Everything posted by தமிழ் சிறி
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
- இசையில் நனைந்த லண்டன்… சிம்பொனி அரங்கேற்றிய இளையராஜா
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- E-சிகரெட் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!
E-சிகரெட் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை! E-சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. வேப்பிங் அல்லது E-சிகரெட்டுகள் சட்டவிரோதமானது என்று நாடாளுமன்ற நிதிக்குழுவில் தெரிய வந்துள்ளது. இந்த விடயத்தினை கருத்திற் கொண்டு ஒரு திட்டம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிகரெட் வரி இதேவேளை ஏப்ரல் முதலாம் திகதி முதல் சிகரெட்டுகளுக்கு விதிக்கப்படும் நிறுவன வருமான வரியை 45% ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் சிகரெட் வரி படிப்படியாகக் குறைந்து வருவதாக தெரிவித்த பொது நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா, சிகரெட்டுகள் மீதான வரியை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் ஆலோசனை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424683- நடிகை மாலினி பொன்சேகா வைத்தியசாலையில் அனுமதி!
நடிகை மாலினி பொன்சேகா வைத்தியசாலையில் அனுமதி! பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாலினி பொன்சேகா சில காலமாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் நோய் நிலைமை அதிகரித்தமையைத் தொடர்ந்து அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலினி பொன்சேகா இந்திய திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424657- தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
நீதிமன்றில் தேசபந்து மனுத் தாக்கல்! முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம டபிள்யூ. 15 ஆவது விருந்தகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக தம்னை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்தி இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு அந்த மனுவில் அவர் கோரியுள்ளார். இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லாபர் தாஹிர் மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற ஆயம் முன்னிலையில் இன்று (10) பரிசீலனைக்கு அழைக்கப்பட்டது. பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுத்த பின்னர், மனுவை எதிர்வரும் 12 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1424639- மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்! இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை வலியுறுத்தி தமிழகத்தில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்போவதாக விஜயின் கட்சியான தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் தளபதி விஜய்யும் கலந்து கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடுத்தவராம் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான அனுமதியை தமிழக வெற்றி கழகம் பொலிசாரிடம் முன்வைத்துள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் இந்த போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424675- கருத்து படங்கள்
- யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன ; மருத்துவமனைகள் மீது விமான தாக்குதல் இடம்பெற்றது ஆனால் அது திட்டமிட்ட முறையில் இடம்பெறவில்லை - ரணில்
- தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
- 17.5 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது!
17.5 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது! 17.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருளை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் 20 வயது கனேடிய பெண் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்று இரவு (9) விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர், இளங்கலை மாணவி என்றும் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவென்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் நேற்று இரவு 8.35 மணிக்கு எதிஹாட் ஏர்வேஸ் விமானம் EY-396 மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைவதற்கு முன்பு கனடாவின் டொராண்டோவிலிருந்து அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். சோதனையில், சுங்க அதிகாரிகள் அவரது பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 17 கிலோகிராம் 573 கிராம் ஹஷிஷ் போதைப்பொருளை கண்டுபிடித்தனர். சந்தேக நபர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன், மேலதிக விசாரணைக்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1424556- உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்கும் சமல் ராஜபக்ஷ!
உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்கும் சமல் ராஜபக்ஷ! முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய சமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட இளம் வேட்பாளர்களை பெருமளவில் முன்னிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். SLPP வேட்பாளர்களில் பெண்கள் மற்றும் தன்னைப் போன்ற மூத்த நபர்களும் அடங்குவர் என்று அவர் மேலும் கூறினார். எனினும், முன்னாள் சபாநாயகர் எந்த உள்ளூராட்சி சபைக்கு போட்டியிடப் போகிறார் என்பதை இதன்போது வெளிப்படுத்தவிலை. https://athavannews.com/2025/1424607- விலங்குகளை வேட்டையாடிய கும்பல் சிக்கியது!
