Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. நாமல்.... இந்தப் பதட்டம் தான், உங்களின் பொய்களை, வெளிக் கொணர வைக்கிறது, நிர்மலா கண்ணங்கர் மேற்கொண்ட விரிவான விசாரணையில் இருந்து இங்கிலாந்து மற்றும் இலங்கையில் இருந்து புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன, அவை நாமல் ராஜபக்ச வெறுமனே சட்டக் கல்லூரியில் சேர்க்கைக்குத் தகுதி பெறவில்லை என்பதைக் குறிக்கின்றன. @ExaminerLK மூலம் நிர்மலா கண்ணங்கர் மேற்கொண்ட விசாரணையின்படி, நாமல் ராஜபக்சவின் சட்டக் கல்வி தொடர்பான பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. 🔍 வெளிவந்த முக்கிய தகவல்கள்: 1. அங்கீகரிக்கப்படாத பட்டம். நாமல் ராஜபக்சவின் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட நேரத்தில், அவரது பல்கலைக் கழகமான "சிட்டி யுனிவர்சிட்டி" சட்டக் கல்லூரியால் அங்கீகரிக்கப் படவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் கிடைத்த தகவலின்படி, சட்டக் கல்லூரி "சிட்டி யுனிவர்சிட்டி" பட்டப் படிப்பை அங்கீகரித்தது 2009 அக்டோபர் 15 முதல் தான், இது ராஜபக்ச பதிவு செய்ததிலிருந்து 20 நாட்களுக்குப் பிறகு ஆகும். 2. முழுமையற்ற விண்ணப்பம். சட்டப்பட்டப் படிப்பு வழியாக சட்டக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்க, முழுமையான மதிப்பெண் பட்டியல் (டிரான்ஸ்கிரிப்ட்) மற்றும் பட்ட சான்றிதழ் (டிகிரி சர்ட்டிபிகேட்) ஆகிய இரண்டும் தேவை. ஆனால், சட்டக் கல்லூரியிடம் நாமல் ராஜபக்சவின் பட்ட சான்றிதழ் எப்போதும் கிடைத்ததில்லை, மதிப்பெண் பட்டியல் மட்டுமே கிடைத்துள்ளது. 2025 அக்டோபர் 3 ஆம் தேதி, நாமல் ராஜபக்ஷின் விண்ணப்பம் தொடர்பாக விடுக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) கோரிக்கைக்கு பதிலளித்த சட்டக் கல்லூரி, ராஜபக்சவின் கோப்பில் எந்தவொரு பட்ட சான்றிதழும் இல்லை என உறுதிப்படுத்தியது. அதற்கு பதிலாக, சட்டக் கல்லூரியிடம் 2009 இல் சிட்டி யுனிவர்சிட்டியால் ராஜபக்சக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் மட்டுமே உள்ளது. அக்கடிதத்தில்குறிப்பிடப்பட்டிருப்பது: “நீங்கள் பாடநெறியின் அனைத்து தேவைகளையும் மதிப்பீட்டு வாரியத்தில் நிறைவேற்றியுள்ளதால், பட்டம் in Law, Class Three (சட்டத்தில் இளங்கலைப் பட்டம், மூன்றாம் வகுப்பு) வழங்கப்படுகிறது என தெரிவித்து மகிழ்கிறேன்.” 1. ஒரு அசாதாரணமான பட்ட சான்றிதழ். நாமல் ராஜபக்ச இலங்கை சட்டக் கல்லூரியில் படித்த சான்றிதழை சமர்ப்பிக்காத போதிலும், அவர் அதை ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் (Master’s) விண்ணப்பத்திற்கு சமர்ப்பித்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் பெறப்பட்ட இந்த சான்றிதழில், ராஜபக்சக்கு சிட்டி யுனிவர்சிட்டியில் இருந்து "சட்டத்தில் கௌரவம் மற்றும் மூன்றாம் வகுப்பு (Honours in Law Class Three)" பட்டம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த பட்ட சான்றிதழில் உள்ள கையொப்பத்தில் முரண்பாடு உள்ளது. •அது 2009 செப்டம்பர் 15 ஆம் தேதி "துணை வேந்தர் மால்கம் கில்லீஸ் (Malcolm Gillies, Vice Chancellor)" என்பவரால் கையொப்பமிடப்பட்டது. •ஆனால், கில்லீஸ் அவர்கள் அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவியில் இருந்து 2009 ஜூலையில் பணி நிறுத்தம் செய்துவிட்டு வெளியேறியுள்ளார். இது தொடர்பாக கில்லீஸை கேட்டபோது அவர் கூறியதாவது: “நான் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய பிறகு எனது கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட எந்த சான்றிதழையும் பற்றி நான் அறியேன்.” அந்த நேரத்தில் துணை வேந்தராக பணியாற்றியவர் கில்லீஸ் அல்ல, பேராசிரியர் ஜூலியஸ் வெய்ன்பெர்க் (Prof. Julius Weinberg) என்பதையும் சிட்டி யுனிவர்சிட்டி உறுதிப்படுத்தியது. (வலைத்தளச் செய்தி) Moorththy Dinu ################## ###################### சில பின்னுட்டங்கள்: Sinniah Selladurai கள்ளச் சான்றிதழ் ; கள்ள ஒப்பம்...? அடக் கேவலங் கெட்டவனே! நீயெல்லாம் ஒரு கட்சித் தலைவர்...? ஏன்டா!அவனவன் காறித் துப்புறான். அசிங்கமா ; வெக்கமா இல்லையா? ######### Reborn Visu Ranjith Guna லண்டனில் பட்டம் வாங்குவது கடையில் பொத்து வாங்குவது போல🤪 ######### Abdul Gaffoor Shihaabdeen இலங்கைல அதுவும் நாம பொறந்த மண்ணுல எடமில்லாம லண்டனுக்கு போயிருக்காரு சாரு பட்டம் உட. உடாங்கணக்குட ########## Nm Kisho Kizzo அதானே இங்கதான் கேனபயலுக என்றாலும் லண்டன்காரன் அறிவாளிதானே .. அவன் கொடுப்பானா சம்மா பட்டம்.. மாத்தி யோசிங்க மக்கா... ################ Moorththy Dinu Nm Kisho Kizzo மாதங்களை வேற மாத்தி இருக்கிறார்கள். ############ Senthurselvan Thuseeththa Ithu London kku theriyuma🤭 ########## Thambu Ramanathan இந்தச்சட்டத்தரணி எத்தனை வழக்குகளில் வெற்றி பெற்று இருக்கிறார். ################ Krishna Kri அங்க பணம் குடுத்தாலே பட்டம் குடுத்திடுவான்கள் Moorththy Dinu Krishna Kri இதில வேடிக்கை என்னெண்டா 2009 செப்டம்பர் 15 ஆம் தேதி "துணை வேந்தர் மால்கம் கில்லீஸ் (Malcolm Gillies, Vice Chancellor)" என்பவரால் கையொப்பமிடப்பட்டது. ஆனால், கில்லீஸ் அவர்கள் அப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவியில் இருந்து 2009 ஜூலையில் பணி நிறுத்தம் செய்துவிட்டு வெளியேறியுள்ளார்.
  2. நாடு ஒன்று, பார்வை இரண்டு.
