Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ஸ்ரீலங்காவில் விலைவாசி உயர்ந்திருக்கின்ற நிலையில்... 10 லட்சம் ரூபாய் ரொம்ப கம்மியாய் இருக்கே... 😂
  2. பின்புற செவ்வந்தி என்றவுடன்... பிழம்பார் மதி மயங்கி விட்டார். 😂 🤣
  3. நாங்கள்... வைத்தியர் அர்ச்சுனாவுக்கு, வக்கீல் கோட்டு போட்டு... களம் இறங்குவோம். 😂
  4. பின்புர செவ்வந்தியை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு... எவ்வளவு சன்மானம் கொடுக்கின்றார்கள். அதன் தொகையையும் சொன்னால் தானே... மக்கள் உற்சாகமாக தேடுவார்கள்.
  5. தவறான தகவல் தந்து, கள உறுப்பினர்களை அலைய விட்டமைக்காக ஈழப்பிரியன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 😂 🤣
  6. ஜேர்மனியில் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் கென்சவேர்ட்டிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதி தீவிர வலதுசாரி கட்சி கென்சவேர்ட்டிவ் (AfD) கட்சிக்கு அடுத்ததாக அதிகளவு வாக்குகள் கிடைத்துள்ளது. 152 ஆசனங்களுடன் 20.8% பெற்று உள்ளது. "She is my wife She is my life" ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும்... ஒரு பெண்ணின் உந்து சக்தி உள்ளது. உண்மை உரைகல்
  7. காணாமல் ஆக்கப்பட் டோரின் 3000 ஆவது நாள் நிறைவடையும் தினத்தில் பிரிந்த தாயின் உயிர்! வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி தொடர்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், 3000 ஆவது போராட்ட நாளான இன்று தமிழர் தாயக காணமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தாயொருவர் இன்று உயிரிழந்துள்ளார். வவுனியா தோனிக்கல் பகுதியைச் சேர்ந்த 79 வயதான குறித்த பெண் சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் மகன் கடந்த 2009 ம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்த நிலையில் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட உறவுகளின் சார்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் பலவற்றில் தொடர்ந்து முன்னின்று போராடியிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1422848
  8. இஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையினை இரத்து செய்த ஹமாஸ்! இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான தற்காலிக போர்நிறுத்தம் அமுலில் காணப்படும் நிலையில் இஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையினை ஹமாஸ் இரத்து செய்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான தற்காலிக போர்நிறுத்தம் அமுலில் காணப்படும் நிலையில் ஒப்பந்தத்தின் பிரகாரம் ஹமாஸ் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவித்து வருகின்றது. இதற்கு பதிலீடாக இஸ்ரேல் தமது நாட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்து வருகின்றது இந்த நிலையில் பணயக்கைதிகளில் கொல்லப்பட்ட 4 இஸ்ரேலியர்களின் உடலை ஹமாஸ் ஒப்படைத்திருந்தது. கொல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் நால்வரின் உடல்கள் காசாவின் முக்கிய நகரில் வைத்து செஞ்சிலுவை சங்கம் ஊடாக இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் இதன்போது இஸ்ரேலியர்களைன அவமதிக்கும் வகையில் காசாவில் அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது இந்த நடவடிக்கையானது போர் நிறுத்தத்தினை மீறும் செயலாகும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது அத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை ஹமாஸ் மீறியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளதுடன் பணயக்கைதிகளை விடுதலை செய்யும் தீர்மானத்தினையும் நிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்யாத நிலையில் இஸ்ரேல் போர்நிறுத்தத்தினை மீறியுள்ளதாக ஹமாஸ் குற்றம் சுமத்தியுள்ளது. இஸ்ரேலுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதில்லை எனவும் அறிவித்துள்ளது இதேவேளை போர் நிறுத்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு படையினரை தயார் நிலையில் இருக்குமாறும் இஸ்ரேல் பிரதமர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Athavan Newsஇஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையினை இரத்து செய்த...இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான தற்காலிக போர்நிறுத்தம் அமுலில் காணப்படும் நிலையில் இஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையினை ஹமாஸ் இரத்து செய்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான தற்காலிக போர்நிறுத்தம் அமுலில...
