Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by nochchi

  1. ஒருவேளை தற்போதைய இஸ்ரேல்-பலஸ்தீனத்தின் அழிவோடுதான் மத்திய கிழக்குக்கு விடிவுபோலும்.
  2. உண்மை. ஆனால் இந்தத் தலைசிறந்த சிங்கள நரியான ரணில் போன்றவர்கள் இருக்கும்வரை சிறிலங்காவை அசைக்க முடியுமா? பார்வைக்குக் போர்க்கப்பல்கள் வருவதும் போவதுமாக இருந்தாலும் தென்னாசியப் பிராந்தியத்தில் தேவையற்ற பதற்றங்களுக்கான புறநிலைகளை ஊக்குவிக்கும் சந்தர்ப்பங்களும் உள்ளன. மத்திய கிழக்குப் போன்ற நிலைமைகளுக்கான ஏதுநிலையை இந்தப் படைக்கலங்களின் நகர்வுகள் ஏற்படுத்திவிடலாம். தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை ஏற்காதிருப்பதற்காகப் பெரும் விலையைச் சிங்களம் இன்னுமின்னும் உலக ஆதிக்க சக்திகளுக்கு வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டு மேலும் சீரழியப்போகிறது.(இலங்கை நேசர்கள் கடந்துபோகக் கடவ) பிச்சையெடுத்து உண்பவனைவிட மோசமானதொரு நிலைக்கு இலங்கைத்தீவைச் சிங்களம் கொண்டுவந்துவிட்டுள்ளது.
  3. இலங்கைத்தீவுமீது ஏதும் போரபாயம் ஏற்பட்டுள்ளதா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  4. பட்டமளிப்புக்குப் பூனூல், நாமம் மற்றும் தாமரைப்பூ அணிந்து வருமாறு மாற்றும் திட்டத்தோடு, காலனியாதிக்கமென்று கூறித் தமது இந்துத்துவா கொள்கைகளை புகுத்தும் முன்னகர்வாகவும் இருக்கலாம்.
  5. அமரர். திரு. விராஜ் மென்டிஸ் அவர்களுக்கு இதயவணக்கம் – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு- யேர்மனி Posted on August 18, 2024 by சமர்வீரன் 38 0 18.8.2024 அமரர். திரு. விராஜ் மென்டிஸ் பிறப்பிடம்: சிறிலங்கா (Srilanka) வதிவிடம்:பிறீமன், யேர்மனி (Bremen, Germany) தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின் நியாயக் கோட்பாடுகளையும், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களது போரியல்ச் சித்தாந்தங்களையும், புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களது வாழ்வுரிமைகளையும், குறிப்பாக புலம்பெயர்ந்த மக்களது அறவழிப் போராட்டக் களங்களையும் மானசீகமாகப் புரிந்து, உணர்வுபூர்வமாக ஏற்று, மொழிவழியிலே ஓர் சிங்கள இனத்தவராகத் தனது பிறப்புரிமைக்கு மட்டும் முதன்மையளித்து, அவ்வினத்தின் அதிகார வர்க்கங்களால் நசுக்கப்பட்டு, நாடற்றவராக்கப்பட்டுத் துன்பியல் வாழ்விலே துவண்டு, தான் பெற்றுக்கொண்ட கசப்பான பட்டறிவிலிருந்து நோக்கிய தெளிந்த பார்வைக்கூடாக, தமிழ்த்தேசிய இனம்மீதும் சிறிலங்காப் பேரினவாதம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளையும், முரண்பாட்டு எடுகோள்களையும் எதிர்த்து, தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற உயர்ந்த பண்புரிமைகளைத் தர்க்க ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும், ஆய்வு ரீதியாகவும் புரிந்து, அசைக்க முடியாத அந்த உண்மைகளின் பக்கம் நின்றபடி, தன்னாலியன்ற அனைத்து வழிமுறைகளிலும் இதயசுத்தியோடு குரல்கொடுத்து வாழ்ந்த ஓர் அற்புதமான உறவான மரியாதைக்குரிய திரு. விராஜ் மென்டிஸ் அவர்கள், இயற்கையின் அணைப்பிலே விழிமூடிய செய்தியறிந்து துயருற்றோம். தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின் வரலாற்றுக் காலங்களில், தமிழினம் தமக்கான விடுதலையை யாரிடமிருந்து கோரியதோ அவ்வினத்திலிருந்தே எமது உரிமைகளை புரிந்து, மதித்துக் குரல்கொடுத்து வாழ்ந்த மிகச் சொற்ப சிங்களக் கல்வியாளர்களிலே விராஜ் மென்டிஸ் அவர்கள் முன்மாதிரியானவராக, தமிழர்களோடு ஒன்றித்தவராக, புலம்பெயர்ந்த தமிழர்களின் அறவழிப் போராட்டத் தளங்களிலே, ஐக்கிய நாடுகள் சபையிலே, மனித உரிமை அமைப்புக்களின் மையத்திலே எமக்கான மனிதராக முழுமையாகத் திகழ்ந்தமையைத் தமிழினம் என்றும் மறவாது, அவரைப் பண்பான மனித உச்சப் புகழிலே தாங்கிக் கொள்ளும். தமிழ்த்தேசிய மக்களது கலாச்சாரத்திலும், சமூக வாழ்விலும், பொருளாதார வழிமுறைகளிலும் தன்னிறைவும், தாராள நிலையும் பெற்றேக வேண்டுமெனும் பெருவிருப்பும், திறன்வாய்ந்த கட்டமைப்புக்களாகப் புலம்பெயர் அமைப்புக்கள் இயங்குநிலை