Everything posted by nochchi
-
மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்!
எதிர்பார்க்கப்பட்ட ஒரே ஒரு தகுதி, சும்முக்கு யால்ரா போடத்தெரிதல் வேண்டும். அது தெரிந்தால் போதுமானது. வேறு விடயங்களைக் கிளறக்கூடாது. அது பிறகு சும்முக்கு பிடிக்காமல் ஐரீ அணியால் சைபர் தாக்குதல் செய்தால் பிறகு எப்படி எழுதுவீர்கள்?
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
புலனக்குழுவிலே பார்த்தது. திரயோடு பொருந்துவதால் இணைத்துள்ளேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை : மாத இறுதியில் கொழும்பில் விசேட பேச்சுவார்த்தை
நல்ல விடயம். இதனை அரசியல் ரீதியாகத் தீர்க்கவேண்டும். ஆனால், இதனை அரசியலாக்காது, இது மீனவர்களது வாழ்வாதாரத்திற்கானதென்ற அடிப்படையில் தீர்வுகள் தேடப்பட்டுப் பொருத்தமான பொறிமுறையொன்று உருவாக்கப்படுவதோடு, ஒருவரை ஒருவர் தாக்கும் செயற்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேணடும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
சிவராம் படுகொலை – லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு
தமிழ்சிறியவர்களே நன்றி. நிச்சயமாக வாசித்தறிகின்றேன். அரசியல் தளத்தில் மட்டுமல்ல ஊடகத் தளத்திலும் தமிழ்தேசியம் மீதான தெளிவான நோக்குநிலை மற்றும் செய்திகளைத் துணிவோடு வெளிக்கொண்டுவந்தோர் எனத் திட்டமிட்ட அழிப்புகள் சிங்களப் புலனாய்வால் செய்யப்பட்டவையே. ஆனால், அவற்றைத் தற்போதைய சிங்கள அரசு தோண்டி எடுத்து விசாரணை செய்து நீதிவழங்குமாயின் வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த விசாரணைகள் ஊடாக மேற்குலக்கும், நாம் முன்னைய அரசுகள் போன்ற கடும்போக்காளரல்ல என்ற செய்தியைச் சொல்வதற்கான களம் திறக்கப்பட்டு உள்ளக விசாரணையை நோக்கித் தமிழரது அழிப்புக்கான நீதிகோரலையும் திருப்பி உள்நோக்கி இழுத்துவரும் நுண்நகர்வாகவும் கொள்ளலாம். எனவே சிங்கள அரசியற் சடுகுடு ஆட்டத்தையும், அதனது இனவாத முகத்தையும் எமது முன்னோரும், நாமும் கண்டுவருகின்றோம். தமிழினத்திற்கான அரசியல் உரிமையும் அமைதியான வாழ்வும் ஏக்கங்களாகவும், ஏமாற்றங்களாகவும் கடந்த 110 ஆண்டுகளாக கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இலங்கை விடுதலைக்கான முயற்சிக்காலத்தில் கண்டியச் சிங்களவர் சமஷ;டியைக் கேட்டபோது, ஒரேநாடாகச் சிந்தித்தவர்கள்(சேர்.பொன். அருணாசலம்) தமிழ்த் தலைவர்கள். ஆனால், எம்மை தமிழீழம் நோக்கித் தள்ளியது சிங்களம். உலகம் வேகமாக மாறிவருகிறது. அந்த வெளியக மாற்றத்தை உள்வாங்கிக் குறைந்தபட்சம் ஒரு உள்ளக சுயநிர்ணய உரிமை குறித்துச் சிங்களம் சிந்திக்குமாயின் அப்போதுதான் இலங்கைத்தீவிற்கான உண்மையான வாழ்வாக அமையும். அதனை சோல்பரியின் காலம்தவறிய வருத்தமும் சுட்டுகிறது. கீழுள்ள தகவலைத் தமிழீழக் கல்விக் கழகத்தால் வெளியிடப்பட்ட "வரலாறு சொல்லும் பாடம்,, என்ற நூலில் இருந்து இணைத்துள்ளேன். சோல்பரியின் காலந்தவறிய வருத்தம் பீ.எச்.