Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. நியாயமான கேள்வி, இதே கேள்வி எனது மனதிலும் எழுந்தது ஆனால் பினர் அந்த நிறுவனம் அமைக்கும் நில அளவு 46 ஏக்கர் என குறிப்பிடப்பட்டுள்ளது ஆகையால் இது மிக பெரிய நிறுவனம் அதனால் அதன் அடிப்படை கட்டுமான செலவும் அதிகமாக இருக்கலாம், முன்னர் கூறிய சிறிய நிறுவனத்தின் வருவாய் 20 மில்லியன், அடிப்படை கட்டுமான நில அளவின்படி பார்த்தால், இந்த நில அளவில் இந்த பெரிய நிறுவனம் அமைக்க இந்திய பணப்பெறுமதியில் 60 கோடி தொடக்கம் 120 கோடி வரை செலவாகலாம், ஆனால் மிகுதிப்பணம் என்னவாகிறது என்பது நீங்கள் கூறுவது போல ஒரு சுவாரசியமான கேள்வியாக இருக்கிறது, இந்த விடயத்தில் எதையும் நாங்களாக ஊகித்து கருத்து வைப்பது சரியாக இருக்காது . (அத்துடன் எனக்கு இந்த விடயத்தில் பெரிதாக எதுவும் தெரியாது அத்துடன் இந்த கணிப்பு முன்பு செய்யப்பட்ட ஒரு சிறிய நிறுவனத்தின் கணிப்பினை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது, எனது கருத்து தவறாக இருக்கலாம்). மன்னிக்கவும் வார இறுதி வேலை இருந்ததால் நேரமின்ன்மையால் பதிலிட முடியவில்லை, ஆய்வு (research & Development), சந்தைப்படுத்தல் (Marketing) என்பவற்றினால் குறிப்பிடப்பட்டுள்ளது, உங்களுக்கு இதில் முன்னனுபவம் அல்லது துறைசார் புலமை உள்ளது என புரிகிறது, உங்கள் அனுபங்களை பகிர்ந்தால் அது பயனுள்ளதாக இருக்கும். இந்த நிகழ்வு நடைபெற்று நீண்ட காலமாகிவிட்டது, அதனுடைய நுணுக்கங்கள் நினைவில்லை, ஆனால் புதிய வாடிக்கையாளர்களை பெறுவதிற்கான செலவு காலப்போக்கில் அதிகரிக்கும் என்பதாகவும், உறபத்தி செலவு குறைப்பு, புதிய சந்தை மாற்றத்தினால் ஏற்படும் ஒரு அலகு உற்பத்திக்கான செலவு அதிகரிப்பு தொடர்பான எதிர்வுகூறல்கள் செய்யப்பட்டதாக நினைவுள்ளது.
  2. கிட்டதட்ட 6 மில்லியன் பெறுமதியில் ஒரு சிறிய நிறுவனம் ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்(எனது கருத்து தவறாக இருக்கலாம்)
  3. நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. இது ஒரு நகைசுவை கேள்வி இல்லைதானே, நான் நினைக்கிறேன் உங்களுக்கு இது தொடர்பான முன்னனுபவம் உள்ளதென, இருந்தாலும் கூற்கிறேன், அது ஒரு நிசெ சந்தையைக்கொண்டது முதலில் மொத்த சந்தை, அதன் வளர்ச்சி விகிதம் கணிக்கப்பட்டு அதிலந்த பொருளுக்கான சந்தை அளவு தீர்மானிக்கப்பட்டட்டது, அதற்கு சந்தை அடிபடையான உற்பத்தி எதிர்வு கூறல் உருவாக்கப்பட்டு அதனடிப்படையில் உற்பத்திக்கான அடிப்படை கட்டுமானம், இயந்திரம், ஒரு ஆண்டிற்கான நடைமுறைச்செலவு கணிக்கப்பட்டது, மேலதிகமாக ஆய்வு மற்றும் சந்தைப்படுத்தலுக்கான செலவுகள் என்பவற்றினை கணித்தார்கள், சுவாரசியமான விடயம் ஒரு முடிவுப்பொர்ளின் உற்பத்திச்செலவு விற்பனை விலையில் 1:2 என்ற விகிதத்தில் இருந்தது, ஆனால் நிறுவனத்தினை மிக சிறப்பாக நடத்தினால் 20% இலாபமும் சராசரியாக நடத்தினால் 10% இலாபமும் நிறுவனத்திற்கு கிடைக்கும் வரிவிதிப்புகளுக்கு முன்ந்தாக.
