Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ஒரு சுற்றுக்கான பயணச் சீட்டு எனும் போது, போகவும், வரவுமான இரட்டை வழிப் பயணத்துகுரிய பயணச்சீட்டு 35,000 ரூபாய் என கருதுகின்றேன்.
  2. சிறைச்சாலையினுள் பணப் பரிமாற்றம் இராது என நினைக்கின்றேன். பொருளுக்கு உரிய பணம்… கைதிகளின் உறவினர், நண்பர்கள் அல்லது அவர்களின் எஜமானர்களால் சிறைக்கு வெளியே கொடுத்து விடுவார்கள்.
  3. வித்தியாசமான சமையல் கவிதையுடன், புத்தாண்டு வாழ்த்துக்கள். 😁
  4. நம்பிக்கைதானே வாழ்க்கை. நல்லதே நடக்கும் என்று, புது வருடத்தை வரவேற்போம்.
  5. இவர்கள் வீட்டு வேலை என்று குறிப்பிடுவது…. வீடு கூட்டுதல், தூசி தட்டுதல், பாத்திரம் கழுவுதல் போன்றவை என நினைக்கின்றேன். “எமது உழைப்பின் பெறுமதியை, நாமே நிர்ணயிப்போம்” என்ற கோசம் நன்றாகத்தான் உள்ளது. இவர்கள் குறிப்பிடும் தொகையை…. கொடுப்பதற்கு பெரிய தொழிலதிபராக இருக்க வேண்டும் போலுள்ளதே. 50,000 ரூபா மாதச் சம்பளத்தை ஓரளவு கல்வி கற்ற அரச ஊழியர்களுக்கே கொடுப்பது இல்லை என நினைக்கின்றேன். மற்றும்படி… வீட்டு வேலையாளர்களுக்கு தகுந்த ஊதியம் கொடுக்கப் பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
  6. இடுப்பை மறைச்சு சீலை கட்டுங்க தோழி. பொறுக்கி பசங்க உலவும் பகுதி. 😂 அதெல்லாம் தெரிஞ்சே தான் கட்டுறேன். நீ மூடிட்டு கிளம்பு. 🤣
  7. நைட்டு 12 மணிக்குள்ள ரெடி பண்ணி குடுத்துருயா...
  8. சந்தோசமான விசயம். அழிவை நோக்கிச் செல்லும் தமிழ் சினிமாவிற்கு வாழ்த்துக்கள். "கட் அவுட்டுக்கு" பால் ஊத்துறவனும், மண் சோறு சாப்பிடுறவனும், நடிகர் வீட்டு வாசலில் தவம் கிடக்கிறவனும், சினிமாவில் தனது அரசியல் தலைவனை தேடுகின்றவனும் இனி தூக்குப் போட்டு சாவுங்க.
  9. நாங்கள் "பிளவுசிலேயே"... "ஜன்னல்" வைக்கிற ஆட்கள் கண்டியளோ.... 😂 தலிபானுக்கு அந்த யன்னலை மூட... "தில்" இருக்கா? 😂
  10. இம்முறை நடக்கும் இலங்கையின் சுதந்திரதின கொண்டாட்டத்திற்கும் சுமந்திரன் செல்வாரா? முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்து கொள்ள அனுமதிப்பார்களா? ப்ளீஸ் ரெல் மீ. 😂
  11. இலங்கைக்கான சேவையை அதிகரித்த எமிரேட்ஸ்! உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனங்களில் ஒன்றான எமிரேட்ஸ், கொழும்பு மற்றும் டுபாய் இடையே 2025 ஜனவரி 2 ஆம் திகதி முதல் கூடுதல் திட்டமிடப்பட்ட சேவையை இயக்குவதாக தெரிவித்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விமானமானது, EK654/655 ஆகச் செயற்படுவதுடன், அதன் இருக்கை கொள்ளளவை 30 வீதத்தால் அதிகரிக்கிறது. கூடுதல் விமானத்தில் 360 பயணிகளுக்கு இடமளிக்க முடியும். மேலும், 2025 இல் சுற்றுலாப் பயணிகளின் வருகையை கணிசமாக அதிகரிக்கும் இலங்கையின் திட்டங்களுக்கும் உதவியாக அமைகிறது. மேலதிக சேவை 2025 மார்ச் 31 வரை வாரத்தில் ஆறு முறை செயல்படும். EK654 விமானம் டுபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (DXB) உள்ளூர் நேரப்படி காலை 10:05 மணிக்கு (புதன் கிழமைகள் தவிர) புறப்பட்டு மாலை 4.00 மணிக்கு கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடையும். EK655 விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிந்து இரவு 10 மணிக்குப் புறப்பட்டு, டுபாய் விமான நிலையத்தை அடுத்த நாள் அதிகாலை 1.05 மணிக்கு சென்றடையும். 