விலங்குகளை வேட்டையாடிய கும்பல் சிக்கியது! துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் ஏனைய உபகரணங்களுடன் விலங்குகளை வேட்டையாடிய ஆறு சந்தேக நபர்களை பேராதனை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (09) யஹலதென்ன பிரதேசத்திற்கு விலங்குகளை வேட்டையாட வந்த போது பிரதேசவாசிகளால் மடிக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பேராதனை பொலிஸ் நிலையத்தில் இரவு நேர நடமாடும் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் உரிய இடத்திற்கு சென்று பார்த்தபோது சுட்டுக்கொல்லப்பட்ட பன்றியையும் விலங்குகளை வேட்டையாடிய ஆறு நபர்களையும் கைது செய்தனர். இதன்போது, 03 12-துளை ரவைகள், 03 ஸ்கால்பெல்கள், ஒரு கோடாரி, ஒரு கை கோடாரி, 02 டிராகன் லைட்டுகள் மற்றும் ஒரு கத்தி ஆகியவை சந்தேக நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28 மற்றும் 71 வயதுடைய மாவத்தகம பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். பேராதனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளின் போது யஹலதென்ன பிரதேசத்தில் வீதியோரமாக உள்ள காட்டுப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த 12 போர் ரக துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸாரும் மாவத்தகம பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1424604- தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
அரசியல்வாதியின் வீட்டில் மறைந்திருக்கும் தென்னகோன்? முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இதேவேளை தேசபந்து தென்னகோன் முக்கிய அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று தெரிவித்துள்ளார். தேசபந்து தென்னகோனை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த மாதம் 28ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தது. 2023 டிசம்பர் 31 அன்று மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணையின் பிரகாரம் இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 11 நாட்கள் கடந்துள்ள போதிலும் அவர் இதுவரையில் கைது செய்யப்படாத நிலையில் இவ்வாறு ஆறு பொலிஸ் குழுக்கள் தேடுதல் நடவடிக்கை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மேலும் தேசபந்து தென்னகோன் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தை தவிர்க்கும் பிடியாணைதாரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல நேற்று தெரிவித்தார். சட்டத்தை செயல்படுத்துவதற்கு தரவரிசை ஒரு பொருட்டல்ல என்றும் பிரதி அமைசச்ர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424591- ஜேர்மன் விமான நிலையத்தில் சுமார் 300 விமானங்கள் இரத்து!
ஜேர்மன் விமான நிலையத்தில் சுமார் 300 விமானங்கள் இரத்து! ஜெர்மனி முழுவதும் திங்கட்கிழமை (10) திட்டமிடப்பட்ட பரந்த வேலைநிறுத்தங்களுக்கு முன்னதாக தரைவழி ஊழியர்கள் வெளிநடப்பு செய்ததால், ஞாயிற்றுக்கிழமை (09) ஹாம்பர்க் விமான நிலையத்தில் சுமார் 300 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன. ஜெர்மன் தொழிற்சங்கமான வெர்டி இந்த நடவடிக்கை குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும், காலையில் 10 விமானங்கள் சேவையை மேற்கொண்ட பின்னர், விமான நிலைய ஊழியர்கள் வெளிநடப்பு செய்ததால் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக ஹாம்பர்க் விமான நிலையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால் 144 வருகைகள் மற்றும் 139 புறப்பாடுகள் இரத்து செய்யப்பட்டன. இதனால் 40,000 க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விமான நிலைய தரைப் பணி ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வெர்டி, வேலைநிறுத்தப் போராட்டம் திங்கட்கிழமை (10) தொடரும் என்று கூறியுள்ளது. இந்த நடவடிக்கை உள்ளூர் வசந்த விடுமுறை நாட்களில் பயணம் செய்ய முயற்சிக்கும் பயணிகளுக்கான திட்டங்களை கடுமையாக சீர்குலைக்கும் என்று விமான நிலையம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்கம் 8% ஊதிய உயர்வு அல்லது மாதத்திற்கு குறைந்தபட்சம் 350 யூரோக்கள் ($380) அதிகரிப்பு, அத்துடன் அதிக போனஸ் மற்றும் கூடுதல் விடுமுறை ஆகியவற்றைக் கோருகிறது. https://athavannews.com/2025/1424592- அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு அடிபணியப்போவதில்லை – கனடாவின் புதிய பிரதமர்
அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு அடிபணியப்போவதில்லை – கனடாவின் புதிய பிரதமர் கனடா மீது 25 சதவீத வரி விதிப்பை அமுல்படுத்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த அழுத்ததிற்கு ஒருபோதும் கனடா அடிபணியப் போவதில்லை என கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை இராஜினாமா செய்வதாகக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்த நிலையில் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு செய்யப்பட்டுள்ளார். லிபரல் கட்சியின் தலைவரான ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் கனடாவின் பிரதமராகப் பதவி வகித்தார். அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து, லிபரல் கட்சியின் அடுத்த தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 59 வயதான மார்க் கார்னி 1 இலட்சத்து 31ஆயிரத்து 674 வாக்குகள் பெற்று 85.9 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கிறிஸ்டியா பிரீலாண்ட் 11,134 வாக்குகளையும், கரீனா கோல்ட் 4,785 வாக்குகளையும் பெற்றனர். இதன் மூலம் லிபரல் கட்சியின் புதிய தலைவராகவும், கனடாவின் 24ஆவது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கனேடிய பிரதமராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் மார்க் கார்னி விசேட உரையொன்றை ஆற்றியிருந்தார். குறித்த உரையில் அவர் தெரிவித்துள்ளதாவது” டொனால்ட் ட்ரம்ப் வர்த்தகப் போரைத் தொடரும்வரை அமெரிக்கப் பொருட்கள் மீதான பரஸ்பர வரியை கனடா அரசாங்கமும் கைவிடாது. கனேடிய அரசு சரியான பாதையிலேயே செல்கிறது. நமக்கு அமெரிக்கா உரிய மரியாதை கொடுத்து, நம்பகத்தன்மை வாய்ந்த, நியாயமான வர்த்தகத்தை உறுதி செய்யும் வரை, நாம் விதித்த வரி அமுலில்தான் இருக்கும்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1424603- கனடாவின் பிரதமராகும் போட்டியில் மார்க் கார்னி வெற்றி!
