Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. நீங்கள் தான் பல மக்கள் நலன்புரி அமைப்புகள் வட பகுதிகளில் வெற்றிகரமாக இயங்குவதாக எழுதினீர்களே. அந்த அமைப்புகளுக்கு தாங்கள் கடிதம் எழுத முடியாதா? இல்லையேல் தந்தியாவது அடிக்க முடியாதா? கோபுரம்,சுற்றுமதில் கட்டும் புலம்பெயர்ந்தவனுக்கு தங்கள் உடன் பிறந்தவர்களுக்கு கக்கூஸ் கட்டிக்கொடுப்பதில் எவ்வித பிரச்சனையும் இருக்கப்போவதில்லை. இதற்கென ஒரு அமைப்பை உருவாக்குங்கள்.....இல்லையேல் இருக்கும் அமைப்பின் விலாசத்தை தாருங்கள். 10 குடும்பத்திற்கு மலசலம் கட்டும் நிதியை நான் திரட்டி தருகின்றேன்.
  2. கதை சொல்லிக்கொண்டிருக்கும் போது குறுக்கு கேள்விகள் கேட்பவர்கள் மீது தான் அதிக சந்தேகம் வருகின்றது.😂
  3. அங்கெலா மேர்க்கலை விட Merz உலக பொருளாதார கொள்கையில் திறமை கொண்டவர். எதிர்பார்த்த யுத்தம் ஒன்று எல்லாவற்றையும் புரட்டிப்போடும் என ஐரோப்பியர்கள் இந்த அளவிற்கு எதிர்பார்க்கவில்லை என நினைக்கின்றேன். ஐரோப்பாவிற்கு ரஷ்யா அரசியல் ரீதியாக இல்லாவிட்டாலும் பொருளாதார ரீதியாக மிக மிக முக்கியமான நாடு. அதை உக்ரேனுக்காக தகர்த்தெறிந்து விட்டு...... அல்லல்படுவது ஐரோப்பா மட்டுமல்ல இந்த உலகம் முழுவதுமே. உலக பொருளாதார ரீதியாக அமெரிக்காவிற்கான முதல் எதிரி ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமே. அமெரிக்காவின் டொலர் விம்பத்தை உடைத்தவர்கள் யூரோ நாணயத்தை உருவாக்கியவர்கள் தான். இந்த யூரோ நாணையத்தை கையில் எடுத்த அரேபிய நாட்டு தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஓட ஓட ஓடி இப்போது அந்த இருவரும்(அமெரிக்கா- ஐரோப்பிய ஒன்றியம்) உக்ரேனுக்குள் புதைந்துள்ளார்கள். இதில் அறுவடை செய்து பலன் அனுபவிப்பது ரஷ்யா எனும் பெரும் கரடி.
  4. நான் இருக்கும் இடம் என்றும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் சினோவால் நிறைந்திருக்கும் பூமி. ஆனால் இன்றைய காலங்கள் அதாவது பத்து வருடங்களாக சினோ கொட்டவேயில்லை.அப்படி கொட்டினாலும் ஒரு நாள் இரண்டு நாட்களுடன் கரைந்தோடி விடும். உள்ளூர்வாசிகளின் வியாபாரங்களும் முடங்கிக்கொண்டு போகின்றது. காலநிலை மாநாடுகளில் தேவையில்லாத குண்டு வீசல்களையும், தேவையில்லாத ஏவுகணை வீசல்களையும்,தேவையில்லாத விண்வெளி ஆய்வுகளுக்கான செய்மதி கோள்களை ஏவுவதை நிறுத்த கோரிக்கை வைக்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு கார் என்ற சட்டம் உலகளாவிய ரீதியில் உருவாக்கப்பட வேண்டும். வீட்டுக்கு முன்னாலை மூண்டு கார்...வீட்டுக்கு பின்னாலை மூண்டு கார் வைச்சிருக்கிற புலம்பெயர் சிறிலங்கன் டமில்ஸ் கவனிக்க.😛
  5. நல்லதொரு திட்டமும் செயற்பாடுகளும்..... வியாபாரமும் விளம்பரமும் ஊர் முன்னேற்றமும் நிறைந்தது. ஊருக்கு ஊர் இப்படியான நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும்.
