Everything posted by தமிழ் சிறி
-
வெளிநாட்டில் கைதான இலங்கையின் போதைப்பொருள் வியாபாரி நாடு கடத்தல்!
வெளிநாட்டில் கைதான இலங்கையின் போதைப்பொருள் வியாபாரி நாடு கடத்தல்!வெளிநாடு ஒன்றில் தலைமறைவாக இருந்த போது கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரும், அவரது மனைவியும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இன்று (16) காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் பல துப்பாக்கிச் சூடு முயற்சிகள், துப்பாக்கிகளை வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்தவர் ஆவார். சந்தேகநபர் வெளிநாட்டில் இருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டதையடுத்து, இலங்கை பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதுடன், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். புஷ்பராஜ் விக்னேஸ்வரம் என்ற 30 வயதுடைய நபரும் அவரது 25 வயது மனைவியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.இவர்கள் இன்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். Athavan Newsவெளிநாட்டில் கைதான இலங்கையின் போதைப்பொருள் வியாபாரி நாட...வெளிநாடு ஒன்றில் தலைமறைவாக இருந்த போது கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரும், அவரது மனைவியும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். குறித்த சந...
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இப்போ Laptop´ல் இருந்து (Tamil-English) நீங்கள் கூறிய முறைப்படி, தமிழில் தட்டச்சு செய்து பதியக் கூடியதாக உள்ளது. நன்றி மோகன் அண்ணா. 👍
-
மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!சட்டவிரோதமாக குடியேறிய 116 இந்தியர்களை ஏற்றிச் சென்ற மற்றொரு அமெரிக்க இராணுவ விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் சனிக்கிழமை (15) இரவு தரையிறங்கியது. சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் இரண்டாவது தொகுதி இதுவாகும். சி-17 விமானம் அமிர்தசரஸில் இரவு 11.35 மணியளவில் எதிர்பார்த்த நேரத்திற்கு 90 நிமிடங்கள் தாமதமாக தரையிறங்கியது என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. குடியேற்றம், சரிபார்ப்பு மற்றும் பின்னணி சரிபார்ப்பு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர், நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோர் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர். 116 நாடுகடத்தப்பட்டவர்களின் பட்டியலின்படி, அவர்களில் 60 க்கும் மேற்பட்டவர்கள் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்டவர்கள் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள். ஏனையவர்கள் குஜராத், உத்தரபிரதேசம், கோவா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். நாடு கடத்தப்பட்ட 157 இந்தியர்களுடன் மூன்றாவது விமானம் ஞாயிற்றுக்கிழமை (16) அமிர்தசரஸில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் வசிக்கும் மேலும் 487 சட்டவிரோத இந்திய குடியேற்றவாசிகளை அமெரிக்க அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்த ஒரு நாள் கழித்து இந்த நாடு கடத்தல் வந்துள்ளது. பெப்ரவரி 5 ஆம் தேதி, 104 சட்டவிரோத இந்தியக் குடியேற்றங்களுடன் அமெரிக்க விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது. அவர்களில் தலா 33 பேர் ஹரியானா மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், 30 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் ஆவர். https://athavannews.com/2025/1421599
-
உக்ரேன் போர்; சவுதி அரேபியாவில் அமெரிக்கா, ரஷ்யா அதிகாரிகள் சந்திப்பு!
