Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவையில் 6,700 ஊழியர்கள் பணிநீக்கம்! அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் வியாழனன்று (20)உள்நாட்டு வருவாய் சேவையில் சுமார் 6,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியது. வங்கி கட்டுப்பாட்டாளர்கள், வன ஊழியர்கள், ராக்கெட் விஞ்ஞானிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பிற அரசாங்க ஊழியர்களை குறிவைத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பெருமளவிலான ஆட்குறைப்பு முயற்சியின் ஒரு பகுதியே இந்த பணிநீக்கம் ஆகும். ட்ரம்பின் மிகப்பெரிய பிரச்சார நன்கொடையாளரான தொழில்நுட்ப பில்லியனர் எலோன் மஸ்க் இந்த முயற்சியை வழிநடத்துகிறார். அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவையில் நாடு முழுவதும் சுமார் 100,000 கணக்காளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பணிபுரிகின்றனர். முன்னாள் ஜனாதிபதி பைடன் நிர்வாகம் $80 பில்லியன் முதலீட்டில் அமலாக்கத்தை மேம்படுத்தி ஏஜென்சியை நவீனமயமாக்கும் பணியில் ஈடுபட்டது. ஆனால், ஜனாதிபதி ட்ரம்ப் அதன் அதிகாரங்களை கட்டுப்படுத்த விரும்புகிறார் உள்நாட்டு வருவாய் சேவை செய்தி தொடர்பாளர் பணிநீக்கங்களுக்கான சரியான எண்ணிக்கையை வழங்க மறுத்துவிட்டது. எனினும், இந்த விடயத்தை நன்கு அறிந்தவர்களின் கூற்றுப்படி, பணிநீக்கங்கள் மொத்தம் 6,700 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி பைடனின் கீழ் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக பணியமர்த்தப்பட்ட ஏஜென்சியில் பணிபுரியும் தொழிலாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது. 2021 இல் பைடன் பதவியேற்பதற்கு முன்பு இருந்த 80,000 பேருடன் ஒப்பிடும்போது, வரி ஏஜென்சி இப்போது தோராயமாக 100,000 பேரை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. Athavan Newsஅமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவையில் 6,700 ஊழியர்கள் பணிநீ...அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் வியாழனன்று (20)உள்நாட்டு வருவாய் சேவையில் சுமார் 6,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியது. வங்கி கட்டுப்பாட்டாளர்கள், வன ஊழியர்கள், ராக்கெட் விஞ்ஞ...
  2. 200 சீன மோசடி சந்தேக நபர்கள் மியன்மாரிலிருந்து நாடு திரும்பினர்! மியன்மாரில் இருந்து மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 200 சீன பிரஜைகளின் முதல் குழுவை திருப்பி அனுப்பும் பட்டய விமானம் தாய்லாந்து வழியாக கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங்கில் வியாழக்கிழமை பிற்பகல் தரையிறங்கியது. சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின்படி, தொலைத்தொடர்பு-இணைய மோசடிகளைத் தடுக்க சீனா, தாய்லாந்து மற்றும் மியன்மார் இடையேயான பன்னாட்டு சட்ட அமலாக்க முயற்சிகளில் இது ஒரு மைல்கல் மற்றும் குறிப்பிடத்தக்க சாதனையாகும். தாய்லாந்து-மியன்மார் எல்லைப் பகுதியில் மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 800-க்கும் மேற்பட்ட சீன சந்தேக நபர்கள் அடுத்த மூன்று நாட்களுக்குள் வாடகை விமானங்களில் ஜியாங்சு மாகாணத்திற்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் தகவலை மேற்கொள்காட்டி குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சகத்தின் கூற்றுப்படி, மூன்று நாடுகளின் சட்ட அமலாக்க அதிகாரிகள் சமீபத்தில் மியாவாடியில் தொலைத்தொடர்பு மோசடிக்கு எதிராக கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. https://athavannews.com/2025/1422394
