Jump to content

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13647
  • Joined

  • Days Won

    25

Everything posted by Nathamuni

  1. இன்று சவுத் ஹரோ பெஸ்ட் பூட் கடைக்கு சென்று வந்தேன். அங்கே நம்ம நிழலி போல ஒருவர் இருப்பார். எப்படி வியாபாரம் என்று கேட்டேன். தீடீரென அதிக இந்தியர்கள் வந்துள்ளனர். வேலை கேட்டு தினமும் வருகிறார்கள். குறிப்பாக, ரூம் எடுக்க முடியுமா என்று பலர் கேட்கிறார்கள். ரிஷியும், சுலேலாவும் இந்தியர்களை இறக்குகிறார்கள் என்று வெள்ளைகள் கதைக்க தொடங்க போகிறார்கள். அதனால் தான் ஜனவரியில் இருந்து விசா கொடுப்பதை நிறுத்தப்போகிறார்கள் என்றார். ஆனால் அதன் இடையே பலர் வருவார்கள். எனினும், பலரை உள்ளே விட்டு, கண்காணிப்பையும் அதிகரித்து விட்டார்கள். முன்பு போல, சுத்துமாத்து விட முடியாது. இவர்களுக்கு சமூக கொடுப்பனவு இல்லை என்பதால், வந்ததில் ஒரு பிரயோசனமும் இல்லை என்பதை விரைவில் உணர்வார்கள் என்றார். @goshan_che
  2. அனுதாபம் சொல்ல வேண்டியதில்லை. இப்படியான நீண்ட ஆயுள் கொண்ட உறவை கொண்டிருந்த உங்களுக்கு வாழ்த்துக்கள். 🙏 நூறாண்டுக்கு மேலும் வாழ்ந்து தீர்காயுசுடன் வாழ்திருக்கிறார். கணக்குப் பார்த்தா, சிங்கன், வேலை செய்த காலத்திலும் பார்க்க ஓய்வூதியம் எடுத்த காலம் அதிகம் போலுள்ளது. 😊 எனது உறவில் தாத்தாவின் ஒன்று விட்ட அண்ணாவுக்கு (பெரியப்பா மகன்) இரண்டு சகோதரிகள். தாய்க்கு தொழுநோய் வந்த போது மகள்மார் கிட்டவே வராமல் ஓடி விட்டார்கள். தாயின் அவலம் அறிந்து கொழும்பில் செய்த வேலையை விட்டு ஓடி வந்து தாயை உடன் இருந்து தினமும், குளிப்பாட்டி, உணவு சமைத்துக் கொடுத்தார். 6 மாதம் வரை வாழ்ந்த தாய், நீ நீடூழி வாழ்வாய் மகனே, வாழும் காலமெல்லாம் லாவண்யணாக வாழ்வாய் என்று தினமும் வாழ்த்தினார். அவ்வாறே 99 வயது வரை பெரும் தனவந்தராக, கொடையாளியாக வாழ்தார். சகோதரிகளுக்கு நல்ல வாழ்வு அமையவில்லை. இருவரும் நீண்ட காலமும் வாழவில்லை.
