Everything posted by nochchi
-
வீட்டுக்குள் புகுந்துவிட்டுள்ள விஷப் பாம்பு!!
உண்மைதான். இதுபோன்ற ரொய்லெற் ஊடகங்களும் இல்லையென்றால் சும் போன்றவர்களது ஊத்தைகள் வெளிவராதுதான். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி அப்ப மரத்துப்போன மனிதரென்று முடிவெடுத்துவிட்டீஙகளா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
வீட்டுக்குள் புகுந்துவிட்டுள்ள விஷப் பாம்பு!!
சும்முக்குள் மனித உணர்வு இருந்தால் இப்போதாவது ஒதுங்கித் தன்னைச் சுயவிமர்சனம் செய்தகொண்டு நேர்மையாளனாக மாறலாம் அல்லவா? மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உண்மையான நோக்கம் இருந்தால், தமிழ்தேசிய நீக்கம்தான் உண்மையான நோக்கமென்றால் மாறவாய்ப்பில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
வீட்டுக்குள் புகுந்துவிட்டுள்ள விஷப் பாம்பு!!
வலையொளித் தளங்களில் தமிழரே, தமிழரை இனவாதிகள் என்று எழுதும் அளவுக்குச் சிங்கள இனவாதம் தேய்ந்துபோய்விட்டதாக அல்லவா, சிங்கள்தால் ஏற்பட்ட காயம் மாறாத கைகளால் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
இலங்கையில் பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல்; அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
யூற்ரூப்பர்களுக்கு வேலை வந்துவிட்டது. இனியென்ன.. ஒரே அலப்பறைதான். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
வீட்டுக்குள் புகுந்துவிட்டுள்ள விஷப் பாம்பு!!
சும் இந்த விமர்சனத்தின் பின்னராவது திருந்துவாரா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
அமைதிப்படையென வந்து தமிழின அழிப்புப்படையாகித் தாயக மண்ணில் பல்வேறு படுகொலைகளை அரங்கேற்றிய இந்தியப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட அனைவரையும் நினைவேந்திய இரங்கல் வணக்கம்
-
மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி
அழைப்புக்கு நன்றி, நான் வருவேன். எந்த இடத்தில் என்பதை இரகசியமாகச் வைத்திருக்கவும். பிறகு சும் விசுவாசிகள் கும்மியடித்துவிடுவார்கள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி இதைவிட ஒரு மனிதன் வன்மத்தோடு சிந்திக்கமுடியாது. உடல்நலம் குன்றிருக்கும் வேளையில் ஒரு மனிதனாகவேணும் சிந்திக்க வேண்டாமா? அரசியல் என்பது ஒவ்வொருவர் பார்வை பட்டறிவின்பாற்பட்டு பொதுநலம் சார்ந்தது. ஒருவர் சரியோ தவறோ தமிரது அரசியலில் இருந்தார் தற்போது ஒதுங்கி இருக்கிறார். முந்தநாள் வந்தசிலர் தமிழினத்தைக் காட்டிக்கொடுத்ததைவிட திரு.மாவையவர்கள் ஒன்றும் செய்யவில்லைத்தானே. நன்றி.நன்றி.நன்றி
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
மக்கள் விடுதலை முன்னணியின்(JVP ) புதிய பெயர் கொண்டு கட்சியான தேசிய மக்கள் சக்தி(NPP) பல முகவர்கள் சுயேச்சைகளாகக் களமிறக்கப்பட்டுள்ளதாகவே இவற்றை ஆழமாக உற்றுநோக்கும் சிலரது கருத்தும் உள்ளது. எனவே தமிழ் மக்கள் இதுவரை இல்லாத பெரும் கவனத்தோடு வாக்களிக்க வேண்டிய தேர்தலாகும். தமிழின அழிப்புக்கான போரும், அதன் தொடர்ச்சியாக ஊதிப்பெருத்து நிற்கும் படைபல, ஆளணிப் பெருக்கத்தாலும் நாடு பெரும் பொருண்மிய வீழ்ச்சியைக் கண்டதை ஊழலால் நாடு பின்னோக்கிப்போனதாகக் காட்டிப் பெரும் எடுப்பிலே பரப்புரைசெய்து ஜ.வி.பெ(JVP) என்ற தே.ம.ச.(NPP) ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதோடு தமிழருக்குப் பொருண்மியப் பிரச்சினை மட்டுமே உள்ளது என்று கூறியவாறு தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுதலித்தவாறு ஆளமுனையும் போலி மாக்ஸிட்களையும் தமிழ் மக்கள் இனங்கண்டு செயற்பட வேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
அரசியலில் இதெல்லாம் சகஜமில்லை – நிலாந்தன்.
