Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. எல்லா தலைவர்களுக்கும் அவர்களைப்பறிய எதிர்மறை விடயங்களும் உண்டு. அந்த வகையில், இந்த காமராஜர் தமிழ் தேசியத்தை புறக்கணிப்பவர். இந திய தேசியத்தை தமிழர்கள் ஏற்று கோள்ள வேண்டும் என்று தனது வாழ் நாள் முழுவதும் பாடுபட்டவர். சென்னை மாகாணம் என று இருத்ததை “தமிழ்நாடு என்று மாற்றறுவதை பிடிவாதமாக மறுத்தவர். அதற்காக இவரது ஆட்சிக்காலத்தில் உண்ணாவிரதம் இருந்தவரை சாக விட்டவர். மொழிவாரி மாநில பிரிப்பில் பல தமிழ் நிலபரப்புகளை கேரளாவுக்கும் கரநாடகத்துக்கும் தாரை வார்த்தவர். தனவு வாழ் நாள் முழுவதும் தமிழ் தேசியத்தை எதிர்தத காமராஜரை பெருந் தலைவர் என சீமான் கூறுவது தனது சுயநல அரசியலுக்காகவே. தமிழ் நாட்டின் வரலாற்றை சரியாக படித்தால் காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைத்து தலைவர்களுமே தமிழ் நாட்டுக்கு பல சிறந்த திட்டங்களையும் பல நன்மைகளையும் செய்தே உள்ளனர்.
  2. தமிழர நாட்டில் அனைத்து தமிழர்களும. உலிய கல்வியை கற்றால் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழ் நாட்டு அரசு கொண்டுவந்த சட்டத்துக்கு எதிராக இந்த சிவஞான சங்கிகள் தான் உயர் நீதிமன்றத்தில் ஆகமங்களை சாட்டாக வைத்து தடை வாங்கின. ஆலயங்களில் பிரதான வழிபாட்டு மொழியாக்கவும் அங்கு தடையாக இருந்த இந்த சிவஞான சங்கிகள் இலங்கையிலும் தமது ஆர் எஸ் மத வெறியை பரப்ப தமது யாழ்பாண ஏஜெண்டுகள் மூலம். வந்து கூறும் மாய்மாலங்களே இவை.
  3. தமது தவறுகளை மறைப்பதற்கு துரோகிகள் மீது முழுப்பழியையும் சுமத்தி தப்பிக்கலாம் என்ற தந்திரத்தை பின்புவந்த ஆயுத போராளிகளுக்கும் உங்களுக்கும் சொல்லி கொடுத்த குருவே இந்த அமிர்தலிங்கம் தான். அமிர்தலிங்கம் இறந்தாலும் அவர், தான் சொல்லிக் கொடுத்த கருத்தியல் இன்றும் தலைமுறை கடந்து வாழ்வதை நினைத்தும் குருவை மிஞ்சிய சீடர்களை நினைத்தும் அகமகிழலாம். 😂
  4. அமிர்தலிங்கம் தோல்வியடைந்த தலைவர் தான். ஆனால் இவரை கொலை செய்தவர்களும் பாரிய உயிர் அழிவுகளை மட்டும் தமிழருக்கு பெற்று கொடுத்துவிட்டு தோல்வியடைந்தவர்களாக சென்றவர்களே. அமிர்தலிங்கத்தை நினைவு கூரும் வேளையில் அவரின் மனைவி கையால் தேனீர் வாங்கி அருந்தி விட்டு அவரை கொலைசெய்த பாதகர்களும் நினைவு கூரப்பட வேண்டியவர்களே.