  3. பணயக்கைதி விடுவிப்பில் இஸ்ரேலின் கோபத்தை மீண்டும் தூண்டிய ஹமாஸ்! காசாவில் இருந்து வியாழக்கிழமை (20) இஸ்ரேலுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட நான்கு சடலங்களில் ஒன்று ஹமாஸ் முன்னதாக கூறியது போல் பெண் பணயக்கைதியான ஷிரி பிபாஸ் (Shiri Bibas) அல்ல என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. 33 வயதான ஷிரி பிபாஸ் மற்றும் கைக்குழந்தை உட்பட அவரது மகன்களான ஏரியல் மற்றும் கஃபிர் காசாவில் பணயக்கைதிகளான சிறைபிடிக்கப்பட்டிருந்த போது இறந்து விட்டனர் என்று செய்தி இஸ்ரேலில் சோகத்தில் ஆழ்த்தியது. தடயவியல் சான்றுகள், உளவுத்துறை தகவலின்படி, இரண்டு குழந்தைகளும் நவம்பர் 2023 இல் பயங்கரவாதிகளால் “கொடூரமாக கொல்லப்பட்டனர்” இஸ்ரேலிய இராணுவம் மதிப்பிட்டுள்ளது. அவர்கள் கொல்லப்படும் போது ஏரியலு 4 வயது, கஃபிர் 10 மாதங்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் மீதமுள்ள பணயக்கைதிகளுடன் அவரது உடலையும் இஸ்ரேல் திரும்பக் கோரியது. வியாழன் அன்று ஹமாஸால் இஸ்ரேலுக்குக் அவர்களில் உடல்களை திருப்பிய அனுப்பிய பின்னர் ஷிரி பிபாஸின் இரு மகன்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) ஷிரியின் குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளது. ஆனால், அவர்களின் தாயார் ஷிரி என்று கூறப்படும் மூன்றாவது உடல் எந்த பணயக்கைதிகளுடனும் பொருந்தவில்லை மற்றும் அடையாளம் காணப்படவில்லை என்று இராணுவம் தெரிவித்துள்ளது. அபு கபீர் தடயவியல் நிறுவனத்தில் உள்ள நிபுணர்களால் நான்காவது உடலை அடையாளம் காண முடியவில்லை என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெள்ளிக்கிழமை (21) அதிகாலை அறிவித்தது. இது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தீவிர ஒப்பந்த மீறல் ஆகும் என ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் நான்கு இறந்த பணயக்கைதிகளை திருப்பி அனுப்ப ஒப்பந்தத்தின் கீழ் கடமைப்பட்டுள்ளகவும் கூறியது. போர் நிறுத்தம் அமுலுக்கு வந்து, இஸ்ரேல் முழுவதும் கோபத்தையும் துக்கத்தையும் ஏற்கனவே தூண்டியிருந்த நிலையில், உடல்கள் திரும்பப் பெற்ற பின்னர் அதிர்ச்சிகரமான இந்த அறிக்கை வந்தது. எனினும், ஹமாஸிடம் இருந்து உடனடியாக எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை. https://athavannews.com/2025/1422378
  4. இஸ்ரேலில் அடுத்தடுத்து வெடித்து சிதறிய மூன்று பஸ்கள்! இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் புறநகர்ப் பகுதிகளான பேட் யாம் மற்றும் ஹோலோனில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் மூன்று காலி பஸ்கள் வியாழக்கிழமை (20) இரவு அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. சம்பவங்களில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. மேலும், இரண்டு பஸ்களிலிருந்து வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்புகள் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். காசாவில் இருந்து நான்கு பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் திருப்பியனுப்பியதையடுத்து இஸ்ரேல் ஏற்கனவே துக்கத்தில் இருந்த ஒரு நாளில் வெடிப்புகள் நடந்தன. பஸ் வெடிப்புகள் 2000 களில் பாலஸ்தீனிய எழுச்சியின் போது குண்டுவெடிப்புகளை நினைவூட்டுவதாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், காட்சிகளை ஆராய்ந்து சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பொலிஸார் கூறியுள்ளனர். அதேநேரத்தில், வெடிகுண்டு சப்பர்கள் அருகில் சந்தேகத்திற்குரிய வேறு ஏதேனும் பொருட்களை தேடுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதனிடையே, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம், நிலைமை குறித்து தொடர்ந்து புதுப்பிப்புகளைப் பெற்று வருவதாகவும் வியாழன் இரவு பாதுகாப்பு மதிப்பீட்டை நடத்தியதாகவும் கூறியது. இதையடுத்து, பயங்கரவாத மையங்களுக்கு எதிராக மேற்குக் கரையில் பாரிய நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளுக்கு அவர் பிரதமர் அறிவுறுத்தியதாக அறிவித்தது. https://athavannews.com/2025/1422387
  5. எனக்கும்... அந்த நாமல் மீம்ஸை பார்த்து ஒரே சிரிப்பு. முகநூலில்.... இந்த துப்பாக்கி சூட்டை வைத்து, பின்னி பெடல் எடுக்கின்றார்கள். அர்ச்சுனா, சஜித், நாமல், மகிந்த என்று எல்லாரையும் போட்டு, கலாய்க்கிறார்கள். 🤣
  6. Clean Srilanka ல, அவனும் பங்கெடுக்க நினைத்தானோ..... என்னவோ... அதுவும் ID ல Covid QR code வச்சி அடிச்சான் பாரு.
  7. கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்-பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது! கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் குற்றவியல் மற்றும் நீதிமன்றப் பணிகள் பிரிவில் கடமையாற்றிவந்த பாதெனிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை கனேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தற்போது தலைமறைவாகியுள்ள சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி வீரசிங்கவுடன் அவர் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதுடன் அவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளும் தொடர்வதாகவும் பொலிஸ்சார் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2025/1422356 கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்-பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது! கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் குற்றவியல் மற்றும் நீதிமன்றப் பணிகள் பிரிவில் கடமையாற்றிவந்த பாதெனிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை கனேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தற்போது தலைமறைவாகியுள்ள சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி வீரசிங்கவுடன் அவர் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதுடன் அவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளும் தொடர்வதாகவும் பொலிஸ்சார் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2025/1422356
  8. வித்யா படுகொலை வழக்கு-புதிய திருப்பம்! வித்யா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரை விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியது. அத்துடன் இதற்கு மேலதிகமாக, லலித் ஜயசிங்கவுக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அதை அவர் செலுத்தத் தவறினால், அவருக்கு மேலும் 6 மாதங்கள் தளர்த்திய வேலையுடன் கூடிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை யாழ்ப்பாணம், புங்குடுத்தீவை சேர்ந்த பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா, 2015 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கொலைக் குற்றவாளிகள் ஏழு பேருக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1422365
  9. பிடியுங்கள்.. பந்தயம். 😎 ரணில் எம்.பி. ஆக முதல்… சுமந்திரன், பின் கதவால் எம்.பி. ஆகி விடுவார். 😂 🤣
  10. வடக்கு கிழக்கில்… எத்தனையோ அரசாங்கங்களால் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும்… வாள் வெட்டு கோஷ்டிகளையும் பிடித்து… கையையும், காலையும் முறித்து விடுங்கள்.
  11. வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ கடைசி வரை யாரோ.... விட்டு விடும் ஆவி பட்டு விடும் மேனி சுட்டு விடும் நெருப்பு சூனியத்தில் நிலைப்பு. -உண்மை உரைகல்-
  12. நீங்கள் தானே... சிங்களவர்களின் பெயர்கள் எல்லாம் வித்தியாசமாக இருக்கும் என்று முன்பு குறிப்பிட்டதாக ஒரு ஞாபகம். அதிலை ஒன்றுதான்... பின்புர செவ்வந்தி 😂
  13. அமெரிக்கன் கேட்கிறதை... மரியாதையாக கொடுத்து விடுவது தான் நல்லது. இல்லாட்டி... அடாத்தாக, அடித்து பறித்து விடுவார்கள். பிறகு... சதாம் ஹுசைன், கடாபிக்கு நடந்ததுதான், செலென்ஸ்கிக்கும் நடக்கும்.
