Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. தமிழ் சினிமா கேரள சினிமா தெலுங்கு சினிமா கர்நாடக சினிமா இந்த 4 மாநிலத்திலும் 7 பேருக்கு மேல இதுவரைக்கும் பாலியல் வழக்கு கொடுத்து இருக்காங்க அப்படி வழக்கு கொடுத்து பணம் வாங்குவதுதான் இந்த தர்மத்தாயின் குலத்தொழில்... சீமானை வீழ்த்துவதற்கு திமுகவின் கடைசி ஆயுதம் இந்த உத்தம பொம்பள.. விஜலட்சுமி கடந்து வந்த பாதை 2006 - Director ரமேஸ் 2007 - கன்னட நடிகர் சுர்ஜன் 2010 - செந்தமிழன் சீமான் 2014 - மன அழுத்தம் 2019 - கன்னட நடிகர் 2020 - மீண்டும் சீமான்… 2021 - நடிகர் Jaggesh 2023 - மீண்டும் சீமான்…!https://fb.watch/y4pMPciKyq/
  2. விழுந்தாலும் மீசை யில் மண்படவில்லை.2026 அதைத்தானே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்.
  3. சுத்தி சுத்திசுப்பரற்ற கொல்லைக்குள்ளேயே நிற்கிறீர்கள். அந்த நடிகை சீமானுடன் மட்டுமல்ல மற்றும் பலருடன் தொடர்பு வைத்திருக்கிறார். சீமான் விடயத்தை மட்டும் ஒவ்வாரு தேர்தல் வேளைகளிலும் நடிகையை எல்லாவழிகளிலும் உசுப்பேத்தி சீமானை அவமானப்படுத்தி அவரை அரசியல்அரங்கிலிருந்து வெளியேற்ற முயற்சிக்கிறார்கள். சீமானைத்தவிர வேறு யாராக இருந்தாலும் அரசியலை விட்டே காணாமல் போய் விட்டிருப்பார்கள். சீமானை சுற்றி 200 இற்ககு மெற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. பெண்சம்பந்தமான வழக்கு என்பதால் இது எடுபடும் என்று ஆட்சியாளர்கள் நினை;தார்கள். அரசியல்கட்சிகளும் மெளனம் காத்தன.நினத்தற்கு மாறாக Back fireஆகிவிட்டது. முதல்வரின் பிறந்தநாள் நேரஞ்சல் பண்ண முடியாது எங்கும் எங்கும் அன்புமணியும் அண்ணாமலையும் மிகவும் தாமதமாக னண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.சீமானுக்கு இலவச விளம்பரம் கொடுத்து இருக்கிறார்கள். திமுக அரசுசீமானைவிமர்சிப்பவரகளும் சேர்த்து பல்பு வாங்கியுள்ளது. https://youtu.be/eGKCbzuyLaY?si=a-TWNcn3zXZuIrED
  4. உண்மைதான்.வாழ்த்துகள் இந்தியா தோற்க வேண்டும்.
  5. BBC NewsZelensky told to leave White House after clashing with Tr...The US president calls his Ukrainian counterpart "disrespectful" and says "make a deal or we're out".ட்ரம்பின் கருத்து அமெரிக்காவின் கருத்து. அமெரிக்க மக்கள் ட்ரம்பை தொற்கடித்தபின் மீண்டும் தெரிவு செய்திருக்கிறார்கள். ட்ரம்பின் தேர்தல் விஞ்ஞாபனம் கமலா வின் விஞ்ஞாபனத்தை விட அமெரிக்காவுக்க கூடுதல் அனுகூலமாக இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள்.எந்த ஓரு நாட்டுக்கும் ஒரு வெளியுறவுக் கொள்கை இருக்கும் யார் அதிகாரத்துக்கு வந்தாலும் வெளியுறவுக் கொள்கை மாறாது. அமெரிக்காவில் ட்ரம்ப் வெளியுறவு அதிகாரிகளை மீறி முடிவுகளை எடுக்கிறாரா?இல்லை உண்மையிலேயே அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை அவர் சரியாகப் பின்பற்றுகிறாரா?பிறக்சிற்கு ட்ரம்ப் ஆதரவு புட்டின் ஆதரவு ஸ்ராமரும் ஆதரவு கூட்டிக்கழித்துப் பார்த்தால் தலைசுத்துது.
