Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. சுமந்திரன்உள்ளூராட்சி தேர்தலுக்கு... புலம் பெயர் தேசத்தில், காசு சேர்க்கப் போனால்.... காலில் உள்ளதை கழட்டி அடிக்க வருவார்கள் என்பதால், அமெரிக்க, அவுஸ்திரேலிய தூதுவர்களிடம்... டொலரில் காசு வாங்கப் போயிருக்கிறார் போலுள்ளது. 😂
  2. மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது. மூதூரில் இரு பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு பெண்களின் பேத்தியான 15 வயது சிறுமி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை மூதூர் தாஹா நகர் பகுதியில் வெட்டு காயங்களுடன் பெண்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். மூதூர் தாஹா நகர் பகுதியில் இன்று அதிகாலை 4.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் 68வயதுடைய பெண் மற்றும் அவரது பெரியம்மா ஆகிய இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்நதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த 68 வயதுடைய பெண்ணின் 15 வயது மகள் வெட்டு காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே குறித்த சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2025/1425197
  3. அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு பதில் பணிப்பாளர் நியமனம். உடன் அமுலுக்கு வரும் வகையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதற்கமைய, வைத்தியர் எம்.எம்.ஐ.யு கருணாரத்ன அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் புதிய பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது பொலன்னறுவை வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1425182
  4. ‘படலந்தா’ ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக ரணில் விக்ரமசிங்கவினால் சிறப்பு அறிக்கை! ‘படலந்தா’ ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார். இதேவேளை ‘படலந்தா’ ஆணைக்குழு அறிக்கையை இன்று (14) சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்ததுடன் இது தொடர்பாக இரண்டு நாள் விவாதம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார் அத்துடன் பட்டலந்தா அறிக்கையை கையாள்வது குறித்து ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை கொள்கை முடிவை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அதன்படி, இந்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதுடன் இந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளை முன்மொழிய ஒரு சிறப்பு குழுவை நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இந்தப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் இரண்டு நாள் விவாதம் நடத்த உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1425194
  5. திருகோணமலை-மூதூர் கொலை சம்பவம்!புதிய திருப்பம். திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்களை வெட்டிக் கொலை தொடர்பில் 15வயதான சிறுமி குறித்த கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். அதன்படி திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்களை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் பேத்தியான 15 வயது சிறுமியை பொலிசார் கைது செய்திருந்தனர். மூதூர் – தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று (14) அதிகாலை சகோதரிகளான பெண்கள் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி. தஸ்னீம் பௌசான், சட்ட வைத்திய அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் விஜயம் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டிருந்தனர். குறித்த சம்பவத்தில் சிறிதரன் ராஜேஸ்வரி (வயது 68) சக்திவேல் ராஜகுமாரி (வயது 74) ஆகிய இரு பெண்களே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூதூர் தாஹா நகர் பகுதியைச் சேர்ந்த குடும்ப நல மருத்துவமாதாக கடமையாற்றிவரும் சிறிதரன் தர்ஷினி என்பவருடைய வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்ற தினமான இன்று அதிகாலை சிறிதரன் தர்ஷினி மூதூர் வைத்தியசாலையில் வியாழக்கிழமை இரவுக் கடமைக்காக சென்றிருந்த நிலையில் குறித்த வீட்டில் 15 வயதான அவரது மகள், தாயாரான சிறிதரன் ராஜேஸ்வரி மற்றும் பெரியம்மாவான சக்திவேல் ராஜகுமாரி