Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பிக்கை தான் வாழ்க்கை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்களத்தில் என் முதற் பதிவு

என் தாய்த் தமிழன்னை ஈன்றெடுத்த என் சகோதர உறவுகளுக்கு அன்பு வணக்கம் !

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றி நல்லதையும், பாராட்டுக்களையும், தூற்றலையும் வாசித்தேன் மிகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அறிந்த வரையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இப்படித் திறந்த மனதுடனான விர்சனங்கைளை வெகுவாக வரேவேற்கிறது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் பற்றிய அறிவித்தல் அதைத் தொடர்ந்து வந்திருக்கும் பதில்கள் பற்றி நான் வாசித்தவற்றிலிருந்து சில துளிகள்.

புதிய விதிகளின்படி பெயர்கள் குறிப்பிட விரும்பவில்லை ஆனால் தமிழினத்தின் ஒட்டு மொத்த நன்மைக்காகச் சில விடயங்களைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

1) நாடு கடந்த அமைப்பு - என்று குறிப்பிடப்பட்டுள்ளது வேதனையாக இருக்கிறது.

விளக்கம் - 2010ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஜனநாயகத்தின் வரைவிலக்கணப்படி புலம் பெயர்ந்த தமிழ் மக்களால், புலம் பெயர்ந்த தமிழ் மக்களிடமிருந்து புலம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கான ஒரு அரசாங்கம்

ர்வதேச நடைமுறைகளுக்கமைய முறைப்படி தோ்தல் நடாத்தப்பட்டுத் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம்

ஆங்கிலத்தில் Government in Exile என்று கூறப்படுகின்ற நிலை.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு Government in Exile இனுடைய சர்வதேச சட்ட வரைவிலக்கணத்திற்குள் வரவில்லை என்ற யதார்த்தம் இன்றும் இருக்கின்ற நிலையிலும் கூட, முக்கியமான முடிவு மேற்கொள்கின்ற மேலைத்தேய அரசாங்கங்களால் அவ்வாறுதான் பார்க்கப்பட்டு வருகிறது என்ற யதார்த்தம் ஒன்றும் இருந்து வருகிறது என்பது தான் சர்வதேச, அரசியல் மற்றும் ஊடகத்துறை மட்டங்களால் மறைமுகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள உண்மை என்பதும் நாம் விரும்பியோ விரும்பாமலோ இன்றைய நடைமுறையிலுள்ள யதார்த்தமாகும்.

எமது அரசாங்கத்தை, அமைப்பு என்று அழைத்தல் எம்மை நாமே இழிவு படுத்துவதற்கு ஒப்பானதாகும் என்பது என் பணிவான கருத்து

இப்படி நான் கூறும்போது - நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தலில் நாங்கள் வாக்களிக்கவில்லை என்று சிலர் எதிர் வாதம் வைக்கலாம் உண்மை அதுவாக இருந்தாலும் உலகின் எந்த ஒரு நாட்டுத் தேர்தலிலும் 100 வீத வாக்காளர்களும் வாக்களிப்பதில்லை.

அரசாங்கம் ஒன்று தெரிவு செய்யப்பட்டவுடன் அது, வாக்களித்த, வாக்களிக்காத மற்றும் வாக்குரிமை இல்லாத சுருங்கக் கூறின் அந்நாட்டின் ஒட்டு மொத்த சனத் தொகைக்குமான சட்டபூா்வ அரசாங்கமாகிறது என்ற உலக ஜனநாயக நடைமுறை ஒன்றும் உள்ளது என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தவறிழைத்தால் கண்டிப்போம், சுட்டிக்காட்டுவோம் ஏன் அரசாங்கத்தில் மாற்றத்தையே உண்டாக்குவோம் - அது எங்கள் ஜனநாயக உரிமை, அது எங்கள் ஜனநாயகக் கடமை அது மக்களாகிய எங்கள் சக்தியும் கூட.

தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ எமது அரசாங்கத்தை நாமே அமைப்பு என்று அழைத்துச் சிறுமைப்படுத்தாது இருப்போம்.

2) இப்ப தமிழிழத்தின் தலைவர் உருத்திரகுமார் என சொல்ல தலையாட்டட ஒரு கூட்டம்,

என்றும் எழுதப்பட்டிருக்கிறது.

நல்ல விடயம்

வேடிக்கை என்னவென்றால் இன்று வரை “நான் தான் தமிழினத்தின் தலைவர்” என்று உருத்திரகுமார் ஓரிடத்திலும் ஒரு தடவையாவது கூறியதாக சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஊடகம் ஒன்றிலும் எழுதப்படவில்லை.

ஆனாலும் உண்மை என்னவெனில் அவருக்குப் பிரதம மந்திரி எனும் மரியாதையையும் அந்தஸ்தையும் முறையாகக் கொடுத்து முன்னணி சர்வதேச ஊடகங்களே எழுத ஆரம்பித்து விட்டன. Visuvanathan Rudrakumaran, prime minister of the Transnational Government of Tamil Eelam,

இணைப்பை வாசிக்கவும்

இப்படியாக சர்வதேச அரங்கினில் எம் தாய்த் தமிழினத்தின் நிலை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் உயர்த்தப் பட்டுக் கொண்டிருக்கும் போது கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல் எறிவது போலவும் யானை தன் தலையில் தானே மண்ணைப் போடுவது போலவும் நாம் நடந்து கொள்வது முறையா?

