Everything posted by பெருமாள்
-
சுற்றுலாப் பயணிகள் கவனிக்கவும்
அந்த பக்கத்தில் ஏதோ வில்லங்கமான ஒன்று இருந்துருக்கும் நமக்கெல்லாம் இப்போ இருக்கிற பாஸ் போர்ட் எத்தனையாவது என்றே நினைவில் இல்லை வோசிங் மிசின் எனும் குல சாமி இருக்குமட்டும் .😀
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
இதே கதை சண்டை தொடன்கியபின்னும் 2௦௦7லும் இருந்தது கொழும்பில் .
-
எமது நாட்டு மீன் வளத்தை அழிக்கும் இந்திய மீனவர்களையே கட்டுப்படுத்த திராணியிலாதது இந்நாட்டு அரசாங்கம் - இந்தக் கடற்படையா மத்திய கிழக்கு கடற்பகுதியை பாதுகாக்க போகின்றது ?
நேற்று நண்பன் ஒருத்தனுக்கு வாட்சப் போன் டேய் எங்கு இருக்கிறாய் சோமாலி க்கு பக்கத்தில் ஏதோ இடத்து கடல் பாசையில் அது இங்கு வேணாம் அப்ப பிறகு ஆறுதலா போன் போடுகிறேன் இல்லையட இப்பத்தான் ரிலக்ஸ்சா இருக்கிறம் உலக நாட்டு நேவி முழுக்க இங்குதான் நிக்குரான்கள் இவங்களுக்கு பியுள் புல் பண்றதிலே நமக்கு மாதம் முழுதும் இதுதான் வேலையாகி போகுது . மேற்குலகு என்ன முடிவில் உள்ளது என்பது விளங்குது .
-
எமது நாட்டு மீன் வளத்தை அழிக்கும் இந்திய மீனவர்களையே கட்டுப்படுத்த திராணியிலாதது இந்நாட்டு அரசாங்கம் - இந்தக் கடற்படையா மத்திய கிழக்கு கடற்பகுதியை பாதுகாக்க போகின்றது ?
நல்ல மாற்றம் அல்ல அங்கலாய்ப்பு அவ்வளவே ரிஷாட் பதியுதீன்ன்
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
இது ஜப்பான முஸ்லிம் https://www.jaffnamuslim.com/2024/05/blog-post_916.html இராஜாங்க அமைச்சர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேயாட்டம் ஆடிய சம்பவம் பதிவு. Madawala News 14 hrs ago கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும் ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில் அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது . இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் . அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார். அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் . அப்போது, அவர் பாதுகாப்பு அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது , ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது . அரசியல்வாதியின் இந்த செயல் தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது . இது மடுவலவை https://www.madawalaenews.com/2024/05/blog-post_97.html விமான நிலையத்தில் ராஜாங்க அமைச்சரின் சண்டித்தனம் Thursday, May 16, 2024 சர்வதேசம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும் ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில் அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது . இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் . அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார். அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் . அப்போது, அவர் பாதுகாப்பு அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது , ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது . அரசியல்வாதியின் இந்த செயல் தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது . இரண்டு முஸ்லிம் இணையமும் ஒரே மாதிரி எழுதி உள்ளன யாவரும் கவனிக்க இங்கு தேவையில்லாத பிரச்சனையை உருவாக்கி குளிர் காய்பவர்கள் யார் என்று புரிந்து கொள்க . இலங்கையில் நாங்கள் இரண்டாம் தர குடிமக்கள் போர் முடிந்தபின் வேறு வழி கிடையாது இன்னும் எழுதலாம் வேணாம் காலையில் நிம்மதியாய் எழுந்து கோப்பி குடிக்கணும் .
-
எமது நாட்டு மீன் வளத்தை அழிக்கும் இந்திய மீனவர்களையே கட்டுப்படுத்த திராணியிலாதது இந்நாட்டு அரசாங்கம் - இந்தக் கடற்படையா மத்திய கிழக்கு கடற்பகுதியை பாதுகாக்க போகின்றது ?