2025 ஏப்ரல் 1 முதல், புதன்கிழமைகளில் ஏழாவது வாராந்திர விமானம் சேவையில் மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்படும். எமிரேட்ஸ் தற்போது கொழும்பு மற்றும் டுபாய் இடையே இரண்டு நேரடி சேவைகளையும், மாலே வழியாக மூன்றாவது தினசரி சேவையையும் நடத்துகிறது. https://athavannews.com/2024/1414668
  12. 2025; தீர்க்கத்தரிசிகளின் ஒரே மாதிரியான திகிலூட்டும் கணிப்புகள். உலகின் புகழ்பெற்ற தீர்க்கத்தரிசிகளான பாபா வங்கா மற்றும் மைக்கேல் டி நோஸ்திரதாம் ஆகியோர் 2025 ஆம் ஆண்டிற்கான பெரும்பாலும் ஒரே மாதிரியான கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். துல்லியமான கணிப்புகளுக்கு பெயர் பெற்ற இந்த புகழ்பெற்ற தீர்க்கதரிசிகள், மனிதர்களுடன் அன்னிய தொடர்பு, விளாடிமிர் புட்டின் மீதான கொலை முயற்சி, பயங்கரவாத தாக்குதல்கள் உட்பட வியக்கத்தக்க வகையில் ஒரே மாதிரியான தீர்க்கதரிசனங்களைச 2025 ஆம் ஆண்டுக்கு கணித்துள்ளனர். இவர்கள் 470 வருட இடைவெளியில் பிறந்திருந்தாலும், நவீன வரலாற்றில் இதுவரை நடக்காத சில பெரிய நிகழ்வுகளை இருவரும் கணித்துள்ளனர். பாபா வங்கா (Baba Vanga) பாபா வங்கா ஒரு பல்கேரிய தீர்க்கத்தரிசி ஆவார், அவர் 1996 இல் இறந்தார். அவர் பல்கேரியாவின் நோஸ்திரதாம் என்றும் அழைக்கப்படுகிறார். பாபா வாங்காவின் கணிப்புகள் 85 சதவிகிதம் துல்லியமாக இருப்பதாக நம்பப்படுகிறது. 2004 இல் இந்தோனேசியா சுனாமி, சோவியத் யூனியனின் வீழ்ச்சி, இளவரசி டயானாவின் மரணம் மற்றும் செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்கள் போன்ற சில வரலாற்றுத் தருணங்களை அவர் முன்னறிவித்தார். அது தவிர, 2022 இல் அவுஸ்திரேலியா மற்றும் ஆசியா வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்று அவர் கணித்தார். அந்த ஆண்டு ஜூலைக்கு முன்பு அவுஸ்திரேலியா மூன்று முறை வெள்ளத்தில் மூழ்கியது. வடக்கு அரைக்கோளத்தில், முக்கிய நகரங்கள் கடுமையான வறட்சியை சந்திக்கும் என்றார். இது இங்கிலாந்து, இத்தாலி மற்றும் போர்ச்சுகலில் காணப்பட்டது. இந்த நிலையில், பாபா வாங்காவின் கூற்றுப்படி 2025 ஆம் ஆண்டு மோசமானதாக இருக்கிறது. மனிதகுலத்தின் வீழ்ச்சி 2025 இல் தொடங்கும் என்று அவர் கணித்துள்ளார். ஐரோப்பாவில் ஒரு பெரிய போர் வெடிக்கும் என்று அவர் கூறினார். போர் நமது மக்கள்தொகையில் கணிசமான பகுதியை அழிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார். அதேநேரம், ரஷ்யா உயிர்வாழ்வது மட்டுமல்லாமல் உலகில் ஆதிக்கம் செலுத்தும் என்றும் அவர் கணித்தார். எனினும், 2023 இல் உலகம் அழிந்துவிடும் என்றும் அவர் கூறியதாகக் கூறப்படுகிறது. அணு உயிரி ஆயுதங்களும் சூரிய புயலும் அதற்குக் காரணமாக அமைந்திருந்தது. 2025 இல் பாபா வாங்காவின் மற்றொரு கணிப்பு என்னவென்றால், பூமி வேற்று கிரக உயிரினங்களை சந்திக்கும். டெலிபதி உண்மையாக மாறக்கூடும். அது தவிர, விஞ்ஞானிகள் ஆய்வகத்தில் மனித உறுப்பை வெற்றிகரமாக வளர்க்க முடியும் என்றும் அவர் கூறினார். மேலும், 2028 ஆம் ஆண்டில் வெள்ளி கிரகம் மீதான விண்வெளி ஆய்வு தொடங்கும், அதனால் உலகம் ஒரு புதிய வாழ்விடத்தைக் கண்டுபிடிக்கும் என்றும் அவர் கூறினார். இது தவிர பாபா வாங்காவின் தீர்க்கதரிசனங்கள், அமெரிக்க மேற்கு கடற்கரையில் நிலநடுக்கங்கள் மற்றும் செயலற்ற எரிமலைகள் வெடிப்பது உட்பட தொடர்ச்சியான பேரழிவு இயற்கை பேரழிவுகளையும் முன்னறிவிக்கிறது. மைக்கேல் டி நோஸ்திரதாம் (Michel de Nostredame) 450 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த போதிலும், நோஸ்ட்ராடாமஸ் தொடர்ந்து தீர்க்கதரிசனமான விடயங்களை கூறியுள்ளார். 1566 இல் அவர் இறப்பதற்கு முன், அவர் 94 கவிதை அறிக்கைகளின் தொகுப்பை எழுதினார் மற்றும் 1555 ஆம் ஆண்டு தனது புத்தகமான Les Prophéties ஐ வெளியிட்டார். அவர், தனது நண்பரும் முன்னாள் மன்னருமான இரண்டாம் ஹென்றி 40 வயதில் ‘இளம் சிங்கத்தின்’ கைகளில் இறந்துவிடுவார் என்று துல்லியமாக கணித்தார். அது மட்டுமல்லாமல், 1930 ஆம் ஆண்டு ஹிட்லரின் அதிகாரத்திற்கு எழுச்சி மற்றும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி படுகொலை செய்யப்படுவதையும் அவர் கணித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் 2025 ஆம் ஆண்டிற்கான இரண்டு கணிப்புகளையும் வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு ஐரோப்பாவில் ஒரு பெரிய போர் வெடிக்க கூடும் என்றும், பிரித்தானியா மோதலால் அழிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 2025 இல் அவர் கடந்த காலத்திலிருந்து ஒரு பெரிய கொள்ளைநோய் திரும்பும் என்றும் கணித்துள்ளார். ஸ்தாபிக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளின் செல்வாக்கு 2025 ஆம் ஆண்டு குறையும்’ என்றும், ‘புதிய உலக வல்லரசுகளின் எழுச்சியுடன்’ படைவீரர்கள் போர்க்களத்தால் ‘சோர்வடைந்து’ போவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1414659
  13. புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு! அண்மையில் நிறைவடைந்த தரம் 05க்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வல்லுனர்கள் முன்வைத்த மூன்று பரிந்துரைகளில், பொருத்தமான பரிந்துரையை தேர்வு செய்து, அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வினாத்தாள்கள் வெளியானதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களான, ஐ.ஜி.எஸ். பிரேமதிலக மூன்று மில்லியன் ரூபாவையும், சமிந்த குமார இளங்கசிங்க இரண்டு மில்லியன் ரூபாவையும் அரசாங்கத்திற்கு இழப்பீடாக செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தாக்கல் செய்த நான்கு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்த யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1414646
  14. இலங்கையில் இரண்டு உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்! இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் மற்றும் இலங்கை அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. தப்போது அதன் கட்டுப்பாடுகள் நிர்வாகிகளிடமிருந்து முற்றிலும் நழுவிவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனை விரைவில் மீட்டெடுக்க தேவையான பணிகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் விசேட அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது https://athavannews.com/2024/1414590