பாமர் எழுதிய "சிலோன் ஏ டிவைடட் நேசன்,, என்ற நூலுக்கு முகவுரை எழுதியபோது அதில், சோல்பரி இப்படிக் குறிப்பிடுகிறார். இந்தியா,பாகிஸ்தான்,மலாயா,நைஜீரியா போன்ற நாடுகளுக்கான அரசியற்றிட்டங்களில் செய்ததுபோல, சிறுபான்மையினரின் உரிமையை உறுதிசெய்யும் வலிய காப்பீடுகளை இந்த(இலங்கை) அரசியற்றிட்டத்திற்குப் பரிந்துரை செய்யாமல் விட்டது பெரும் பிழையென்று இப்போது நான் நினைக்கின்றேன். இந்த இரண்டு(சிங்களவர்,தமிழர்)சமுதாயங்களுக்கிடையிற் காலங்காலமாக நிலவும் முரண்பாடுகள் பற்றிய மேலெழுந்தவாரியான புரிதலே எமது ஆணைக்குழுவுக்கு அப்போது இருந்தது. சிறுபான்மையினரின் மனநிறைவும், நலனும் இலங்கைத்தீவின் ஒட்டுமொத்த நலனுக்குத் தேவையானது என்பது அரசாங்கத்திற்கு நன்கு தெரியுமென்றே ஆணைக்குழு அன்று திருப்திப்பட்டுக் கொண்டது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி அதற்கான களமுனைகளைத் துரிதப்படுத்துவதிவருவதைக் காணக்கூடியதாகவே உள்ளது. நாசபக்சர்கள், ரணில் மற்றும் விமல் வீரவன்ச எனத்தொடர்கிறது. இன்னும் யார்யாரெல்லாம் பின்வாங்குகிறார்களோ தெரியாது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
சிங்கங்களும், பன்றிகளும், அறுவான்களும், குறுக்கால போவான்களும்? - நிலாந்தன்
சலிப்பின் விளைவாகவே சனாதிபதித் தேர்தலில் ஒரு கூட்டுணர்வை தமிழர் தாயகத்தில் கட்டமைக்க முடியவில்லை. மக்களுக்கான அரசியலைவிட்டு வணிக அரசியல், அதாவது தமது தேவைகளுக்காக மக்களது வாக்குளை அடகு வைக்கும் அரசியலைக் கடந்த பதினைந்து ஆண்டுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்ததன் விளைவுக்கு சூழல் பொருந்திவரச் சிங்களம் தமிழர் தாயகத்தில் வாக்கு அறுவடைக்குத் துணிந்துள்ளது. நாசபக்ஸர்களின் காலத்தில் தமிழர் தாயகத்தை நோக்கி வாக்குவேட்டையில் நேரடியாக ஈடுபடாது பினாமிகளூடாகவே நகர்ந்தனர். ஆனால் இன்று 1977இற்கு முற்பட்ட நிலைபோன்றதொரு நிலையில் சிங்களக் கட்சிகளின் நிலை உள்ளது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
சிவராம் படுகொலை – லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு
விசாரணை என்பது நல்ல விடயம். ஆனால், இது ஒரே கல்லிற் பல மாங்காய்களை வீழ்த்தும் விசாரணை நகர்வு. கிழக்கிலே மக்கள் விடுதலை முன்னணி(ஜனதா விமுக்தி பெரமுன) என்ற தேசிய மக்கள் சக்தி(ஜாதிக பலவேகய)க்கான பலமேற்றலுக்கு முரளீதரன் மற்றும் சந்திரகாந்தன் போன்றோரது கட்சிகள் இடையூறாக அமையும் என்ற நோக்கிலே நகர்த்தப்படும் விசாரணையாகவும் நோக்கலாம். உண்மையில் ஊடகவியலாளர்களின் கொலை குறித்த விசாரணை நிமலராஜன் போன்றவர்களில் இருந்து தொடங்கப்படுவதோடு, நாடாளுமன்ற உறுப்பினர்களாயிருந்த மாமனிதர்களான திரு. ரவிராஜ் மற்றும் திரு.பரராசசிங்கம் ஆகியோரின் படுகொலைகளுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். குறிவைத்து நகரும் விசாரணைகளா அல்லது பொதுமையான நியாயம் தேடும் விசாரணையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்!
