Everything posted by புலவர்
-
இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் இன்று : ஜனாதிபதி அநுர தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் விசேட நிகழ்வுகள்
சம்பந்தர் இருந்தால் ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பார்.
-
கிளிநொச்சியில் இடம் பெற்ற சுதந்திரதின எதிர்ப்பு போராட்டம்!
- இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
நானும் மாவையை விமர்சித்திருக்கிறேன்.அது சம்பந்தர்>சுமத்திரனின் ஆட்டத்திற்கு தலையாட்டிய காரணத்தால் மட்டுமே. மேலும் மாவை எல்லோரையும் அனுசரித்துப் போகக் கூடிய தலைவராக இருந்தார். 70 களில் தமிழர் விடுதலை சம்பந்தமாக பல பேராட்டங்களில் கலந்து கொண்டவர். இன்றைய அரசியல் தலைவர்களில் அதிக காலம் சிறையில் இருந்தவர் அவர் மட்டுமே. விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவருடைய பங்களிப்பு இருந்தது.சம்பந்தரைப்போல் எடுத்த எடுப்பிலேயே எம்பியாகவில்லை. அல்லது சுமத்திரன் போல் பேராட்டம் முடிவுக்குப் வந்தபின்னர் பின்கதவால் அரசியலுக்குள் நுழைந்தவருமல்ல. தமிழர் விடுதலைக்கூட்டணியின் உருவாக்கத்தின் பின் செயலற்ற நிலையில் இருந்த தமிழருச்கட்சியின் பதிவைத் தொடந்து பேணிவந்தவர் அதனால்தான் சமபந்தர் உதயசூரியன் சின்னத்தை முடக்கிய பொழுது புதிய சின்னத்திற்கு கால அவகாசம் கிடைக்காத நிலையில் தமிழரசுக்கட்சியை தூசுதட்டி எடுத்து தமித்தேசியக் கூட்டமைப்பின் சின்னமாகப் பயன்படுத்தினார்கள்.அப்படித் தமிழரசுக்கட்சியை கட்சியை கட்டிக்காத்த மாவையை தூக்கி எறிந்து விட்டு கட்சியைும் வழக்கில் மாட்டிவிட்ட சுமத்திரனின் துரோகத்தை தமிழர்கள் இலகுவில் மறக்க மாட்டார்கள். தமிழ்மக்கள் அமைதியாக எல்லாவற்றையும்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் யார்யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை அவர்கள் செயலில் காட்டுவார்கள். சம்பந்தர் மாவை இருவரினதும் இறுதிச்சடங்கை அவதானித்தாலே எல்லாம் புரியும்.- இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
இவரைப்பற்றி நானும் இப்பொழுதுதான் கேள்விபடுகிறேன்.அவர் எவ்லா இடத்திலும் பெரிய பதவிகளை வகித்ததாகச் சொல்லப்பட்டிருக்கு அவை அவரின் சொந்த நிறுவனங்களா என்று குறிப்பிடப்பட வில்லை.பொருளாதாரம் நாட்டினின் முதுகெலும்பு அதில் சாதனை படைத்த தமிழ்மகனுக்கு ஆழந்த இரங்கல்.- இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
இது சுமத்திரனின் கையாள் சமத்திரன் சார்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பாக வழக்குப் போட்டவரின்பதிவு.மாவையின் இறுதிச்சடங்குக்கு வரக்கூடாது என்று மாவையின் இறுதிச்சடங்கில் கட்டப்பட்ட பதாகையில் இவர் பெயரும் இடம் பெற்றிருந்தது. சபை நாகாரீகத்தை சுமத்தின் தரப்புக்கு டபோதியுங்கள். மாவை சுமத்திரனின் ஆட்டத்திற்கு கடிவாளம் போடத காரணத்தாலேயே விமர்சிக்கப்பட்டார். கால் கடந்தே மாவை அதை உணர்ந்து கொண்டார்.- த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்கம்: தலைவர்களின் சிலைகளை விஜய் இன்று திறந்து வைக்கிறார்
கொள்கை தலைவன் ராம்சாணி எங்கடா..? சீமான் அடிச்ச அடியில கொள்கைத்தலைவனைத் தூக்கியிட்டாங்க போல!!!- இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
மாவையின் பூதவுடலுக்கு பல அரசியல் தலைவர்கள் வந்து வணக்கம் செலுதத்தியிருக்கிறார்கள். சம்பந்தரைப்போல் அநாதைப் பிணமாகப் போகவில்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பக்குவம் மாவையிடம் இருந்தது. இதனால்; தலைவர் அதிகாரத்தை இறுக்கமாகக் கடைப்பிடிக்கவில்லை. இதனால் துரோகிகள் உள்ளே வந்து கடைசியில் மாவைையரை ஓரங்கட்டி வைத்து விட்டார்கள். அவர்காலமானதினத்துக்கு முதல்நாள். சிவஞானம்>சத்தியலிங்கம் ஆகியோர் அவரைப்பதவி விலகச்சொன்னதாகவும் கட்சியில் உள்ள பல உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாகவும். மாவை அதற்கு உடன்;படாமல் கடும் மன அழுத்தத்துடன் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு இருந்ததாகவும் தகவல்கள் சொல்கின்றன. எது எப்படியோ சம்பந்தரைப் போல் அநாதைப் பிணமாகப் போகவில்லை.- மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியைகள் இன்று!
ஆழ்ந்த இரங்கல்! https://fb.watch/xvpqMq-LbX/- இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
மாவையை இழந்த பெரும் துயரில் சீ.வி.கே கவலைhttps://fb.watch/xrI3CTLgtG/- இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
மாவை ஐயா சம்பந்தர்' >சுமத்திரன் போல் இலகுவாக அரசியலுக்கு வரவில்லை. இளம் வயதில் பல போராட்டங்களில் ஈடுபட்டார். சிறை சென்றார். தமிழரசுக்கட்சிக்கு தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட போதிலும் பெயருக்கே தலைவராக ஆளுமையற்ற தலைவராக இருந்தார். அவருக்கு சம்பந்தரை மீறிச் செயற்பட முடியாதிருந்தது. 9மரியாதை காரணமாக இருக்கலாம்).சம்பந்தர் கொடுத்த தைரியத்தில் சுமத்திரன் மாவையை மீறி ஆட்டம் போட்டார்.இருந்தாலும் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் அரவணைத்துப் போகும் தன்மை அவருக்கு இருந்தது.அவரது இறுதிச்சடங்குடன் தமிழரசுக்கட்சிக்கும் இறுதிச்சடங்கு நடத்த வேண்டியதுதான். சிறிதரனால் சுமத்திரனின் சுத்துமாத்துகளுக்கு தாக்குப் பிடிக்க முடியாது. இருந்தாலும் சம்பந்தர் போல் அரசியல் அநாதைப்பிணமாகப் போகமாட்டார். அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் அவருக்கு மரியாதை செலுத்தும். ஆளுமையற்ற தலைமையினால் தமிழ்மக்களிடத்தில் செல்வாக்கிழந்த போதிலும். அவரது இழப்புக்கு ஆழ்ந்த இரங்கல்.- வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்!
மாவை சம்பந்தரப் போலன்றவர் அல்ல. இளம் வயதில்பல பேராட்டங்களை நடத்தி சிறை சென்றவர்.பின்னாளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாலும் அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடியவர்.அவர்தலைவராக இருந்தபொழுது சுமத்திரனை அடக்கிவைக்கத் தவறியதன் விளைவையே அவர் அனுபவித்துள்ளார். அதற்கு சம்பந்தரும் ஒரு காரணம். மாவை சம்பந்தரை மேவிப் போகமாட்டார். சம்பந்தரின் மரணத்திற்காக யாரும் அழவில்லை. ஆனால் அதே நிலை மாவைக்கு வராது. அவருக்கு ஓரளவு அனுதாபம் இருக்கும். அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.- வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்!
https://www.facebook.com/share/p/15c4qWTAbS/?mibextid=wwXIfr- சீமான் சந்திப்பில் நடந்தது இதுதான் மனம்திறக்கும் மெய்ப்பாதுகாவலர்.........உண்மையின் தரிசனம்
உண்மை ஒருபோதும் உறங்காது.- சிவஞானம் - பொன்னம்பலம் இடையில் சந்திப்பு
தமிழ்மக்கள் தூக்கி எறிஞ்ச கூழ் முட்டை சுமத்திரனைை கட்சியில் ஈருந்து தூக்கி எறிந்தால்தான் கட்சி உருப்படும்.- சிவஞானம் - பொன்னம்பலம் இடையில் சந்திப்பு
அதுலொரு கூழ்முட்டை சுமத்திரனின் ஆள்தான்.- வேங்கைவயலில் மலம் கலந்தது யார்?
பாமக உள்ளே விசிக கம்மினியூஸ்ட்டுகள்வெளியே கூட்டிக்கழிச்சுப்பார்த்தால் கணக்கு சரியாகவரும்.இந்த விடயத்தில் இதுவரை விசிக மெளனம் சாதித்ததது இதற்குத்தானா?நாளைகக்கே 6 சீற்றுக்கு திருமா உடன்படுவார் என்று கருதலாம். திமுக சரியாக காய்களை நகர்த்துகிறது. வேங்கை வயல் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்த மாதிரியும் இருக்கும் செல்வாக்கில்லாத கம்னியூஸ்ட்டுக்களையும் விசிகவையும் கழட்டி விட்ட மாதிரியும் இருக்கும். இவர்கள் பாமக கூட்டணியில் இணைய மடியாது விஸஜயோடு இணையலாம். பெரியார் மண்ணு!வெங்காய பண்னு.- தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
திராவிட எதிர்ப்பு இவ்வளவு கூர்மையடைத் தொடங்கியதற்கும் வேகமெடுத்ததற்கும் பற்றி எரிவதற்கும் விஜையும் ஒரு காரணமாகி விட்டார். அவரது கொள்கைகளில் சீமான் முரண்படுவது தமிழ்த்தேசியமும் திராவிடத்தேசியமும் இன் இரு கண்கள் என்று சொனதுதான். விஜையக்கு அதுதேவை அவரது பட வியாபாரம் தமிழ்நாட்டைத்தாண்டி வெளியிலும் இருக்கிறது.ஆகவே தமிழ்த்தேசியம்>திராவிடத்தேசியம் என்ற இருதோணிகளில் கால்வைக்கிறார். சினிமாவுக்கு அது அவருக்குக் கை கெகொடுக்கும.ஆனால் அரசியலுக்கு இது தேவையில்லாத ஆணி. திராவிடத்தைச்சுமந்து கொண்டு பல கட்சிகள் இருக்கின்றன. இவர் புதிதாக எதையும் கொண்டுவரவில்லை. எதிரெதிரில் இருக்கும் தமிழ்தேசியத்தையும் திராவிடத்தையும் ஒன்றாகப்போட்டுக் குழப்பியடிக்கிறார். அவருடைய கட்சிப் பொயரில் ஏன் திராவிடம் இல்லை. சீமானுக்குப் பிறகு துவங்கிய கட்சிகளில் திராவிடம் இல்லை. அதே நேரம் தமிழ் சேர்க்கப்பட்டிருக்கிறது.வியைpடம் கொள்கைத் தெளிவு இல்லை. தெளிவான அரசியல் சித்தாந்தம் இல்லை.பெரியாரை வழிகாட்டித்தலைவராக ஏற்கிறார். நெற்றியில் குங்குமத்துடன் மதவழிபாட்டை ஆதரிக்கிறார். அவரது வழிகாட்டியின் கூற்றுப் படி ஒன்றுக்கும் உதவத காட்டுமிராண்டிச் தமிழ்சனிளனைத் தூக்கிச் சுமக்கிறார். முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருக்கிறார். இருந்தாலும் விஜை அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது. விஜை அரசியிலில் வெற்றி பெற்றால் திராவிடத்தை தூக்கி எறிந்து விடலாம் தோற்று விட்டால் திராவிடம் அவரது சினிமா வியாபாரத்துக்கு தேவை.- தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
- தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
அதில்லை ராஜா!இப்ப சீமான் தொடக்கி வைத்த திராவிட எதிர்ப்பு இப்பொழுது பற்றி எரிய ஆரம்பித்துவிட்டது. சீமானை ஊடகங்களில் காட்ட மறுத்த ஊடகங்கள் குறிப்பாகத் திராவிடியா ஊடகங்கள் இப்பொழுது சீமானைத் தலைப்புச் செய்தியாக்கி வைத்துள்ளன. என்ன செங்வது யாழில் உள்ள எழுத்துச் செயலியில் எழுத்துப் பிழை திருத்துவது கடினமாக இருக்கிறது.இடையில் ஒரு திருத்தம் செய்வதற்காக முயன்றால் ஒரு எழுத்தை எழுதியவுடன் அடுத்த எழுத்து கடைசி இடத்துக்குப் போய் விடுகிறது. ஆரம்ப காலகட்டத்தில் யாழில் இருந்த செயலி எழுத்துப்பிழை திருத்துவதற்கு மிகவும் வசதியாக இருந்தது. இந்தக் குறைபாடடை பலமுறை எழுதியும் நிர்வாகம் கருத்திற்கெடுக்க வில்லை.- 1989ஆம் ஆண்டு “கூர்” (Chur)நகரில் குழந்தைகள் முரளி & முகுந்தனை குடியிருப்பை தீவைத்து சுவிஸ் நியோ-நாசிகள் கொலைசெய்தார்களா?
