Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. திமுக எதிர்ப்பு வாக்குகள் எங்கே போய் விட்டதன. நாதகவுக்கு அதிமுக .பாஜக >வாக்காளர்களும் வாக்களிக்கவில்லை. கடந்த தேர்தலை விட 15 ஆயிரம் வாக்களிக்க வில்லை. நோட்டாவுக்கு 5000 பேர கடந்த தேர்தலை விட கூடுதலாக வாக்களித்திருக்கிறார்கள். விஜையஜயப் பகைத்ததனால் விஜை ரசிகர்களும் போட வாய்ப்பில்லை. பெரியார்பிறந்த ஊரில் பெரியாரை சகட்டு மேனிக்கு வேறு விமர்சித்திருக்கிறார். அப்படியிருக்க 23000 பேர் வாக்களித்திருக்கிறார்கள். இது நாதகவுக்கு விழுந்த வாக்குகள் தான் அடுத்த தேர்தலில் இது மேலும் உயரவே வாய்ப்பிருக்கிறது. வியைகாந்கட்சி>கமல்கட்சி போல் தேயந்த்து கொண்டு போகாமல் தனித்து நின்று பல கட்சி கூட்டணியை எதிர்த்து பெற்ற வாக்குகள். நாதக தெபடர்ந்து வளர்ந்து கொண்டு வருகிறது. அதை தேர்தல் மூலம் நிரூபித்தும் காட்டியிருக்கிறது.
  2. கோஷான் எந்த ஆதாரத்தை வைத்து இப்படிச் சொல்கிறீர்கள். சண் நியூசில் செய்தித் தயாரிப்பாளராகுவதற்கு அத்தனை தகுதிகளும் தங்களுக்கு உண்டு.அதிமுக வாக்குகளை திமுக போடுமாறும் அன்றேல் வாக்களிக்காமல் இருப்பதற்கும் பல அதிமுக நிர்வாகிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டிருக்கு. இதற்கு விகடன் உட்பட செய்தி நிறுவனங்கள் வெளியிட்டிருந்தன.நாதக வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார். தெர்மாக்கோல் ராயு ஆகியோர் அதிமுகவினரைக் கேட்டுள்ளனர்/சீமான் பெரியாரை கடுமையாக விமர்சித்தும் பெரியாரின் ஊரிலேயே அவருடைைய வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கிறது.
  3. ஆரம்ப விலை ரூ.50,000... அ.தி.மு.க புள்ளிகளுக்கு வலை..! அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சக்கரபாணி ஆகியோர் புறநகர்ப் பகுதியிலுள்ள பவானி, பெருந்துறையில் தங்கியிருந்து ஆலோசனைகளை வழங்கிவருகிறார்கள். எ.வ.வேலுவின் மகன் கம்பன், தன் தந்தைக்கு ஒதுக்கப்பட்ட வார்டு பணிகளை கவனித்துவருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு வாகனத்தைத் தவிர்த்துவிட்டு, வேறொரு காரில் தினமும் கோவையிலிருந்து வந்து செல்கிறார். திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளரான பத்மநாபன் மூலம் தனக்கு ஒதுக்கப்பட்ட வார்டு பணிகளை கவனித்து வருகிறார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன். தொகுதிக்குள் கணிசமாக இருக்கும் முதலியார் சமூக வாக்குகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வளைத்துவருகிறார். எங்களுக்கு இருக்கும் பெரிய சிக்கலே, சுமார் 60 `பூத்’களில் கணிசமாக இருக்கும் அ.தி.மு.க வாக்குகள்தான். 2023 இடைத்தேர்தலின்போது, தி.மு.க-வின் பலமான கவனிப்புக்கு மத்தியிலும், அ.தி.மு.க வேட்பாளரான தென்னரசுக்கு 43,923 வாக்குகள் கிடைத்தன. அதாவது, பதிவான வாக்குகளில் சுமார் 25 சதவிகிதம் வாக்குகள் அ.தி.மு.க-வுக்கு விழுந்தன. அந்த வாக்குகளைக் குறிவைத்துத்தான் அமைச்சர் முத்துசாமி காய்நகர்த்திவருகிறார். அமைச்சர் முத்துசாமி, அ.தி.மு.க-வில் பல ஆண்டுகள் பயணித்தவர் என்பதால் அந்தக் கட்சியில் இருப்பவர்களின் பெயரைச் சொல்லி அழைக்கும் அளவுக்கு, அவர்களிடம் இன்றைக்கும் நெருக்கமாக இருக்கிறார். அ.தி.மு.க பூத் கமிட்டி உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், மாநகரச் செயலாளர், மாவட்டச் செயலாளர் என அனைவரிடமும் தி.மு.க-வை ஆதரிக்குமாறு தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறார் முத்துசாமி. இதற்கிடையே, அ.தி.மு.க நிர்வாகிகளின் பொறுப்புக்கேற்றதுபோல, 50,000 ரூபாயில் தொடங்கி, சில லட்சங்கள் வரையில் வலுவான கவனிப்பும் தனித்தனியே நடைபெற்றிருக்கிறது. இந்த வார இறுதிக்குள், சிக்கல் நிறைந்த அந்த 60 பூத் அ.தி.மு.க நிர்வாகிகளுக்கும் கவனிப்புகள் பலமாகவே சென்று சேர்ந்துவிடும். பிரசாரத்தின்போது, ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு 200 ரூபாய் வழங்கப்படுகிறது. ‘அ.தி.மு.க மகளிரணி நிர்வாகிகள் ஆரத்தி எடுக்க வந்தாலும், அவர்களைத் தடுக்கக் கூடாது’ என்று சொல்லிவிட்டார் முத்துசாமி. காலை, மாலை எனப் பிரசாரத்துக்கு வரும் ஆண்களுக்கு 300 ரூபாய் வழங்கப்படுகிறது. அதிலும், அ.தி.மு.க தொண்டர்கள் பெரும்பாலானவர்கள் கலந்துகொள்கிறார்கள். தி.மு.க-வுக்கென்று ஓட்டுப் போடாவிட்டாலும், அமைச்சர் முத்துசாமி கேட்டுக்கொண்டார் என்பதற்காக, தி.மு.க வேட்பாளர் சந்திரகுமாருக்கு அ.தி.மு.க வாக்குகள் விழுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது” என்றனர் விரிவாக. வார்டுவாரியாக அ.தி.மு.க-வினருக்குக் கொடுக்கப்படும் பணக் கணக்கு, தனியாக நோட்டு போட்டுப் பராமரிக்கப்படுகிறதாம். ஈரோட்டிலுள்ள தி.மு.க கவுன்சிலர்களையும் தாண்டி, மற்ற கட்சி நிர்வாகிகளையும் தனித் தனியே கவனிக்க ஆயத்தமாகிறாராம் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதற்கிடையே, தி.மு.க-வுக்கு எதிராகத் தீவிரமாகக் களமாடிவரும் நாம் தமிழர் கட்சி, சமூகரீதியிலான வியூகத்தைக் கையில் எடுத்திருக்கிறது. வெற்றி பெறாவிட்டாலும், எப்படியாவது டெபாசிட் வாங்கிவிட முனைப்பு காட்டுகிறார்கள் அவர்கள்.
  4. ■23810 வாக்குகள் 15.4% ~கடந்த இடை தேர்தலை விட இரட்டிப்பு வளர்ச்சி. ■இது பெரியார் மண்ணு இல்ல ~பெரியாரே ஒரு மண்ணுன்னு நிறுவியாச்சி.! 2000ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளினால் கட்டுப்பணத்தை இழந்திருக்கிறது.(அதற்கும் எத்தனை தில்லைமுல்லுகளைச் செய்தார்களோ தெரியவில்லை) பெரியாரை எதிர்த்து பெரியாரின் தொகுதியில் அதுவும் பெரியாரின் பூட்டனும்,பெரியாரின் மகனும் எம்எல்ஏ ஆக இருந்த தொகுதியில் ஆளும்கட்சிக்குச் சார்பான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி இவ்வளவு வாக்குகளைப் பெற்றது அதற்கு வளர்ச்சிதான்.தேசிக்காயோடு கட்டுப்பணம் செலுத்திய திமுக வேட்பாளரை தேசிக்காயும் பணமும் காப்பாற்றியிருக்கிறது.நாம் தமிழர் பெற்ற வாக்குகள் விபத்துக்கு சம ம் என்று திமுக வேட்பாளர் கூறியிருப்பது அவரது பதட்டத்தைக் காட்டுகிறது.விரைவில் இடைத்தேர்தல் வந்தாலும் வரலாம்.
  5. இந்தாள் சிலவேளை தெளிவாகப் பேசுகிறார் பலவேளைகளில் குழப்பமாகப் பேசுகிறார் . ஒரே குழப்பமாக இருக்கிறது.அந்த நேரத்தில் வாய்க்கு எது வருகுதோ அதைப் பேசிவிடுகிறார்..இரந்தாலும் பாராளுமன்றத்தில் செய்தியாகி விடுகிறார். வைத்தியாசாலை ஊழலில் தொடங்கி தானே ஊpழ் செய்கிறதாயும் சொல்கிறார். எந்த அரசியல்வாதி ஊழல் செய்ய விi;லை? கோணான் சொன்ன மாதிரி சின்ன ஊழல் என்றாலும் அதை பகிரங்கமாகப் போட்டு உடைக்கிறார்.இவர் தமிழ்மக்களுக்கு என்ன செய்யப் போகிறார். தங்கம்தான்பாவம் இடையில் கிடந்து கஸ்ரப்படுகுது.
  6. ஆமா ரணில் ரொம்ப நல்லவர்தானே! அந்த ஜனாதிபதி என்ற கனவுப்பதவியைப் பெற்றது எல்லாவற்றையும் விடப் பெரிய நட்ட ஈடு.
  7. சுமத்திரன் தனது குள்ளநரி ஆட்டத்தை; தொடக்கிவிட்டார்.மாவைக்கு மன உளைச்சலைக் கொடுத்து இறுதிக்காலங்களில் அவரது நிம்மதியைக் குலைத்தது மட்டுமல்லாமல் அவர் இறப்புக்குப் பின்னரும் சுமத்திரன் விட்டபாடில்லை. தமிழருக்கட்சிதை; தலைவர் ஆவதுதான் அவர் குறிக்கோள். இப்படி நரிவேலை செய்து அவர் தலைவராகும் போது தமிழரகு;கட்சிக்கு என்று எந்த ஆதரவாளர்களும் இருக்கமாட்டார்கள்.
  8. அப்படிப்பார்த்தால் அமெpரிக்கா டி;ரம்புக்குரிய மண் அல்ல அதேபோல் அவுஸ்தரேலியா. கனடா என்று இந்தப்பட்டியல் நீளும் அதைத்தானே சொல்ல வருகிறீர்கள்.
  9. ஐரோப்பிய ஒன்றயத்தில் இருந்து பிரிட்டன் பிரிய வேண்டும் என்று கிட்டத்தட்ட 99 வீதமான ஈழத்தமிழர்கள் எந்த வித துரே நோக்கின்றியும். ஐரோப்பி ஒன்றயத்தின் பல நாடுகளில் தமிழ்கள் வாழுகின்றார்கள் என்ற சிந்தனையுமின்றி வாக்களித்தார்கள். அதன் விளைவுகளை இப்போது பிரிட்டன் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் இதன் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும். இது போன்ற செயற்பாடே டிரம்புக்கு வாக்களித்த முஸ்லிம்கள் >தமஜிழர்கள் >இந்தியர்கள் மற்றும் குடியேறிகளின் செயற்பாடாகும். ஆப்பிழுத்த குரங்கின் நிலைதான். சரியாகச் சொன்னீர்கள்.
  10. நானும் மாவையை விமர்சித்திருக்கிறேன்.அது சம்பந்தர்>சுமத்திரனின் ஆட்டத்திற்கு தலையாட்டிய காரணத்தால் மட்டுமே. மேலும் மாவை எல்லோரையும் அனுசரித்துப் போகக் கூடிய தலைவராக இருந்தார். 70 களில் தமிழர் விடுதலை சம்பந்தமாக பல பேராட்டங்களில் கலந்து கொண்டவர். இன்றைய அரசியல் தலைவர்களில் அதிக காலம் சிறையில் இருந்தவர் அவர் மட்டுமே. விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவருடைய பங்களிப்பு இருந்தது.சம்பந்தரைப்போல் எடுத்த எடுப்பிலேயே எம்பியாகவில்லை. அல்லது சுமத்திரன் போல் பேராட்டம் முடிவுக்குப் வந்தபின்னர் பின்கதவால் அரசியலுக்குள் நுழைந்தவருமல்ல. தமிழர் விடுதலைக்கூட்டணியின் உருவாக்கத்தின் பின் செயலற்ற நிலையில் இருந்த தமிழருச்கட்சியின் பதிவைத் தொடந்து பேணிவந்தவர் அதனால்தான் சமபந்தர் உதயசூரியன் சின்னத்தை முடக்கிய பொழுது புதிய சின்னத்திற்கு கால அவகாசம் கிடைக்காத நிலையில் தமிழரசுக்கட்சியை தூசுதட்டி எடுத்து தமித்தேசியக் கூட்டமைப்பின் சின்னமாகப் பயன்படுத்தினார்கள்.அப்படித் தமிழரசுக்கட்சியை கட்சியை கட்டிக்காத்த மாவையை தூக்கி எறிந்து விட்டு கட்சியைும் வழக்கில் மாட்டிவிட்ட சுமத்திரனின் துரோகத்தை தமிழர்கள் இலகுவில் மறக்க மாட்டார்கள். தமிழ்மக்கள் அமைதியாக எல்லாவற்றையும்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் யார்யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை அவர்கள் செயலில் காட்டுவார்கள். சம்பந்தர் மாவை இருவரினதும் இறுதிச்சடங்கை அவதானித்தாலே எல்லாம் புரியும்.
  11. இவரைப்பற்றி நானும் இப்பொழுதுதான் கேள்விபடுகிறேன்.அவர் எவ்லா இடத்திலும் பெரிய பதவிகளை வகித்ததாகச் சொல்லப்பட்டிருக்கு அவை அவரின் சொந்த நிறுவனங்களா என்று குறிப்பிடப்பட வில்லை.பொருளாதாரம் நாட்டினின் முதுகெலும்பு அதில் சாதனை படைத்த தமிழ்மகனுக்கு ஆழந்த இரங்கல்.
  12. இது சுமத்திரனின் கையாள் சமத்திரன் சார்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பாக வழக்குப் போட்டவரின்பதிவு.மாவையின் இறுதிச்சடங்குக்கு வரக்கூடாது என்று மாவையின் இறுதிச்சடங்கில் கட்டப்பட்ட பதாகையில் இவர் பெயரும் இடம் பெற்றிருந்தது. சபை நாகாரீகத்தை சுமத்தின் தரப்புக்கு டபோதியுங்கள். மாவை சுமத்திரனின் ஆட்டத்திற்கு கடிவாளம் போடத காரணத்தாலேயே விமர்சிக்கப்பட்டார். கால் கடந்தே மாவை அதை உணர்ந்து கொண்டார்.
  13. கொள்கை தலைவன் ராம்சாணி எங்கடா..? சீமான் அடிச்ச அடியில கொள்கைத்தலைவனைத் தூக்கியிட்டாங்க போல!!!
  14. மாவையின் பூதவுடலுக்கு பல அரசியல் தலைவர்கள் வந்து வணக்கம் செலுதத்தியிருக்கிறார்கள். சம்பந்தரைப்போல் அநாதைப் பிணமாகப் போகவில்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பக்குவம் மாவையிடம் இருந்தது. இதனால்; தலைவர் அதிகாரத்தை இறுக்கமாகக் கடைப்பிடிக்கவில்லை. இதனால் துரோகிகள் உள்ளே வந்து கடைசியில் மாவைையரை ஓரங்கட்டி வைத்து விட்டார்கள். அவர்காலமானதினத்துக்கு முதல்நாள். சிவஞானம்>சத்தியலிங்கம் ஆகியோர் அவரைப்பதவி விலகச்சொன்னதாகவும் கட்சியில் உள்ள பல உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாகவும். மாவை அதற்கு உடன்;படாமல் கடும் மன அழுத்தத்துடன் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு இருந்ததாகவும் தகவல்கள் சொல்கின்றன. எது எப்படியோ சம்பந்தரைப் போல் அநாதைப் பிணமாகப் போகவில்லை.
  15. மாவை ஐயா சம்பந்தர்' >சுமத்திரன் போல் இலகுவாக அரசியலுக்கு வரவில்லை. இளம் வயதில் பல போராட்டங்களில் ஈடுபட்டார். சிறை சென்றார். தமிழரசுக்கட்சிக்கு தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட போதிலும் பெயருக்கே தலைவராக ஆளுமையற்ற தலைவராக இருந்தார். அவருக்கு சம்பந்தரை மீறிச் செயற்பட முடியாதிருந்தது. 9மரியாதை காரணமாக இருக்கலாம்).சம்பந்தர் கொடுத்த தைரியத்தில் சுமத்திரன் மாவையை மீறி ஆட்டம் போட்டார்.இருந்தாலும் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் அரவணைத்துப் போகும் தன்மை அவருக்கு இருந்தது.அவரது இறுதிச்சடங்குடன் தமிழரசுக்கட்சிக்கும் இறுதிச்சடங்கு நடத்த வேண்டியதுதான். சிறிதரனால் சுமத்திரனின் சுத்துமாத்துகளுக்கு தாக்குப் பிடிக்க முடியாது. இருந்தாலும் சம்பந்தர் போல் அரசியல் அநாதைப்பிணமாகப் போகமாட்டார். அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் அவருக்கு மரியாதை செலுத்தும். ஆளுமையற்ற தலைமையினால் தமிழ்மக்களிடத்தில் செல்வாக்கிழந்த போதிலும். அவரது இழப்புக்கு ஆழ்ந்த இரங்கல்.
  16. மாவை சம்பந்தரப் போலன்றவர் அல்ல. இளம் வயதில்பல பேராட்டங்களை நடத்தி சிறை சென்றவர்.பின்னாளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாலும் அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடியவர்.அவர்தலைவராக இருந்தபொழுது சுமத்திரனை அடக்கிவைக்கத் தவறியதன் விளைவையே அவர் அனுபவித்துள்ளார். அதற்கு சம்பந்தரும் ஒரு காரணம். மாவை சம்பந்தரை மேவிப் போகமாட்டார். சம்பந்தரின் மரணத்திற்காக யாரும் அழவில்லை. ஆனால் அதே நிலை மாவைக்கு வராது. அவருக்கு ஓரளவு அனுதாபம் இருக்கும். அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.