  3. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பிரிவில் – பாதாள உலகக்குழுவினர் கடமை புரிந்துள்ளனர் – ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவிப்பு. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பிரிவில் பாதாள உலகக்குழுவினர் கடமை புரிந்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத அரசாங்கமே அரச இயந்தியரத்தை இயக்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற கருப்பொருளில் தேசிய செயற்பாடு, இன்று தங்காலை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. நாட்டின் இளைஞர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில், நாடு முழுவதும் ஒன்பது மாகாணங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அத்துடன் இந்த தேசிய நிகழ்ச்சித்திட்டம் கடந்தா ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதன் போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி – “போதைப்பொருள் கடத்தல் மூலம் அதிகளவான நிதி ஈட்டப்படுகின்றது. திட்டமிடப்பட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள உலக்குழுவினர்அரசியல் தலைவர்களின் அடைக்கலத்தில் வாழ்கின்றனர். அவர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்??? போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் பாதாள உலகக்குழுவினர் இந்த நாட்டில் அரசியல் அடைக்கலம் மூலமே பாதுகாக்கப்பட்டு வந்துள்ளனர்.அதுதான் உண்மை .ஒரு காலகட்டத்தில் அரசியல் கட்சிகளின் மத்தியசெயற்குழுக்களின் அதிகாரம் பாதாள உலகக்குழுக்களின் வசம் காணப்பட்டது. அதேபோல் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் பாதாள உலகக்குழுவினர் அடங்கியிருந்தனர். நாம் இந்த இடத்தில் உறுதிபட ஒரு விடயத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம். எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது. எந்தவொரு போதைப்பொருள் குற்றவாளிக்கும் அரசியல்அடைக்கலம் வழங்கப்படமாட்டாது. மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர்.இதில் மக்களின் எதிர்ப்பார்ப்பு தங்கியுள்ளது எனவே தலைவர்கள் என்ற ரீதியில் மக்களின் அபிலாஷைகளையும் எதிர்ப்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்யவேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு உள்ளது அதனாலேயே நாம்போதைப்பொருள் தேசிய வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம். ஆனால் இன்று சிலர் அதனை முடக்குவதற்கு முயற்சிக்கின்றனர்.அனைவரும் ஒரு இலக்கினை நோக்கிபயணிக்கும் போது அவர்கள் இந்த சமுதாயத்தினை திசை திருப்புவதற்கு முயற்சிக்கின்றனர். ஆனால் அந்த வலையில் நாட்டு மக்கள் சிக்கமாட்டார்கள். நாம் இந்த திட்டத்தினை மேலும் விரிவுபடுத்துவோம். போதைப்பொருள் மோசடியை நாம் இந்த நாட்டில் இருந்து முற்றாக ஒழிப்போம். இந்த செயற்பாடுகளில் பணியாற்றும் ஒவ்வொருவரையும் நாம் பாதுகாப்போம். அவர்களுக்காக நாம் முன்னிற்போம். நேற்று இரவும் போதைப்பொருளுடன் மீன்பிடிபடகொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.அந்த மீன்பிடி படகு இன்றுஇரவு கரைக்குகொண்டுவரப்படும்.கடற்படையினர் நாட்டின் கடற்பிராந்தியங்களில் போதைப்பொருள் கடத்தலைமுறியடிப்பதற்கு பாரியளவில் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர். இதேவேளை போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்கு எதிராக பலர் பல சூழ்ச்சிதிட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர்.அரசாங்கத்தின் இந்த இலக்கை முறியடிப்பதே அவர்களின் நோக்கமாக அதற்காக மக்கள் எதிர்ப்பு பேரணிகள் போராட்டங்களும் ஏற்பாடு செய்யப்படலாம். https://athavannews.com/2025/1453398
  4. ஜி 20 மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை – USA உறுதி! தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று முதல் நவ.23ம் திகதி வரை ஜி 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுகிறது. தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது எனவும் தென் ஆப்ரிக்கா ஜனாதிபதி சிரில் ராமபோசா அமெரிக்காவை பற்றி எதிர்மறையாக பேசுகிறார் எனவும் இதனை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட எங்களது குழுவினர் ஏற்கவில்லை எனவும் இதனால் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது எனவும் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியுள்ளார். இதேவேளை, ஏற்கனவே, ”தென் ஆப்ரிக்காவில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக கூறி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜி 20 உச்சி மாநாட்டில் எந்த அமெரிக்க அதிகாரியும் பங்கேற்க மாட்டார்கள்” என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1453416
  5. சஜீத்…. மழைக்குக் கூட, பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்காத ஆள் போலை இருக்கு. 😂
  6. எனக்கும்… ஶ்ரீலங்காவுக்கு “கொலிடே” போற ஐடியா இருக்கு. 😂 எதற்கும் @satan ஐ கேட்டுப் பார்ப்போம். 🤣
  7. நீங்கள், லண்டனில் தானே வசிக்கின்றீர்கள். ஒருக்கால்… City University ஐ, அணுகி பார்க்கிறது. 😂 லக்ஸ்மன் நாமல் ராஜபக்ச… ஒறிஜினலா, டூப்ளிகேட்டா என்று தெரிந்து விடும். 🤣
  8. நாட்டில்... சிங்களவனுக்கு ஒரு சட்டம், தமிழனுக்கு ஒரு சட்டம். இவர்... தமிழர் என்ற படியால் கைது செய்திருக்கின்றார்கள். சிங்களவன் என்றால்... பதவி உயர்வு கொடுத்திருப்பார்கள்.
