Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கு எதிராக பேசுவதற்காக ஜெனீவா போகவில்லை: அமைச்சர் ஹக்கீம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடம் கோபமோ பகையோ எமக்கு இல்லை - இலங்கை.

முழுக்கோபம் ஆனால் இப்படித்தான் அறிக்கை விடுவார்கள்.

தமிழரது சுபீட்சத்துக்காகவும் ஈழத்தில் வாழும் தமிழர்கள் முஸ்லிம் மலையக தமிழர்கள் கரையோரவேடர்களது விடுதலைக்காக இன்று அடக்கி வாசிக்க வேண்டிய விடயங்களை அடக்கியே வாசிப்பேன். சிங்கள ஆழும் வர்கத்தைத் தவிர வேறு யாரும் எம் எதிரிகள் இல்லை என்பதை உரத்துச் சொல்வேன்.-பொயட்.

இதை விளங்காத வரை எமக்கு விடுதலை ரொம்ப கஷ்டம்,

நாம் வீரபாண்டிய கட்ட பொம்மன் பரம்பரை , தலை போனாலும் அனைத்து தமிழன் அழிந்தாலும் பரவாயில்லை இறுதி மூச்சுவரை வீர வசனம் பேசுவோம்.உலகமே எதிர்த்தாலும் தனிய நின்று தனிநாடு அமைத்தே தீருவோம் ஹா-- ஹா-- ஹா.

மீசை வேறு துடிக்கின்றது.கிளம்பிட்டாங்கள் புலிகேசிகள்.

முஸ்லிம் மக்களை எதிர்க்கவில்லை. சுயநலம் மிக்க முஸ்லிம் தலைவர்களை தான் எதிர்க்கிறோம்.இப்படியான முஸ்லிம் தலைவர்கள் தான் சிங்களவர்களுக்கு தேவை.ஹக்கீமுக்கு கொடுக்கப்பட்ட பதவி நீதி அமைச்சர்.அதாவது பல தமிழர்கள் (போராளிகள் உட்பட) சிறையில் வாடும் போது எங்கு இருக்கிறார்கள் என்று அறிய முடியாமல் தமிழ மக்கள் நாய் பேயாய் அலைகிறார்கள்.நீதி அமைச்சர் என்ன செய்தார்? இப்போ ஜெனிவாவில் தமிழருக்கு எதிராக பேசவில்லை என கதை விடுகிறார்.ஏற்கனவே தமிழருக்கு என்ன செய்கிறார் நீதி அமைச்சராக என்று அவரது செயலே சொல்கிறதே.சரணடைந்த போராளிகள் பற்றி இன்று வரை வாய் திறந்தாரா??.

சிங்களவர் இவரை அமைச்சராக்குவதன் மூலம் பல ஆதாயங்களை தேடுகிறார்கள்.

1.தமிழ் மக்கள் காணாமல் போனவர்கள்/சரணடைந்தவர்கள் பற்றி கேள்வி கேட்கும் போது அமைச்சர் முஸ்லிமாக இருப்பதால் தமிழர்கள் முஸ்லிம்களை வெறுக்க வைக்கிறார்கள்.

2.முஸ்லிம் நாடுகளுக்கு இவரின் மூலம் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தல்.

கிழக்கில் எத்தனை தமிழ் கிராமங்கள் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்டுள்ளன.இதனைப்பற்றி ஏன் ஒரு முஸ்லிம் தலைவரோ அல்லது மதத்தலைவரோ பேசவில்லை? ஆக விடுதலை புலிகள் முஸ்லிம் மக்களை யாழை விட்டு விரட்டிய போது குய்யோ முறையோ என்று கத்திய உங்களை போன்றவர்கள் தமிழ் மக்களுக்கு முஸ்லிம்களால் அக்கிரமம் நடந்த போது ஏன் கேள்வி கேட்கவில்லை.

  • Replies 56
  • Views 4k
  • Created
  • Last Reply

தமிழின விரோதிகளான போர்க்குற்றவாளிகள், தமிழர் சொத்துக்களை அபகரிக்கும் காமுகர்கள், கடத்தல்காரர்கள், கொலைகாரர்கள், கப்பக்காரர்கள், சந்தர்ப்பவாதிகள், எல்லோரையும் அனைத்துச் செல்லவேண்டும், இணக்க அரசியல் செய்ய வேண்டும் என்று ஒரு கும்பல் கிளம்பியிருக்கு.

பிரபாகரனின் வெற்றுடல் தமிழீழத்தை பெற்றுதரும் என நம்பும் புலம்பெயர் தமிழர்கள் – மருதமுனையில் ஹக்கீம்!

