Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடியத் தலைநகரில் - தமிழர்களை நோக்கி அணிவகுத்த கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிங்கள், நீங்கள் தான் என்பது விடுதலைப்புலிகளின் தலைச்செயலகத்தின் அரசியல் பிரிவினர் என்று கூறாமல் கூறுவது எமக்கு புரிகிறது!!! .. இதற்குதானே நா.க.த.அ இருக்கிறது!! யார் இயக்குகிறார்கள்? எவர் எவர் இதன் பின் புலம் இருக்கிறார்கள்?? ... என ஆயிரம் கேள்விகள் கேட்க்கப்பட்டும் பதில்கள் இன்றுவரை இல்லை!!!

பதில் கேட்டு அதனை என்ன.. சிங்களவனுக்கு கடத்தப் போறீங்களா..! உங்களுக்குத்தானே எதிலும் நம்பிக்கை இல்லையே. பிறகெதற்கு.. கேள்வி.. பதில் எதிர்பார்க்கிறீங்களோ..??! எதிலும் நம்பிக்கை இல்லாதவங்களுக்கு பதில் அளிப்பதும் முட்டாள் தனம்..! :lol:

... இங்கு நா.க.த.அ இன் பிரச்சார பீரங்கியான GTV நிர்வாகம், யமனுக்கு ஆப்படித்த கேபியுடன் தொடர்புகளை வைத்திருக்கிறதென்று ஆதாரங்களுடன், ஒரு பேப்பர் செய்தி வெளியிட்டது!!!!! ... அச்செய்தி பொய்யாயின், ஏன் வழக்கு வைக்கவில்லை?

இதை நீங்கள் ஜி ரி வி நிர்வாகத்திடம் போன் போட்டுக் கேளுங்கோ..! ஒரு பேப்பர் வழக்குப் போட செய்தி போடவில்லை. இப்படியும் நடக்கிறதா என்ற கேள்வியை மக்களிடம் கொண்டு வந்தது. அதற்கான பதிலை ஜி ரி வி செயலில் காட்டி விட்டது. ஏமாந்தது நீங்கள்..! ஊரல்ல..! :lol:

  • Replies 83
  • Views 4.2k
  • Created
  • Last Reply

பீரிஸ், மகிந்த என்ன இந்தியாவும் நா.க.த.அ வை ஆகா ஓகோ என்று புகழும்!! ஏனெனின் அப்ப தான் நெடுக்கர் போன்ற நாலு அறிவாளிகள், ஓகோ ஆகா அவர்கள் வெட்டுகிறார்கள் புடுங்குகிறார்கள் என பின் நிற்பார்கள்/செல்வார்கள்! ... அவர்கள் நினைப்பது என்ன அவர்களின் சிந்தனை செயல் வடிவம் பெறும்!!

பி.கு: இங்கு நெடுக்கர் போன்ற அறிவாளிகள் என்பது விளங்கக்கூடியதே!

  • கருத்துக்கள உறவுகள்

பீரிஸ், மகிந்த என்ன இந்தியாவும் நா.க.த.அ வை ஆகா ஓகோ என்று புகழும்!! ஏனெனின் அப்ப தான் நெடுக்கர் போன்ற நாலு அறிவாளிகள், ஓகோ ஆகா அவர்கள் வெட்டுகிறார்கள் புடுங்குகிறார்கள் என பின் நிற்பார்கள்/செல்வார்கள்! ... அவர்கள் நினைப்பது என்ன அவர்களின் சிந்தனை செயல் வடிவம் பெறும்!!

பி.கு: இங்கு நெடுக்கர் போன்ற அறிவாளிகள் என்பது விளங்கக்கூடியதே!

அவர்கள் வெட்டுகிறார்களோ.. புடுங்கிறார்களோ.. நாட்டுக்காக எதையாவது மக்களுக்கு பாதிப்பில்லாமல் செய்கிறார்களே. அதுபோதும். உங்களை மாதிரி எல்லாத்தையும் குழப்படி அடிக்கல்லையே..! போராளிகளின் தியாகங்களைக் கூட உங்களின் சுயநலத்திற்காக கொச்சைப்படுத்தக் கூடிய இழிவான சிந்தனைகளை உங்களிடம் காண்கிறேன். இது வெட்கக் கேடானது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

... இன்று மேற்குலகின் சிறிலங்கா தொடர்பான மாற்றம் எமக்காவல்ல .. அவர்களின் இராணுவ அரசியல் நலன் சார்ந்தது! .. நாளை கூட சிங்களம் மேற்கின் கால்களில் விழுந்தால், சிலவேளை மேற்கின் நிலைப்பாடு மாறலாம் ... இப்போது கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும், அதன் மூலம் செய்யக்கூடியதை செய்ய வேண்டும்! .. தற்போது யார் குற்றியும் அரிசியாகட்டும், அதனை குழப்ப வேண்டாம்!