“பாலஸ்தீனத்தை இல்லாதொழிக்கும் இஸ்ரேலின் வெறியாட்டம் வெற்றியளிக்காது; இறுதி வெற்றி ஜனநாயகத்துக்கே!!” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் சபையில் தெரிவிப்பு! ஊடகப்பிரிவு- உள்நாட்டு கடல் வளங்களையே இந்திய மீனவர்களிடமிருந்து பாதுகாக்க முடியாத இலங்கை கடற்படையினரை, மத்திய கடல் பிரதேசத்தை பாதுகாக்கும் பணிக்காக அனுப்பியிருப்பதன் பின்னணி என்ன? என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்றத்தில் (14) இடம்பெற்ற பாலஸ்தீனின் தற்போதைய நிலை குறித்த விவாதத்தில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்து உரையாற்றிய அவர், “இந்திய மீனவர்களின் ஊடுருவல்களால் நம் நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. இதைக்கூட கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு திராணியில்லை. இந்தக் கடற்படையா மத்திய கிழக்கு கடற்பகுதியின் கப்பற்போக்குவரத்தை பாதுகாக்கப்போகிறது? எனவே, அரசாங்கம் பாலஸ்தீன் விவகாரத்தில் இரட்டைமுகத்துடன் செயற்படுவதாக நான் சந்தேகிக்கின்றேன். பாலஸ்தீனர்களை விரட்டியதால் ஏற்பட்ட இஸ்ரேலிய தொழில் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இலங்கையும் ஆட்களை அனுப்பியுள்ளது. இது ஏன்? இஸ்ரேலின் பொருளாதாரம் மற்றும் இராணுவத்தை பாதுகாக்கும் தேவை அரசாங்கத்துக்கு ஏன் ஏற்பட்டது? வெளிநாட்டமைச்சர் இதற்குப் பதலளிக்க வேண்டும். வெறும் தலையாட்டியாக இருக்காமல், இஸ்ரேலின் வெறித்தனங்களை அரசாங்கம் கண்டிப்பது அவசியம். சொந்தமண்ணிலிருந்து பாலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்ட "நக்பா" தினத்தில், நான் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். சர்வதேச நியதிக்கு உடன்பட்டு பாலஸ்தீனை அங்கீகரியுங்கள். இஸ்ரேலின் இன ஒழிப்புச் செயற்பாடுகளை ஆதரிக்கும் வகையில், இலங்கை செயற்படக்கூடாது. தர்மமின்றி, இனவெறியோடு தலைவிரிகோலமாக தாண்டவமாடும் யூத இராணுவம் முழு பாலஸ்தீனையுமே அழிக்கத் துடிக்கிறது. பதிலடிப்போரென்ற போர்வையில் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் நிரபராதிகள் அனைவரையும் சல்லடைகளால் துளைக்கிறது இஸ்ரேல். வைத்தியசாலைகள், அகதிமுகாம்கள் இன்னும் நிவாரண நிலையங்களும் விமானத்தாக்குதல்களால் தகர்க்கப்படுகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய அரசுகளின் ஒருதலைப்பட்ச போக்குகள், ஜனநாயகத்துக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. வீட்டோ அதிகாரத்தால் இஸ்ரேலைப் பாதுகாக்கும் அமெரிக்கா, பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களையோ அல்லது மனிதாபிமானத்தையோ கண்டுகொள்ளவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டார். https://www.madawalaenews.com/2024/05/i_48.html
-
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம்
யார் அந்த பொது தமிழ் ஜனாதிபதி வேற்பாளர் ? இப்போதைக்கு எரிக் கும் வந்து போயிட்டுது ஜப்பானும் வந்து போயிட்டுது அமெரிக்கனும் வந்து போயிட்டுது கடைசியில் தமிழ் தேசியத்துக்கு எதிரான கருத்துரை பரப்புரை கொண்டவர்களும் போறார்கள் வருகிறார்கள் இன்னும் போய் கொண்டும் இருக்கிறார்கள் இந்த செய்தி வந்ததில் இருந்து பலருக்கு இரவு துக்கம் போயிட்டுது . நமக்கு ஏதோ ஒரு தீர்வையாவது இப்படியாகினும் கிடைக்குகட்டும் அங்குள்ள தமிழ் மக்களுக்கு என்ற எண்ணம் மட்டுமே.