  14. டெல்டா விமான விபத்து; பயணிகளுக்கு $30,000 இழப்பீடு! இந்த வாரம் டொராண்டோ விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான டெல்டா விமானத்தில் பயணித்த ஒவ்வொரு பயணிக்கும் $30,000 வழங்குவதாக அமெரிக்க விமான நிறுவனம் புதன்கிழமை (19) அறிவித்துள்ளது. எனினும், பயணிகள் தங்களுக்கான இழப்பீடுகளை எவ்வாறு கோரலாம் என்பது உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை. விமானத்தில் பயணித்த 76 பயணிகளும் டெல்டாவிடம் இருந்து அறிவிக்கப்பட்டுள்ள சலுகையைப் பெற்றால், அது விமான நிறுவனத்துக்கு மொத்தம் $2.3 மில்லியனுக்கும் மேலான செலவாக அமையும். கடந்த திங்களன்று (19) அமெரிக்காவின் மினியாபோலிஸ், மினசோட்டாவில் இருந்து புறப்பட்ட டெல்டா ஏர் லைன்ஸ் விமானம், டொராண்டோவின் பிரதான விமான நிலையத்தில் தரையிரங்கும் போது, ஓடுபாதையில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தின் போது, விமாணத்தில் 76 பயணிகளும், நான்கு பணியாளர்களும் இருந்தனர். விபத்தில் உயிரிழப்புகள் எவையும் பதிவாகவில்லை, எனினும், 21 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். புதன்கிழமை காலை நிலவரப்படி ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் தற்சமயம் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் டெல்டா தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1422280
  15. செலென்ஸ்கி... இனியும் விசர் சேட்டை விட்டார் என்றால், அமெரிக்காவே.... ஆளை முடித்து விட்டு, "அந்திரட்டியும்" செய்து விட்டு போய் விடுவார்கள். 😂 பிறகு... புட்டின், குண்டு போட்டு, கொன்று போட்டார் என்று, மூக்காலை அழுது கொண்டு நிற்கப் படாது. 🤣
  16. கணேமுல்ல சஞ்சீவவின் சடலத்தை உரிமை கோர முன்வராத உறவினர்கள்! கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் குமார சமரரத்னவின் சடலத்தை கோருவதற்கு உறவினர்கள் எவரும் முன்வரவில்லை. இதனையடுத்து, அவரது சடலம் கொழும்பு பொலிஸ் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், குடும்ப உறுப்பினர்களின் உரிமை கோரலுக்காக காத்திருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ நேற்று (19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இலக்கம் 05 நீதிவான் நீதிமன்ற அறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். பூசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், சட்ட நடவடிக்கைகளுக்காக சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் 19 கொலை வழக்குகளில் சந்தேக நபர் என பொலிஸார் தெரிவித்தனர். நீதிமன்ற வளாகத்தினுள் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ரிவால்வர் ரக துப்பாக்கியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். கைதான பிரதான சந்தேக நபர் 34 வயதான மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர் இலங்கை இராணுவ கமாண்டோ படைப்பிரிவின் முன்னாள் உறுப்பினர் ஆவார். குறித்த நபர் சட்டத்தரணி போன்று மாறுவேடமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்த பயன்படுத்திய ஆயுதத்தை குற்றவியல் நடைமுறைச் சட்டப் புத்தகத்தில் மறைத்து வைத்து நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு சென்றதாகவும் கண்டறியப்பட்டது. இதனிடையே, இன்று (20) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் கடைப்பிடிக்கப்பட்டிருந்தது. https://athavannews.com/2025/1422247
  17. நீதிமன்ற துப்பாக்கி சூடு; சந்தேக நபரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்! வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்கடை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்மைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை தொடர்பில் கொழும்பு, குற்றப் பிரிவு விசாரணைகள‍ை ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய சந்தேக நபரான பெண் ஒருவரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சந்தேக நபரின் விபரம் பெயர்: பின்புர தேவாஹே இஷார செவ்வந்தி வயது: 25 தே.அ.அ.