான பாதையில் ஊக்குவிக்கும் நா.மு ஸ்ரைல் அட்வைசா என்பது எனக்கு விளங்கவில்லை. ஒருவர் தனது வீட்டை சமகாலத்தில் தன் கையிலிருக்கும் செல்வத்தை மட்டும் வைத்துத் தான் வாங்க முடியும் என்றால், எங்கள் ஊரில் இருப்பது போல பரம்பரையாக சொத்து வைத்திருப்பவர்கள் போலத் தான் மேற்கு நாடுகளிலும் ஒரு நிலை உருவாகும். எனவே தான் மேற்கு நாடுகளில், வீட்டுக் கடன் (mortgage), கடன் வாங்குபவரின் நம்பகத்தன்மையை பல வழிகளில் உறுதி செய்து, அதற்கும் மேலதிகமாக அந்த கடனுக்கு காப்புறுதியும் எடுத்து வங்கிகள் கடன் வழங்கும். ஒரு குறிப்பிட்ட தொகையினர் இந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலை ஏற்படும், காப்புறுதி நிறுவனம் வங்கியின் இழப்பை ஈடு செய்யும். பெருந்தொகையினர் கடனைத் திருப்பிக் கொடுக்கத் தவறின், வங்கியின் இழப்பை காப்புறுதிக் கம்பனியால் ஒரே நேரத்தில் ஈடு செய்ய இயலாது - இது தான் 2008 இல் அமெரிக்காவில் நடந்தது (மேலதிக விளக்கம் தேவையானோர் "The Big Short" என்ற திரைப்படத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம்). எனவே வீட்டுக் கடன் என்பது செய்தியில் இருப்பவர் போன்ற மொள்ளமாறி பிசினஸ் ஆட்களின் விளையாட்டுக்குரிய ஒரு சிஸ்ரம் அல்ல! நேர்மையாக உழைத்து, வரி கட்டி, தங்கள் குடும்பத்தையும் ஒரு நிலையான இடத்தில் வாழ ஆசைப்படும் சாதாரண மக்களுக்குரிய ஒரு முறைமை தான் வீட்டுக் கடன்!
  3. அப்ப தமிழ் பிரதிநிதிகள் தான் "எய்தவன்" இனப்படுகொலையாளர்களான அரசு "அம்பு" என்கிறீர்களா😂?
  4. உண்மையில் இப்படியாக முட்டாள் வேலைகள் செய்யும் பெற்றோரை, அவர்களது இழப்பையும் பொருட்படுத்தாமல் சிறுவர் துன்புறுத்தல் குற்றம் சுமத்தி சிறையில் போட வேண்டும். ஏனைய குழந்தைகளைக் காப்பாற்ற இது ஒரு வழியாக இருக்கும். 7 வயதுக் குழந்தை முன் இருக்கையில் இருப்பதே விதி மீறல், இந்த லட்சணத்தில் மடியில் வைத்துக் கொண்டு வேறு பயணம்! தற்கால வாகனங்களில் முன் இருக்கையின் எயார் பாக் ஒரு குறிப்பிட்ட நிறை இருந்தால் மட்டும் தான் செயல்படும் படி வைத்திருக்கிறார்கள். நிறை குறைந்த குழந்தையை முன்னிருக்கையில் வைத்து பெல்ற் போட்டாலும் எயார் பாக் வேலை செய்யாது. வாகனம் நகர ஆரம்பித்ததும் எச்சரிக்கை மணி கூட ஒலிக்கலாம். இது இந்தியாவில் நடந்திருக்கிறது. இங்கே என் நகரில் வசிக்கும் இந்தியப் பெற்றோர் சிலர் தங்கள் சிறு பிள்ளைகளை காரின் பின் சீற்றில் சும்மா நிற்க வைத்த படி அருகில் இருக்கும் இடங்களுக்குப் போய் வருவதைக் கண்டிருக்கிறேன். முழு முட்டாள்கள்!