-
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம்
காரணம் இல்லாமல் சும்மா வரமாட்டினமே ?
-
குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நெடுந்தீவில் அனுஷ்டிப்பு
இது ஒரு இனவழிப்பு தானே ?
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
அதுகள் 3௦ மைலுக்கு மேல் டான்ஸ் ஆடாது என்ற நம்பிக்கையில் அரசு அறிவித்து இருக்கும் 😀
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
அதிசயம் அற்புதம் அந்த ராணுவ வீரர் இளம் வீரர் ஆக இருப்பார் ஆனேகமாக என்று நினைக்கிறேன்
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
முதலில் வெடுக்கு லிங்கேஸ் வரரை சிங்கள இனவாத அரசிடம் இருந்து விடுதலை செய்து விட்டு இந்த கோரிக்கையை வைக்க சொல்லுங்க . கவி அருணாசலம் ஐயா உங்கடை ai யை இங்கையும் பாய விடுங்க புண்ணியமா போகும் . இந்தியாவில் சிவன் எப்படி மதிக்கப்படுகிறார் அதே சிவன் வெடுக்கு நாறி இலங்கையில் புத்த பிக்குகளால் கைது செய்யப்பட்டு கொடுமை படுத்துகிறார் அப்படியொரு ai கார்டுடூன் பல தாக்கம்களை உருவாக்கும் .
-
சர்வதேசம் ஏற்றுக் கொள்ளாத தீர்மானம்! வருந்ததக்க விடயம் தொடர்பில் வெளிப்படுத்தும் சுமந்திரன்
ஓடி ஓடி உலக நாடெல்லாம் திரிந்து சொறிலங்காவில் இனவழிப்பு நடைபெறவில்லை என்று தனியாக சென்று தமிழரசு கொடுத்த பதவியுடன் சொல்லி நம்ப வைத்த தமிழரின் துரோகி பயல் இப்ப இப்படி சொல்கிறார் .
-
சர்வதேசம் ஏற்றுக் கொள்ளாத தீர்மானம்! வருந்ததக்க விடயம் தொடர்பில் வெளிப்படுத்தும் சுமந்திரன்
15 வருடங்கள் கடந்த போதிலும் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார். 15 ஆவது முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாளான நேற்று(12.05.2024) இலங்கை தமிழரசு கட்சியின் பருத்தித்துறை தொகுதியினரால் வல்வெட்டு வன்னிச்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு ஆத்ம சாந்தி பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன. இந்த பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்நிலையில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் வாரம் ஆரம்பமாகின்றது. யுத்தத்தின் கடைசி நாட்களில் எமது மக்கள் கஞ்சிக்கு கூட பறிதவிக்கின்ற நிலை காணப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/sumandran-presscomment-mullivaikal-remembrance-day-1715539722 ஓநாய் நீலி கண்ணீர் வடிக்கிறது பதவிக்காக .
-
டயனா கமகேவை போன்று இன்னும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளனர்.
தற்போது மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். “உச்ச நீதிமன்ற தீர்ப்பை பரிசீலிக்குமாறு இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். டயானா கமகேவைப் போன்று 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருப்பதால் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தகுதியற்றவர்கள் என்ற செய்திகளை நாங்கள் கேள்விப்படுகிறோம்” என சோபித தேரர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இந்த விடயங்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு செல்வது நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கும் செயலாகும் எனவும் சோபித தேரர் தெரிவித்துள்ளார். "இந்த எம்.பி.க்கள் தங்கள் பதவிகளை மரியாதையுடன் ராஜினாமா செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று சோபித தேரர் கூறியதுடன், கட்சித் தலைவர்கள் தங்கள் பிரதிநிதிகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைவூட்டினார். https://www.madawalaenews.com/2024/05/10_11.html அட புலம்பெயர் சிங்களவர்களால்தான் லங்கா நாடே ஆளப்படுகிறது .