உயிருடன் இருந்த பிரபாகரனால் தமிழீழத்தைப் பெற்றுத் தர முடியவில்லை. அவரின் வெற்றுடல் தமிழீழத்தை பெற்றுத் தர இருப்பதாக புலம்பெயர் தமிழர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். மருதமுனையில் தபால் நிலையத்திற்கான புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழர்களுக்கு நண்பர்கள் யார்? எதிகள் யாரென்று தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் தோல்வியை ஒருவரின் தலையில் சுமத்துவதற்கு ஆள் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். ஜெனீவாவில் அரபு நாடுகளின் ஆதரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்குப் பெற்றுக் கொடுப்பதற்கு ரவூப் ஹக்கீம் முக்கிய பங்காற்றினார் என்று தெரிவித்து புலம்பெயர் தமிழர்கள் என் மீது மிகப் பெரிய விமர்சனங்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

கொழும்பில் நடைபெற்ற கம்பன் விழாவில் தொடக்கவுரையாற்றுவதற்கு ஏற்பாட்டாளர்கள் என்னை அழைத்த போது, தமிழர்களுக்கு எதிராக ஜெனீவா விடயத்தில் செயற்பட்ட ரவூப் ஹக்கீம் கம்பன் விழாவில் உரையாற்றுவதா, அந்த விழாவினை தமிழர்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென்று புலம் பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.

ரவூப் ஹக்கீமை மட்டும் அவர்கள் விமர்சனம் செய்யவில்லை. கூடவே கம்பனுக்கும் இராமனுக்கும் ஏசினார்கள். கம்பராமாயணம் ஆபாசமானது, அசிங்கமானது என்றெல்லாம் தெவித்தார்கள். புலம் பெயர் தமிழர்களுக்கு தங்களது நண்பன் யார், எதிரி யாரென்று தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் தோல்வியை ஒருவரின் தலையில் சுமத்த வேண்டுமென்பதற்காக ஆள் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களின் ஆள் தேடும் விடயத்தில் நான் மட்டுமல்ல, நண்பர் சுமந்திரனும் பலியாகியுள்ளார். தமிழர்களுக்கு தலைமைத்துவம் கொடுப்பதற்கு தகுதியுடையவராகக் கருதப்படும் சுமந்திரனின் கொடும்பாவி யாழ். பல்கலைக்கழகத்தில் எரிக்கப்பட்டது.

ஜெனிவாவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பங்குபற்றாது இருந்தமை சிறந்த இராஜதந்திரமாகவே நான் பார்க்கின்றேன். அவசரப்பட்டு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படுகின்ற தீர்மானத்தால் எதிர்பார்க்கப்படும் நோக்கத்தை அடைய முடியாது. இதனால் சிறுபான்மையினர் பிரச்சினைகளுக்குய தீர்வுகளை துருவப்படுத்தப் போகின்றது என்றுதான் ஜெனீவாவில் கூறினோம். அதுதான் இன்று நடந்துள்ளது.

இரண்டு பக்கங்களிலும் தீவிரவாதப் போக்குடையவர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள்தான் எல்லாவற்றையும் கண் முடித்தனமாக எதிர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். உயிருடன் இருந்த பிரபாகரனால் தமிழீழத்தை பெற்றுத் தர டியவில்லை. அவரின் வெற்றுடல் அதனை பெற்றுத் தர இருப்பதாக புலம்பெயர் தமிழர்கள் கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

http://www.thinakkathir.com/?p=34083

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனின் வெற்றுடல் தமிழீழத்தை பெற்றுதரும் என நம்பும் புலம்பெயர் தமிழர்கள் – மருதமுனையில் ஹக்கீம்!

உயிருடன் இருந்த பிரபாகரனால் தமிழீழத்தைப் பெற்றுத் தர முடியவில்லை. அவரின் வெற்றுடல் தமிழீழத்தை பெற்றுத் தர இருப்பதாக புலம்பெயர் தமிழர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். மருதமுனையில் தபால் நிலையத்திற்கான புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழர்களுக்கு நண்பர்கள் யார்? எதிகள் யாரென்று தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் தோல்வியை ஒருவரின் தலையில் சுமத்துவதற்கு ஆள் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். ஜெனீவாவில் அரபு நாடுகளின் ஆதரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்குப் பெற்றுக் கொடுப்பதற்கு ரவூப் ஹக்கீம் முக்கிய பங்காற்றினார் என்று தெரிவித்து புலம்பெயர் தமிழர்கள் என் மீது மிகப் பெரிய விமர்சனங்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

கொழும்பில் நடைபெற்ற கம்பன் விழாவில் தொடக்கவுரையாற்றுவதற்கு ஏற்பாட்டாளர்கள் என்னை அழைத்த போது, தமிழர்களுக்கு எதிராக ஜெனீவா விடயத்தில் செயற்பட்ட ரவூப் ஹக்கீம் கம்பன் விழாவில் உரையாற்றுவதா, அந்த விழாவினை தமிழர்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென்று புலம் பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.

