Everything posted by குமாரசாமி
-
காசா போர் : டிரம்ப் - நெதன்யாகு சந்திப்பு ; அமைதிக்கு அமெரிக்கா தீவிர அழுத்தம் - சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்பு!
20 நிபந்தனைகளை கொண்டு வருவதற்காக தான் அவசரம் அவசரமாக 65ஆயிரம் அப்பாவிகளை பலியெடுத்தார்களா?
-
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது!
ஐரோப்பிய நாடுகளுக்கும் சுற்றுலா விசாவில் வந்துதான் ஜோதிட தொழில் பார்க்கின்றனர். முக்கியமாக சுவீஸ்,ஜேர்மனி போன்ற நாடுகளில் இந்த இந்திய ஜோதிடர்களை காணலாம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகமாக் சொல்வார்கள்.😂
-
சிரிக்கலாம் வாங்க
அவசரத்திற்கு என்னை பயன்படுத்துங்கள்...☝ ஆரோக்கியத்திற்கு என் குருநாதரை பயன்படுத்துங்கள்...👇
-
எனது மரணச்சடங்கு.🖤
என் இறுதி சடங்கிற்கு வருபவர்களுக்கு இனிப்பு கலந்த நீராகங்கள் வழங்க வேண்டும். அந்த நேரத்தில் இந்த பாடல்கள் ஒலிக்க வேண்டும்.❤️
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அனைவருக்கும் ஆயுத பூஜா வாழ்த்துக்கள்.😎
-
உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவன் உயிரிழப்பு!
யாருக்கு எந்த நேரம், எப்படி,என்ன நோய் வரும் என்ற அச்ச காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
நடந்தது ஆர்ப்பாட்ட ஊர்வலம் அல்ல.காவல் துறையை ஆயிரக்கணக்கில் குவித்து வைத்திருப்பதற்கு. சர்வ சாதாரண தேர்தல் பிரச்சார கூட்டம்.சினிமா கவர்ச்சியால் கடவுள் மாதிரி திரிபவர்கள் அரசுடன் தொடர்பு கொண்டு சொந்த செலவில் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். இன்றைய கால தமிழ்நடிகர்களின் அளவிற்கு மீறிய பில்டப்பால் அவர்களை எனக்கு பிடிப்பதில்லை. இருந்தாலும் கருவூர் சம்பவத்தின் பின்னர் அஜித் ஒரு தீர்க்கதரிசியாக எனக்கு தெரிகின்றார்.ரசிகர்களின் பைத்தியக்காரத்தனத்தை நன்றாகவே நாடி பிடித்து பார்த்திருக்கின்றார். ரசிகர் மன்றமும் இல்லை ஒரு கோதாரியும் இல்லை.எனது படத்தை பிடித்தால் பார். இல்லையேல் உன்ர வேலையை பார் பீலிங்....😎
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
இதே போல் சீமான் நடத்தும் கூட்டங்களில் இப்படி சிறு அசம்பாவிதம் நடந்தாலும் உங்கள் கேலிச்சித்திரமும் கருத்தும் எப்படியிருந்திருக்கும் என ஒருகணம் சிந்தித்தேன். சிரித்தேன். இருந்தாலும் சீமானுக்கு மட்டும் வரும் கேலிச்சித்திரம் விஜய் என்றவுடன் ஒரு கேலிச்சித்திரமும் வராதது ஏனோ தானோ என அவரை அவமானப்படுத்தி விட்டீர்கள்.
-
4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ள ஜேர்மன் விமான நிறுவனம்!
இது முதற் தடவையல்ல.....அண்மைக்காலமாக வெளியே தெரிந்தும் தெரியாமலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இது தொடரும் என்பதை உணர முடிகின்றது. அதிக எரிசக்தி செலவுகளை யார் உருவாக்கினார்கள்? இவர்களே உருவாக்கி தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளி தலையில் போட்டுள்ளார்கள். வியாபாரிகள் அரசியலை எக்காலமும் எக்காரணம் கொண்டும் தொடக்கூடாது.அது சொந்த கல்லாவுக்கே நஷ்டத்தை விளைவிக்கும்.அதே அரசியல் வேலையைத்தான் ஜேர்மனியும் செய்தது.இவர்களுக்கு பக்கத்து வீட்டு அரசியல் தேவையில்லாத வேலை. தேவையில்லாமல் மூக்கை நுழைத்து இப்போது வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் அற்ப சொற்ப அரசியலினால்தான் Afd எனும் கட்சி இன்று முன்னணியில் நிற்கின்றது. ஒரு உலக புகழ்பெற்ற மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றால்....மிகுதியை உங்கள் சிந்தனைக்கே விடுகின்றேன். பழைய ஜேர்மனியை நினைத்து இன்று போலியாக நான் சந்தோசப்பட மாட்டேன்.பெருமிதமும் அடைய மாட்டேன்.ஆனால் கவலையும் கரிசனையும் உண்டு.
