Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by nochchi

  1. ரஞ்சித் அவர்களே நன்றி, வேலை-உணவு- செமிபாட்டு நடை என்று புலத்திலே நாம் பாதுகாப்பாக இருந்துகொண்டு தட்டிக்கொண்டிருக்க, பொருத்தமான காலத்தில் நீங்கள் யே.வி.பியினதும், அதன் கூட்டுகளதும் இனவாத முகத்தை நினைவூட்டுகிறீர்கள். சிறிலங்காத் தேசியர்களுக்கு உவப்பாக இராதபோதும், தமிழருக்கு இருக்கும் மறதிக்குணத்தில், போன கிழமை ரணிலோடை சும் நிண்டதே மறந்துபோச்சு, அவற்றை ஒத்துமை அறிக்கையோடை.... அப்ப 20 ஆண்டகளுக்கு முற்பட்டது நினைவிருக்குமோ. யே.ஆரால் வளர்கபபட்ட ரணிலும், றோகனவின் பாசறையில் வளர்ந்த அனுரவும் வேறுபட்ட நிறங்களைக் காட்டினாலும் முகங்களின் வார்த்தை ஒன்றேதான். அவை சிங்கள பௌத்த தேசியவாத முகங்கள். நொச்சி
  2. வணக்கம், என்றாலும் இவளவுக்குப்போய் ஆசைப்படுவது சாத்தியமாகுமா? சோஸலிசம் என்பது முகமூடி. அந்த முகமூடிக்குள் மறைந்திருப்பது இனவாதமுகம். நாடாளுமன்றத் தேர்தலில் 113ஆசனங்கள் கிடைத்தாலே, அவர்களது வேடம் தெரியவரும். ஒருவேளை மூன்றில் இரண்டு பெரும்பான்மைகிடைத்தால் இலங்கை - இந்திய ஒப்பந்தம் நீக்கப்பட்டு இந்தியாவோடு பகையேற்படாதவகையில் நேரடியான பொருளாதார ஒப்பந்தம் ஒன்றுக்குப் போவார்கள். அதன் பின்னரே சந்திரிக்காக் காய்ச்சலில் விடுபட்டதுபோல், யே.வி.பி காய்ச்சலில் இருந்து விடுபடுவார்கள். அதற்குள் கிழக்கு முழுமையாகப் பறிபோயிருக்கும். அப்போதும் சிறிலங்காத் தமிழ் தேசியர்கள் இதைத்தனே நாம் முன்பே சொன்னோமே என்று சப்புக்கொட்டிக்கொண்டு இருப்பார்கள். நட்பரர்ந்த நன்றியுடன் நொச்சி அந்த நம்பிக்கையில்தானே சும் அழைப்புவிடுத்திருக்கிறா. நட்பரர்ந்த நன்றியுடன் நொச்சி
  3. உண்மை. ஆனால் மக்களிடம் இருந்த தேசியத்தின் மீதான பற்று இனஅழிப்புக்குத் துணைபோன ஈனர்களையெல்லாம் தேசியத் தலைவர் சொன்னார் என்பதற்காக ஏற்றுக்கொண்டார்கள். ஆனால்,(2024) கடந்த தேர்தல் எல்லாத் தமிழ் அரசியல்வாதிகளையும், அவர்களது அரசியல் சடுகுடு ஆட்டங்கள் அம்மணமாக்கிவிட்டுள்ளது. தமிழ்த்தேசியத்தை நாடாளுமன்றத்திலிருந்து ஐ.நா வரை எப்படிப் குளிதோண்டிப் புதைப்பார்கள் என்பதை ஐயத்திற்கிடமின்றி நிரூபித்துவிட்டார்கள். இனி மக்கள் கiளையெடுப்பார்கள் என்பதேசூழலாக மாறிவருகிறது. நட்பரர்ந்த நன்றியுடன் நொச்சி
  4. உங்களுக்கு அந்தச் சிரமத்தை வைக்காட்டார் என்றே நம்புகின்றேன். நட்பரர்ந்த நன்றியுடன் நொச்சி
  5. தமிழினத்தின் தூய, படித்த, அறிவுள்ள, வெள்ளை வேட்டிகட்டின, வெளிர்நிற மனிசனைச் சீச்சீ இப்படிச் சந்தேகிக்கக்கூடாது. அவரு நல்லவராயிட்டாரு. அவர் நாடாளுமன்ற பதவியைத் துறந்து ஒரு சாதாரணக் கட்சி உறுப்பினரா இருந்து அறிக்கைவிட்டிருக்கிறார். ஆஆஆஆஆ.....னனனன....படியால் நாம் நம்பத்தான் வேண்டும். முயலுக்கு மூன்று கால். நட்பரர்ந்த நன்றியுடன் நொச்சி
  6. நிலாமதியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. கிறுக்க முயற்சிக்கிறேன். நாம்தானே ஓடிவந்துவிட்டோம். எங்கோ ஒதுங்கி ஓடிய காலங்களைத் திரும்பிப்பார்க்கும் போது வெறுமையாய் தெரிகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சுவியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. நீங்களே ஒரு சிறந்த படைப்புகளைப் தருபவர். உங்கள் வரிகள் உற்சாகம் தருவனவாக உள்ளன. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி ஈழப்பிரியனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஆனால், சிங்களத்தின் சிந்தனையல்லவா எம்மை ஆக்கிரமித்துள்ளது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  7. சிங்களத் தேசியவாதத்தின் முகம் எப்போதும் ஒன்றுதான். கட்சிகள், காட்சிகள், புதிய சொல்லாடல்கள் மட்டுமே தமிழினத்துகானது. இனவாதமற்ற புதிய சிந்தனையுடைய தலைமையெனப் புளங்காகிதமடைந்து நிற்கும் தமிழருக்காகவாவது கிழக்கிற்கு ஏன் ஒரு தமிழரை ஆளுணராகத் தெரிவு செய்யமுடியவில்லை. சிங்களத்தின் இதுதான். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  8. சீச்சி... அவரது கை அசுத்தமடையாத கை. ஏன் பயப்பிட வேண்டமு;. அதைவிட கிறிமினல்.. சட்டம் படித்தவராயிற்றே.. நீங்கள் அந்தப் பச்சோந்தி வகையையா சொல்கிறீர்கள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  9. வாத்தியாரவர்களுக்குப் படித்துக் கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. இருந்ததையும் இழந்துவிட்ட மனிதனின் கடைசித்தேடலாக இருப்பது என்னவோ அவனது பிறப்பிடமே. அது இளமையில் தெரிவதில்லை. இலகுவாக வந்துவிடுவோம். ஆனால், தேடலில் பதியும் பாதங்கள் தேடுவது என்னவோ ஆறுதலை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  10. உண்மை,இணைப்புக்கு நன்றி. சிறப்பு, இவர்போன்ற தெளிவான செயற்பாட்டு அரசியல்வாதிகளை மக்கள் இனங்கான வேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  11. புதிய நிறுவனம் இவர்களையும் கவனித்திருக்கும். ஆண்டுக்கு 50மில்லியனென்றால் சும்மாவா? பீயோனில் இருந்து பிரதம செயலாளர்வரை எவளவு கைமாறியிருக்கும். அன்னியச் செலாவணியைக்கொண்டுவரும் ஒரு திணைக்களமே இப்படியென்றால், மற்றவை... நான் நினைக்கவில்லை. புதிய அரசுத்தலைவருக்கு இதற்கே ஒப்புதல் அளிப்பதிலே நேரம்போனால், எப்படி இனமுரண்பாடு, பொருண்மியம், அபிவிருத்தி என்று செல்லமுடியும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  12. பாவம் மனுசனும் இப்ப மொசாட் பரப்புரைப் பிரிவுக்குள் உள்வாங்கப்பட்டுவிட்டார்போலும். இஸ்ரேலின் உளவாளிகள் உள்ளே இருககிறார்கள். இல்லையென்றால் அடிப்படைத் தகவல்களைப் பெறமுடியாதல்லவா? விலைபோன அரேபியர்கள் இருக்கமாட்டார்களா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  13. கரும்புலித்தாக்குதலைக் கண்மூடித்தனமாக விமர்சனம் செய்த மேற்குலக சக்திகள் இந்தத் தாக்குதல் அழிவுகள் குறித்து என்ன செய்யப்போகிறார்கள். இவர்களால் இஸ்ரவேலைத் தடைசெய்ய முடியுமா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  14. அதுதானே மக்களுக்குத் தொண்டாற்றிய அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் இப்படி அவமானப்படுத்தலாமோ? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  15. படித்தோர் மற்றும் விருப்போடு இணைந்த புங்கையூரனவர்களுக்கும், கவலையை வெளிப்படுத்திய குமாரசாமி ஐயாவுக்கும் நன்றி. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  16. ரெளடிசம் அவ* க்குக் கைவந்தகலையல்லவா? இல்லாவிடில் போலிப் பந்தாவுக்காகக் போராளிகளைப் போடுக்கொடுத்தாளல்லோ.ஆட்கள் படித்தைவை அதாவது சட்டம் படித்தவை. மக்களின் வரிப்பணத்தில் படித்து மக்களிடம் வாக்குப்பெற்று வயிறு வளரப்பதோடு, தமது சொந்ததிகளுக்கும் சொத்துகளைச் சேர்க்கும் அரசியல் வியாபாரக்கூட்டம். இந்தப் போலியானது தனக்காகப் பலரை ஆள் நல்லதொகைகொடுத்துப் புலத்திலும் களமிறக்கிவிட்டுள்ளது போலுள்ளது.
