Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எக்காரணம் கொண்டும் கூட்டமைப்பைப் பதிவு செய்ய முடியாது – வவுனியாவில் மாவை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mavai.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை எக்காரணம் கொண்டும் பதிவு செய்ய முடியாது என்று தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்திருக்கின்றார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய முடியாது என்று தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் வவுனியாவில் கருத்துத் தெரிவித்த போது மாவை சேனாதிராசா கேள்வி தெரிவித்திருக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாமே என்று வவுனியாவைச் சேர்ந்த தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அதற்குப் பதிலளித்த மாவை,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பதிவு செய்வது தொடர்பில் தமிழரசுக்கட்சியில் பெரும்பான்மையானவர்களுக்கு உடன்பாடு இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைக் கட்சியாகப் பதிவு செய்வதன் மூலம் தமிழரசுக்கட்சி காலப் போக்கில் இல்லாமல் போய்விடும். எனவே தமிழரசுக்கட்சியின் பெரும்பாலானவர்களின் விருப்பத்திற்கு மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பதிவு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட முடியாது என்று மாவை உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார்.

http://www.saritham.com/?p=56383

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிக்கு தான் சகோதர பாச அறிவுரைகள்.  இவர்கள் எல்லாம் ஆழுக்கொரு திசை.

 

சுமந்திரன்-மாவை-ஆனந்த சங்கரி.

கூட்டமைப்பு-தமிழரசுக்கட்சி-கூட்டணி.

மாவைதான் வெல்வார் போலிருக்கு.

பிறெமசந்திரன் நடுத்தெருவிலா?

தமிழ் தேசியக் கூட்டமைப்பை கைவிடும் முடிவுக்கு கூட்டமைப்பின் தலைமைப் பீடம் வந்துவிட்டது என்பதுதான் உண்மை .

ஆனந்தசங்கரிக்கு கொடுப்பதைக் கொடுத்து உதய சூரியன் சின்னத்தை கையில் எடுப்பதுதான் சம்பந்தரின் அடுத்த நகர்வு.

வரும் வடக்கு மாகான சபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிடும் சாத்தியங்களே அதிகம்

காணப்படுகின்றன. டெலோ , ஈ.பீ. ஆர். எல். எப். வுக்கு வேட்பாளர் கோட்டா கிடையாது. ஆனால் மேற்படி கட்சிகளை சேர்ந்தவர்கள்

தமிழர் விடுதலைக் கூட்டணியில் தனிப்பட்ட முறையில் அங்கத்துவம் கோரி விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும்.

இதுதான் சம்பந்தரினதும் தமிழரசுக் கட்சியினரினதும் சிந்தனையாக இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்.

புலம்பெயர் மக்கள் மத்தியிலும் ஐ.நா.விலும் சர்வதேச மட்டத்திலும் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைப்பலப்படுத்தி அரசியலை முன்னெடுக்கும்பொழுது சிங்கள தேசத்தில் பதியப்பட்டதா? என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் இவர்களின் ஒற்றுமையைப் பாருங்கள் ணற்றுமையாய் இருப்பதைப் பிரிப்போம் என்று ஒத்தக்காலில் நிற்கிறார்கள்.தமிழரசுக்கட்சி தவிகூட்டணி இணைந்து போட்டியிட்டால் மற்றவர்கள் எல்லோரும் தமிழ்க்காங்கிரசில் ஐக்கியமாகலாம்.சுரேசுக்குத்தான் சிக்கல் ததேகூட்டமைப்பின் தலைமை தனக்கு ஒருநாள் கிடைக்கும் என்று இலவுகாத்த கிளியாக இருக்க வேண்டியதுதான்.கஜேந்திரகுமார் பொன்னம்பலமே தமிழர்களுக்கு தலைமைதாங்க தற்போதைய நிலையில் பொருத்தமாக உள்ளார்.

இவர்களின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்.

இளைய தலைமுறையினர்கள் தெரிவு செய்யப்படவேண்டும்.

