Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. மக்களை கேடயமாக வைத்து உக்கிரேன் இராணுவம் பின்வாங்கும் தந்திரோபாயமாக இருக்கலாம்.
  2. 325 பக்க அறிக்கையில் எவ்வாறு இரஸ்சியாவினை பலவீனப்படுத்துவது என ஆராயப்பட்டுள்ளது. 1. பொருளாதார ரீதியாக - பொருளாதார தடை, எரிபொருள் விலையில் வீழ்ச்சி ஏற்படுத்துதல், பெலரஸில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தல். 2. பூகோள அரசியல் - உக்கிரேன், சிரியாவில் இரஸ்சியாவிற்கு எதிரான சூழ்நிலைகளை உருவாக்கல். 3.இராணுவ ரீதியான - இரஸ்சியாவிற்கெதிராக ஐரோப்பா நேட்டோ உதவியினூடாக இராணுவ அச்சுறுத்தலை உருவாக்குதல் 4.இரஸ்சியாவின் ஸ்திரத்தன்மையினை குலைத்தல் - அரசிற்கெதிராக சீர்குலைக்கும் நடவடிக்கைகளை ஏற்படுத்தல். இலங்கையில் நிகழ்த்தப்பட்ட மத்தியவங்கி தாக்குதல் (பொருளாதார இலக்கு), கூட்டுப்படை தலைமையகத்தாக்குதல் (இராணுவ இலக்கு) கொலன்னாவ தாக்குதல் (பொருளாதார இலக்கு), இந்த பெரிய தாக்குதல் தவிர சிறிய தாக்குதல்கள் அரசியல் தலைவர்கள் இராணுவ தலைவர்கள் கொலைகள் என்பன புலிகளின் பயங்கரவாத தாக்குதல் என மேற்கால் வகைப்படுத்தப்பட்ட தாக்குதல்கள் கூட ஏதோ ஒரு வகையான இராணுவ, பொருளாதார, அரசியல் நோக்கம் கொண்டனவாக இருந்தது, ஆனால் இந்த தாக்குதல் நீங்கள் கூறுவது போல ஒரு திசை திருப்பத்தாக்குதலுக்க்காக நல்ல பயிற்சி பெற்ற ஒரு டிவிசன் படையினரை வழங்கல் அற்ற ஒரு பகுதிக்குள் அனுப்பியது உக்கிரேன் படையினை நீண்ட காலத்தில் பலவீனப்படுத்தும் ஒரு முயற்சி, நிச்சயமாக இராணுவ அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பார்கள்.
  3. இந்த திரைப்படம் இனையத்தில் உள்ளது, பிரசாந்தின் ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினால் என சில படங்கள் பார்த்ததுண்டு, அதுதவிர அவரது விசிறியெல்லாம் கிடையாது, ஆனால் அவரது மீண்டு வரும் படம் என்பதால் ஆர்வக்கோளாறில் இந்த திரைப்படத்தினை தரமான பிரதி வரும் வரை பொறுத்து பார்க்கும் பொறுமையின்றி இணையத்தில் தரவிறக்கி பார்த்தேன். சத்திய ஜித்திரே என நினைக்கிறேன், படத்தின் ஆரம்பத்தில் துப்பாக்கியுடன் வீட்டின் வாசலில் ஒருவர் தோன்றினால் படம் முடியும் போது அந்த துப்பாக்கி சுடப்படுவதாக முடிய வேண்டும் என கூறியதாக கேள்விப்பட்டுள்ளேன், பல திரைப்படங்களில் இந்த முறைமையினை பின்பற்றி படம் எடுக்கப்பட்டிருந்தாலும் பல சந்தர்ப்பங்களில் ஆரம்பக்காட்சி மறந்துவிடும் திரைப்பட இறுதியில். இந்த திரைப்படத்திலும் ஆரம்பக்காட்சியில் முயல் வேட்டைக்காரர் துப்பாக்கியுடன் தோன்றுகிறார், திரைப்படத்தின் இறுதியில் அந்த துப்பாக்கி வெடிக்கும் அதில் ஒரு திருப்பம் காணப்படும். ஆனால் இத்திரைப்படத்தில் இறுதிக்காட்சி நெருங்கும் போதே அந்த ஆரம்பக்காட்சி இங்குதான் வரப்போகிறது என பார்வையாளர்கள் உணரும் வண்ணம் காட்சி அமைத்துள்ளார்கள். ஆரம்பத்தில் காட்சியமைப்பினூடு கதாபாத்திரன் தன்னை பார்வையற்றவராக காட்டிக்கொள்வதனை எந்த வித குற்ற உணர்ச்சியுமில்லாதவராக காட்டுவதற்காக காட்சி அமைக்கப்பட்டிருந்தது போல தோன்றினாலும் பின் பாதியில் அவரது நிலைமாற்றம் செயற்கைதனமாக தோன்றுவது போல இருப்பதற்கு பின்பாதி காட்சி அமைப்பு பெரிதாக ஈர்க்கவில்லை என கருதுகிறேன், பிரசாந்திற்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பான படமாக இருந்தும் அதனை முழுமையாக பயன்படுத்தவில்லை என்பதாக எனதளவில் உணருகிறேன், ஆனால் சிம்ரன், சமுத்திரக்கனி நடிப்பு சிறப்பாக இருப்பது போல உணர்கிறேன். படம் விறு விறுப்பாக உள்ளது.