  5. இந்த தோழர் பாலன் உயிரோடு இருந்தும் தமிழீழம் கிடைக்கவில்லை. எனவே இவரும் இருந்தும் தமிழருக்கு எந்த பிரயோசனமும் இல்லை. இவர் செத்தாலும் தமிழருக்கு இழப்பு இல்லை. 😂😂
  6. ஒரு திரைப்படத்தில் வடிவேலு நடித்த நிகைச்சுவை காட்சி வரும். ரீ கடையில் உட்கார்நிருக்கும் ஒருவரிடம் ஒரு சின்ன பையன் வந்து அந்த நபரின் அப்பன் ஆத்தா எல்லோரையும் படு மோசமாக வாய்ககு வந்தபடி ஆபாசமாக திட்டுவான். அந்த நபர் அதை கணக்கெடுக்க மாட்டார். அதை கண்ட வடிவேலு என்னப்பா இப்படி சகட்டு மேனிக்கு குடும்பத்தை இழுத்து ஆபாசமாக திட்டுகிறானே சும்மா இருக்கிறீர்களே என்று கேட்டவாறு அந்த பையனை துரத்தி செல்ல அவன் அப்படியே போக்கு காட்டி வடிவேலுவை அழைத்து சென்று கிட்னியை எடுக்கும் கூட்டத்திடம் மாட்டிவிட்டு அதற்கான கூலியை அந்த கும்பலிடம் வாங்கி கொண்டு சென்றுவிடுவான். பாவம் துரத்தி சென்ற வடிவேலு. இப்போது அந்த சின்ன பையன் கதா பாத்திரம் தான் சீமான். மாபியா கூட்டதின் அடியாளாக செயற்படும் சின்ன பையனை கண்ணுக்காம விடுவது தான் புத்திசாலித்தனம்.
  7. பிரித்தானியாவில் தனது தொகுதியில் வாழும் மக்களுக்கு நன்மை செய்வார் தானே. ஆளும் கட்சியாக இருப்பதனால் அதை செய்ய முடியும் தானே.
  8. அவ்வளவு தான் விசுகு இனி உங்களுடனும் பேசமாட்டார் உறவே. 😂
  9. கருத்தியல் ரீதியாக உரையாட முடியாத போது உண்மைகளை ஏற்றுகொள்ள முடியாதபோது தப்பியோட கிடைத்த நொண்டிச் சாட்டு. கிடைத்த சாட்டை விடாமல் …. Escape………. Escape 😂😂😂😂😂
  10. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சுதந்திரமாக செயற்பட முடியாது. எலஙா அரசியல் முடிவுகளையும் நாம் புலிகள் மட்டும் தான் எடுக்கிறோம். புலிகள் சொல்வதை பேச மட்டும் தான் அவர்களால் முடியும் என்று அன்ரன் பாலசிங்கம் வெளிப்படையாக ஊடகங்களுக்கு தெரிவித்த பின்பு, அங்கு நடப்பவை பற்றி கூட்டமைப்பினர் என்ன கூறினாலும் அது புலிகள் கூறுவதாக தானே உலக நாடுகள் எடுக்கும். அப்படியருக்க அவர்கள் கூறிலாலென்ன கூறமல் விட்டாலென்ன.
  11. ராஜீவ் கொலைவழக்கில் விடுதலையான சாந்தனின் இழப்பிற்கும், ராஜீவின் நண்பரான சம்பந்தனின் இழப்பிற்கும் ஈழ தமிழ் மக்கள் தரும் பதில்... -Livingston Edinborough- என்ன ஒப்பீடு இது? இதில் லிவிங்ரன் எடின்பரோவில் இருந்து கூறியிருப்பது என்னவென்றால், சம்பந்தரும் யாராவது வெளிநாட்டு தலைவர் ஒருவரின் கொலைக்கு உடந்தையாக இருந்து குற்றவாளியாக தீர்ப்பு பெற்றிருந்தால் அவரது இறப்புக்கு பெருமளவு மக்கள் தொகை கூடியிருக்கும் என.
  12. வடமாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் இந்த இல்லங்களை மூடும் உத்தரவு தெளிவாக தெரிவிக்கப்டட நிலையில் இதை பொய்செய்தி என்று கூற ஏன் இப்படி கஷ்டப்பட வேண்டும். வட்சப் தகவல்களும் முகநூல் தகவல்களும் நம்பக தன்மை அற்றவை. https://np.gov.lk/ta/யாழ்ப்பாணம்-தெல்லிப்பள-4/
  13. சிவ சிவ என்று கூறி பட்டை அடித்துவிட்டால் அவர்கள் என்ன அயோக்கியத்தனம் புரிந்தாலும் முண்டு கொடுக்க சிலர் வருவார்கள். இது யாழ்பாணத்தில் இயல்பானது.