  17. இறையாண்மையென்று கூறிச் சிங்கள அரசுகள் தமிழினத்தை அழித்தொழித்ததோடு முழு இலங்கை மக்களதும் இறையாண்மையைப் பறிகொடுத்துப் பரிதவிக்கிறது. (சிறிலங்காத் தேசியவாதிகள் படிக்காது கடந்து செல்லப் பணிவுடன் வேண்டுகிறேன்) இதைத்தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதோ. இவரது வெற்றிச் செய்திதொடர்பான திரியில் ஏலவே பகிர்ந்தவைதான். இவர் நினைத்தாலும் நிலைமை அவளவு இலகுவானதல்ல என்பதே மெய்நிலையாகும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  18. ரசோதரனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஒருநாளென்றால் அது ஒரு தனிச்சுவை. ஆனால், சிறிமாவின் ஆட்சிக்காலத்தில் கைகொடுத்தது மரவள்ளி. மறக்கமுடியாத காலம். ஒவ்வொரு வீட்டிலும் மரவள்ளி நட்டகாலமாக இருந்தது. இனிவருங்காலங்கள் இலங்கைத் தீவுக்கு எப்படியோ அநுர மாத்தையா மட்டுமே அறிவார். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  19. வாசித்த உறவுகளுக்கும், விருப்போடு, நன்றியையும் பகிர்ந்த ரசோதரன், தமிழ்சிறி மற்றும் உடையார் ஆகியோருக்கும் உளமார்ந்த நன்றி. தமிழ்சிறியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. அந்த அமைதிக்காலத்தில் சோலைக் கடற்கரை. அதன் கம்பீரம். பின்வந்த ஆண்டுகளில்.... உயிருள்ளவரை மறக்க முடியாத வலிகளோடு வாழும் வாழ்வாகிவிட்டது. சிலவேளைகளில் மனம் எதையாவது கிறுக்கச் சொல்கிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  20. நம்ம பிரதிபலிப்பும் இதேதான். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி அப்ப ஒரு முடிவோடைதான் கணனிக்கு முன்னால் இருக்கிறீர்கள் போலும். மதிய உணவு முடிந்ததா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  21. மீனவர்களை விட்டுப்போட்டு நாடாளுமன்ற வெற்றிவாய்ப்பை இழக்கவேண்டியநிலையை எதிர்கொள்ள வேண்டுமா என்று புதிய சனாதிபதி சிந்திக்கமாட்டார் என்று எப்படி இந்த இந்திய அரசியல்வாதிகள் யோசிக்கிறார்கள். இருதரப்பும் முழுமையாக ஆய்வுசெய்து சரியானதொரு புரிந்துணர்வோடும், இருபகுதி மீனவர்களது நலன்களும் பாதிக்காத வகையிலும் சிந்திக்காது ஒரு இலக்கற்று வெற்றுக் கடிதங்களோடு விடுதலையைக் கோருவது சாத்தியமா? முதலில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பாவித்தைத் தமிழக மற்றும் ஒன்றிய அரசுகள் தடை செய்யவேண்டும். எல்லை தாண்டும் மீனவர்களை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கான பொறிமுறைகள் கண்டறியப்பட்டு ஒரு நிரந்தரமான தீர்வு நோக்கி நகரவேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  22. உருவப்படுமா? --------------------- எங்கும் ஒருவித மயான அமைதி காடைத்தனத்தின் உச்சத்தைக் கடந்த பொழுதில் நிலமெங்கும் மனிதமலைகளாய் உடலங்கள் குருதியும் சகதியுமாய்... எனக்கு உயிர் இருந்தது அதுவே எனக்குப் போதுமானது கடற்காற்று ஊவென்று வீசியது உடம்பெங்கும் சில்லிட்டுக் குளிர்ந்தது ஆடையற்று அம்மணமாகக் கிடக்கும் உணர்வு நானும் செத்திருக்கக் கூடாதா மனம் சொல்லிற்று குப்புறக் கிடந்த என்னால் அசையக்கூட முடியவில்லை பிணங்களில் இருந்துவரும் வாடை வாடைக்காற்று வீசிய கடலோரம் பிணவாடை உலுப்பியது சட்டென அம்மாவின் குரல் என் காதில் ஒலித்தது டேய் அரைநாண் கயிறைக் கட்டடா அவிழ்ந்தால் நீ அம்மணக்கட்டையடா ஒட்டுத் துணிகூட இல்லாதபோதிலும் அரைநாண் கயிறிருந்தால் உன்னை அம்மணமானவன் என்றழையார் என்று என் அம்மா சொன்னது நினைவிலே வந்து போனது! என் சக்தி முழுவதையும் திரட்டி சுற்றுமுற்றும் தலையைத் தூக்கிப்பார்த்தேன் சற்றுக் கைக்கெட்டும் தூரத்தில் ஒற்றைச் சப்பாத்தொன்று புதையுண்டவாறு யாரோ ஒரு போராளியினுடையதாக இருக்க வேண்டும் மெல்ல நகர்ந்து சப்பாத்திலிருந்து நூலைப் பிரித்தெடுத்து என் இடுப்பிலே கட்டிக்கொண்டேன் இப்போது எனக்கொரு திருப்தி! தொலைவில் ஒற்றை வெடியோசைகள் வெடிப்புகள் எனக் கேட்டன... மெதுவாக ஊர்ந்து பற்றையுள் பதுங்கினேன் எதுவுமே தெரியவில்லை கண்விழித்ததோ ஒரு மருத்துவமனையில் நான் ஒரு அரச ஊழியன் ஆனாலும் நான் தமிழன் அல்லவா இடுப்பு நூலுக்கும் விசாரணை விளத்தங்கள் அலைக்கழிப்புகள் ஆனாலும் என்ன அரைநாண் கயிறை இப்போதுவரை அணிந்திருக்கிறேன்! அப்பா அம்மாவை முள்ளிவாய்கால் அள்ளிச் சென்றுவிட்டது உறவுகளில் ஏறக்குறையத் தொண்ணூறுவீதம் பேரையும் இழந்துவிட்டேன் நண்பர்கள் ஒரு சிலரோ வாடா வெளிநாடென்கிறார்கள் அரைநாண் கயிற்றையும் இழக்க முடியுமா அம்மா சொன்னதை மறக்க முடியுமா இழப்பதற்கு நான் தயாரில்லை எங்கள் மண்ணில் எங்கள் வளவிலே சிறு பயிர்களோடும் சிறு உயிர்களோடும் நகர்கிறது என்வாழ்வு பொருண்மியத் திரட்சி இல்லையென்றாலும் மனதிற்குள் மகிழ்வு துளிர்கிறது! என்னைப் பார்க்க வந்த வெளிநாட்டு உறவொன்று மரவள்ளிக் கிழங்கும் கட்டைச் சம்பலும் அற்புதமென்றான் அற்புதங்கள் நிகழ்துவதாய் பழைய நாற்றொன்று புதிதாய் மின்னி அனைவரையும் அழைத்துத் தலைமையேற்றுள்ளது ஆனாலும் என்ன அரைநாண் கயிற்றுக்கும் ஆபத்து வருமா(?) என்ற வினா என்னைத் தொடர்கிறது! நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  23. ஏகேடி மேற்கினுள் சங்கமிப்பதும் மக்களின் ஆணையை நிராகரிப்பதும் ஒன்றே. என்ன தமிழர்களை சிங்களத் தேசியத்துள் கரைத்துவிட உழைத்துவரும் இந்த வெள்ளைநரி புதிய தலைமைக்கு உதவுமாறு ஊளையிடுகிறது. முதலில் இந்தத்தலைப்பே பிழையானது. ''ஒரு புதிய அரசியல் தலைமையின் தொடக்கம் என்பதே பொருத்தம்.
  24. உண்மைதான், ஆனால் சீனா அவளவுதூரம் கண்ணை மூடிக்கொண்டு கொடுக்குமா?சிலவேளை ரணிலுக்குக் கொடுத்ததுபோல் இந்தியா கொடுக்கலாம். இந்திய அமெரிக்க உளவு அமைப்புகளைக் கடந்து நடக்குமா? அநுராவின் பொருண்மிய இலக்குகள் கடினமானவையாகவே இருக்கும். சிலவேளை குறுகியகால மரவள்ளி, மிளகாய், நெல், சிறுதோட்டப் பயிர்களை நோக்கி மக்களை நகர்த்தக்கூடும்.
  25. கண்கள் பனிக்கின்றன. ஏறக்குறைய எங்கள் நிலைபோலவே. என்ன வேற்றுமொழிச் சூழல்.. ஆனால், நிலமென்னும் நல்லாளுக்கு நிறங்களையோ,இனங்களையோ தெரியாது. தன்மேல் கால்பதிப்போரை அரவணைத்துக் கொள்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.