  4. கடவுள் மனிதனை படைத்தான், மனிதன் மதத்தை படைத்தான் என்பார்கள் ஆனால் இந்த சாதி, சமயம் எல்லாம் மனிதரால் படைக்கப்பட்டதுதான், எவ்வாறு 200 வருடங்களுக்கு முன்னால் (தற்போதய சாதி முறைமை) எமது சமூகத்தில் இறக்குமதி செய்த்து கலக்கப்பட்டு ஒரு பிரிவினர் தம்மை தாமே முதன்மையாக காட்டி கொள்ள முயன்றதனை போல இதுவும் ஒரு சமகால முயற்சிதான்😁. அடிப்படையில் எல்லாம் பித்தலாட்டங்கள்தான், ஆனால் இதனை மிக நயமாகக்கூறியுள்ளீர்கள், ஆனால் இந்த கதைக்கு பெரிய வரவேற்பு கிடைக்காது என கருதுகிறேன்.
  5. அமெரிக்க இராணுவ அனுசரணையுடன் ரான்ட் அமைப்பின் இரஸ்சியா தொடர்பான ஆய்வு உக்கிரேன் இரஸ்சியா போரிற்கு முன்னரான அறிக்கை (2019). https://www.rand.org/pubs/research_reports/RR3063.html இந்த தளத்தில் பி டி எப் தரவிறக்கம் மூலம் முழு அறிக்கையினையும் தரவிறக்கிக்கொள்ளலாம். இவ்வாறான அறிக்கைகள் ஒரு தெளிவான புரிதலை எம்மவர்களிடையே ஏற்படுத்தலாம் என கருதுகிறேன். இரஸ்சியாவிற்குள் ஊடுருவியதன் மூலம் எவ்வாறான இராணுவ, அரசியல் ரீதியான இலாபத்தினை உக்கிரேன் பெறுகிறது? இதில் சாதகம் என எதுவும் தெரியவில்லை ஆனால் பாதகம் உள்ளது.
  6. நியூசிலாந்தில் தமிழர் ஒருவர் பார ஊர்தியினை விரைவாக செலுத்தி கட்டுப்பாடின்றி எதிர் திசையில் வாகனம் வரும் வீதிக்கு சென்று அந்த நாட்டினை சேர்ந்த ஒரு இளம் குடும்பம் பயணித்த காரில் மோதியதால் சிறிய குழந்தைகள் உட்பட அந்த குடும்பம் உயிரிழந்தது, அந்த நிகழ்வினை அந்த நாட்டு தொலைக்காட்சிகள் உருவ அடையாளங்களை மறைத்து வெளியிட்டிருந்தது அவ்வாறு செய்திருக்காவிட்டால் ஒரு கொந்தழிப்பு நிலை உருவாகி அதனால் பல அப்பாவிகள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டிருக்கும். இது ஒரு அடையாளப்பிரச்சினை, மக்கள் இலகுவாக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், அவர்கள் தம்மை சமூக அமைப்பில் எவ்வாறு பொருத்திக்கொள்கிறார்கள் என்பது தருணத்திற்கேற்ப மாறுகிறது. இன்று தமிழர்கள் என நிற்பவர்கள் பின்னர் மத அடிப்படையில் வேறுபடுவர், சாதி அடிப்படையில் வேறுபடுவர் ஊர் அடிப்படையிலும் வேறுபடுவர், அப்போது முன்பு ஒரே தரப்பில் இருந்தவர்கள் எதிர் எதிர் அணியில் இருப்பர் ஆனால் ஒரே வகையான வெறுப்பு உணர்ச்சியே காணப்படும் இந்த நல்லவர், கெட்டவர்கள் அளவுகோல் நிருவலால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை என்பதனை சம்பந்தப்பட்ட சமுகங்கள் புரிந்து கொள்ளவேண்டும்,
  7. உக்கிரேனும் இஸ்ரேலும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி நீண்ட தூரம் வந்துவிட்டது.
