Everything posted by தமிழ் சிறி
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
- திருகோணமலை கடற்கரையில் நிறுவப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது
மீண்டும் தனது இடத்தை வந்தடைந்த புத்த பெருமான். காணொளி: 👉 https://www.facebook.com/reel/1161565916114299 👈 ---------------------------------------------------------- நேற்று (16) பாதுகாப்பின் நிமிர்த்தமாக கொண்டு செல்லப்பட்ட கூறப்பட்ட புத்தர் சிலை மீண்டும் இன்று (17) மதியம் அதே இடத்தில் நிறுவப்பட்டது. 15.11.2025 - இரவு குறித்த பகுதியில் கட்டுமானப் பொருட்கள் இரவோடு இரவாக இறக்கப்பட்டு பெயர்ப்பலகையும் நடப்பட்டது. 16.11.2025 - காலை புத்தர் சிலை வைப்பதற்கான வேலைகளும் கட்டுமானப் பணிகளும் இடம்பெற்றன. கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. கட்டுமானத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்தும் கட்டுமானம் இடம்பெற்றது. இரவு புத்தர் சிலை வைக்கப்பட்டது. நள்ளிரவு புத்தர் சிலை அகற்றப்பட்டது (பாதுகாப்பிற்காக கொண்டு செல்லப்பட்டது) பலரினால் பலருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. பலரினால் உரிமை கோரப்பட்டன. 17.11.2025 - பாராளுமன்றில் புத்தர் சிலை தொடர்பான விவாதங்கள் இடம்பெற்றன. மீண்டும் புத்தர் சிலை வைக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் உறுதி வழங்கப்பட்டது. 12 மணியளவில் மாவட்ட செயலகத்தில் கூட்டம் இடம்பெற்றது. மதியம் மீண்டும் பொலிஸாரினால் குறித்த பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டது. ஜசிந்தன் அருண் அடங்காதமிழன்- திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
புத்தர் சிலையால் வந்த வில்லங்கம்! திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று (17) பிற்பகல் பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது. நேற்று (16) இரவு அவசர அவசரமாக தற்காலிக கட்டடம் அமைத்து புத்தர்சிலை கொண்டு வந்து வைக்கமுற்பட்ட போது ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மீண்டும் புத்தர்சிலை கொண்டு செல்லப்பட்டு இன்றைய தினம் மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த_விஜயபால, புத்தர்சிலைக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால்தான் திரும்ப கொண்டு சென்றதாகவும் இன்றைய தினம் அதே இடத்தில் வைக்கப்படும் என்ற கருத்தினை வெளியிட்டிருந்தார். இன்று காலை நிலவரம் திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விஹாரயின் வளாகத்திற்குள் அனுமதி பெறாது, சட்டவிரோதமான முறையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றதுடன் அதனை பார்வையிட சென்ற கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளுக்கும் பௌத்த துறவிகளுக்கும் இடையில் முறுகல் நிலை தொடர்ந்துள்ள நிலையில் இன்று காலையும் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது. இதேவேளை இன்றையதினம் பிற்பகல் 12 மணியளவில் திருகோணமலை மாவட்ட செயலத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசாண் அக்மீமனவிற்கு எதிரான பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். நேற்று மாலை நிறுவப்பட்ட புத்தர் சிலைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில் அமைச்சரின் உத்தரவிற்கு அமைய நேற்றிரவே அங்கிருந்து அகற்றப்பட்டிருந்தது. முன்னதாக கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டபோதும் நேற்று இரவு 8 மணி வரை கட்டுமானப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்தது. பொலிசார் சிலையை அகற்றமுற்பட்டபோது பௌத்த பிக்குகள் எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன் பொலிசாரையும் தாக்கியிருந்தனர். குறிப்பாக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட பின்னர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர். இதன் பிரகாரமே பொலிஸாரினால் தற்காலிகமாக கட்டுமான பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. எனினும் கட்டுமான பணிகளை முன்னெடுத்தவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளைத் பொலிஸார் இன்று நீதிமன்றம் மூலம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை குறித்த பகுதியில் சட்ட அனுமதியற்ற சிற்றுண்டிச்சாலை தமது திணைக்களத்தால் உடைத்து அகற்றப்பட்டுள்ளதாக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூல வளங்கள் திணைக்கள அதிகாரி குறிப்பிட்டுள்ளார். பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால இதேவேளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவிற்கு அமைய கட்டுமான பணிகள் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் ஆனந்த விஜேயபால கீழ் கண்டவாறு கருத்து வெளியிட்டிருந்தார். இன்று அந்த புத்தர் சிலையை குறித்த விகாரையில் வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளோம். அத்தோடு அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கரையோர பாதுகாப்பு திணைக்களத்தால், அங்கு சட்டவிரோதமாக நடத்தப்படும் கடை ஒன்று தொடர்பிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பில் பொலிஸார் நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்ற தீர்ப்பின்படியே செயற்பட வேண்டியுள்ளது. இந்த காணி தொடர்பிலான பிரச்சினையை நீதிமன்றத்திலேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் நீதிமன்றத்திற்கு காரணங்களை சமர்ப்பிக்கவுள்ளோம். இதற்கு