Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. "கூகிள் மேப்"... இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கு. 😂
  2. வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ். வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக 2025 மார்ச் 28, அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள நில உரிமை தீர்வுத் துறையால் வர்த்தமானி அறிவிப்பு எண் 2430 வெளியிடப்பட்டது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கம் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திருப்பித் தருவதாக உறுதியளித்த போதிலும் மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி, இந்த வர்த்தமானிக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். வடக்கில் 5,940 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கு அந்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433387
  3. வீதி விபத்துக்களில் 1,062 பேர் உயிரிழப்பு! இந்த ஆண்டு பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 1,062 பேர் உயிரிழந்துள்ளனர். 2025 முதல் மே 25 ஆம் திகதி நிலவரப்படி பதிவான 1,062 வீதி விபத்துக்களின் மூலமாக இந்த இறப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அதேநேரம், 2025 ஆம் ஆண்டில் இதுவரை பதிவான 2,064 வீதி விபத்துகளில் சுமாமர் 7,000 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் இருந்து பதிவான வீதி விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1433399
  4. நான்காவது பெரிய பொருளாதார நாடான ஜப்பானை முந்திய இந்தியா! உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக ஜப்பானை முந்தி இந்தியா உருவெடுத்துள்ளது. அடுத்த இரண்டரை ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகளில் ஜெர்மனியை விஞ்சி மூன்றாவது இடத்தைப் அது பிடிக்கும் என்று இந்திய நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஏப்ரல் 2025 உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம், 2025-26 (FY26) நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 4.187 டிரில்லியன் டொலர்களை எட்டும் என்று கணித்துள்ளது. இது 2025 நிதியாண்டில் ஜப்பானின் $4.186 டிரில்லியன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை முந்தியுள்ளது. அடுத்த நிதியாண்டிற்கான IMF-இன் கணிப்பு, இந்தியாவிற்கும் ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையேயான பரந்த இடைவெளியைக் காட்டுகிறது. 2026 ஆம் ஆண்டில் ஜப்பானின் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி $4.373 டிரில்லியனாக இருக்கும் என கணிக்கப்படும் நிலையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நிதியாண்டு 2027 ஆம் ஆண்டில் $4.601 டிரில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1433219
  5. உண்மையில் பிரான்ஸ் ஜனாதிபதியை அவரது மனைவி அறைந்தாரா? பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசு முறை பயணமாக வியட்நாம் சென்றிருந்த நிலையில், அங்கு விமானத்தில் இருந்து இறங்கும் வேளை அவரது மனைவி மக்ரோன் மீது அறைவது போன்றும் அதனை அவர் சமாளித்துக் கொண்டு விமானத்தில் இருந்து கீழே இறங்குவது போன்றதுமான காணொளியொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பேசுபொருளானது. இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இமேனுவல் மெக்ரோன்” தானும் தனது மனைவியும் நகைச்சுவை செய்து விளையாடிக் கொண்டு இருந்ததாகவும் அது இவ்வளவு பெரிய விஷடமாகும் எனத் தான் நினைக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். 47 வயதான பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன் 72 வயதான தனது ஆசிரியரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் மெக்ரோனுக்கும் அரசியல் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433368