இந்தப் பெருமளவிலான சுயேச்சைகளின் களமே அனுராவை நோக்கிய மடைமாற்றத்திற்காகவும் இருக்கலாம். யாரறிவார். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அமெரிக்க படைத்துறைப் பள்ளிகளில் கற்றுத்திரும்புவோர் பெரும்பாலும் அமெரிக்க விசுவாசிகளாக மாற்றப்படவே வாய்ப்புள்ளது.ஆனால் இந்தத் தமிழினப் படுகொலையாளனை, அவன் செய்த இனஅழிப்பை வைத்தே கோட்டைப்போட்டிருக்கலாம் அல்லவா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இந்தத்திரியோடு தொடர்பற்றபோதும், இந்தத் தலைவரும் இந்தக் கூட்டணியில் இருந்தவர் என்ற வகையில் தமிழினம் எப்படிச் சிங்களத்தலைமைகளை நம்பினர் என்பதற்கு எடுத்துக்காட்டாக ''சந்திரகா வளையல்'' போட்ட தமிழ்ப் பெண்களிற்கு நடந்தகதியை, செம்மணிப்புதைகுழியை..... கிருசாந்தி போன்றவர்களையும் யோசித்தால் அநுர என்ன செய்வாரென்னதை உணரலாம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அறகலய போராட்டகாலத்திற்கு முன் அமெரிக்கத் தூதுவர் இவரோடு உரையாடியதாகவும், அவ்வேளையில் மக்கள் போராட்டங்கள மீது இராணுவம் நடவடிக்கை எடுக்கக் கூடாதென அறிவுறுத்தியதாக ஒரு பேச்சு அடிபட்டது. உண்மையோ பொய்யோ தெரியாது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்!
வெளியுலகப் பிசாசுகளுடன் டீல் போகிறது. இனிப்பெரும்பாலும் உள்ளூர் பிசாசுகளையும் அரவணைக்கவே வாய்ப்புள்ளது. ஒருவேளை 113 கிடைத்தால் உள்ளூர் பிசாசுகளைத் தேடார். தமிழரைத் தீர்க்கும் வழிதேடுவார். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி உண்மை. கோட்டாவுக்கு அறகலய போல் இவருக்கு அனுரகலய என்று வந்தாலும் ஆச்சரியப்படமுடியாது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
தவறான புரிதல். நான் சிங்களத்தின் ஆற்றலாளர்களையே குறிப்பிட்டேன். தமிழர் தரப்பையல்ல. முதலில் மற்றவனை நோக்கி ஒற்றைவிரலைச் சுட்டும்போது, எம்மை நோக்கி நான்குவிரல் என்று யோசித்தால் முதலில் தாங்கள் கண்ணாடியின் முன்னின்று யோசித்திருக்க வேண்டும். நன்றியுடன் நொச்சி
-
அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்!
ஒருவேளை பிசாசுகளுடன் கூட்டணி அமைக்க வேண்டி வந்தால் வேப்பிலையை எடுக்க முடியாதே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
இவரது கனவு கோத்தாவின் பின் ஒருகாலத்தில் தான் வரவேண்டுமென்றே இனவாதத்தைக் கையிலெடுத்து ஆடியவர். ஆனால், அறகலய கோத்தாவின் ஆட்சியை வீழ்தியதால் விதிமாறித் தடுமாறி நிற்கின்றார். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
அம்மாவின் கருத்தையும் கேளுங்க | தமிழ் வீரப்பெண்கள் இவர்கள் | srilanka | tamil
அம்மாவின் கருத்தையும் கேளுங்க | தமிழ் வீரப்பெண்கள் இவர்கள் | srilanka | tamil இன்றைய அரசியலோடு தொடர்புடைய உரையாடலாக இருப்பதால் இணைத்துள்ளேன்.புலத்திலே எமது பேரப்பிள்ளைகள் வரை வசதியான வாழ்வுக்கு நாம் தயாராகிவிட்டுள்ள சூழலில் தாயத்திலே அன்றாடம் உழைத்துவாழும் ஒரு அன்னையின் பார்வை. நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
இதுதான் சிறிலங்காவின் சிங்கள மற்றும் சிங்களத்தமிழ் அரசியல்வாதிகளின் மனோநிலை. தமக்கொரு ஆபத்தெனில் மக்களையே அடகுவைக்கப் பின்னிற்கார். இதில் மக்களாவது ராவது என்பதே வழமை. இதையும் மாற்றமாக எடுக்கலாமோ தெரியாது. இப்போது கருத்தெழுதவே பயமாக இருக்கிறது. சிறீமான் சிறிலங்காத் தேசியரின் மாற்றத்தை கேள்விக்குட்படுத்தலாமோ என்று வரலாம் அல்லவா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
உண்மை. ஆனால்,மாற்றம் என்பது சிங்களத்துககான மடைமாற்றமாக இருக்குமாயின் தமிழினத்தின் படைபலப் பேரழிவு2009இல், அரசியல் பேரழிவு 2024இல் என்று வரலாற்றுப் பதிவாகும். அதுதான் சிங்களத்தின் அரசியல், மதவியல்,மெய்யியல், சட்டவியல், கல்வியியல் மற்றும் பொருளியல் .....அனைத்து தரப்பினரதும் ஒருங்கிணைந்த சிந்தனை. அதனைப் புரிந்துகொண்டு செயற்படாத தமிழர் செய்யும் தமிழர் விரோத அரசியல் மற்றுமொரு சாபக்கேடு.