ரவூப் ஹக்கீமை மட்டும் அவர்கள் விமர்சனம் செய்யவில்லை. கூடவே கம்பனுக்கும் இராமனுக்கும் ஏசினார்கள். கம்பராமாயணம் ஆபாசமானது, அசிங்கமானது என்றெல்லாம் தெவித்தார்கள். புலம் பெயர் தமிழர்களுக்கு தங்களது நண்பன் யார், எதிரி யாரென்று தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் தோல்வியை ஒருவரின் தலையில் சுமத்த வேண்டுமென்பதற்காக ஆள் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களின் ஆள் தேடும் விடயத்தில் நான் மட்டுமல்ல, நண்பர் சுமந்திரனும் பலியாகியுள்ளார். தமிழர்களுக்கு தலைமைத்துவம் கொடுப்பதற்கு தகுதியுடையவராகக் கருதப்படும் சுமந்திரனின் கொடும்பாவி யாழ். பல்கலைக்கழகத்தில் எரிக்கப்பட்டது.

ஜெனிவாவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பங்குபற்றாது இருந்தமை சிறந்த இராஜதந்திரமாகவே நான் பார்க்கின்றேன். அவசரப்பட்டு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படுகின்ற தீர்மானத்தால் எதிர்பார்க்கப்படும் நோக்கத்தை அடைய முடியாது. இதனால் சிறுபான்மையினர் பிரச்சினைகளுக்குய தீர்வுகளை துருவப்படுத்தப் போகின்றது என்றுதான் ஜெனீவாவில் கூறினோம். அதுதான் இன்று நடந்துள்ளது.

இரண்டு பக்கங்களிலும் தீவிரவாதப் போக்குடையவர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள்தான் எல்லாவற்றையும் கண் முடித்தனமாக எதிர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். உயிருடன் இருந்த பிரபாகரனால் தமிழீழத்தை பெற்றுத் தர டியவில்லை. அவரின் வெற்றுடல் அதனை பெற்றுத் தர இருப்பதாக புலம்பெயர் தமிழர்கள் கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

http://www.thinakkathir.com/?p=34083

இதற்கு என்ன சொல்லப்போகிறீர்கள் செயபாலன் அவர்களே???

தமிழர்களுக்கு எதிராக பேசுவதற்காக ஜெனீவா போகவில்லை: அமைச்சர் ஹக்கீம்

உண்மையில் தமிழர்க்கெதிராக பேசுவதற்கே ஜெனிவா போனார் என்பது தான் திட்டவட்டமான உண்மை. இதை வரலாற்றையும்,நிகழ்வுகளையும்,உண்மையாக சிந்திக்கும் ஒரு உண்மையான மனிதனுக்கு விளங்கும்.இந்த திரியினூடாக எம் உறவுகள் எவ்வளவு தெளிவாக இருக்கின்றார்கள் என்பதை அவர்களுடைய கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன.எம்மை யாரும் குழப்பமுடியாது.எமக்கும் அரசியல் ./ராஜதந்திரம் எல்லாம் தெரியும் என்பதை தெளிவாக தெளிவுபடுத்த வேண்டியவர்களுக்கு தெளிவு படுத்தி இருந்தார்கள். நாம் செல்லும் பாதை கடினமானது என்றும் தடைகள்.எதிர்ப்புகள் எந்த வடிவத்தில் எல்லாம் வரும் என்று இனம் கண்டுள்ளனர். மிக்கமகிழ்ச்சியாக இந்தக்கருத்தை இந்த திரியினூடு உறவுகளுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசின் தயவில் வாழும் இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் அவர்களுக்கு ஆதரவாக கோஷம் போட்டால்தான் இவர்களால் பதவியில் இருக்க முடியும். இதேபோல்தான் ஆறுமுகம் தொண்டமானின் நிலையம் இவர்களால் சிங்களவன் தயவின்றி அரசியல் புழைப்பு நடத்த முடியாத ஒட்டுண்ணிகள்.

இப்போது பிள்ளையான், கருணா, டக்கிளஸ் போன்றோர் எப்படி கூத்தடித்தாலும் அவர்களை இலங்கை அரசால் தமிழர்களாக காட்டி அரசியல் செய்ய வெளிநாடுகள் ஏமாறுகிறார்கள் இல்லை. தொண்டமான் போன்றோரால் அரசுக்கு இந்த விடையத்தில் எந்தவித உதவியும் இல்லை. அரசு கக்கீமை நாடுகிறது போலிருக்கு.

இல்லையேல் வழமையில் மற்றவர்கள் போல் கக்கீம் புதிதாக எதற்குள்ளும் ஆழ மாட்டியிருக்கிறாரா என்பதும் தெரியவில்லை.

அஸ்வர சிலநாள் கூத்தடித்தார். இப்போ கக்கீம். ஆனால் மகிந்தா கக்கீம் மீது அதிகம் நம்பிக்கை வைக்க மாட்டார். இவரை பீரிசுக்கு கொட்டலில் வைத்துக் கொடுத்த மாதிரியோ அல்லது கதிர்காமருக்கு செய்தத மாதிரி செய்யவோ இவர்கள் அவ்வளவில் இலகுவான சரக்குகள் அல்ல. எனவே இவர்களுக்குள் உறவு ஒரு மட்டுப்படுத்தபட்ட பரஸ்பரம் சந்தேகம் கொண்ட நிலையில்த்தான் எப்போதும் இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.