  9. இதுதான்... ஆபத்தான பாறை மீன். நாம் சாப்பிடும் பாரை மீனை, பாறை மீன் என்று குழப்பி அடிக்கும் பத்திரிகையாளர்களை நினைக்க கடும் கோபம் ஏற்படுகின்றது. அடி முட்டாளுகள். இது...நாம் சாப்பிடும் பாரை மீன்.
  10. தமிழ் கடவுள்/காவலாளிகள் இல்லாமல் போனபிறகு, திருகோணமலையில்.. 2009ஆம் ஆண்டுக்கு பின்னர், கன்னியா வெந்நீர் ஊற்று தொல்பொருள் திணைக்கள கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது சிறீமலை நீலியம்மன் சைவ கோயில் முழுமையாக சிதைக்கப்பட்டு அங்கு 'பாசன பப்பாத ராஜமஹா' என்கின்ற விகாரையை உருவாக்கி இருக்கின்றார்கள் குஞ்சுமப்ப பெரியசாமி கோவில் அழிக்கப்பட்டு அதே இடத்தில "லங்கா பட்டுன சமுத்திரகிரி" என்கிற பெயரில் விகாரை நிர்மாணித்து இருக்கின்றார்கள் அரிசிமலையில் தமிழ் நிலங்களில் 'ஆசிரி கந்த புராண ராஜமஹா விகாரை' (Asiri Kanda Purana Rajamaha Viharaya) கட்டப்பட்டு இருக்கின்றது. தென்னமரவடி கந்தசாமி மலை வழிபாடு தடைசெய்யப்பட்டு அங்கு பௌத்த கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. 64ஆம் கட்டை (பச்சனூர் மலை) விவசாய நிலங்கள் அபகரிக்கப்பட்டு பௌத்த விகாரை கட்டுப்பட்டு வருகின்றது. பெரியகுளம் பகுதி தமிழர் நிலங்களில் பொரலுகந்த ராஜமகா விகாரை கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. ராஜவந்தான் மலை கோயில் விக்கிரகங்கள் தோண்டியெறிப்பட்டு அங்கு விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது. மூதூர் சூடைக்­குடா மத்­த­ளம்­மலை சூழலில் பௌத்த தொல்லியல் சின்னங்கள் இருப்பதாக கூறுகின்றார்கள். இந்தவகையில் திருகோணமலையில் 74ற்கு மேற்பட்ட பிரதேசங்களை பௌத்த மதத்திற்குரிய தொல்லியல் இடங்களாக அடையப்படுத்தி இருக்கிறார்கள். இதுபோதாதென்று திருக்கோணேஸ்வரம் கோயில் சூழல் முழுமையாக சிங்கள மயப்படுத்தப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, இந்த கோயில் கோகண்ண விகாரை மீதே கட்டப்பட்டுள்ளது என உரிமை கோருகின்றார்கள். இங்கு வியாபாரம் செய்வதற்காக இரத்தினபுரியிலிருந்து சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு இருக்கின்றார்கள். திரியாய், மற்றும் தென்னமரவடியில் பல ஆயிரக்கணக்கான வயல் காணிகளில் தொல்லியல் எச்சங்கள் இருப்பதாக விவசாயம் தடைசெய்யப்பட்டு இருக்கின்றது. திரியாய் கிராமத்தில் மட்டும் 1,000 ஏக்கர் வயலில் விவசாயம்செய்ய விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இந்த கிராமத்தில் 2,712 ஏக்கர் காணியை அரச திணைக்களங்கள் உரிமை கோரி இருக்கின்றது. இதில் மூன்று புதிய பௌத்த விகாரைகளும் ஒரு பழைய பௌத்த விகாரையும் அமைக்கப்பட்டு அவற்றுக்கு 809 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல கங்குவேலி கிராமத்தில் 500ஏக்கர் வயல் நிலங்கள் சிங்களவரால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. இங்கு