இல: 995892480v முகவரி: 243/01, நீர்கொழும்பு வீதி, ஜயா மாவத்தை, கட்டுவெல்லேகம சந்தேக நபர் தொடர்பான தகவல்களை பின்வரும் இலக்கங்களுக்கு அறிவிக்கலாம்: பணிப்பாளர் கொழும்பு, குற்றப்பிரிவு – 0718591727 கொழும்பு குற்றப்பிரிவு – 0718591735 சந்தேக நபர் தொடர்பான சரியான தகவல்களை வழங்குவோருக்கு பிரதிப் பொலிஸமா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நிதியிலிருந்து ரொக்கப் பரிசை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் அளிப்பவர்களின் ரகசியத்தன்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர். Athavan Newsநீதிமன்ற துப்பாக்கி சூடு; சந்தேக நபரை கண்டுபிடிக்க பொதும...வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்கடை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்மைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை தொடர்பில...
  18. கணேமுல்ல சஞ்சீவவின் கொலையாளியை ஏற்றிச்சென்ற வேன் சாரதி கைது! பாதாள உலகக்குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் நேற்று (19) புத்தளம் பாலவிய பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த நபர் தப்பிச் செல்ல உதவிய வேன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய பெண்ணையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரதான துப்பாக்கிதாரி, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 72 மணித்தியாலங்களுக்கு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தககது. https://athavannews.com/2025/1422228
  19. மீத்தெனிய துப்பாக்கி சூடு; உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்வு! மீத்தெனிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. அதன்படி, குறித்த துப்பாக்கிச் சூட்டில் சமப்வ இடத்தில் உயிரிழந்த 39 வயதுடைய நபரின் மகனும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காலி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் (18) இரவு 10.15 மணியளவில் தனது மகன் மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, மோட்டார் சைக்கிளின் சாரதியான கல்பொத்த பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் மீது அடையாளம் தெரியாத நபர்களினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அவரது 06 வயதுடைய மகள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது வயதுடைய பாதிக்கப்பட்டவரின் மகனும் நேற்று மாலை உயிரழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அதேநேரம், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணையையும் அவர்கள் ஆரம்பித்துள்ளனர். https://athavannews.com/2025/1422159
  20. கல் ஓயாவில் தடரம் புரண்ட ரயில்; 5 யானைகள் உயிரிழப்பு! கல்ஓயா பகுதியில் யானைகள் கூட்டத்துடன் மீனகயா ரயில் மோதி ஏற்பட்ட விபத்தினால் மட்டக்களப்பு மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் இன்று (20) அதிகாகாலை யானைக் கூட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் பரிதாபகரமாக ஐந்து யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக மட்டக்களப்பு மார்க்கத்தினூடான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி இயக்கப்படவிருந்த புலத்திசை ரயில் சேவையையயும் இரத்து செய்வதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், தடம் புரண்ட ரயில் என்ஜினை மீண்டும் தண்டவாளத்தில் நிமிர்த்தி வைப்பதற்கான முயற்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளாகவும் குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2025/1422162
  21. தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகர் செல்லையா பொன்னுச்சாமி காலமானார்! பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி என அழைக்கப்படும் செல்லையா பொன்னுச்சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார். அன்னாரது புகழுடல் நாளை மாலை 04 மணிக்கு யாழ்ப்பாணம், நல்லூர் செட்டித்தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை இறுதி கிரியைகள் இடம்பெற்று, காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையில் அஞ்சலி உரைகள் நிகழ்வுகள் இடம்பெற்று, தகன கிரியைக்காக வேலணை சாட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என அன்னாரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1422193

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.