  6. லிவர்பூலின் வெற்றி அணிவகுப்பில் கார் மோதி விபத்து; 50 பேர் காயம்! இங்கிலாந்து நகரில் லிவர்பூல் கால்பந்து கழகத்தின் பிரீமியர் லீக் வெற்றியைக் கொண்டாடிய ரசிகர்கள் கூட்டத்திற்குள் ஒரு கார் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை (26) மேற்கொள்ளப்பட்ட இந்த விபத்தில் குறைந்தது 50 பேர் காயமடைந்தனர். அவர்களில் 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 53 வயதான கார் சாரதியான பிரித்தானியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக நம்பப்படவில்லை என்று பொலிஸாரின் ஆரம்ப அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. விபத்தினை அடுத்து சம்பவ இடத்தில் குறைந்தது 20 பேர் சிகிச்சை பெற்றனர். மேலும் 27 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களில் நான்கு பேர் குழந்தைகள்/சிறுவர்கள் என்றும் அம்பியூலன்ஸ் சேவை அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டவர்களில் ஒரு குழந்தை மற்றும் ஒரு பெரியவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில், தெருவில் வரிசையாக நின்றிருந்த ரசிகர் கூட்டத்திற்குள் ஒரு கார் வேகமாக பயணித்து விபத்தை ஏற்படுத்துவதை காண்பிக்கின்றது. நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்களில் சிலரை முதலில் மோதிய பின்னர் கார் நின்றது. தொடர்ந்து மக்கள் வாகனத்தை நோக்கி விரைந்து வந்து, அதன் கண்ணாடிகளை உடைத்ததாகவும், சாரதி தொடர்ந்து காரை செலுத்தி பலர் மீது மோதியதாகவும் கூறப்படுகிறது. கார் நின்றதும், ஆத்திரமடைந்த ரசிகர்கள் அதைச் சூழ்ந்துகொண்டு, அதன் ஜன்னல்களை உடைத்தனர், பின்னர், காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு சாரதியை அவர்கள் அடையவிடாமல் தடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இங்கிலாந்தில் மிகவும் புகழ்பெற்ற ஆண்கள் கால்பந்து அணியான லிவர்பூல் மற்றும் ஊழியர்கள் பிரீமியர் லீக் கிண்ணத்துடன் நகர மையத்தில் திறந்த மேல் பேருந்தில் அணிவகுத்துச் சென்றபோது இலட்சக்கணக்கான ரசிகர்கள் தெருக்களில் வரிசையாக நின்றபோது இந்த சம்பவம் நடந்தது. https://athavannews.com/2025/1433345
  7. சவுதி அரேபியாவில் மது தடை நீக்கப்பட்டதா? சவுதி அரேபியா, 73 ஆண்டுகால மது தடையை நீக்கும் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளை திங்களன்று (26) அந் நாட்டு ஒருவர் மறுத்தார். இது முஸ்லிம்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவர் விவரித்தார். 2034 கால்பந்து உலகக் கோப்பையை நடத்த நாடு தயாராகி வருவதால், சுற்றுலா அமைப்புகளில் மதுபான விற்பனையை அனுமதிக்க சவுதி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. இந்தத் தகவலுக்கான நம்பகத் தகுந்த ஆதாரம் சுட்டிக்காட்டப்படவில்லை. ஒரு காலத்தில் தீவிர பழமைவாத நாடாக இருந்த இந்த இராச்சியம், தனது பொருளாதாரத்தை பன்முகப்படுத்தவும், எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் ஒரு இலட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுலாப் பயணிகளையும் சர்வதேச வணிகங்களையும் ஈர்க்க சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது. சவுதி அரேபியாவின் நடைமுறைத் தலைவரான, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், 2017 ஆம் ஆண்டில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிப்பதற்கான தடையை முடிவுக்குக் கொண்டுவந்தது, பொது இடங்களில் பாலினப் பிரிவினை குறித்த சில விதிகளைத் தளர்த்தியது மற்றும் மதக் காவல்துறையின் அதிகாரத்தைக் குறைத்தது உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை முன்னெடுத்துள்ளார். இந்த நிலையில் வெளியான மதுபான விதிகள் பற்றிய அறிக்கை இராஜ்ஜியத்தில் ஒரு தீவிரமான விவாதத்தைத் தூண்டியது. சவுதி அரேபியா மற்றும் குவைத் மட்டுமே மது விற்பனையைத் தடை செய்யும் வளைகுடா நாடுகள். சவுதி அரேபியாவில் மதுபானங்களை உட்கொள்ள அனுமதிக்கும் ஒரு சிறிய நடவடிக்கை, கடந்த ஆண்டு தலைநகர் ரியாத்தில் முஸ்லிம் அல்லாத தூதர்களுக்கு மட்டுமே சேவை செய்யும் முதல் மதுபானக் கடை திறக்கப்பட்டது. அதற்கு முன்பு, இராஜதந்திர அஞ்சல் மூலமாகவோ அல்லது கறுப்புச் சந்தையில் மட்டுமே மதுபானம் கிடைத்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433365
  8. மகிந்த ராஜபக்ச…. புற்று நோயால் மருத்துவ மனையில் என்றால், பசில் ராஜபக்ச… அமெரிக்காவில் கதிரையால் விழுந்து மருத்துவ மனையில் படுத்து இருக்கின்றாராம்.
  9. கோவில் திருவிழாவிற்கு வந்த மேளகாரருக்கு, ஆடு வெட்டி விருந்து வைத்த பரம்பரையில் வந்த ஆட்களுக்கு, பதில் சொல்லுறது இல்லை. 😂 🤣
  10. யாழ்ப்பாணத்தில் புதிதாக திறந்துள்ள "Barista" சைவ உணவகம்... மலையான் கபே, தாமோதர விலாஸ் போன்ற சைவ உணவகங்களுக்கு இணையாக... மணமணக்கும் மசால் தோசை, மல்லிகைப் பூ போல இட்லி, உளுந்து வடை, யாழ்ப்பாண மரக்கறி கூழ் போன்றவற்றை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று வேண்டுகின்றோம்.