கங்குவேலி குளத்தை சூழ சிங்களவர்கள் விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது. குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் மட்டும் 2,500 ஏக்கர் நிலப்பகுதி பானமுர திலகவன்ச என்கிற பிக்குவிற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. அதேபோல குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் 11 இடங்களில் 340.33 ஏக்கர் நிலம் குத்தகை அடிப்படையில் 7 பௌத்த அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. இங்கு 30க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளும் வணக்கஸ்தலங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.ஏற்கனவே இந்த பகுதியில் 23இடங்களில் பௌத்த கட்டுமானங்கள் முழுமை பெற்று இருக்கின்றன. மேற்படி பானமுர திலகவன்ச என்கிற பிக்கு அரிசிமலை என்கிற பகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து இருக்கின்றார். இங்கு 500 ஏக்கர் காணி அரசாங்கத்தால் பௌத்த பிக்குகளுக்கு இங்கு வழங்கப்பட்டு இருந்தது. அதேபோன்று அரிசிமலையுள்ள 500 ஏக்கர் காட்டு பகுதியும் பௌத்த தொல்லியலுக்குரிய இடமாக பிரகடனம் செய்யப்பட்டு இருக்கின்றது. தென்னைமரவாடி திரியாய் ,குரும்பைசிட்டு, புல்மோட்டை போன்ற இடங்களில் உள்ள 11இடங்களில் தமிழ்பேசும் மக்களுக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான நிலங்கள் அரச நிலங்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. தென்னைமரவாடி தமிழ் கிராமங்களில் மாலனூர் (12 ஆம் கட்டை ) மற்றும் ஏறமாடு (10 ஆம் கட்டை ) இரண்டு சிங்கள குடியேற்ற திட்டங்கள் உருவாக்கபபட்டு இருக்கின்றன இவ்வாறு கன்னியா, குச்சவெளி , கும்புறுப்பிட்டி, சாம்பல்தீவு, சம்பூர், மத்தளமலை, கல்லடி மலைநீலியம்மன், இலங்கைத்துறை முகத்துவாரம் என பௌத்த சிங்கள ஆக்கிரமிப்புகளால் திருகோணமலை மாவட்டம் சீரழிந்து வருகின்றது. மேற்படி அவலங்களை அரசியல்ரீதியாக வலுமையாக எதிர்க்கொள்ள கூடிய தமிழ் ஆளுமைகளை அரசியல் மற்றும் சிவில் பொதுவெளியில் அடையாளம் காணாமல் திருகோணமலையை யாராலும் காப்பாற்ற முடியாது. Tharmalingam Kamaraj ·
  11. பாறை.... மீன் என்பது பிழை. பாரை மீன் என்றே சொல்வார்கள். அதுதான் சரி. வீரகேசரி... அண்மையில் தமிழை பிழையாக எழுதிக் கொண்டு வருகின்றமை கண்டனத்துக்குரியது. வருகின்ற இளைய தலைமுறைக்கு... சரியான தமிழ் சொற்களை, பத்திரிகைகள் எழுத வேண்டும். தமிழ் தெரியாத பத்திரிகையாளர்களை வேலையை விட்டு தூக்க வேண்டும். எந்த இனமும்... தமது தாய் மொழியில் வரும் பத்திரிகைகளில் எழுத்துப் பிழை விடுவதை விரும்ப மாட்டாது. ஆனால் தமிழ் இனத்தில் இந்த எழுத்துப் பிழைகளை எவரும் சுட்டிக் காட்டுவதும் இல்லை, பத்திரிகைகள் அது சம்பந்தமாக மன்னிப்பு கேட்பதும் இல்லை என்ற அசமந்தப் போக்கே காணப்படுகின்றமை வெட்கக்கேடு.