  5. 🤣 அருமையாகக் "கற்பனைக் கதை எழுதியிருக்கிறார் பா. ரவீந்திரன்! இப்படியாக சாவேஸ் அமெரிக்க எண்ணைக் கம்பெனிகளை கையகப் படுத்திய போது வெளிநாட்டு மூலதனம் 1.2 பில்லியன்களில் இருந்து இருந்து 200 மில்லியன்களாகச் சடுதியாக வீழ்ந்தது! அதே நேரம் நாட்டை விட்டு சில மாதங்களில் 20 மில்லியன் பணம் வெளியேறியது - அந்தப் பணத்தில் பெரும்பாகம் ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளின் "ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள்"😎 பக்கம் தான் போனது என்கிறார்கள். உச்ச நீதிமன்றமும், நாட்டின் பாராளுமன்றமும் சாவேசினால் இடை நிறுத்தப் பட்டன (எனவே, அவரது செயல்களை வெனிசுவெலா சட்டங்களால் தடுக்க முடியவில்லை!) வெனிசுவெலா மக்களுக்கு என்ன ஆனது? மக்கள் செல்வந்தர்களாகவில்லை, ஏழைகளானார்கள். பெருமளவினர் ஸ்பெயின், அமெரிக்கா, கனடா என்று புலம் பெயர்ந்தார்கள். பொருளாதாரம் பெரும் அடி வாங்கியது, இன்னும் எழ முடியவில்லை! அமெரிக்கா மீது காண்டு இருக்கலாம், ஆனால் நடந்தவற்றை கற்பனையினால் மாற்றி எழுதி வாசகர்களை முட்டாள்களாக்கக் கூடாது!
  6. செய்வினை, செயற்பாட்டு வினை எல்லாம் தாறுமாறாக ஓடுகிறது😂!
  7. இஷாரா யாழ்ப்பாணமூடாகத் தப்பிச் சென்ற விவகாரத்தில் சுமந்திரனுக்குத் தொடர்பிருப்பதாகச் சுட்டும் செய்திகள், தகவல்கள் எவையும் எங்கள் யாழ் கள சுமந்திரன் லவ்வர்சுக்குக் கிடைக்கவில்லையோ😎? Just a thought!
  8. நேரடியாக மரதன் (~26 மைல்கள்) போட்டிக்குப் போக முன்னர் அரை- மரதன் (~13 மைல்கள்) முயற்சி செய்து பின்னர் மரதன் முயற்சி செய்யலாம். புதிதாக அரை மரதன் ஓடும் ஒருவர் 2 மணி நேரங்களுக்குள் 13 மைல்களை ஓடி முடித்தாலே ஒரு சாதனை தான்! இப்படி இரண்டு மணி நேரங்களுக்குள் ஓடி முடிக்க, ஒரு மைல் தூரத்தை சராசரியாக ~9 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். பயிற்சி எடுத்தால் இது சாத்தியம். ஆனால், எங்கள் இதயம் பற்றிய புரிதல், அது இல்லா விட்டால் ஒரு மருத்துவப் பரிசோதனை என்பன அவசியம் (கட்டுரையில் இருப்பது போல). அண்ணளவாக ஒருவரின் அதியுச்ச இதயத் துடிப்பை 220 இல் இருந்து அவரது வயதைக் கணிப்பதால் கணிக்கலாம் (Eg: 220-40=180 bpm). அந்த அதியுச்ச இதயத் துடிப்பினை நெருங்காதவாறு ஓடக் கூடியதாக இருக்க வேண்டும். இதற்கு ஒரே வழி பயிற்சி தான்.
  9. எல்லாம் சரி! இந்த வரிகள் மட்டும் வயிற்றில் புளி கரைக்கிறது! டொனால்டு 2030 வரை இருப்பார் என நினைக்கும் போது, நாம் அதற்கு முதலே போய் விட வேண்டுமென்று தோன்றுகிறது!