  3. அதே தான் கதை. எனது கம்பனி, அப்படீயே விலைக்கு கேட்டார்கள். மறுத்தேன். பங்குதாரராக செய்வோம் என்றும் கேட்டார்கள். வேண்டாம் வாய்ப்பில்லை ராசாக்களே என்று விட்டேன். எனது நண்பர் சில வருடங்களுக்கு முன்னர், மத்திய கிழக்கில் கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார் ஒரு உறவினர் என்று, 5 சதம் கூட வாங்காமல், விசாவுக்கு உதவ, முழு குடும்பமும் வந்து சேர்ந்தது. வந்த பின்னர், உறவினர் வீட்டில் தங்கியிருந்தவர், உறவினர் புத்திமதிப்படி, நீங்கள் இவ்வளவு காசு சம்பளம் தருவன் எண்டு தானே கூப்பிட்டியள். அதை எப்ப தருவியள் எண்டு கேட்க.... அரண்டு போனார். மறுக்க, வக்கீல் நோட்டீஸ் போடுவன் என்று சொல்ல, இவர் கையோட நாம் எதிர்பார்த்த திறமை இல்லாததால் உமது விசாவை கான்சல் செய்து திருப்பியனுப்ப அரசை கோரப்போகிறன் எண்டவுடன் தான் நிலமை உணர்ந்து என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்தார். அதனால் தான் இது உபத்திரவமானது. தூரத்தில் வைத்திருக்க வேண்டும். இந்த மோபைல் ஓட்டோ கரெக்சன் பண்ணுற வேலை!! 🥹
  4. https://www.gov.uk/employee-lose-sponsor-licence https://www.citizensadvice.org.uk/immigration/health-and-care-worker-visas/losing-your-job-if-you-have-a-health-and-care-worker-visa/ 2022 பிப்ரவரியில் பராமரிப்புப் பணியாளர்களை திறமையான வேலை விசாக்களுக்குத் தகுதியுடையதாக மாற்றும் நடவடிக்கையைத் தொடர்ந்து, ஜூன் 2023 இல் முடிவடைந்த ஆண்டில் பராமரிப்பு மற்றும் மூத்த பராமரிப்புப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட நீண்ட கால வேலை விசாக்களின் எண்ணிக்கை 77,700ஐ எட்டியது. இது 2022 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் 12,300 ஆக இருந்தது. பிரான்சில் இருந்து அகதியாக வந்தவர்களில் பார்க்க இது அதிகமாக இருப்பதால், இந்த விசாவினை நிறுத்தி, அகதிகளுக்கு இந்த வேலையினை செய்வதுக்கு உரிய பயிற்சியினை கொடுக்கலாமே என்று ஆலோசனை வைக்கப்படுள்ளது. 😍🥰 🤫 விபரம் தந்தது உங்களுக்காக தானே... 😜
  5. கடந்த சனியன்று, ஈஸ்ட்காம், முருகன் கோவிலுக்கு எள் எண்ணெய் எரிக்க போனால், கோவிலில் உள்ள அளவுக்கு பிரசாதம் கொடுக்கும் இடத்தில் கூட்டம். பார்த்தால் அனைவருமே புதியவர்கள். வழக்கத்துக்கு மாறாக அதாவது, பிரசாதம் கொடுக்க தொடங்க முன்னம், அங்கே, குவிந்து நின்றார்கள். இவர்களில் பலர் இந்தியர்கள். அங்கே ஏன் கூடி நிக்கிறார்கள் என்று விசாரித்தால், வந்தது தலை கிறுகிறுக்கும் செய்தி. அவர்கள் அனைவருமே, மோசடி முகவர்களுக்கு காசு கொடுத்து விசா எடுத்து, வேலைக்கு வந்திருக்கிறார்கள். இவர்கள் எப்படி ஏமாத்தப்பட்டார்கள் ? மோசடியாளர்கள், 10, 20 வருடம் முன்னதாக பதிவு செய்த, திவாலாகாமல், சிறிதானாலும், நனறாக நடந்த கொம்பனிகளை, கம்பெனி ஹவுஸ் தளத்தில் தேடிப்பிடித்து, விலை கொடுத்து வாங்கி, அவைகளை, care home services தரும் கொம்பனிகளாக பதிவை செய்து, ஆட்களை இறக்க, approval எடுத்து, அப்புறம், முடிந்த அளவுக்கு விசாக்களை வெளிநாடுகளில் process பண்ணி, எடுத்ததும், அவர்களை, குறித்த நாளில் அல்லது குறித்த வார இறுதியில் சேர்ந்தே வரப்பண்ணி, எல்லோரும் ஒட்டு மொத்தமாக வந்த பின்னர், அங்கே வாங்கிய பணதுடன் காணாமல் போய்விட்டனர். இங்கே நடந்த பெரு மோசடியால், அரசு, ஜனவரி முதல் care workers விசாவை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. ஆக, வந்து இறங்கியவர்கள், அவர்களை, அழைத்தவர்களோ, அல்லது, எந்த