Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. உந்த சின்ன வயசிலையே ஆள் பெரிய கில்லாடி போல கிடக்கு... படமெல்லாம் வாங்கி விக்க வெளிக்கிட்டாச்சு.... அடுத்தது நடிப்பு துறையிலையும் இறங்கிடுவார்....😂
  2. சினிமாக்காரன் இல்லை என்றால் தமிழ்நாட்டு அரசியல் அசையாது அரங்காது என்பது தம்பியருக்கு இன்னும் தெரியேல்ல போல... கரூரில் விஜய்யண்ணாவுக்கு திரள் திரளாய் படையெடுத்து வந்த வாக்காள பெருமக்கள் சிறப்புகளை இன்னும் கண்ணில் படவில்லையாக்கும்.
  3. பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல்...... நாட்டிற்கு எதுவுமே செய்யாமல் மேடை அதிரடி வசனங்களாலும்,திரைக்கதை வசனங்கள் புகழாலும்,நாடக நடிப்புகளாலும் முன்னுக்கு வந்தவர் கருணாநிதி.அன்றைய காலத்தில் திரை முன்னணிகள் சொல்வதெல்லாம் தெய்வவாக்கு(இன்றும் அதே நிலைதான்☹) தீபம் காட்டுவது,பால் ஊத்துவது இன்றும் உள்ளது. இதுதான் இன்றைய இந்திய, தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை. நிலைமை இப்படியிருக்க.... சினிமா கவர்ச்சி அரசியல் வலிமை மிக்கது என பழைய வரலாறுகள் சொல்லி நிற்கும் இவ் வேளையில் திமுக பயப்பிடுமா இல்லையா? சினிமா அரசியலில் எம்ஜிஆர் தப்பி பிழைக்க...... எஸ் எஸ் ராஜேந்திரன் தொடக்கம் சிவாஜிகணேசன் பாக்கியராஜ் ரி ராஜேந்தர் கமலகாசன் ராமராஜன் செந்தில் விஜகுமார் என பலர் அவஸ்தை பட்டது பலருக்கும் தெரியும்.
  4. சினிமா வசனங்களை வைத்து அரசியல் செய்ய வெளிக்கிட்டால் இந்த அழிவும் வரும் இதுக்கு மேலான அழிவுகளும் வரும். சினிமாவை வைத்து அரசியல் செய்த எம்ஜிஆர் காலம் அந்தக்காலம்.அப்போது அது சரியாக இருந்தது. ஊடக வெளிச்சம் இல்லாத காலத்தில் சினிமா தகவல் சொல்லும் களமாக இருந்தது. அதே அரசியலை மூக்கை பிடித்தால் வாயை திறக்க தெரியாத இளம் சினிமாக்காரர்களுக்கு அரசியலை பற்றி என்ன தெரியும்? சினிமாவில் கதையும் சொந்தமில்லை.கதை வசனங்களும் சொந்தமில்லை. இசையும் சொந்தமில்லை.பாடல் வரிகளும் சொந்தமில்லை. பஞ்ச் வசனங்களும் சொந்தமில்லை.அணியும் உடைகளும் சொந்தமில்லை. பத்து வசனம் தொடர்ந்து பேச வக்கில்லை. ஆனால் நினைப்போ நேரடி முதல்வர் கதிரை.
  5. சீமானுக்கும் விஜயலச்சுமிக்கும் இடையிலான குடும்ப வாழ்க்கை பல வருடங்களாக இருந்துள்ளது. இங்கே பாலியல் குற்றம் ஏதுமில்லை.ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுதான் குடும்பம் நடத்தியுள்ளனர். இங்கே சீமான் அசிங்கப்பட வேண்டிய அவசியமில்லை. பொதுவான மனிதர்கள் வாழ்க்கையில் இது சர்வ சாதாரணம். ஆணும் பெண்ணும் திருமணத்தை நோக்கியே பல வருடங்கள் கூடி வாழ்வார்கள். இடையில் மன முறிவுகள் ஏற்பட்டால் பிரிந்து செல்வது இயல்பான நடவடிக்கையே. விஜயலச்சுமி அவர்கள் வேறு அமைப்புகளின் உந்துதலால் பொது வெளியில் அசிங்கமாக பேசுவதும் மரியாதை இல்லாமல் பேசுவதும் உங்களை போன்றவர்களுக்கு சரி என்றால்......சீமான் உங்கள் மதிப்பிற்குரிய விஜயலச்சுமியை விட்டு விலகியதும் சரியே.