  12. வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த அனுமதிப் பத்திரம் இல்லை – DMT அறிவிப்பு! தற்போதைக்கு வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை என்று இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்‍ (DMT) அறிவித்துள்ளது. இதற்காக தற்காலிக அனுமதிப் பத்திரத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் முச்சக்கர வண்டிகளை செலுத்தும் வெளிநாட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரம் மாத்திரம் வெளிநாட்டவர் ஒருவர் இலங்கையில் முச்சக்கர வண்டி செலுத்துவதற்கு அனுமதி அளிக்காது என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இதனிடையே, அண்மையில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான நியூசிலாந்து பெண் சுற்றுலாப் பயணி, இலங்கையில் முச்சக்கர வண்டி செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட சூழ்நிலைகள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில உள்ளூர் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரங்கள் இல்லாத வெளிநாட்டவர்களுக்கு, தங்கள் வாகனங்களை வாடகைக்கு விடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எஃப்.யு. வுட்லர் கூறியுள்ளார். அத்தகைய நபர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். https://athavannews.com/2025/1453390
  13. வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப் பத்திர கட்டணம் அதிகரிப்பு! வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிபத் பத்திரங்களை வழங்குவதற்காக வசூலிக்கப்படும் கட்டணங்களை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, வெளிநாட்டு பிரஜைக்கு ஒரு மாத காலத்திற்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதற்கு முன்பு 2,000 ரூபாவாக இருந்த கட்டணம் ரூ.15,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு மேல் மற்றும் இரண்டு மாதங்கள் வரை சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் 21,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு மேல் மற்றும் 6 மாதங்கள் வரை சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் 30,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 6 மாதங்களுக்கும் மேலாகவும் 12 மாதங்கள் வரையிலும் ஒரு வெளிநாட்டு பிரஜைக்கு சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதற்கான கட்டணம் 45,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக, வெளிநாட்டுப் பிரஜைக்கு சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்கான கட்டணம் 15,000 ரூபாவாகவும். மேலும், சாரதி அனுமதிப் பத்திரம் தொலைவடைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ அதன் நகலை வழங்குவதற்கான கட்டணம் 15,000 ரூபாவாகும். மேலும், இலங்கைக்கு வெளியே வழங்கப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது அதற்கு சமமான உரிமத்தை வைத்திருக்கும் இலங்கைப் பிரஜைக்கு புதிய சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான கட்டணம் 3,300 ரூபாவில் இருந்து 30,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வெளியே வழங்கப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது அதற்கு சமமான உரிமத்தை வைத்திருக்கும் வெளிநாட்டினருக்கு, புதிய அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான கட்டணம் 15,000 ரூபாவிலிருந்து 60,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1453330
  14. A/L பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள்: யாழில் வரலாற்று சம்பவம். இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான கவனக்குறைவு யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் அமைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை மத்திய நிலையத்தில், உயிரியல் பாடத்தை எழுதிய 21 மாணவர்களின் முதலாம் பகுதிக்கான (பல்தேர்வு வினா) விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்காக அனுப்பப்படாமல் தவறவிடப்பட்டுள்ளன. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்றது. நெல்லியடியின் பிரபல பாடசாலையொன்றில் உள்ள பரீட்சை மத்திய நிலையத்தில் உயிரியல் பாடத்தின் பல்தேர்வு வினாப் பரீட்சை நடத்தப்பட்டது. 