Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் ரணில் விக்ரமசிங்க!
  2. சுற்றுலா வலயங்களில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக மாற்றுவதற்கு முதலீடு செய்யுங்கள் – ஜனாதிபதி. சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் துறை தரப்பினர்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 2026 ஆம் ஆண்டில் சுற்றுலாத் துறையில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைய வெறும் ஊக்குவிப்புத் திட்டங்கள் மட்டும் போதாது என்றும், அரச மற்றும் தனியார் துறைகளை ஒருங்கிணைக்கும் புதிய மூலோபாயத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நுவரெலியா, அனுராதபுரம், மஹியங்கனை மற்றும் கதிர்காமம் போன்ற பகுதிகளில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு, வசதியான சுற்றுலா விடுதிகளாக அபிவிருத்தி செய்வதில் முதலீடு செய்யுமாறு வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, இது தொடர்பாக விரைவில் முறையான திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். சுற்றுலாத் துறையில் தற்போது நிலவும் குறைபாடுகள் மற்றும் சவால்கள் குறித்து வர்த்தகர்களினால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்தார். நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரஸல் அப்பொன்சு, இலங்கை சுற்றுலா அபிவிருத்திஅதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம், ஏற்றுமதி அபிவிருத்தி சபைத் தலைவர் மங்கள விஜேசிங்க மற்றும் தனியார் துறை வர்த்தகர்கள் மற்றும் தரப்பினர்கள் குழு இந்த சந்திப்பில் பங்கேற்றனர். https://athavannews.com/2025/1445262
  3. ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட உக்ரேனிய கடற்படை கப்பல்! உக்ரேன் கடற்படையால் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இயக்கப்பட்ட மிகப்பெரிய கப்பலான சிம்ஃபெரோபோல் (Simferopol), கடற்படையின் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வியாழக்கிழமை (28) அறிவித்தது. உளவுத்துறை நடவடிக்கைக்காக வடிவமைக்கப்பட்ட குறித்த கப்பல், டானூப் நதியில் வைத்து தாக்குதலுக்கு இலக்கானது. இதன் ஒரு பகுதி உக்ரைனின் ஒடெசா பிராந்தியத்தில் அமைந்துள்ளது என்று பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவித்ததாக ஆர்டி தெரிவித்துள்ளது. உக்ரேனிய கடற்படைக் கப்பலை அழிக்க கடல் ஆளில்லா விமானம் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும் என்று ரஷ்யாவின் TASS செய்தி அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. கப்பல் தாக்கப்பட்டதை உக்ரேனிய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்தத் தாக்குதலில் ஒரு பணியாளர் கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று உக்ரேனிய கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி கியேவ் இன்டிபென்டன்ட்செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. ரஷ்யா, அண்மைய மாதங்களில் உக்ரேன் மீதான மோதலில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் பிற ஆளில்லா அமைப்புகளின் உற்பத்தியை துரிதப்படுத்த நகர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445160
  4. ட்ரம்பின் கட்டண வரிகள் சட்ட விரோதமானவை – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பானது அமெரிக்க ஜனாதிபதியின் வெளிவிவகாரக் கொள்கை நிகழ்ச்சி நிரலை மாற்றக்கூடிய சாத்தியமான சட்ட மோதலாக தற்சமயம் மாறியுள்ளது. இந்தத் தீர்ப்பு, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளின் மீது விதிக்கப்பட்ட ட்ரம்பின் “பரஸ்பர” வரிகளையும், சீனா, மெக்சிகோ மற்றும் கனடா மீது விதிக்கப்பட்ட பிற வரிகளையும் பாதிக்கிறது. குறித்த தீர்ப்பில், அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் வரிகள் அனுமதிக்கப்பட்டன என்ற ட்ரம்பின் வாதத்தை அமெரிக்க ஃபெடரல் சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததுடன், அவை “சட்டத்திற்கு முரணானவை என்பதால் செல்லாது” என்றும் கூறியது. எனினும், இந்த வழக்கை மேன்முறையீடு செய்ய உயர் நீதிமன்றத்தை அணுகுவதற்கு ட்ரம்ப் நிர்வாகத்திற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்தத் தீர்ப்பு எதிர்வரும் ஒக்டோபர் 14 வரை நடைமுறைக்கு வராது. ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையின் ஒரு தூணாக பல நாடுகளுக்கான வரிகளை உயர்த்தியுள்ளார். அவற்றைப் பயன்படுத்தி அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தவும், அமெரிக்காவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யும் பணிகளையும் ஆரம்பித்துள்ளார். இந்த வரிகள் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு வர்த்தக பங்காளிகளிடமிருந்து பொருளாதார சலுகைகளைப் பெறுவதற்கு வாய்ப்பளித்துள்ளன, ஆனால் நிதிச் சந்தைகளில் ஏற்ற இறக்கத்தையும் அதிகரித்துள்ளன. https://athavannews.com/2025/1445216
  5. இப்ப நல்ல ஆரோக்கியமாக இருக்கின்ற கோத்தாவுக்கும், மைத்திரிக்கும்… இதயத்தில் அடைப்பு, இரத்த அழுத்தம், கொலஸ்ரோல், கிட்னியில் கல்லு, மூத்திரம் போவதில் சிக்கல் என்று வியாதிகள் வர ஆரம்பிக்குமே. 😂 🤣
  6. குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடுவது தொடர்பில் முக்கிய அறிவிப்பு! 50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்து பாடசாலைகளையும் ஒரே தடவையில் மூடுவதற்கு கல்வி அமைச்சு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” ஒவ்வொரு கல்வி வலயத்திலும் உள்ள பாடசாலைகளை வலுப்படுத்துவதற்கான ஒரு திட்டம் ஏற்கனவே நடந்து வருகின்றது. ஒரு குறிப்பிட்ட பாடசாலைகளைப் பராமரிக்கும் போது மட்டுமே மூடுவதற்கான பரிசீலனை மேற்கொள்ளப்படும். நாடு முழுவதும் உள்ள 10,194 பாடசாலைகளில் மொத்தம் 1,486 பாடசாலைகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர். மேலும் வட மாகாணத்தில் இதுபோன்ற பாடசாலைகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. குறிப்பாக வடமாகாணத்தில் 275 பாடசாலைகளும், அதைத் தொடர்ந்து மத்திய மாகாணத்திலும் 240 பாடசாலைகளும், சப்ரகமுவ மாகாணத்தில் 230 பாடசாலைகளும், ஊவா மாகாணத்தில் 158 பாடசாலைகளும், கிழக்கு மாகாணத்தில் 141 பாடசாலைகளும், வடமேற்கு மாகாணத்தில் 133 பாடசாலைகளும், தெற்கு மாகாணத்தில்125 பாடசாலைகளும், வடமத்திய மாகாணத்தில் 111 பாடசாலைகளும், மேற்கு மாகாணத்தில் 73 பாடசாலைகளும் காணப்படுகின்றன” இவ்வாறு தெரிவித்துள்ளார். குறைந்த மாணவர் சேர்க்கை உள்ள பாடசாலைகளை மூடிவிட்டு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கிடையில், இலங்கை அதிபர்கள் சங்கம் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மாணவர்களை அருகிலுள்ள பாடசாலைகளுக்கு மாற்றுவது நகர்ப்புற வகுப்பறைகளில் நெரிசலை அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445085