  9. உக்ரேன் போர் 3 ஆண்டு நிறைவு; தலைநகரில் ஒன்று குவிந்த ஐரோப்பிய, கனேடிய தலைவர்கள்! ரஷ்யாவின் படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஐரோப்பா மற்றும் கனடாவைச் சேர்ந்த பல தலைவர்கள் திங்கட்கிழமை (24) உக்ரேனின் தலைநகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் ஆண்டு நிகழ்வில் கலந்து கொள்ள தலைநகர் கீவ்வில் ஒன்று கூடினர். இந்த விஜயத்தின் போது உக்ரேனை ஆதரிப்பது குறித்தும் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் அவர்கள் விவாதிக்க திட்டமிட்டுள்ளனர். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உக்ரேன் அல்லது ஐரோப்பா சம்பந்தப்படாமல் அமெரிக்கா எந்த சமாதான உடன்படிக்கைக்கும் முத்திரை குத்த முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட இராஜதந்திரிகள் இந்த விஜயத்தின் போது வலியுறுத்தினர். உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விரைவான ஒப்பந்தத்திற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். வொஷிங்டனின் ஐரோப்பிய நட்பு நாடுகளையும் உக்ரேனையும் ரஷ்யாவுடனான ஆரம்ப பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக்கி வைப்பதன் மூலமும், மொஸ்கோவின் 2022 படையெடுப்பிற்கு கீவ்வை குறை கூறுவதன் மூலமும் அவர்களை கவலையடையச் செய்கிறார். இது மொஸ்கோவிற்கு அரசியல் பரிசுகளையும் வலுவான பொருளாதார நன்மைகளையும் தரக்கூடும். ரஷ்யாவின் மத்திய வங்கியின் முன்னாள் துணைத் தலைவர் ஒலெக் வ்யூகின் கருத்துப்படி, மொஸ்கோ இரண்டு விரும்பத்தகாத விருப்பங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் வொஷிங்டனின் அழுத்தம் வருகிறது. உக்ரேனில் நிலப்பரப்பைக் கைப்பற்ற அழுத்தம் கொடுக்கும்போது ரஷ்யா இராணுவச் செலவினங்களை உயர்த்துவதை நிறுத்தலாம் அல்லது அதைப் பராமரித்து பல ஆண்டுகளாக மெதுவான வளர்ச்சி, அதிக பணவீக்கம் மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் வாழ்க்கைத் தரங்களுக்கு விலை கொடுக்கலாம். இவை அனைத்தும் அரசியல் அபாயங்களைக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார். Athavan Newsஉக்ரேன் போர் 3 ஆண்டு நிறைவு; தலைநகரில் ஒன்று குவிந்த ஐரே...ரஷ்யாவின் படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஐரோப்பா மற்றும் கனடாவைச் சேர்ந்த பல தலைவர்கள் திங்கட்கிழமை (24) உக்ரேனின் தலைநகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக ஐரோப்பிய ஒன்ற...
  10. எனது ஒன்று விட்ட மச்சானின், அக்காவின் புருசன்... அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றார். அவரிடம் ஈழப்பிரியனின் அண்ணரின் மகன் ரெஸ்ரோறன்ற் வைத்திருக்கின்றார் என்று சொல்ல, அவரும் டிஸ்கவுண்டுக்கு... உங்கள் கடையின் பெயரை வாங்கித் தரட்டாம் என்று, ஒரே... நச்சரிப்பாக, கேட்டுக் கொண்டு இருக்கின்றார். 🤣
  11. CDU/CSU 208 Sitze Friedrich Merz 14.158.432 Stimmen (28,52 %) AfD 152 Sitze Alice Weidel 10.327.148 Stimmen (20,8 %) SPD 120 Sitze Olaf Scholz 8.148.284 Stimmen (16,41 %) GRÜNE 85 Sitze Robert Habeck 5.761.476 Stimmen (11,61 %)
  12. யாழ்.மாவட்ட பதில் செயலாளரின் மகன் பயணித்த வாகனம் விபத்து! யாழ்.மாவட்ட பதில் செயலாளர் ம. பிரதீபனின் மகன் செலுத்தி சென்ற சொகுசு வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் மாவட்ட செயலரின் மகன் காயமடைந்துள்ளார். அதன்படி இன்று யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் கந்தர்மடம் சந்திக்கு அருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அவரது நண்பரும் காயமடைந்துள்ளனர். இதன் போது அருகில் உள்ள வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது. விபத்தில் வாகனத்தை செலுத்திச் சென்ற மாவட்ட செயலரின் மகன் ஆதி என்பவர் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில், சாரதி இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த ஆதியின் நண்பர் கடும் காயங்களுக்கு உள்ளானதுடன், அவரது கால்கள் வாகனத்தினுள் சிக்குப்பட்டமையால், சுமார் ஒரு மணி நேர போராட்டத்தின் பின்னரே அவர் வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1422706