-
வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இலங்கை வீராங்கனை : ஊக்கமருந்து சோதனையில் தோல்வி
இலங்கையின் தற்போதைய தேசிய வலைப்பந்தாட்ட வீராங்கனையும் முன்னாள் தலைவருமான செமினி அல்விஸ் ( Semini Alwis ) தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியுள்ளதாக, இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் (SLADA) தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனைகளின்போது, சிறுநீர் மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் இருப்பதாக உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) அதிகாரபூர்வமாக செமினிக்கும், இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்துக்கும் தெரிவித்துள்ளது. வலைப்பந்தாட்ட போட்டி இந்நிலையில், இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் மற்றும் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் ஆகிய அமைப்புகளால் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இலங்கை வலைப்பந்து வீரர் ஒருவர் தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறித்த வீராங்கனை தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ‘பி’ மாதிரி சோதனையைத் தொடரலாம் எனவும் அதுவரை அவர் தேசிய பயிற்சி அமர்வுகளில் பங்கேற்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஷிரோமி பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார். செமினி 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இரண்டு உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டிகளிலும், சில ஆசிய செம்பியன்சிப்களிலும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு மூத்த வீராங்கனை ஆவார். 2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி உலகக் கிண்ணப்போட்டியின்போது இலங்கை அணியின் தலைவியாகவும் அவர் செயற்பட்டுள்ளார். இந்நிலையில், சவூதி அரேபியாவில் எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 13ஆவது ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிக்கு தயாராகும் இலங்கை வலைப்பந்து சம்மேளனக் குழுவில் செமினி அல்விஸ் உள்ளடக்கப்பட்டுள்ளார். https://tamilwin.com/article/sri-lankan-player-failed-doping-test-1715314992?itm_source=parsely-special
-
மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரலை அதானி நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்
தமிழனுக்கு ஒரு பிடி உரிமையும் கொடுக்க முடியாது என்ற இனத்துவேசம் இன்று இலங்கை இந்தியாவின் மாகாணம் போல் ஏர்போர்ட் முதல் அனைத்திலும் தாரை வார்த்து கொடுத்துள்ளார்கள் இந்தக்கால சிங்கள மதன முத்தாக்கள் . பகிடி என்னவென்றால் அதானி குழுமம் 20 வருடத்துக்கு ஒப்பந்தம் ஆம் அவ்வளவு காலம் இந்தியாவை சைனா காரன் விட்டு வைப்பானா ? மேலே கொச்சி தூள் கொட்டப்பட்டு உள்ளது அவரவர் அதை எடுத்து கொள்ளும் முறையில் உள்ளது .😃
-
எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஜனாதிபதி சபையை விட்டு சென்றதால் சபையில் சர்ச்சை
இறக்குமதியை நிறுத்தி உலக சந்தையில் திகதி முடிந்த மருத்துவ பொருள்களை இறக்கி செயற்கையாக ரூபாவை கட்டுப்படுத்தி விட்டு இந்த குள்ள நரி ரணில் சொல்லுது நாட்டை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தி விட்டேன் என்கிறார் . வாகன இறக்குமதி தொடங்கும்போதுதானே தெரியும் உணமையான நிலவரம் .
-
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு
செத்தவரில் ஒருத்தர் கூட வட இந்திய தொழிலாளி கிடையாது ? அப்போ அவர்கள் எங்கு தமிழ்நாட்டில் வேலை செய்கிறார்கள் ?
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
கேட்டது தான் கேட்டிங்க .😃 டயானா கமகேவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்தது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. டயானா கமகே இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, தனது எம்.பி பதவியை நேற்று இழந்தார். https://www.madawalaenews.com/2024/05/i_27.html
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
அட கிட்டடியில் யாரோ அந்த பப்பை எரித்து நாசம் பண்ணி விட்டார்களேமே .......................
