Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னும் - ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும்

வ.ஐ.ச.ஜெயபாலன்

இயற்க்கையின் மயானமாய் விரியும்

சென்னை நடுகற் காட்டில்

அணில்களின் ஒப்பாரியும்

பெருகிக் கொழுத்த காக்கைகளின் பாடலும்

நிறைகிற மாலைப் பொழுது.

இன்னும் பூந் தென்றல்

பெற்றோல் புகை அமுங்க கமழவது மகிழ்ச்சி..

இன்னும் வங்கக் கடலிருந்து

ஒரு தாய் ஆமை

சென்னையில் கரை எறுவது நம்பிக்கை... .

.

இன்னும் எஞ்சியிருந்த அணில்கள்

காகத்திடம் தங்கள்

கடைசிக் குஞ்சையும் இழக்கும் அச்சத்தில்

ஓலமிட்டுக் கொண்டிருக்கிற நாட்களில்

ஒரு கையாலாகாத கவிஞனாய் தவிக்கிறேன்.

காதல் இழப்புமட்டுமே சோகமல்ல என்பதை உணர்ந்தபடி..

மொட்டைக் கூரைகளில்

சுவர் நசித்த மரங்களில்

குப்பை மேடுகள் வளரும் தெருக்களில்

கோடா கோடிக் கருஞ் சிலந்திகளாய்

நூல் இறங்கி ஊர ஆரம்பிக்கிறது இருள்

கவிஞர்களுக்கு அரசவைகள் திறக்காத

நூற்றாண்டில்

ஒரு கனவிலாவது காணவேண்டும்.

சிட்டுக்குருவியின் வருகையை

சோகத்தின் வரிகளும் அதற்கு வடித்த உவமையும் அருமை..

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எஞ்சியிருந்த அணில்கள்

காகத்திடம் தங்கள்

கடைசிக் குஞ்சையும் இழக்கும் அச்சத்தில்

ஓலமிட்டுக் கொண்டிருக்கிற நாட்களில்

ஒரு கையாலாகாத கவிஞனாய் தவிக்கிறேன்.

காதல் இழப்புமட்டுமே சோகமல்ல என்பதை உணர்ந்தபடி..

ஒவ்வொரு காலங்களிலும் ஒவ்வொரு இழப்புக்களின் வலிகள் மனதைப் பிழியும்...இளமைக்காலங்களில் பால்ய காலங்களின் இழப்பு பெரும் சோகமாய் மனதில் வழியும்....முதுமை இளமையைக் காலத்தையும்,பால்ய காலத்தையும் நினைத்து அழும்.."காதல் இழப்புமட்டுமே சோகமல்ல..."உண்மையான வரிகள் கவிஞரே...

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எஞ்சியிருந்த அணில்கள்

காகத்திடம் தங்கள்

கடைசிக் குஞ்சையும் இழக்கும் அச்சத்தில்

ஓலமிட்டுக் கொண்டிருக்கிற நாட்களில்

ஒரு கையாலாகாத கவிஞனாய் தவிக்கிறேன்.

இயலாமையை "சுரீர்" என்று உறைக்க வைக்கும் வரிகள்..

காதல் இழப்புமட்டுமே சோகமல்ல என்பதை உணர்ந்தபடி..

ஒரு கனவிலாவது காணவேண்டும்.

சிட்டுக்குருவியின் வருகையை

ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும், வலிகளையும் இழப்புக்களையும் மட்டுமே.... எம் எழுத்துக்களிலும் வரிக்கவேண்டிய துரதிஷ்டமானவர்களாகவே நாங்கள் இப்பொழுது இருக்கின்றோம்!

நிழல்போல பதியும் எழுத்துக்களை இரசிப்பவர்களுக்கு... நிழலுக்குரிய உயிரின் உண்மையான வலிகளை புரிந்துகொள்ள முடிவதில்லை.

இறுதியாக நான் எழுதிய "வயது வந்தவர்களுக்கு மட்டும்" என்ற கவிதையினை வாசிப்போரிற்கு.... இவன் திண்டு தினவெடுத்த கொழுப்பில எழுதியிருக்கிறான் எண்டு நிறையப்பேருக்கு யோசிக்கத் தோன்றியிருக்கும். ஆனால் "என்ன என்னத்துக்காகவோ" வாழ்க்கையையும் இளமையையும் தொலைத்துக்கொண்டிருக்கும் ஒரு கவிதையின் வலிகளை அதில் புரிந்துகொண்டிருக்க மாட்டார்கள்!

அவரவர்க்கு அவரவரின் வலிகள்...! :( இதுதான் இப்பொழுது எங்கும் உள்ள நிலைமை! ஒருவகையில் சிந்தித்தால்... அது அவர்களது தப்பு இல்லை என்றுகூடச் சொல்லலாம்!

கவிஞரே! எம் வலிகளை உணர்ந்துகொள்ளக்கூடிய பக்குவமானவர்கள் மிகக் குறைவு என்பதனை உணர்ந்தாலும்... எழுதிக்கொண்டே இருங்கள்!

அவர்களும் ஒருநாள் வலிகளை சந்திக்கும்போதுதான் அவரவர்க்கு அது புரியும்!

எல்லோருடைய வாழ்க்கையும் எப்பொழுதும் ஒரே மாதிரியே இருந்துவிடுவதில்லை என்பது நியமான நியதி!

மாறும் சூழ்நிலைகள் எல்லாவற்றையும் மாற்றியமைக்கும்!

வலிகளை ஆழமாக உணர்த்தி நிற்கும் கவிதை!

ஏதோ ஒரு சடுதியான நிகழ்வின் பாதிப்பு.... திரும்பவும், உங்களை வருத்தியிருக்கின்றது என நினைக்கின்றேன்!

தங்களின் மனவுணர்வுகளை கவிதை வரிகளாய் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிகள் கவிஞரே!

Edited by கவிதை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வலிகளோடு கவிதை அருமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.