  7. 2025 ஆசியக் கிண்ணத்துக்கான இலங்க‍ை அணி அறிவிப்பு! அடுத்த ஆண்டு ஐ.சி.சி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தை இந்தியாவுடன் இணைந்து நடத்தத் தயாராகி வரும் இலங்கை, 2025 ஆசியக் கிண்ணத்துக்கான தனது அணியை அறிவித்துள்ளது. 16 பேர் கொண்ட இந்த அணியினை சரித் அசலங்க வழிநடத்துகிறார். இதில் நட்சத்திர சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவும் இடம்பெற்றுள்ளார். பங்களாதேஷுக்கு எதிரான உள்நாட்டு தொடரின் போது சுழற்பந்து வீச்சாளரும், துடுப்பாட்ட வீரருமான ஹசரங்க காயமடைந்தார். இதனால், இன்று (29) ஆரம்பமாகும் சிம்பாப்வே சுற்றுப்பயணத்திலும் அவர் இடம்பெறவில்லை. ஆனால், அடுத்த மாதம் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் ஆரம்பகவுள்ள ஆசியக் கிண்ணத்துக்கு அவர் தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் இலங்கை அணி, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகளுடன் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஹசரங்காவைத் தவிர, ஆசியக் கிண்ணத்துக்கான இலங்கை அணியில் சாமிக கருணாரத்ன, முன்னாள் தலைவர் தசுன் ஷனக உள்ளிட்ட பல வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர்களும் உள்ளனர். இதற்கிடையில், மஹீஷ் தீக்ஷன மற்றும் துனித் வெல்லலகே ஆகியோருடன் சேர்ந்து, ஹசரங்க இந்த போட்டிக்கான அவர்களின் முதன்மையான சுழற்பந்து வீச்சாளராக இருப்பார். போட்டிகள் செப்டெம்பர் 09 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை அணி செப்டம்பர் 13 ஆம் திகதி பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டத்துடன் தனது 2025 ஆசியக் கிண்ணத் தொடரை ஆரம்பிக்கும். ஐசிசி ஆசியக் கிண்ண அரங்கில் இரண்டாவது வெற்றிகரமான அணியாக இலங்கை உள்ளது. அவர்கள் ஆறு முறை கிண்ணத்தை வென்றுள்ளனர். இறுதியாக அவர்கள் தசுன் ஷானக தலைமையில் 2022 ஆம் ஆண்டில் வெற்றி கொண்டனர். இலங்கை அணி சரித் அசலங்க (தலைவர்), பத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டீஸ், குசல் ஜனித் பெரேரா, நுவனிது பெர்னாண்டோ, கமிந்து மெண்டீஸ், கமில் மிஷாரா, தசுன் ஷானக, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, சாமிக கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ, நுவான் துஷார மற்றும் மதீஷா பத்திரன. https://athavannews.com/2025/1445115
  8. சம்பந்தன், சிங்களத்துக்கு சேவை செய்து… எதிர்கட்சி தலைவராகவும் இருந்து சாகும் மட்டும்... அரச மாளிகையில் சொகுசாக வாழ்ந்து செத்துப் போனார். ஆனால் சுத்துமாத்து சுமந்திரனை…. பாராளுமன்றத்துக்குள் நுளைய விடாமல், சாணி அடி கொடுத்து வீட்டில் குந்த வைத்துள்ளார்கள். சம்பந்தனுக்கு உள்ள கெட்டித்தனம் இதுக்கு இல்லை. 😂 🤣 அந்தளவுக்கு இனி சுத்துமாத்து சுமந்திரனை நிமிர விடாமல் விழுந்த மரண அடிதான், இவர் அண்மையில் தான் தோன்றித்தனமாக அறிவித்த ஹர்த்தாலிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அது புரியாமல்… தான் ஒரு ஆள் என்று வாக்குப் பிச்சை எடுக்க, மக்கள் முன் பல்லைக் காட்டிக் கொண்டு திரியுது. 🤣 சுமந்திரன்.... இப்போ ஒர் அரசியல் அனாதை. சாயம் வெளுத்த ஓநாய். தமிழ்ப் பகுதிகளில்... இனி இவரின் சுத்துமாத்து எடுபடாது. வேணுமென்றால்... கொழும்பு, அம்பாந்தோட்டை போன்ற சிங்களவர்கள் இவருக்கு வாக்கு போடலாம். அங்கு முயற்சி செய்வது நல்லது. 🤣