  4. எனக்கு உண்மையாகவே பினாமி என எழுத சங்கடமாகவே இருந்த்து, ஆனால் நடைமுறையில் சாத்தியப்பாடான விடயத்தினை கூற முயன்றேன், ஆனால் அதனை தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்க எழுதவில்லை. இந்த குளிர்பான பொருள் உற்பத்தி தொடர்பாக புதிய பொருளை அறிமுகப்படுத்தும் ஆய்வுக்குழுவில் பணியாற்றிய அனுபவம் உள்ளது, இரண்டு பெரிய நிறுவங்கள் 1. கொக்க கோலா 2. புருக்கர்ஸ் (பெப்சி) என நினைவுள்ளது.
  5. பொதுவாக தமது பணத்தினை யாரும் முதலிடுவதில்லை, வங்கியில் கடன் பெற்றால் அதன் கடன் வட்டி வரி விலக்கழிக்கப்படும் என்பதால் தமது சொந்த பணத்தினை முதலிடுவது அவர்களுக்கு நட்டம் ஏற்படும். எப்பவுமே OPM (Other People Money) தெரிவு. வங்கிக்கடனுக்கு சொத்துக்களை பிணை வைத்தாலும் வியாபாரதிட்ட்டம் சிறப்பாக இல்லாவிட்டால் வங்கி பணம் கொடுக்காது அதனைவிட தனியார் முதலீட்டாளர்களை பெறுவது கல்லில் நார் உரிப்பது போல, பிரபலம் என்பதற்காக யாரும் தமது காசை எடுத்து சும்மா கொடுத்துவிடுவார்களா? 1400 கோடியில் ஆரம்ப கட்டுமானம், இயந்திரங்கள், ஒரு வருட நடை முறை செலவு என்பன கிட்டதட்ட 1200 கோடிகளை எட்டும் மிகுதிப்பணமாய்வு மற்றும் சந்தைப்படுத்த்லுக்கு செலவாகும்.
  6. 1400 கோடியினை முரளி கிரிக்கெட்டில் உழைத்திருக்கமுடியாது, பெரும்பாலான இவரது விளையாட்டு காலகட்டத்தில் இலங்கை அணிக்காக விளையாடியவர் இதன்மூலம் கிடைக்கும் சொற்ப வருமானம் மற்றும் விளம்பர பணம் என்பவற்றில் இவர் இவ்வளவு பணத்தினை பெற்றிருக்கமுடியாது, அத்துடன் இவர் ஐ பி எல் போன்ற போட்டிகளில் மிக குறுகிய காலங்கள் மட்டுமே விளையாடி இருந்தார், நான் நினைக்கிறேன் இவர் யாராவது உழல் அரசியல்வாதிகளின் பினாமியாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
  7. ஒரு நாட்டின் தீவிரவாதத்தினை கனடா கண்டித்துள்ளது வரவேற்கதக்கது, இந்திய அரசும் இலங்கை அரசு போல முட்டாள்தனமாகவாகா நடக்கவேண்டும்?
  8. உக்கிரேன் இரஸ்சிய போர் என்பது உண்மையில் அமெரிக்க இரஸ்சிய போர் என இந்த போர் ஆரம்பித்த காலகட்டத்திலேயே யாழ்களத்தில் கூறப்பட்டது, இந்த போரில் இரு சக்திகளிடமும் அணுவாயுத வல்லமை உண்டு. அமெரிக்கா இரஸ்சியாவினை நசுக்க திடீர் அவசரம் காட்டுவதன் காரணமாக ஒரு சதிக்கோட்பாடு அண்மை காலங்களில் உலவி வந்துள்ளது, அதனை புரஜெக்ட் சான்ட்மான் என அழைக்கிறார்கள் இந்த சதிக்கோட்பாட்டாளர்கள். இரண்டாம் உலக யுத்த முடிவின் பின்னர் பிரித்தானியாவின் ஏகபோக உலக நாணய அந்தஸ்தினை பிரட்டன்வுட் தீர்மானத்தின் மூலம் தட்டிப்பறித்த அமெரிக்கா ஆரம்பத்தில் தங்கத்தின் பெறுமதியில் தனது நாணயபெறுமதியினை பேணிய அமெரிக்கா வியட்னாம் போரின் விளைவாக அதனை அப்போதிருந்த அமெரிக்க அதிபர் நிக்சன் தூக்கியெறிந்துவிட்டு வெறும் முகப்பெறுமதி நாணயமாக அமெரிக்க நாணயத்தினை மாற்றி அமைத்தார், ஆனால் அதனை பெறுமதியாக்குவத்ற்கு