பேணவேண்டும் என்பதிலே பேரவாவும், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் காலப்பகுதிகளில் தங்களுடைய தாய்நாட்டுக்காக தமிழர்கள் ஆற்ற வேண்டிய இணையற்ற பங்களிப்புக்கள் தொடர்பாகவும் தெளிந்த கருத்தாய்வுகளை முன்மொழிந்தார். அவ்வாறான நோக்கானது தமிழ்த்தேசிய இனத்திற்கான விடுதலையென்பதை தன் இதயப்பரப்பிலே ஆணித்தரமாக செதுக்கி நிறுத்தியிருந்ததை, அவரோடு இணைந்து பணியாற்றிய உணர்வுமிக்க தடங்களே சாட்சியாகின்றன. பரந்து விரிந்த உலகப் போராட்டக் களங்களிலே நிலவிய மிதமிஞ்சிய மனித உரிமை அத்துமீறல்களைக் கோடிட்டு, அவற்றிலிருந்து நியாயம் தேடி விடுதலை கோரும் வழிமுறைகளைக் கொண்ட நாடுகளின் எடுத்துக்காட்டுகளுக்கு ஊடாக, தமிழ்த்தேசிய இனத்திற்கான நியாயத் தேடலுக்காக, அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பின் இயக்குனராகவும் தன்னை உருவகித்துக் கொண்டு பல்வேறுபட்ட துறைசார் கட்டமைப்புக்களுடன் தொடர்பினைப் பேணினார். ஆயினும் தமிழீழம் என்ற உயர்ந்த எண்ணம் தாங்கிய மையம் கரையாதவராகத் திகழ்ந்தார். சிரிலங்காப் பேரினவாதம் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிட்டிருந்த அரசியல் அடக்குமுறைகள், சட்டவிரோதமான சிறைப்புடிப்புக்கள், சித்திரவதைகள் மற்றும், பூர்வீக நிலப்பறிப்புக்கள் போன்ற பாரிய அநீதியான விடயங்களை, அடக்குமுறைகளைப் பிரயோகிக்கின்ற அந்த இனத்திலே பிறந்துவிட்டேனே என்பதற்காக ஏற்காது, துணிந்து எதிர்த்து நின்ற நேர்மையும், நீதியின் வழிநின்று தமிழினத்தோடு தோழமை பூண்ட மாண்புமே, அடிப்படையான உரிமைகளை மதிக்கின்ற நியாபூர்வமான தோழமையாக உலகத்தமிழர்களின் இதயங்களிலே ஒன்றித்து, பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றுப் புகழ் கொண்ட தமிழின் நீட்சியில் உயிர் வாழ்வார். சிங்களத் தீவிரவாத சக்திகளும், தேசியவாதிகளும் இணைந்து, தமிழர் நிலவுரிமைகளை மறுத்து, முழு இலங்கைத் தீவையுமே தனிச் சிங்கள பௌத்த தேசிய நாடாக நிறுவி விடுவதற்காகப் பல்வேறுபட்ட பிரயத்தனங்களை புனைவுகளாக முன்னிறுத்தி, அரசியல் சமூக பண்பாட்டு மாற்றங்களைத் தமக்கேற்ற வகையிலே முன்மொழிந்துவரும் தருணங்களிலெல்லாம், அதற்கு எதிராக தமிழர்களின் தொன்மைகளை நிலைகொள்ள வைப்பதற்காக தகைசான்றுகளின் அடிப்படையில், தமிழர் பக்கமாக நின்று வாதப்பிரதிவாதங்களை முன்வைக்கின்ற அற்புதமான தோழமையாளராக விராஜ் மென்டிஸ் அவர்கள் வாழ்ந்தார் என்பதை காலம் மறவாது. அவ்வாறான உயர்ந்த எண்ணம் கொண்ட மனிதரது ஆன்மா அமைதிபெற இயற்கையை வேண்டுவதோடு, அவரது பிரிவுத் துயர் சுமந்து வாடும் அனைவரோடும் நாமும் துயரைப் பகிர்ந்து, அவராற்றிய சிறந்த பணிகளை அவர் நினைவோடு தொடர்ந்து முன்னெடுப்போமென, அவரது புகழுடல்மீது உறுதியெடுப்போமாக. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
  6. நாட்டின் முக்கிய பகுதி முடிவு 🤔 | Election Survey Hambantota | EP 02 நன்றி - யூரூப் இலங்கை அதிபர் தேர்தலோடு தொடர்புடைய விடயமாக இருப்பதால் இணைத்துள்ளேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  7. வீதிகள், தெருக்கள் என்று மலம் கழிக்கும் மக்களுக்கு முதலில் கழிப்பறைகளை அமைத்துக்கொடுத்து அதற்கு முடிவுகட்டிவுகட்டவோ, மும்பை போன்ற பெருநகரங்களில் உள்ள சேரிவாழ் மக்களுக்கான வாழ்விடங்களை அமைத்துக்கொடுத்து மேம்படுத்தவோ திராணியில்லை. இதில் இந்தியாவுக்கு ஒலிம்பிக் ஒரு கேடா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  8. யேர்மன் பிறேமனில் உள்ள அனைத்துலக மனித உரிமைகள் சங்கத்தின் தலைவரும் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்துப் பல்வேறு தளங்களிலே உரைத்தவரும், மிக அரிதாகச் சிங்கள இனத்திலே இருந்து தமிழீழ விடுதலைக்காகக் குரல் கொடுத்தவருமான திரு.விறாஜ் மென்டிஸ் அவர்கள் இயற்கையெய்திவிட்டார். அவருக்கு எமது ஆழ்ந்த இரங்கல். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  9. யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு Posted on August 15, 2024 by சமர்வீரன் 68 0 முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 53 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர்.