  6. https://x.com/mchellathambi/status/1895116634500534535?s=46&t=44aq5wUJC7mrtrJVSmck3A ங்கொப்பனாட்டமா நாங்க? ஐயோ அப்போவ் என்னை கொல்றாங்க கொல்றாங்கன்னு கத்த #கோழை_ஸ்டாலின் சீமான் வீட்டில் காவல்துறை வந்ததிலிருந்து நடந்தது அனைத்து நிகழ்வுகளும்🤔😡⁉️ பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அண்ணன் சீமான் பேசியது வரை 😡🤔⁉️ முழு காணொளி தொகுப்பு இது 😡😡😡☝️☝️🔥
  7. வீட்டில் ஆட்கள் இருக்கும் போது அழைப்பாணையக் கேற்றில் ஒட்ட வேண்டிய காரணம் என்ன?அழைப்பாணையையப் பெறுவதற்கு யாரும் இல்லா விட்டால் அழைப்பாணையை ஒட்டி விட்டு படம் எடுத்து போவதுதான் பொலிஸ் வேலை.அதுவும் வளரசவாக்கம் பொலிஸ் பார்க்க வேண்டிய வேலையை நீலால்கரை பொலிஸ் ஏன் பார்த்தது? ஒட்டு பிறகு மாடு சாப்பிட்டாலோ அல்லது பெரும் மழை வந்து அழிந்தாலோ மாட்டையும் மழையையும் கைது செய்வார்களா? கரெக்ட் https://x.com/bmw_lover_03/status/1895190458428805459?s=46&t=44aq5wUJC7mrtrJVSmck3A சீமான் தலைமறைவாகத் திரியும் அவரை நபரல்ல ஒவ்வொரு நாளும் ஊடகங்களுக்கு முன்னால் பேட்டி கஒடுத்துக் கொண்டிருக்கும் ஒரே அரசியல் தலைவர்.
  8. நேற்று அண்ணன் சீமான் அவர்களது வீட்டில் நடந்தது அதிகார அத்துமீறல்; அடாவடித்தனம்! அட்டூழியம்! வழக்கின் விசாரணைக்கு அழைப்பாணை (SUMMON) விடுக்கப்படுவது என்பது மிக இயல்பான நடைமுறை. அது குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு நேரிலோ அல்லது அவரைச் சார்ந்தவர்களிடமோ கொடுக்கப்படும். எவரையும் அணுக முடியாதபட்சத்தில், தொடர்புடையவரின் வீட்டில் அதனை ஒட்டி, ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு கிளம்புவார்கள் காவலர்கள். இவ்வளவே! அண்ணன் சீமானைப் பொறுத்தவரை வழக்கு, அழைப்பாணை, விசாரணை, கைது, சிறை என எதுவும் புதிதில்லை. அண்ணன் மீதான வழக்குகளுக்கு வளசரவாக்கத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலோ அல்லது சின்ன நீலாங்கரையிலுள்ள வீட்டிலோ காவலர்கள் அழைப்பாணை வழங்குவார்கள். கட்சி அலுவலகத்திற்கு அழைப்பாணை வழங்க வந்த காவலர்கள் உணவருந்தி சென்ற நிகழ்வெல்லாம் உண்டு. நேற்றைய தினம் அண்ணன் சீமான் கிருஷ்ணகிரியில் இருந்தார் என்பது எல்லோரும் அறிந்ததுதான். அதனால், அழைப்பாணையை காவலர்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் கட்சி அலுவலகத்திற்கு வந்து வழங்கியிருக்கலாம். இல்லையெனில், அண்ணன் சீமான் வீட்டில் உள்ளவர்களிடம் வழங்கியிருக்கலாம். மாறாக, வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே அவர்கள் முன்னிலையிலேயே கதவில் ஒட்ட வேண்டிய அவசியமென்ன? அண்ணன் சீமான் தரப்பை அணுக ஆட்கள் இருக்கும்போது கதவில் ஒட்டியது எதற்கு? அதன்பிறகு, அதைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு வளசரவாக்கம் காவலர்கள் சென்றுவிட்டார்கள். அதாவது, அந்த