பின்னர் திருகோணமலையில் எந்த பிரச்சினையும் நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை தடுத்து நிறுத்தியதாக நேற்றிரவு தெரிவித்த அமைச்சர் இன்று சபையில் முரணாக கருத்து வெளியிட்டார். சபையில் சஜித் கேள்வி புனித பூமிவளாகத்திற்குள் புத்தர்சிலை வைப்பதை பொலிஸார் இன்று தீர்மானிக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகளினால் இந்த சமூகத்தில் இனவாதம் தலைதூக்கும் நிலை ஏற்படும். நாட்டில் இனவாதத்தை ஏற்படுத்தும் எண்ணத்தில் செயற்படும் குழுவினர் இந்த சம்பவத்தை ஒருகருவியாக பயன்படுத்த நேரிடும் இதனால் நாட்டினுள் தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படும். ஏதேனும் பிரச்சினை இருந்தால். விடயத்துக்கு பொறுப்பாக மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் அதனை விடுத்து இரவோடு இரவாக பொலிஸார் அங்கு அனுப்பி ஒரு புனித பூமிக்குள் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி திட்டங்களில் பொலிஸார் எவ்வாறு தலையீடு செய்ய முடியும். யாருடை ஆணையின் பேரில் இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன? அரசாங்கத்திடம் நாம் ஒரு விடயத்தை தெளிவாகக் கூறிக்கொள்கிறோம். நாட்டில் சட்டங்கள் தொடர்பாக புரிதல் இல்லாவிடின் அதனை கற்றுக்கொள்ள வேண்டும். எனவே தற்போது சூடு பிடித்துள்ள இனவாத மதவாத தீப்பிழம்பினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து நீதியை நிலைநாட்டுமாறும் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். புனித பூமிக்குள் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி திட்டங்களில் பொலிஸார் எவ்வாறு தலையீடு செய்ய முடியும் – என்று சஜித் கேள்வி எழுப்பினார். சாணக்கியன் கடும் கண்டனம் திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் 30 வருட யுத்தக் காலத்தில் கூட அவர்கள் பௌத்த இனத்தின் எந்தவொரு பௌத்த சின்னங்களும் அவர்களால் அழிக்கப்படவில்லை என்றும் அவர் நாடாளுமன்றில் குறிப்பிட்டார். இன்றைய சபை அமர்வின்போது அவர் இது குறித்து கடும் தொனியில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் – சுமந்திரன் அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தேசிய மக்கள் சக்தி அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கேவலமாகக் காண்கிறது. எனவே, அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நேற்றிரவு அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலை பொலிசாரினால் அகற்றப்பட்ட போது, அரசாங்கம் இனவாத எண்ணமில்லாமல் சரியாக நடந்து கொள்கிறது என்று சிலர் நினைத்தார்கள். ஆனால் அப்படியல்ல என்பதை சில மணி நேரத்துக்குள்ளேயே அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். பாதுகாப்புக்காகவே சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று மீள நிறுவப்படும் என்றும் வெட்கமில்லாமல் அறிவித்த போதே சகல மக்களும் சமத்துவமாக நடத்தப்படுவார்கள் என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டது. தேசிய மக்கள் சக்தி அரசும் முன்னைய அரசுகளைப் போலவே ஒரு இனவாத, சிங்கள பெளத்த பேரினவாத அரசு என்பதை நிறுவியுள்ளது. இக் கட்சியைச் சேர்ந்த அனைத்து தமிழ் உறுப்பினர்களும், திருகோணமலை உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரா உட்பட, உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1453006- முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!
முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை! கடந்த ஆண்டு மாணவர் எழுச்சியின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக, பதவி நீக்கம் செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) மரண தண்டனை விதித்துள்ளது. ஹசீனா இல்லாத நிலையில் நடத்தப்பட்ட பல மாத கால விசாரணையைத் தொடர்ந்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2024 ஆகஸ்ட் 5, அன்று பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்தபோது நாடுகடத்தப்பட்டு டெல்லியில் வசித்து வரும் 78 வயதான அவாமி லீக் கட்சித் தலைவர், வன்முறையைத் தூண்டுதல், போராட்டக்காரர்களைக் கொல்ல உத்தரவு பிறப்பித்தல் மற்றும் மாணவர்கள் தலைமையிலான கிளர்ச்சியின் போது அட்டூழியங்களைத் தடுக்கத் தவறுதல் ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தீர்ப்பாயம், ஒரு கொடிய அடக்குமுறையை ஏற்பாடு செய்வதில் ஹசீனாவின் பங்கை விவரித்தது. நிராயுதபாணியான மாணவர் போராட்டக்காரர்கள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்களைத் தூண்டும் வகையில் உத்தரவுகளை வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களை “அழிக்க” கொடிய ஆயுதங்கள், ட்ரோன்கள் மற்றும் ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட நேரடி கட்டளைகளை அவர் பிறப்பித்ததாகவும் நீதிமன்றம் கண்டறிந்தது. கூடுதலாக, அரசுப் படைகளால் நடத்தப்பட்ட கொலைகள், சித்திரவதைகள், காணாமல் போதல்கள் மற்றும் தீ வைப்புகளுக்கும், அவரது நிர்வாகத்திற்குள் பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதற்கும் ஹசீனா பொறுப்பேற்றார். பெப்ரவரியில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையின்படி, கலவரத்தின் போது 1,400 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. ஹசீனா இந்த புள்ளிவிவரங்களை மறுத்து, சுயாதீன விசாரணையைக் கோரியிருந்தார். https://athavannews.com/2025/1452968- கருத்து படங்கள்
- சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்!
சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்! அச்சிடும் அட்டைகள் பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் அச்சிடும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதாகவும், அன்றாடம் சுமார் 6,000 அனுமதிப் பத்திரங்களை அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது. பற்றாக்குறையின் விளைவாக அண்மைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட 350,000 சாரதி அனுமதிப் பத்திரங்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய அட்டை இருப்புக்கள் இப்போது கிடைத்துள்ளதால், அச்சிடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தேங்கி நிற்கும் அனுமதிப் பத்திரங்களை விரைவாக அச்சிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேரஹெர பிரதான அலுவலகத்திற்கு மேலதிகமாக, தற்போது ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரம் மாவட்ட அலுவலகங்களிலும் அச்சிடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குருணாகலிலும் விரைவில் அச்சிடும் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், விண்ணப்பித்த 14 நாட்களுக்குள் புதிய சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு திணைக்களம் திட்டமிட்டுள்ளது. https://athavannews.com/2025/1452918- வெளி நாட்டு சுற்றுலாப் பயணிக்கு, தனது அந்தரங்க உறுப்பை காட்டிய... ஸ்ரீலங்கா இளைஞன். (காணொளி)
பெண் சுற்றுலாப் பயணி மீதான பாலியல் வன்புணர்வு முயற்சி; சந்தேக நபர் கைது! அருகம்பே பகுதியில் வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணியை பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்ய முயன்ற குற்றச்சாட்டில் அண்மைய நாட்களாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக சமூக ஊடக தளங்களில் பரவிய காணொளியில், இலங்கையில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணை சந்தேக நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவது வெளிப்படுத்தப்பட்டது. அதன்படி, சந்தேக நபரை அடையாளம் காண்பதில் பொதுமக்களின் உதவியை நாடுவதற்காக இலங்கை பொலிஸார் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டிருந்தனர். அதன்படி, திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (16) மாலை சந்தேக நபர் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் களுவாஞ்சிகுடி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் ஆவார். ஆரம்பக் கட்ட விசாரணைகளின்படி, இந்த குற்றம் 2025.10.25 அன்று சம்பந்தப்பட்ட வெளிநாட்டுப் பெண்ணுக்கு எதிராக நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும், சுற்றுலாப் பிரிவு, திருக்கோவில் மற்றும் பொத்துவில் பொலிஸ் நிலைய அதிகாரிகள் கூட்டு நடவடிக்கையின் பின்னணியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது சந்தேக நபரின் அடையாளத்தை மாற்றியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். https://athavannews.com/2025/1452900- ஸ்டாலின், அஜித் குமார், அரவிந்த் சாமி, குஷ்பு ஆகியோரின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
ஸ்டாலின், அஜித் குமார், அரவிந்த் சாமி, குஷ்பு ஆகியோரின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் அஜித் குமார், அரவிந்த் சாமி மற்றும் குஷ்பு ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லத்துக்கு இன்று (17) வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த மிரட்டல் மின்னஞ்சல் காவல்துறை பணிப்பாளர் ஜெனரல் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. அந்த மின்னஞ்சலில், நடிகர்களான அஜித் குமார், அரவிந்த் சுவாமி மற்றும் குஷ்பு ஆகியோரின் இல்லத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், தமிழ் முதல்வர் மற்றும் நடிகர்களின் வெளிப்புற வீடுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மிரட்டல் மின்னஞ்சலைப் பெற்ற பின்னர், பொலிஸார் அதிரடியாக செயல்பட்டு, மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் முழுமையாக சோதனை செய்தனர். எனினும், சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. கடந்த மாதமும் ஸ்டாலினுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இருப்பினும், விரிவான சோதனைக்குப் பிறகு, சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை. ஒக்டோபர் 3 ஆம் திகதி பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைமையகம் மற்றும் நடிகை த்ரிஷாவின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதற்கிடையில், ஒக்டோபர் 3 ஆம் திகதி, சென்னை விமான நிலைய முகாமையாளர் அலுவலகத்திற்கும் குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்த மர்மமான மின்னஞ்சல் வந்தது. அந்த மின்னஞ்சலின்படி, விமான நிலையத்தில் உள்ள குப்பைத் தொட்டிகளுக்குள் சக்திவாய்ந்த குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும், அவை வெடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும், பின்னர் அது ஒரு புரளியாகவும் மாறியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1452928- சவூதி அரேபியாவில் பேருந்தும் டேங்கர் லொறியும் மோதி விபத்து; 42 இந்திய யாத்ரீகர்கள் உயிரிழப்பு!