மாற்றீடாக 1974 இல் சவூதியுடன் ஒப்பந்தம் மூலம் எண்ணெய் பரிவர்த்தனைக்கு அமெரிக்க நாணயம் மட்டும் பயன்படுத்தும் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது. இந்த புரஜெக்ட் சான்ட்மான் என்பது பல நாடுகள் ஒருஙிணைத்து அமெரிக்க நாணயத்தினை தமது பரிவர்த்தனை நாணயமாக பயன்படுத்தாமல் விடுவது, சவுதியின் பெறொடொலர் கைவிடல் கூட அதன் ஒரு அங்கமென கூறுகிறார்கள். இதன் தாக்கம் நினைத்துப்பார்க்க முடியாத பொருளாதார பேரழிவினை அமெரிக்காவில் ஏற்படுத்துவதுடன் அதன் அதிர்வலைகள் மற்றநாடுகளில் எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்தும் என தெரியவில்லை. அமெரிகாவினை தளமாக கொண்டு இயங்கும் பெரிய நிறுவனங்கள் தமது பிளான் B பற்றி சிந்திக்க ஆரம்பிக்கும் இதனை உறுதிப்படுத்துவது போல அமெரிக்காவின் சீனாவிற்கெதிரான நிறுவனங்களின் மேலான தடை, 100% வரி விதிப்புகள், சிப் கட்டுப்பாடுகளினுடன் அதனை பயன்படுத்தும் தொழில்னுட்பதடை என பொருளாதார யுத்தத்தினை ஆரம்பித்துள்ளது, ஏனெனில் அமெரிக்காவிற்கு பிரதியீடான சீனாவினை நோக்கி நிறுவனங்களின் பார்வை திரும்பாமல் இருப்பதற்கான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது இருக்கலாம். அமெரிக்கா தனது பலத்தினை காட்ட வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது, அதற்காக அணுகுண்டினை பயன்படுத்தவும் தயங்காது, அதற்காக வருத்தப்படும் நாடாக அமெரிக்கா எப்போதும் இருந்ததில்லை. இந்த போர் ஆரம்பித்த காலப்பகுதியில் இரஸ்சிய அதிபர் கூறிய இந்த போர் முடிவில் ஒரு புதிய உலக ஒழுங்கு ஏற்படும் என கூறியிருந்தார். அமெரிக்கா, புதின் கூறுவது போல இலகுவாக தனது நிலையினை இழக்க விரும்பாது; அதற்காக பேரழிவினை கூட ஏற்படுத்த தயங்காது என்பதற்கு இலங்கை, காசா போன்றவை தற்கால உதாரணம். என்ன ஒரு வித்தியாசம் இலங்கையில் புரெஜெக்ட் பீகனை செய்தவர்களுக்கே புரெஜெக்ட் சான்ட்மான் செய்கிறார்களா? இது எந்தளவிலற்கு உண்மை? ஏற்கனவே இரண்டு நாட்டு அதிபர்கள் இது போன்ற விசப்பரீட்சையில் இறங்கி காணாமல் போயுள்ளார்கள், யாழ்கள உறவுகளே உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். புரெஜெக்ட் சான்ட்மானை முறியடிக்க இரஸ்சியாவினை மோசமாக தோற்கடிக்கவேண்டும் இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் ஜப்பானில் செய்தது போல, அது மற்ற நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும், எதிர்வரும் காலங்களில் அதற்கான நிகழ்வுகள் நடைபெறலாம்,
  9. இந்த மழை இலங்கை அணியினை காப்பாற்றிவிட்டது இலங்கை, நேபாள போட்டியில், இல்லாவிட்டால் இலங்கை நேபாளத்திடம் மோசமாக தோற்றிருக்கும்.
  10. இந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார்கள் என்பது தமிழ் மக்களுக்கு தெரியாது என உண்மையிலேயே நினைக்கிறார்களா? அல்லது தமிழ் மக்கள் முட்டாள்கள் என நினைக்கிறார்களா?