... கனடா,கடந்த காலங்களில் சிங்கள இனவழிப்புக்கு மற்றய நாடுகள் போல் ... அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், அவுஸ்ரேலியா ... ஆயுதங்களும், பணமும், ஆலோசனைகளும் வழங்கியது. ஓ ஓ இவர்கள் எம்மை அழிக்க துணை போனார்கள், உங்கள் உதவிகள் எமக்கு எப்பவும் தேவையில்லை என்று கூட ... குளத்தை கோபித்துப்போட்டு, *** கழுவாமல் இருக்க இருப்பது போல் ... உந்த கூட்டங்களும் வேண்டாம்? ஆதரவும் வேண்டாம்? நாமே வெட்டுவம், விழுத்துவம் என்றும் இருக்கலாம்!!!????

அவர்கள் வெட்டுகிறார்களோ.. புடுங்கிறார்களோ.. நாட்டுக்காக எதையாவது மக்களுக்கு பாதிப்பில்லாமல் செய்கிறார்களே. அதுபோதும். உங்களை மாதிரி எல்லாத்தையும் குழப்படி அடிக்கல்லையே..! போராளிகளின் தியாகங்களைக் கூட உங்களின் சுயநலத்திற்காக கொச்சைப்படுத்தக் கூடிய இழிவான சிந்தனைகளை உங்களிடம் காண்கிறேன். இது வெட்கக் கேடானது..! :icon_idea:

அண்ணை நெடுக்கர் ... நீங்கள் தியாகம் என்பது ... கடந்த மாவீரர் நாள், அதற்கு முன் ஆடியதை கூறுகிறீர்களா?????

  • கருத்துக்கள உறவுகள்

... இன்று மேற்குலகின் சிறிலங்கா தொடர்பான மாற்றம் எமக்காவல்ல .. அவர்களின் இராணுவ அரசியல் நலன் சார்ந்தது! .. நாளை கூட சிங்களம் மேற்கின் கால்களில் விழுந்தால், சிலவேளை மேற்கின் நிலைப்பாடு மாறலாம் ... இப்போது கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும், அதன் மூலம் செய்யக்கூடியதை செய்ய வேண்டும்! .. தற்போது யார் குற்றியும் அரிசியாகட்டும், அதனை குழப்ப வேண்டாம்!

... கனடா,கடந்த காலங்களில் சிங்கள இனவழிப்புக்கு மற்றய நாடுகள் போல் ... அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், அவுஸ்ரேலியா ... ஆயுதங்களும், பணமும், ஆலோசனைகளும் வழங்கியது. ஓ ஓ இவர்கள் எம்மை அழிக்க துணை போனார்கள், உங்கள் உதவிகள் எமக்கு எப்பவும் தேவையில்லை என்று கூட ... குளத்தை கோபித்துப்போட்டு, *** கழுவாமல் இருக்க இருப்பது போல் ... உந்த கூட்டங்களும் வேண்டாம்? ஆதரவும் வேண்டாம்? நாமே வெட்டுவம், விழுத்துவம் என்றும் இருக்கலாம்!!!????

அண்ணை நெடுக்கர் ... நீங்கள் தியாகம் என்பது ... கடந்த மாவீரர் நாள், அதற்கு முன் ஆடியதை கூறுகிறீர்களா?????

மாவீரர்கள்.. தேசியக் கொடி.. தேசியம்.. தமிழீழம்.. தமிழர்கள்.. இவை தொடர்பில் உங்களோடு கருத்தாடுவது.. அநாகரிமானதாகவே தென்படுகிறது. உங்களுக்கும் இவற்றிற்கும் வெகு தூரம். பொறுமையாக பதிலிறுக்க முடியாதவர்கள்.. போர்த்திக்கிட்டு சுருண்டு தூங்குவது நல்லது.

உங்களோடு இதற்கு மேல் கருத்தாட நீங்கள் இராஜதந்திரியும் அல்ல.. நான்.. நாடு கடந்த அரசின் பிரதமரும் அல்ல..! அது அது தன்பாட்டில இயங்கிக் கிட்டு தான் இருக்கும். நீங்கள் திட்டிக்கொண்டே கிடவுங்கோ..!