கனடாவின் பிரதமராகும் போட்டியில் மார்க் கார்னி வெற்றி! கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் தலைவராவதற்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கியாளர் மார்க் கார்னி (Mark Carney) வெற்றி பெற்றுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பின்னர் இவர், கனடாவின் புதிய பிரதமராகப் பதவியேற்பார் என்று அதிகாரப்பூர்வ முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (09) தெரிவித்தன. கனடாவில் அரசியல் மற்றும் பொருளாதாரம் ஒரு கொந்தளிப்பான நேரத்தில் கார்னி பொறுப்பேற்பார். தற்சமயம் கனடா நீண்டகால நட்பு நாடான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கீழ் அமெரிக்காவுடன் வர்த்தகப் போரின் மத்தியில் உள்ளது மற்றும் விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும். 59 வயதான கார்னி, முன்னாள் நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்டை தோற்கடிக்க 86% வாக்குகளைப் பெற்றார், இதில் 152,000 க்கும் குறைவான கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர். வெற்றியின் பின்னர் கார்னி, டொனால்ட் ட்ரம்பை எதிர்கொள்ளவதாக சபதம் செய்துள்ளார், மேலும் அமெரிக்காவுடனான கடுமையான வர்த்தகப் போரின் போது, தனது நாட்டை ஒன்றிணைக்கவும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், நமது பொருளாதாரத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கும் ஒருவர் இருக்கிறார்,” என்று கார்னி, ட்ரம்பைப் சாடிக் கூறினார்,”அவர் கனேடிய தொழிலாளர்கள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களைத் தாக்குகிறார். அவர் வெற்றிபெற நாம் அனுமதிக்க முடியாது. அமெரிக்கர்கள் எங்களுக்கு மரியாதை காட்டும் வரை எனது அரசாங்கம் எங்கள் கட்டணங்களைத் தொடரும் – என்றார். அரசியல் ரீதியாகப் புதியவரான கார்னி, கட்சியை மீண்டும் உயிர்ப்பிக்கவும், கனடாவின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை முடக்கக்கூடிய மேலதிக வரிகளை அச்சுறுத்தும் ட்ரம்புடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை மேற்பார்வையிடவும் தான் சிறந்த இடத்தில் இருப்பதாக வாதிட்டார். ட்ரம்ப் கனடா மீது விதித்த வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ட்ரூடோ அமெரிக்காவின் மீது 30 பில்லியன் கனேடிய டொலர்கள் மதிப்பிலான பழிவாங்கும் வரிகளை விதித்துள்ளார். கார்னியின் வெற்றி, உண்மையான அரசியல் பின்னணி இல்லாத வெளிநாட்டவர் கனடா பிரதமராக வந்த முதல் முறையாகும். இரண்டு G7 மத்திய வங்கிகளான கனடா மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றின் ஆளுநராகப் பணியாற்றிய முதல் நபராக தனது அனுபவம், ட்ரம்பை சமாளிக்க அவர் சிறந்த வேட்பாளர் என்று அவர் கூறியுள்ளார். கார்னியின் கீழ் லிபரல் கட்சிக்கு ஒரு புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பு, ட்ரம்பின் வரிவிதிப்புகளுடன், கனடாவை அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக இணைப்பதற்கான அவரது தொடர்ச்சியான அவதூறுகளுடன் இணைந்து, லிபரல் கட்சியின் குறிப்பிடத்தக்க மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது. எவ்வாறெனினும், கருத்துக் கணிப்புகள் லிபரல்களோ அல்லது கன்சர்வேடிவ்களோ பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க முடியாது என்பதைக் குறிக்கின்றன. எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். வரும் வாரங்களில் கார்னி ஒரு தேர்தலை அறிவிப்பார் என்றும், அதாவது தேர்தல் மிக விரைவில் நடக்கக்கூடும் என்றும் இரண்டு லிபரல் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. கார்னி சட்டப்பூர்வமாக பொது மன்றத்தில் இடம் இல்லாமல் பிரதமராகப் பணியாற்ற முடியும், ஆனால் நாட்டின் பாரம்பரியம் அவர் விரைவில் தேர்தல் ஒன்றை வெல்ல முயற்சிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது. இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை (09) ஒட்டாவாவில் உள்ள கனடாவின் நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தில், நூற்றுக் கணக்கான கனடியர்கள் உள்நாட்டு அரசியலைப் பற்றி எதுவும் குறிப்பிடாமல் ட்ரம்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதாகைகளை ஏந்திச் சென்றனர். ஜனவரி மாதம் ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்தார், ஏனெனில் அவரது செல்வாக்கு சரிந்தது, ஆளும் லிபரல் கட்சி அவரை மாற்றுவதற்கு விரைவான போட்டியை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424549- நாய் என்ற அமைச்சர் || அர்ச்சுனா பதிலடி!