-
ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களுக்கே முன்னுரிமை! -ஜேர்மனி திட்டவட்டம்
அமெரிக்கா கோவிக்காதா? 😂
-
அண்ணா, எம்ஜிஆரை கீழ்த்தரமாக விமர்சித்த சீமான்… பகிரங்க எச்சரிக்கை விடுத்த அதிமுக!
காலத்திற்கு காலம் மனிதம் மாறிக்கொண்டே வருகின்றது. அதற்கேற்ப அன்றைய கால அரசியலும் இன்று மாற வேண்டிய கட்டாயத்தில் உலகு இருக்கின்றது.சான்றாக பல நாடுகளில் பழைய அரசியல் தலைவர்களின் சிலைகள் அகற்றம்,உடைப்புகளை சொல்லலாம். அன்றைய அரசியல்/வாழ்க்கை தத்துவங்கள் கூட இன்றைய சந்ததியினர்க்கு ஏற்புடையதாக இல்லை. நாம் இன்று விரும்புவது நாளைய சமூகத்தினர்க்கு இடைஞ்சலாகவும் இருக்கலாம்.யார் கண்டார்.
-
”LGBTQ சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டாம்” - பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்
தன்பாலினத்தவர்களை அரச ரீதியாக ஊக்கிவிக்கக்கூடாது என்பது என் கருத்து. ஓரின சேர்க்கையாளர்களாக இருக்கட்டும்.அது அவர்கள் தனிப்பட்ட சுதந்திரம் அல்லது பிரச்சனையாகும். உலகில் எத்தனையோ ஆயிரம் பிரச்சனைகள் இருக்க ஓரின சேர்க்கையாளர்களின் பிரச்சனை பெரிய பிரச்சனையாக போகின்றது. இயற்கை எப்படி படைத்ததோ அதன் படி வாழ்ந்தால் சகலதும் சுபமே.
-
'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
எதற்கெடுத்தாலும் மற்றவனை நோக்கி குற்றம் சாட்டுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. கட்சி ஒன்று ஆரம்பித்தால் அதற்கான கட்டுமானங்களும் விதிகளும் இருக்க வேண்டும்.அப்படி ஒன்று விஜய் கட்சிக்கு இருப்பதாக தெரியவில்லை. தனியே தன் ரசிகர்களை மட்டும் நம்பி திறக்கப்பட்ட தேனீர் கடை போல் அவர் கட்சி அமைந்து விட்டது.
-
கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள்
என் டி ராமராவ் தொடக்கம் குஷ்பு என பல திரைக்கவர்ச்சி மனிதர்களை தெய்வமாக கொண்டாடும் பூமியாக அது அமைந்தது மொழிக்கும் இனத்திற்கும் ஒரு துர்ப்பாக்கியம். இது முடிவிற்கு வருமா என்றால் இல்லை என்பதுதான் என் கருத்து. ஏனென்றால் அந்த அரசியலை தூக்கி நிறுத்தி வைத்திருப்பது அந்த கவர்ச்சி சினிமாதான். நல்ல சிந்தனைக்கவிதையும் அதன் சொற்றாடல்களும்.... நன்றி ரசோதரன்.