நிறுவனத்துக்காக வேலைக்கு அழைக்கப்பட்டார்களோ, யாருமே இல்லாமல், என்ன செய்வது என்று புரியாத அவலத்தினுள் சிக்கி விட்டனர். இப்படி வந்த நம்மவர்கள், சமூக உதவி (உறவினர் உதவி) இருப்பதால் தப்பி விடுகின்றனர். இவர்களுக்கு அப்படி உதவி இல்லை. ஆகவே, கோவிலில் கிடைக்கும் உணவுக்காக வந்து தவித்து நிற்கிறார்கள். இது லண்டணில் உள்ள சகல கோவில்களிலும் உள்ள நிலைமை. இவர்களே, இந்த கோவில்களில் உணவுக்காக வந்து அலைமோதும் பரிதாபம். இவர்கள் இரண்டு மாதத்தில் வேலை எடுத்து, அரசுக்கு வரி செலுத்தாவிடில், deport பண்ணப்படுவார்கள் என்ற சிக்கலும் உள்ளது. போனவாரம் இதேபோல ஒரு தமிழ் கடை வைத்திருக்கும் ஒருவர், இருவரை, ஆளாளுக்கு 25 லச்சம் வீதம் இறக்கி, வெளியே டெலிவரி வேலைக்கு விட்டிருக்கிறார். அங்கேயும் ஒரு இடத்தில் இமிகிரேசின் சுற்றி வளைத்து கைது செய்ததால், எதுவுமே இலகுவானதல்ல. இதனை நம்மவர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். *** அதேவேளை, ரெய்னர்ஸ் லேன் ரொட்டி ஹட் take away யில் ஒரு இலங்கை இஸ்லாமிய பெண்ணும், முன்னால் புதிதாக திறந்திருக்கும், சம்பல் take away யில் சிங்கள மாணவியும் வேலை செய்வது பார்க்க நன்றாக இருக்கிறது. சிங்கள மனைவி, இது எமது 9வது கிளை, 10வது விரைவில் வெம்பிளியில் என்று பெருமையாக சொன்னார். இலங்கையர் நிறுவனத்தில் வேலை செய்வது மிகப்பெருமை என்றும் சொன்னார்.
  6. இலண்டணில் வாழும் பெண், போலி மருத்துவரின் வீடீயோவை நம்பி சிக்கி, சீரழிந்திருக்கிறார். இவர் அமர்த்திய வக்கீல் தவறான ஆலோசணை வழங்கி, பணம் பறிக்க, அவரது உறவினர் சாட்டை மூலமாக வேறு வழக்கறிஞரை ஏற்பாடு செய்துள்ளார். அவர், தனது எல்லைக்குள், சொல்லக் கூடியவற்றை மட்டும் சொல்கிறார். ஒருவர் தத்தி என்கிறார், இன்னொருவர் திருப்பித் திருப்பி சொல்கிறார் என்கிறார். சினிமா மோகத்தில் இருக்கும், ரிக்ரொக், இன்ஸ்ரா வில் வரும் எமது அடுத்த தலைமுறையை இலக்கு வைத்து சினிமாவில் நடிக்க அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அழைத்தவர்கள் மோசடியாளர்கள். மருத்துவம், முக்கியமாக IVF treatment செய்வதாக அழைத்து ஏமாத்தி பணத்தைப் பிடுங்கி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். யாத்திரைக்குப் போன வியாபார தம்பதிகள் கடத்தப்பட்டு கப்பம் கேட்கப்பட்டு மீட்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பயணவிபரம் கடத்தியவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இது உங்கள் குடும்பத்துக்கும் நடக்கலாம். அது பற்றிய விழிப்புணர்வு வரவேண்டும் என்று ஒரு ஆதங்கத்தில் பதிந்தால், அவரவர் வந்து தமது வன்மங்களையும், விசமத்தனங்களையும் கொட்டுகின்றனர். இதனால், கருத்து வைப்பார்கள் என்று எதிர்பார்கக் கூடியவர்கள் கூட அயர்வுடன் கடந்து செல்கின்றனர். கடைசீல கவீ: நீங்களுமா?? இங்கே சொல்லப்படும் தீர்க்கமான செய்தி: தமிழகத்தில் வாழ்பவருக்கு யார் என்றே தெரியாத போலி வைத்தியர்கள், போலி சினிமா டைரக்டர்கள், போலி வியாபாரிகள், முக்கியமாக போலி யோசியர்கள், புலம் பெயர் தமிழர்களை யூரீயூப் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இலக்கு வைக்கின்றனர். இது குறித்து அவதானமாக இருங்கள். அடுத்தவர்களுக்கும் சொல்லுங்கள். நாளை உங்கள் உறவுக்கும் நடக்கலாம்!!
  7. சொல்லப்படுவதை விடுத்து, சொல்பவர் யார் என்று பார்த்து கருத்து வைப்பது, நமக்கு (ஈழப் பெண்ணுக்கு) மூக்குப் போணாலும், (செய்தி சொல்லும் ) எதிரிக்கு சகுணப் பிழையாகணும் கதை தானே!!