இவர்களின் கூத்து எல்லை தாண்டும் போது யாரும் வாழ்நாளில் மறக்கமுடியாத கடுமையான பாடங்களைப் படிப்பர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் தமிழ்மக்களுக்கு எந்தவொரு நலனையும் பெற்று கொடுத்ததில்லை முள்ளிவாக்காலில் தமிழ்மக்கள் சிறிலங்கா சிங்கள காட்டு மிராண்டிகளால் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டபோதும் இவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை, அதன்பின்னர் முள்வேளிகளுக்குள் அகப்பட்டு கொண்ட மக்களை காப்பாற்றவோ அல்லது அவர்களுக்கு உதவிகள் செய்யவோ முன்வராது, பத்திரிகைகளிலும் இணையத்துக்கும் அறிக்கை விட்டுக்கொண்டிருந்த அறிக்கை வீரர்கள், இன்றுவரையும் புலிகளின் தியாகத்தினால் அரசியல் செய்யும் சுயநலவாதிகள்.

நிச்சயமாக இவர்களை மக்கள் நிராகரிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை .......

தமிழ் தேசியக் கூட்டமைப்பை கைவிடும் முடிவுக்கு கூட்டமைப்பின் தலைமைப் பீடம் வந்துவிட்டது என்பதுதான் உண்மை .ஆனந்தசங்கரிக்கு கொடுப்பதைக் கொடுத்து உதய சூரியன் சின்னத்தை கையில் எடுப்பதுதான் சம்பந்தரின் அடுத்த நகர்வு.வரும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிடும் சாத்தியங்களே அதிகம்

காணப்படுகின்றன. டெலோ , ஈ.பீ. ஆர். எல். எப். வுக்கு வேட்பாளர் கோட்டா கிடையாது. ஆனால் மேற்படி கட்சிகளை சேர்ந்தவர்கள்

தமிழர் விடுதலைக் கூட்டணியில் தனிப்பட்ட முறையில் அங்கத்துவம் கோரி விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும். இதுதான் சம்பந்தரினதும் தமிழரசுக் கட்சியினரினதும் சிந்தனையாக இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்.

இதற்கு ஒரு மருந்திருக்கிறது. ஒன்றும் புதிதல்ல. நமது பழைய மருத்துவர் SJV கொடுத்த அதே பழைய மருந்துதான். பதவிக்கு ஆசைப்படுபவர்களை திருத்தப்போய் தமிழ் மக்களின் எதிர் காலத்தை தொலத்துவிட முடியாது.

கூட்டணி ஒருகாலத்தில் SJV, G.G, தொண்டமான்(செயல்பாடற்ற தலைவர்) ஆகிய மூன்று இணைத்தலைவர்களை வைத்து உருவாக்கபட்டது. இரண்டு காரியதரிசிகளை கொண்டிருந்தது(அமிர்தலிங்கம்,சிவசிதம்பரம்). இதன் அரசியல் அமைப்பு மாற்றம் அடையாமல்த்தான் ஆனந்த சங்கரியிடம் வந்து சேர்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதாவது இன்னமும் மூன்று தலைவர்களும் இரண்டு காரியதரிசிகளும் அதில் இருப்பது ஒரு பிரச்சனையான விடையமாக இருக்க முடியாது.

சம்பந்தர் செய்ய வேண்டியது ஆனந்தசங்கரி, மாவை, சுமந்திரன் மூவருக்கும் உபதலைவர் பதவி கூட்டமைப்பில் கொடுக்க வேண்டும்.

ஆனந்த சங்கரி எல்லோருடைய நன்மைக்குமாக கூட்டணியின் தலைமையை சம்பந்தரிடம் ஒப்படைக்க வேண்டும்.

கூட்டணியின் உபதலைவர்களாக ஆனந்தசங்கரி, மாவை, சுமந்திரன் நியமிக்கப்பட வேண்டும். கூட்டணியின் காரியதரிசிகளாக சுரேஸ்சும், மணோகனேசனும் நியமிக்க படவேண்டும். பதவியை எற்றுக்கொண்டால், மனோகனேசன், தொண்டமான் மாதிரியே, தான் பெயரவில்த்தான் காரியதரியாக வருவேன் என்பார்.

கூட்டணி வடக்கு கிழக்கிலும், மக்கள் முன்னணி மனோகனேசன் விரும்பும் இடங்களிலும் வர இருக்கும் தேர்தல்களை எதிர் கொள்ள வேண்டும்.

சம்பந்தர் இல்லாத காலத்தில் உபதலைவர்கள் தன்னியமாக இணைத்தலைவர்களாகிவிடுவார்கள்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.