குறித்த தாக்குதலில் காயமடைந்த பலர் தமது அவயவங்களை இழந்த நிலையில் வாழ்க்கையில் இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றனர். செஞ்சோலை படுகொலையின் 18 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் யேர்மனி தலைநகரம் பேர்லினில் கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் கொல்லப்பட்ட செஞ்சோலை சிறுமிகளை நினைவில் ஏந்தி மலர் தூவி சுடர் ஏற்றி வணங்கினர். செஞ்சோலையில் கொல்லப்பட்ட சிறுமிகளை நினைவில் நிறுத்தி அவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு , ஈன இரக்கமற்ற சிங்கள பேரினவாத அரசின் படுகொலையை வெளிப்படுத்தும் முகமாக பதாதையை ஏந்தியவாறு இளையோர்களால் பல்லின மக்களுக்கு யேர்மன் மொழியில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அத்தோடு செஞ்சோலை படுகொலையை பற்றிய சிறிய பதிவுகள் யேர்மன் மொழியில் வாசிக்கப்பட்டது. குறிப்பாக செஞ்சோலை சிறார்கள் இன்று உயிரோடு வாழ்ந்திருந்தாள் அவர்கள் எப்படி தமது வாழ்வில் நிலைத்திருப்பார்கள் என கனவுகளையும் நினைவுகளையும் சுமந்து தமிழ் இளையோர் அமைப்பினர் யேர்மன் மொழியில் வாசித்திருந்தது பல்லின மக்களின் மனங்களை உருக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. Video Player 00:00 18:52 யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – குறியீடு (kuriyeedu.com)
  10. தமிழர் பகுதிகளில் புத்தர் சிலைகளையும் விகாரங்களையும் கட்டுவதுதான் நல்லிணக்கம் என்று சிங்களவரும், சிங்களக் காடைத்தன அரசும் நினைக்கிறதுபோலும்.குறைந்தபட்சம் முதலில் தமிழர் பகுதிகளில் உள்ள யுத்த வெற்றிச் சின்னங்களை அகற்றுவதோடு, மாவீரர் துயிலகங்களையும் விடுவித்துவிட்டுத் தமிழினத்தின்மீது கட்டவிழ்த்துவிட்டுடிருக்கும் திட்டமிட்ட இனவழிப்பையும் நிறுத்திவிட்டுக் கனடாவுக்குக் கடிதம் எழுதமுன்வரலாமே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  11. எப்போதும் சிங்களத்துக்குச் சாமரம் வீசும் விசுவாசியின் ரணில் ஆதரவுப் பரப்புரைக் கட்டுரை. நிறைய எழுத்துப் பிழைகள் உள்ளன. ஆகக் குறைந்தது ''சஜித் ராஜபக்ச'' என்ற தலைப்பின்கீழ் வரும் பத்தியில் நான்காவது வரியைக் கட்டாயம் திருத்த வேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  12. பொதுவேட்பாளர் என்பது தமிழினத்தை அலைக்களிக்கும் அல்லது ஏமாற்றும் தந்திர முயற்சி. ஆனால் ஏற்கனவே இந்தியக் கைக்கூலிகள் தமது எஜமான விசுவாசத்தைக் காட்டப் போட்டிபோட்டுச் செயற்படுகிறார்கள் என்பது வெளிப்படையானது. -------------------------------------------------------------------------------------------------------------------------------- தமிழர்கள் இன்று ஏதோ ஒருவகையில் சரி,பிழைகளுக்கப்பால் அணிபிரிந்து நிற்பது என்பது(ஒரு குறிப்பிட்ட தொகையினர் தவிர) புதிய நாகரிகமாக மாறிவிட்டதோ என்று எண்ணுமளவுக்கே நிலமைகள் உள்ளன. இதிலே பாவம் இந்த அரியம். இலங்கை அதிபர் தேர்தலில் இதுதான் முதல் முறையா தமிழர் ஒருவர் கேட்பது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் சிங்களத்தாற் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் 1982இல் அவர்கள் கேட்டார்தானே. 3வீத வாக்குகளைப் பெற்றபோதும் அது பெரிய அளவிற் பேசுபொருளாகவில்லை. அதேபோன்று திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் கேட்டபோதும் அது பெரிய அளவிற் பேசுபொருளாகவில்லை. ஏன் தற்போது இவளவுதூரம் பேசுபொருளாகியுள்ளது. பின்வரும் கரணியங்களா? 1.தமிழினம் அரசியல் முதிர்ச்சியடைந்துவிட்டது 2.சிங்களத் தலைவருக்கு வாக்களித்துச் சலுகைகளைப் பெறலாம். 3.சிங்களத் தலைமைகளோடு வீணான பகைமையை உருவாக்கும். 4.வெல்லமுடியாத தேர்தலில் ஏன் போட்டியிடுவான். 5.