  11. யார் இந்த சொல்லிசைப் பாடகர் (Rap singer ) வேடன்? இதோ அவரே ஒரு பாடலில் தான் யார் எனச் சொல்லுகின்றார்👇 .................................... `நவீன அடிமைகள் வாழும் நரகம் போல ஓர் இடத்திலே என்னைப் பெற்றல்லோ, கல்லுப் போல ஒருத்தி அவளை யப்னாவில் (Jaffna ) இருந்து துரத்தி அவளின் உதிரத்திலே இருந்து உருவெடுத்தி` [ இது மலையாளப் பாடல் என்பதாலும், நான் அதே ஒலிப்பினைத் தமிழில் எழுதியதாலும், சில தவறுகள் இருக்கலாம் ] { Social Criminal (Official Music Video) | Prod. ‪@Hrishi.8o8 , முதலாவது பின்னூட்டத்தில் பாடலைக் காண்க} ........................................ 👆 ஓம், அவரது அம்மா யாழ்ப்பாணத்திலிருந்து பேரினவாதம் தொடுத்த போரினால் துரத்தியடிக்கப்பட்டவர். தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் வாழ்ந்து வந்தவர். தமிழ்நாட்டுக்குக் கூலித் தொழில் செய்வதற்கு சேரளத்திலிருந்து வந்த முரளி என்பவரைக் காதலித்து மணம் முடித்தவர். பின்னர் சேரளத்திலுள்ள திருச்சூர் (Thrissur, மலையாளம்: തൃശൂര്‍, Kerala ) என்ற ஊருக்குச் சென்று வாழ்ந்து வருகின்றனர். திருச்சூரில் 1994 ஆம் ஆண்டு பிறந்தவரே இந்த வேடன். அவரது இயற்பெயர் கிரந்தாஸ் முரளி என்பதாகும். சிறுவயதில் ஏழ்மையில் வாடியவரே வேடன். இவருக்கு வேடன் என்ற பெயர் ஏற்பட்டதே ஒரு சுவையான நிகழ்வு. சிறுவனாக இருக்கும் போதே ஊரிலுள்ள பெரியவர்கள் சிலருடன் சேர்ந்து நீர் நிலைகளுக்குச் சென்று மீன்களை வேட்டையாடுவராம், அதனால் ஏற்பட்ட பெயரே வேடன் { மீன் பிடிப்பவர்களைச் சங்க இலக்கியமும் `வேடன்`என்ற பொருளில் அழைப்பதனைக் காணலாம்}. அச் சிறுவன் வளர்ந்து பெரும் பாடகராக வந்த பின்னரும் வேடன் என்ற பெயரே நிலைத்து விட்டது. இவரது பாடல்கள் எல்லாமே புரட்சிகரமானவை. 2020 ஆம் ஆண்டில் இவரை மிகவும் பரவலடையச் செய்த `"Voice of the Voiceless" {குரலற்றோரின் குரல் } என்ற தொகுப்பின் தலைப்பே இவரது படைப்புகளைப் பற்றிப் பேசும். கலை என்https://scontent-fra3-1.xx.fbcdn.net/v/t39.30808-6/501130559_1423955019052107_1183976565384834506_n.jpg?stp=dst-jpg_p526x296_tt6&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=833d8c&_nc_ohc=jVvBIgud-aoQ7kNvwH3aheU&_nc_oc=AdmU8_iWltzxh-5Z5Ld29NE4Fk6OB8hYTEzPl5dPKCdpOa6ZLMx1BTjBPkL1yiJSGjI&_nc_zt=23&_nc_ht=scontent-fra3-1.xx&_nc_gid=Wod9JVFeI9PlLmZNrTPjkQ&oh=00_AfKcwNLFf1mF2qYAmU2D4MRJFW3Q0-dZzJ_R2qlerrtQ1Q&oe=683A2AC9பதே கலைத்துப் போடுவதற்காகத்தானே! சமூகத்தின் பிற்போக்குத்தனங்களான சாதியம், நிறவேறுபாடு, மதவாதம் என்பவற்றினை இவரது பாடல்கள் கடுமையாகச் சாடுவன. எனக்குப் பிடிதத இவரது பாடல் - `பூமி யான் வாழும் இடம்` {Bhoomi Njan Vazhunidam } என்ற பாடலே {இரண்டாவது பின்னூட்டத்தில் காண்க}. அதில் உலகு எங்கும் நடைபெறும் அறமற்ற செயல்களுக்கு எதிரான தனது அறச் சீற்றத்தினை வேடன் வெளிப்படுத்தியிருப்பார். சிரியா முதல் அமெரிக்கா வரை , பாரதத்தையும் உள்ளடக்கித் தனது அறச் சீற்றத்தினைக் காட்டியிருப்பார். உலகம் முழுவதும் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக அறச்சீற்றத்தினைக் காட்டியவர், தனது தாயின் பிறந்த நாட்டினைக் காணாமல் போய் விடுவாரா என்ன! 👇 “இலங்கையில் புலிகள் இனியும் தாகம் மாறாதோடு நடப்பு” [பதிவின் இரண்டாவது படத்தினையும், பதிவுக்கான இரண்டாவது பின்னூட்டத்தினையும் காண்க] 🙏வேடனின் வேட்டை தொடரட்டும்! சொல்லிசைப் (ராப்) பாடல்களில் மேலும் பல புரட்சிக் கருத்துகள் பிறக்கட்டும்!🙏 Rohini Velusamy ·