ஆங்கிலத்தில் CHARITY BEGINS AT HOME ( நான் ஆங்கிலம் கற்பிக்க முயல்கிறேன் என்று தவறாக எடை போட வேண்டாம்) என்றொரு முது மொழி உண்டு அம் முதுமொழி குறிப்பது என்னவெனில் “நற்குணங்கள் ஆரம்பிப்பது வீட்டில்” எனபதாகும். இதற்கமைய இங்கே வீடாகக் கருதப்பட வேண்டியது எம் தமிழினமும் தமிழ் சமூகமுமாகும், ஆகவே எம்மவர்களின் அருமை பெருமை திறமைகளை ஏற்றிப் போற்றிப் பாராட்டுவதில் நாமே முன்னிற்கக் கற்றுக் கொள்வோம் அப்போது தான் சர்வதேசமும் எம்மோடு சேர்ந்து நின்று எமக்குதவ முன்வரும்.

ஆண்டபரம்பரை மீண்டுமொருமுறை.......என்றெல்லாம் பழம் பெருமை பேசுகின்ற, திரைப்படங்களில் சொல்லப்படுகின்ற காலை வாரும் நண்டுத் தமிழராக எல்லாம் நாம் இருக்காமல், தம்முடைய சொந்த வாழ்வைிற்கும் அப்பால் நின்று கொண்டு பல் வேறுபட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தேசத்திற்காகவும் மக்களுக்காகவும் தம்மை அர்ப்பணித்துள்ள உருத்திரகுமாரன் போன்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்கத்தவர்களை அவதூறாக எழுதாமல் அவர்கள் போன்றவர்களை ஊக்குவிப்போம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நான் கூறவில்லை இதுவும் முதுமொழி என்பதை நீங்கள் யாவரும் அறிவீர்கள்.

தமிழினத்தின் தாகம் தமிழீழத் தாயகம்

எம் தலைவன் காட்டிய வழி தேச விடுதலையின் வழி

எம் தலைவனின் தேசியக்கனவு - உருத்திரகுமாரன் போன்றவர்களின் ஆளுமையுடன் நிர்வகிக்கப்படும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முயற்சியினால் நிச்சயம் நிறைவேறும் என்றும் நம்புவோம்.

“நம்பிக்கை தான் வாழ்க்கை!!!”

இங்கே உறங்குவது ஒரு தன்மானத் தமிழனென்று என் நடுகல் கூறும் வரை

தோழமையுடன்

யாழ்வாணன்

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை தான் வாழ்க்கை, நிழல் நிஐமாகும், நன்றி பகிர்வுக்கு யாழ்வாணன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் கற்புடையவளாக இருக்கின்றாளா, என்பதைப் பற்றி உலகம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை!

அவள் கற்புடையவளாகத் தன்னைக் காட்டிக் கொள்வதிலேயே, அவளது கற்பின் பெருமை தங்கியிருக்கின்றது!

நாடு கடந்த தமிழீழ அரசு, தனது செயல்கள் மூலமே, தனது இருப்பை, வெளிப்படுத்த வேண்டும்!

நம்பிக்கையே வாழ்க்கை என்பது உண்மையே, தமிழ்வாணன்!

ஆனால், வாழ்க்கைக்கும் ஒரு வரையறை உண்டல்லவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகிர்வுக்கு நன்றி - ஆனாலும் மக்களாகிய நாம் வெளிப்படையாகக் கொடுக்கும் ஆதரவும் ஊக்கமும் தான் எமது அரசாங்கத்தின் இருப்பை பகிரங்கமாக வெளிப்படுத்தும் அந்த வெளிப்படையான ஆதரவு தெரியும் வரை எந்த ஒரு அரசாங்கமும் அரசியல் சதுரங்க மேசையில் ராசதந்திர ரீதியான திரைமறைவு அரசியலில் (COVERT POLITICS) மட்டும் அரசியற் காய்களை நகர்த்தும் அப்போது தான் அது அந்த அரசாங்கத்திற்கும் அதன் ஆளுமைக்குட்பட்ட மக்களுக்கும் நன்மையும் வெற்றியும் அளிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த தற்கால அரசியல் யதார்த்தம்.

இதற்கு எமது அரசாங்கமும் விதி விலக்கல்ல என்பது என் பணிவான கருத்து. கடந்த மாதம் ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு ஏற்பட்ட முடிவு இதற்கான சிறந்த உதாரணமாகும்.

இணைக்கப்பட்டுள்ள காணொளிப் பதிவுகளைக் காண்க

“நம்பிக்கை தான் வாழ்க்கை!!!”

