Everything posted by குமாரசாமி
-
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - சுமந்திரனுடன் சந்திப்பு: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேச்சு !
இலங்கையில் எத்தனையோ தமிழ்கட்சிகள் இருக்க இந்த ஊத்தைவாளிகளை தேடி வெளிநாட்டு பிரதிநிதிகள் தேடிவந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் மர்மம் என்ன? இந்த கேள்வி 40 வருட கால அனுபவத்தில் வந்தது.
-
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
அதைப்பற்றி உங்களுக்கு ஏன் தேவையில்லாத கவலை? யாழ்களத்தில் இருக்கும் சிங்கங்கள் உண்மைகளை ஏற்பவர்கள்.ஜால்ரா போடுபவர்கள் அல்லர். தூசண விஜயலட்சுமிக்கு ஜால்ரா போடுபவர்கள் இல்லை.அவரது பொது வெளி காணொளி பேச்சுக்களை கேட்டு பார்த்த பின்னரும் அவருக்காக வக்காளத்து வாங்குபவர்கள் இங்கேயும் இருக்கின்றார்கள் என்பதை எண்ணி வெட்கி தலை குனிகின்றேன். ஏன் உங்களுக்கு தமிழ்நாட்டு அரசியல்? இந்தியா சம்பந்தப்பட்டதெல்லாம் பிடிக்காதெல்லோ! அது அவர்கள் அரசியல். வாருங்கள் ஈழ அரசியல் பேசி மகிழ்வோம் உங்கள் அன்பிற்குரிய விஜயலட்சுமி சீமானை கீழ்தரமாகவும்,தூசண வார்த்தைகளாலும் பேசியதை குறித்து உங்கள் கருத்து என்ன? அது பற்றி உங்கள் செல்லம் விஜயலச்சுமி மன்னிப்பு கேட்டாரா? என்ன சார்! உங்க மதிப்பீட்டிற்கு அளவே இல்லையா? அதென்ன ஆனானப்பட்ட? ரொம்ப ரொம்ப கொடுமைக்காரன் சார் நீங்க..😂
-
தொண்டமானாறு உவர்நீர்த் தடுப்பணையால் வெள்ளப்பாதிப்பனை எதிர்கொள்வோருக்கு தீர்வு முன்வைக்கப்படவேண்டும் - ஆளுநரிடம் தவிசாளர் நிரோஷ் கோரிக்கை
உவர் நீர் தடுப்பணையை நீக்கிவிட்டு அந்த இடத்தில் தடுப்பு பாலம் கட்டலாம்.கோடைகாலத்தில் பூட்டி விட்டு மாரிகாலத்தில் திறந்து விடலாம். இப்படிக்கு.. அந்த இடத்தில் அடிக்கடி கால் நடையாக சென்றவர்.😜
-
தீபாவளி தினத்தை விடுமுறை தினமாக கலிபோர்னியா அறிவிப்பு!
இனிவரும் காலங்களில் மதம் சம்பந்தமான கொண்டாட்டங்களுக்கு விடுமுறை வேண்டும் என்பவர்கள் தாராளமாக விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சம்பளம் கிடைக்காது என ஒரு அறிக்கையை விட்டுப்பாருங்கள்.ஒரு காக்கா குருவி கூட லீவு எடுக்காது. 🤣
-
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
என்ரை கவலை என்னெண்டால்...... இவ்வளவுகாலமும் சீமானை வறுத்தெடுக்க விஜயலட்சுமிக்கு நீதி கேக்கிறம் எண்டு போராடிச்சினம்.கதை முடிச்சாச்சு.சும்மா வெறும் வாயை வைச்சு மென்றவர்கள் இனி என்ன செய்யப்போயினம்? அதோட தங்கள் அரசியல் லாபத்திற்காக அப்பப்ப விஜயலச்சுமியை களம் இறக்கி கூத்து காட்டினவையள் இனி என்ன செய்யப்போயினம்.😂 அதைவிட இஞ்சையொரு தம்பி சீமான் கடை எண்ட திரியை திறந்து நல்ல சனத்தை கூட்டி சேக்கஸ் காட்டுவார். இனி என்ன செய்யப்போறார்.🤣
-
வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!