  15. சீமான் கைது! சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை. இதுகுறித்து பேசிய சீமான், அறவழியில் போராட கூட தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என கூறினார். இதனையடுத்து வள்ளுவர்கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பொலிஸார் கைது செய்தனர். முன்னதாக, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியினரை பொலிஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1414658
  16. திருப்பதி காணிக்கை பணத்தில் 100 கோடி ரூபா மோசடி. திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணத்தில் சுமார் நூறு கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில முதலமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காணிக்கையாக வழங்கப்பட்ட பல நாடுகளின் நாணயங்கள் இங்கிருந்து திருடப்பட்டுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு மேற்பார்வையாளராக பணியாற்றிய ஒருவர், தனது உள்ளாடைக்குள் மறைத்து உண்டியலிலிருந்த பணங்களை திருடியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் இது அவதானிக்கப்பட்டு வந்துள்ளது. சுமார் நூறு கோடி வரை இங்கு திருட்டு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய், தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.சி ராம்கோபால் ரெட்டி உள்ளிட்ட பலரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1414632
  17. கடந்த மூன்று நான்கு வருடங்களில், காங்கேசன்துறை - நாகை படகுச் சேவை 100 தடவைக்கு மேல், நிற்பாட்டி நிற்பாட்டி... மீள ஆரம்பித்து இருப்பார்கள். இதற்கு ஒரு விழா எடுக்கத்தான் வேண்டும்.
  18. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்... சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கும் போது, சஜித் உள்ள மேடையில் வைத்து, கருமாந்திரம் சாரி... "சுமந்திரம்" என்ற ஒரு பத்திரிகையை வெளியிட்டது நினைவு இருக்கின்றதா? அதற்குப் பிறகு அந்தப் பத்திரிகை ஏன் தொடர்ந்து வெளிவரவில்லை என்று யாருக்காவது தெரியுமா? மூஞ்சையின்ரை திறத்திலை... பத்திரிகை வெளியிட்டு "பவர்" காட்ட வெளிக்கிட்டவர், சனம் உசாராகி... சாணியால் அடித்துவிட்டு போய் விட்டார்கள். 😂 "சுமந்திரம் எனும் மந்திரம்" என்று சொல்லி...... சுமந்திரனை பப்பாவில் ஏற்றி, பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் இல்லாமல் செய்ததுதான்.... சுமந்திரனின் அல்லக்கைகள் செய்த ஒரு நல்ல வேலை. 👍 😂
  19. சுத்துமாத்து சுமந்திரன் தமிழரசு கட்சியில் இருக்கு மட்டும், தமிழரசு கட்சிக்கு... ஏழரை சனியன் தான். 😲 சுத்துமாத்து சுமந்திரன் தேர்தலில் படு தோல்வி அடைந்தும், திருந்துகின்ற நோக்கம் இல்லாமல் வெட்கம் இல்லாமல் திரியுது. 😂 வர இருக்கும், உள்ளூராட்சி தேர்தலிலும்... தமிழரசு கட்சிக்கு மரண அடி வாங்கிக் குடுக்கத்தான்... சுத்துமாத்து சுமந்திரன் ஆயத்தம் செய்து கொண்டு இருக்கிறார். 🔴

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.