இங்கே உறங்குவது ஒரு தன்மானத் தமிழனென்று என் நடுகல் கூறும் வரை

தோழமையுடன்

யாழ்வாணன்

  • கருத்துக்கள உறவுகள்

“நம்பிக்கை தான் வாழ்க்கை!!!”

நன்றி பகிர்வுக்கு யாழ்வாணன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்கியும்,கருணாவும்,கே.பி யும்,தயா மாஸ்டரும் எல்லாரும் தான் சொல்லுகினம்

"நம்பிக்கை தான் வாழ்க்கை என்று".. <_<:icon_idea:

உங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி யாழ்வாணன். நீங்கள் குறிப்பிட்டது போல், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் திரை மறைவு அரசியல்தான் செய்து கொண்டிருக்கிறது. அவ்வரசியலை மேற்கத்தைய நாடுகளைச் சேர்ந்த மக்கள் விளங்கிக் கொள்வார்கள். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், யார் தம்மைத் தாமே புகழ்ந்து கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் ஆதரவு அளிப்பார்கள். தமிழ் மக்களின் ஆதரவு வேண்டுமாயின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தாம் செய்பவற்றை வெளிக்கொணர வேண்டும். இல்லாதுவிடின், இன்னும் ஓரிரு வருடங்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் வரலாறாகிவிடும். கனடாவில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இன்றைய நிலை இதுதான்.

நம்பிக்கைதான் வாழ்க்கை - இது வாழ்க்கைக்கு வேண்டுமானால் பொருந்தலாம். அரசியலுக்குப் பொருந்தாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்துக்கு நன்றி தமிழச்சி,

நாளை காலையில் கண் விழிப்பேன் என்ற எண்ணத்துடன் நித்திரைக்குச் செல்கிறீர்களே! அதற்குப் பெயர் தான் நம்பிக்கை. ஆனால் கண் விழிப்பீார்களா இல்லையா என்று உங்களுக்கே தெரியாது ஆனாலும் “கண் விழிப்பேன்” என்று உங்கள் மனதில் தோன்றும் அந்த எண்ணம் இருக்கிறதே அதன் மறு பெயர் தான் நம்பிக்கை.

இரண்டாவதாக - மனிதர்கள் தான் அரசியல் செய்கிறார்கள். அரசியல் செய்வதற்கு மனிதர்கள் வாழ வேண்டும். மனிதர்கள் வாழ்வதற்கு வாழ்க்கை என்று, ஒன்று வேண்டும். நீங்கள் குறிப்பிட்டது போல் நம்பிக்கைதான் வாழ்க்கை - இது வாழ்க்கைக்கு வேண்டுமானால் பொருந்தலாம் என்றால் வாழ்க்கையை வாழும் மனிதர்கள் செய்யும் அரசியலுக்கும் அது பொருந்தும் என்பதையும் நீங்கள் இனியாவது ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

அடுத்து

நீங்களும் தமிழினமும் மீண்டுமொரு முள்ளி வாய்க்காலைச் சந்திக்கத் தயார் என்றால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் தமிழ் மக்களைச் சந்தோஷப்படுத்துவதற்காக வெளிப்படையாக அரசியல் நகர்வுகளைத் தெரியப்படுத்தும் என நம்புவோம். ஏனென்றால் அது மக்களின் அரசாங்கம்.

தயாராக இருக்கிறீர்களா? மற்றுமொரு முள்ளி வாய்க்காலுக்கு?

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் செய்த திரைமறைவு அரசியலின் பயன்தான் 22-03-2012 முதல் சிறீ லங்கா ஆட்சியாளர்கள் துண்டையும்,துணியையும் காணோம் என்று இப்பொழுதும் ஓடித்திரிவது

சிறீ லங்காவின் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் குறித்த ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க பின்வருமாறு கூறுகிறார்.

புலம்பெயர் மக்களின் இனவாத பிரிவினர் கூறும் பொய்யான கூற்றுக்களை தவிர்த்து இலங்கையில் உண்மையில் என்ன நடக்கின்றது என்று இந்திய எம்.பி.க்களினால் புரிந்துகொள்ள இந்த விஜயம் சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார். இந்த சமரசிங்க தான் கடந்த மாதம் ஜெனீவா சென்ற சிறீ லங்கா குழுவினருக்குத் தலைமை வகித்தவர் என்பதை மறந்து விட வேண்டாம்.

மூல இணைப்பு

மற்றும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்னும் இரண்டொரு வருடங்களில் வரலாறாவதும் ஆகாமல் போவதும் உங்கள் போன்ற அளுமையுள்ளவர்களின் எழுத்தாணிகளில் தான் தங்கியுள்ளது என்பதையாவது நம்புங்கள்

நம்புவீர்களாயின் நிச்சயமாக நீங்களும் வாழ்வீர்கள் தமிழினமும் சிறப்புடன் சுதந்திர தமிழீழத்தில் வாழும்.

நன்றி

“நம்பிக்கை தான் வாழ்க்கை”

தோழமையுடன்

யாழ்வாணன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.