ஆகியோர் மாத்திரம் வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில் அதிகாலை வேளை குறித்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த படுகொலைச் சம்பவத்தின்போது கூரிய ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில் இருவருடைய கழுத்துப் பகுதிகளில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்த நிலையில் 15 வயதான மகள் சிறு காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதன்போது குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட நீண்ட நேர விசாரணையின் பின்னர் குறித்த சிறுமி தானே குறித்த கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். அம்மம்மா தனக்கு ஒரே பேசுவதாகவும், தன்னில் பாசம் இல்லை எனவும் மன அழுத்தம் காரணமாக இருவரையும் கொலை செய்ததாகவும் பொலிசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். இதன் பின்னர் குறித்த சிறுமி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1425207
  6. சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம்! சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் அமைக்கப்படும் என தமிழக வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையின் வரவுசெலவுத் திட்டக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. சட்டசபையில் இன்று கூடிய முதல் நாள் கூட்டத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதன்போது மக்கள் தொகையை சமாளிக்கும் நோக்கில் சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் அமைக்கப்படும். நவீன வசதிகள் கொண்டதாக இந்நகரம் அமையும் எனவும், சென்னையை புதிய நகருடன் இணைத்திட போக்குவரத்து, மெட்ரோ வழித்தட நீட்டிப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் சீராக குடிநீரை விநியோகிக்க ரூ.2,423 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,அதற்கிணங்க சென்னை மாநகரப்பகுதியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், இதன்மூலம் ஒரு பகுதியில் உபரியாக உள்ள தண்ணீரை, மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 88 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும், திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும் எனவும், அடையாறு நிதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1425148
  7. இரண்டு மாதங்களுக்கு முன் சிவஞானம்.... உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழரசு கட்சியில் ஆட்கள் இல்லை என்றும், இளைஞர்களை கட்சியில் வந்து இணையும் படியும், வேண்டுகோள் விடுத்திருந்தார். இவர்கள் செய்யும்... செயலுக்கு, எவராவது வேலை மினைக்கெட்டு அங்கு போவார்களா. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கே...அருவெறுப்பாக உள்ளது. முதலில்... தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். கடைசியில்... ஆனந்தசங்கரி, ஒரு பிரயோசனமும் இல்லாமல் வைத்திருக்கும்... தமிழர் விடுதலை கூட்டணியும் உதயசூரியன் சின்னமும் மாதிரி... தமிழரசு கட்சியை செல்லாக் காசு ஆக்கப் போகின்றார்கள். இதற்கு முழுக் காரணமும் சுமந்திரனையே சேரும்.
  8. சுமந்திரன் ஏற்கெனவே... தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழரசு கட்சி எல்லாவற்றையும், உடைத்து விட்டார். அதில் உடைக்க இனி ஒன்றும் இல்லை என்பது சிவஞானத்துக்கு புரியவில்லை. தோல்வி பயத்தில்... புசத்திக் கொண்டு திரியிறார்.
  9. ஒரு இனத்தின் சார்பாக சந்திக்கும் போது, வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். சுமந்திரனில் இந்தப் பழக்கம் அறவே இல்லை. தமிழ் மக்களால் தெரிவு செய்யப் பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் போது, தனிப்பட்ட சந்திப்புக்கள் இரகசிய பேரம் பேசுதல் போன்றன நடப்பதாகவே சந்தேகிக்கப் படும். இவ்வளவு காலமும் இப்படியான சந்திப்புக்கள் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைத்த நன்மைகளையும் அவர்கள் தான் சொல்ல வேண்டும். இல்லாவிடில்.... வழக்கம் போல், நானும் கச்சேரிக்குப் போனேன்.. என்ற விதத்தில், பத்திரிகைகளுக்கு பல்லைக் காட்டிக் கொண்டு எடுத்த, படம் காட்டலாகவே இருக்கும். வர வர... கோமாளிக் கூத்துக்கள் கூடிக் கொண்டே போகின்றது. 😂 🤣