வெல்லக் கூடிய ஒருவரோடு இணக்க அரசியல் செய்யலாம். இப்படி இன்னும் பலவும் இருக்கலாம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  13. முன்னணியால் மட்டும் களத்தில் இறங்க முடிவது எப்படி | EETAMIL சமகால ஈழத்தமிழர் அரசியயோடு தொடர்புடைய கருத்துப் பகிர்வென்பதால் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  14. குர்ஸ்கில் உதவி செய்வதற்காக கார்கிவ் பகுதியில் உள்ள முன் வரிசையில் இருந்து துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி மூலோபாய ரீதியாகப் படைகளை ரஸ்யாவுக்குள் நகர்த்தியதன் ஊடாக உக்ரேன் எல்லைகளில் கவனச்சிதறல் ஏற்பட்டு ரஸ்யப் படைகளைப் பின்னகர்த்த வேண்டியேற்படலாம். அல்லது உக்ரேன் பிடித்த இடங்களில் இழப்புகளைச் சமாளித்து உறுதியாக நிலைகொண்டால் பேச்சவார்த்தையின்போது உக்ரேனின் பேரம்பேசலுக்கான வலுவைத் தக்கவைக்கலாம். இந்த இரண்டில் ஒன்றிற்கன நகர்வாகவே பார்க்கமுடியும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  15. ஒரு தேசமாகத் தமிழினம் நின்ற காலமொன்றை நாம் இனிக்காணமுடியுமா? அதற்கான வலுவான கருத்தூட்டல் மற்றும் அரசியற் செயலாக்கம் போன்றவற்றைச் செய்யும் தகமையைக் களத்திலேயுள்ள எந்தத் தமிழ் அரசியற்கட்சியாவது கொண்டுள்ளதா? ஒரு நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழினம் காலத்துக்குக் காலம் சிங்களத் தலைமைகளாற் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டுவருவதே வரலாறாக உள்ளது. இந்த வரலாற்றுப்போக்கில் தமிழினம் தன்னைத் தனது பூர்வீக நிலத்தில் தக்கவைத்துக்கொள்ளப் பெரும் உயிரீகத்தை செய்து போராடியபோது, அதனைச் சிங்களம் பயங்கரவாதமென்றதும் இந்த உலகு அதனோடு ஒத்தோடி எமது ஆயுதப் போராட்ட வலுவை அழித்தொழித்து எம்மைக் கையறுநிலையில் விட்டுள்ளது. இந்தச் சூழலிற் தமிழினம் ஐநா முதல் அமெரிக்காவரை படியேறிக் கலந்துரையாடல்களைச் செய்தபோதும், எந்த நாடோ நியாயம் பேசும் அனைத்துலக நிறுவனங்களோ தமிழினம் சார்ந்தோ அல்லது இனஅழிப்புச் சார்ந்தோ ஏதாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதா? இலங்கையராக வாழுங்கள் என்ற உபதேசத்தைத் தவிர வேறெதை இவர்கள் முன்வைக்கிறார்கள். சமஸ்டியைக் கொடுத்துப் பிரச்சினையைத் தீருங்கள் என்று ஏன் இவர்களால் உரத்து கூறமுடியவில்லை. இவர்களுக்கும் தமது நலன்களை அடைய தமிழரது உயிர்கள் தேவைப்படுகிறது. – சுமார் இரண்டாயிரம் ஆண்டு காலமாக ஐரோப்பியர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி நசிந்துகொண்டிருந்த யூத மக்கள் இரண்டாம் உலக மகாயுத்த காலத்தில் ஹிட்லரால் மேற்கொள்ளப்பட்ட, வரலாறு முன்னெப்போதும் கண்டிராத பாரிய இன அழிப்புக்குள்ளாகினர். அத்தைகைய இன அழிப்பை எதிர்கொண்டு புவிப்பரப்பில் தமக்கென ஒரு சுதந்திர அரசை அமைப்பதில் வெற்றி பெற்றனர். ஆனால் ஐ.நா. வின் பாகப்பிரிவினையை எல்லையை மீறிப் பாலஸ்தீன நிலப்பரப்பை ஆக்கிரமித்ததை ஒருபோதும் ஏற்கமுடியாது. இங்கு அவர்கள் இள அழிப்பை எதிர்கொண்டு அதன் பின் தம்மை விடுதலைக்கு உரியவர்களாக வடிவமைத்த விதத்தில் இருந்து வரலாற்றுப் பாடங்களைக் கற்க வேண்டியது அவசியம். 'இரண்டு யூதன் ஒன்று சேர்ந்தால் மூன்று கட்சி கட்டுவான்' என்று ஒரு யூதப் பழமொழி உண்டு. ஆனால் அப்படிப்பட்ட யூதர்கள் தமக்கு ஏற்பட்ட பாரிய இனப் படுகொலையின் சவாலின் முன்னிலையில் அதிகம் ஐக்கியப்பட்டு அதிகம் புத்திபூர்வமாகச் செயற்பட்டு தம்மிடம் காணப்பட்ட அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி ஒரு புதிய அரசை உருவாக்குவதில் வெற்றி பெற்றனர். அவர்கள் தமக்கிடையே நிலவிய பொறாமைகளையும், காழ்ப்புணர்வுகளையும், சிறுமனப்புத்திகளையும் ஒதுக்கித்தள்ளி விடுதலையை இலட்சியமாக்கி வெற்றி பெற்றனர். குறிப்பு: மேலுள்ள இரு பந்திகளும் 'இலங்கை அரசியல் யாப்பு" என்ற நூலில் அதன் ஆசிரியர் திரு. மு. திருநாவுக்கரசு அவர்களின் முன்னுரையில் இருந்து எடுக்கப்பட்டது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  16. இந்தச் செய்தியை படித்தேன் பதியத் தோன்றவில்லை. ஆனால், இலங்கை அரசுத்தேர்தல் நோக்கித் தமிழரை வைத்துத் தமிழ்த் தலைமைகள் என்போர் பெரும் சுயநல அரசியற் சதுரங்க ஆட்டத்தை ஆடுவது தெரிகிறது. அதன் ஒரு காட்சியாகவே இந்தச் சந்திப்பு என்பதில் எந்த ஐயமும்இல்லை. தமிழரின் தலைகளின் மேல் கையூட்டுப் பெட்டிகள் பேசுகின்றன.