  10. இப்ப என்ன சொல்ல வாறீங்கள்😂? ஒரு உதாரணத்திற்கு, "அமெரிக்காவில் அடிமைகளை வைத்திருப்பது சட்டமாக இருந்தது" ஓம் இருந்தது. 1860 இல் அது சட்ட விரோதமாகி விட்டது, ஆனாலும் 1920 வரை ஏதோ ஒரு விதத்தில் நடைமுறையில் இருந்தது. காரணம் என்ன? உங்களைப் போல "எல்லோரும் செய்தால் அது நோர்மல், நான் ஏன் செய்யக் கூடாது?" என்ற "புத்திசாலித்தனமான பேர்வழிகள்" இருந்தது தான் காரணம். இது போன்ற கள்ள வேலைகள், முடிச்சவிக்கி வேலைகளைச் செய்யாமல் இருப்போர் வக்கில்லாமல், வாய்ப்பில்லாமல் செய்யாமல் விடுவதில்லை. அவர்களுக்குள் இருக்கும் அறத்திசை காட்டி செய்யாமல் தடுத்து விடுகிறது. இப்படியாக உள்ளக அறம் உடைய மக்கள் அதிகமாக இருக்கும் நாடுகள் ஊழல் குறைந்த நாடுகளாக இருக்கின்றன. அப்படியில்லாமல் உங்களைப் போல "அறமாவது மண்ணாங்கட்டியாவது" என்போர் அதிகமாக வாழும் நாடுகள் ஊழலில் தேங்கிப் போய் முன்னேற இயலாமல் தவிக்கின்றன.
  11. பொண்ட் மாஸ்ரர், ஆரியகுளத்தடிக்கு அண்மையில் என நினைக்கிறேன், பொண்ட் இன்ஸ்ரிரியூற் என்ற ரியூசன் சென்ரர் (உள்ளூர் மாணவர்களின் பாசையில் "கொட்டில்" என்பார்கள்😂) ஒன்றை பல காலமாக நடத்தி வந்ததால் இந்தப் பெயர் வந்தது. இன்றுதான் இவரது உண்மையான பெயர் எனக்குத் தெரியும். "பொண்டர்" என அழைக்கப் படும் இவர், தான் தனியாக அல்லாமல், யாழ்ப்பாணத்தில் இருந்த பல ஆசிரியர்களின் உதவியோடு மாதிரிப் பரீட்சை வினாத்தாள்களை அச்சிட்டு, மாணவர்களிடம் ஒரு தொகையை வாங்கிக் கொண்டு பரீட்சை வைத்து, அதை மேலும் சில ஆசிரியர்களின் உதவியோடு திருத்தி பெறுபேறுகளை வெளியிடுவார். "பொண்டர் அச்சிடும் கேள்விகள் பரீட்சையிலும் வருகின்றன" என்ற ஆச்சரியம் கொண்டோர், தாமாக கடந்த கால வினாத்தாள்களைக் (past papers) கண்கொண்டும் பார்க்காத மாணவர்களாக இருந்திருக்கின்றனர் என்று அர்த்தம். ஏனெனில், இலங்கையில் இவரது காலத்தில் இரசாயனவியல் போன்ற விஞ்ஞானப் பாடங்களுக்காக பரீட்சை வினாக்களைத் தயாரிப்போர் தெற்கில் இருக்கும் குறிப்பிட்ட சில பேராசிரியர்களாகத் தான் இருந்தனர் - இவர்களின் பெயர்கள் கூட யாழ்ப்பாண மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தெரியும். கேள்விகளை இந்தப் பேராசிரியர்கள் மீள் சுழற்சி செய்வதும் அடிக்கடி நடக்கிற விடயம். ஆனால், இந்தத் தகவல்கள் கிடைக்காத ஒரு மாணவர் குழுவினரிடம் இருந்து, இந்த மாதிரிப் பரீட்சைகள் மூலம் பணம் சேர்க்கும் ஒரு முறையை பொண்டர் செய்து வந்தார். அவருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் கொட்டில் அமைத்துக் காசு பார்த்தவர்கள் இப்படி செய்ய முடியாமைக்கு, மாணவர்களின் சுயமான தேடலுல், பயிற்சியும் காரணமாக இருந்தன. கடைசியாக பொண்ட் மாஸ்ரர் பற்றி நான் அறிந்தது 1999 இல் என்று நினைவு. தன் மாதிரிப் பரீட்சை முயற்சியை வடக்கிலிருந்து மத்திய மாகாணத்தின் கண்டி வரை விஸ்தரித்து, அதற்கு உதவ பேராதனையில் என் அறை நண்பனாக இருந்த ஒருவரை நாடியிருந்தார். அந்த அறை நண்பருக்கு உதவியாக நான் கண்டியில் ஒரு மண்டபத்தில் நடந்த மாதிரிப் பரீட்சையில் உதவி செய்திருந்தேன். அந்த வேளையில் தான், பொண்டர் தீவிரமான நோயினால் பாதிக்கப் பட்டு, மீண்டிருப்பதாக அறிந்தேன். புற்று நோயா, அல்லது பக்க வாதமா என்பது இப்போது நினைவில் இல்லை.