  6. சீமான் சரியாத்தான் சொல்லியிருக்கின்றார். சினிமா வேறு அரசியல் வேறு என்பதை நடிகர் விஜய் எக்காலத்திலும் உணரமாட்டார் என்பதை அவர் கடைசியாக வெளியிட்ட அறிக்கையிலிருந்து தெரிகின்றது.
  7. தலைவர் எமக்கு மட்டும்தான் சொந்தமென முற்றுப்புள்ளிகள் வைத்து எழுதவும் முடியாது.சொல்லவும் முடியாது. தலைவரை இன்று தமிழினத்தின் தலைவர் என்றே சொல்கின்றனர்.அது தமிழ்நாட்டு ஒரு சில அரசியல்வாதிகளுக்கு இடைஞ்சலாக இருக்கலாம். கடவுளை வணங்குவதற்கு/நேசிப்பதற்கு யாருடைய அனுமதியும் உத்தரவுகளும் யாருக்கும் தேவையில்லை.
  8. நல்ல விடயம். பொலித்தீன் பாவனைகளை ஓரளவிற்கு தான் கட்டுப்படுத்த முடியும். அறவே பொலித்தீன் பாவனையை ஒழிக்க முடியாது.
  9. இந்திய அரசியலில்,தமிழ்நாட்டு அரசியலில் சுத்த பத்தமான ஒரு அரசியல்வாதியை சொல்லுங்கள் பார்க்கலாம்? அதாவது பெண்வாடையே இல்லாத உத்தமர் ஒருவராவது?????
  10. நானும் எத்தினை நாளைக்குத்தான் தொண்டை கிழிய கிழிய கத்துறதெண்டு தெரியேல்லை?😂 சீமான் அரசியலை நான் வரவேற்பது ஈழ அரசியலுக்காக இல்லை என்பதை பல இடங்களில் பலதடவைகள் எழுதி விட்டேன்.
  11. விஜய் அவர்கள் மற்றவர்களை குறை சொல்வதை விடுத்து முதலில் தன் ரசிகர்களை நல்வழிப்படுத்தட்டும்.
  12. சீமான் பக்கம் என கூறாதீர்கள். உண்மையின் பக்கம் என கூறுங்கள்.😎
  13. ஐரோப்பிய நாடுகளுக்கும் சுற்றுலா விசாவில் வந்துதான் ஜோதிட தொழில் பார்க்கின்றனர். முக்கியமாக சுவீஸ்,ஜேர்மனி போன்ற நாடுகளில் இந்த இந்திய ஜோதிடர்களை காணலாம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகமாக் சொல்வார்கள்.😂
  14. அவசரத்திற்கு என்னை பயன்படுத்துங்கள்...☝ ஆரோக்கியத்திற்கு என் குருநாதரை பயன்படுத்துங்கள்...👇
  15. என் இறுதி சடங்கிற்கு வருபவர்களுக்கு இனிப்பு கலந்த நீராகங்கள் வழங்க வேண்டும். அந்த நேரத்தில் இந்த பாடல்கள் ஒலிக்க வேண்டும்.❤️
  16. யாருக்கு எந்த நேரம், எப்படி,என்ன நோய் வரும் என்ற அச்ச காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆழ்ந்த அனுதாபங்கள்.