சவூதி அரேபியாவில் பேருந்தும் டேங்கர் லொறியும் மோதி விபத்து; 42 இந்திய யாத்ரீகர்கள் உயிரிழப்பு! சவூதி அரேபியாவின் முஃப்ரிஹாத் அருகே திங்கட்கிழமை (17) அதிகாலை மெக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்ற பேருந்து டீசல் டேங்கர் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 42 இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பலர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தின் தாக்கம் கடுமையாக இருந்ததால், பல பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அவசரகால குழுக்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதிகாரிகள் இன்னும் உயிரிழப்புகளின் சரியான எண்ணிக்கையை சரிபார்த்து, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் 24×7 கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. https://athavannews.com/2025/1452932- இங்கிலாந்தில் நிரந்தர குடியிருப்பு பெற 20 ஆண்டுகள் காத்திருப்பு!
இங்கிலாந்தில் நிரந்தர குடியிருப்பு பெற 20 ஆண்டுகள் காத்திருப்பு! இங்கிலாந்தில் அகதி அந்தஸ்து பெறுபவர்களுக்கு, நிரந்தர குடியிருப்பு பெற 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று புதிய திட்டத்தை உள்துறை செயலாளர் Shabana Mahmood அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறிய படகுகளின் வழியாக நடக்கும் குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் முயற்சியின் பகுதியாக இந்த பெரிய மாற்றம் கொண்டு வரப்படுகிறது. தற்போது அகதிகள் ஐந்து ஆண்டுகள் அந்தஸ்துடன் தங்கி, பின்னர் Indefinite Leave to Remain — அதாவது நிரந்தரமாக குடியிருக்கும் அனுமதிக்காக விண்ணப்பிக்க முடியும். ஆனால் புதிய திட்டத்தின் கீழ் — அந்த ஆரம்ப காலம் ஐந்து ஆண்டில் இருந்து இரண்டு-அரை ஆண்டுகளாக குறைக்கப்படும். அந்த காலம் முடிந்ததும், அகதி அந்தஸ்து தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படும். அதிலும் குறிப்பாக — நிரந்தர குடியிருப்புக்கான காத்திருப்பு காலம் 5 ஆண்டிலிருந்து 20 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட உள்ளது. இதன்படி, அகதி அந்தஸ்துடன் இருக்கும் காலத்தில் ஒருவரின் சொந்த நாடு பாதுகாப்பானதாக கருதப்பட்டால், அவர் பிரித்தானியாவை விட்டு நாடு திரும்ப வேண்டும் என உத்தரவிடப்படும். இந்த கொள்கை, டென்மார்க் நாட்டின் கடுமையான குடியேற்ற மாதிரியை பின்பற்றுவதாகவும் கூறப்படுகிறது. டென்மார்கில் அகதிகளுக்கு பொதுவாக 2 ஆண்டுகள் மட்டுமே தற்காலிக அனுமதி வழங்கப்படுகின்றது. இந்நிலையில், Labour கட்சியின் சில எம்.பிக்களிடமிருந்து இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு எழும் வாய்ப்பும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் மாதம் முடியும் 12 மாதங்களில், பிரித்தானியாவில் 1 லட்சத்து 9,343 பேர் அகதி விண்ணப்பம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 17% அதிகம். இந்த ஆண்டு இதுவரை சிறிய படகுகள் மூலம் 39,000-க்கும் மேற்பட்டோர் பிரித்தானியா வந்துள்ளனர். இது 2024 மற்றும் 2023 ஆண்டுகளை ஏற்கனவே தாண்டியுள்ளது. https://athavannews.com/2025/1452942- கட்சிகளுக்கிடையிலான சண்டைக்குள் சிக்கிய திருமாவின் யாழ் வருகை: நிலாந்தன்.
ஆம். படத்தின் நடுவில் இருப்பவர்தான் நிலாந்தன்.- கட்சிகளுக்கிடையிலான சண்டைக்குள் சிக்கிய திருமாவின் யாழ் வருகை: நிலாந்தன்.