  6. உலக அரசியல் நீதி நியாயங்கள் எப்படியெல்லாம் விளையாடுகின்றது?! இஸ்ரேல் நாட்டையும் அவர்கள் செயலையும் ஈழத்தமிழர்களும் ஆதரிக்க வேண்டும். அழிவார்களுக்கு ஆதரவழித்தால் நாமும் நலமுடன் வாழலாம் போல் இருக்கின்றது. 😂
  7. அனுர ஆட்சியில் பிள்ளையான் மற்றும் ரனில் கைதாகும் போது வராத சவுண்ட் மற்றும் சலசலப்புகள் டக்ளஸ் கைதாகும் போது வருகின்றது எனும் போது....எங்கையோ யாருக்கோ குத்துது குடையுது என்றுதானே அர்த்தம். டக்ளஸ் கும்பல் செய்த அட்டூழியங்கள் ஆதாரங்களாக பெரிய யூனிகளான ஒக்ஸ்வோர்ட்,ஹவார்ட் போன்ற யூனிகளில் ஆதாரமாக திரட்ட முடியாது.சிசி என் என் பி பிசி ஊடகங்களும் சொல்லாது. ஆனால் ஊரில் உள்ளவர்களை கேட்டால் கண்ணீர் மல்க உடல் நடுக்கத்துடன் சொல்வார்கள்.
  8. சிலோன் மருமோனும் உலக நடிகருமான விஜய் அவர்களின் அதீர வளர்ச்சியையும், அவரது நற்பணி சேவைகளையும் கண்டு எரிச்சலும் பொறாமையும் கொண்டவர்களின் செயலாகத்தான் இது இருக்குமென நான் நினைக்கின்றேன். என் வன்மையான கண்டனங்கள். தள்ளி விடுறதெல்லாம் என்ன பழக்கம்?
  9. ஒரு காலத்தில் மத பிரச்சனை இருந்தது. இனப்பிரச்சனை இருந்தது. ஆனால் இன்றோ... அரசியல்வாதிகளின் பிரச்சனையே முக்கியமாக உள்ளது. அதை விட பொது ஊடகங்களுக்கு செய்திகள் தேவைப்படுகின்றது. அதனால் உலகில் அவர்களுக்கு பிரச்சனைகள் தேவைப்படுகின்றது. கற்கால போர்களை முட்டாள்த்தனம் என பாடங்களில் படிக்க சொல்லி விட்டு அதையே..... கணணி உலகிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.😄
  10. உலகிலேயே வெட்கம் ,நேர்மையில்லாத அரசுகள் என்றால் சிங்கள அரசு மற்றும் யூத அரசு மட்டுமே.