21 மாணவர்கள் பரீட்சையில் தோற்றி, முறைப்படி விடைத்தாள்களைக் கையளித்துள்ளனர். இந்த விடைத்தாள்கள் அன்றைய தினமே உரிய பாதுகாப்புகளுடன் திருத்தல் பணிகளுக்காக அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பரீட்சை நிலையத்தில் கடமையாற்றியவர்களின் கவனக்குறைவு காரணமாக, அவை உடனடியாக அனுப்பப்படவில்லை. மூன்று நாட்களின் பின்னர் சென்று பார்த்தபோதே, காகிதாதிகளுடன் சேர்த்து அவை கட்டப்பட்டு, அனுப்பப்படாமல் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. தவறு நிகழ்ந்ததால், தற்போது அந்த விடைத்தாள்களை திருத்தல் பணிகளுக்காக அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சையில், குறிப்பாக உயிரியல் போன்ற பாடங்களில், ஒரு சில புள்ளிகள் கூட மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நிலையில், தொடர்புடைய 21 மாணவர்களும் பெருமளவில் புள்ளிகளை இழக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது அவர்களின் இத்தனை ஆண்டுகால கல்வி வாழ்க்கையையும் அர்த்தமற்றதாக மாற்றியுள்ளதுடன், மாணவர்களை உச்சக்கட்ட மன அழுத்தத்துக்குள்ளும் தள்ளியுள்ளது. இந்த விடயம் கல்வித் திணைக்களங்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட உடனேயே, அந்தப் பரீட்சை மத்திய நிலையத்தில் கடமையாற்றியவர்கள் அங்கிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கவனக்குறைவாக செயற்பட்டவர்களுக்கு எதிராக திணைக்கள ரீதியான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1453370
  15. சோகமான செய்தி. இனியாவது ஆனந்த சுதாகரனின் வயது வந்த பிள்ளைகளை பராமரிப்பு இன்றி தனியே விடாமல், தந்தையை விடுதலை செய்து... பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
  16. இந்தோனேஷியாவில் வெடித்துச் சிதறிய எரிமலை! நாட்டின் மிக உயரமான மலைகளில் ஒன்றான செமெரு எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து இந்தோனேசிய அதிகாரிகள் 900க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளதுடன், 170 மலையேறுபவர்களை வியாழக்கிழமை (20) பாதுகாப்பாக மீட்டுள்ளனர். ஜாவா தீவில் உள்ள செமேரு எரிமலை புதன்கிழமை 10 முறை வெடித்து, பாரிய சாம்பல் புகைகளை வான் நோக்கி வெளியிட்டது. பாறையின் சரிவுகளில் 13 கிலோ மீற்றர் வரை எரிமலைக் குழம்புகள் வழிந்தோடியதைத் தொடர்ந்து எச்சரிக்கை நிலை மிக உயர்ந்த அளவில் பராமரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம், கிழக்கு ஜாவாவின் மீட்பு நிறுவனம் வெளியேற்றத்திற்கு உதவ நூற்றுக் கணக்கான பணியாளர்களை அனுப்பியது. எரிமலைக்கு அருகில் வசிக்கும் 956 பேர் ஏற்கனவே பாடசாலைகள், மசூதிகள் மற்றும் அரசு கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 3,676 மீற்றர் உயரமுள்ள செமெரு எரிமலை, இந்தோனேசியாவில் உள்ள சுமார் 130 செயலில் உள்ள எரிமலைகளில் ஒன்றாகும். இது இறுதியாக 2021 டிசம்பர் மாதம் வெடித்தது, இதன்போது குறைந்தது 51 பேர் உயிரிழந்துடன், அருகிலுள்ள கிராமங்கள் சாம்பலால் மூடப்பட்டிருந்தன. https://athavannews.com/2025/1453381
  17. நைஜீரியாவில் 25 பாடசாலை மாணவிகள் கடத்தல். நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு எதிரான தாக்குதல்கள், கடத்தல்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றன. இதில், சில குழுக்கள் அங்குள்ள வெளிநாட்டினரையும், பாடசாலைப் பிள்ளைகளையும் கடத்தி பணப்பறிப்பிலும் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கெப்பி மாநிலத்தின் உயர்நிலை பாடசாலை விடுதியில் இருந்து (17) அதிகாலையில் சுமார் 25 மாணவிகளை ஆயுதம் ஏந்திய குழுவொன்று கடத்தி சென்றுள்ளது. இச்சமயம் பாடசாலை மீது தாக்குதல் நடத்திய கடத்தல்காரர்கள் அங்குள்ள பாதுகாவலரை சுட்டுக்கொன்றுள்ளனர். இக்கடத்தலுக்கு நைஜீரியாவில் செயல்படும் போகோ ஹராம் உள்ளிட்ட எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சம்பவ இடத்துக்கு விரைந்த நைஜீரிய பாதுகாப்புப் படையினர் அருகிலுள்ள காடுகள் உள்ளிட்ட பதுங்குமிடங்களில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1453360
  18. அன்புள்ள... நியூசிலாந்து அக்காச்சிக்கு, 🙂 அடுத்த முறை, நம்மூருக்கு வரும் போது, துடை தெரிய... "மினி ஸ்கேர்ட்" போடாமல், முஸ்லீம் பெண்கள் மாதிரி, முழு உடம்பையும் மூடி "பர்தா" போட்டுக் கொண்டு வாருங்கள். இப்ப... நம்ம ஊரு, ரொம்ப கெட்டுப் போச்சுதுங்க. 😂
  19. நாமல், போலியாக எடுத்த பட்டத்திற்கு.... கறுப்பு கோட்டு வாங்கி, அப்பாவிடமும், அம்மாவிடமும் ஆசிர்வாதமும், முத்தமும் வாங்கியதெல்லாம் வீணாய் போய் விட்டதா. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.