Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. பம்மாத்து சுமந்திரனை மக்கள் ஆரம்பகாலத்திலேயே நிராகரித்து இருந்திருந்தால் 2009க்கு பின்னரான வடகிழக்கு தமிழர்களின் அரசியல் நிலைமையில் கொஞ்ச முன்னேற்றமாவது இருந்திருக்கும். வாக்காள பெருமக்கள் சுமந்திரனை படித்தவர், பட்டம் பெற்றவர், நாலு பெரியவர்களுடன் கதைக்கும் வல்லமை பெற்றவர், பெரிய சட்டத்தரணி ,சட்டங்கள் தெரிந்தவர்,வயதில் இளமையானவர், அரசியலுக்கு ஏற்றவர் என நம்பி ஏமாற்றமடைந்து விட்டார்கள். படித்தவர்களை நம்பி...நம்பி ஏமாறுவது ஈழத்தமிழர்களிடம் உள்ள மிகப் பெரிய பலவீனம். இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஈழத்தமிழரின் அரசியல் வரலாறுகளை கவனித்து பாருங்கள். பம்மாத்து,சுத்துமாத்து செய்த தமிழ் அரசியல்வாதிகளை இனங்காணுவீர்கள்.இலங்கை சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் இன்று வரைக்கும் சிங்கள இனவாத அரசை குளிர்விக்க தமிழ் அரசியல் தலைவர்களும்,சிங்கள அரசுடன் கூட்டுச்சேர்ந்த தமிழர்களும் என்னென்ன விரோத செயல்களை தமிழினத்திற்காக செய்திருக்கின்றார்கள் என பாருங்கள் புரியும்.இதில் இராமநாதன்,ஜீஜீ பொன்னம்பலம் போன்றோர் முக்கியமானவர்கள். இன்னுமொருவர் இருக்கின்றார்.அவர் பெயர் தற்போது ஞாபகத்திற்கு வரவில்லை. எல்லாம் படித்த பட்டதாரி சட்டத்தரணிகள்.சக மனிதரை மதிக்க தெரியாதவர்கள்.பாமர மக்களை மட்டம்தட்டுபவர்கள்.படித்த கர்வத்தை விட சாதி கர்வம் கொண்டவர்கள். எல்லாம் தெரிந்தவர்கள் மாதிரி பொது இடங்களில் பேசிப்பேசி சொந்த இனத்தை குண்டுச்சட்டிக்குள் அடக்கி வைத்திருந்தவர்கள். அதையே சிங்களத்தின் ஆருயிர் சுமந்திரனும் செய்ய எத்தனிக்கின்றார். இரட்டை கோபுர தாக்குதலின் பின்னர் உலக அரசியல் மாறி விட்டதால் அதிகம் அல்ல முற்று முழுதாக பாதிக்கப்பட்டது ஈழத்தமிழர் விடுதலையும்,குர்திஷ் மக்கள் விடுதலையும் தான்.அதில் குளிர் காய்பவர்கள் தான் இன்றைய மாற்றுக்கருத்து மாணிக்க மன்னர்கள். எனக்கு ஒன்றுமட்டும் விளங்கவில்லை. ஊரில் இருக்கும் ஒரு சிலர் சொந்த இனத்திற்கு நற்செயல்கள் எதுவுமே செய்யாது வில்லங்களையும் இடைஞ்சல்களையும் செய்த சுமந்திரனை ஏன் ஆதரிக்கின்றார்கள்? அவர்களும் சுமந்திரனைப்போல் மனப்பான்மை கொண்டவர்களாக இருக்குமோ?
  2. ரம்பருக்கு நோபல் பரிசு குடுக்காட்டில் சுவீடன் அமெரிக்காவின் 52வது மாநிலமாக அறிக்கை விட்டாலும் விடுவார். கனடா அமெரிக்காவின்ர 51வது மாநிலம் எண்டது ஊரறிஞ்ச விசயம் தானே....😂
  3. உலக அமைதிக்கான நோபல் பரிசு⛔ மனித உரிமைக்கான நோபல் பரிசு⛔ இந்த இரண்டையும் நிகழ்சி நிரலில் இருந்து தூக்கி விடச்சொல்லுங்கள். போற வழிக்கு புண்ணியமாகும். வர வர காசு குடுத்து வாங்கிற பட்டங்கள் மாதிரியே நோபல் பரிசும் வரப்போகுது.🙃
  4. சினிமாக்காரர்களை கடவுளாக பார்க்கும் கூட்டம் இருக்கும் வரைக்கும் மாற்று கட்சியினர் அனைவருக்கும் வெற்றி வேட்டைதான்.
  5. சுமந்திரன் என்பவர் தமிழ் அரசியலுக்குள் வராமல் இருந்திருந்தால் ஒரு சில நல்ல முடிவுகள் தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் என சொல்கிறார்கள். அதை விட 2009க்கு பின்னர் சமரசம் இல்லாத நல்லதொரு அழுத்தம் சிங்களத்தின் மேல் இருந்திருக்கும் எனவும் மற்றவர்கள் சொல்ல கேட்டிருக்கின்றேன்.