  8. அப்படியா? மீண்டும் தவறு செய்து அங்க போய் நிக்குதே? 🤔 அல்லது, பெண்ணுடனான தனிமை படத்தை வைச்சு காசு பறிக்கிறார்களோ? அதுவே தான். இதுக்குத் தான் வீடீயோவ பாருங்கோ எண்டு தல, தலயா அடிச்சுக் கொண்டன். ம்.... அடம் பிடிச்சாலும்.... பார்திட்டியள்!
  9. அம்புட்டு தான் விசயம். ஈழ பெண்ணுக்கு தேவை விவாகரத்து! அதை இழுக்காமல் கொடுத்தால், அது தன் வேலையை பார்த்து இன்னொரு கலியாணத்தை கட்டிக் கொண்டு போகும். பிழைக்கும். அதுக்கு மேலே, இவ்விடயத்தில், விசிக வோ, துரையோ அல்லது அவர்களின் தமிழக அரசியல் குறித்து நான் ஏன் அக்கறைப் பட வேணும்?
  10. அதை தானே சொல்கிறேன்... பார்க்காமல் கருத்து வைப்பதும், நக்கல், நளினம் செய்வதும், உடான்சார் வழக்கமல்ல. முழுவதும் பார்த்தால், அனுதாபமும், கோபமும் படுவீர்கள். சொல்பவர் வக்கீல். ஊடகம் தான் சாட்டை. பார்க்கப் பிடிக்காவிடில், நகருங்கோ, குறை ஒன்றும் இல்லை. நன்றி, வணக்கம்.
  11. இன்னும் பாக்கலீயா? பக்கத்த வீட்டு அல்லது தெரிஞ்ச பொம்பிளயா இருக்கலாமையா! 😢
  12. இன்னும் இதுக்குள்ள, உங்கள் அரசியலை கலக்குறீர்களா? உங்கள் கேள்விதான்? நீங்கள் திருந்த மாட்டீர்கள் போல? விக்கிரமன் என்கிற விசி பிரமுகர் குறித்து ஒரு பெண் கொடுத்த புகார், காத்து வாங்கிக் கொண்டிருப்பது தெரியுமா? இந்த கட்சி வீடியோக்களை கொண்டு வந்து ஓட்டும் வேலை விட்டு நீண்ட காலம். அது எனக்கு தேவையும் இல்லை. இங்கே ஒரு ஈழப்பெண் பாதிக்கப்பட்டிருக்கிறார். அரசியல் காரணமாக, அந்த பெண்ணுக்கு நீதி கிடைப்பதில் தடை உண்டாகிறது. அதனை வெளியே சொல்லி, அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்கள். பெண் சுத்து மாத்து குழுவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றால், செய்தி சொல்பவர்கள் சுத்துமாத்து என்கிறீர்கள். என்னத்தை சொல்வது? தவறான செய்தியை, 1 மில்லியன் பார்வையாளர் கொண்ட ஒரு சானல் தமிழக அரசுக்கு சொல்லி கோரிக்கை வைக்க முடியும் என்று நம்புவீர்களானால், உங்களை அந்த கர்த்தரும் காக்க முடியாதே. பேசுபரில் ஒருவர், அந்த பெண்ணின் வக்கீல். இதை யார் சொல்கிறார்கள் என்பதே உங்கள் கண்ணை மறைக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்டிருப்பது உங்கள் நாட்டு பெண் என்பது ஏன் உணரப்படவில்லை. 🤦‍♂️ மன்னிக்க வேண்டும், சிலவேளை அது ஒரு கிறித்தவ பெண்ணானால்... வெகுண்டு எழும்பி இருப்பீர்களோ? 😰
  13. பாரூங்கோ, பாரூங்கோ! வழக்கமா சொல்வது தான். அவசரப்படாதீங்கோ, அமைதி! உண்மையில், உங்களிடம் இருந்து எதிர்பாராததால், ஏமாற்றம்!!
  14. இன்னும் சடைஞ்சு கொண்டு நில்லாமல், அந்த பெண்ணுக்கு என்ன கொடுமை எல்லாம் நடந்திருக்கு எண்டு பார்த்திட்டு வாங்க. வேடிக்கைக்குரிய விடயமல்ல! இதுக்குள்ள இன்னுமொருவர்.... வழக்கம் போலவே தொடர்பில்லாமல் அலம்பறை பண்ணுறார். By the way, don’t shoot the messenger . Focus on the message!!