நல்லதொரு விடயம். சுற்றச்சுற்றாடலுக்கு உகந்த விடயம். தாமரை இலையில்,வாழை இலையில் சாப்பிடும் போதெல்லாம் மனதிற்கு குளிர்ச்சியும் சந்தோசத்தையும் தரும். 💚 இது என் சொந்த அனுபவம் மட்டுமே☝. ஆதாரம் கேட்டு பூட்டை ஆட்ட வேண்டாம்.😎
-
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
"மன்னிப்பு கேட்பவன் பெரிய மனிதன்" என்பது, தவறு செய்த ஒருவர், தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது மிகவும் உயர்வான பண்பு என்பதைக் குறிக்கிறது. இந்த பழமொழி, தவறு இழைத்தவர்கள் அனைவரும் மனிதர்கள் என்றாலும், அவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் மனப்பக்குவம் கொண்டவர்களே மாமனிதர்கள் அல்லது பெரிய மனிதர்கள் என்பதை வலியுறுத்துகிறது. தவறு செய்வது இயல்பு, மனித இயல்பு அது. ஆனால், அந்த தவறை உணர்ந்து, அதற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பது என்பது, ஒருவரின் பெருந்தன்மை மற்றும் மனிதநேயத்தைக் காட்டுகிறது. சீமான் அவர்கள் விஜயலச்சுமியுடன் தொடர்பில் இருக்கவில்லை என எங்கும் எப்போதும் மறுக்கவில்லை.மனைவி துணைவி என மக்களை பேய்க்காட்டவுமில்லை. எனவே மன்னிப்பு என்பதன் மூலம் சீமான் உயர்ந்து நிற்கிறார்.💪
-
எங்க வீட்டில் எல்லாவற்றுக்கும் மழைநீர் தான்.
சமூகம் சார்ந்த நல்லதொரு இணைப்பு. விவசாயியாக வாழ்ந்தாலும் இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என நினைத்ததுண்டு.அதாவது யாரையும் கையேந்தி வாழாத வாழ்க்கை வாழ வேண்டும் என்பது.❤️ மற்றும் படி..... நானறிந்த வரையில் ஐரோப்பிய நாடுகளில் நிலத்தடி நீரை அதிகம் உபயோகப்படுத்துவதில்லை.சில நாடுகளில் தடையும் உண்டு. கூடுதலாக மழைநீரை நீர்த்தேக்கங்களில் சேகரித்தே நாட்டு மக்களுக்கு விநியோகம் செய்வார்கள்.சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வீட்டு கூரையிலிருந்து வழிந்து வரும் மழை நீரை சேகரித்து வீட்டுத்தோட்டம் மற்றும் பூ மரங்களுக்கு பாவிப்பார்கள். அது சரி.... சேகரித்த மழை நீரை சுத்திகரிக்காமல் நேரடியாக குடிக்க முடியுமா?
-
சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!
பம்மாத்து சுமந்திரனை மக்கள் ஆரம்பகாலத்திலேயே நிராகரித்து இருந்திருந்தால் 2009க்கு பின்னரான வடகிழக்கு தமிழர்களின் அரசியல் நிலைமையில் கொஞ்ச முன்னேற்றமாவது இருந்திருக்கும். வாக்காள பெருமக்கள் சுமந்திரனை படித்தவர், பட்டம் பெற்றவர், நாலு பெரியவர்களுடன் கதைக்கும் வல்லமை பெற்றவர், பெரிய சட்டத்தரணி ,சட்டங்கள் தெரிந்தவர்,வயதில் இளமையானவர், அரசியலுக்கு ஏற்றவர் என நம்பி ஏமாற்றமடைந்து விட்டார்கள். படித்தவர்களை நம்பி...நம்பி ஏமாறுவது ஈழத்தமிழர்களிடம் உள்ள மிகப் பெரிய பலவீனம். இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஈழத்தமிழரின் அரசியல் வரலாறுகளை கவனித்து பாருங்கள். பம்மாத்து,சுத்துமாத்து செய்த தமிழ் அரசியல்வாதிகளை இனங்காணுவீர்கள்.