  17. நடந்தது ஆர்ப்பாட்ட ஊர்வலம் அல்ல.காவல் துறையை ஆயிரக்கணக்கில் குவித்து வைத்திருப்பதற்கு. சர்வ சாதாரண தேர்தல் பிரச்சார கூட்டம்.சினிமா கவர்ச்சியால் கடவுள் மாதிரி திரிபவர்கள் அரசுடன் தொடர்பு கொண்டு சொந்த செலவில் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். இன்றைய கால தமிழ்நடிகர்களின் அளவிற்கு மீறிய பில்டப்பால் அவர்களை எனக்கு பிடிப்பதில்லை. இருந்தாலும் கருவூர் சம்பவத்தின் பின்னர் அஜித் ஒரு தீர்க்கதரிசியாக எனக்கு தெரிகின்றார்.ரசிகர்களின் பைத்தியக்காரத்தனத்தை நன்றாகவே நாடி பிடித்து பார்த்திருக்கின்றார். ரசிகர் மன்றமும் இல்லை ஒரு கோதாரியும் இல்லை.எனது படத்தை பிடித்தால் பார். இல்லையேல் உன்ர வேலையை பார் பீலிங்....😎
  18. எது எப்படி இருப்பினும் கரூர் அசம்பாவிதத்தை வைத்து ஏனைய தமிழ்நாட்டு கட்சிகள் நல்ல அறுவடை செய்கின்றார்கள் என்பதுதான் உண்மை. இவர் கைது செய்யப்பட வேண்டியவர்தான்.ஏனென்றால் சம்பவம் நடந்த உடனேயே எவ்வித ஆதாரமும் இல்லாமல் தேவையில்லாத குற்றங்களை மற்றவர்கள் மீது அடுக்கிக்கொண்டிருந்தார்.
  19. ஈழத்தில்/உலகத்தில் எங்கெல்லாம் அதிகமாக விஜய் ரசிகர்மன்றம்,ரசிகர்கள் இருக்கின்றார்களோ அங்கெல்லாம் கல்வியை கட்டாயமாக்கப்பட வேண்டும். இது ரஜனி மன்றவர்களுக்கும் தகும்.
  20. விஜய் அண்ணா! அஞ்சலிக்கான சந்திப்பு , அனுதாப சந்திப்பிற்கு இன்னுமா script தயாராகவில்லை? ☹️
  21. இதே போல் சீமான் நடத்தும் கூட்டங்களில் இப்படி சிறு அசம்பாவிதம் நடந்தாலும் உங்கள் கேலிச்சித்திரமும் கருத்தும் எப்படியிருந்திருக்கும் என ஒருகணம் சிந்தித்தேன். சிரித்தேன். இருந்தாலும் சீமானுக்கு மட்டும் வரும் கேலிச்சித்திரம் விஜய் என்றவுடன் ஒரு கேலிச்சித்திரமும் வராதது ஏனோ தானோ என அவரை அவமானப்படுத்தி விட்டீர்கள்.
  22. இது முதற் தடவையல்ல.....அண்மைக்காலமாக வெளியே தெரிந்தும் தெரியாமலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இது தொடரும் என்பதை உணர முடிகின்றது. அதிக எரிசக்தி செலவுகளை யார் உருவாக்கினார்கள்? இவர்களே உருவாக்கி தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளி தலையில் போட்டுள்ளார்கள். வியாபாரிகள் அரசியலை எக்காலமும் எக்காரணம் கொண்டும் தொடக்கூடாது.அது சொந்த கல்லாவுக்கே நஷ்டத்தை விளைவிக்கும்.அதே அரசியல் வேலையைத்தான் ஜேர்மனியும் செய்தது.இவர்களுக்கு பக்கத்து வீட்டு அரசியல் தேவையில்லாத வேலை. தேவையில்லாமல் மூக்கை நுழைத்து இப்போது வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் அற்ப சொற்ப அரசியலினால்தான் Afd எனும் கட்சி இன்று முன்னணியில் நிற்கின்றது. ஒரு உலக புகழ்பெற்ற மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றால்....மிகுதியை உங்கள் சிந்தனைக்கே விடுகின்றேன். பழைய ஜேர்மனியை நினைத்து இன்று போலியாக நான் சந்தோசப்பட மாட்டேன்.பெருமிதமும் அடைய மாட்டேன்.ஆனால் கவலையும் கரிசனையும் உண்டு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.