Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. காவோலை வேலிக்கால ஓட்டை போட்டு பக்கத்து வீட்டு விடுப்பு பார்த்த யாழ்ப்பாணத்தானுக்கு பேஸ் புக் ஒரு வரப்பிரசாதம்.😂
  2. நாட்டில் வாழும் மனித மிருகங்களை விட காட்டில் வாழும் மிருகங்கள் ஓரளவிற்கு பரவாயில்லை.
  3. தலைவன் டொனால்ட் ரம்ப் தாய்லாந்து-கம்போடியா பிரச்சனையை தீர்க்க போவதாக சிறு செய்தி ஒன்று வந்துள்ளது.
  4. இஸ்ரேல் பலஸ்தீன அழிவை இனியும் செய்து கொண்டிருக்குமேயானால் அதை பார்த்துக்கொண்டிருக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் பெரிய அவமானமும் அவமரியாதையும்.... இது உக்ரேன் விடயத்திற்கும் தகும். படிப்பில் முன்னேறியவர்கள்,பல கண்டுபிடிப்புகளை செய்தவர்கள்,விஞ்ஞானத்தில் உயர்ந்தவர்கள்,மருத்துவத்தில் உயர்ந்தவர்கள்,மனித உரிமைகள் பற்றி கரிசனை கொள்பவர்கள்,ஜனநாயகவாதிகள் ,மனித நேயம் உள்ளவர்கள் என கூறிக்கொண்டு மறைமுகமாக போர் செய்பவர்கள் இந்த மேற்குலகினர்.
  5. ஒவ்வொருத்தர் வாழ்விலும் பிறப்பு தொடக்கம் இறப்பு வரைக்கும் வயது பருவங்களுக்கேற்ப விழாக்கள்,கொண்டாட்டங்கள் வந்து சென்று கொண்டே இருக்கும்.அது பிறந்தநாள் தொடக்கம் மரண நாள் வரையில் முடிவடையும்.எல்லா கொண்டாட்டங்களையும் அப்படியிருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என திட்டமிட்டு செய்வது வழக்கம். மரண நிகழ்வை மட்டும் யாரும் தீர்மானிக்க முடியாது.ஆனால் மரணச்சடங்கு இப்படித்தான் நடக்க வேண்டும் என பலர் திட்டமிட்டு வைத்திருப்பதில்லை.சிலர் அப்படி திட்டமிட்டு வைத்திருக்கிறார்கள்.அதில் ஒரு சில திட்டமிட்ட முறையிலும் நடைபெற வாய்ப்பில்லாமல் போகின்றது. நான் ஒரு மரணச்சடங்கு உயில் எனக்காக எழுதி வைத்துள்ளேன்😂.என் பெறோர்கள் எனக்காக காணி பூமி உறுதிகளை எழுதி வைத்து விட்டு சென்றார்கள். நானோ என் இறுதி பயணத்திற்காக உயில் எழுதுகின்றேன்.😜
  6. எனது மரணம். நாம் எமது வாழ்க்கையில் பிறந்தது முதல் இறக்கும் வரைக்கும் ஏதோ ஒரு இலக்கை நோக்கியே சென்று கொண்டிருப்போம். நாம் பிறந்தவுடன் எமது பிற்காலத்தை ஓரளவு எம்மை பெற்றெடுத்தவர்கள் தீர்மானிப்பர். அது சில/பல வேளைகளில் நூறு வீதம் சரியானதாக இருக்காது. பிறந்து வளர்ந்து புத்திகள் வர புதிய சிந்தனைகள் உதிக்க சிலரது வாழ்க்கை பெற்றோர்கள் கீறிய கோட்டில் செல்லும். பலரது வாழ்க்கை பலவகையில் மாறி மாறி செல்லும். உதாரணத்திற்கு எனது வாழ்க்கை ஜேர்மனியில் அமைந்து முடியும் என நானும் எதிர்பார்க்கவில்லை.என்னை பெற்றெடுத்து வளர்த்தவர்களும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் என்னை பெற்றெடுத்தவர்கள் எனது எதிர்காலம் பற்றி ஆயிரம் திட்டங்கள் வைத்திருப்பார்கள்.இது இவனுக்கு அது அவளுக்கு என பல கனவுகளை வளர்த்திருப்பார்கள்.பெற்றெடுத்தவர்களுக்கு அது எட்டாக்கனியாக மாறியிருக்கும். இப்படியான சம்பவங்கள் பலருக்கு நடந்திருக்கலாம். பெற்றோரின் கட்டுப்பாடு எனும் கையை விட்டு விலகும் போது பல விடயங்களை நம்மை நாமே அரசர்களாக்கி தீர்மானிக்கின்றோம். அது பல இடங்களில் தனி பறவையாக்கும் போது தானாகவே வந்து சேர்ந்து விடும்.நல்லது கெட்டது தெரியாத பருவத்தில் நாம் செய்வதெல்லாம் வீரமாக தெரியும். புத்திசாலித்தனமாக தெரியும். சரியானதாகவும் தெரியும். அதன் பின் மனித வாழ்வில் திருமண நிகழ்வு என ஒன்று வரும். அது ஒரு கூட்டு வாழ்க்கை.சந்ததிகள் உருவாகும்.சந்தோசங்கள் பெருகும்.சொந்தங்கள் பாசங்கள் உறவுகள் பெருகும். அதில் ஆயிரம் பிரச்சனைகள் வரும் போகும்.நன்மை தீமை என பல சம்பவங்கள் நடந்தேறும்.அப்போது எமக்குள் இருந்த பாசங்கள் விரிவடையும். முன்னர் இருந்த அயல் உறவு பாசங்கள் இல்லாமல் போகும்.....