  6. என்னத்த செய்ய? தமிழினத்திற்கென்றே சந்ததிக்கு சந்ததி ஒரு சகுனி உருவாகிக்கொண்டே இருக்கின்றார்கள். சேர் பொன் இராமநாதன் தொடக்கம் சுமந்திரன் ஊடாக தமிழின வில்லன்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள் போல் இருக்கின்றது.அதை விட அந்த வில்லன் கொம்பனிகளுடன் ஒட்டுண்ணிகளாக இருப்பவர்கள் இன்னும் வில்லங்கமானவர்கள்.மதில் மேல் பூனை ரகமானவர்கள்.😂🤣 சுமந்திரன் சிங்கள பகுதிகளில் சுமந்திர எண்ட பெயரிலை அதுவும் ஹபரண தொகுதியில் நிண்டு வாக்கு கேட்டு பாக்கட்டுமன்.😁 பதவிக்காக ஓடித்திரியிறவர் அதுக்கும் ஓமெண்டுவார் 😋
  7. நீங்களும் சினிமாகாரர்களை நம்புகின்றீர்களா?☹️ விஜய் ரசிகர்களைப்போல் நீங்களும் சளைத்தவர் இல்லை என நான் நினைக்கிறேன்.🤣 சீமான் உண்மையை பேசுகின்றவர்.எதிரியாக இருந்தாலும் திறமையை பாராட்டுகின்றவர்.அந்த வகையில் சீமான் ரஜனியை புகழ்ந்து தள்ளியதில் ஆச்சரியம் ஏதுமில்லை. சினிமா என்ற முறையில் ரஜனி பாராட்டப்பட வேண்டியவரே.தன் சுயநல அரசியலுக்காக தன்னை தேடி வந்த மக்களையோ, நம்பியிருந்த இனத்தையோ பலிக்கடாவாக்கியவர் இல்லை இந்த சீமான்.
  8. ஏதோ உங்கட சந்தோசத்துக்கு எதை வேண்டுமானாலும் சொல்லீட்டு போங்க...நானேன் குறுக்க நிக்கப்போறன்...😂
  9. எல்லாம் ஓகேதான். ஆனால் கதையோட கதையாய் ஒண்டு சொல்லுறன். சீமானால் இப்ப நிம்மதியாய் இருக்கிற மனிசன் ஆர் எண்டால் இவர்தான்.....😂 இல்லாட்டி ஜோசப்பு விஜய் படுற அவஸ்தையை இவரும் பட்டிருப்பார். தலையில இருக்கிற மிச்ச சொச்சமும் போயிருக்கும்.🤣 இல்லையோ ஓமோ? 😎
  10. இந்த விகாரை அமைப்பிற்கும்,அது சம்பந்தமான மக்கள் போராட்டத்திற்கும் சிங்கள பொது ஊடகங்களில் எப்படியான கருத்துக்கள் உள்ளது என யாருக்காவது தெரியுமா?
  11. அதற்காக மனித பலிகளை கண்டும் காணாமலும் செல்லும் அரசியல்வாதிகளை வெள்ளோட்டம் என நினைத்து பேசாமல் இருக்க முடியாது.இன்று வரை நடிகர் யோசப்பு விஜய் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டாரா?பாதிக்கப்பட்ட மக்களை போய் சந்தித்தாரா? ஆறுதல் சொன்னாரா? என்னவொரு ஜென்மம்?
  12. நீண்டதொரு ஆய்வுக்கட்டுரை.👍 எனது பார்வையில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் சோவியத் ஒன்றியம் உடைந்த பின் ரஷ்யாவிற்கு ஒழுங்கான மரியாதை கொடுத்து தங்கள் கைக்குள் வைத்திருக்க வேண்டும்.புட்டினுக்கும் பல இடங்களில் தகுந்த மரியாதை கொடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் சோவியத் ஒன்றியம் சிதைவிற்கு பின் ரஷ்யா மேற்குலகு நோக்கியே தன் அரசியல் பயணங்களை தொடங்கியது.ஐரோப்பாவிற்கு வியாபார ரீதியாகவும் ரஷ்யா முக்கியத்துவம் வாய்ந்த நாடாக மாறியது.இவர்களின் நரி புத்திகள் தான் இன்று ரஷ்யாவை தலைகீழாக மாற்றி வைத்துள்ளது. ரஷ்யா மேற்குலகு சார்பாக இருந்த நாடு. சீனா அப்படியல்ல. அவர்கள் தங்கள் அரசியலை விட்டு வெளியே வரமாட்டார்கள். தனியே வியாபார நோக்கும் மேற்குலகை வீழ்த்துவதுமே அவர்கள் நோக்கம். ரஷ்யாவை இவர்கள் அரவணைத்து நடந்திருந்தால் சீனா,வடகொரியா,ஈரான் போன்ற நாடுகளின் கொட்டம் கொஞ்சம் குறைவாக இருந்திருக்கலாம். இப்போது தலையை சுற்றி மூக்கை தொட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.😂
  13. தமிழ் அரசியல்வாதிகள் ஒழுங்காய் இருந்திருந்தால் சிங்கள இனவாத கட்சிகளுக்கு தமிழர்பகுதிகளில் எப்படி இடம் கிடைத்திருக்கும்? சிங்கள கட்சிகள் தமிழர் பகுதிகளில் வெற்றி பெற முடிகின்றது. அதே போல் தமிழ் கட்சிகள் சிங்கள பகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா?
