Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபாகரனைப் பிடிக்க இந்தியா படைகளை அனுப்பியிருக்க வேண்டும் – முன்னாள் அமெரிக்க இராஜதந்திரி

Featured Replies

ராஜிவ்காந்தி படுகொலைக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொல்வதற்கு அல்லது உயிருடன் பிடிப்பதற்கு இந்தியா தனது படைகளை மீண்டும் சிறிலங்காவுக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் எழுதியுள்ள நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

‘சீனாவை அச்சுறுத்தும் கனவு, அமெரிக்காவின் கனவு: அடுத்த உலக சக்தியாக இந்தியா‘ என்ற நூலிலேயே அமெரிக்காவின் முன்னாள் இராஜதந்திரி வில்லியம் எச். அவெரி இவ்வாறு கூறியுள்ளார்.

பில் கிளின்ரன் மற்றும் ஜோர்ஜ் புஸ் நிர்வாகங்களில் இந்தியாவிலும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திலும் இவர் இராஜதந்திரியாகப் பணியாற்றியுள்ளார். அவர் தனது நூலில்,

“ராஜிவ்காந்தி படுகொலை இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்க சக்தி என்ற நிலை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கட்டாயமாக இந்தியாவுக்கு கொண்டு வந்து, நீதியின் முன்நிறுத்துவதன் மூலம், இந்தியா தனது அரசியல் தலைவர்களை தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும், தனது அரசியல் முறைகளை அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும், தெற்காசியாவில் எந்தவொரு சவால்களில் இருந்தும் பாதுகாக்கும் என்று பிராந்தியத்துக்கும் உலகத்துக்கும் தெளிவான செய்தி ஒன்றை சொல்லியிருக்கலாம்.

ராஜிவ்காந்தி படுகொலைக்குப் பின்னர், சிறிலங்காவில் தலையிடுவதற்கு இந்தியாவுக்கு கதவுகள் அகலத் திறந்திருந்தன.

1991ல் தனது முன்னாள் பிரதமர் ஒருவரை தீவிரவாத அமைப்பின் தாக்குதலில் இழந்த அவமானம், நவீன இந்திய வரலாற்றில் குறைத்து மதிப்பிட வைத்துள்ளது.

இந்தியா உறுதியான வெளிவிவகாரக் கொள்கையை - இராணுவ வல்லமையை கொண்டிருக்க வேண்டும்." என்றும் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20120401105905

  • கருத்துக்கள உறவுகள்

இதில இருந்து என்ன தெரியுது? :rolleyes:

இதில இருந்து என்ன தெரியுது? :rolleyes:

ராஜீவை உண்மையிலேயே போட்டது யாரென்று தெரிகிறது.

:D :D :D

ராஜீவை சிங்கள அணி வகுப்பில் தாக்கிய பொழுதே கொழும்பை இந்தியா கைப்பற்றி இருக்க வேண்டும்.

இந்த ராஜதந்திரிகளால்தான் அமெரிக்காவின் தென்கிழக்காசிய கொள்கைகள் படு தோல்வி கண்டது. மாலைதீவு, இந்தியா, இலங்கை, பங்களா தேஷ், பாகிஸ்த்தான் என்று எல்லாமேதான் தோல்வி. இப்பொது ஒபாமாவின் பின்னர்தான் அமெரிக்காவின் தென்கிழக்காசிய கூட்டம் உடைந்தது. இந்த காலத்தில் றிச்சாட் அமிர்தாஜையை தவிர உருப்படியான ஒரு ராஜதந்திரியும் இந்த பக்கம் வரவில்லை. கஸ்மீர், பாலுச்சிஸ்த்தான், ஈழம் என்று பல பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவந்தால்த்தான் அமெரிக்காவால் இந்த பக்கம் கால் ஊன்ற முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

1991ல் தனது முன்னாள் பிரதமர் ஒருவரை தீவிரவாத அமைப்பின் தாக்குதலில் இழந்த அவமானம், நவீன இந்திய வரலாற்றில் குறைத்து மதிப்பிட வைத்துள்ளது.

அதனால்தான் தேசியத்தலைவரை பிடிக்கவோ அல்லது முடிந்தால் ஏதாவது செய்ய பலதடவைகள் முயற்சித்தும் தொல்விகண்டிருன்தது அதற்காக பல முயற்சிகள் ..... அதில் சில உடுவல் தாக்குதல் முயற்சி எதுவும் சரிவரத நிலையில்தான் சிங்களத்துக்கு பாரிய உதவி வழங்கியது ...... அதுவும் மறைமுகமாக தொல்வியினையே சர்வதேச மட்டத்தில் கொடுத்துள்ளது!

இந்தக் கட்டுரை ஏன் இப்போது வரவேண்டும் என்று புரியவில்லை. இதில் குறிப்பிடும் இரு தலைவர்களும் இன்று இல்லை.

மேலும் இந்த (இராச) தந்திரிக்கு புலிகள் பற்றியோ அதன் தலைமை பற்றியோ அல்லது புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருந்த புரிதல்கள் பற்றியோ எதுவுமே தெரியவில்லை என எண்ணத் தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய காட்டுமிராண்டி சமாதான படையின் அட்டுழியங்கள் பற்றி கேள்விப்பட்டபோது ............

(சுய தணிக்கை செய்யப்பட்டுள்ளது)

Edited by vanangaamudi

420571_184584591656037_100003134929408_291564_802513151_n.jpg
561306_10150785684812931_566077930_9530259_416672515_n.jpg

இவர் மாரித் தவக்கை சுப்ரமணியசாமியின் நெருங்கிய நண்பரோ? அல்லது ரஷிய கையாளோ?

யார் யாரோ செய்யும் கொலைகளை புலிகளின் தலையில் போட்டு தப்பும் கேடிகள் எல்லா நாட்டிலும் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.