நன்றி. :)

Edited by nedukkalapoovan

திரி அமிகொஸ் கூட்டத்தில் வைத்து ஒபாமா ஸ்டீபன் கார்பரிடம் கேட்டாராம் "உங்களுக்கு நன்றி தெரிவிக்க தமிழர்கள் ஒட்டாவா வருகின்றார்கள் ,நீங்கள் ஏன் அங்கு போகாமல் இங்கு வந்தீர்கள் என்று "

கார்பர் சொன்னாராம் "அவங்க ரொம்ப நல்லவங்க ,சாதுவானவங்க ,வம்பு தும்பிற்கு போகாதவங்க ,என்ரை நிலையை புரிஞ்சு கொள்ளுவாங்க" என்றபடியால தான் இங்கு வந்தனான் .இருந்தாலும் அங்கு அவர்களின் ஒரு ஆய்வாளன் இருக்கின்றான் அவனுக்கு திரும்பி போய் sorry சொல்லவேண்டும் இல்லாவிட்டால் முழு தமிழரின் வாக்கையும் எனக்கு எதிராக திசை திருப்பிவிடுவான் .அப்புறம் அடுத்த தேர்தலுக்கு பின் நான் மொட்டைதான் போடவேண்டும்.

முதலாவது விடயம். எல்லோரும் குழப்பிக் கொள்ளுகின்றீர்கள் போலுள்ளது. தேசியக் கொடி பிடித்தல், பிடிக்காமல் இருத்தல் பற்றியதான தலைப்பு இதுவல்ல. தேசியக் கொடி பிடிக்க வேண்டியதை நானே பல தடவை இங்கே வலியுறுத்திக் கூறியுமுள்ளேன். அது எங்களின் அடையாளம் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால், முன்பு 2009களில் யுத்தம் நடந்தபோது, மக்களின் படுகொலைகளை நிறுத்த வேண்டிய தருணத்தில் கொடி தொடர்பாக பிரச்சனைகளை முதன்மைப் பிரச்சனையாக உருவாக்கி தங்களை மட்டுமே விடுதலைப் போராட்டத்திற்கான விசுவாசத் தளம் என்றும், கொடி பிடிக்காத மற்றவர்கள் துரோகிகள் என்றும், அவர்களின் சொத்துக்களுக்கு சேதாரம் ஏற்படுத்தியதுமான செயற்பாடுகளின் அடிப்படையில், கடந்த ஒட்டாவா நன்றி கூறலின் போது கொடி பிடிக்காத இவர்கள் எப்படித் துரோகிகள் ஆகவில்லை என்பதே கேள்வி.

அது தான் இங்கு கேட்க முனைந்ததே தவிர, மற்றும்படி எவ்விதத்திலும் தேசியக் கொடி தொடர்பான விவாதமாக இருக்கவில்லை. அது இக்காலத்தில் தேவையுமற்றது.

தூயவனின் கருத்தே எனதும். 2009இல், எமது ஆர்ப்பாட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்தபோது, அவர்கள் வரமறுத்ததற்கான காரணமே தாங்கள் "புலி முத்திரை" குத்தப்பட்டுவிடுவோம் என்பதுதான். அதனால்தான் அவர்கள் தேசியக் கொடியைத் தவிர்க்கச் சொல்லியிருந்தார்கள். ஆனால், அன்று அப்படிச் சொன்னவர்களைத் துரோகியாக்கிவிட்டு இன்று அவர்களே முற்றாக தேசியக் கொடியினைத் தவிர்த்து வருகிறார்கள். அப்படியானால், இப்போது இவர்களும் துரோகிகள்தானே? அவர்களது நிகழ்வுகளில் தேசியக் கொடி இருப்பதில்லை. அலுவலகத்திலாவது இருக்கிறதா என்பதும் சந்தேகமே. யாராவது உறுதிப்படுத்த முடியுமானால் உறுதிப் படுத்துங்கள்.

இன்று தமிழ் மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்ற தமிழ் எம்.பி.யான ராதிகா சிற்சபைஈசன்கூடத் "தமிழீழம்" என்ற சொல்லைத் தவிர்த்து வருகிறார். இதற்கு வாழும் புலம் பகுதியில் அகூதா கொடுத்த விளக்கத்தைப் பாருங்கள். அப்படிப் பார்க்கும்போது, இவர்களைப் பொறுத்தவரையில் ராதிகாவும் துரோகியாகத்தான் பார்க்கப்படவேண்டும். ஆனால், தங்கள் நிகழ்வுகளில் இவரை முன்னிலைப்படுத்தியே வருகிறார்கள்.