  11. இங்கிலாந்தில் வசிக்கும் உங்களுக்கு! இங்கிலாந்து அரசியல் கட்சிகளுக்கு எங்கிருந்து பணம் வருகின்றது என்பதை விளக்கமாக எழுத முடியுமா? ஜேர்மனியில் உள்ள கட்சிகளுக்கு கட்சி நிதி திரட்டல் எனும் அமைப்பு உள்ளது. அதைவிட மக்களது வரிப்பணமும் கட்சிகளுக்காக ஒதுக்கப்படுகின்றது. அதை விட கட்சி அங்கத்துவ கட்டணம் என்பது வேறு. மற்றும் படி தமிழ்நாட்டின் எனையை கட்சிகள் எப்படி வாழ்கின்றன என்பதையும் தாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
  12. சிங்கள கட்சிகளுக்கு நான் ஆதரவாளன் இல்லை. இருந்தாலும் புதிய நோக்கோடு புதிய கட்சியின் அனுர ஆட்சியை கொஞ்சம் விட்டு பார்க்கலாம் என்ற எண்ணம் என்னிடம் இன்றும் உண்டு. அனுர இனவாதி என்பதற்காக டக்ளஸ் தேவானந்தா மீது வெள்ளை அடிப்பதை ஏற்க முடியாது. 😎
  13. மச்சான் செலென்ஸ்கிக்கு இந்தமுறை ஐரோப்பிய ஒன்றிய கூட்டுவள் பயங்கர ரெயினிங் குடுத்துத்தான் அனுப்பியிருக்கினம். இருந்தாலும் செலென்ஸ்கியர் பழைய சேட்டையை புளோரிடாவிலையும் விடுவாராய் இருந்தால்......இரண்டு காதாவடிப்பக்கமும் செக்கச் சிவக்க உக்ரேனுக்கு திரும்பி வருவது நிச்சயம். டொனால்ட் ரம்ப் அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான முடிவையே உக்ரேன் சந்திக்கும் என பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 😂
  14. உக்ரேன் யுத்தம் ஆரம்பிக்க முதலே கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னரே ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.முதலில் இவர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யாமல் தடை செய்து விட்டார்கள். முக்கியமாக இவர்களின் விவசாய விளைபொருட்கள். இதனால் பாதிக்கப்பட்டது யார் என்று பார்த்தால் இவர்களது விவசாயிகள் தான். இது போல் பல விடயங்களை கூறலாம். பொதுவாவக கூறினால் ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்திற்கான முக்கியமான ஏற்றுமதி நாடு. அதிலும் ஜேர்மனிக்கு ரஷ்யா மிக மிக பொருளாதார ரீதியாக முக்கியமான நாடு. ஜேர்மனியினது ஏற்றுமதிக்கு ரஷ்யா முக்கிய சந்தையாக இருந்தது. அமெரிக்காவின் எதிரி ஐரோப்பிய ஒன்றியத்தின் வளர்ச்சி. அதை தடுக்க உக்ரேனை தத்தெடுத்தது அமெரிக்கா. அமெரிக்கா விரித்த வலையில் வீழ்ந்தது ஐரோப்பிய ஒன்றியம். அதிலும் ஜேர்மனி தான் பெரிய ஆள் என காட்ட வெளிக்கிட்டு பெரிய சகதிக்குள்..... இது அமெரிக்காவுக்கு கிடைத்த பெரிய வெற்றி.
  15. ஜேர்மனியின் பொருளாதாரத்தை பற்றி பெரிதாக கூறுவதற்கு ஒன்றுமில்லை....அதுவும் இன்றைய நிலையில்.... தினசரி வேலை இழப்புகள்.... மாதாந்தம் சிறு சிறு முதலீட்டு கொம்பனிகள் மூடு விழாக்கள்.... அதே போல் பெரிய தொழிற்சாலைகளில் பல வேலை இழப்புகள்.... ஜேர்மனியின் மூலதனமே உருக்கு தொழிற்சாலைகளும் கார் உற்பத்தி நிறுவனங்களும் தான்....அதனை தொடர்ந்து லாபகரமாக நடத்த முடியாத நிலையில் இருக்கின்றார்கள். காரணம் எரி சக்தியின் அளவில்லா விலையேற்றம்.கொஞ்சம் யோசித்து பாருங்கள் வீட்டு பாவனைக்கும்,வாகன பாவனைக்கும் எரி சக்தி எமக்கு எவ்வளவு தாக்கத்தை எற்படுத்துகின்றது என. சாதாரண எங்களால் இதனை சமாளிக்க முடியவில்லை எனும் போது..... 24 மணித்தியாலமும் இயங்கும் பெரிய தொழிற்சாலைகளின் நிலை எப்படியிருக்கும் என...? பெரிய நிறுவனங்கள் தங்களுக்குள் இருக்கும் பெரிய பிரச்சனை எரிசக்தி என நேரடியாகவே அறிக்கைகள் மூலம் தெரிவித்து விட்டனர். மந்த நிலையில் இருந்து முன்னேறிய காலம் போய் விட்டது. மூன்றாம் உலக நாடுகளும் முன்னேறிக்கொண்டு வருகின்றன.