  8. சமூகங்களிடையேயான இடைவெளியினை தூண்டுவதனை தவிர்ப்பதற்காக போராட்ட அமைப்புகளே சில சமூகங்களின் பல மோசமான நடவடிக்கைகளை வெளிவராது தடுத்தனர், இவ்வாறான பிரச்சினைகளை கிளறுவது நல்லதல்ல என கருதுகிறேன். இலங்கையில் அனைத்து சமூகங்களும் கடந்த கால தமது தவறுகளை திருத்திக்கொண்டால் அமைதி ஏற்படலாம், இவ்வாறு ஒருவரை ஒருவர் குறை சொல்வதால் பிரச்சினை அதிகரிக்கும் குறையாது.
  9. https://www.investopedia.com/terms/p/phillipscurve.asp#:~:text=The Phillips curve states that,by stagflation in the 1970s. வட்டி விகித அதிகரிப்பு ஏற்படும் போது அதனோடு இணைந்து வேலையின்மை ஏற்படும், வட்டி விகித அதிகரிப்பு பொருளாதார விருத்தியின் போது சிலநேரங்களில் பக்க விளைவாக பணவீக்கம் ஏற்படுவதனை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்படுவதாகும், இங்கு பிரச்சினையாக கூறப்படுவது கடுமையான வட்டி விகித போக்கு என கூறப்படுகிறது, உடனடியாக வட்டி விகித குறைப்பினை ஏற்படுத்தாவிட்டால் பொருளாதார சரிவு தவிர்க்க முடியாது. உண்மையில் வேலையின்மை பொருளாதார சரிவின் குறிகாட்டி அல்ல ஆனால் பொதுவான பொருளாதார சரிவின் பாதிப்பில் வேலையின்மை ஒரு பகுதியாக இருக்கும் அவுஸ்ரேலியாவின் வேலையின்மை விகிதம் 4.1% செப்ரெம்பரில் எட்டும் என கடந்த ஆண்டில் கணிக்கப்பட்டது(வட்டி விகித அதிகரிப்பினால்) ஆனால் எதிர்பார்த்தை விட முன்னராகவே வேலையின்மை 4.1% எட்டிவிட்டது என்பது நிலமையின் தீவிரத்தினை காட்டுகிறது, செப்ரெம்பரில் வட்டி விகித குறைப்பு என கடந்த ஆண்டில் கூறினார்கள் இப்போது மேலும் நீடிக்கலாம எனும் தொணியில் கருத்து கூறுகிறார்கள், ஆனால் நிலமை வேறு மாதிரியாக இருப்பதாக உனருகிறேன்.