சாத்தான்.... நீங்கள் கூறியது எனக்கு முன்பே புரிந்து விட்டது. ஆனாலும்... உங்களது வாயை கிளறி, அந்தச் சொல்லை எடுப்பதற்காக விளங்காத மாதிரி கேட்டேன். 😂- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்றுக் கொண்ட... @புலவர், @நீர்வேலியான், @நியாயம் ஆகியோருக்கும், போட்டியில் உற்சாமாக கலந்து கொண்டவர்களுக்கும், போட்டி நடந்து கொண்டிருந்த நிலையில்.... புதிய யாழ். களமாற்றம் வந்த போது ஏற்பட்ட சிரமங்களை திறமையாக சமாளித்து, போட்டியை திறம்பட நடாத்திய @கிருபன்ஜீ க்கும், போட்டியை... தொய்வில்லாமல், கலகலப்பாக வைத்திருந்த உறவுகளுக்கும்... பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். 🙂- தலிபான் நாட்டில் பிரபல ஆபாச பட நடிகை
அது என்ன… 72 கிலோ மீற்றர் கணக்கு. சொர்க்கத்தில் கிடைக்கும் 72 கன்னியருக்கும், இதற்கும் ஏதாவது தொடர்பு உண்டா.- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
பண்டத்தரிப்பில் வைத்து Youtuber கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார்!!!- இலங்கைக்கு வருகை தந்த சிவகார்த்திகேயன்!
இலங்கைக்கு வருகை தந்த சிவகார்த்திகேயன்! ‘அமரன்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படம் ‘பராசக்தி’. இயக்குனர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகிவரும் இத் திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி மற்றும் மதுரையில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா உள்ளிட்ட படக்குழு இலங்கை வருகைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsஇலங்கைக்கு வருகை தந்த சிவகார்த்திகேயன்!'அமரன்' படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படம் 'பராசக்தி'. இயக்குனர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகிவரும் இத் திரைப்படத்தின் முதற்கட...- நாய் என்ற அமைச்சர் || அர்ச்சுனா பதிலடி!
சாத்தான்…. தனிப்பட்ட இடம் என்பது, பாரளுமன்ற உறுப்பினரின் கதிரையா அல்லது ஒலி வாங்கியா?- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
பாராளுமன்றத்திலேயே... தமிழ்ப் பகுதிகளில் செயல் படும் இணையம் நடத்துபவர்களைப் பற்றி கதைக்கும் அளவிற்கு இவர்களின் கீழ்த்தரமான செயல்பாடுகள் இருந்துள்ளதை நினைக்க வேதனையாக உள்ளது. எதற்கோ போராட வேண்டிய தமிழ் இனம்.. இப்போ இந்தப் புல்லுருவிகளை சமாளிக்க போராட வேண்டியுள்ளது பெரும் சோகம்.- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
"யூ ரியூப்", "ரிக் ரொக்" காரருக்கு... இப்ப கஸ்ரகாலம் போலை இருக்கு. பின்னை.... கிடைத்த சுதந்திரத்தை அளவுக்கு மீறிப் பாவித்தால், இதனையும் அனுபவிக்கத்தான் வேண்டும். அவர்கள் தம்மை சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது. - இசையில் நனைந்த லண்டன்… சிம்பொனி அரங்கேற்றிய இளையராஜா
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.