Jump to content

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11007
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Everything posted by நிலாமதி

  1. எப்ப தொடக்கம் நான்கு மொழி கொண்ட நாடு ? சிங்களம் தமிழ் ஆங்கிலம் சைனீஸ்
  2. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாஞ்ச .. சித்திரை புத்தாண்டில் எல்லா நலன்களும் வளங்களும் அமைய வேண்டுகிறேன்.
  3. வரவு செலவு மட்டுமே வாழ்க்கை இல்லை வாழ்க்கை என்பது வணிகமும் இல்லை வாழ்க்கை என்பது உயிரோடடமுடன் வாழ்வது
  4. யாழ்கள உறவுகள், பரிசளிக்க, விரும்பினார்கள் கொரோனாவால் பிளேன் ஓடாததால் சாத்திய படாது .. கொஞ்சம் வடடம் வடடமாக சுற்றி இருக்கலாமே ? விரும்பினார்கள் ஆனால் நிலமை சரியில்லை என கை விட்டுவிட்டார்கள். ஒரு வேளைகொரோனா முடிந்த பின் இது பற்றி யோசிக்கலாம். அப்படியானால் ஜெனிலியாவை வர வைத்து பரிசளிக்கலாம் , என்பது என கருத்து மற்ற கள உறவுகளையும் கலந்து பேசி முடிவெடுக்கலாம். எல்லாம் கால நேரம் கூடி வரட்டும். 😀
  5. நிலையான நின்மதி எமக்கு வேண்டும்-2020 நீள் துயர் துயர் எமை விட்டு அகலவேண்டும் விமானமும் கப்பலும் சேவை வேண்டும்-நாம் விரும்பிய நாடெல்லாம் போகவேண்டும் அருமைமிகு இடமெல்லாம் பார்க்க வேண்டும் அடைபட்டமனம் திறந்து அலசவேண்டும். அழகான வரிகள் எம் விருப்புகளை எல்லாம் நிறைவேற்ற அந்த பரம் பொருளை வேண்டுவோம். பாராட்டுக்கள் கோபி
  6. சபாஷ் சிறீ யர் இனி நம்புவோம். பிழிஞ்ச கைக்கு ஒரு மோதிரமும் அடுப்பில நின்ற கைக்கு ஒரு சோடி காப்பும் யாழ்கள உறவுகள், பரிசளிக்க, விரும்பினார்கள் கொரோனாவால் பிளேன் ஓடாததால் சாத்திய படாது .. கொஞ்சம் வடடம் வடடமாக சுற்றி இருக்கலாமே ?
  7. இந்தக் கதை இன்னும் தொடருதா . ? சாப்பிடடது கூட வெளியால போய் மண்ணோடு மண்ணாகி இருக்கும்😀
  8. ஆயுள் கெடட படத்தை (முறுக்கு ) போடுங்கள். அதுக்கு அற்ப ஆயுள் தானே ? 😀
  9. மீண்டும் பழையதை நினைத்து சிரிப்போம்.
  10. . வேடிக்கை கலந்த கவிதைச் சொந்தக் காரனுக்கு என் பாராட்டுக்கள் 😀
  11. சுமேரியருக்கும் ராஜன் விஷ்வாவிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  12. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாயினி . நோய் நொடியின்றி வாழ இறைவனை வேண்டுகிறேன்.
  13. தள்ளாடும் வயது வருமுன்பு தனக்கென சேமித்து கொள்; தனித்து விடப்படடாலும் , தளராமல், தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழலாம்.