நியாயமான வினாக்களைத் தொடுத்துள்ளபோதும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மீதான திண்மமானதும் வன்மானதுமான வினாக்களை அவர்களை நோக்கிக் கேட்பதற்கு, அவர்களுக்கு வட-கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கொடுத்ததுபோல் ஒரு அடர்த்தியான வாய்ப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் நிலாந்தனவர்கள் ஆய்வுசெய்து எழுத வேண்டும். அவர்கள் சொல்லுகின்ற ஒருநாடு இருதேசங்கள் போன்ற நிலைப்பாட்டைக் கடந்து15ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்கள். அவர்களை ஊடகங்களில் கூடக் காட்டுவதில் ஊடகங்கள் பின்னிற்பதையும் காணமுடிகிறது. எல்லாம் இந்திய வல்லாதிக்கத்தின் கைத்தடிகளாகிவிட்ட சூழலில் இன்று தனியே தமது சக்திக்கேற்பக் தமிழர்களுக்காகக் களத்திலே நிற்கிறார்கள். பொதுக்கட்டமைப்பினை நோக்கித் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வைத்த விமர்சனங்கள், அதனது மூளையாகச் செயற்பட்டு செயற்பாட்டுவடிவத்துள் தள்ளியவர்களில் ஒருவரான இந்தக் கட்டுரை ஆசிரியருக்குக் கடுப்பை ஏற்றியதன் விளைவா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
பார் சிறியென்று, சிறீதரனைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கின்றேன். சிறீதரனுக்கென யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதிக்குள் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் கணிசமான வாக்குக்களை நிரந்தரமாகக் கொண்ட ஒருவராக இருக்கிறார். அதற்காகவே அவரைச் சும் முதன்மை வேட்பளராக நிறுத்தியுள்ளது. இல்லையேல் இவரையும் சும் தூக்கிவீசியிருக்கும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
தமிழ்த் தேசியத்தை பழித்தும் இழித்தும் உரைப்பவன் 1. சிங்களவானக இருக்கவேண்டும். 2. சிங்களத்தின் கைக்கூலியாக இருக்க வேண்டும். 3. தமிழனல்லாதவானாக இருக்க வேண்டும் இப்படியானவர்கள் குறித்து நீங்கள் நேரத்தை விரயமாக்குவதால் ஒரு பயனும் இல்லை. அவர்கள் தமது விசுவாசத்தைத் தமது எஜமானர்களுக்குக் காட்டவிட்டு நீங்கள் பயணிப்பதே பொருத்தமானது.
-
ரணில் மற்றும் மஹிந்தவின் வாகனங்களை கோரும் அரசாங்கம்
உண்மையில் சனாதிபதியின் பயிற்சிப்பட்டறை அப்படி. எப்படி எதிரிகளைச் சாய்த்து ஓரங்கட்டுவது என்பதற்கான வியூகங்கள் வியக்க வைக்கிறது. எல்லாம் 14ஆம் திகதிவரை மட்டுமே. அதன்பின்னர் அரசியலில் இதெல்லாம் சாதாரணமென்று போட்டுவிடுவார். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
நீங்கள் கேட்ட காணொளி இந்தத் திரியிலே உள்ளதா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
இறுதி தீர்வு சர்வஜன வாக்கெடுப்பினூடாகவே தீர்மானிக்கப்படவேண்டும்: தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்து
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து, வடமாகாணசபை முதல்வராக இருந்த ஐயா விக்கினேஸ்வரனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து யாழ்ப்பாண மாநகரசபை முதல்வராக இருந்த தம்பி மணிவண்ணனும் இணைந்து தேர்தலில் போட்டியிடச் சேரமுடிகிறதென்றால், உண்மையில் கட்சிகள் ஒன்றிணைய முடியாதிருப்பதொன்றும் கொள்கையடிப்படையில் இல்லையா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
தேர்தலில் பொதுமக்கள் யாருக்கு வாக்களிப்பது| பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட... திரியோடு தொடர்புடைய காணொளி என்பதால் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
மனிதத்தை நேசிக்கும் எவரும் அதையே செய்ய முனைவர். ஆனால், எம்மவர்கள் சிலருக்கு அதுகூட உறுத்தலாகவல்லவா இருக்கிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