  17. மாகாணசபைத் தேர்தல் தனிநபர் பிரேரணையும் தனிநபர்களின் நிகழ்ச்சித் திட்டங்களும் Digital News Team 2017 ஆம் ஆண்டில் மாகாணசபைத் தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கில் ரணில் – சுமந்திரன் கூட்டு முயற்சியில் கொண்டுவரப்பட்ட ‘ மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டம்’ ஆகும். இதை இருவரின் கூட்டுமுயற்சி எனக் கூறுவதன் காரணம், இருவருக்கும் அத்தேர்தலை ஒத்திவைக்கவேண்டிய தேவை இருந்ததுடன், நல்லாட்சிக் காலத்தில் சம்பந்தன் தலைமையிலான எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியின் ஒரு அங்கமாகச் செயற்பட்டமையுமாகும். தென்னிலங்கையில் நல்லாட்சியாளர்கள் மீது அதிகரித்து வந்த அதிருப்தியினால் மாகாணசபைத் தேர்தல்கள் தனக்குப் பாதகமாக அமைந்துவிடலாம் என ரணில் தரப்புக்கு ஏற்பட்ட பயம் ஒருபுறமும், மறுபுறத்தில் அந்நேரத்தில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அதிகரித்துவந்த ஆதரவினாலும் தமிழரசுக்கட்சி மீதான மக்களின் அதிருப்தியினாலும் வடக்கு மாகாணசபையை இழந்துவிடுவோமென்று சுமந்திரன் தரப்புக்கு ஏற்பட்ட பயத்தினாலும் ஏற்படுத்தப்பட்ட விளைவே மேற்குறித்த சட்டமாகும். கந்தையா அருந்தவபாலன் மாகாண சபைகளுக்கான தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்குத் தேவையான சட்டமூலமொன்றுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் 2019 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணை மீண்டும் தூசிதட்டி எடுக்கப்பட்டு சென்றவாரம் இரண்டாம் வாசிப்புக்காக சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அப்பிரேரணை தொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் கருத்துரைகளைத் தொடர்ந்து சபாநாயகரினால் அது சட்டவாக்கக் குழுவின் பரிந்துரைகளுக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளது. அதன்பின்னர் அது மூன்றாம் வாசிப்புக்காக சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதன் பின்னரே சட்ட வலுவைப் பெறும். அது எப்போது சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்பதற்கும், நிறைவேற்றப்பட்டாலும் அதற்கமைய உடனடியாகத் தேர்தல் நடக்குமென்பதற்கும் எத்தகைய உத்தரவாதமும் இலங்கை அரசியலமைப்பில் இல்லை. அப்படியிருக்கும்போது வேட்பு மனுக்கள் கோரப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலையே கிடப்பில் போட்டுவிட்டு ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடைபெறவிருக்கும் இந்நேரத்தில் மிக அவசர அவசரமாக இந்த தனிநபர் பிரேரணை இரண்டாம் வாசிப்புக்காக சபையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அது சட்டமாக நிறைவேற்றப்பட்டுவிட்டதான ஒருதொனியில் அதிகளவு முக்கியப்படுத்தப்படுவதன் நோக்கம் என்ன? உண்மையில் இது நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான பற்றா அல்லது ஜனாதிபதித் தேர்தலில் தங்கள் தங்கள் தனிப்பட்ட நோக்கங்களை அடைந்து கொள்வதற்கான ஒருசிலரின் முன்னகர்வா? இலங்கையில் நீடித்து வந்த இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கமைய இலங்கையின் அரசியலமைப்பிற்கு கொண்டுவரப்பட்ட 13 ஆம் திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதுடன், மாகாணசபைத் தேர்தல் சட்டமும் உருவாக்கப்பட்டது . இம்மாகாண சபைகள் வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்லாமல் நாட்டின் ஏனைய ஏழு மாகாணங்களுக்கும் உருவாக்கப்பட்டதுடன், வடக்கும் கிழக்கும் தற்காலிக இணைப்பினடிப்படையில் ஒரே மாகாணமாக கருதப்பட்டு 1988 இல் முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது. 1990 இல் இந்தியப் படையின் வெளியேற்றத்துடன் வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளும் வெளியேற அப்போதைய ஜனாதிபதி பிரேமதாச அச்சபையைக் கலைத்தார். பின்னர் 2006 இல் ஜே.வி. பி உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் இணைக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டு தனித்தனி மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணசபைக்கு முதலாவது தேர்தல் 2008 இலும் இரண்டாவது தேர்தல் 2012 இலும் நடத்தப்பட்டபோதும் வடக்கு மாகாண சபைக்கு 2013இல் மட்டும் ஒரேயொரு தேர்தல் நடத்தப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் அப்போதைய நல்லாட்சி அரசாங்கம் நடைமுறையிலிருந்த மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதைத் தொடர்ந்து மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாத நிலைமை உருவாக்கப்பட்டது. தற்போது மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்துவதற்கான வழிகளைத் திறப்பதற்கு இரண்டு தெரிவுகள் உள்ளன. ஒன்று நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்ட சட்டத்தினடிப்படையில் புதிய தேர்தல் சட்டமொன்றைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதன் மூலம் அப்புதிய சட்டத்திற்கமைய தேர்தலை நடத்துவது. இது உடனடிச் சாத்தியமான ஒன்றன்று. இரண்டாவது பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கான சட்ட அங்கீகாரத்தை நாடாளுமன்றம் வழங்குவதன் மூலம் தேர்தலை நடத்துவது. இது சாதாரண பெரும்பானமையுடன் நிறைவேற்றக்கூடிய ஒன்றாகும். இதற்காகவே சுமந்திரனால் தனிநபர் பிரேரணை ஒன்று 2019 இல் முன்வைக்கப்பட்டது. அதுவே சென்றவாரத்தில் நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்டது. இலங்கையில் அரசியலமைக்குப்புக்கான சில திருத்தங்கள் உட்பட பல சட்டங்கள் நாட்டின், மக்களின் நலனைவிட ஆட்சியாளரின் நலனுக்காகவே கொண்டுவரப்பட்டமை நாடறிந்த உண்மை. இந்த வகையில் 2017ஆம் ஆண்டு மாகாண சபைகளைக் கலைத்தல், அதன் காலத்தை நீடித்தல், அதனது அதிகாரங்களைக் கையகப்படுத்தல் உட்பட பல விடயங்களை உள்ளடக்கி அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தமாக ஒன்றைக் கொண்டுவருவதற்கான முன்னெடுப்பொன்றை அப்போதைய நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவர முயற்சித்தது. இதற்கான முதன்மை நோக்கம் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தாதிருப்பது அல்லது விரும்பியவாறு காலந்தாழ்த்துவதாகும். காரணம் நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தி அதிகரித்து வந்ததனால் தேர்தல் ஒன்றின் மூலம் மாகாண சபைகள் எதிர்க்கட்சியான பொதுஜன பெரமுனவுக்கு சென்றுவிடும் என்ற பயம். ஆனால் அதனை சட்டமாக்குவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் அவர்கள் விரும்பியதுபோல அதனை இலகுவில் செய்ய முடியவில்லை. எனவே மாகாணசபைத் தேர்தல்களைத் தவிர்க்கும் ஒரு உபாயமாகவே ‘ மாகாண சபைத்தேர்தல்கள் திருத்தச் சட்டம்’ அப்போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளைச் சுட்டிக்காட்டி அந்நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, பிரதம நீதியரசர் சரத் என். சில்வா உட்பட மனித உரிமை அமைப்புக்கள் பலவும் தமது ஆட்சேபனைகள் தெரிவித்திருந்த போதும் நல்லாட்சி அரசாங்கம் குறிப்பாக தற்போதைய ஜனாதிபதி, அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதனை எள்ளளவேனும் கவனத்தில் கொள்ளவில்லை. காரணம் அந்நேரத்தில் ரணிலுக்கு மட்டுமல்ல நல்லாட்சி அரசாங்கத்தின் உத்தியோகப்பற்றற்ற பிரதமர் தானே என தனது தொண்டர்களுக்கு கூறிந்திரிந்த சுமந்திரனுக்கும் அது தேவைப்பட்டிருந்தது. ஒரு நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பண்புகளில் பிரதானமாக இருப்பது உரியகாலங்களில் நேர்மையான முறையில் தேர்தல்களை நடத்தி மக்களின் கருத்துகளுக்கு செவிசாய்ப்பது. ஆனால் இலங்கையில் பல சட்டங்கள் மட்டுமன்றி பல தேர்தல்களும்கூட ஆட்சியாளர்களின் நலன்களைப் பேணும்வகையில் கையாளப்பட்டு வருகின்றன. தேர்தலைப் பிற்போடுதல், உரியகாலத்துக்கு முன்னரே நடத்துதல், வேறுமுறைகளைக் கையாளுதல் மூலம் இவை இடம்பெற்று வருகின்றன. தங்களின் இத்தகைய செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்கு ஆட்சியாளர்கள் ஆயிரம் காரணங்களை கைவசம் வைத்திருப்பார்கள். இதற்கான அண்மிய உதாரணமாக இருப்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பது ஆகும். வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு சுமார் 70% ஆன தேர்தல் பணிகள் நிறைவடைந்துவிட்ட ஒரு நிலையில் போதிய நிதியில்லை என்று கூறி நிதியமைச்சையும் தன்வசம் வைத்துள்ள ஜனாதிபதி அத்தேர்தலுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார். அது மட்டுமன்றி ஜனாதிபதித் தேர்தலையும் தள்ளிவைப்பதற்கான சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அரசியலமைப்பும், அதற்கான உச்ச நீதிமன்றத்தின் சரியான பொருட்கோடலும் அதற்கு இடமளிக்கவில்லை. ஆட்சியைக் கொண்டு செல்வதில் சிக்கல்நிலை தோன்றும்போது அல்லது தேர்தலை நடத்த முடியாத இக்கட்டான ஒரு நிலை காணப்படும்போது நாட்டு நலன்கருதி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் முற்கூட்டித் தேர்தலை நடத்துவது அல்லது குறிப்பிட்ட காலத்துக்கு அதை ஒத்திவைப்பது என்பது ஜனநாயக வழிமுறைகளாக ஏற்கப்படுகின்றன. ஆனால் ஆட்சியாளர்கள் நியாயமான காரணமின்றி தமது நலன்களுக்காக தன்னிச்சையாக அதனை செய்துவருவது இலங்கையின் வரலாறாகி வருகிறது. இந்த வரலாற்றைத் தொடக்கி வைத்த பெருமை? இலங்கையின் முதலாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியும், தற்போதைய ஜனாதிபதியின் மாமனாருமான ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவையே பெருமளவுக்குச் சேரும். 