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நான் இப்போதெல்லாம் சிலரை மதிப்பதில்லை....காரணம் அவர்களை மதித்தால் தானே அவமானப்படுத்துவார்கள்.😎 இது பிறருக்கு மரியாதை கொடுத்ததின் விளைவு.👇 சொந்த அனுபவமாக்கும்.👈
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
உலகில் உள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களின் கருத்தை தூக்கிப் பிடித்து சீர்தூக்கி பார்த்தால் எதுவுமே தேறாது. அரசியலில் தேறாத ரசிகர்களை நம்பி அரசியலில் இறங்கியதின் பலன் தான் கருவூர் அவலங்கள். இது உலக அரசியலில் வரலாற்று சாதனை.இந்திய அரசியல் என்றாலே உலகில் ஒரு ஏளன பார்வை உண்டு. இது இன்னும் வலு சேர்க்கும். அரசியல் முதலைகள் நிறைந்த குளம் என சீமான் கருத்து சொல்லியுள்ளார்.அதில் அவர் பல இடங்களில் இணக்கமான அரசியல் மேடை பேச்சுக்களை பேசியுள்ளார்.பேசுபவர். அதை சீமான் விமர்சகர்கள் அங்கே விலைபோய்விட்டார்.இங்கே விலை போய் விட்டார்.குறுக்காலை விலை போய் விட்டார்.பெட்டி வாங்கி விட்டார். ஏ டீம்.பீடீம் எக்ஸ் வை டீம்/டீல் என்பார்கள்.😂
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
தமிழ்நாட்டு அரசியல் அறிவும் இல்லாமல்....உலக அரசியல் அறிவும் இல்லாமல் தனது ரசிக தோழர்களின் ஒழுக்கமின்மை இல்லாதவருக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்கிறீர்கள்?😝 ஒழுங்கான சினிமா நடிகர் கூட இல்லாதவர். சும்மா பிரமாண்டம் காட்டும் நடிகர் அவர்.😎 இதனால் தான் ரசிகர்கள் மரங்களிலும் வீட்டு கூரைகளிலும் வீட்டு மதில்களிலும் ஏறி காயமடைந்தார்கள் இது அண்மை நாட்களாக வந்த செய்தி. இப்போது உயிரிழப்புகள். இப்படி மக்களை கட்டுப்படுத்த முடியாதவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பது கேள்விக்குறிதான். எல்லாம் இருக்கட்டும்..... தங்கள் அபிமான நடிகர் விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றால் ஏன் சீமானுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது?😋
-
குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு!
பகிடி அல்ல. குரங்குகளுக்கு ஈவு இரக்கம் பார்க்க கூடாது.--------- மீதி கூட்டங்கள் அந்த பக்கம் அண்டாது. எதுவுமே பழக்கத்திற்கு வந்து விட்டால் குரங்கிற்கு பழைய புத்தி வந்துவிடும்.😂
-
சமையல் செய்முறைகள் சில
மனிசருக்கு எதிரியே நாக்கு தான்.மூளை வேண்டாம் வேண்டாம் எண்டு எச்சரிச்சாலும் நாக்கு சொல்வழி கேக்காது.😂 இஞ்சை பார் சிறித்தம்பி நெத்தலி பிரட்டலுக்காக பிளைட் எடுத்து சிலோனுக்கு போகோணும் போல கிடக்காம்.😄 சைவ பழத்துக்கு(சுவியர்) நெத்தலி பொரியல்-லெமென் றைஸ் காம்பினேஷன் என்னெண்டு தெரியும்? ஒரு வேளை கேள்வி ஞானமாய் இருக்குமோ? 😂
-
ஜனாதிபதியாக ஒரு வருடத்தை நிறைவு செய்யும் அநுர குமார திசநாயக்க
நானாவது சிலோனுக்கு போறதாவது😎. அங்கை போய் காசை கரியாக்கிற நேரம் கியூபாவுக்கு போகலாம்.🤣
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
குரங்கிலிருந்து மனிதன் உருவாகி நாகரீகம் அடைந்தான் என சொல்கிறார்கள். எனக்கு என்னமோ மனிதன் எவ்வளவுதான் நாகரீகம் அடைந்து விண்வெளியை தொடும் அளவிற்கு முன்னேறினாலும் குரங்கின் குணமும் செயல்களும் மாறவேயில்லை என தோன்றுகின்றது. ஏனென்றால் படித்தவர்கள் தான்,படிப்பில் முன்னேறியவர்கள் தான் ,மூளைசாலிகள் தான் போர் எனும் மனித குலத்தை அழிக்கும் செயல்களுக்காக ஆயுதங்களை கண்டு பிடிக்கின்றார்கள்.அரசியல் காரணங்களுக்காக சக மனிதர்களை அழிக்கின்றார்கள். அரசியல் காரணங்களுக்காக மக்களை பஞ்சத்தில் அழிய விடுகின்றார்கள். பாமரன் அன்னியவனை பலியெடுக்கவும் மாட்டான். பலியெடுக்கவும் மாட்டான்.