  10. அவுஸ்ரேலியாவின் கடந்த 12 மாத குறைந்த வேலையின்மை விகிதம் 3.5% தற்போது 4.1%, இந்த கருதுகோளின்படி அவுஸ்ரேலியாவும் பொருளாதார சரிவிற்குள் வந்துவிட்டது, ஆனால் வரிவிகித குறைப்பில் ஆர்வமில்லாமல் மத்திய வங்கியுள்ளது, அதற்குக்காரணமான பணவீக்கம் இன்னும் கட்டுப்பாட்டிற்கு வரவில்லை என கூறப்படுகின்றது, ஆனால் அதனைவிட பாதகமான பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகங்கொடுக்கவுள்ளது, உலகில் நிகழும் பூகோள அரசியல்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது. https://www.cnbc.com/2024/08/05/recession-what-is-the-sahm-rule-and-why-is-everyone-talking-about-it.html
  11. https://www.investopedia.com/what-is-the-sahm-rule-8637564 இந்த கருதுகோளின் அடிப்படையில் அமெரிக்கா பொருளாதார சரிவிற்குள் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
  12. பிட் கொயின் 58000 மற்றும் 60000 களில் எவ்வாறு சந்தை அந்த விலைகளை அணுகுகின்றது என்பதற்கேற்ப விற்க திட்டமிட்டுள்ளேன் அடிப்படையில் பிட் கொயினது இறங்குமுகம் ஆரம்பமாகிவிட்டது போல தோன்றுகிறது ஆனால் அதனை 58000 மற்றும் 60000 விலைகல் உறுதிப்படுத்தவேண்டும். மறுவளமாக அமெரிக்க SP500 பிட் கொயினை விட பலவீனமாக காணப்படுகின்றது அது 5400 புள்ளிகளில் கடந்து உயர்ந்தால் தற்போதய நிகழ்வு ஒரு தற்காலிக சந்தை பின்னடைவாக கருதப்படும்(Market correction) ஆனால் அமெரிக்க பங்கு சந்தை( SP500) 5400 புள்ளிகளுக்கு உயருமா என தெரியவில்லை தற்போது மிகவும் பலவீனமாகக்காணப்படுகிறது,
  13. அடிப்படை எவ்வளவு முக்கியமோ அதே அளவு அனுப்வமும் முக்கியம் என்பதனை நீங்களே பல வித்தைகளை நீங்களாகவே கற்றதாக கூறியுள்ளீர்கள் இந்த கதையின் போக்கில் கூறியுள்ளீர்கள். இவ்வாறு பயிற்றுனர்கள் பயிற்றிவிப்பதனை Explicit learning என கூறுகிறார்கள், ஆனால் சொந்த அனுபவத்தில் பயில்பவர்கள் சூழ்நிலைக்கேற்ப தம்மை தகவமைப்பவர்களாக உருவாகுவார்கள்.
  14. இஸ்ரேல் ஈரான் போரில் அமெரிக்கா நேரிடையாக ஈடுபடாது (அப்படியே போர் ஏற்பட்டாலும்) ஆயுத உதவிகள் செய்யலாம் அத்துடன் இவ்வாறு போரில் குதிப்போம் என வாய் வழி உளவியல் யுத்தத்தில் அமெரிக்கா ஈடுபடலாம்.
  15. இது ஒரு போலியான பொறுப்பற்ற குற்றச்சாட்டு இருக்க வாய்புகள் அதிகம், வங்க கடலில் அமெரிக்க புதிய கடற்தளம் அமைப்பதற்கு இலங்கை அல்லது மாலைதீவுதான் பூகோள ரீதியாக பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன்.
  16. முன்னர் மியன்மாரிலிருந்து ரொகின்யோ இஸ்லாமிய மக்களுக்கெதிரான நடவடிக்கையின்போது என்னுடன் வேலை செய்த இஸ்லாமிய நண்பர் ஒருவர் மியன்மாரை சேர்ந்தவரிடம் கடுமை காட்டினார், தற்போது இந்துக்களுக்கெதிராக அதே வகையான செயலை இஸ்லாமியர்கள் செய்கிறார்கள்.
  17. அமெரிக்கா இந்த போரினை தடுத்து நிறுத்துவதிலேதான் ஆர்வம் காட்டும், அமெரிக்க பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் உள்ளது, இந்த போர் நிகழ்ந்தால் அது அமெரிக்க பொருளாதாரத்தினை மட்டுமல்ல உலக பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு அதனால் அமெரிக்கா என்ன விலை கொடுத்தாவது இந்த போர் நிகழ்வதை தடுக்கும்.