உக்ரேன் போர்; சவுதி அரேபியாவில் அமெரிக்கா, ரஷ்யா அதிகாரிகள் சந்திப்பு!உக்ரேன் – மொஸ்கோவுக்கு இடையிலான சுமார் மூன்றாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகள் எதிர்வரும் நாட்களில் சவுதி அரேபியாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் சனிக்கிழமை (15) தெரிவித்தனர். அதன்படி, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் மற்றும் வெள்ளை மாளிகையின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோர் சவுதி அரேபியாவுக்கு எதிர்வரும் நாட்களில் பயணம் மேற்கொள்வார்கள் என்று அமெரிக்க பிரதிநிதி மைக்கேல் மெக்கால் ரொய்ட்டர்ஸ் சேவையிடம் உறுதிபடுத்தியுள்ளார். எனினும், அவர்கள் ரஷ்யாவிலிருந்து யாரை சந்திப்பார்கள் என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை. எவ்வாறெனினும், கடந்த வெள்ளிக்கிழமை ஜேர்மனியில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸை சந்தித்த உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தைக்கு உக்ரேன் அழைக்கப்படவில்லை என்றும், மூலோபாய பங்காளிகளுடன் கலந்தாலோசிப்பதற்கு முன்பு ரஷ்யாவுடன் கிய்வ் பேச்சுவார்த்தையில் ஈடுபடாது என்றும் கூறினார். கடந்த ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற ட்ரம்ப், உக்ரேன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதாக பலமுறை சபதம் செய்தார். அவர் புட்ன் மற்றும் ஜெலென்ஸ்கிக்கு புதன்கிழமை தனித்தனியாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு உரையாடினார். இதனிடையே தற்சமயம் ரஷ்யா உக்ரேனின் ஐந்தில் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் பல மாதங்களாக கிழக்கில் மெதுவாக முன்னேறி வருகிறது. அதே நேரத்தில் உக்ரேனின் சிறிய இராணுவம் மனிதவள பற்றாக்குறையுடன் போராடுகிறது, மேலும் மேற்கு ரஷ்யாவில் ஒரு பகுதியை வைத்திருக்க முயற்சிக்கிறது. இந்த நிலையில், எந்தவொரு சமாதான ஒப்பந்தத்தின் கீழும் உக்ரேனின் பிரதேசத்தை விட்டுக்கொடுக்கவும் நிரந்தரமாக நடுநிலை வகிக்கவும் ரஷ்யா கோரியுள்ளது. கைப்பற்றப்பட்ட நிலத்தில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும் என்று உக்ரேன் கோருகிறது, மேலும் மாஸ்கோவின் தாக்குதலைத் தடுக்க நேட்டோ உறுப்பினர் அல்லது அதற்கு சமமான பாதுகாப்பு உத்தரவாதத்தை விரும்புகிறது. போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவும் ஐரோப்பாவும் உக்ரேனுக்கு பல பில்லியன் டொலர்களை இராணுவ உதவியாக வழங்கியுள்ளன. Athavan Newsஉக்ரேன் போர்; சவுதி அரேபியாவில் அமெரிக்கா, ரஷ்யா அதிகாரிக...உக்ரேன் - மொஸ்கோவுக்கு இடையிலான சுமார் மூன்றாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகள் எதிர்வரும் நாட்களில் சவுதி அரேபியாவில் ச...
-
தெற்கு ஆஸ்திரியாவில் கத்துக் குத்து தாக்குதல்.
தெற்கு ஆஸ்திரியாவில் கத்துக் குத்து தாக்குதல்.தெற்கு ஆஸ்திரியாவில் சனிக்கிழமையன்று (15) ஒரு சிரிய புகலிடக் கோரிக்கையாளர் மேற்கொண்ட கத்திக் குத்துத் தாக்குதலில் 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.இந்த சம்பத்தில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர். பாதிக்கப்பட்டவர்களில் இருவர் பலத்த காயம் அடைந்தனர், மற்ற இருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக வில்லாச் நகரில் உள்ள பொலிஸார் அந்நாட்டின் தேசிய செய்தித்தாளான க்ளீன் ஜெய்டுங்கிடம் உறுதிபடுத்தியுள்ளனர். அந் நாட்டு நேரப்படி சனிக்கிழமை மாலை 4 மணியளவில் நடந்த இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து 23 வயதுடைய சிரிய இளைஞனை பொலிசார் விரைவாகக் கைது செய்தனர். இந்த நகரம் இத்தாலியுடனான ஆஸ்திரியாவின் எல்லையிலிருந்து 20 மைல் தொலைவிலும், ஸ்லோவேனியாவுடனான அதன் எல்லையிலிருந்து 15 மைல்களுக்கும் குறைவான தொலைவிலும் உள்ளது. வில்லாச் சுமார் 62,000 மக்களைக் கொண்டுள்ளது, இது நாட்டின் ஏழாவது பெரிய நகரமாக உள்ளது. சனிக்கிழமையன்று நடந்த தாக்குதல் தற்செயலானதாகத் தோன்றியது என்பு பொலிஸார் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கும் தாக்கியவருக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர்களில் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1421615
-
கருத்தடை மாத்திரைகள் அதிகம் எடுத்துக்கொண்டால் அபாயம்; ஆய்வின் முடிவில் வெளியான அதிர்ச்சி
இனிமேல்... கருத்தடை மாத்திரை பாவிக்காமல், பலூன் 🎈 பாவியுங்கள். 😜
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தமிழில் தட்டச்சு செய்வது பற்றி சிறு திருத்தம்.எனக்கு... iPad மூலம் நேரடியாக தமிழில் எழுதக் கூடியதாக உள்ளது. Laptop´ல் இருந்து தமிழில் நேரடியாக எழுத முடியாது உள்ளது. அதனால்... முன்பு போல் கூகிளில் எழுதி, இங்கு வந்து பதிகின்றேன்.