  14. மாலதி அதிகாலை விழித்து விட்டாள் .எழுந்து காலைக்கடனை முடித்தவள், அடுப்பை பற்ற வைத்து , தேநீருக்கான ஆயத்தங்கள் செய்தாள். அப்போது மாமியார் பசுக்களில் பால் எடுத்துக்கொண்டு பாற்செம்புடன் வந்தாள். அவர் வாடிக்கைக்காரர் இருவருக்கு போத்தலில் பாலை நிரப்பி மீதியை மாலதியுடம கொடுக்க அவள் அவற்றை காய்ச்சி குழந்தைகளுக்கும் மாமனாருக்கும் தேநீர் தயாரித்து கொடுத்தாள். தன் மாமியார் பங்கை கொடுக்கவும் அதை வாங்கி ....பருகிக்கொண்டே " மாலதி ...இன்று பட்டணம் போக வேணும் என்று சொன்னனீர். எத்தனை மணிக்கு போகவேனும். ......வரும்போது இவருக்கு ஒரு சாரமும்( லுங்கி) ..மறக்காமல் வாங்கி வாரும். என்றாள். சம்மதம் சொன்ன மாலதி உடுப்பு மாற்றி வெளிக்கிட தயாரானாள் நாலு வயது ரோகிணியும் இரண்டு வயது ரோஷானும் இவளது குழந்தைகள். அவர்களுக்கே உரிய துடுக்கு தனம் உடையவர்கள். மாமனார் பால் போத்தல்களுடன் விநியோகிப்பதற்காக புறப் பட்டார். காலை உணவை எல்லோருக்கும் கொடுத்து தனது பங்கையும் முடித்து கொண்டவள்.ஒன்பது மணி பஸ்சுக்காக புறப்படும் போது பிள்ளை களையும் அமைதிபடுத்தி "விளையாட்டு பொருட்கள் வாங்கி வர வேணும் அம்மா" என்னும் வேண்டுதல் வழியனுப்புதலோடு பஸ் தரிப்பு நோக்கி புறப்பட்டாள் . பஸ் வண்டியும் நேரத்துடன் வரவே ...அதில் ஏறி உட்கார்ந்தாள். பற்றுச்சீ ட்டை பெற்று கொண்டவள் எண்ணம் கடந்த காலத்தை நோக்கி சிறகடித்தது................. தன் பெற்றவரை மீறி மகேந்திரனை கைப்பிடித்துக் கொண்டவள் தான் மாலதி.இவள் பிறந்த வீட்டில் வசதி வாய்ப்புகளை கொண்டவள் . சற்று வசதியானவள். மகேந்திரனை காதலித்தபோது ...அந்தஸ்த்து காரணமாய் மறுக்கவே ஒருநாள் ஓடிபோய் திருமணம் செய்து கொண்டாள். அதே ஊரில் இருந்தாலும் இவளது பெற்றோரும் சகோதரார்களும் இவளை சேர்ப்பதில்லை . கைப்பிடித்த நாள் முதல் மகேந்திரனும் இவளை கண்கலங்காமல் பாதுகாத்தான். மகேந்திரன் , சாதாரண விவசாயக் குடிமகன். தாய் தந்தைக்கு ஒரே பிள்ளை . சற்று வசதி வாய்ப் புகள் குறைவு என்பதால் ஓலை வீட்டிலேயே வாழ்ந்தார்கள். இதனால் தான் மாலதி வீட்டுக் காரர் இந்த திருமணத்தை விரும்பவில்லை. தங்கள் அந்தஸ்துக்கு ஏற்ற மாதிரியில்லை என்பதால். மண முடித்து இரு குழந்தைகளும் பிறந்த பின் , தன் வாழ்வுக்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் பலத்த முயற்சியின் பின் வெளி நாட்டுக்கு புறப்பட்டான் . வாழ்வில் அவன் தாய் தந்தையை பிரிந்த துயரம் ...வேலையின் கடின உழைப்பு துயரை தந்தாலும் எதிர்காலத்துக்காக தாங்கி கொண்டான். மாலதி அவன் அனுப்பிய காசு வங்கியில் பெற்றுக்கொள்வதற்காக தான் பட்டணம் செல்கிறாள். புது வருடம் பிறக்க போகிறது மூத்தவள் ரோகினியை பாடசாலயில் சேர்க்க வேண்டும் ......மாமனார் ..