  12. உலகின் முதல் சால்மன் மீன் வளர்ப்புக் கப்பலை அறிமுகப்படுத்தும் சீனா! உலகிலேயே முதன்முறையாக, கடலில் சால்மன் மீன்களை வளர்க்கக்கூடிய மாபெரும் வளர்ப்பு கப்பலை( Salmon-farming ship) உருவாக்கி, சீனா புதிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளது. பாரம்பரிய நில அடிப்படையிலான மீன்பண்ணை முறைகளை விட்டு விலகி, கடலின் நடுப்பகுதியில் மீன் வளர்ப்பை முன்னெடுக்கும் சீனாவின் இந்த புதிய முயற்சி, உலக நாடுகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. இக் கப்பல் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டு, சுத்தமான மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய சூழலில் சால்மன் மீன்களை வளர்க்கும் திறன் பெற்றதாகும். அத்துடன் இயற்கை மாசுபாடுகள் மற்றும் நோய்கள் போன்றவையை கட்டுப்படுத்தி, உயர்தர மீன் உற்பத்தியை உறுதி செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுச்சூழல் நலம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் முன்னிலைப்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் அமையப்பட்டுள்ளது. நிலப்பரப்பை உபயோகப்படுத்தாமலேயே கடல் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தும் இந்த முயற்சி, மீன்பிடித் துறையில் ஒரு புதிய தொழில்நுட்ப யுக்தி என்றே பார்க்கப்படுகிறது. இந்த முயற்சியின் கடலின் நடுப்பகுதியில் அதிக அளவில் சால்மன் வளர்ப்பு மேற்கொள்ளப்பட முடியும் எனவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பும் குறையும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உணவுப் பாதுகாப்பையும் இது மேம்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இக் கப்பல் சோதனை (sea trial) கட்டத்தில் உள்ளது எனவும், விரைவில் இது முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீன்வளத் துறையில் தொழில்நுட்ப முன்னேற்றத்தை முன்வைக்கும் சீனாவின் இப் புதிய முயற்சி உலகளாவிய மீன்பிடி மற்றும் அக்வாடெக் (Aqua-tech) துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433198
  13. மோட்டு சிங்களவன், உண்மையிலேயே... "பிகினி" ஆடைக்கு தடை விதித்துப் போட்டானோ என்று பயந்து விட்டேன். 😂
  14. ஐந்து பிள்ளைகளை பெற்ற அம்மாவிற்கு வாழ்த்துக்கள். எல்லா குழந்தைகளையும் பிரச்சினை இல்லாமல், பிரசவம் பார்த்த.... வைத்தியர்களுக்கும், தாதியர்களுக்கும் நன்றிகள்.
  15. யாழ். கள உறுப்பினர்கள் சிலருக்கு தெரிந்தது... இப்ப அமெரிக்க அதிபர் ரம்புக்கு தெரிந்திருக்கு. ஆனால்... இழவு விழுந்த ஐரோப்பிய யூனியனுக்கு தெரியவில்லையே. உக்ரேனிய மக்கள், ஒரு கோமாளியின் வாயால்... படுகிற பாடு எக்கச் சக்கம். உக்ரைன் மக்களை... கடவுள்தான் காப்பாற்ற வேணும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.