  11. இலங்கை அணியின் மனநிலை "நமக்கு ஒரு அடிமை வாய்ச்சிட்டான்".😁
  12. இலங்கையில் தீர்வு திட்டம் ஆரம்பத்தில் உள்ளூராட்சி, மாவட்டசபை, மாகாணசபை என பெயரளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை நடைமுறைப்படுத்தலில் உள்ள பிரச்சினையாக இருப்பது இலங்கையின் ஆட்சி அதிகாரம் பெரும்பான்மையினரிடம் இருக்கிறது அதனை உறுதிப்படுத்தும் விதமாக அதன் விகிதாசார ப்ரதினித்துவ ஆட்சி முறை உள்ளது. மற்ற நாடுகளில் சிறுபான்மையினரை பாதுகாக்க (இந்தியாவில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு) சட்டங்கள் இருக்கும் ஆனால் இலங்கையில் அரசினால் இயற்றப்படும் சட்டங்கள் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போன்ற சட்டங்கள்தான் சிறுபான்மையினருக்கு. தீர்வுத்திட்டம் இலங்கை அரசியல் சட்டமுறைமையில் சாத்தியமில்லை, அதில் மாற்றம் ஏற்படுத்த பொதுவேட்பாளர் முறை தாக்கத்தினை ஏற்படுத்தலாம், ஆனால் தற்போதுள்ள முறைமையில் சிறுபான்மையினருக்கு தீர்வு கிடைக்கும் என பொய்யான வாக்குறுதிகளை வழங்குவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
  13. உங்கள் கருத்திற்கு நன்றி, பொதுவாக ஒரு பிரச்சினையினை அணுகும் போது அதனை தரவுகளினடிப்படையில் அணுகாமல் ஒரு தரப்பிற்கு எதிராக இன்ன்னொரு தரப்பு என இரு அணியாக பிரிந்து (தமிழ் தேசியவாதம் மற்று இலங்கை தீவிரவாதம் எனும் இரு பிரிவாக) தமது தரப்பினை நியாயப்படுத்த கருத்துக்களை உருவாக்கும் போது அது கடைசியில் கிளி யோசிய மட்டத்தில் கருத்துக்கள் வரத்தொடங்குகின்றன. பிரச்சினைக்கான தீர்வுக்காண அடிப்படைகளை ஆராய்வதற்காக (root cause analysis) முதலில் பிரச்சினை என்ன என்பதனை முதலில் புரிந்து கொள்ளவேண்டும், அதனை கண்டறிய 5 ஏன் என்பதனை வினவவேண்டும் என கூறுகிறார்கள். உதாரணமாக புலிகள் தேர்தலை புறக்கணிக்க கூறியமையால்தான் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. 1. ஏன் புலிகள் தேர்தலை புறக்கணிக்க கூறினார்கள்? தேர்தலை புறக்கணிக்காவிட்டால் ரணில் ஆட்சிக்கு வந்து விடுவார் என்பதால். 2. ஏன் புலிகளுக்கு ரணிலின் மேல் கோபம்? அவர் புலிகளை பலவீனப்படுத்த முயன்றார். 3. ஏன் ரணில் புலிகளை பலவீனப்படுத்த முயன்றார்? புலிகளினை பலவீனப்படுத்தினால் தீர்வுத்திட்டம் எனும் அழுத்தம் இருக்காது தற்போது உள்ளது போல. 4. ஏன் ரணிலிற்கு தமிழர்களுக்கு தீர்வு வழங்குவது விருப்பம் இல்லையா? இப்படியாக நீண்டு செல்லும் ஆனால் பிரச்சினையினை அடையாளம் கண்டு கொள்ளலாம். 5.****************? இது யாரையும் குறிப்பிடுவதற்காக எழுதவில்லை, ஆனால் உண்மையான சிங்களத்தின் முகத்தினை தெரியாமல் ஒரே வட்ட பாதையில் பயணிப்பதாலேயே 76 வருடங்களாக இலங்கையிலுள்ள சிறுபான்மையின மக்கள் அல்லறுகிறார்கள். பல நாடுகள் இருந்தாலும் இந்தியாதான் அந்த அப்பம் பிரிக்கும் குரங்காக இருக்கும் எனகருதுகிறேன்.
  14. 76 வருடங்களாக தீர்க்கப்படாத பிரச்சினையினை தீர்க்கும் திற்வுகோல் ரணிலிடம் மட்டும் இருக்கிறதா? இந்த பிரச்சினை தொடர்ந்து செல்லும் கடைசியாக யாராவது இடையில் புகுந்து குரங்கு அப்பம் பிரித்தனை போல் பிரிப்பார்கள்.
  15. பிரதமர் மோடி தனது ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் பாதுகாப்பினை, பாதுகாப்பு கட்டமைப்பின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் முன்னெப்போதும் இல்லாதவாறு, பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியேறி இருப்பது இந்தியாவின் நலனுக்கு ஏற்றது.