கட்சிகளுக்கிடையிலான சண்டைக்குள் சிக்கிய திருமாவின் யாழ் வருகை: நிலாந்தன். திருமாவளவனின் யாழ் வருகை பரவலாக வாதப் பிரதிவாதங்களை கிளப்பியுள்ளது. ஆனால் அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவது இதுதான் முதல் தடவை அல்ல. அதுவும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்திருப்பது இதுதான் முதல் தடவை அல்ல. இந்த மேடையில் அவர் பேசுவதும் இதுதான் முதல் தடவை அல்ல. ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் இதே நிகழ்வுக்காக அவர் வந்திருந்தார்;பேசினார். அப்பொழுது வராத எதிர்ப்பு இப்பொழுது வர காரணம் என்ன ? இறுதிக்கட்டப் போரின்போது கலைஞர் கருணாநிதி தமிழகத்தின் கொந்தளிப்பை மடைமாற்றி விட்டதாக ஈழத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். அதன்பின் அதாவது 2009 மே மாதத்திற்குப் பின் தமிழகத்தில் இருந்து வந்த தூதுக்குழுவில் திருமாவளவன் இடம்பெற்றது தவறு என்றும் ஈழத்தமிழர்கள் நம்புகிறார்கள்.அதனால் அவரை விமர்சிக்கிறார்கள். இந்த விமர்சனங்களின் பின்னணியில்தான் ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் திமுகவின் மீதும் திருமாவளவனின் மீதும் தொடர்ச்சியாகக் கோபத்தோடு காணப்படுகிறார்கள்.எனினும்,கடந்த 2018ஆம் ஆண்டு அவர் வருகை தந்தபோது காட்டப்படாத அளவு எதிர்ப்பு ஏன் இந்த முறை காட்டப்படுகிறது? திருமாவை ஊருக்கு அழைத்தது தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்.அது இப்பொழுது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு உறவாக இருக்கிறது.தமிழ்த் தேசியப் பேரவை என்ற கூட்டுக்குள் பசுமை இயக்கமும் ஓர் அங்கம். எனவே திருமாவை முன்வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தாக்குவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதற்குப் பிரதான காரணம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் பாரம்பரியம்தான்.அக்கட்சியானது தொடக்கத்தில் இருந்தே தன்னை பெருமளவுக்கு தூய்மைவாத கட்சியாகவும் தீவிர தேசியவாத கட்சியாகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நேரடி வாரிசாகவும் காட்டிக்கொண்டது. ஏனைய கட்சிகளை அவர்கள் இந்த அளவுகோல்களின் ஊடாகத்தான் அளந்தார்கள்.எனவே அக்கட்சியோடு கூட்டில் இருக்கும் ஐங்கரநேசன் திருமாவை அழைத்தபோது அக்கட்சியை அடிப்பதற்கு இதை ஒரு சந்தர்ப்பமாக கட்சியின் எதிரிகள் பயன்படுத்துகிறார்கள். 2018இல் திருமா யாழ்ப்பாணம் வந்தபோது இந்த அளவு விமர்சனங்கள் ஏழவில்லை. அப்பொழுது ஐங்கரன்நேசனை யாரும் அவமரியாதையாக விமர்சிக்கவில்ல்லை.ஆனால் இப்பொழுது திருமாவோடு சேர்த்து ஐங்கரன் நேசனும் விமர்சிக்கப்படுகிறார்;அவமதிக்கப்படுகிறார்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் விமர்சிக்கப்படுகிறது.அப்படிப் பார்த்தால் இந்த விமர்சனங்களின் பின்னணியில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடு உண்டு. இப்படிப்பட்ட ஒரு விமர்சனச் சூழலை உற்பத்தி செய்ததில் தமிழ்த் தேசியமக்கள் முன்னணிக்கும் பெரிய பங்கு உண்டு.அக்கட்சி தன்னுடைய அரசியல் எதிரிகளைத் தாறுமாறாக விமர்சிக்கும் பண்பைக் கொண்ட ஒரு கட்சி.ஏன் என்னையும்கூட அவர்கள் மிகக் கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார்கள். தமது அரசியல் எதிரிகளை துரோகிகள் ஆக்கியது அந்த கட்சிதான். தமிழ்த் தேசிய அரசியலில் தூய்மைவாத அளவுகோல்களை வைத்துக்கொண்டு தமது அரசியல் எதிரிகளை தமது தராசுகளால் நிறுத்த கட்சி அது. இப்பொழுது சமூக வலைத்தளங்களைப் பார்த்தால் ஒன்றை விளங்கிக் கொள்ளலாம். திருமாவின் யாழ் வருகையை விமர்சிக்கும் ஒரு பகுதியினர் அந்த விமர்சனங்களை யாருடைய பார்வைக்கு முன் வைக்கின்றார்கள்? ஏற்கனவே தூய்மைவாத தமிழ் தேசிய அளவுகோல்களை வைத்துக்கொண்டு மற்றவர்களை விமர்சித்த கட்சியின் ஆதரவாளர்கள் அல்லது செயற்பாட்டாளர்களை நோக்கித்தான். அதுமட்டுமல்ல,இப்பொழுது அதாவது அந்தக் கட்சியின் செயலாளர் திருமாவின் கூட்டத்தில் பிரசன்னமான பின்னரும்கூட,அக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் திருமாவையும் ஐங்கரநேசனையும் விமர்சிக்கக் காணலாம்.