-
விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
தமது கட்சியை வெளியே நிறுத்தித் தமது குழந்தையான(பினாமி) NPP யை வெல்லவைக்கும் நோக்கிலான தீர்மானம். வாக்குகள் பிரிந்து தனது தோழரான அ.கு.தி தோற்பதையோ, வேறுகட்சிகளின் தயவில் ஆட்சி அமைப்பதையோ விரும்பாது எடுத்துள்ள முடிவாகவே நோக்கலாம்.
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
தமிழரசுக்கட்சியின் வலிமையை குறைத்து எடைபோட்டுக் கவலைப்பட வேண்டாம் என்று சும் எச்சரிக்கப்போறார்.
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
சாராயப் அனுமதிஎடுத்து ஊழல் செய்யவேண்டிய தேவை சும்முக்கு இருக்காதென நினைக்கிறேன். அவர் புனித புனித அரசியல் செய்பவராச்சே.
-
இஸ்ரேல் - இரான்: மத்திய கிழக்கில் அணு ஆயுதப் போர் மூளும் ஆபத்தா? 6 முக்கியக் கேள்விகள்
ஒருபெரும் இன அழிப்பைச் சந்தித்து, ஒரு குறிப்பிட்ட இனத்தை அல்லது மக்களைத் துரத்தியடித்து அவர்களது சொத்துகளைக் கைப்பற்றி வாழும் இளைய புத்திசாலி நாடாம். வென்றவனது மட்டுமே அவனுக்கேற்றவாறு சரித்திரமாகும் என்றால் இந்த உலகு இருந்தென்ன, இல்லாதுபோனால் என்ன? எனவே இந்த உலகை அவரவர் தேசங்களுள், அவரவர் பண்பாட்டோடு வாழவிடுவதே உலக அமைதிக்கான வழி. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு
நாங்கள்தான் தெரியாம நிக்கிறம். யாழிலை வழுக்கியாறு நிறைந்து பாயுதாமே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
தமிழரசுக்கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறக்கிறார் மாவை!
உங்கள் நம்பிக்கை மலர்ந்தால் நன்மையே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி நான் நினைக்கிறேன்... ஆனந்தக் கண்ணீர் உருளும் என்று எழுதநினைத்திருப்பீர்கள் என்று.. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
தலைவர் பிரபாகரனோடு அனுரவை ஒப்பிட வேண்டாம் 😡 | Thalaivar Prabhakaran - Anura | Pavaneesan
தலைவர் பிரபாகரனோடு அனுரவை ஒப்பிட வேண்டாம் 😡 | Thalaivar Prabhakaran - Anura | Pavaneesan சமகாலத் தாயக நிலைவரங்களோடு தொடர்புடைய உரையாடல் என்பதாய் இணைததுள்ளேன். நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
இஸ்ரேல் - இரான்: மத்திய கிழக்கில் அணு ஆயுதப் போர் மூளும் ஆபத்தா? 6 முக்கியக் கேள்விகள்
உலகின் பசியல்ல அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுகளின் இரத்தப்பசி அடங்காதென்பதே பொருந்துமென்று நினைக்கின்றேன்.