  16. நிலமை இப்ப வேறமாதிரி, வங்கதேசம் இலங்கையினை பிச்சைகாரர்கள் என அழைக்கிறார்கள். இந்திய பாகிஸ்தான் போட்டியினை விட இலங்கை வங்கதேச போட்டி மிக சுவாரசியமாக இருக்கும்😁, மைதானத்திற்குள் இல்லை வெளியே சமூக ஊடகத்தில், வார இறுதியில் வேலை இருந்ததால் அதனை தவறவிடவேண்டியதாகிவிட்டது. வங்கதேச அணி தோற்றாலும் வென்றாலும் சமூக ஊடகத்தில் நடக்கும் போட்டியில் வங்கதேசமே கை ஒங்கியிருக்கும், அதற்கு காரணம் இலங்கையின் தற்போதய நிலை. இலங்கையினை வித விதமாக அழைப்பார்கள், இலங்கை விசிறிகள் பம்முவார்கள் எப்பிடி இருந்த இலங்கை.
  17. மேற்கின் அடுத்த இலக்கு மொஸ்கோ என கூறப்படுகிறது, இந்த காணொளியில். தற்போதய இரஸ்சிய பொருளாதார வளர்ச்சி கூட தற்காலிகமானது என்பதாக இன்று ஏ பி சி தெரிவித்துள்ளது. சமகாலத்தில் பொருளாதாரம் மற்றும் இராணுவ ரீதியாக இரஸ்சியாவினை தொடர் தேய்மானம் மூலம் நிகழ்த்த முடியும் என மேற்கு எதிர்பார்க்கின்றது, அவ்வாறு நிகழும்போது இரஸ்சிய கூட்டணி நாடுகள் மெதுவாக இரஸ்சியாவினை கழட்டி விட வாய்ப்புள்ளது, புட்டின் உக்கிரேனின் ஆக்கிரப்பு பகுதிகளை கைவிட்டு பின்வாங்குவதுடன் சமாதான உடன்படிக்கையினை மேற்கொள்வதுதான் உலகிற்கும் இரஸ்சியாவிற்கும் நல்லது.
  18. உங்கள் கருத்திற்கு நன்றி புத்திசாலி, முட்டாள் எனும் கருதுகொள்களை Cognitive bias ஆக பார்க்கிறார்கள். https://www.beapplied.com/post/attribution-bias-what-is-attribution-bias நியூட்டனது பூனை வெளியே போவதற்கும் உள்ளே வருவதற்கும் கதவினை பிராண்டுவதை பார்த்து அவருக்கு தொந்தரவில்லாமல் அதுவாக போய் வர கதவில் இரு துவாரங்களை போட தச்சனை அணுகினார் (பெரிய துவாரம் தாய் பூனைக்கு, சிறிய துவாரம் குட்டிப்பூனைக்கு) தச்சன் பெரிய துவாரத்தினை கதவில் போட்டு விட்டு சிறிய பூனை பெரிய துவாரத்தினூடாக செல்லும் என கூறினார், நியூட்டனால் அதனை புரிந்து கொள்ளமுடியவில்லை இருவரது வாக்குவாதம் தொடர்ந்து கொண்டிருக்கும்போது தாய் பூனையும் குட்டி பூனையும் அந்த பெரிய துவாரத்தினூடாக சென்றது. ஒவ்வொருவரது புரிதலும்(Perception) அவர்களது பிண்ணனியில் மாறுகின்றது. இந்த காணொளியில் அந்த பெண் ஒஸ்ரியா என கூறுவார், அதனை அவுஸ்ரேலியா என புரிந்து கொண்டு, அவுஸ்ரேலியர்களின் பேச்சு வழ்க்கில் அவர்களது பாரம்பரியமான இன்னொரு இறாலை பார்பக்கியூவில் போடு என்பார் அந்த நடிகர், இந்த நகைச்சுவை புரிவதற்கு அவுஸ்ரேலியர்களினது பாரம்பரியம் அறிந்தவர்களால் முடியும் மற்றவர்கள் முழுவதுமாக புரிந்து கொள்ளமாட்டார்கள். மற்றவர்களது கேள்விகளுக்கு எம்மிடம் பதில் இல்லாமல் இருக்கலாம் ஆனால் எந்த வகையான கேள்விகளும் ஒரு புதிய பரிணாமத்துடன் ஒரு புரிதலை உருவாக்கும் அதனால் நன்மைதான் உண்டாகும், எனக்கு தெரிந்த விடயங்களில் கள உறவுகள் அது தொடர்பான எந்தவித பரிட்சயமுமில்லாமல் விவாதிக்கும் போது அது எனக்கு அதிக புரிதலை ஏற்படுத்துகிறதனை எனது அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன், அதனை எப்போதும் விருப்புடன் எதிர்பார்ப்பதுண்டு(சிலர் தனிப்பட்ட ரீதியில் தாக்குதல் செய்வார்கள் அது அவர்களது திருப்திக்கு அதனை மட்டும் கண்டு கொள்வதில்லை).