  10. பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு! பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை இன்று (14) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இந்த விடயம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தியதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இதன்போது “இலங்கையில் வடக்கு மற்றும் தெற்கில் பல தசாப்தங்களாக, மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வந்துள்ளதாகவும், அதை தாம் நன்கு அறிவதாகவும், இந்த நாட்டு மக்களுக்கு ஜனநாயகம் தேவை எனவும், இந்த விடயத்தில் மக்களின் நம்பிக்கையை வென்று, ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1425125
  11. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஆரம்பம்! கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது இன்னிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் வழமை போல இந்த வருடமும் இந்திய இலங்கை பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்கின்றனர் என்றும் இருநாட்டு பக்தர்கள் 8 ஆயிரம் பக்தர்களும் சிவகங்கை மறைமாவட்ட ஆயருடன் இணைந்து 100 குருக்களும் இந்த யாத்திரையில் கலந்து கொள்கின்றனர், அத்துடன் நெடுந்தீவு பிரதேச சபை யாழ் மாவட்ட செயலகம் கடற்படை இணைந்து இந்த ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதுடன் சனிக்கிழமை அதிகாலை 4:30 குறிகட்டுவானுக்கான பேருந்து சேவைகள் இடம் பெறும் குறிகாட்டுவானிலிருந்து படகு சேவைகள் இடம்பறவுள்ளது. இதேவேளை குடிநீர், உணவு, மலசலகூடம் என அனைத்து வசதிகளும் என ஏற்பாடு செய்யபட்டுள்ளன.ஆகவே இந்த திருநாளின் ஊடாக ஆசி பெற அனைத்து பக்தர்களையும் அழைத்து நிற்கின்றோம் என்றும் இன்று மாலை 4 மணயளவில் திருச்செபமாலையும் அதனை தொடர்ந்து திருச்சிலுவை பாதை, திருப்பலி, கருணை ஆராதனையை தொடர்ந்து புனித அந்தோனியாருடைய திருச்சொரூப பவனி இடம்பெறும் தொடர்ந்து நாளை சனிக்கிழமை காலை 7 மணிக்கு திருநாள் திருப்பலி ஆயர் தலைமையில் ஒப்புகொடுக்கபடவுள்ளது இது தவிர இலங்கையின் தென்பகுதி சகோதரர்களும் வர இருப்பதனால் சிங்கள மொழியிலும் சில வழிபாட்டு பகுதிகள் இடம்பெறவுள்ளன. சிங்கள மொழியில் மறையுரை ஆற்றுவதற்காக கொழும்பு மறைமாவட்டத்தில் இருந்து அருட்தந்தை சிஸ்வாண்டி குருஸ் அடிகளார் கலந்து கொள்ளவுள்ளார் . மேலும் சனிக்கிழமை காலை 6 மணிக்கு திருச்செபமாலை இடம்பெறும் என்றும் 7 மணிக்கு திருநாள் திருப்பலி ஆரம்பமாகி சுமார் 9 மணிவரை திருநாள் திருப்பலி இடம்பெறுவதுடன் திருவிழா நிறைவு பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1425108
  12. கனடாவை அடுத்து பிரான்ஸை எச்சரிக்கும் ட்ரம்ப்! அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் விஸ்கி மீது ஐரோப்பிய ஒன்றியம் விதிக்க திட்டமிட்டுள்ள வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மதுபானப் பொருட்களுக்கு 200% வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘அமெரிக்கா மீதான வரியை ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக நீக்கா விட்டால், பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதித்துவ நாடுகளிலிருந்து வரும் அனைத்து வையின்கள், ஷாம்பெயின்கள் மற்றும் மதுபானப் பொருட்களுக்கும் அமெரிக்கா விரைவில் 200% வரி விதிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்பின் இந்த அறிவிப்பு உலகளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பை அமுல்படுத்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த அழுத்ததிற்கு ஒருபோதும் கனடா அடிபணியப் போவதில்லை என கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1425119