அன்று சுவிஸ்நியோநாசிகளினால் வெறுக்கப்பட்ட தமிழர்களின் பிள்ளைகள் நல்ல முறையில் படித்து சுவிஜ் நாட்டின் பொருளாதாரத்துக்குப் பங்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.- தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
திராவிடக்கட்சிகளள குறிப்பாக திமுக தேர்தல் மேடைகளில் நடிகைககைளை அரைகுறை ஆடைகளுடன் ஐட்டம் பாட்டுப்போட்டு ஆட்டம் போட்டு கூட்டம் சேர்ப்பது மாதிரி யாழுக்கும் செய்ய வேண்டும் என்கிறீர்கள்.. அந்தக்காலத்தில் nhபன்னியின் செல்வன்> கடல்புறா Nhன்ற பலபாகங்களைக் கொண்ட புத்தகங்களை வாசித்த பழையவர்களுக்கே இந்த நவீன தொலைபேசிகளின் வரவால் வாசிப்பு பழக்கததைத் தொடர முடியாமல் இருக்கிறது.மாற்றத்திற்கேற்ப நாங்களும் புதியவற்றை முற்றாக ஒதுக்கிவிடாமல் அதற்கேற்ப எம்மைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். என்ன இப்பொழுது கட்டற்ற செய்திப்பரவல் நடைபெறுவதால் உண்மை எது பொய் எது என்பதை பகுத்துப் பார்ப்பதற்குள் பொய் உலகத்தைச் சுற்றி வந்து விடுகிறது.- தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
அதுதானே திராவிட நிலப்பரப்பில் இரும்புக்காலம் என்றல்லவா தலைப்பு இருந்திருக்க வேண்டும்.பொய்கள் வேடங்கள் எல்லாம் நீண்டகாலம் நிலைத்திருக்காது. உண்மைகளை நீண்டகாலம் மூடிமறைக்க முடியாது. அது வெளிப்பட வேண்டிய நேரத்தில் வெளிப்படும். இது திராவிடத்தின் பொய்கள் அம்பலப்பட்டு திராவிடத்தின் அழிவுக்காலம்..- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
https://x.com/drsenthil84/status/1881028773812019434 Date and Time (Original) - 2008:02:14 21:48:36 Date and Time (Digitized) - 2008:02:14 21:48:36- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
தமிழின் முதல்காப்பியத்தில் இயற்கையையே மங்கலவாழ்த்துப்பாடலாக உள்ளது.https://www.tamilvu.org/slet/l3100/l3100pd5.jsp?bookid=50&pno=3 முன் பக்கம் தேடுதல் புகார்க் காண்டம் 1. மங்கல வாழ்த்துப் பாடல் "வாழ்த்தும் வணக்கமும்" 5 10 திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!- கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று, இவ் அம் கண் உலகு அளித்தலான். ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!- காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு மேரு வலம் திரிதலான். மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!- நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல், மேல நின்று தான் சுரத்தலான். பூம் புகார் போற்றுதும்! பூம் புகார் போற்றுதும்! வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு ஓங்கிப் பரந்து ஒழுகலான். உரை உரை உரை உரை- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
புகையிலைக் கன்றுக்கு தலைப்பு முதல் முறிக்கும் பொழுதும் பொங்கல் வைப்பது எங்கள் ஊரில் வழமை. விவசாயீகள் அடிக்கடி போங்குவார்கள். உழவர்திருநாள்தானே பொங்கல். அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள். - இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
Important Information
By using this site, you agree to our Terms of Use.