  18. அனைத்து வர்த்தகங்களையும் மூடிவிட்டேன், நிக்கி 225 சுட்டெண் நேற்றைய அளவினை விட அதிக விலையில் தற்போது உள்ளது இது ஒரு Market correction போலவே உள்ளது. பிட் கொயின் 58000 Resistance level (தற்போது 55000), இதனை கடந்து விலை ஏறினால இந்த சந்தை நிகழ்வு ஒரு தற்காலிக சந்தை பின்னடைவே (Market correction) பிட் கொயினை விற்பதில் (short trade) ஆர்வம் காட்டவில்லை அது ஒரு ஆபத்தான முடிவாக இருக்கலாம் என்பதாலேயே பலவீனமான அமெரிக்க பங்கு சந்தையினை விற்பதில் ஆர்வம் காட்டுகிறேன்.
  19. VTX index ஏற்ப சந்தை சல சலப்பிற்கு ஏற்ற வகையிலேயே மற்ற முதலீடுகள் போலவே பிட் கொயினும் செயல்படும், இதன் மூலம் இது ஒரு ஆபத்தான முதலீடாகவே உள்ளது, தங்கம் போலவோ அல்லது நாணயங்கள் போலவோ செயற்படாது என்பது ஒரு புறம் இருக்க USDJPY கூட இரண்டு வாரத்தில் 14% சரிவினை சந்தித்துள்ளது( பிட் கொயினது ஒருவார இழப்பில் பாதியளவு) இது அமெரிக்க டாலரின் பெறுமதி வீழ்ச்சியால் ஏற்பட்டதல்ல, ஜப்பான் தனது பணப்பெறுமதி தொடர் இழப்பு சந்தித்து வரும் நிலையில் அதனை ஈடுகட்டும் முயற்சியினது விளைவு. இரண்டு தசாப்தங்களாக ஜப்பான் எதிர்மறையான வட்டிவிகிதம் மூலம் தனது பொருளாதாரத்தினை வளர்க்க முற்பட்டத்து, உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்கள் ஆபத்து மிகக்குறைந்த carry trade இரண்டு தசாப்தங்களாக செய்து வந்தனர். இறுதியாக பங்குனி மாதம் ஜப்பான் முதலாவது வட்டிவிகித அதிகரிப்பினை மேற்கொண்டலும் யென் தொடர்ச்சியாக அடிவாங்கியநிலையில் ஜப்பான் 150 யென் அமெரிக்க டொலருக்கு எதிரானநிலையில் ஜப்பானிய அரசு தலையிடலை மேற்கொள்ளும் என சந்தையில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டபோது 160 வரை சென்றது, இரண்டு தசாப்தங்களாக மேற்கொண்டனர் தற்போது பலர் தமது இந்த வர்த்தகத்தினை மூடுவதால் சந்தியில் பெரிய சல சலப்பு ஏற்படுகிறது அத்துடன் பூகோள அரசியலும் இணைந்து கொண்டுள்ளது. அதன் படி 155 இனை யென் நெருங்கிய போது மே மாதத்தில் முதலாவது தலையீட்டினை மேற்கொண்டது அதற்காக செலவழித்த பணம் வீணாகப்போனது, ஏனெனில் அந்த முயற்சி தோல்வியில் முடிவடைய ஜூலையில் மீண்டும் வட்டிவிகித அதிகரிப்பு மூலம் ஜப்பான் இதனை எட்டி உள்ளது தற்போது கிட்டதட்ட 141 இல் உள்ளது எதிர்பார்க்கப்படும் இலக்கு 130 இனை இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலோ எட்டுவதே ஜப்பானின் நோக்கம். ஆனால் இந்த நிகழ்வு அமெரிக்க பொருளாதாரத்தின் சவப்பெட்டியின் முதல் ஆணியாக உள்ளது, அமெரிக்க பொருளாதாரத்துடன் உலகப்பொருளாதாரமும் பெரும் நெருக்கடியினை சந்திக்கலாம், சந்தையில் தற்போதய நிகழ்வினை Market correction ஆக நோக்குகிறார்கள், ஆனால் இதனை நான் பொருளாதார சரிவாகவே எதிர்பார்க்கிறேன், அமெரிக்க S&P 500 இரண்டு short நிலைகளை சந்தை மூடும் நேரத்தில் முடியிருந்தேன் பின்னர், சந்தைக்கு பிந்திய நேரத்தில் 2 short நிலைகளை எடுத்துள்ளேன் அதனை சந்தை ஆரம்பிக்கும் முன்னர் விற்கவுள்ளேன் காரணம் அமெரிக்க அரசு பெரும் பொருளாதார சரிவினை எதிகொள்ளுகின்ற நிலையில் ஒரு அவசரகால வரி விகித குறைப்பு ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது (அதனாலேயே அந்த இரண்டுநிலைகளையும் மூடியிருந்தேன்). ஆனால் செப்ரெம்பரில் முதலாவது வரி விகித குறைப்பு என முன்னர் கூறப்பட்டது, அவ்வாறு அவசரகால வரிவிகித குறைப்பு ஏற்படாவிட்டால் சந்தை சரிவு தொடரும் (இதற்கு முன்னர் 3 அவசரகால வரிக்குறைப்பு அமெரிக்க பொருளாதாரத்தில் எதிர்மறை விளைவையே ஏற்படுத்தியிருந்ததனால் அவசரகால வரி விகிதகுறைப்பு சாத்தியம் மிக குறைவு) அதற்கு பூகோள அரசியல் ஒரு தூண்டல் காரணியாக உள்ளது, அதனாலேயே மத்திய கிழக்கில் தற்போதுள்ள பதற்ற நிலையினை உலக பொருளாதாரம் விரும்பவில்லை, அமெரிக்காவும் விரும்பாது என நம்புகிறேன்.