  12. The quiet couple from Weybridge behind £1.7bn Prax PetroleumThere is nothing remarkable about Horizon Business Village, a collection of squat redbrick offices off a roundabout in Weybridge, Surrey. Yet it is home to an2017 இலேயே எச்சரிக்கை மணி அடிக்கப் பட்டிருக்கிறதே? அதன் பிறகா இவர்களை றோல் மொடல்களாகச் சித்தரித்தார்கள்?
  13. எழுதினதையே ஏன் திரும்பத் திரும்ப எழுதுகிறீர்கள் என விளங்கவில்லை😂! "அப்படித் தான் எல்லோரும் செய்கிறார்கள், சீமானும் செய்தார்" என்றால் ஏன் அவருக்கு "புனிதர்" பட்டம் கொடுத்து தலையில் காவும் தேவை? அவர் "சின்னக் கருணநிதி" என்று கோசான் உட்பட பலர் சொல்லி விட்டார்கள். ஆனாலும், கருணாநிதியிடம் கூட இரண்டு மனைவியரை பகிரங்கமாக வைத்திருக்கும் வெளிப்படைத்தன்மை இருந்தது. "திரள் நிதி" குறைந்து விடும் என்ற அச்சத்தில் சீமானிடம் அதுவும் இல்லாமல் தானே இருந்தது? இப்ப மூலையில் முடக்கப் பட்ட பின்னர் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இதில் பெருமை எதுவும் இல்லை!
  14. ஜேவிபி, என் சொந்த அனுபவத்தில் ஆளவந்தான் கமல்ஹாசன் போல "கடவுள் பாதி மிருகம் பாதி" கலவை என்று சொல்லலாம்😂! முதன் முதல் ஜேவிபி அமைப்பின் தீவிர உறுப்பினர்களோடு பரிச்சயமானது சந்திரிக்கா ஆட்சிக்கு வந்த பின்னரான, பேராதனைப் பல்கலையில். அவர்களது நிலைப்பாடு "தமிழர்களுக்கு என்று விசேடமான பிரச்சினை இல்லை, இருப்பது வர்க்கப் பிரச்சினை (class struggle), அதைத் தீர்த்தால் தமிழர் பிரச்சினையும் தீர்ந்து விடும்" என்ற இடது சாரி (சோசலிச) வாதமாக இருந்தது. பின்னர், இந்திய எதிர்ப்பும், மேற்கு எதிர்ப்பும், சில ஜேவிபி தரப்புகளின் சிங்கள இனவாதமும் சேர்ந்து நான் கண்ட ஜேவிபி 90 களில் "தேசிய சோசலிசம் - National socialism" என்ற நிலைக்குப் போனார்கள் - இது தான் தமிழர்களுக்கு பாதகமான நிலைப்பாடு. ஆனால், பேராதனையில் மாணவர் சங்க தலைமையில் இருந்த ஜேவிபி உறுப்பினர்களால் தமிழ் மாணவர்கள் பெரும்பாலும் பாதுகாக்கப் பட்டார்கள் என்பது என் அபிப்பிராயம். பொலிஸ் கெடுபிடி அதிகம். தமிழ் மாணவர்களைச் சும்மா பிடித்துக் கொண்டு போய் பேராதனைப் பொலிஸ் நிலையத்தில் வாங்கில் உக்கார்த்தி வைத்து விடுவார்கள். தகவல் கிடைத்ததும், உடனே பொலிஸ் நிலையம் போய் அவர்களோடு முரண்டு பிடித்து தமிழ் மாணவர்களைக் கூட்டி வருவது ஜேவிபி மாணவர் சங்கத் தலைவர், செயலாளராக இருப்பார்கள். தலதா மாளிகை தாக்கப் பட்டதற்கு அடுத்த சில நாட்கள். நான் ஹில்டா விடுதியில் இருந்தேன். நமக்குத் தான் வவுனியா கடப்பதற்குப் பாஸ் வேண்டுமே? எனவே வார இறுதியாகிய போதும் நான் விடுதியிலேயே இருந்தேன். எந்த அசுமாத்தமும் தாக்குதலுக்கு அடுத்த நாள் இருக்கவில்லை. ஆனால், அதற்கடுத்த நாள் பொலிஸ் வந்து அனைத்து தமிழ் முஸ்லிம் மாணவர்களின் அறைகளைச் சோதித்து விட்டுச் சென்றார்கள். மரியாதையாக நடந்து கொண்டார்கள். அன்று மாலை தான் நமக்குத் தெரியாமல் நடந்த சில விடயங்கள் தெரியவந்தன. சிஹல உறுமய அமைப்பின் மாணவர்கள் குழு, ஹில்டாவில் இருக்கும் தமிழ் மாணவர்களைத் தாக்குவது என்று முடிவெடுத்து தயார் செய்த போது, விடயமறிந்த ஜேவிபி மாணவர்கள் உறூமய மாணவர்களுக்கு வன்முறை அச்சுறுத்தல் விடுத்துத் தடுத்திருக்கிறார்கள். அதே வேளை, உறுமய தரப்போடு ஒரு உடன்பாட்டிற்கு வந்து கண்டி பொலிஸ் வந்து தமிழ் மாணவர்களின் அறைகளைச் சோதனையிடலாம் என்று ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அப்ப இவங்கள் நல்லவங்களா?...வெயிற் போர் இற்😂.... தலதா மாளிகை தாக்கப் பட்ட அதே நாளில், கண்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் இருக்கும் கட்டுக்கல பிள்ளையார் கோயில் ஒரு கும்பலால் தாக்கப் பட்டு பாரிய சேதத்திற்குள்ளானது. இந்தத் தாக்குதல் குழுவில், ஹில்டாவில் தமிழ் மாணவர்களைக் காப்பாற்றிய அதே ஜேவிபி மாணவர்கள் சிலரும் இருந்திருக்கிறார்கள். எனவே தான், ஜேவிபியை இன்னும் என்னால் ஒரு பானைக்குள் போட முடியாமல் இருக்கிறது! ஆனால், தமிழர்களின் தாயகக் கனவிற்கு வன்முறை சாராத நீதிமன்ற வழிமுறை மூலம் முதல் சவப்பெட்டி ஆணியை அடித்தது ஜேவிபி என்பதில் எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை!
  15. என் ஐடியா கொஞ்சம் ட்ரம்பிற்குப் பிடிக்கும் என நினைக்கிறேன். 1991 இல் இருந்து "இக் நோபல் - Ig Nobel" என்ற ஒரு நையாண்டி "நோபல்" பரிசை ஒரு அமைப்பு வருடாந்தம் வழங்கி வருகிறது. அதை ட்ரம்பிற்குக் கொடுக்க ஏற்பாடு செய்யலாம்! ட்ரம்பிற்கு பரிசில் "Nobel" இருந்தால் போதும், எனவே முகம் கோணாமல் வாங்கி க்கொள்வார்! ஒரு சாம்பிளுக்கு, 2025 இல் இக் நோபல் பரிசுகள் பெற்றவர்கள் இவர்கள்👇 Ars TechnicaMeet the 2025 Ig Nobel Prize winnersThe annual award ceremony features miniature operas, scientific demos, and the 24/7 lectures.The kicker👇😂 Marcin Zajenkowski and Gilles Gignac, for investigating what happens when you tell narcissists—or anyone else—that they are intelligent.