அக்கட்சியோடு தொடர்ச்சியாக செயல்பட்டு வருகின்ற கிராமிய உழைப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவரும்கூட திருமாவை, ஐங்கரநேசனை கடுமையாக விமர்சிக்கக் காணலாம். எனவே இப்பொழுது தெளிவாக ஒரு சித்திரம் கிடைக்கிறது. தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் திருமாவின் யாழ் வருகை மீது பிரதிபலிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதுதான் இங்குள்ள அடிப்படை உண்மை. அதேசமயம் 2009 க்குப் பின் மஹிந்த ராஜபக்சவை திருமா சந்தித்தது கைகுலுக்கியது தொடர்பில் அவர் ஏற்கனவே ஒரு தன்னிலை விளக்கம் வழங்கியிருக்கிறார். ஆனால் ஒருபகுதி ஈழத் தமிழர்கள் அந்தத் தன்னிலை விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் தெரிகிறது. தமிழகத்தில் உள்ள ஈழ அபிமானிகளில், ஈழ உணர்வாளர்களில் மிக நீண்ட காலம் ஈழப்போருடன் தொடர்புற்றவர்களில் திருமாவும் ஒருவர்.மாணவராக இருந்ததில் தொடங்கி ஒரு கட்சித் தலைவராக வளர்ந்து,நாடாளுமன்ற உறுப்பினராக வந்தது வரையிலும் அவர் ஈழப் போரோடு நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார்.விடுதலைப் புலிகள் இயக்கம் அவரை மிகவும் மதித்து கௌரவமாக நடத்தியது.ஆனால் அந்த இயக்கம் போரில் தோற்கடிக்கப்பட்ட பின்,அதைத் தோற்கடித்த தரப்புடன் அவர் கைகுலுக்கியது தொடர்பில் அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் மத்தியிலும் பொதுவாக தமிழ் மக்கள் மத்தியிலும் விமர்சனங்கள் உண்டு. ஆனால் அதற்குப் பின்னரும் முன்னரைப் போலவே அவர் ஈழத் தமிழர்களின் அரசியல் நிலைப்பாடுகளோடு தோளோடு தோள் நிற்கிறார்.எனவே,அவர் மீது விமர்சனங்களை முன்வைக்கும்போது திருமா ஒரு நேச சக்தியா அல்லது பகை சக்தியா என்ற தெளிவு ஈழத் தமிழர்களிடம் இருக்க வேண்டும்.ஒரு நேச சக்தியை விமர்சிப்பது வேறு. பகைவரை விமர்சிப்பது வேறு. இந்த விடயத்தில் ஈழத் தமிழர்கள் தெளிவாக இருக்க வேண்டும்.திருமா தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்.அப்படித்தான் திராவிடக் கட்சிகளும்.இந்தக் கட்சிகளை விமர்சிக்கும்போது இந்த கட்சிகள் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனவோ அந்த எட்டுக் கோடி மக்களையும் புண்படுத்தாமல் கவனமாக விமர்சிக்க வேண்டும். நீரிணையால் பிரிக்கப்பட்ட ஒரே இனத்தவர்கள் தமிழ்நாட்டு மக்களும் ஈழத் தமிழர்களும்.புவியியல் அமைவிடம் காரணமாக சில வேறுபாடுகள் இருக்கலாம்.ஆனால் உலகில் ஈழத் தமிழர்களுக்கு இனத்தால்,மொழியால், பண்பாட்டால்,இன்னபிற விடையங்களால் கிட்ட இருக்கும் மக்கள் அவர்கள்தான். ஈழப் போராட்டத்தின் போது இருபதற்கும் குறைாதவர்கள் தமிழகத்தில் தீக்குளித்திருக்கிறார்கள். உலகில் வேறு எங்கும் நடந்திராத ஒரு விடயம் அது.தீக்குளிப்பது என்பது சாதாரணமானது அல்ல.தன்னையே அழிப்பது. அயலில் வாழும் தனது மக்கள் கூட்டத்திற்காக தம்மையே அழித்திருக்கிறார்கள்.அதுவும் தீயில் கருகி இறப்பது என்பது எவ்வளவு கொடுமையானது? சாதாரணமாக, சமைக்கும்போது அடுப்பு நெருப்புப் பட்டாலே எப்படித் துடிக்கிறோம்?.உலகில் வேறு எந்த மக்கள் கூட்டமும் அவ்வாறு கடலால் பிரிக்கப்பட்ட இன்னொரு மக்கள் கூட்டத்திற்காக அப்படிப்பட்ட தியாகத்தைச் செய்தது இல்லை.எனவே தமிழ் நாட்டு மக்களை எப்பொழுதும் ஈழத் தமிழர்கள் மதிக்க வேண்டும். கட்சிகள் தங்களுடைய கட்சி அரசியலைச் செய்யும். ஏன் ஈழத்தமிழ் கட்சிகள் செய்யாத திருகுதாளங்களா? ஆனால் தமிழக மக்களை ஈழத் தமிழர்கள் என்றென்றும் மதிக்க வேண்டும். இந்த அடிப்படையில்தான் தமிழகத்தை அணுக வேண்டும்.