  13. உக்ரேன் போர் நிறுத்தம்; அமெரிக்காவின் முன்மொழிவுக்கு புட்டின் ஆதரவு! உக்ரேனில் போர் நிறுத்தம் செய்வதற்கான அமெரிக்காவின் முன்மொழிவை மொஸ்கோ கொள்கையளவில் ஆதரிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வியாழக்கிழமை (13) தெரிவித்தார். இருந்த போதிலும், மோதலை விரைவாக நிறைவுக்குக் கொண்டுவருவதற்கான பல விளக்கங்களையும் நிபந்தனைகளையும் அவர் கோரினார். 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று, காயடையச் செய்தது. மேலும், மில்லியன் கணக்கான மக்களை இடம்பெயரச் செய்ததுடன், நகரங்களை இடிபாடுகளாக மாற்றியது மற்றும் மொஸ்கோவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக மிகக் கடுமையான மோதலைத் தூண்டியது. இந்த நிலையில், அமெரிக்க போர் நிறுத்த திட்டத்திற்கு புட்டினின் பெரிதும் தகுதிவாய்ந்த ஆதரவு, வொஷிங்டனுக்கு நல்லெண்ணத்தை சமிக்ஞை செய்வதற்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் மேலும் பேச்சுவார்த்தைகளுக்கான கதவைத் திறப்பதற்குமான வாய்ப்பாக தோன்றியது. ஆனால், பல முக்கியமான விவரங்கள் வரிசைப்படுத்தப்பட வேண்டும் என்றும் எந்தவொரு ஒப்பந்தமும் மோதலின் மூல காரணங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் புட்டின் வியாழக்கிழமை கூறினார். மேலும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் நன்றி தெரிவித்தார். புட்டினின் கருத்துக்களுக்குப் பின்னர் வெள்ளை மாளிகையில் பேசிய ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப், ரஷ்யத் தலைவரைச் சந்திப்பதில் “ஆசப்படுகிறேன்” என்றும், மொஸ்கோ “சரியானதைச் செய்யும்” என்றும், முன்மொழியப்பட்ட 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளும் என்றும் நம்புவதாகவும் கூறினார். சவுதி அரேபியாவில் இந்த வாரம் தொடக்கம் அமெரிக்கா-உக்ரேன் இடையே நடந்த ஒரு நாள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், அமெரிக்கா முன்மொழிந்த ரஷ்யாவுடன் உடனடியான 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக கெய்வ் தெரிவித்துள்ளது. ஜெட்டாவில் செவ்வாயன்று (11) நடந்த பேச்சுவார்த்தை, ஓவல் அலுவலகத்தில் ஜெலென்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையிலான முன்னதாக நடந்த சந்திப்பின் அசாதாரண மோதலுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பாகும். பேச்சுவார்த்தையின் பின்னர், வொஷிங்டன் நிறுத்தி வைத்திருந்த உக்ரேனுக்கான உளவுத்துறை பகிர்வு மற்றும் பாதுகாப்பு உதவியை உடனடியாக மீண்டும் தொடங்குவதாக அறிவித்தது. 2022 பெப்ரவரியில் ரஷ்யா, உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது. இப்போது உக்ரேன் பிரதேசத்தில் சுமார் 20% ஐக் கட்டுப்படுத்துகிறது. ரஷ்ய இராணுவத்திற்காகப் போராடும் 95,000 க்கும் மேற்பட்டோர் போரில் இறந்துள்ளனர். உக்ரேன் தனது உயிரிழப்பு புள்ளிவிவரங்களை கடைசியாக 2024 டிசம்பரில் புதுப்பித்தது, அப்போது ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் 43,000 உக்ரேனிய இறப்புகளை ஒப்புக்கொண்டார். மேற்கத்திய ஆய்வாளர்கள் இந்த எண்ணிக்கையை குறைத்து மதிப்பிடுவதாக நம்புகின்றனர். ரஷ்யா, தனது 2022 படையெடுப்பை உக்ரேனை “நாசியை அழிக்க” மற்றும் நேட்டோவின் விரிவாக்கத்தை நிறுத்த வடிவமைக்கப்பட்ட “சிறப்பு இராணுவ நடவடிக்கை” என்று வர்ணித்துள்ளது. மெஸ்கோவும், வொஷிங்டனும் இப்போது இந்த மோதலை மூன்றாம் உலகப் போராக விரிவடையக்கூடிய ஒரு கொடிய மறைமுகப் போராக சித்தரிக்கின்றன. https://athavannews.com/2025/1425112
  14. குரங்கு பிடித்தால்... 1000 ரூபாய். 😂 குரங்கு பிடிக்கும் போது, அது கடித்தால்... 1000 கனேடிய டொலர் செலவாகுமே. 🤣
  15. பையா.... நானும் போட்டியில் கலந்து கொள்கின்றேன். 👍 மற்றது.... இந்த கிரிக்கெட் விமர்சகர் என்ற அடைமொழி எல்லாம் எனக்கு ஓவர் பையா. 😂 குருவி தலையில்... பனங்காயை வைக்காதீங்க. 🤣
  16. டுபாய் தப்பிச் செல்ல முற்பட்ட போ...104K views · 1K reactions | டுபாய் தப்பிச் செல்ல முற்பட்ட...டுபாய் தப்பிச் செல்ல முற்பட்ட போது சிக்கிய மித்தெனிய முக்கொலை சந்தேக நபர் #sooriyanfmnews #sooriyanfm #sooriyan #hirunews #tamilnews #news #arrest...டுபாய் தப்பிச் செல்ல முற்பட்ட போது, சிக்கிய மித்தெனிய முக்கொலை சந்தேக நபர்.
  17. வலிமை அதன் வழியைக் கண்டுபிடிக்கிறது. "பச்சை மிளகாய் செடி தடையை தாண்டிச் சென்று, வரம்புகளை மீறி வானத்தைத் தொடுவது போல."
  18. 👇 கஸ்ரப் படாமல்... நிம்மதியாக வாழ என்ன செய்ய வேண்டும். 👉 https://www.facebook.com/reel/994610855928795 👈 😂
  19. பேச்சுவார்த்தைக்காக செல்லும் ஒரு தூதுவரை சுட்டுக்கொல்ல முடியுமா? அதுவும் அமைதிப்படை என்று வந்தவர்கள் செய்ய முடியுமா? சென்னையில் சிறை வைக்கப்பட்டிருந்த போராளி ஜொனியை தூதுவராக அழைத்துச் சென்று வன்னியில் இந்திய ராணுவம் நயவஞ்சகமாக கொன்ற தினம் 13.03.1988 தோழர் பாலன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.