  15. இருவருமே வீடீயோ பார்க்காமல், இப்படி அநியாய அலம்பறை பண்ணுவது சகிக்கவில்லை. ஜஸ்டின் அய்யா, கர்த்தர் உங்களை ரட்சிக்க வேண்டும். மனிதாபமே இல்லா மனிதர் அய்யா! வீடீயோவை பார்த்து, சித்த வைத்திய சுத்துமாத்துக்கு அங்க போகாதீர்கள் என்று கருத்து வைப்பீர்கள் என்று பார்த்தால்... ??? அருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய் கதை தானா? குறைந்த பட்சம், பாதிக்கப்பட்டது ஈழப்பெண் என்பது கரிசணைக் குரியதல்லவா? சாட்டை, அந்த பெண்ணுக்காக, விவாகரத்து கேட்டு வாதாடும் வக்கீலை பேட்டி கண்டு, தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறார். இருவருமே பொய் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. தேவையும் இல்லை. இந்த மோசடி செய்தவரின் தம்பி விசி கட்சி என்பதால், செல்வாக்கினால் வழக்கு தாமதமாகிறது என்கிறார். யூரீயூப்பை பார்த்து ஏமாந்து போகும் பெண்களுக்கான எச்சரிக்கைக்காகவே பதிந்தேன். பலர், இங்கிருந்து IVF treatment எடுக்க என்று போய் போலிகளிடம் சிக்கி, பணமிழந்து, நம்பிக்கையும் இழந்து திரும்பியிருக்கின்றனர். அப்பன், நன்றி! உடான்சர், என்ன இதெல்லாம்?? 😢
  16. இந்த மாதிரி முழு முட்டாள் பெண்ணையும், அங்கே கூட்டிச்சென்ற தாயையும், ஊரில கொண்டு போய் விட்டு, பச்சை மட்டையால சாத்து போடவேணும் போல கோபம் வருகிறது.
  17. முப்பது வருசத்துக்குப் பிறகு போன ஆக்கள் முறையா கப்பல்ல போயிருக்கலாமே!! விதானையாரே மிரண்டிருப்பார்.
  18. வட இந்தியாவில், முக்கியமாக, கல்கத்தாவில் பிராமணர் மீன் சாப்பிடுவர். ஆகவே இது சங்கீ ஜடியா தான். 😂🤣
  19. கோத்தா, லாட்டரி விசா வரமுன்பே போய் விட்டார். அவருக்கு உதவியர் கிளி மகேந்திரன். மகாராஜா கம்பெனி சேர்மன்...
  20. அப்படி பொதுவா சொல்ல ஏலாது. போய் வேலைக்கு கடுமையா முயன்றார். குடும்பம் இங்க! தனிமை வேற. கையை கடிக்க, வந்தவர் மறுநாளே வேலை. அப்படியும் லீவு போட்டு இன்றவீயூ போனார். சரிவரவில்லை. சரத் பொன்சேகாவுக்கும் கிடைத்ததே!
  21. ஆம் 5 வருசம் + பாஸ்போட் வேறு குழம்பிவிட்டினம்
  22. எனது டாக்டர் நண்பருக்கு கிடைத்து, UK யில் இருந்து US போய், சோசியல் லைப் இல்லை என்று வந்து விட்டார். 5 வருடத்துக்கு பின்னர் போனபோது, இமிகிரேஷன் மடக்கிவிட்டார்கள். உன்னை டீபோர்ட் பண்ண சொல்லுது சிஸ்டம். எப்படி விமானத்தில் ஏறினாய் என்று கேட்டு அதகளம் பண்ணிவிட்டார்கள். இவர் கிறீன் கார்ட் எடுத்து, நாட்டினை விட்டு வெளியே போனவர், உள்ளே வரவில்லை என்று, அலெர்ட் flag போட்டு வைத்திருக்கிறார்கள். விசா கிடைத்த போது இலங்கை பாஸ்போர்ட், திரும்பிப் போனபோது பிரிட்டிஷ் பாஸ்ப்போர்ட் என்பது தான் டீபோர்ட் சிக்கலுக்கு காரணம் என்றார். பிறகு, எல்லாம் விசாரித்து, flag எடுத்து, கார்டினையும் பறித்து உள்ளே விட்டார்களாம்.
  23. இதனை பூட்டி விடுங்கள். பிழம்பின் செய்தியை பார்க்கவில்லை. @நிழலி
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.