  14. படிச்சு படிச்சு சொன்னன் கேட்டியளே? 😂 கொஞ்ச நாளைக்கு எதுக்கெடுத்தாலும் பெயின்ற் வாளியை தூக்கி வெள்ளையடிக்கிற வேலை பாக்காமல் கள நிலவரத்தை பார்த்து வெளுத்து வாங்குங்கோ...🤣
  15. வாட்ஸ் அப்பில் இருக்கும் பாதுகாப்பும்,உத்தரவாதங்களும் வேம்புவில் இல்லை என இந்தியர்களே சொல்கிறார்கள்.
  16. கந்தையரே! இப்போதெல்லாம் ஆண்பெண் என்ற சமாச்சாரமே இல்லாத உலகம் இது.உனக்கும் மூளை இருக்கு எனக்கும் மூளை இருக்கு எனும் கலாச்சாரமே ஓடுகின்றது.😉 இவர் வாக்குறுதி தந்தார் அவர் வாக்குறுதி தந்தார். அதனால் கட்டிலை பகிர்ந்து கொண்டேன் என்ற கதைகளெல்லாம் எடுபடாத காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.😎 அன்றைய சமூகம் போல் இன்று வாழமுடியாது.கண்ணகி மாதவி கதைகள் சிந்தனைகள் கருத்துக்கள் எல்லாம் இக்காலத்திற்கு ஒவ்வாதவை... கருத்து வெற்றிக்காக.... விருப்பமில்லாதவர்களிடம் மட்டும் புனிதத்தை தேடாதீர்கள்..இக் கருத்து தேவையானவர்கள் தொப்பியை அணிந்து கொள்ள மட்டும்.👁‍🗨
  17. ஓர்பன் நல்லதொரு அரசியல்வாதி. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தலையிடியானவர். இவர் கம்யூனிசவாதியல்ல.மக்கள் நலன் கொண்டவர். யாருடனும் பேசி,கலந்துரையாடி மட்டுமே பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என முனைபவர். ஜேர்மனிய மக்களிடம் இவருக்கு நல்ல ஆதரவு உண்டு. உத்தியோகபூர்வமாக அல்ல. உண்மைகள் சாவதில்லை என சொல்வார்கள். அது பொய். உண்மைகள் சாகும். பொய்கள் நிலைத்து நிற்கும். இதுதான் இன்றைய உலக நிலை.
  18. அல்வாயனிட்ட நிறைய விசயம் இருக்கு போல......கறந்துட வேண்டியதுதான்😂
  19. தாங்கள் விண்ணிலும் மண்ணிலும் மக்களுக்கான பாதுகாப்பு விண்ணர்கள் என பறை சாற்றுபவர்கள் புலுடா விட தொடங்கி விட்டார்கள்.இப்படியான மேற்கத்தைய செய்திகளை கேட்டு இருண்டகண்ட மக்களும் கொடுப்புக்குள் சிரித்து மகிழ்கின்றார்களாம். இதற்குள் வேற்று கிரக வாசிகள் பூமிக்குள் நுழையாமல் பாதுகாக்கின்றோம் என அறிக்கைகள் வேறு.
  20. வடமராட்சிக்கு வாழ்க்கைப்பட்டு போன குமாரசாமியும் அஞ்சோ பத்தோ குடுக்க தயாராக இருக்கின்றார் என ஒலிபெருக்கியில் அறிவிக்கவும் 😂
  21. உங்களுட்ட தட்டிவான் நிறய இருக்குத்தானே....அத எடுத்து ஓடுங்க சார் எண்டு சந்திரசேகர் சொன்னாலும் சொல்லுவார்.😁
  22. விஜயின் கரூர் சம்பவத்தை போல் சீமான் அவர்களது பிரச்சார கூட்டத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் ஆமையோட்டுடன் ஒரு கேலிச்சித்திரம் கட்டாயம் வரைந்திருப்பீர்கள் என நான் நம்புகின்றேன்.😂 நேசமானவர்கள் எது செய்தாலும் கை துடிக்காதாக்கும். 🙃 சும்மாபகிடிக்கு😃
  23. பிரான்ஸ்ல் மட்டும் பொருளாதார நெருக்கடியில்லை. உக்ரேன் போருக்கு எந்த நாடெல்லாம் பண நீதியாக முட்டு கொடுக்கின்றதோ அந்த நாடுகள் எல்லாம் பொருளாதார நெருக்கடியில் தான் உள்ளது. பொருளாதார நெருக்கடியில் ரஷ்யாவும் அடங்கும். படித்தவர்களும் பேரறிஞர்களும் விஞ்ஞானிகளும் சிறந்த மூளைசாலிகளிலும் நிறைந்த நாடுகளில் தான் நீயா நானா எனும் மமதையும் போர்க்குணங்களும் அதீதமாக இருக்கின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.