அழைப்பாணை அண்ணன் சீமானுக்குக் கொடுக்கப்பட்ட கணக்குதான்; அந்த அழைப்பாணைக்கு நேர்நிற்கவில்லையென்றால், சட்டப்பூர்வ நகர்வுகளை அவர்கள் மேற்கொள்ளலாம். மற்றபடி, ஒட்டப்பட்ட அழைப்பாணையைக் கிழித்தாலோ, காறி உமிழ்ந்தாலோ, கழுதைத் தின்றாலோ, காக்கை எச்சமிட்டாலோ அதில் தலையிட காவல்துறைக்கு எவ்வித உரிமையுமில்லை. அதனால், வளசரவாக்கம் காவலர்கள் அழைப்பாணையை ஒட்டிவிட்டுச் சென்ற பிறகு, அதனைக் கிழித்ததில் எந்த சட்டச் சிக்கலுமில்லை. இப்படியிருக்க, மூக்கு வியர்த்தது போல நீலாங்கரை காவலர் பிரவீன் ராஜேஷ் அத்துமீறி வீட்டுக்குள் நுழைய வேண்டிய அவசியமென்ன? வழக்கு இருக்கும் வளசரவாக்கம் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்களே சென்றுவிட்டப் பிறகு, நீலாங்கரை காவல் ஆய்வாளருக்கு அங்கு என்ன வேலை? கதவைத் திறந்ததும் சனநாயகப்பூர்வமான உரையாடலைக்கூட நிகழ்த்தாது எடுத்த எடுப்பிலேயே அண்ணன் அமல்ராஜ் மீது கைவைத்து சட்டையைப் பிடித்துத் தரதரவென இழுத்தும், ஒருமையில் பேசியதும், தாக்கியதும் எதற்கு? காவல்துறை ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் அண்ணன் அமல்ராஜை குற்றவாளி போல நடத்த வேண்டிய அவசியமென்ன? குற்றவாளிகளைக்கூட கைதி என அழைக்கக்கூடாது; சிறைவாசி என அழைக்க வேண்டும். கைகளில் விலங்கிட்டு அழைத்துச் செல்லக்கூடாது எனும் விதிமுறைகள் இருக்கும்போது, ஒரு முன்னாள் இராணுவ வீரரை இவ்வளவு மோசமாகவா நடத்த வேண்டும்? தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய அரசியல் கட்சியின் தலைவரது வீட்டுக்குள் திருடன் போல அத்துமீறுவதா சனநாயகம்? சாதாரண அழைப்பாணை விவகாரத்தை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் இவ்வளவு களேபரமாக மாற்றியது யாரைத் திருப்திப்படுத்த? ‘அப்பா செத்ததுக்கு பழிவாங்கும் மகன்’ எனும் பழைய படத்தை ஓட்டி, வன்மத்தைத் தீர்க்க வந்தாரா பிரவீன் ராஜேஷ்? தனது தந்தை ராஜீவ்காந்தியோடு இறந்தார் என்பதற்காக, அதனை மனதில் வைத்துக்கொண்டு வஞ்சம் தீர்க்க முனைந்தாரா? அண்ணன் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரது விடுதலைக்கு எதிராக பிரவீன் ராஜேஷ் குடும்பம் நின்றதன் நீட்சியா இது? எங்கள் அண்ணன் பேரறிவாளனை முதல்வர் ஸ்டாலினும்தான் கட்டித் தழுவினார். அவ்வளவு ரோசமிருந்தால் அந்த ஸ்டாலினுக்குக் கீழே காவலராக வேலைசெய்யமாட்டேனென வேலையைத் துறந்துவிட்டுப் போக வேண்டியதுதானே? எதுக்கு இந்த வெட்டி வீராப்பு? துளியும் உண்மையின்றி, அண்ணன் அமல்ராஜ். துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும், காவல் ஆய்வாளரைத் தாக்கியதாகவும் பச்சைப்பொய்யுரைத்து, அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்து சிறைப்படுத்தியிருக்கிறார்கள். எல்லா அயோக்கியத்தனங்களையும், அத்துமீறல்களையும் செய்தது பிரவீன் ராஜேஷும், அவரை ஏவிவிட்ட