  9. எரிவுக்கு… மிளகாய்த்தூள், ஆனையிறவு உப்பு ஓகே…. ✅ அது என்ன ஆமணக்கு எண்ணையின் விசேசம்? புதுசா இருக்கு. நான் இதுவரை கேள்விப்படவில்லை. 😂
  10. வட கொரிய அதிபர் கிம்மின் அதிரடி செயல்களைப் பார்த்து, பம்மிக் கொண்டு இருக்கும் மேற்கு உலகம்…. சீனா நடத்தும் 26 நாட்டு உலகப் பெருந்தலைவர்களின் இராணுவ அணிவகுப்பை பார்த்து தமது சாணக்கியம் எங்கே சறுக்கியது என திரும்பி பார்ப்பார்கள். 😂
  11. இந்த காட்டுமிராண்டி காலத்து முஸ்லீம் திருமண சட்டத்தை உடனடியாக திருத்தி, இலங்கையில் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டத்தை கொண்டு வரவேண்டும். பல பெண்களை முஸ்லீம்கள் திருமணம் செய்து….. “வத வத” பிள்ளைகளைப் பெற்று இலங்கையின் சனத்தொகையையே மாற்றி அமைத்துக் கொண்டு இருக்கும் இவர்களின் கேவலமான செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
  12. பச்சை மட்டையை…. சூடாக்காமல், ஆசனப் பக்கம் போட்டாலே… ஜென்மத்துக்கும் உந்த ஊத்தைவாளி வேலையை செய்ய மாட்டார்கள்.
  13. சுத்துமாத்து சுமந்திரனுக்கு, பத்தடுக்கு பாதுகாப்பு கொடுக்கும் சிங்கள பேரினவாதம். தமிழனுக்கு விரோதமான செயலை செய்தால்.... சிங்களம் சுத்துமாத்தை பாதுகாக்க வேண்டித்தான் வரும். இல்லை என்றால்... பச்சை பனை மட்டையால், முதுகிலை நாலு சாத்து சாத்தி.. கொழும்புக்கு பார்சல் பண்ணி விடுவான் மானமுள்ள தமிழன். 😂
  14. உக்ரேனில் இரவு நேர ரஷ்யத் தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு, 38 பேர் காயம்! ரஷ்யப் படைகள் கியேவ் மீது இரவு முழுவதும் பெரிய அளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர், 38 பேர் காயமடைந்தனர். மேலும், தாக்குதல் ஏழு மாவட்டங்களில் குடியிருப்பு மற்றும் பிற கட்டிடங்களை சேதப்படுத்தியதாக உக்ரேன் அதிகாரிகள் வியாழக்கிழமை (28) தெரிவித்தனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போரை முடிவுக்குக் கொண்டுவர மேற்கொண்ட முயற்சிகளுக்கு மத்தியில் இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது. அதேநேரம் இந்தத் தாக்குதல், இராஜதந்திரத்திற்கு ரஷ்யாவின் பதிலை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதால், அவசர சேவைகள் தீயை அணைத்து, இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, நாடு தழுவிய தாக்குதலில் ரஷ்யா ஏவிய 598 ட்ரோன்களில் 563 மற்றும் 31 ஏவுகணைகளில் 26ஐ சுட்டு வீழ்த்தியதாக உக்ரேனிய விமானப்படை தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1445044
  15. சிங்கள சம்பந்தி சுமந்திரன்... சிங்கள மக்கள் மத்தியில் வாழ்வது பெருமை என்றெல்லாம் ஆனந்தப் படுபவர், சிங்களவனுக்குத்தானே தனது விசுவாசத்தை காட்டுவார். அந்த சுத்துமாத்தை, நம்புவதற்கும், வெள்ளை அடித்து முட்டுக் கொடுப்பதற்கும்... சில அரைகுறை தற்குறிகளும் இருப்பதுதான் வேடிக்கை. 😂 🤣 தமிழர்கள், ஆபிரஹாம் சுமந்திரனை... தமிழரசு கட்சி தலைவர் தேர்தலிலும், கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும்... செருப்பால் அடிக்காத குறையாக நிராகரித்து வெளியே அனுப்பிய பின்பும்... தமிழர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வெட்கம் இல்லாமல் பிலாக்காய்ப்பால் மாதிரி.... சூடு, சொரணை, ரோசம், மானம் எதுவுமில்லாமல் ஒட்டிக் கொண்டு இருந்து குழப்பத்தை விளைவித்துக் கொண்டு இருக்கிற ஏழரை தான் இந்த சுத்துமாத்து. தமிழருக்கு பிடித்த தரித்திரம் இது. 😵