தமிழக மக்கள் மீதுள்ள அளவு கடந்த மதிப்பின் காரணமாக அவர்களுடைய தலைவர்களை விமர்சிக்கும் போது அடிப்படை நாகரீகத்தைப் பேணவேண்டும். அதுமட்டுமல்ல அரசு இல்லாத தமிழ் மக்களுக்கு அயலில் உள்ள அரசு.அதுவும் பேரரசு இந்தியாதான்.இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களை ஆசைப்பதற்கு ஈழத் தமிழர்களுக்குள்ள ஒரே நொதியம் தமிழ் நாடுதான். மேலும்,இப்பொழுது தமிழ் மக்களின் அரசியல் பெருமளவுக்கு ஐநா மைய அரசியலாகவே காணப்படுகிறது. அண்மையில் ஐநா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ் மக்கள் அந்த தீர்மானம் தங்களை ஏமாற்றி விட்டது என்று கடும் கோபமாக இருக்கிறார்கள். அந்தத் தீர்மானத்தை தமிழர்களுக்கு என்றுகூறி முன்நகார்த்திய நாடு எது? பிரித்தானியா. பிரித்தானியா முதலாவது கட்ட ஈழப் போரில் யாரோடு நின்றது? இலங்கை அரசாங்கத்தோடு நின்றது. தமிழ் மக்களுக்கு எதிரான போரில் இலங்கை அரசாங்கத்துக்கு எல்லா உதவிகளையும் பிரித்தானியா செய்தது. ஆயுத தளபாடங்கள், ஆலோசனைகள் மட்டுமல்ல, பிரித்தானிய கூலிப் படைகளும் களத்தில் இறக்கப்பட்டன. ஈழத் தமிழர்களை ஆட்சி செய்த மூன்று குடியேற்றவாத நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று.அரசோடு இருந்த தமிழ் மக்களை அரசற்ற மக்களாக மதிப்பிறக்கியதில் பிரித்தானியாவுக்கும் பங்கு உண்டு.அதோடு முன்கூறியது போல முதலாம் கட்ட ஈழப்போரில் இனஅழிப்பைச் செய்த அரசாங்கத்தை ஆதரித்த நாடுதான் பிரித்தானியா. ஆனால் அதற்காக ஐநாவில் பிரித்தானியாவின் தலைமையில் தீர்மானம் கொண்டுவரப்படுவதை ஈழத் தமிழர்கள் எதிர்க்கிறார்களா? இல்லை. அதுதான் அரசியல்.அரசு இல்லாத தமிழ் மக்கள் அரசுகளை அரவணைத்தால்தான் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம். எல்லா இனப்பிரச்சினைகளும் சாராம்சத்தில் அனைத்துலகப் பிரச்சினைகள்தான். அவற்றுக்கு அனைத்துலகத் தீர்வுதான் உண்டு.எனவே ஈழத் தமிழர்கள் அரசுகளை அரவணைக்க வேண்டும். மேற்கு நாடுகளை,ஜநாவைக் கையாள்வதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் நொதிக்க வேண்டும்.இந்திய அரசைக் கையாள்வதற்கு,தமிழ் நாட்டு மக்கள் நொதிக்க வேண்டும்.எனவே ஈழத்தமிழர்கள் தமிழகத்தைப் பக்குவமாகக் கையாள வேண்டும். உலகிலேயே முதலாவது இன அழிப்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தமிழகத்தில்தான்.உலகின் மிகப்பெரிய தமிழ்ச் சட்டமன்றம் அது. அதுபோலவே உலகில் இன அழிப்பு நினைவுச் சின்னங்களை தமிழர்கள் ஏனைய புலம்பெயர்ந்த நாடுகளில் நிறுவ முன்பு முதலாவது நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டது தஞ்சாவூரில்தான்.தமிழகத்தில்தான். எனவே தமிழகத்தை ஈழத் தமிழர்கள் பக்குவமாகக் கையாள வேண்டும். அரசு இல்லாத ஒரு மக்கள் கூட்டம் எவ்வளவுக்கு எவ்வளவு நண்பர்களைச் சம்பாதிக்கின்றதோ,அவ்வளவுக்கு அவ்வளவு அனைத்துலக அரங்கில் பலமாக நிற்கும். திருமாவின் உறவு தொடர்பான விடயம் தனிய,தமிழ் உணர்வோடு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. அதைவிட ஆழமான பொருளில் இந்தியாவைக் கையாளுவது தொடர்பான ஒரு வெளியுறவு விவகாரமுந்தான்.தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான போட்டியும் மோதல் நிலையும் வெளியுறவுக் கொள்கை சம்பந்தப்பட்ட ஒரு விடயத்தில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்துவது என்பது தமிழ்மக்கள் ஒரு தேசமாகத் திரள முடியாமல் தத்தளிக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது. https://athavannews.com/2025/1452869- மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?