திமுக அரசும். இதில் ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள் அண்ணன் அமல்ராஜும், அழைப்பாணையைக் கிழித்ததற்காகச் சிறைப்படுத்தப்பட்ட சுபாகரும். திமுகவுக்கு ஏவல் வேலைபார்க்கும் காவல்துறையின் அராஜகத்தை இன்றைக்கு நீலப்புலிகள் இயக்கம், SDPI, இந்திய தேசிய லீக் தவிர்த்த, அத்தனை சனநாயக அமைப்புகளும், இடதுசாரி அமைப்புகளும், முற்போக்கு அமைப்புகளும் சிறுகண்டனத்தைக்கூட பதிவுசெய்யாது வேடிக்கைப் பார்க்கின்றன. இத்தோடு, அண்ணன் திருமாவும், கம்யூனிஸ்ட்டுகளும் கள்ள மௌனத்தோடு கடந்துபோவதெல்லாம் அப்பட்டமான பிழைப்புவாதம். எவர் அடக்குமுறை, ஒடுக்குமுறை, அநீதிக்கு ஆளாக்கப்பட்டாலும் அரசியல் மாச்சரியங்களையும், கட்சி வேறுபாடுகளையும் கடந்து, தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை மறந்து, அவர்களுக்காகக் குரல் கொடுப்பவர் அண்ணன் சீமான். ஆனால், இன்றைக்கு அவருக்கு எதிராக பாசிசக்கோமாளி ஸ்டாலின் கட்டவிழ்த்துவிட்ட பழிவாங்கும் போக்கை வேடிக்கைப் பார்க்கிறார்கள் So Called சனநாயகவாதிகள். ஒன்றை மட்டும் மறவாதீர்! திமுக எனும் கேடுகெட்ட கீழ்த்தரக்கும்பல், நாளை மக்கள் மன்றத்தில் தண்டிக்கப்பட்டு, குற்றவாளிக்கூண்டில் ஏறும்போது நீங்களும் சேர்ந்தே ஏறுவீர்கள் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் பிழைப்புவாதிகளே! இடும்பாவனம் கார்த்திக்
  9. https://x.com/nellaiselvin87/status/1895113833825403340?s=46&t=44aq5wUJC7mrtrJVSmck3A வீடியோவில் எல்லாம் தெளிவாக உள்ளது.காவல்துறை ஆய்வாளர்தான் முதலில் படலையைத்திறந்தவரிடம் என்ன விடயம் என்று விளக்காமல் படலை சற்றுத் திறக்க முன்னரே காவலரைத் தள்ளித் தாக்க முயற்சித்திருக்கிறார்.அதுமட்டுமல்ல அந்தக் காவலரின் தாக்குதலால் காரணமாக வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறாராம் அந்த காவலர்.ஊடகங்கள் சொல்வதற்கும் காணொளியில் இருப்பதற்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன.
  10. ராஜூவ் படுகொலை சம்பவத்தில் கொல்லப்பட்ட குரு என்பவரின் மகனாம் தற்போது சீமான் வீட்டிற்குள் புகுந்து இராணுவ வீராரின் கண்ணை நோண்டி நீ நாடாரா என்று கேட்ட சைக்கோ அதிகாரி...!! மிக திட்டமிட்டு உலக தமிழர்கள் மீது கோபம் கொண்ட ஒருவனை அதிகாரியாக போட்டு
  11. அப்ப மனிதாபிமானம் >இறைமை என்பதல்லாம். இந்த வளங்களைக் கொள்ளையடிப்பதற்குத்தானா?அமெரிக்காவும் மேற்குலகும் உக்கிரைனுக்கு விழுந்து விழுந்து உதவி செய்தது இதற்குத்தானா?அமெரிக்காவும் மேற்குலகும்உக்கிரைனின் வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக உக்கிரைனுக்கு உதவுகிகன்றனர். ரஷ்யாவுக்கு உக்கிரைனின் வளங்கள் மட்டுமல்ல தனது எல்லைகளுக்கு அருகில் தனது எதிரிகளின் தளங்கள் இருப்பது அதன் பாதுகாப்புக்கும் ஆபத்து ரஷ்யா இதற்கு எதிர்வினை ஆற்றுவதில் என்ன தவறு?