  20. நம்பிக்கைகளும் Believes, வாழ்க்கை நெறியும் Values ஒன்றாக இணையும் புள்ளியாக பலருக்கு மதங்கள் உள்ளது, அதில் சில தவறானவர்கள் தமது தவறுகளை மதத்தின் மூலம் நியாயப்படுத்தும்போது அது கேள்விக்கு இடமின்றி அங்கீகரிக்கப்படுகின்றது, இதில் பாதிக்கப்படும் தரப்பு கூட அதனை கேள்வியின்றி அங்கீகரிப்பதுதான் வேதனைக்குரிய விடயம். இங்கு மதங்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்படுகின்றன சில தவறான மனிதர்களால், இதனால் அனைத்து மதங்களும் பாதிப்புள்ளாகின்றன. அதனை பதிவு செய்யுங்கள், நாங்கள் பேச விரும்பாத எமது கோரமான பக்கங்களை மறக்க முயற்சிக்கிறோம் ஆனால் அவற்றினை பேசாவிட்டால் அது தொடர்கதையாகவே செல்லும், இதனை பேசுவதற்கு முடியாமல் இருப்பதற்கு காரனம் நாங்கள் மதிக்கும் மதங்களே காரணம் இதில் நாமும் மற்ற மதங்களை போலவேதான் எமக்கு மற்றவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
  21. கிழக்கு மாகாணத்தில் 13 வயது தமிழ் குழந்தை ஒன்றினை இஸ்லாமியர்கள் கூட்டாக வல்லுறவு செய்வதற்கும் பின்னர் அந்த குழந்தையினை கல்லெறிந்து கொல்வதற்கு உடந்தையாக இருந்த இஸ்லாமியர்கள் பலர் அந்த குழந்தையின் பெற்றோரின் வயதொத்தவர்கள், இந்த நிகழ்வுகள் தொடர் இஸ்லாமியர்களின் வன்முறைகளின் தொடரின் ஒன்றாக இருந்த காலகட்டத்தில் நிகழ்ந்த ஒன்று. தமது வக்கிர புத்தியினை எவ்வாறு மதத்தினுள் புகுத்தி கல்லெறிந்து கொல்லும் மதசடங்காக மாற்றியதுபோல எமது யாழ் சமூகத்திலும் இந்து மதத்தின் பேரால் சாதிக்கொடுமை மூலம் பலரை வனுமுறைக்குட்படுத்தப்படுவதற்கும் கொல்லப்படுவதற்கும் உறுதுணையாக இருந்த கருத்தியலை விதைத்த நாவலரை இப்போதும் கொண்டாடும் சமூகமாக இருந்து கொண்டு மற்ற சமூகங்கள் மேல் சகட்டுமேனிக்கு குற்றம் சாட்டுகின்றோம். இஸ்லாமியர்களுக்கும் எங்களுக்கும் அதிக வித்தியாசமில்லை, ஆனால் நாங்கள் புனிதர்கள் போல பேசுவது வேடிக்கையானது.