மாகாணசபைத் தேர்தல் வர இருப்பதால்.... சுமந்திரனுக்கு மாகாணசபை முதல்வர் ஆக விருப்பம் வந்துள்ளது. அதுதான்... அவரால் கலைக்கப் பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மீண்டும் உருவாக்கி, அவர் முதல்வரானவுடன்??? மீண்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை கலைத்து விடுவார்கள். இதைப் போல எத்தனை சுத்துமாத்துக்களை தமிழ் மக்கள் கண்டு விட்டார்கள். இனியும்... சுமந்திரனின் சுத்துமாத்து வார்த்தைகளை நம்பி ஏமாறத் தயார் இல்லை. சுமந்திரனுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை. போய்... வக்கீல் தொழிலை பார்க்கவும்.- வெளி நாட்டு சுற்றுலாப் பயணிக்கு, தனது அந்தரங்க உறுப்பை காட்டிய... ஸ்ரீலங்கா இளைஞன். (காணொளி)
- வெளி நாட்டு சுற்றுலாப் பயணிக்கு, தனது அந்தரங்க உறுப்பை காட்டிய... ஸ்ரீலங்கா இளைஞன். (காணொளி)
காணொளி: 👉 https://www.facebook.com/watch/?v=720409650518617 👈 வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் அசிங்கம் காட்டிய இளைஞன் – வீடியோ வைரல் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த ஒரு வெளிநாட்டு பெண் பயணியிடம், ஒரு இளைஞன் தனது அந்தரங்க உறுப்பை காட்டும் அசிங்கமான செயல் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகியுள்ளது. இது ஒரு கடுமையான பாலியல் துன்புறுத்தல் குற்றம் ஆகும். நாட்டின் பெயருக்கும், சுற்றுலா வளர்ச்சிக்கும் பெரும் சேதம் விளைவிக்கும் செயல் இது. Nuraichcholai boys- நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரிப்பு
தமிழ் நாட்டு முறைப்படி... சமைக்கப் படும் நத்தைக்கறி. 🐌 எல்லாரும் வாங்க.. இன்னைக்கு ஒரு பிடி. 😎- சந்தோஷ் ஜா – தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் இடையில் விசேட சந்திப்பு!
👇 இது போன மாசம் நடந்த சந்திப்பு. மாதா மாதம்... ஒரு பிரயோசனமும் இல்லாமல் சந்திப்பதை பார்க்க, இந்தியத் தூதரிடம்.... "மாதச் சம்பளம்" (பிச்சை) வாங்கப் போன ஆட்கள் போல உள்ளது. 😂 🤣- கருத்து படங்கள்
செய்தி: வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு... தனது ஆண் உறுப்பை காட்டிய, முஸ்லீம் இளைஞர். @alvayan- சந்தோஷ் ஜா – தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் இடையில் விசேட சந்திப்பு!
சந்தோஷ் ஜா – தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் இடையில் விசேட சந்திப்பு! இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களுக்கும், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் எம். ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதேவேளை குறித்த கலந்துரையாடலில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தல் மற்றும் இலங்கையின் சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1452834- அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்!
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்! நாளையதினம் (17) அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளை முறையாகத் தீர்க்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பாக அரசாங்கத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதற்குச் சாதகமான பதில் கிடைக்காததால் தமது சங்கம் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்ததாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1452863- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- நாமல் ராஜபக்ஷ - எம்.ஏ.சுமந்திரன் இடையில் சந்திப்பு!
சுமந்திரனே ... 15,000 ஓட்டு வாங்கி, பாராளுமன்றம் போக முடியாமல் தோற்ற ஆள். அவரிடம் போய், ஆட்சியை கவிழ்க்க வரச் சொல்லி, ஆதரவு கேட்குது நாமல்.... சுமந்திரனுக்கு.... துணிவு இருந்தால், நாமலின் கூட்டத்திற்கு ஒருக்கால் போய் பார்க்கட்டுமன்.- கருத்து படங்கள்
- மருந்து சீட்டு எழுதுவது குறித்து இலங்கை மருத்துவ சபையின் அறிவித்தல்!
மருந்து சீட்டு எழுதுவது குறித்து இலங்கை மருத்துவ சபையின் அறிவித்தல்! மருந்துச் சீட்டுகளை எழுதுவது மற்றும் பரிந்துரைப்பது தொடர்பான அதிகாரபூர்வ வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு மருத்துவ நிபுணர்களை வலியுறுத்தி இலங்கை மருத்துவ சபையானது ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சில மருத்துவர்களால் வழங்கப்படும் தெளிவற்ற மருந்துச்சீட்டுகள் குறித்து மருந்தாளுநர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, இத்தகைய தெளிவின்மை காரணமாக சரியான மருந்தைக் கண்டறிவது கடினமாகி, நோயாளியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழிகாட்டுதல்களுக்கு இணங்கத் தவறும் மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை மருத்துவ சபை மேலும் எச்சரித்துள்ளது. https://athavannews.com/2025/1452807- ஜம்மு-காஷ்மீரில் காவல் நிலையத்தில் வெடிவிபத்து- 9 பேர் உயிரிழப்பு!
ஜம்மு-காஷ்மீரில் காவல் நிலையத்தில் வெடிவிபத்து- 9 பேர் உயிரிழப்பு! ஜம்மு-காஷ்மீரில் உள்ள நவ்காம்காவல் நிலையத்தில் வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். காவல் நிலையத்தில் திடீரென வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். குறித்த விபத்தில் 9 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 30 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளமையினால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. பரிதாபாத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை கையாளும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, விபத்தில் மீட்கப்பட்ட சில ரசாயனங்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதவேளை, . ஸ்ரீநகர் துணை ஆளுநர் அக்ஷய் லப்ரூ காயமடைந்தவர்களை வைத்தியசலையில் சென்று பார்வையிட்டுள்ளார். ஏற்கனவே, இந்த வாரத் தொடக்கத்தில் டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், காஷ்மீர் காவல் நிலையத்தில் , வெடி விபத்து இடம்பெற்றமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1452798 - திருகோணமலை கடற்கரையில் நிறுவப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.