  16. ஜேவிபியில் கடை நிலை உறுப்பினர்களாக இருந்தவர்கள், தமிழர்களைத் தாக்கி, அதை வன்முறையால் பாதிக்கப் பட்டவர்கள் அவதானித்திருக்கலாம், இந்த அனுபவங்களை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால், ஜே.ஆர் "ஜேவிபியின் சதி தான் கறுப்பு ஜூலை" என்று ஒரு முழுப் பொய்யைக் கூறி ஜேவிபியையும், ஏனைய இடதுசாரி அமைப்புகளையும் தடை செய்தார் என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன. கீழே ஒரு மாதிரி லயனல் போபகேயின் 2024 கட்டுரையில் இருந்து காணலாம். Groundviews - Journalism for CitizensMisconceptions About the 1983 Riots - GroundviewsPhoto courtesy of The Island A recent statement attributed to Prasanna Ranatunga, the Urban Development and Housing Minister of Sri Lanka, blaming the JVP for the July 1983 riots and posted on the A5ஆனால், ஜேவிபி தலைமையோ, உள்ளூர் அமைப்பாளர்களோ கறுப்பு ஜூலையைத் திட்டமிட்டார்கள், அல்லது ஆரம்பித்த பின்னர் நடத்தினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் நான் இது வரை காணவில்லை.
  17. "இறுதியாக மூலையில் மாட்டிக் கொண்ட பின்னர் மன்னிப்புக் கேட்பதற்கு ஒரு உதாரணம்" என்று முதல் வரியிலேயே சுட்டிய பின்னர், கோம்ப்ஸ் பற்றி எழுதியிருக்கிறேன். அவர் செய்த குற்றமும் சீமான் மீது சாட்டப் பட்டதும் ஒரே வகையான குற்றங்கள் என்ற கதையாடலை நான் முன்னகர்த்தவில்லை. வாத்தியாருக்கே இது விளங்கவில்லையென்கிற போது ஏனைய சீமான் அபிமானிகளுக்கு இது விளங்குமென்ற எதிர்பார்ப்பு எனக்கு இல்லை😎! இந்த "எல்லாரும் கள்ளர்" என்ற வாதத்தை நீங்களும் நூறு தடவை எழுதியிருப்பீர்கள். பதிலாக, இங்கே பலரும் உங்களிடம் திருப்பிக் கேட்டிருக்கிறார்கள்: கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்ராலின், உதயநிதி போலத் தான் சீமானும் "ஸ்தீரிலோலனாக" இருந்தார் என்றால் அதைத் துணிவாக வெளியே சொல்லி எதிர்கொள்ள அவருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் ஏன் தயக்கம்? புலிகளின் கொடியைத் தூக்கிப் பிடிப்பதால், பிரபாகரனின் படத்தின் முன்னால் நின்று தன் கட்சியின் அரசியல் பிரச்சாரத்தைச் செய்வதால் மட்டும் சீமானுக்கு "றோயல் பமிலி" போன்ற மரியாதையை நாம் கொடுக்க வேண்டுமா? எல்லா தமிழக அரசியல் வாதிகள் போலவும் பெண் விடயங்களின் சாதாரணமாக ஈடுபடும் சீமான், அப்படியே இன்னொரு அரசியல் வாதியாக இருந்து விட்டுப் போகட்டும்!
  18. புலவர், கோசான் சொல்லியிருக்கும் "சொ.செ.சூனியம்" என்ன என்று புரியவில்லையா? 2025 இல் சென்னை உயர் நீதிமன்று வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று வழக்கைத் துவக்கி, அது சீமானுக்குத் தான் ஆப்பானது. 12 வாரங்களுக்குள் விசாரிக்க வேண்டும், தள்ளுபடி செய்ய முடியாதென சென்னை கோர்ட் சொன்னது. இதை மறுக்கிறீர்களா? ஆதாரங்கள் பல உண்டே? அதன் பிறகு தானே வடக்கில் பிரபலமான வக்கீலைப் பிடித்து உச்ச நீதி மன்றம் போனார்? இதையும் மறுக்கிறீர்களா? ஏன்?