இலங்கை சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் இன்று வரைக்கும் சிங்கள இனவாத அரசை குளிர்விக்க தமிழ் அரசியல் தலைவர்களும்,சிங்கள அரசுடன் கூட்டுச்சேர்ந்த தமிழர்களும் என்னென்ன விரோத செயல்களை தமிழினத்திற்காக செய்திருக்கின்றார்கள் என பாருங்கள் புரியும்.இதில் இராமநாதன்,ஜீஜீ பொன்னம்பலம் போன்றோர் முக்கியமானவர்கள். இன்னுமொருவர் இருக்கின்றார்.அவர் பெயர் தற்போது ஞாபகத்திற்கு வரவில்லை. எல்லாம் படித்த பட்டதாரி சட்டத்தரணிகள்.சக மனிதரை மதிக்க தெரியாதவர்கள்.பாமர மக்களை மட்டம்தட்டுபவர்கள்.படித்த கர்வத்தை விட சாதி கர்வம் கொண்டவர்கள். எல்லாம் தெரிந்தவர்கள் மாதிரி பொது இடங்களில் பேசிப்பேசி சொந்த இனத்தை குண்டுச்சட்டிக்குள் அடக்கி வைத்திருந்தவர்கள். அதையே சிங்களத்தின் ஆருயிர் சுமந்திரனும் செய்ய எத்தனிக்கின்றார். இரட்டை கோபுர தாக்குதலின் பின்னர் உலக அரசியல் மாறி விட்டதால் அதிகம் அல்ல முற்று முழுதாக பாதிக்கப்பட்டது ஈழத்தமிழர் விடுதலையும்,குர்திஷ் மக்கள் விடுதலையும் தான்.அதில் குளிர் காய்பவர்கள் தான் இன்றைய மாற்றுக்கருத்து மாணிக்க மன்னர்கள். எனக்கு ஒன்றுமட்டும் விளங்கவில்லை. ஊரில் இருக்கும் ஒரு சிலர் சொந்த இனத்திற்கு நற்செயல்கள் எதுவுமே செய்யாது வில்லங்களையும் இடைஞ்சல்களையும் செய்த சுமந்திரனை ஏன் ஆதரிக்கின்றார்கள்? அவர்களும் சுமந்திரனைப்போல் மனப்பான்மை கொண்டவர்களாக இருக்குமோ?
- இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
-
இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.
ரம்பருக்கு நோபல் பரிசு குடுக்காட்டில் சுவீடன் அமெரிக்காவின் 52வது மாநிலமாக அறிக்கை விட்டாலும் விடுவார். கனடா அமெரிக்காவின்ர 51வது மாநிலம் எண்டது ஊரறிஞ்ச விசயம் தானே....😂
-
இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.
உலக அமைதிக்கான நோபல் பரிசு⛔ மனித உரிமைக்கான நோபல் பரிசு⛔ இந்த இரண்டையும் நிகழ்சி நிரலில் இருந்து தூக்கி விடச்சொல்லுங்கள். போற வழிக்கு புண்ணியமாகும். வர வர காசு குடுத்து வாங்கிற பட்டங்கள் மாதிரியே நோபல் பரிசும் வரப்போகுது.🙃
- விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா?
-
நிறைவேறவுள்ள ஜெனீவா தீர்மானம் மிக மோசமானது; சுமந்திரனுக்கு இதில் பங்குண்டு; கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு
சுமந்திரன் என்பவர் தமிழ் அரசியலுக்குள் வராமல் இருந்திருந்தால் ஒரு சில நல்ல முடிவுகள் தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் என சொல்கிறார்கள். அதை விட 2009க்கு பின்னர் சமரசம் இல்லாத நல்லதொரு அழுத்தம் சிங்களத்தின் மேல் இருந்திருக்கும் எனவும் மற்றவர்கள் சொல்ல கேட்டிருக்கின்றேன்.
-
சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!