  16. வரலாற்று சிறப்புமிக்க பொலிஸ் நடவடிக்கை குறித்து பொலிஸ்மா அதிபர் பெருமிதம்! இந்தோனேசியாவில் ஐந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் ஒரே நேரத்தில் கைது செய்யப்படுவது வரலாற்றில் இதுபோன்ற ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட முதல் முறை என்று பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்வது தொடர்பாக இன்று (28) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் கூறினார். கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் தற்போது இன்டர்போலால் வெளியிடப்பட்ட சிவப்பு அறிவிப்புகளுக்கு உட்பட்டவர்கள். இலங்கை பொலிஸாரின் ஒருங்கிணைப்பு மற்றும் இன்டர்போலின் உதவியுடன் இந்தோனேசிய பொலிஸாரினால் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், இந்த நாட்டில் அரசியல் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபட்ட வரலாறு இருப்பதாகவும், தற்போது அந்த சூழல் மாறிவிட்டதாகவும், குற்றவாளிகளுக்கு அரசியல் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி வருவதாகவும் அவர் கூறினார். இந்த நாட்டில் செய்யப்படும் பல குற்றங்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் மேற்கொள்ளப்படுகின்றன. அரசியல் செல்வாக்கு இல்லாமல் அத்தகைய நபர்கள் தொடர்பாக சட்ட முடிவுகளை எடுக்க பொலிஸாருக்கு தற்போது அறிவுறுத்தல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. துபாய், ஓமன், ரஷ்யா, பெலாரஸ் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் அதிகமாக இருப்பதாகவும், அவர்கள் குறித்து விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும். இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக மாற்றுவதற்கு ஆதரவளித்த இந்தோனேசிய தூதரகத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார். https://athavannews.com/2025/1444998
  17. இந்தோனசியாவில் கைது செய்யப்பட்ட தென்னிலங்கையின் நம்பர் 1 பாதாள உலக கும்பலின் தலைவர் ஹெகல்பத்தர பத்மே மற்றும் கொமாண்டோ சாலிந்த குழுவினரும் இலங்கைக்குகொண்டு வரப்படுகின்றனர். பாதாள குற்றக் கும்பல் முக்கியஸ்தர்களான கெஹெல்பத்தர பத்மே, பெக்கோ சமன், நிலங்க, கமாண்டோ சலிந்த மற்றும் பலர் இந்தோனேசியாவில் இலங்கை பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.! Kunalan Karunagaran
  18. பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது! கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட இலங்கையின் முக்கிய குற்றக் கும்பலைச் சேர்ந்த 06 பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) மற்றும் இன்டர்போல் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் பாணந்துறை நிலங்க, பேக்கோ சமன் மற்றும் அவரது மனைவி மற்றும் மற்றொரு நபரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களின் திட்டங்கள் மற்றும் சர்வதேச தொடர்புகள் குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1444938
  19. வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன மீது ஒழுக்காற்று நடவடிக்கை! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை தொடர்பாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.