  12. ஒரு விரைவு உணவகத்தில் வேலை செய்த போது,என்னுடன் மும்பாயினை சேர்ந்த பெண்மணியும் வேலை செய்திருந்தார், ஒரு நாள் டென்டுல்கர் உனவகத்திற்கு வந்திருக்கிறார் என கூறினார் (அது ஒரு விரைவு உணவகம் எப்போதும் கூட்டமாக இருக்கும்) அவர் வழமையாக என்னை முட்டாளாக்கும் வேலை செய்பவர் என்பதால் அதனை காதில் வாங்காமல் வேலை செய்துகொண்டிருந்தேன். எனது கையினை பிடித்து தர தரவென இழுத்து சென்றார், கவுண்டரில் ஒருவர் நின்று கொண்டிருந்தார் வரிசையில் அவரை பார்த்தவுடன் நினைத்தேன் இது இவரரது வழமையான முட்டாளாக்கும் முயற்சி என நினைத்து இது தெண்டுல்கர் இல்லை என்றேன். எமக்கும் அவருக்குமிடையே 5 அடி தூரம் இருந்திருக்கும், அவர் எங்களை நிமிர்ந்து பார்த்து விட்டு அவர் எந்த உணர்வையும் காட்டாமால் நிற்க இவர் அவர்தானெ வலியுறுத்த, அதனை நான் மறுக்க பக்கத்தில் நின்றவர் தலையாட்டி தெண்டுல்கர்தான் என உறுதிபடுத்தினார், பின்னர் எமது உணவகத்தில் வேலை செய்தவர்கள் கைதுடைக்கும் பேப்பரில் கூட அவரது கையெழுத்தினை வாங்கினார்கள். தொலைகாட்சியில் பார்ப்பதற்கும் நேரில் பார்க்கும் அடையாளம் காணமுடியவில்லை. இப்படித்தான் ஒருநாள் சிறிலங்காவுக்கு விடுமுறையில் சென்ற பொழுது எனது உறவினர் இன்று கொழும்பு விஷ்ணு கோவிலுக்குப் போவோம் என்று 4ட்டிக் கொண்டு போனார். அங்கே ஜெயசூரியா வந்து கும்பிட்டுக் கொண்டிருந்தார். நான் அதுஜெயசூரியா என்று மனைவிக்கும் மகளுக்கும் மெதுவாகச் சொல்லிவிட்டு இருந்தாலும் சிறிது சந்தேகம் இருந்ததால் மெளனமாக இருந்தேன். பூசை முடிய கோவில் ஐயர் அவருடன் செல்பி எடுத்து விட்டு அவருடன் போட்டோ எடுக்கலாம் என்று சில பக்தர்களுக்கு கூறியதன்பின்னர் தெளிவடைந்து அவருடன் போட்டோ எடுத்தேன்.
  13. மேலே இருப்பவர்களில் நானும்எப்போதும் தமிழனும்மட்டும்தான் தென் ஆபிரிக்கா வெல்லும் கணித்துள்ள படியால் நாளையிலிருந்து இறங்கு முகம்தான் போல் தெரிகிறது. யாழ்களப் போட்டியாளர்களும் 12:12 என்று தெரிவு செய்திருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும் போல் தெரிகிறது.
  14. என்னப்பா நடுங்கி பந்து வீசி 5 வைட் குடுத்து விட்டார்.
  15. நான் இந்தியாவைத் தெரிவு செய்திருந்தாலும் பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.முந்தைய போட்டிகளில் பாகிஸ்தான் வெல்லும் என்று கணித்த பொழுதுகளில் இந்தியா வென்று விட்டது. அதற்குப்பழிவாங்க இந்தியா வெல்லும் என்று கணித்திருக்கிறேன் புள்ளிகள் போனாலும் பரவாயில்லை பாகிஸ்தான் வெல்ல வேணும்.
  16. எனக்கு இங்கிலாந்து வென்றால் மகிழ்ச்சி.இங்கிலாந்து இப்பொழுது நன்றாக விளையாடிக்கொண்ருக்கிறது. பந்துவீச்சில் சொதப்பாமல் இருந்தால்சரி.
  17. கட்சி என்று இருந்தால் பலர் சேர்வதும் சிலர் விலகுவதும் நடைபெறும். சிறிய கட்சிகளில் இணைந்து புகழ்செளிச்சத்தைப் பெற்று விட்டு பெரிய கட்சிகளில் இணைவதை பெரிய கட்சிகள் வரவேற்பார்கள். பெரிய கட்சிகளில் நேரடியாக இணைந்தால் யாரும் கண்டுக்க மாட்டார்கள் ஊடகங்களும் பெரிது படுத்த மாட்டார்கள்கடைசிவரை பசைவாளியைத் தூக்கிக் கொண்டு திரிய வேண்டிஇருக்கும் பசை இருக்காது.நாதக ஆரம்பிதத காலத்திலிருந்து அனைத்து தேர்தல்களும் போட்டியிட்டவர் காளியம்மாள். அடுத்த முறை வேறு ஒருவருக்கு அந்தச்சந்தர்பம் கிடைக்கும். கட்சியில் தொடர்ந்து இருப்பதா விலகுவதா என்பதை காளியம்மாள்தான் முடிவெடுக்க வேண்டும். இதே Nhல் தொடந்து நாதக சார்பில் அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியி;ட கலியாணசுந்தரம் ராஜீவ்காந்தி ஆகியோர் இன்று என்ன நிலையில் இருக்கிறார்கள். அதன் பிறகும் கட்சி வளர்ச்சிப் பாதையில்தான் போய்க் கொண்டு இருக்கிறது.