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று 80% இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றிக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்த்தனா இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பைக் கொண்டுவந்து நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தன்னை மாற்றிக்கொண்டது மட்டுமன்றி 1983 இல் நடக்க வேண்டிய நாடாளுமன்றப் பொதுத்தேர்தலை நடத்தாது தவிர்ப்பதற்காக 1982 டிசம்பரில் மக்களின் கருத்தறியும் சர்வஜன வாக்கெடுப்பு முறையை முன்முதலாகக் கையாண்டார். அதாவது அப்போதைய நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை 1989 வரை தொடர்வதற்கான மக்களின் சம்மதத்தைப் பெறுவதற்கு புதிய சட்டமொன்றை நிறைவேற்றி, சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி, அதில் அவர் வெற்றியும் பெற்றார். இதற்கான கருவை ஜே.ஆர். ஜெயவர்த்தன அதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த சிறிமா அம்மையாரிடமிருந்து பெற்றிருக்கக்கூடும். 1970 இல் ஆட்சியைக் கைப்பற்றிய சிறிமாவோ பண்டாரநாயக்க 1972 இல் முதலாவது குடியரசு அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அதன்மூலம் 1975 இல் நடக்கவேண்டிய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை 1977 இற்கு தள்ளிவைத்திருந்தார். இவ்வாறு புதிய சட்டங்களை இயற்றியோ அல்லது இருக்கும் சட்டங்களிலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தியோ ஆட்சியாளர்கள் தமக்கேற்ற வகையில் தேர்தல்களைத் தீர்மானித்தனர். இது சந்திரிகா, மஹிந்த, ரணில் என இன்றுவரை தொடர்கிறது. ஆட்சியாளரின் இத்தகைய பாரம்பரியத்தின் ஒரு தொடர்ச்சியாகவே 2017 ஆம் ஆண்டில் மாகாணசபைத் தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கில் ரணில் – சுமந்திரன் கூட்டு முயற்சியில் கொண்டுவரப்பட்ட ‘ மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டம்’ ஆகும். இதை இருவரின் கூட்டுமுயற்சி எனக் கூறுவதன் காரணம், இருவருக்கும் அத்தேர்தலை ஒத்திவைக்கவேண்டிய தேவை இருந்ததுடன், நல்லாட்சிக் காலத்தில் சம்பந்தன் தலைமையிலான எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியின் ஒரு அங்கமாகச் செயற்பட்டமையுமாகும். தென்னிலங்கையில் நல்லாட்சியாளர்கள் மீது அதிகரித்து வந்த அதிருப்தியினால் மாகாணசபைத் தேர்தல்கள் தனக்குப் பாதகமாக அமைந்துவிடலாம் என ரணில் தரப்புக்கு ஏற்பட்ட பயம் ஒருபுறமும், மறுபுறத்தில் அந்நேரத்தில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அதிகரித்துவந்த ஆதரவினாலும் தமிழரசுக்கட்சி மீதான மக்களின் அதிருப்தியினாலும் வடக்கு மாகாணசபையை இழந்துவிடுவோமென்று சுமந்திரன் தரப்புக்கு ஏற்பட்ட பயத்தினாலும் ஏற்படுத்தப்பட்ட விளைவே மேற்குறித்த சட்டமாகும். சுமந்திரனின் இந்தச் செயற்பாட்டினால் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் பங்காளிகளிடையேயும் சுமந்திரன் மீதான விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்க, அதனைத் தணித்து தன்னை உத்தமனாகக் காட்டுவதற்காக அவரால் 2019இல் முன்வைக்கப்பட்டதே தற்போது பேசுபொருளாகியுள்ள தனிநபர் பிரேரணையாகும். 2017 இல் தத்தமது தேவைகளுக்காக ரணிலும் சுமந்திரனும் போட்ட மாகாணசபைத் தேர்தல் தொடர்பான முடிச்சை இப்போதும் தத்தமது தேவைகளுக்காகவே அவிழ்க்கும் நாடகமொன்றை அரங்கேற்ற முயற்சிக்கிறார்கள் என்று கருதலாம். இதனை ஏன் பெரும்பாலான மக்கள் நாடகமாகக் கருதுகிறார்கள்? இந்நேரத்தில் இதை அவ்விருவரைத்தவிர வேறெவரும் அவசரமான ஒன்றாகக் கருதவில்லை. அத்துடன் புதிய ஜனாதிபதி பதவியேற்பதற்கிடையில் இது சட்டமாக நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியம் மிகக் குறைவு. அவ்வாறு நிறைவேற்றப்பட்டாலும்கூட அதற்கமைய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்துவது புதிய ஜனாதிபதியையும் புதிய அரசியல் களநிலைமைகளையும் பொறுத்த விடயம். இப்படியிருக்கையில் இந்த நாடகத்தை இருவரும் அரங்கேற்ற விழைவதன் நோக்கம்தான் என்ன? இதற்கான விடை இலகுவானது. தேர்தலில் வெல்வதற்கு ரணிலுக்கு தமிழ், முஸ்லிம் மக்களது வாக்குகள் தேவை. அடுத்த ஜனாதிபதியும் நான்தான் என்ற தோரணையில் சிங்கள வாக்காளர்களைக் கவர்வதற்காக அள்ளி வழங்கும் பல வாக்குறுதிகள் போல