  19. நாம் சில சமயங்களில் கேள்விப் படும் இளவயது மட்ட மாரடைப்பு மரணங்களோடு சில கதைகளும் சேர்ந்து கேள்விப் படுவோம்: ஆள் ஓடியாடித் திரிந்தவர், சாப்பாட்டில் கவனம், அவ்வளவு குடி இல்லை..இப்படியான நல்ல விடயங்கள் சொல்வார்கள். ஆனால், இறந்தவரின் வாழ்க்கையை உற்றுக் கவனித்தால் மனப் பதற்றம் (stress) அதிகரித்த வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்பது தெரியவரும். இந்த மனப்பதகளிப்பு இதய குருதிக் கலன் நோய்களுக்கு மூன்றாவது முக்கியமான காரணி (முதல் இரண்டும் ஆரோக்கியமற்ற உணவு, உடல்பயிற்சியின்மை என்பன). சுவாரசியமான விடயம், தூக்கக் குறைவும் மனப்பதகளிப்பும் உடலில் ஒரே மாதிரியான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. எனவே, தூக்கம் ஒழுங்காக இல்லாதோரில் இதய குருதிக் கலன் நோய்கள் உருவாகும் வாய்ப்பு அதிகமாக இருப்பது ஆச்சரியமில்லை. எனவே, தூக்கத்தை முறையாகக் கையாள்வதின் மூலமும் இதய குருதிக் கலன் நோய்கள் வராமல் சிறிது தடுக்கலாம். இதன் நரம்பியலைப் புரிந்து கொண்டால் தூக்கத்தை குழப்பாமல், உரியமுறையில் கையாளுவது இலகுவாக இருக்கக் கூடும். எங்கள் உடலில் பதகளிப்பிற்குக் காரணமாக இருக்கும் நரம்புத் தொகுதி பரிவு (sympathetic) நரம்புத் தொகுதி. இது தூண்டப் பட்டால் இதயம் வேகமாகத் துடித்தல், சுவாசக் குழாய்கள் விரிவடைதல், அதிக விழிப்பு நிலை போன்ற மாற்றங்கள் ஏற்படும். நாம் அறியாமலே, ஒரு ஆபத்தும் எங்களை நோக்கி வராத போது கூட உணர்வுகளால் மூளை இந்த பரிவு நரம்புத் தொகுதியைத் தூண்டி இந்த மாற்றங்களைத் தூண்டும். உதாரணமாக ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் தூங்குவதற்கு முதல் வீட்டில் சி.என்.என் செய்தியைப் பார்த்தால், என் பரிவு நரம்புத் தொகுதி உச்சமாக தூண்டப் படுவது நான் அவதானித்த ஒன்று😂. இந்த பரிவு நரம்புத் தொகுதிக்கு எதிராக வேலை செய்யும் இன்னொரு நரம்புப் பிரிவு, பரபரிவு (parasympathetic) நரம்புத் தொகுதி எனப் படுகிறது. நாம் ஓய்வாக இருக்கும் போது, இந்த நரம்புத் தொகுதி வேலை செய்து, இதயத் துடிப்பைக் குறைத்து, இரத்த நாளங்களை விரிவடையச் செய்து (இதனால் தான் தூங்கும் போது ஒரு கட்டத்தில் ஆண் குறி தானாகவே எழுச்சி நிலையை அடைவது நடக்கிறது), கண்ணைச் சுழட்ட வைக்கும். எனவே, மன-உடல் ஓய்வு நிலையை எந்த வழியிலாவது தூண்டுவதால் பரபரிவு நரம்புத் தொகுதியைத் தூண்டினால் தூக்கம் வருவதற்கு ஏதுவான நிலை ஏற்படும். தம்பதிகளாக இருப்போர் உடலுறவில் ஈடுபடும் போதும் இதே பரபரிவு நரம்புத் தொகுதி தூண்டப் படுவதால், அதுவே கூட தூக்கத்திற்கு ஏதுவான நிலையை உருவாக்கும் (@பிழம்பர் இப்ப நிமிர்ந்து உக்கார்ந்திருப்பார் என நினைக்கிறன்! 😂)
  20. நேராக உரையாட முடிந்தால்😎 இந்தக் கேள்விக்கு "ஓம்/இல்லை" என்று மட்டும் பதில் தாருங்கள்: "விடுதலைக்கு ஆயுதவழி மட்டுமே சரி என்ற இந்தியாவின் மூளைச்சலவையினால் தான் புலிகள் அமைப்பு போராட்டத்தைக் கையில் எடுத்ததா?"