மாமியாருக்கு துணிமணிகள் எடுக்கவேண்டும். மகன் ரோஷன் ...ஒரு மூன்று சில்லு சைக்கிள் வண்டி கேட்டுக்கொண்டிருந்தான்...........அத்தோடு இந்த பணத்தில் மகேந்திரன் போவதற்காக் பட்ட கடனுக்கும் கொஞ்சம் கட்டவேண்டும்......... வங்கிக்கு சென்று பணத்தை பெற்றவள் பெரும் பகுதியை ஒரு இறுக்கிய இணைப்பு கொண்ட கைப் பையினுள் மறைத்து வைத்தாள் மீதியில் தேவையான பொருட்களை வாங்கினாள் .இரண்டு கையிலும் பொருட்களின் சுமை . மனதில் வீடு நோக்கிய அன்புச்சுமை ...........அன்று ஏனோ வஸ் வண்டி மிகவும் ஊர்ந்து செல்வது போல் இருந்தது..வீட்டில் மாமியார் மதிய உணவை பேரப் பிள்ளைகளுக்கு ஊட்டி விட்டு, தான் உண்ணாமல் இவளுக்காக காத்திருப்பார்."அம்மா" என்று அழைத்துக்கொண்டு என் மருமகள் வருவாள் என்று பசியோடு வாசலை பார்த்து கொண்டிருப்பார் என்பது ...மனதை மெல்ல நெருடிக்கொண்டு இருந்தது . ஆம் இவள் தன் மாமியாரை " அம்மா " என்று தான் அழைப்பாள். அவரும் தனக்கு பெண் குழந்தை இல்லயே என்ற கவலை தீர்க்க வந்த இன்னொரு) மகள் என்று தான் உறவு பாராட்டுகிறார்கள். மாமி மருமகள் என்றாலும் வேற்றுமை பாராட்டுவதில்லை . .....மாலதிக்கு அவர் இன்னொரு அம்மா..... சில குடும்பங்களில் பெண்ணுக்கு பெண்களால் தான் எதிரி . எதிலும் குறை சொல்வது . பிழை பிடிப்பது மச்சாள் ( நாத்தனார் ) இருந்துவிடடால் போதும் தனது செல்வாக்கை கைப்பற்ற வந்த எதிரி என்றே எண்ணுவார்கள். அவளுக்கும் ஒரு காலம் வரும் .......நல்ல வாழ்வு வரும் . வாழ்வு வந்தால் இழந்த சொந்தங்கள் தேடி வரும். ..
  15. முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை. முடியுமா? என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை
  16. கலப்பை தூரிகையால் வியர்வைத்துளிகள் குழைத்து பூசப்பட் டதே இந்த பச்சை வர்ணம். ............ பரிசு நெல்மணிகளாய் .... உண்மையான விவசாயியின் வரிகள். நன்றி
  17. உங்கள் துணிவுக்கும் , தன்னம்பிக்கைக்கும் , மற்றவர்கள் பயன் பெறவேண்டுமென்ற ஆர்வத்துக்கும் என் பாராட்டுக்களும் நன்றியும். தெரிவித்து கொள்கிறேன்.
  18. தனிக்காட்டுராஜா, கொழும்பான் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .நூறாண்டுகாலம் நோய் நொடியின்றி வாழ்க
  19. இடைவெளிகள் எப்போதும் பிரிவையே தருகின்றன . ஆனால் பிரிவு இதயங்களுக்கு அல்ல .அழகாக கோர்த்து கதை சொல்லிய விதம் அருமை.
  20. அழகாக கதை சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள். பொருத்தமான பகுதிக்கு வந்திருப்பது மகிழ்ச்சி மேலும் உங்களாக்கங்கள் வரவேண்டும்.
  21. முதல்ல அந்த பெண்ணுக்கு ஒழுங்கா ஒரு காற் சடடையை வேண்டி கொடுங்கோ .கிழிஞ்ச உடுப்பு போட்டிருக்கு. பிறகு பெண்ணை பார்க்கலாம் 😀
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.