  16. டக்ளச சும்மா பகிடிக்குத்தான் கைது பண்ணினவை. நீங்கள் ஒண்டுக்கும் பயப்பிடாதேங்கோ மகிந்தரே....😎
  17. இளமை என்பதை விட சாகும் வரைக்கும் தேகாரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணித்தியாலமாவது உடம்பு அசையும் படி ஏதாவது வேலை செய்து கொண்டிருக்க வேண்டும். நவீன காலத்து எண்ணைகளும் அதன் மூலம் தயாரிக்கப்படும் உணவுகளையும் அறவே தவிர்க்க வேண்டும். இது எனது சொந்த அனுபவம்.👆 அதை விட ஜேர்மனியில் இன்றும் முக்கியமாக வயதானவர்களும் ஏனையவர்களும் பன்றி கொழுப்பை பாணில் பூசி சாப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதே பன்றி கொழுப்பை உணவுகளை சமைப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். ஒரு சிக்கலுமில்லை.ஒரு சிதம்பர ரகசியமும் இல்லை.😎
  18. பூமியை படைத்த இயற்கை ஆறறிவு கொண்ட மனிதனை நம்பி அதிக தூரம் சென்றுவிட்டது. அண்மைக்கால அழிவுகளை பார்க்கும் போது அந்த இயற்கை திரும்பி வந்து கொண்டிருக்கின்றது என நினைக்கின்றேன். ☹️
  19. இன்றைய உலகின் மருத்துவமும் மருந்துகளும் எல்லாம் வியாபார நோக்குடனேயே செல்கின்றது.எங்கடை பரியாரிமாரின்ர ஓசி மருத்துவம் எல்லாம் மலையேறி விட்டது. டாக்குத்தர் ஒரு மருந்தை எழுதி தந்தால் மருந்தகர் மலிஞ்ச மருந்தை தருவார். கேட்டால் மருந்துகள் எல்லாம் கொம்பனி வித்தியாசமே தவிர மற்றும்படி மருந்துகளின்ரை செயல்பாடு எல்லாம் ஒரு மாதிரித்தான் என்பினம்.இல்லை எனக்கு டாக்குத்தர் எழுதி தந்த மருந்து தான் வேணும் எண்டால் காசு கொஞ்சம் கூட வரும் எண்டு வெருட்டுவினம். மருத்துவதுறை மக்கள் சேவை என்பது இப்போதெல்லாம் இல்லை. தொட்டது பட்டதிற்கெல்லாம் காசு....காசு. அதை விட இப்போதெல்லாம் மொழி அரைகுறையாக தெரிந்த மருத்துவர்களே அதிகம். சிரியா,ஈராக்,துருக்கி என அங்கே மருத்துவத்தை படித்து விட்டு இங்கே டாக்குத்தர் வேலை பார்க்கின்றார்கள்.ஜேர்மனியர்களே பயந்து பயந்து முகத்தை சுளிக்கின்றார்கள்.
  20. இன்றைய உக்ரேன் யுத்தங்களுக்கான கொள்கையை வகுப்பதே ஜேர்மனிதான்.
  21. அணு சக்தி இன்றைய உலகிற்கு முக்கியம் தேவையானது. அதை மிக பாதுகாப்புடன் இயக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. எரி சக்தி விடயத்தில் ஜேர்மனி நடுத்தெருவில் நிற்பது போல் வேறு எந்த நாட்டிற்கும் வரக்கூடாது என்பதால் எல்லாம் வல்லவனை வேண்டுகின்றேன். 😂
  22. ஈழத்தமிழர் விடயமாக நீங்கள் ஆதரிக்கும் அல்லது முன்னுதாரண அரசியல்வாதி யார்? இப்படியா? ஆரத்தழுவி அரவணைத்து செல்வதும்.....கருவாடுகளை ஏற்றுவது போல் ஏறுவதும் உங்களுக்கு நியாயம் என்றால்........?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.