  14. இது வாதமல்ல. இது தான் உண்மை. நிச்சயமாக சிங்க கொடியையோ புலி கொடியையோ தனது விருப்பத்தின் பேரில் சம்பந்தர் பிடித்திருக்க மாட்டார். தனது மன விருப்பதிற்கு மாறாக அவர் செயற்பட்டார். இதை அவர் தனது சுயநலனுக்காகவே செய்தார். அவரது இந்த இரண்டு செயலும் தமிழருக்கு நன்மை எதையும் கொடுக்கவில்லை. ஒரு அரசியல்வாதியாக அவர் பலனடைந்தார் எனக் கூறலாம்.
  15. தவறாக புரிந்து கொள்ளும்படி எழுதியதற்கு மன்னிக்கவும். அதற்காக வருந்துகிறேன்.
  16. அந்த 15 வருடங்கள் என்பது தமிழரின் அரசியல் நிலை என்பது 2009 ன் முன்பு எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகளின் விளைவால் நொந்து நூடில்ஸ் ஆகி போயிருந்த நிலமை என்பது நேர்மையாக சிந்திக்கும் அனைவரும் அறிந்ததே. இந்த நிலமையை ஈடு கட்ட இந்த தலைமுறையில் யாராலும் முடியாது என்பதே துன்பகரமான உண்மை.
  17. @நிழலி சம்பந்தர் தனது அரசியல் வாழ்வில் முடிவெடுக்கும் பொறுப்பு வாய்ந்த தலைவராக உருவேடுத்தது 2009 இன் பின்னரே. 1977 ல் அவர் முதல் முறையாக பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டதில் இருந்து 1983 வரையான குறுகிய காலப்பகுதியில் அவர் ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமே. 1983 ல் ஆயுத போராளிகள் போராட்டத்தை முழுமையாக கையில் எடுத்த பின் 2004 வரை அவர் மற்றைய அரசியல்வாதிகளைப் போல செல்லா காசாகவே இருந்தார். போரட்டதை முழுமையாக வலுக்கட்டாயமாக (byforce) பொறுபெடுத்தவர்களுக்கே போராட்ட தோல்வியில் அதிக பொறுப்பு உண்டு. 2004 ல் தமிழ் தேசிய கூட்டமைப்பை புலிகளை ஏக பிரதிநிதிகளாக அங்கீகரிக்கும் நிபந்தனையுடன் புலிகள் அவரை அங்கீகரித்திருந்தாலும், சம்பந்தர் புலிகளின் கருத்துகளை சர்வதேசத்திற்கு ஒப்புவிக்கும் ஒரு பேச்சாளராகவே செயற்பட்டிருந்தார். தனது சொந்த கருத்துக்களை பொதுவெளியில் பேசும் உரிமை அற்ற ஒருவராகவே விடுதலைப் புலிகளால் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தார். திரு அன்ரன் பாலசிங்கம் வெளிப்படையாகவே இதை தெரிவித்திருந்தார். புலிகள் மட்டும் தான் இங்கு அரசியல் செய்கிறார்கள் . நாம் சொல்வதை செய்வதை மட்டுமே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செய்ய முடியும். அவர்களால் சுதந்திரமாக இயங்க முடியாது என்று திரு அன்ரன் பாலசிங்கம் வெளிப்படையாகவே தனது பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்ததை இங்கு சுட்டிக் காட்ட விளைகிறேன். அவர் முழுமையான முடிவெடுக்கும் தலைவராக வந்த 2009 இன் பின்னரான காலப்பகுதியில் அவரால் அரசியல் தீர்வை கொண்டு வர முடியவில்லை. அவரின் குறுகிய கால அரசியல் தலைமை வெற்றிகரமாக செயற்படவில்லை என்பது ஏற்று கொள்ள தக்கதே. அதற்கான அரசியல் சூழ்நிலையும் அவரது குறுகிய காலத்தில் இல்லை என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், 2015 ம் ஆண்டுக்கு முன்பு மகிந்த ஆட்சியில் தமிழர் பகுதியில் படுமோசமான இராணுவ ஆட்சியே நேரடியாக நடை பெற்றது. மாவீரர் தினமோ வேறு தமிழர் சார்ந்த எந்த உரிமை அரசியல் நிகழ்வுகளோ நடத்த முடியாத நிலை இருந்தது. மகிந்தவும் கோத்தாவும் நினைத்தபடி மட்டுமே ஆட்சி நடை பெற்றது. 