தமிழ், முஸ்லிம் வாக்காளர்களுக்கு அள்ளி வழங்கும் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று. தமிழ் வாக்குகளைக் குறிப்பாக வடக்கின் வாக்குகளை ரணிலுக்குப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் தனது இரண்டாவது ஆட்டத்துக்கான களத்தைத் திறக்கலாம் என்பது சுமந்திரனின் எண்ணம். மாகாண சபை தொடர்பாக மக்கள் அதிகம் அலட்டிக் கொள்ளாவிட்டாலும் தமிழரசுக் கட்சித் தேர்தலில் இழந்துவிட்ட தனது விம்பத்தை மீளவரைவதற்கும், தனது ஆதரவாளர்களைத் தக்க வைத்து ரணிலுக்கு ஆதரவாகத் தேர்தல் வேலைகளைச் செய்வதற்கும், ரணிலுக்குத் தான் நல்ல விசுவாசியாக இருப்பதை வெளிப்படுத்தவும் சுமந்திரனுக்கு இந்த நாடகத்தை அரங்கேற்றவேண்டிய தேவை உள்ளது. அதுவும் தமிழ் மக்கள் மத்தியில் பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலையில் சுமந்திரனுக்கு இது இன்னும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இதுவரை காலமும் சஜித் தரப்புடன் ஒட்டிக்கொண்டிருந்தது மட்டுமல்லாமல் ரணிலுக்கெதிராக மிகமோசமான விமர்சனங்களை முன்வைத்து வந்தவர் சுமந்திரன். சென்ற ஆண்டு வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் இளைஞர்களுக்கான ஒன்றுகூடலில் நாட்டின் கௌரவத்துக்குரிய ஜனாதிபதியான ரணிலை ஒருமையில் திட்டிய சுமந்திரன் இனிவருங்காலத்தில் எப்படி அவரை அழைக்கப்போகிறார் என்பதை மக்கள் ஆவலுடன் பார்த்திருக்கின்றனர். முன்னர் ரணிலுக்கு எதிரானவராகத் சுமந்திரன் தன்னைக் காட்டிக் கொண்டது நாடகமா? அல்லது இப்போது மீண்டும் சேர்ந்து செய்வது நாடகமா? என்பதில் ஐயமிருந்தாலும் சுமந்திரன் பெரும்பாலும் ஆடுவது நாடகம்தான் என்பதில் பெரும்பாலான மக்களுக்கு ஐயமில்லை. இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில் சுமந்திரன் சஜித்துடன் ஒட்டுறவாடியதை நம்பி இதுவரை சஜித்தைப் புகழ்ந்து தள்ளிய அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் இனி என்ன செய்வது என்று திகைத்து நிற்பதுதான். பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில், சஜித், அனுரகுமார மூவரதும் தேர்தல் விஞ்ஞாபனம் இன்னும் வெளிவராவிடினும் இந்த மூவரும் தாம் ஜனாதிபதியானால் அரசியலமைப்பிலுள்ளபடி மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைத் தருவதாகப் பொதுவெளியில் வாக்குறுதியளித்துள்ளார்கள். அவ்வாக்குறுதி உள்ளத்திலிருந்தானதா அல்லது உதட்டிலிருந்தானதா என்பதை எதிர்காலத்தில்தான் அறியமுடியும். இவர்களில் ஒருவர் ஜனாதிபதியாக வருமிடத்து அவர்கள் வாக்குறுதி அளித்தபடி மாகாணசபைச் சட்டங்களில் பல திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதன்பின் மாகாணசபைகளுக்கான தேர்தல் இடம்பெற்றால் அது பெறுமதி உடையதாயிருக்கும். அதுவே தமிழ் மக்களின் தற்போதைய எதிர்பார்ப்புமாகும். அவ்வாறிருக்கையில் ரணிலும் சுமந்திரனும் அவசரப்பட்டு ஆடும் இந்த ஆட்டம் தமிழ் மக்களுக்கானது என்பதைவிட தனிநபர்களின் நிகழ்ச்சி நிரலாகவே கொள்ளப்படவேண்டும். Thinakkural.lk
  18. தமிழ்ப்பொது வேட்பாளர் அறிவிப்பின் பின்னர் அப்படியே தலைகீழாகத் திரும்பிய சும் வட-கிழக்கு இணைந்த சமஸ்டியைத் தருவோருக்கே ஆதரவு என்று ஏன் கூறுகின்றார். இந்த அறிவிப்பு ஏதோவொரு தாக்கத்தை தென்னிலங்கை அரசியல்வாதிகளிடையே செய்திருப்பதாலா?
  19. தன்பக்கச் சார்பாகக் கதைக்காமல் கதைக்கும் அனைவருமே எனக்குப் பக்கச்சார்பானவரே.
  20. இந்தப் பேச்சுகளைக் கேட்டாவது இவருக்கு ஆலவட்டம் பிடித்தவர்களுள் போனவரைவிட்டு இருப்பவர்க்ள் சிந்திக்க வேண்டும். சிந்திப்பார்களா?
  21. நன்றி - யூரூப் சமகால அரசியலோடு தொடர்புடைய உரையாடலாதலால் இணைத்துள்ளேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  22. ஒரு பேரினமாக இருந்திருக்கவேண்டிய இனமான தமிழினம் நிலமிழந்து நிலையிழந்து சிதைந்துபோய்க்கொண்டிருக்கிறது என்ற துயரமே இதனைப் படித்தபோது மேலெழுந்து வருகிறது. நட்பார்ந்து நன்றியுடன் நொச்சி
  23. நிகழ்வுகள் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 16.09.2024 Posted on July 15, 2024 by சமர்வீரன் 206 0 தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 16.09.2024 – குறியீடு (kuriyeedu.com) 206 0
  24. செஞ்சோலை மலர்களின் படுகொலை, 18 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு-யேர்மனி. Posted on August 7, 2024 by சமர்வீரன் 86 0 செஞ்சோலை மலர்களின் படுகொலை, 18 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு-யேர்மனி. – குறியீடு (kuriyeedu.com)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.