  13. முப்படையில் இருந்து தப்பிச் சென்றுள்ள அனைவரையும் கைது செய்யுமாறு உத்தரவு! முப்படையில் இருந்து தப்பிச் சென்றுள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொந்தா அறிக்கையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் சட்டரீதியாக பணிநீக்கம் செய்யப்படாத அனைத்து முப்டையினரையும் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் அண்மைக்காலமாக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக இடம்பெற்றுவரும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பலர் ஆயுதபயிற்சிபெற்றவர்கள் எனவும் அவர்களில் பலர் சட்டரீதியாக அன்று சேவையில் இருந்து வெளியேறியுள்ளதுடன் பலர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார் இவ்வாறு வெளியேறிய நபர்களை கைது செய்யும் நடவடிக்கை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் இராணுவ வீரர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1422740
  14. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் நியமிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் முதலாவது அமர்வு இதுவாகும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழுவினர் ஜெனீவா சென்றுள்ளனர். இதில் பங்கேற்றுள்ள, இலங்கையின் உயர்மட்ட இராஜதந்திர சிறப்பு குழு, எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஐ.நா மனித உரிமைகள் அமர்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நட்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளை பிரத்தியேகமாக சந்தித்து இலங்கை தரப்பு கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எந்த தீர்மானத்தின் 51 இன்றின் கீழ் ஒன்று நகல் வரைபையும் இலங்கை தொடர்ந்து எதிர்க்க புதிய அரசாங்கமும் தீர்மானித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர் குற்றங்கள் குறித்து ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் தீர்மானத்தை நிராகரிக்கவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொட...ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் நியமிக்கப்பட்டதன் பின்ன...
  15. தேயிலை பக்கெட், ஷாம்பு போத்தலை திருடிய உப பொலிஸ் பரிசோதகர் கைது! பேராதனை, கிரிபத்கும்புர பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில் 650 ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (23) கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பேராதனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் என தெரிவிக்கப்படுகிறது. பல்பொருள் அங்காடியில் பல்வேறு பொருட்களை கொள்வனவு செய்து வந்த சந்தேகநபர் தேயிலை பக்கெட், சிறிய ஷாம்பு போத்தல் ஆகியவற்றை திருடிச் சென்றமை அங்குள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்தது. பல்பொருள் அங்காடியின் பாதுகாப்பு அதிகாரிகள் பொலிஸ் அதிகாரியை சோதனையிட்டனர், பின்னர் அவர் திருடப்பட்ட பொருட்களுடன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். சந்தேக நபர் இன்னும் இரண்டு வருடங்களில் ஓய்வு பெறவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும், இது தொடர்பான விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1422759
  16. ஜேர்மனிய தேர்தலில் பழமைவாதிகள் வெற்றி; ஜனாதிபதியாக பதவியேற்கும் ஃபிரெட்ரிக் மெர்ஸ்! ஜேர்மனியில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற தேசியத் தேர்தலில் எதிர்க்கட்சி பழமைவாதிகள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக ஃபிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) பதவியேற்கவுள்ளார். புதிய ஒரு அரசாங்கத்தை அமைக்கத் தயாராகும் போது, ஐரோப்பாவிற்கு அமெரிக்காவிலிருந்து “உண்மையான சுதந்திரத்தை” வழங்க உதவுவதாகவும் அவர் சபதம் செய்தார். தற்போதைய அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் மூன்று வழி கூட்டணி சரிந்ததைத் தொடர்ந்து, தீவிர வலதுசாரி மாற்று ஜெர்மனி (AfD) கட்சி, ஒரு உடைந்த வாக்குகளில் வரலாற்று ரீதியாக இரண்டாவது இடத்திற்கு உயர்ந்தது. இதனால், 69 வயதான மெர்ஸ் சிக்கலான மற்றும் நீண்ட கூட்டணி பேச்சுவார்த்தைகளை தற்சமயம் எதிர்கொண்டுள்ளார். தொழில்நுட்ப கோடீஸ்வரரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நண்பருமான எலோன் மஸ்க் உள்ளிட்ட முக்கிய அமெரிக்க பிரமுகர்களின் ஒப்புதலைப் பெற்ற AfD உடன் இணைந்து பணியாற்றுவதை பிரதான கட்சிகள் நிராகரிக்கின்றன. ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரம் நலிவடைந்துள்ள நிலையில், அதன் சமூகம் இடம்பெயர்வு காரணமாக பிளவுபட்டு, அதன் பாதுகாப்பு மோதலில் ஈடுபடும் அமெரிக்காவிற்கும் உறுதியான ரஷ்யா மற்றும் சீனாவிற்கும் இடையில் சிக்கியுள்ள நிலையில், மெர்ஸ், முன்னர் பதவியில் அனுபவம் இல்லாத நிலையில், ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். தனது வெற்றிக்குப் பின்னர் மெர்ஸ் அமெரிக்காவை நேரடியாகக் குறிவைத்து, பிரச்சாரத்தின் போது வொஷிங்டனில் இருந்து வந்த மூர்க்கத்தனமான கருத்துக்களை விமர்சித்து, அவற்றை ரஷ்யாவின் விரோதத் தலையீடுகளுடன் ஒப்பிட்டார். “இரு தரப்பிலிருந்தும் நாங்கள் மிகப்பெரிய அழுத்தத்தை எதிர்கொள்கிறோம், இப்போது எனது முழுமையான முன்னுரிமை ஐரோப்பாவில் ஒற்றுமையை அடைவதாகும். ஐரோப்பாவில் ஒற்றுமையை உருவாக்குவது சாத்தியமாகும்,” என்று அவர் ஏனைய தலைவர்களுடனான ஒரு வட்டமேசை மாநாட்டில் கூறினார். ஐரோப்பாவை விரைவில் வலுப்படுத்துவதே எனது முழுமையான முன்னுரிமையாக இருக்கும், இதன் மூலம் அமெரிக்காவிலிருந்து படிப்படியாக உண்மையான சுதந்திரத்தை அடைய முடியும் என்று அவர் இதன்போது மேலும் தெரிவித்தார். டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் முடிவை வரவேற்ற போதிலும், அமெரிக்காவிற்கு எதிரான மெர்ஸின் விமர்சனம் வந்தது. தேர்தலில் பழமைவாத CDU/CSU கூட்டணி 28.5% வாக்குகளைப் பெற்றது. அதைத் தொடர்ந்து AfD 20.5% வாக்குகளைப் பெற்றது என்று ZDF ஒளிபரப்பாளரால் ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட ஒரு கணிப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்படத்தக்கது. https://athavannews.com/2025/1422726
  17. போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்தும் கவலைக்கிடம்; வத்திக்கான் தகவல்! நிமோனியா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள புனித போப் பிரான்சிஸ், இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், அவரது சிறுநீரக செயல்பாட்டில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வத்திக்கான் ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்துள்ளது. நீண்டகால ஆஸ்துமா போன்ற சுவாச நெருக்கடியை எதிர்கொண்ட 88 வயதான கத்தோலிக்க பேரவையின் தலைவருக்கு சனிக்கிழமை இரண்டு யூனிட் இரத்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. பெப்ரவரி 14 அன்று போப் பிரான்சிஸ், ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சனிக்கிழமை (22 அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக வத்திக்கான் முதன்முதலில் அறிவித்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் ஒரு அறிவிப்பில், பரிசுத்த தந்தையின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது, எனினும் நேற்று இரவு (சனிக்கிழமை இரவு) முதல் அவருக்கு சுவாசக் கோளாறுகள் எதுவும் ஏற்படவில்லை என்று சுட்டிக்காட்டியது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட இரத்தப் பரிசோதனைகள் சிறுநீரக செயல்பாட்டில் இலகுவான பாதிப்பை குறிக்கின்றன, இது தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் வத்திக்கான் கூறியது. 2013 ஆம் ஆண்டு முதல் போப்பாக இருக்கும் பிரான்சிஸ், கடந்த இரண்டு ஆண்டுகளில் உடல்நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இளம் வயதிலேயே நுரையீரல் ஒவ்வாமை ஏற்பட்டு, ஒரு நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டதால், அவர் நுரையீரல் தொற்றுக்கு ஆளாக நேரிடும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1422751
  18. தெற்காசியா அளவில்…. தங்கத்தையும், வெள்ளியையும் பரிசாக பெற்ற மலையக இளைஞர்களுக்கு பாராட்டுக்கள். இன்னும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள்.
  19. பிள்ளையின் செயலால்…. தகப்பனுக்கும் கெட்ட பெயர். நல்ல காலம்…. வாகனம் மரத்துடன் மோதி நின்றது. வீதியில் போனவர்களை… பலி எடுக்கவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.