  18. இன்றைய முதல்வர் தம்பிபையனுக்கு வாழ்த்துகள்.
  19. அமெரிக்காவை நம்பினால் இப்படித்தான் நடக்கும்.பைடன் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்கி தலிபான்களின் ஆட்சிக்கு இடமளித்தது பொன்ற நிலையே இன்று உக்கிரைனில் நடந்துள்ளது.உக்கிரைன் முன்னாள் சோவியத் யூனியனின் ஒரு பகுதி இன்றைய ரஸசியாவின் அண்ட நாடு. அது ரஸ்யாவைச் சீண்டும் விதமாக நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைய முயற்சித்த காரணத்தினாலேயே ரஸ்யா உக்கிரன் மீது போர் தொடுத்தது. தனது எல்லையில் நேட்டோவின் படைகளை நிலைநிறுத்துவது அதன்பாதுகாப்பு கருதி அது செயற்பட்டது.இதில் வேடிக்கை என்னவென்றால் ஐரோப்பிய ஒன்றியமே வேண்டாம் என்று பிரிந்த பிரிட்டன் உக்கிரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை ஆதரிப்பதுதான். இன்று எல்லோராலும் கைவிடப்பட்டு உயிர் அழிவுகளையும் சொத்து அழிவுகளையும் பெற்றரதுதான் உக்கிரைன் கண்ட மிச்சம். இனி ஒருவரும் உக்கிரைனனைப்பற்றி சிந்திக்க மாட்டார்கள். அமெரிக்கா பாலஸதீனத்தை ஆக்கிரமித்தால் புட்டினினும் கண்டு கொள்ள மாட்டார்.
  20. அங்கையும் என்னைப் பின்தொடர்ந்ந்து வேவு பார்த்து;துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். புள்ளிப்பட்டியலில் பக்கத்தில் வந்து குந்தி இருக்கிறீர்கள்.
  21. சத்தியலிங்கம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் விரைவில் துறப்பார் என்று எதிர்பார்க்கலாம். அந்த இடத்துக்கு சுமத்திரன் நியமிக்கப்படுவார். அநேகமாக உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் யாழ்மாநகரசபை மேயர் பதவிக்கு சத்தியலிங்கம் போட்டியிடுவார்.தமிழ்மக்களை வெறும் மாங்காய் மடையர்களாக சுமத்திரன் எண்ணிச் செயற்படுகிறார். இனி சிறிதரனால் ஒன்றும் செய்ய முடியாது. இதற்கு சிறிதரனே காரணம். 2019 ஆம் ஆண்டு மாவைக்கு துரோகம்செய்து சுமத்திரனை தூக்கிப்பிடிச்சு அவர்பாலா அண்யையைப் போல ஒரு விண்ணன். என்று புகழந்து அவருக்கு தனது ஆதரவை வழங்கி அவரை வெல்ல வைத்தார். இல்லாவிட்டால் 2019 ஆம் ஆண்டே சுமத்திரன் தோற்றிருப்பார். தேர்தலில் வென்றவுடன் கட்சிக்குள் தனது ஆட்களை நியமித்து கட்சியைத் தனது பூரணகட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்.கட்சித்தலமைக்குத் தெரியாமல் மாவைக்குத்கலையரசனை நியமிப்பதற்கும் சிறிதரன் துணை போனார். இப்பொழுது சிறிதரன் தனித்து விடப்பட்டிருக்கிறார். இனி சிறிதரனால் சட்ட ரீதியாக ஒன்றும் செய்ய முடியாது.அவர் அரகலய போராட்டம் போல் தமிழரசுக்கட்சியிலிருந்து விலகியவர்களையும் சேர்த்துக்கொண்டு தற்போதைய தலைமைகளுக்கு எதிராக தமிழ்க்களை ஒன்று திரட்டி ஒரு வெகுசனப் போராட்டம் செய்தால் ஒருவேளை பலனளிக்கலாம். வினை விதைத்தவன் வினை அறுப்பான். சிறிதரன் தன்தலையிலே தானே மண் அள்ளிப் போட்டு விட்டார்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.