-
அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்; வட்டுக்கோட்டையில் பிரதமர் உறுதி
எல்லாம் வாய்ப் பேச்சில்தான் உள்ளது. இப்பவே… அதற்குரிய ஆயத்த வேலைகளில் இறங்கினால் தானே…. அடுத்த ஓரிரு வருடங்களில் புதிய அரடியலமைப்பை உருவாக்க முடியும். தேர்தல் வாக்குறுதியில் நீங்கள் குறிப்பிட்டபடி, முதலில்…. சர்வ அதிகாரம் பொருந்திய ஜனாதிபதி முறைமையை ஒழியுங்கள்.
-
தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்
இலங்கையிலேயே… கிழமைக்கு ஒரு மத்திய குழுக் கூட்டம் வைக்கிறது… தமிழரசு கட்சிதான். 😂 ஆனால்… ஒரு முடிவும் எடுக்காமல்…. வடையும், வாய்ப்பனும் சாப்பிட்டு விட்டு…. ஆளுக்கு ஒரு பக்கமாக கலைந்து போய் விடுவார்கள். 🤣
-
'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு
எப்பிடி இருந்த நான்…. 😂இப்பிடி ஆயிட்டேன். 🤣-கோமாளி ஜெலென்ஸ்கி.- 😆
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஒவ்வொரு பதிலின் கீழும்…. 👍🏽 Helpful என்று ஒரு தெரிவு உள்ளமை மிக சிறப்பு. கடந்த பல வருடங்களாக…. தலையங்கத்தை தடித்த எழுத்தில், எழுத முடியாமல் இருந்தது. இம்முறை அந்தக் குறை நிவர்த்தி செய்யப் பட்டுளமை வரவேற்கத் தக்கது.💪 புதிய களத்தை பார்த்தவுடன்… பழைய களத்தின் அழகு, இதில் இல்லாமல் உள்ளது என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். காலப் போக்கில் மெருகூட்டப் படும் என எதிர் பார்க்கின்றேன். 😻பல சிரமங்களுக்கு மத்தியில், மிகுந்த பிரயாசைப் பட்டு… களத்தை புதுப்பித்தமைக்கு மிக்க நன்றி @மோகன் அண்ணா. 🙏 🥰
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Testing… 1… 2…. 3…. நான் முன்பு கூகிளில் எழுதி இங்கு கொண்டு வந்து வெட்டி ஒட்டுகின்றனான். இப்போ கீழே உள்ள பெட்டியில் இருந்து நேரடியாகவே எழுதக் கூடியதாக உள்ளது. தலையங்கம்.நிறமூட்டல்.வணக்கம். நிறைய சிமைலி உள்ளது. 😆🙂😁🦣🫶 சரிவு எழுத்து. இங்கு -5 பாகை குளிர். இப்போ 6 மணி. மொத்தத்தில் தற்போது உள்ள பதில் எழுதும் பெட்டி மிக நன்றாக உள்ளது. 👍
-
நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்து!
இன்று காலை யாழ். இந்துக் கல்லூரியில், பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வில் இவரும் கலந்து கொண்டவர். (படத்தில்... தாடியுடனும் , கண்ணாடியுடனும் இருப்பவர்.)
-
நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்து!
நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்து! யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க இளங்குமரன் பயணித்த கார் சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் பொழுது முன்னால் சென்று கொண்டிருந்த சிறிய லொறி ஒன்று சாவகச்சேரி நோக்கி திருப்பிய வேளை பின்னால் வந்த நாடாளுமன்ற உறுப்பினரின் கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது உதவியாளர், சாரதி மூவரும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421574
-
சிரிக்கலாம் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
- "காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
- "காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
- இரசித்த.... புகைப்படங்கள்.
வார்த்தைகளால் புரிய வைக்க முடியாததை, இந்த வாழ்க்கை கற்றுக் கொடுக்கிறது..!!!- சிரிக்கலாம் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிரிக்கலாம் வாங்க