ராஜ்குமார் சுப்பிரமணியம் அவர்களுக்கு,

நீங்கள் ஒரு அரசியல்வாதியாகவோ அல்லது மனிதஉரிமைகள் ஆர்வலராகவோ அங்கு சென்றிருந்தால் பயன் இருந்திருக்கும். நீங்கள் ஒரு தமிழ் அமைப்பின் பிரதிநிதி மட்டுமே. அத்தோடு, உங்களின் நுழைவுச்சீட்டு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியைக் கொண்டது. அந்த அனுமதியுடன் அங்கு சாதிப்பதும் மட்டுப்படுத்தப்பட்டதே. உங்களின் இந்தத் தகுதி எத்தகைய பலனைத் தரும் என்று வாசகர்களே தீர்மானிக்கட்டும். இதன்மூலம் நீங்கள் சாதித்ததின் அளவையும் கணக்கில் எடுத்துப் பாருங்கள்.

இதே வேளை, கனேடியத் தமிழ் காங்கிரசிலும் அரசியல் தெரிந்தவர்கள், மனிதஉரிமைகள் பற்றி அறிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களிடம் பேச்சு வல்லமையும் நிறைய உண்டு. அவர்கள் நினைத்திருந்தால் நீங்கள் பெற்றுக் கொண்ட அதே நுழைவுச் சீட்டுடன் அவர்களும் அங்கு சென்றிருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் யாரும் ஜெனிவாவிற்குச் செல்ல முயற்சிக்கவில்லை. ஏனெனில் இந்த நுழைவுச் சீட்டுடன் அவர்கள் சென்று சாதிப்பதை விட அந்தத் துறையிலுள்ளவர்களை அனுப்பினால் அதிக பலனைத் தரும் என அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அதனால்தான், அந்த துறையைச் சார்ந்தவர்களையே அனுப்பி வைத்தார்கள். நான் உங்களின் தனிப்பட்ட தகுதியைப் பற்றி இந்தக் கருத்துக்களத்தில் குறிப்பிடவில்லை என்பதை இந்த விளக்கத்திற்குப் பின்னராவது விளங்கிக் கொள்ளுங்கள். அது எனக்குத் தேவையுமற்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கொடியை பிடிக்கக்கூடாது என்பார்கள் நாளை நாம் கடந்த முப்பது ஆண்டு காலப்போரட்டம் தவறு என்பார்கள் இவைகளை இன்று அனுமதித்தால் நாளை மறுநாள் கூறினாலும் கூறுவார்கள் எமது மாவீரர்கள் மடிந்ததும் தவறு இப்படியே எல்லாவற்றையும் தவறு என்றுகூறி நாம் எந்த இலக்கை அடைவதக்காக பயனித்தாமோ அதுவே தவறு என்று சொல்லி தங்களின் கருத்தை எம்மீது திணிக்கவும் முயற்சிப்பார்கள்.

என்னைபொறுத்தவரை எந்த கொடியுடன் என்ன இலட்சியத்துக்காக புறப்பட்டோமோ அதில் இருந்து விலகிச்செல்வதென்பது எங்களை நம்பி தங்கள் உயிரை துறந்த மாவீரகளுக்கு செய்யும் துரோகமாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரி அமிகொஸ் கூட்டத்தில் வைத்து ஒபாமா ஸ்டீபன் கார்பரிடம் கேட்டாராம் "உங்களுக்கு நன்றி தெரிவிக்க தமிழர்கள் ஒட்டாவா வருகின்றார்கள் ,நீங்கள் ஏன் அங்கு போகாமல் இங்கு வந்தீர்கள் என்று "

கார்பர் சொன்னாராம் "அவங்க ரொம்ப நல்லவங்க ,சாதுவானவங்க ,வம்பு தும்பிற்கு போகாதவங்க ,என்ரை நிலையை புரிஞ்சு கொள்ளுவாங்க" என்றபடியால தான் இங்கு வந்தனான் .இருந்தாலும் அங்கு அவர்களின் ஒரு  ஆய்வாளன் இருக்கின்றான் அவனுக்கு திரும்பி போய் sorry சொல்லவேண்டும்  இல்லாவிட்டால் முழு தமிழரின் வாக்கையும் எனக்கு எதிராக திசை திருப்பிவிடுவான் .அப்புறம் அடுத்த தேர்தலுக்கு பின் நான் மொட்டைதான் போடவேண்டும்.

ஐயா! இப்படி இந்த விவகாரங்கள் எல்லாம் உங்கள் காதுக்குள் போட்டு முன்னோட்டம் பார்த்த பிறகுதான் இவர்கள் கதைப்பார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.