என்னத்த செய்ய? தமிழினத்திற்கென்றே சந்ததிக்கு சந்ததி ஒரு சகுனி உருவாகிக்கொண்டே இருக்கின்றார்கள். சேர் பொன் இராமநாதன் தொடக்கம் சுமந்திரன் ஊடாக தமிழின வில்லன்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள் போல் இருக்கின்றது.அதை விட அந்த வில்லன் கொம்பனிகளுடன் ஒட்டுண்ணிகளாக இருப்பவர்கள் இன்னும் வில்லங்கமானவர்கள்.மதில் மேல் பூனை ரகமானவர்கள்.😂🤣 சுமந்திரன் சிங்கள பகுதிகளில் சுமந்திர எண்ட பெயரிலை அதுவும் ஹபரண தொகுதியில் நிண்டு வாக்கு கேட்டு பாக்கட்டுமன்.😁 பதவிக்காக ஓடித்திரியிறவர் அதுக்கும் ஓமெண்டுவார் 😋
-
இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
நீங்களும் சினிமாகாரர்களை நம்புகின்றீர்களா?☹️ விஜய் ரசிகர்களைப்போல் நீங்களும் சளைத்தவர் இல்லை என நான் நினைக்கிறேன்.🤣 சீமான் உண்மையை பேசுகின்றவர்.எதிரியாக இருந்தாலும் திறமையை பாராட்டுகின்றவர்.அந்த வகையில் சீமான் ரஜனியை புகழ்ந்து தள்ளியதில் ஆச்சரியம் ஏதுமில்லை. சினிமா என்ற முறையில் ரஜனி பாராட்டப்பட வேண்டியவரே.தன் சுயநல அரசியலுக்காக தன்னை தேடி வந்த மக்களையோ, நம்பியிருந்த இனத்தையோ பலிக்கடாவாக்கியவர் இல்லை இந்த சீமான்.
- இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
- இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
-
சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்கிறது
இந்த விகாரை அமைப்பிற்கும்,அது சம்பந்தமான மக்கள் போராட்டத்திற்கும் சிங்கள பொது ஊடகங்களில் எப்படியான கருத்துக்கள் உள்ளது என யாருக்காவது தெரியுமா?
- இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
-
தைவான் மீதான PRC படையெடுப்பில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கக்கூடிய PLA வான்வழி பட்டாலியனை சித்தப்படுத்துவதற்கும் பயிற்சி அளிப்பதற்கும் ரஷ்ய திட்டங்களை கசிந்த ஆவணங்கள் விவரிக்கின்றன.
நீண்டதொரு ஆய்வுக்கட்டுரை.👍 எனது பார்வையில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் சோவியத் ஒன்றியம் உடைந்த பின் ரஷ்யாவிற்கு ஒழுங்கான மரியாதை கொடுத்து தங்கள் கைக்குள் வைத்திருக்க வேண்டும்.புட்டினுக்கும் பல இடங்களில் தகுந்த மரியாதை கொடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் சோவியத் ஒன்றியம் சிதைவிற்கு பின் ரஷ்யா மேற்குலகு நோக்கியே தன் அரசியல் பயணங்களை தொடங்கியது.ஐரோப்பாவிற்கு வியாபார ரீதியாகவும் ரஷ்யா முக்கியத்துவம் வாய்ந்த நாடாக மாறியது.இவர்களின் நரி புத்திகள் தான் இன்று ரஷ்யாவை தலைகீழாக மாற்றி வைத்துள்ளது. ரஷ்யா மேற்குலகு சார்பாக இருந்த நாடு. சீனா அப்படியல்ல. அவர்கள் தங்கள் அரசியலை விட்டு வெளியே வரமாட்டார்கள். தனியே வியாபார நோக்கும் மேற்குலகை வீழ்த்துவதுமே அவர்கள் நோக்கம். ரஷ்யாவை இவர்கள் அரவணைத்து நடந்திருந்தால் சீனா,வடகொரியா,ஈரான் போன்ற நாடுகளின் கொட்டம் கொஞ்சம் குறைவாக இருந்திருக்கலாம். இப்போது தலையை சுற்றி மூக்கை தொட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.😂
- சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!
-
2026 தேர்தலில் பிராமணர்களுக்கு 5 இடங்களில் போட்டியிட வாய்ப்பு: நாம் தமிழர் கட்சி முக்கிய முடிவு
இதுவும் ஒரு வகை அரசியல்தான்.வரவேற்கப்பட வேண்டிய விடயம்.
- இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
-
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி
வாட்ஸ் அப்பில் இருக்கும் பாதுகாப்பும்,உத்தரவாதங்களும் வேம்புவில் இல்லை என இந்தியர்களே சொல்கிறார்கள்.