  7. அதே.👍 வேறு எந்த சிதம்பர ரகசியமும் இல்லை. சம்பந்தனிடம் சாணக்கியமாவது சாணகமாவது.
  8. https://youtu.be/kuL8tvgMt_A இதெல்லாம் பொன்னான காலங்கள். இனி என் வாழ்க்கையில் நினைத்து பார்க்கவே முடியாது. ☹️ https://youtu.be/ebuKzS2fAFg https://youtu.be/El105nYqmjo அருமை.
  9. நான் நானாக இருப்பதை தவிர்த்து அழகானது/அறிவானது எதுவும் இல்லை.
  10. நாமம் போட்டும் திருந்துற பாடாய் தெரியேல்லையே......இப்பவும் தேவையில்லாமல் மூக்கை நுழைச்சுக்கொண்டுதானே திரியுறார். அதுதான் அந்த சாணக்கியத்தை பத்து வருசமாய் கண்டு களிச்சமே 😁
  11. பல்லின கலாச்சாரம் வேணும் எண்டால் ஆபிரிக்க பிரதர்ஸ்ச காசு குடுத்து எண்டாலும் கூட்டிக்கொண்டு வரத்தான் வேணும் 😂
  12. காக்கை வன்னியன்கள் இல்லையெண்டால் சிங்கள பேரினவாதத்துக்கும் அதுக்கு சாமரம் வீசுறவைக்கும் பெரிய பாரிய சொல்லணா இழப்பு தானே 🤣
  13. தமிழ்நாட்டு பொலிசாரிடம் ரெயினிங் எடுத்திருப்பார்கள்.
  14. கள்ளு அப்பம் புளிக்க வைக்கவும் பாவிக்கிறவை.அதோட கள்ளு உடம்புக்கு குளிர்ச்சி தரும் எண்டும் சொல்லுறவை.கள்ளு கெமிக்கல் சேர்க்காத இயற்கை தந்த மது பானம். அதை அளவோடு பருகினால் வாழ்க்கை முழுவதும் ஆனந்தம்...ஆனந்தம்.😍
  15. நான் உந்த குகைக்குள் பல தடவைகள் படுத்து எழும்பி வந்திருக்கிறன்.அரணா கொடி தொடக்கம் காப்புக்கயிறு வரைக்கும் உருவி எடுத்துப்போட்டுத்தான் அந்த அறைப்பக்கமே விடுவார்கள். அது மட்டுமல்லாமல் உடம்புக்குள் ஏதாவது உலோகங்கள் ஏதாவது பொருத்தப்பட்டிருக்கின்றதா என கேட்டு உறுதி செய்த பின்னரே அறையினுள் செல்ல அனுமதிப்பார்கள். கட்டுப்பல்லுக்காரர்களும் கவனமாக இருக்க வேண்டும். உடம்புக்குள் அதாவது கால்பகுதி,மண்டைப்பகுதியில் உலோகங்கள் பொருத்தப்பட்டிருந்தால் விமான நிலையங்களிலும் ஒரு சில பிரச்சனை இருக்கும் என கேள்விப்பட்ட ஞாபகம்.
  16. இந்தியா,பாக்கிஸ்தானியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்....
  17. அய்க்......ஆசை தோசை அப்பளம் வடை பாயாசம். அதுதான் இல்லையே..😂 ஜேர்மனி பலஸ்தீனத்தை அங்கீகரிக்க போவதில்லையாம்.ஏனெண்டால் அங்கீகரிப்பது பிழையான வேலையாம். உக்ரேனுக்கு முக்கி முனகுபவர்கள் பலஸ்தீன விடயத்தில் பாலுக்கு காவல் பூனைக்கும் தோழன் எண்ட கதைதான். இன்னொரு எத்தியோப்பியாவாக மாறி விட்ட பலஸ்தீனம்.☹️
  18. நாடாளுமன்றத்திலும் "இந்தியன்" திரைப்படத்தை ஒளிபரப்பி அங்கிருக்கும் ஊழல்வாதிகளை வெருட்ட வேண்டும்.🤣
  19. தாய்லாந்து பௌத்த நாடு. கம்போடியா பௌத்த நாடு. இரு நாடுகளும் உரிமை கோருவது இந்து கோவிலை!!! காமெடியாக இல்ல? 😎
  20. அமெரிக்காவும் இங்கிலாந்தும் எக்காரணம் கொண்டும் எந்தக்காலத்திலும் பலஸ்தீனம் என்ற தனிநாடு உருவாவதை விரும்பமாட்டார்கள். எக்காரணம் கொண்டும் அங்கீகரிக்கவும் மாட்டார்கள். பிரான்ஸ்க்கு தேவையில்லாத வேலை.😁
  21. என்ன இருந்தாலும் ஆயுத வியாபாரிகளுக்கு இன்னொரு சந்தை உருவாகி விட்டது.
  22. யாரையும் திருத்துவதற்கு நாம் படைக்கப்படவில்லை பிறர் திருந்தும் படி நம் வாழ்க்கையை வாழ்ந்து காட்டினால் போதும்...
  23. எல்லாரும் சண்டை பிடிக்கிறாங்கள். நாங்களும் சண்டை பிடிப்பம் எண்டு வெளிக்கிட்டினம் போல....😂
  24. அனுஜனுக்கு என் வாழ்த்துகள். இதே போல் எமது இளைஞர்கள் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் காண வேண்டும்.
  25. https://youtu.be/7g505MXqnec?si=5qVCOqusRuu7It7M நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே நீவந்த வாழ்வைக்கண்டதனாலே மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும் மார்தங்கு தாரைத்தந்தருள்வாயே ..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.