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
பதவி இழந்த சோகத்தை கொண்டாட லண்டன் சன்ரைஸ் பப்புக்குத்தான் வருவா வெயிட்டிங் 😀
-
வெளியானது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இன் வருடாந்த நஷ்டக் கணக்கு !
நிமல் பூனை கண்ணை மூடினா உலகம் இருட்டாக்கி விடும் என்பது போல் கதை அளக்கிறார் .
-
வெளியானது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இன் வருடாந்த நஷ்டக் கணக்கு !
உலகில் எந்த ஒரு விமான நிறுவனமும் இலாபம் ஈட்டவில்லை என இலங்கை விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கடந்த பத்து வருடங்களில் (2014-2024) நாற்பத்தி ஐந்தாயிரத்து எழுநூற்று தொண்ணூறு (45790) கோடி ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்து இருந்த நிலையில், உலகில் எந்த ஒரு விமான நிறுவனமும் இலாபம் ஈட்டவில்லை, இது அனைத்து விமான நிறுவனங்களுக்கும் இயல்பான ஒரு சூழ்நிலை என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று தெரிவித்தார். ஏர் இந்தியா, பிஓஏசி மற்றும் சுவிஸ் ஏர்லைன்ஸ் போன்ற பணக்கார நாடுகளில் உள்ள விமான நிறுவனங்கள் லாபம் ஈட்டவில்லை என்றும் சில விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். SJB பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நஷ்டம் காரணமாக எயார் இந்தியா டாட்டா நிறுவனத்திற்கு விற்றுத் தீர்ந்துவிட்டது என்றும், எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 2 முதல் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அரசு வழங்கியதாகவும் கூறினார். இலங்கை போன்ற சிறிய நாடு அந்த வகையில் விமான சேவையை பராமரிக்கும் நிலையில் இல்லை என்றார். "விமானம் வாங்குவதற்கு எங்களிடம் நிதி இல்லை. பெரிய மூலதனத்தை முதலீடு செய்ய முடியாது. குத்தகைக்கு விமானங்களை எடுக்கிறோம். 6,000 ஊழியர்களின் வேலை பாதுகாப்பை உறுதிசெய்ய விமான சேவையை தொடர பெரிய மூலதனத்தை கொண்டு வரக்கூடிய குழுவுடன் நாங்கள் சேர வேண்டும்" என அவர் கூறினார். 2023 ஆம் ஆண்டில் 791 பணியாளர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர், இது கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு ஆகும், அதே நேரத்தில் அது 2023 இறுதிக்குள் ரூ.609 பில்லியன் இழப்பை ஏற்படுத்தியது. கடந்த வருடம் சுமார் 474 பணியாளர்கள் இராஜினாமா செய்திருந்தமையினால் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் மேலும் கூறினார். https://www.madawalaenews.com/2024/05/iii.html
-
வெளியானது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இன் வருடாந்த நஷ்டக் கணக்கு !
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கடந்த பத்து வருடங்களில் (2014-2024) நாற்பத்தி ஐந்தாயிரத்து எழுநூற்று தொண்ணூறு கோடி ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி 2014-2015 ஆம் ஆண்டில் 16330 கோடி ரூபாய்க்கு மேல், 2015-2016 இல் 13084 கோடி ரூபாய்க்கு மேல், 2016-2017 ல் 2800 கோடி ரூபாய்க்கு மேல், 2017-2018 இல் 417 கோடி ரூபாய்க்கு மேல், 2018-2019 இல் 4413 கோடி ரூபாய்க்கு மேல், 2020 - 2021 இல் 4970 கோடி ரூபாய்க்கு மேல், 2021 2022ல் 16358 கோடி ரூபாய், 2022 - 2023 இல் 7130 கோடி ரூபாய் மற்றும் 2023 - 2024 இல் 1247 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. அத்தோடு 2021-2022ல் விமான நிறுவனம் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது. அந்தக் காலக்கட்டத்தில் ஏற்பட்ட இழப்பு 16358 கோடி ரூபாய் எனவும் அவர் தெரிவித்தார் https://www.madawalaenews.com/2024/05/i_19.html