காங்கேசன்துறை இடைத்தேர்தலை மனதில் வைத்துச்சொல்கிறார்போல் உள்ளது. யாரறிவார் எல்லாம் 14.11க்குப் பிறகே வெளிச்சம். ஆனால், யாருக்கு வெளிச்சம் என்பதே இங்கு அவதானத்திற்குரியதாகும். தமிழினம் எந்தச் சூழலிலும் மிகச்சிறிய தொகையினர் ஒரு தடுமாற்றநிலைகொண்டு எடுக்கும் முடிவுகளைத் தவிர உரிமைகளின் முன் சலுகைகளை நோக்கிய ஓடியதாக இல்லை. மக்கள் இந்தத் தேர்தலில் எத்தனை பேரை வீட்டினுள்(தஅக கட்சியின் சின்னத்தையல்ல) இருத்தப்போகிறார்கள் என்று பார்ப்போம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
வலி. வடக்கு காணிகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் - இராமலிங்கம் சந்திரசேகர்
நானறிந்தவரையில் ஆட்களைக் கூப்பிட்டு பரப்புரைக்காகக் கதையை எடுத்துவிட்ட என்.பி.பிக்காரரிடம் மக்கள் உங்கடை தலைவர் ஒன்றும் புதியவரல்ல. அவர் 20ஆண்டுகளாக நாடாளுமன்ற அரசியலில் இருக்கிறார். அவரிடம் சொல்லி முதலில் எமது காணிகளை விடுவித்துவிட்டு பிறகு வாருங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள் அந்தக் காணிகளுக்குரிய மக்கள். நட்பார்ந்த நன்றியுடன். நன்றி
-
முற்போக்கு தமிழர் கழகத்தின் ஆதரவு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு - சதாசிவம் வியாழேந்திரன்
வடக்கில டக்கியர் கிழக்கில வியாத்தியர் எண்டு இனிப்பேச்சாகப்போகுது. நட்பார்ந்த நன்றியுடன். நன்றி
-
ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையுடன் புளொட் தொடர்பா..! மறுக்கும் சித்தார்த்தன்
தமிழினம் அரசியலை முழுமையாக அறியாவிடினும், அங்கிடுதத்தி அரசியலை அறிந்துகொள்ள வைக்கும் தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கப்போகிறது. இதன் பின்னர்தான் தமக்கான அரசியல் எது என்பதை அடையாளம் காணவும்கூடும். முந்தி நான் படித்தகாலத்தில் இலங்கையிலை பெஞ்சன் எடுக்கிறவையே ஒரு பெருமையோடைதான் வருவினம். இதிலை மேற்கலக பெஞ்சனியர்மாரென்றால் சொல்லவும் வேண்டுமா? இனிப் படித்த பெருமக்களாகிவிட்டால்,அவைக்கு சிங்களம் நல்லதாவே தெரியும். ஏனென்றால் என்ன சுழி சுழித்து ஓடியிருப்பார்கள். எனவே எல்லாம் தெளிவுபெற ஒரு கால அவகாசம் தேவையல்லவா? அப்போது சிலவேளை ஒவ்வொரு வீட்டுவாசலில் புத்தர்சிலை வைக்கப்பட்டடிருக்கும். நட்பார்ந்த நன்றியுடன். நன்றி
-
முற்போக்கு தமிழர் கழகத்தின் ஆதரவு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு - சதாசிவம் வியாழேந்திரன்
ஒரு கட்சியின் தலைவராச்சே. அப்படியொரு ஒப்பந்தம் போடாமலா ஓமென்றிருப்பார். நன்றி
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
தந்தை செல்வா அவர்களின் ஆத்மா இந்தப் புகைப்படத்தையும், இப்ப உள்ள டமிழரசுக் கட்சியையும் பார்க்க நேர்ந்தால், அவரது ஆத்மாவும் தற்கொலை செய்துகொள்ளும். பெற்றோரது பெயரைக் கெடுக்கவென்றே.. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி யாழிலே ''டமிழ்,டமிழ்'' என்று வாசித்து அப்படியே கை தட்டிவிட்டுட்டுது. அது 'டமிழரசு, இல்லை தமிழரசு என்று வாசியுங்கள் உறவுகளே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
1. நல்ல வருமானம்(சம்பளம்) 2. தரமான, மலிவான உணவு 3. வாகன வசதி 4. எரிபொருளுக்கான இலவசக் கூப்பன் 5. பிரமுகராக வலம் வரும் வியாதி 6. பெறுமதியான கடவுச்சீட்டு 7. நாடாளுமன்ற வரப்பிரசாதங்கள் 8. விழாக்கள் பரிசுகள் இத்தியாதிகள் 9. உறவுகளுக்கு உதவுதல் இப்டிப் பலதை இழக்க மனம் வருமா? மேற்கு மாதிரித் தேர்தலிலை நின்று நாடாளுமன்றம் போனா தொகுதி வேலையைக் கட்டாயம் பார்க்க வேண்டியதில்லை. இப்படி சும்மா இருக்க வாற வரப்பிரசாதங்களைத் தரும் தொழிலாக உள்ளதை விடமுடியாதுதானே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
தமிழ்சிறியவர்களே இணைப்புக்கு நன்றி. தெரியாத புதுவிடயமாக இருக்கிறது. ஒவ்வொரு கைக்கூலிகளின் பின்னால் எவளவு. என்னதான் தாழம்பூவை வைத்தாலும் உள்ளேயுள்ளது வெளிப்படத்தானே செய்யும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
தேர்தலுக்கு பிறகு தமிழரசுக் கட்சி புத்துணர்வுடன் புதுப்பொலிவு பெறும் - அரியநேத்திரன்
இன்னும் தங்களைத் தமிழ் மக்கள் நம்புவார்கள் என்று கனவுகாண்கிறார்கள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி