Everything posted by குமாரசாமி
-
எனது மரணச்சடங்கு.🖤
அந்த கூத்துக்கள் சொல்லி வேலையில்லை. வாய் கடியில தொடங்கி வெட்டுக்குத்தில போய் முடியும்.அதாகப்பட்டது. செத்தவீட்டுக்கு வந்து இன்னொரு செத்தவீட்டுக்கு அடிக்கல் வைச்சுட்டுத்தான் போவினம்.😂
-
இந்திய இராணுவத்தின் வலிமையைக் கண்டு உலக நாடுகள் வியந்தன! – பிரதமர் மோடி
கிட்லர் செய்த தவறு அன்னிய நாடுகள் மீது படையெடுத்தது மட்டும் தான். மற்றும் படி தன் நாடு தன் மக்கள் ,தன் நாட்டு அபிவிருத்தி என மிக கண்ணியமாகவே இருந்தார். இதைத்தான் டொனால்ட் ரம்ப் அவர்களும் செய்கின்றார்,புட்டினும் செய்கின்றார்,ஐரோப்பிய நாட்டு தலைவர்களும் செய்கின்றனர். மோடியும் அதைத்தான் செய்கின்றார். பழைய வரலாறுகள் எல்லாவற்றையும் கிளறினால் தமிழ் அரசர்கள் காலத்தையும் ஆராய வேண்டி வரும்.😎
-
ஹி இஸ் எ டிப்பிக்கள் சிறிலங்கன்
இதில நான் என்னத்த சொல்ல? அந்த டிப்பிக்கள் சிறிலங்கனுக்கு கலிகாலம் தொடங்கீட்டுது. வெள்ளைக்காரன் பெஞ்சன் எடுத்தால் வேற லெவல். ஆனால் சிறிலங்கன் பெஞ்சன் எடுத்தால் வோசிங் மிசின்,நேசறி அது இது எண்டு அலைய வேண்டி இருக்கும். நீங்கள் சும்மாதானே இருக்கிறியளப்பா எண்ட பீலிங் மனிசி பிள்ளையளுக்கு வாறது இயல்பு கண்டியளோ.. காய் புத்தர் புதுக்கதையோட மீண்டும் கண்டதில் சந்தோசம். 🟢
-
அறுகம்குடா இஸ்ரேலியர்களுடையது என 5000 ஆண்டுகளிற்கு முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்டதா?!
எலிகள் கூடி விட்டால் பூனை வளர்ப்பது,கள்ளர்கள் கூடி விட்டால் நாய் வளர்ப்பது நம்ம ஊர்களின் யதார்த்தம் மட்டுமல்ல உண்மையும் கூட..... விளங்கின எல்லோரும் பிஸ்தா அல்ல. 🔅
-
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா ஒரு குழந்தைக்கு 1500 டொலர்!
இது போன்ற மாதிரி சட்டங்கள் ஜேர்மனியிலும் நிறைய உண்டு. ஆனால் ஜேர்மன்காரர் அதில் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. கூடுதலாக அவர்கள் பிள்ளைகள் இல்லாத வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கை என வாழ தலைப்பட்டு விட்டனர். காரணம் வாழ்க்கை செலவு அதிகரிப்பு. ஆனால் புலம் பெயர்ந்து வந்த நம்ம அரபு வசந்தகாரர்களுக்கு நோ ப்ரொப்பளம். ஒரே அபிவிருத்திதான் 😂
-
ஆறு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை - இரான் கடும் எதிர்வினை ஏன்?
இப்ப எவன் அமெரிக்காவை மதிக்கிறான்? கண்டவன் கிண்டவன் எல்லாம் அமெரிக்காவை காறித்துப்பும் நிலைக்கு தான் நிலமை போகுது. மறைமுகமாக ஐரோப்பிய ஒன்றியமும் அதனை சுற்றியுள்ள நாடுகளும் அமெரிக்காவை மதிப்பதாக தெரியவில்லை.அமெரிக்கா இல்லாத வேறு வழியை தேடிக்கொண்டுருக்கின்றார்கள்.கனடா கூட காறித்துப்பி விட்டது. ஆசிய நாடுகள் எதிர்பாராத விதமாக முன்னேறிக்கொண்டு போகின்றன. இலங்கை உட்பட.... ஐரோப்பிய நாடுகளின் கண் பார்வை ஆசியா பக்கம். அதிலும் இந்தியா பக்கம் என்றே பலர் சொல்கின்றார்கள். அகன்ற வெளியில் தடைகள் என்பது அவரவர் வட்டத்துக்குள்ளேயே இருக்கும். பல பற்பல பொருளாதார தடைகளை மேற் கொண்ட அமெரிக்கா இது வரைக்கும் சாதித்தது என்ன? தனிய போர்களும் அழிவுகளும் மட்டுமே. ஈரானின் எதிர் தாக்குதல் மூலம் அடங்கி விட்ட அமெரிக்கா தன் பலத்தை வேறு எங்கேயும் காட்ட முனையலாம்.
-
காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது
என்ன விசுகர்! இப்பிடியான சித்திரங்கள் உங்கள் பெயரில் வரணுமா? 😂
-
இந்திய இராணுவத்தின் வலிமையைக் கண்டு உலக நாடுகள் வியந்தன! – பிரதமர் மோடி
பிரித்து மேய வெளிக்கிட்டால்......🙃 ஒரு வகையில் தாம் தம் நாடு தம் இனம் தம் மண் என போராடுபவர்கள் எல்லோரும் நாசிகளாகவே தெரிவர். 🧐
-
காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது
பிறகென்ன உங்கை எல்லாரும் சாவகச்சேரிய தங்கம் விளையுற பூமி எண்டுறாங்கள் 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இருக்கும் போதே அனுபவித்து விடுங்கள். இப்படிக்கு சந்தோசம்
-
இந்திய இராணுவத்தின் வலிமையைக் கண்டு உலக நாடுகள் வியந்தன! – பிரதமர் மோடி
இந்த கருத்து ஜேர்மனியின் அன்றாட, உண்மையான உள் நிலவரங்கள் தெரியாமல் எழுதப்பட்டு இருக்கின்றது. நாஷிகளின் கொள்கை என்ன என தெரியாமல் எழுதப்பட்டுள்ளது.
-
ஆயுதஎழுத்து பாகம் 2
வணக்கம் சாத்திரியார்! மீண்டும் யாழ்களத்தில் கண்டதில் சந்தோசம். ஏன் முன்னரைப்போல் யாழ்களத்தில் எழுதுவதில்லை?
-
எனது மரணச்சடங்கு.🖤
ஏன் கனதூரம் போவான்? தமிழ் நாட்டில் கூடுதலான இடங்களில் மரணச்சடங்கு ஆட்டம் பாட்டம் தண்ணி என பெரிய அமர்களமாக நடக்குமாம். இலங்கையில் நடக்கும் செத்தவீடுகளில் சாராயம் தங்கு தடையின்றி பாயும். கவலைக்குடி😂
-
காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது
ஆக்கள் இரட்டை சுழிக்காரர். ஆதாவது சுழியன்கள் 🤣 எழுதுமட்டுவாள் தொடக்கம் நுணாவில் கைதடி நாவற்குளி எண்டு எல்லாம் பெரிய புள்ளிங்கோ 😂 எங்கடை கைதடியார்ர கன நாளாய் காணேல்லை(கந்தையா) கோயில் திருவிழாக்கள் முடியத்தான் வருவார் போல 😄
-
நடனங்கள்.
மிக அழகான நடனம். அதிலும் இப்படியான பெண் குழு நடனங்களில் ஆண் முதன்மையாக காட்சிப்படுத்தப்படுவது அபூர்வம். சிறப்பு 👍
-
காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது
நான் பள்ளிக்கூடத்திலை படிக்கேக்க அவையளிட்ட வடை தேத்தண்ணிக்கு காசு அடிக்கடி வாங்கின ஞாபகம் வருது. அந்த காசில தம் அடிச்சது வேற விசயம். இந்த பொடியன் என்னடாவெண்டால் மோட்டச்சைக்கிள் வாங்க அவையளை வளைச்சுப்போட்டிருக்கிறான்...கில்லாடி பெடியன் தான் 😂 இவனெல்லாம் பள்ளிக்கூடம் போனவனோ எண்ட கேள்வி உங்கை கன பேருக்கு வரக்கூடும்.😎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நிருபர் சுப்பம்மா:- பொன்னம்மா அவர்களே நீங்கள் எப்போது சந்தோசமாக இருப்பதாக உணர்வீர்கள்? பொன்னம்மா:-அயல் அட்டை சுற்றம் சூழல் கஷ்டப்படுவதை பார்த்தால் எனக்கு சந்தோசமும் உற்சாகமாயும் இருக்கும்.....நோர்மலாய் எனக்கு மற்றவையள் சந்தோசமாய் இருந்தால் துண்டற பிடிக்காது.
-
கள் போதைப் பொருளா அல்லது உணவுப்பொருளா? குழந்தைகளும் அதை குடிக்கலாமா?
உலகில் எல்லா நாடுகளிலும் மது பானங்களுக்கு தடை செய்தால் என்ன நடக்கும்?
-
எனது மரணச்சடங்கு.🖤
இதுவொரு அருமையான வாழ்க்கை தத்துவ பாடல்.வாழ்க்கை எனும் தத்துவத்தை மனிதம் மறந்ததினால் தான் உலகில் இன்றைய கலவரங்கள் என நான் சில வேளைகளில் சிந்திப்பதுண்டு. நான் பல காணொளிகளை இணைத்தும் நேரடியாக வேலை செய்யவில்லை☹.நான் இணைத்த அதே இணைய காணொளி முகவரியை நீங்கள் இணைத்ததும் நேரடியாக வேலை செய்கின்றது. என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை.🤣 உங்கள் காணொளி இணைப்பிற்கு மிக்க நன்றி சிறித்தம்பி...🙏 ஐயனே! நீங்கள் நினைப்பது உண்மைதான். தலைப்பிற்கும் அதன் கீழ் ஊர்ந்து செல்லும் கருத்துக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லைத்தான். இருந்தாலும் மனித வாழ்க்கை எப்படிப்பட்டது அதில் உள்ள ஆசா பாசங்கள், திட்டமிட்டு நடத்தப்படும் கொண்டாட்டங்கள் அதன் முன்னேற்பாடுகள் என்பனவற்றை அலசி ஆராய்ந்து விட்டு எனது மரணச்சடங்கு எப்படியிருக்க வேண்டும் என சொல்ல நினைக்கின்றேன். நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறுவீதம் சரியானது.இருப்பினும் நாம் இறந்த பின் எமது மரணச்சடங்கு எப்படி இருக்க வேண்டும் என்பதை உயிர் உள்ளவர்கள் தான் தீர்மானிக்கின்றார்கள்.எனவே அந்த தீர்மானத்தை எம் உயிர் உள்ள போதே நாம் நிர்வகித்து உயில் எழுதி விடவேண்டும். நான் இறந்த பின்/எனது மரணச்சடங்கிற்கு கண்ட கண்ட குத்தியன்கள் வந்து நினைவஞ்சலி பூமாலை அணிவதும்,நினைவஞ்சலி எழுதுவதும்,துக்கமாக ஊளையிடுவதும்,கண்ணீர் பா வடிப்பதையும் தடை செய்வேன். எனது உயில் பாகங்களில் இதுவும் ஒன்று.இதை நான் ஏற்கனவே செய்து விட்டேன்.
-
நடனங்கள்.
https://youtu.be/kuL8tvgMtA
-
கொஞ்சம் ரசிக்க
என் ஆசை பெரிய பேராசை தான் இருந்தும் கேட்கிறேன் என் உயிர் உன் உயிரினுள் ஊடுருவி இருக்க அனுமதி கொடுப்பாயா? 💘
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தனித்து நின்றாலும்- தனித்துவமாய் நில்.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
சுப்பன்:-டேய் திருடா....கள்ளா...நீ ஒரு கள்ளன்.என்ரை காணியிலை தேங்காய் களவெடுத்து போட்டாய் மப்பன்:-மன்னிக்கவும் இனிமேல் என்னை கள்ளன் திருடன் எண்டு சொல்ல வேண்டாம்.. சுப்பன்:-அட ..... வேற எப்பிடி சொல்லுறதாம். தலைவர் ஜாம்பவான் வீர தீரர் எண்டு சொல்லவோ? மப்பன்:-பிறர் பொருள் நேசிப்பாளர் எண்டு சொல்லவும்👻 சுப்பன்:-இது எப்ப தொடக்கம்? மப்பன்:-இனிமேல் அப்பிடித்தான்.. சுப்பன்:- என்ர சிவனே இது கலி காலம்.. மப்பன்:-உங்களுக்கு கலிகாலம் எனக்கு பொற்காலம் 😎 சுப்பன்:😧😟
-
இஸ்ரேலிய படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள காசா மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது - பெருமளவு சுகாதார பணியாளர்களும் சிறைகளில்
யூதர்கள் பலஸ்தீனியர்களை அழித்தொழிக்க என்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை மனித நேயமில்லாமல் செய்கின்றார்கள். யூதர்கள் ஹிட்லரிடம் அடிவாங்கியும் திருந்தவில்லை.மனிதாபிமானமும் பிறக்கவில்லை.
-
எனது மரணச்சடங்கு.🖤
தங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. அதே போல் விருப்பு வாக்கு அளித்தமைக்கும்,விருப்பு வாக்கு அளித்தவர்களுக்கும் நன்றி. மனிதனுக்கு மட்டுமல்ல உயிரினங்கள் அனைத்திற்கும் மரணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.இது யாவரும் அறிந்ததுதான்.ஆனால் மனித இனத்திற்கு மட்டும் நாட்டுக்கு நாடு இனத்திற்கு இனம் இறுதிச்சடங்குகள் வேறுபடும்.பல இடங்களில் அது ஒரு நாடக மேடை போல் தோன்றும்.இல்லை இல்லை அது நாடக மேடையேதான்.பல சிவாஜிகணேசன்கள், பல வாழ்வே மாயம் ஸ்ரீபிரியாக்கள் ஸ்ரீதேவிகள்,கௌரவம் பண்டரிபாய் கூட்டம் என இறுதிச்சடங்கு நிகழ்வுகள் களைகட்டும்.கஸ்ரத்திற்கு உதவாதவர்கள் கண்ணீர் மல்க நிற்பர்.மரண ஆராய்ச்சியாளர்கள் ஆங்காங்கே கூடி நின்று மரணத்திற்கான ஆய்வுகளை நடத்திக்கொண்டிருப்பர்.இன்னொரு பகுதியினர் யார் யார் வரவில்லை என ஆந்தைக்கண்ணால் கணக்கெடுத்துக்கொண்டிருப்பர்.நீண்ட காலத்திற்கு பின் சந்தித்தவர்கள் விருந்து வைக்காத குறையாக சிரித்து சிரித்து மகிழ்ந்து கொண்டிருப்பர்.இதெல்லாம் என் மரணச்சடங்கில் நடக்கக்கூடாது என்பதில் கவனம் செலுத்துகின்றேன்.🙂