  22. உங்கள் கருத்திற்கு நன்றி, நிங்கள் கூறுகின்ற காரணங்களுடன் பல காரணங்கள் உள்ளது(அனைத்து நிறுவன கொடுக்கல் வாங்கலுக்கான இரசீதுகள் -invoices டொலரில் பெரும்பாலும் நிகழ்த்தப்படுகின்றது, SWIFT, Eurodollar, Petrodollarஎன கூறிக்கொண்டே செல்லலாம்) ஆனால் இங்கு உலக இருப்பு நாணய கருத்தினை கூறவரவில்லை ஆனால் அந்த கருத்து எழுப்பப்படும் போது அதுவும் அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரத்தில் பாதிப்பினை ஏற்படுத்த கூடியதாக இருக்கும் என்பதனாலேயே அது பற்றி கேட்டேன். Eurodollar பாதிப்பினால் ஒரு ஜப்பானிய வங்கி ஒன்றிற்கு2025 இல் கிட்டதட்ட 10 பில்லியன் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இது தவிர பல அமெரிக்க வங்கிகள் கிடதட்ட 540 பில்லியன் காகித இழப்புகளை அமெரிக்க பணமுறிகளினால் ஏற்பட்டுள்ளது, இது 2008 பொருளாதார சரிவிற்கு பின்னால் ஏற்பட்ட பதில் நடவடிக்கையால் ஏற்படுகிறது(Basel3 Accord) உலக பொருளாதார சரிவின் முன்னரான காகித இழப்பு கிட்டதட்ட 75 பில்லியன் இருந்ததாக கூறப்படுகிறது அதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை ஆனால் அதன் பின்னர் பொருளாதார சரிவினால் 700 பில்லியன் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது, சந்தை பொருளாதாரத்தினால் சந்தை சரிவு 10 மடங்காக மாறியது) 540X10=5trillion? தற்போது உள்ள அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஏற்பட உள்ள பாதிப்பு 1929 இல் வந்த பொருளாதார பாதிப்பிற்கு ஒப்பானதாக கூறுகிறார்கள், GFC தனிய வீட்டு சந்தையில் ஏற்பட்டதாக்கம், தற்போது குறைவடைந்து செல்லும் m2 பண வழங்கள், சொத்து குமிழிகள், வங்கி திரவத்தன்மை, அரச கடன் சுமை(இது 1929 இருக்கவில்லை) இவை அனைத்தும் சேர்ந்து ஒரு பொருளாதார சரிவினை ஏற்படுத்த உள்ளது, இதன் போது பெரிய நிறுவனங்கள் தப்பிவிடும் பாதிக்கப்படுவது சாதாரண மக்களே. மிக சுருக்கமாக கூறியுள்ளேன் முன்பு விபரமாக எழுதுவதுண்டு, அதன் முலம் மற்றவர்கள் நான் கூறவருவதனை புரிந்து அதனை எதிர்த்து ஆக்கபூர்வமான எதிர்கருத்தின் மூலம் எனது கருத்தினை குறை கூறுவதன் மூலம் புதிய விடயங்களை புரிந்து கொள்ளலாம் எனும் ஒரு ஆசைதான். ஆனால் இப்போது அந்த நம்பிக்கை எல்லாம் இல்லை அதற்கு காரணம் டோல்ஸ்ரொய் கூறும் காரணமாக இருக்கலாம், Leo Tolstoy - “The most difficult subjects can be explained to the most slow-witted man if he has not formed any idea of them already; but the simplest thing cannot be made clear to the most intelligent man if he is firmly persuaded that he knows already, without a shadow of doubt, what is laid before him.”
  23. ஆனால் சமூக நலன் என்று பார்க்கும் போது இவ்வாறான மூட நம்பிக்கைகளை களைவதுதான் சிறப்பு, பெருந்தொற்று காலத்தில் சில நல்லடக்கங்கள் மத கோட்பாட்டிற்கெதிரானது என ஒரு தரப்பு மக்களை உசுப்பி விடுவது போல செயற்படுவது சரியாக இருக்காது, அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க இறுக்கமான சட்ட ஒழுங்கு நடவடிக்கையினை அரசு மேற்கொள்ளவேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.