2016 ல் நல்லாட்சி அரசாங்கத்தை ஆதரிக்கும் அவரது முடிவு தமிழரில் உரிமை அரசியலை மேற்கொள்ளுவதற்கான ஒரு ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது. இன்று அவரை திட்டித் தீர்க்கும் புலம் பெயர் அரசியலாளர்கள் கூட தாயகத்துக்கு விசிற் அடித்து தமது குடும்ப உறுபகினர்களுடன் மகிழ்வாக இருக்க சந்தர்ப்பம் 2016 ல் அவரது அரசியல் முடிவினால் உருவான நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே ஏற்பட்டது. 2015 ன் முன்பு. தாயகத்திற்கு செல்ல தொடை நடுங்கிக் கொண்டிருந்து, 2016 ன் பின்னர் இலங்கை சென்ற பல புலம் பெயர் வீராதி வீரர்கள் பலரை நான் அறிவேன். மற்றப்படி ஆசிய நாடுகளில் அரசியல்வாதிகளுக்கு உள்ள வியாதியான சாகும்வரை பதவியில் இருத்தல் என்பது அவரையும் தொற்றிக் கொண்டது என்பதும் மறுக்கமுடியாததே. சம்பந்தரின் பல தவறுகள் விமர்சனத்துக்கு உரியவையே என்பதை ஏற்றுக் கொளுகிறேன். ஆனால் முழு பழியையும் அவர் மேல் போட்டு திட்டி தீர்ப்பது இழிவானவர்களின் செயலே. நிழலி, தாங்கள் தளத்தின் உரிமையாளர். எமக்கு இங்கு எழுத இடம் தந்ததற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். உங்களுடன் எதிர்வாதம் புரிந்ததற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
  18. இவ்வாறாக தமிழரிடையே மத பிரிவினைகளை மறவன்புலவு தேரடியாக செய்ய வேறு சிலர் தந்திரமாக மறைமுகமாக நச்சு விதைகளை மக்களின் மத்தியில் விதைக்கின்றனர். தமிழ் சிவில் சமூகம் என்று கூறுமர அமைப்புகள் இதனை கண்டும் காணாமல் விடும் நிலையே உள்ளது. வழமை போல் தலைக்கு மேல் வெள்ளம் போன பின்பே குய்யோ முறையோ என்று ஓலமிடுவார்கள். உலகத்தால் ஒதுக்கி வைக்கப்படும் இனமாக தமிழரை மாற்றும் வரை இவர்கள் ஓயமாட்டார்கள் போல் உள்ளது.
  19. சிறுவர் போராளிகளாக இயக்கத்தில் இணைந்த கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் அரசியலை கற்று கொடுக்காது போக்கிலியாக வளர்ததது யார் குற்றம்? அரசியலை கற்று கொடுத்திருந்தால் அவர்கள் சம்பந்தரை விட சிறந்த அரசியலை செய்திருக்கலாம்.
  20. உண்மைதான். முடியாவிட்டால் பொத்தி கொண்டு இருந்திருந்தால் முள்ளிவாய்கால் பேரழிவே நடந்திருக்காது. இது உங்கள் கூற்று.
  21. நேரடியான நேர்மையான நெத்தியடி பதில். 👍
  22. உங்களை பொறுத்தவரை, சம்பந்தர் ஒரு பத்து பேரை போட்டு தள்ளியிருந்தால் அதை மன்னித்திருப்பீர்கள்.😂
  23. கொலை செய்தவர்களை மன்னிக்கலமாம். கொலை செய்ததை சாட்சி சொன்னவனை மன்னிக்க கூடாதாம். 😂
  24. இதுவரை தமிழருக்கு தலைமை வகித்த அனைவருமே தமிழர்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து பொறுப்பற்ற வகையில் நடந்து பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர் அழிவுக்கும் தமிழரின் உரிமை அரசியல் பல தலைமுறைக்கு பின்தள்ளப்பட்டதற்கும் காரணமானவர்களே. இதில் சம்பந்தரை மட்டும் திட்டும் அரசியல் என்பது, தாம் விசுவாசம் வைத்திருக்கும் தலைவர்களின் மாபெரும் தவறுகளை மறைத்து சம்பந்தர் மீது மட்டும் முழுப் பழியையும் போடும் இழிவான அரசியலே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.