  19. உங்கள் கற்பனை நண்றாக இருக்கிறது ஆனால் யதார்த்தத்தில் அப்படி நடக்காது எனும் அர்த்தத்தில் கருத்துவைத்ததாக கருதுகிறீர்கள் என நினைக்கிறேன், உங்களை விட என்னிடம் அதிகமான கற்பனை உண்டு, கொஞ்சகாலத்தின் பின்னர் எமது கை கால்களில் விழுந்து எமது உரிமைகளை தருவார்கள் அதுவரை காத்திருக்கலாம் என😁.
  20. இது எதோ இஸ்ரேலியர்களாலேயே (மொசாட்) மிருகங்கள் என கழித்துவிடப்பட்டவர்களுக்கு சந்தடி சாக்கில் வெள்ளை அடிக்கும் முயற்சி போல் இருக்கிறது, நீங்களும் உங்கள் நண்பரும் 2009 இற்கு பின் பிறந்தவர்களா?
  21. ஒரு வித்தியாசமான கோணத்தில் விடயங்களை அணுகுகிறீர்கள், இதுவும் ஒரு நல்ல கருத்துதான், ஆனால் நடைமுறையில் இலங்கை அரசு மிக தெளிவாக புலிகளை அழிப்பதில்தான் கடந்தகாலத்தில் அக்கறை காட்டி வந்துள்ளது. புலிகள் பிரேமதாசா பேச்சுவார்த்தை நடைபெற்ற பொது இந்திய இராணுவம் வெளியேறிய பின் நல்லூர் கோயிலுக்கு சென்ற புலிகளின் தலைவரது துணைவியாரை பின் தொடர்ந்து புலிகளின் தலைவரின் இடத்தினை அறிந்து அவரை கொல்லும் முயற்சி புலிகளால் முறியடிக்கப்பட்டிருந்தது. இரணில் விகிரமசிங்க அவ்வாறு செய்ய மாட்டாரா என தெரியாது, பிரேமதாச புலிகளுக்கு இந்திய இராணுவத்திற்கெதிராக போராடுவதற்காக அனுப்பிய பார ஊர்திகளில் ஒரு பார ஊர்தி முழுவதுமாக புலிகளின் தலைவரின் பிள்ளைகளுக்கான விளையாட்டு பொருள்களை பிரேமதாசா வழ்ங்கியிருந்தார் என கேள்விப்பட்டிருந்தேன். ஒரு பக்கம் நட்புறவு கொண்டாடிக்கொண்டே மறுபுறம் கொல்ல ஆள் அனுப்புவதில் அவர்கள் கில்லாடிகள்.
  22. சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் காருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன், இதில் புத்திசாலிகள் யார் என்பதனையே வரையறுக்கமுடியாது இதில் எவ்வாறு முட்டாள்களை அடையாளாம் காணமுடியும்? முட்டாள்கள் கருத்து கூறாது மெளனமாக இருக்க வேண்டுமென்றால் ஒரு நாட்டின் தலைவிதியினை தீர்மானிக்கும் தேர்தல்களில் முட்டாள்கள் வாக்களிக்க கூடாது எனும் ஒரு புத்திசாலித்தனமான சட்டத்தினை இயற்றியிருப்பார்கள் என கருதுகிறேன். எனது கருத்து தவறாக இருக்கலாம்.
  23. தங்களது வரிப்பணம் எவ்வாறு செலவழிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தும் கடமை மக்களுக்குண்டு, அந்த கடமையினை தவறினால், அரசுகளின் தவறுகளுக்கு அவர்களும் பங்குதாரர்கள்தான், வியட்னாம் போரில் அமெரிக்க அரசுக்கெதிராக கிளர்ந்த போராட்டங்களும் அமெரிக்க அரசு அதனை நிறுத்துவதற்கு காரணமாக அமைந்தது,

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.