  21. 🤣சரியாப் போச்சு! யாரோ ஒருத்தர் முகட்டைப் பார்த்து யோசித்து விட்டு எழுதிய கட்டுரையில் "தமிழீழ விடுதலைப் போராட்டமே இந்தியாவால் நடத்தப் பட்டது" என்கிறார். அப்ப தமிழ் மக்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் போராட ஒரு தேவை இருக்கவில்லை என்பது மாதிரிப் போகிறது கதை! இதுக்கும் பாராட்டு வழங்கியிருக்கிறார்கள்😂!
  22. ஹலோவீன் நேரம் போய்த் தங்குவதற்கு நல்ல இடமாக இருக்கும், இப்படி மூடி விட்டார்கள்😂!
  23. 🤣கொஞ்சம் அலட்சியமாக இருந்தால், "சீமான் தான் விஜயலட்சுமி மீது வழக்குப் போட்டார்!" என்றும் புதுக் கதை பின்னுவீர்கள் போல இருக்கிறதே😂? 2011 இல் சீமான் மீது சென்னைக் கோர்ட்டில் கொண்டு FIR வரப் பட்டு, ஒரு நீதிபதியினால் முறைப்பாட்டாளரின் வாக்குமூலமும் பதிவு செய்யப் பட்டபின்னர், விஜயலட்சுமியை மிரட்டி 2012 இல் வாபஸ் வாங்க வைத்தார்கள். 2023 இல் மீண்டும் அவர் அந்தக் கேசைத் திறக்க முனைகிறார். சீமான் இதைத் தடுக்கக் கோரி (விசாரிக்கக் கோரி அல்ல!) சென்னை உயர் நீதி மன்றை நாடுகிறார். "வாக்குமூலம் பதிவாகி விட்டது, எனவே குற்றம் சாட்டியவர் இல்லாவிட்டாலும் கூட வழக்கை தடுக்க முடியாது" என சென்னை நீதி மன்றம் மறுத்து விட்டது. கீழே இணைப்பு. The HinduMadras High Court dismisses Seeman’s plea to quash rape caseMadras High Court dismisses Naam Tamilar Katchi chief Seeman's petition to quash actor vijayalakshmi rape case, directs police to complete investigation in 12 weeks.பெப்ரவரி 2025 இல் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்ய மறுத்த உடனே, சீமான் உச்ச நீதிமன்றிற்கு மார்ச் 2025 இல் சென்று "தள்ளுபடி செய்யுங்கள்" என்றே மனுப் போட்டார் (விசாரித்து முடித்து வையுங்கள் என்று அல்ல!). இரு தரப்பையும் "மன்னிப்புக் கேட்டால் வழக்கை தள்ளுபடி செய்யலாம்" என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். அப்படியே கேட்டிருக்கிறார். ஏதோ சீமான் விசாரித்துத் தன் குற்றமற்ற தன்மையை நிரூபிக்கப் போராடியதாகத் தான் இனி சீமான் விசிறிகளும், தம்பிகளும் எழுதுவார்கள் என ஊகித்தேன். இன்று நீங்கள் தொடங்கியே விட்டீங்கள்😂!
  24. இந்தத் தகவல் உங்களுக்கு "எட்டக்கூடிய" இடத்தில் இருக்கவில்லைப் போல: இந்தியாவில் மருந்துகள் உற்பத்தி, GMP தராதரப் பரிசோதனைகள், அவை மீறப் பட்டால் தண்டனை என்பன மத்திய அரசின் மருந்துக் கட்டுப் பாட்டு அமைப்புகள் மூன்றின் கீழ் மட்டும் தான் இருக்கின்றன. மாநில அரசுக்கு இதில் எந்தக் கடப் பாடும் ,அதிகாரமும் இல்லை. "பல்பு" தகவல் தேடுவோருக்கும், பகிர்வோருக்கும் கொடுக்கும் நேரத்தை உங்கள் "பியூஸ் போன பல்பை" மாற்றி ஒளி பெறப் பயன்படுத்துங்கள் ஐயா😎!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.